சக்திபீடம்-39-ப3/பம்
ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-39
அட்சரம் ப3/பம்(இருபத்தி மூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மே.வங்காளம்- பர்த்வான் நகர் அருகில் கீர் கிராமம்
அட்சரதேவிகள் பந்தினிதேவி/ சித்ச்யாமளா
அங்கம் வலதுகுதிக்கால்
பைரவர்/இறைவன் ஷீரகண்டர்
அங்கதேவி/ இறைவி யோகாத்யா/ பூததாத்ரி
பீடங்கள் ஷஷ்டிசாயை நம
51-ல் நம் உடலில் முதுகு
ஊர் கீர்கிராமம்
அருகில் பர்த்வான்-கடேவா ரயில் மார்க்கத்தில்--35கி.மீ
மாகாணம்/நாடு மே.வங்காளம்
இது ஷஷ்டீசம்/ ஷட்பீசம் பீடம் எனும் மகாசக்தி பீடம். கரதோயா, யுகாத்யா என்றும் அழைப்பர். தேவியின் பெயர் பூத்தாத்ரி என்றாலும் பக்தர்கள் காளி என அழைக்கின்றனர். கருவறையில் காட்சி அளிப்பது திரிபுர பைரவி.
உபபீடம்:
இதன் தெற்குத் திசையில் தேவியின் பாதுகை விழுந்தது. இது சித்தி அளிக்கும் தலம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பழுப்பு வண்ண மேனி—ஐந்து முகங்கள்- பத்துக் கரங்கள்- வலது கரங்களில் அபய முத்திரை, கிளி, கத்தி, அம்பு, சூலம், இடது கரங்களில் வர முத்திரை, மான் கேடயம், பாசம், உடுக்கை ஆகுயவற்றுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
சிச்சயா மலா பப்ரு வர்ணா ஸிம்ஹாருடா பரூபிணீ
தத்தே க்ரமேண தசபி கரை பூர்வ வதாயுதாந்:
#####