சக்திபீடம்-37-ப1/பம்
ஓம்நமசிவய!
பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-37
அட்சரம் ப1/பம்(இருபத்தோராவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மே.வங்கத்தின் மேதினியூர் மாவட்டத்தின் தாம்லுக்
அட்சரதேவிகள் பார்வதிதேவி /இச்சாஷக்தி
அங்கம் இடது கணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் பீமர்/ஸர்வாநந்தர்
அங்கதேவி/ இறைவி கபாலினி
பீடங்கள் உட்டிசாயை நம
51-ல் நம் உடலில் வலது விலாப்புறம்
ஊர் தாம்லுக்-பார்கவி மாதாமந்திர்
அருகில் மேதினிபூர்மாவட்டம்
மாகாணம்/நாடு மே.வங்காளம்
இது விபாச பீடம் எனும் மகாசக்தி பீடம். தாம்ரலிப்தம் பீடம், உட்பீச பீடம் என்றும் அழைக்கப் படுகின்றது. இங்கு மகா மந்திரங்கள் ஸித்திக்கும்.. தேவியை காளிமாதா என்றும் தாராதேவி என்றும் அழைக்கின்றனர். தாம்லுக்லில் பார்கவி மாதா மந்திர் எனப்படுகின்றது.
உபபீடம்;
இந்த தலத்தில் அருகில் டாமரம் என்ற இடத்தில் தேவியின் சூபுரம்-கொலுசு விழ்ந்துள்ளது
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ஐந்து முகங்கள்- நான்கு கரங்கள்- வலது கரங்கலில் சூலம் அபய முத்திரை, இடது கரங்களில்- சக்தி ஆயுதம் வர முத்திரையுடன் பத்மமலரில் பத்மாசனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பாக் யேச்சா சக்தி ரூபயேம் சூல சக்தி வராபயாந்
தத்தே கரைர் பஞ்ச வக்த்ரா புக்க பத்மா ஸநா ருணா:
#####