சக்திபீடம்-38-ப2/பம்
ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-38
அட்சரம் ப2/பம்(இருபத்திரண்டாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் தீர்த்தராஜ எனப்படும் ப்ரயாகை
அட்சரதேவிகள் பட்காரிணிதேவி/ ஆதபகோமளாதேவி
அங்கம் தேகரசம்
பைரவர்/இறைவன் பவபைரவர்
அங்கதேவி/ இறைவி ஸ்ரீலலிதா
பீடங்கள் ப்ரயாகாயை நம
51-ல் நம் உடலில் இடது விலாப்புறம்
ஊர் திரிவேணிசங்கமம்/அலகாபாத்
அருகில் பிரயாகை,ருத்ரபிரயாகை
மாகாணம்/நாடு உத்ராஞ்சல்
இது தீர்த்தராஜா அல்லது பிராயகை பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவியின் தேக ரசம் - நீர்சத்து விழுந்ததால் இங்கு காணப்படும் மண் வெண்மை நிறத்துடன் கணப்படுகின்றது. ப்ரயாகையில் இரண்டு சக்தி ஆலயங்கள். தாராகன்ஞ் அடுத்து அலோபிபாஹ் என்ற இடத்தில் உள்ள அலோபிமாதா கோவில்- இங்கு தேவிக்கு விக்ரகம் இல்லை. அடுத்தது மீராப்பூர் பகுதியில் உள்ள கோவில் கருவரையில் லலிதாவுடன் சரஸ்வதியும், லட்சுமியும் இருக்கின்றனர்.
உபபீடங்கள்:
கங்கயின் கிழக்கில் பகலா உபபீடம், வடக்கில் சாமுண்டா உபபீடம், கங்கை யமுனை நதிகளின் மத்தியில் ராஜராஜேஸ்வரம் உபபீடம்,
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
சிவந்த நிறமேனி- ஐந்து முகங்கள்- பத்து கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, உடுக்கை, இடது கரங்களில் வர முத்திரை, மான் கேடயம், பாசம், சூலம் ஆகுயவற்றுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பஞ்ச வக்த் ரோக்ர ஸிம் ஹஸ்தா பாடலா தப கோமளா
பாக்யா சுகைணா ஸிகேட வராபய தாரா சராந்
பாசம் ச டமரும் தத்தே க்ரமேண தசபி கரை;
#####