சக்திபீடம்-27-ட1/டம்
ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-27
அட்சரம் ட1/டம்(பதினோராவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் சித்திரகூடமலையின் ராமகிரி
அட்சரதேவிகள் டங்கஹஸ்தாதேவி/தாரணீதேவி
அங்கம் நாபிகீழ்பகுதி
பைரவர்/இறைவன்சண்டர்
அங்கதேவி/ இறைவி ஷிவாணி
பீடங்கள் ராஜகோஹாயை நம
51-ல் நம் உடலில் வலது தொடை மேற்பகுதி
ஊர் மைகர்
அருகில் சித்திரகூடமலைப் பிரதேசம்-ராமகிரி
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்
இது ராஜகிரஹம் பீடம் எனும் மகா சக்தி பீடமாகும். சித்ர கூடத்தில் தேவியின் கோவில் இல்லை.
உபபீடங்கள்:
தட்சாயினின் ஒட்டியாணத்திலிருந்து சிறு சலங்கை வீழ்ந்த இடம் கண்டிகை-இங்கு இந்திர ஜாலம் ஸித்திக்கும்.. உப வேதாந்தத்தின் பொருள் விளங்கிய இடம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
இளஞ்சிவப்பு நிறமேனி- சதுர்புஜங்களில் சூலம், டங்கா என்ற கோடாரி, வர – அபய முத்திரைகளுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டாக்யா ச தாரிணீ தேவீ சூல டங்க வராபயாந்
தத்தே மத்த மதங் கஸ்தா பாட லாபா ஸிதாம் சுகா:
#####