சக்திபீடம்-40-ப4/பம்
ஓம்நமசிவய!
ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-40
அட்சரம் ப4/பம்(இருபத்தி நான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மயாபுரம்
அட்சரதேவிகள் பத்ரகாளிதேவி/ ச்யாமளாதேவி
அங்கம் இடதுகுதிக்கால்
பைரவர்/இறைவன் காலபைரவர்
அங்கதேவி/ இறைவி குமாரி
பீடங்கள் மாயாபூர்யை நம
51-ல் நம் உடலில் நாபி
ஊர் ஹரித்துவார்
அருகில் பீம்கோடாகுண்ட் குளத்தின் அருகில்
மாகாணம்/நாடு உத்ராஞ்சல்
இது மயாபுர பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு தேவ, தானவ- அசுர, கந்தர்வ மாயா கலைகள் ஸித்திக்கும். ஹர்கிபௌடியிலிருந்து 3 கி.மீ தொலைவில் 145 மீ. உயரத்தில் மனஸாதேவி. படிகளும் விண்வெளியில் கயிர்ருப் பாதையும் உண்டு.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
உதய சூரியன் போன்ற சிவந்த நிறமேனி—நான்கு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, அபய முத்திரை, இடது கரங்களில் வர முத்திரை, வில்லுடன் பத்மத்தின்மேல் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
பா ரூபா ச்யாமவா சைக வக்த்ரா பத்ரா ஸநே ஸ்திதா
உத்ய த்ரவி நிபா தத்தே சர சாப வராபயாந்:
#####