சக்திபீடம்-31-ண/ணம்
ஓம்நமசிவய!
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-31
அட்சரம் ண/ணம்(பதினைந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் கல்கத்தா காளிகாட்
அட்சரதேவிகள் ணார்ணீதேவி/அனந்தசக்திதேவி
அங்கம் வலது கால்விரல்
பைரவர்/இறைவன் நகுலேஷ்வர்/நகலீசர்
அங்கதேவி/ இறைவி காளி/ சின்ன மஸ்தான்தேவி
பீடங்கள் காலேச்வராயை நம
51-ல் நம் உடலில் வலது கால்விரல் நுனியில்
ஊர் கொல்கத்தா
அருகில் நல்ஹாத்தி
மாகாணம்/நாடு மே.வங்காளம்
இது காலேஸ்வரம் எனும் மகா சக்திபீடம். இங்கு மிருத்யுஞ்ஜய ஆயுஷ்கரண மந்திரங்கள் ஸித்தி ஆகும்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- நான்கு கரங்களில் சூலம், சக்திஆயுதம், வர- அபய முத்திரைகளுடன் மயில் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ணோ ந்ந்த சக்தி தேர் வேசீ ரக்தா பர்ஹிண வாஹனா
ஏக வக்த்ரா சூல சக்தி வராபய கரா சுபா:
#####