Print this page
சனிக்கிழமை, 27 July 2019 08:58

"நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" !

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!

#*#*#*#*#

5"நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" ! 

நிலத்தில் வசிக்க 31 வகை தேவையானவை சிவனிடம் வேண்டப்-படுகின்றன

ஐந்தாவது பிரிவில், நிலத்தில் வாழத் தேவையானவற்றையும், ஆன்மீகத்தில் வாழ்வை ஈடுபடச்சொல்லி, நம்மைக் கடவுளை நோக்கி திருப்பும் இப்பகுதி பெரும் திருப்புமுனையாக உள்ளது. இதுவரை உலகில் தொந்தரவின்றி வாழ்வதற்கும், இன்பங்களைச் ரசித்துச் சுவைக்கவும், வேண்டப்பட்டு வந்த வேண்டுதல் படிப்படியாக மாறி நாம் எப்படி கடவுளுக்காகச் செய்யப்படும் வேள்வியிலும், அதற்கு நம்மை அர்ப்பணிப்பதிலும் மனதைச் செலுத்தவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது வேள்வியாலும், இன்ன பிற வழிபாட்டு முறைகளாலும் மட்டுமே இறைவனை அடைய முடியுமென்று 'பூர்வ மீமாம்சை' நூல் தெரிவிக்கிறது. வேள்வி செய்ய வேண்டிய பொருட்களும், நெருப்பு, தண்ணீர், பயிர்கள், பசுக்கள், உலோகங்கள் போன்றவைகளும், தேக்கி வைக்க போதுமான அளவு பண்டங்களும் வேண்டப்படுகின்றன.

சமஸ்கிருதம்::
:
அஷ்மா ச மே ம்ருத்திகா ச மே கிரயச்ச மே பர்வதச்ச மே ஸிகதாச்ச மே வனஸ்பதயச்ச மே ஹ்ரண்யஞ்ச மேயச்ச மே ஸீசஞ்ச மே த்ரபுச்ச மே ச்யாமஞ்ச மே லோஹஞ்ச மேக்னிச்ச ம ஆபச்ச மே வீருதச்ச ம ஓஷதயச்ச மே க்ருஷ்ட பச்யஞ்ச மே க்ருஷ்டபச்யஞ்ச மே க்ராம்யாச்ச மே பசவ ஆரண்யாச்ச யஜ்ஞேன கல்பந்தாம் விதஞ்ச மே வித்திச்ச மே பூதஞ்ச மே பூதிச்ச மே வஸூ ச மே வஸதிச்ச மே கர்ம ச மே சக்திச்ச மேர்தச்சமஏமச்ச ம இதிச்ச ம கதிச்ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

கல்லும், மண்ணும், எங்கே தண்ணீர் உற்பத்தியாகிறதோ அந்த குன்றுகளும், மலைகளும், மணல்களும், மலர் மலராமலே கனியைச் சொரியும் சிறந்த மரவகைகளும், பொன்னும், எஃகும், ஈயமும், துத்தநாகமும், இரும்பும், தாமிரமும், இதர உலோகங்களும், நெருப்பும் தண்ணீரும், கொடிகளும், மூலிகைகளும், உழுது பயிரிட்டு விளைந்தவைகளும், உழுது பயிரிடாமல் விளைந்தவைகளும், சிற்றூரில் உள்ளவைகளும், வேள்வியில் அரப்பணிக்கப்பெறும் விலங்குகளும், அதனால் ஏற்படும் நன்மைகளும் எனக்கு கிடைக்கட்டும், மற்றும், மூததையர்களின் சொத்தும் என்னுடைய உழைப்பால் கிடைக்கப்போகும் சொத்துக்களும், மனநிறைவான குழந்தைச் செல்வங்களும், சொந்தமாக தொழிலில் ஈட்டும் சொத்தும், நாலுகால் விலங்குகளும், பசுக்களும், அசையாச் சொத்துக்களும், வசிக்க வசதியான சொத்துக்களும், 'நெருப்பினால் வேள்வி' செய்யக்கூடிய கொடுப்பிணையும், இது போன்று புனிதமான இறை செயல்களை திறம்படச் செய்யும் தகுதியும், அதற்கு போதிய படிப்பும், அதனால் அடையக்கூடிய இன்பமும், மகிழ்ச்சியும், அதை அடையும் குறிக்கோளும், எண்ணங்களும், முடிவான இலக்கை அடையக்கூடிய 'ஒரே நோக்கும்' ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||

#####

Read 3728 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:21
Login to post comments