சக்திபீடம்-42-ய/யம்
ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-42
அட்சரம் ய/யம்(இருபத்தாறாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஸ்ரீசைலம்
அட்சரதேவிகள் யஷஸ்வினிதேவி/ தீபினோதேவி
அங்கம் பித்தம்
பைரவர்/இறைவன் ஸ்ம்பரானந்தர்/ மல்லிகார்ச்சுனர்-2/12
அங்கதேவி/ இறைவி மகாலட்சுமி/ பிரம்பராம்பிகை/ பிரமரம்பாள்
பீடங்கள் மலயாயை நம
51-ல் நம் உடலில் இதயம்
ஊர் ஸ்ரீசைலம்
அருகில் கர்னூல் அருகில்
மாகாணம்/நாடு ஆந்திரா
இது மலயா பீடம் எனும் மகாசக்தி பீடம். மாதவி பீடம் என்றும் அழைப்பர். வைஷ்ணவ மந்திரங்கள் உள்பட எல்லா மந்திரங்களும் சித்தியளிக்கும். சிவன் கோவிலை ஒட்டி மேற்புறம் அம்மன் சன்னதி-மகாலட்சுமி/ ப்ரமராம்பிகை அருள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
எட்டு கரங்கள்- வலது கரங்களில் அம்பு, பாசம், சூலம் அபய முத்திரை, இடது கரங்களில்- வில், கேடயம், கத்தி, வர முத்திரையுடன் சிம்ம வகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
யாக் யேயம் தீபிநீ தேவீ ஸிம்ஹஸ் தாஷ்டபுஜா ஸிதா
சூல சாபேஷூ பாசாஸி கேடதா நாபயாந் விதா:
#####