Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:08

"வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல்”!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#*#*#*#*#

 

9. "வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல் “

21 பண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன

 

"வேள்வியின் அரசன்" என்றழைக்கப்படுகிற அஷ்வமேத வேள்விக்கு முன் ஐந்து அர்ப்பணிப்புகள் மூலம் தொடங்கபடும் "ப்ராவர்க்ய" என்ற ஸோம வேள்வியில், ஆறு கடவுள்களையும், மறை, பாட்டுப் பாடுதல், வேள்வியின் கடைசிக்கட்டத்தில் நீராட்டுவது போன்றவை இடம்பெறுகிறது. இப்பிரிவு சமகத்தின் பாதையை கோடிட்டுக் காட்டுகின்றது; அதாவது, தனக்கும், இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டியது முடிந்து, ஒரு படி மேலே போய் வானுலக கடவுளாகவே தான் மாறவேண்டும் என்று வேண்டுவது மனிதனை விலங்குநிலைச் சிந்தனையிலிருந்து, ஆண்டவன் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள துடிக்கும் சிந்தனை முயற்சியாகும்.

சமஸ்கிருதம்::

அக்னிச்சமே கர்மச்ச மேர்க்கச்ச மே ஸுர்யச்ச மே ப்ராணச்ச மே sச்வமேதச்ச மே ப்ரதிவீ ச மேsதிதிச்ச மே திதிச்ச மே யஜ்ஞேன கல்பந்தாம் ருக்ச மே ஸாம ச மே ஸ்தொமச்ச மே யஜுச்ச மே தீக்ஷா ச மே தபச்ச ம ருதுச்ச மே வ்ரதஞ்ச மேsஹோராத்ரயோர் வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே ச மே யஜேஞன கல்பேதாம்||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!

நெருப்பும், ஸோம யாகத்துக்கு முன் செய்யப்படும் "ப்ரவர்க்கியும்" "அர்க்கயாகம்" எனப்படும் செயல்களும், கதிரவனுக்குச் செய்யும் வேள்வியும், கடைசியில் நெருப்புக் கடவுளுக்கிடும் எல்லாவித அர்ப்பணிப்புகளும் (பூர்ணாஹுதியும்) அசுவமேத வேள்வியும், ப்ராண வேள்வியும், அர்ப்பணிப்பிலேயே சிறந்த தான குதிரை அர்பணிப்பும், பூமிக் கடவுளும், அதிதி கடவுளும், திதி கடவுளும், ஸ்வர்க்க கடவுளும், கை விரல்கள்போல் விரிந்திருக்கும் கால்பகுதியே தெரியும் விராடபுருஷனான முழுமுதற் கடவுளின் அருளும், இவ்வகையான பொருட்களும், சேற்கைப் பொருட்களும், இவ்வகை அர்ப்பணிப்பினால் ஏற்படும் எல்லவிதமான நன்மைகளும், குறிக்கோளும், ரிக் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், ஸாம மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், அதர்வன மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், யஜுர் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், வேள்வியின் அர்ப்பணிப்பிற்கு போகும் முன்பு செய்யப்படும் "திக்ஷா' எனப்படும் உடம்பை நீரால் தூய்மைபடுத்தும் சடங்கும், தவத்தால் என் பாவங்களைக் கழுவும் திறமையும், சரியான நேரத்தில், உரிய காலத்தில், ஒவ்வொரு தன்மையைப் பொருத்து செய்யப்படும் பலவகை வேள்வித்தீயும், மற்றும் தொடர்புடைய செய்கைகளும், கடினமானதும் நடைமுறையில் இல்லாத திடமான சூளுரைகளும், பசுவின் ஒரு முலைக் காம்பின் பாலை மட்டும் பருகும் பட்டிணி முதலியனவும், அவற்றை சிறப்பாக, கடைபிடிக்க கூறப்பட்ட அறிவுரையும், தொடர்ந்து பகலிலும் இரவிலும் பெய்யும் மழையால் விளையும் பயிர்களின் செழிப்பும், "ப்ரிஹட்" மற்றும் "ரதந்தர' என்ற போற்றுதலுக்குறிய ஸாம மறைப்பாட்டுக்களும் நான் நடத்தும் அர்ப்பணிப்பில் எனக்கு நன்மை பயக்கட்டும்.

ஓம் அமைதி  ||  ஓம் அமைதி ||  ஓம் அமைதி

#####

Read 3568 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:24
Login to post comments