Print this page
சனிக்கிழமை, 27 July 2019 09:10

"வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்”

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#*#*#*#*#

10. "வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்!

31 விதமான தேவைகள் சிவனிடம் கோரப்படும் உச்சக்கட்டம்

"மறைக்காலத்தில்" வாழ்வு முறையின் தேவை இருகூற்றுச் சுழற்சியான விவசாயத்திலும், அர்ப்பணிப்பிலும் வட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது; விவசாயமும், வீட்டைப் பராமரிக்கும் பணியும் குறிப்பாக காளைகளையும், பசுக்களையும் பராமரப்பதில் சுற்றி வந்துள்ளது. ரிக் வடமொழியில் 20 விதமான பசு இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கருவிலிருக்கும் கன்றில் தொடங்கி, பெரிய காளை வரை, இப்பொழுது ஈன்றெடுத்த கன்றுக்குட்டி (தேனு) வரை, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. காமதேனுவை, புனிதமான தாயை, இந்துக்கள் போற்றி வணங்குகிறார்கள். அது நாம் கேட்டவற்றை எல்லாம் அன்பொழுகக் கொடுக்கும் இறைநிறைந்த பிறவி. முதல் பிரிவில் திடமான உடம்பு உறுப்புக்களை வேண்டும் சமகம், இங்கு வரும்போது அர்ப்பணிப்பு வாழ்விற்கு தேவையான செல்வங்களை கோருவதும், 'யாக கல்பனா" அதாவது'என் வாழ்க்கை, உணர்ச்சிகள், மனது, மூளை, ஆன்மா - இவைகள் நான் செய்யும் அர்ப்பணிப்புகளால் தெளிவாக அலம்பப்படட்டும், ஏதாவது தவறாக ஏவப்பட்டலோ, நான் செய்யும் வழிபாட்டில் அழுக்கு புகுந்துவிட்டதாலோ, அவைகள் என் வேண்டுகோளினால் நீக்கபெறட்டும்" என்று கோருவதும் சிறப்பேயாம்.

சமஸ்கிருதம்::

கர்ப்பாச்ச மே வத்ஸாச்ச மே த்ர்யவிச்ச மே த்ர்யவீ ச மே தித்யவாட் ச மே தித்யௌஹீ ச மே பஞ்சாவிச்ச மே பஞ்சாவீ ச மே த்ரிவத்ஸச்ச மே த்ரிவத்ஸா ச மே துர்யவாட் ச மே துர்யௌஹீச மே பஷ்டவாட்ச மே பஷ்டௌ ஹீ ச ம உக்ஷா ச மே வசாச ம ருஷபச்ச மே வேஹச்ச மேsநட்வாஞ்ச மே தேனுச்ச ம ஆயுர் ய்ஜ்ஞேன கல்பதாம் ப்ராணோ யஜ்ஞேன கலபதா-மபானோ யஜ்ஞேன கல்பதாம் வ்யானோ யஞ்ஞேன கல்பதாம் சக்ஷுர்யஞ்ஞேன கல்பதாக்கும்ச்ரோத்ரம் யஜ்ஞேன கல்பதாம் மனோ யஜ்ஞேன கல்பதாம் வாக் யஞ்ஞேன கல்பதா-மாத்மா யஜ்ஞேன கல்பதாம் யஜ்ஞோ யஜ்ஞ்ஞேன கல்பதாம்||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!


பிள்ளைப் பேறாகாத கருவாயுள்ள கன்றுகளும், புதியதாகப் பிறந்த கன்றுக் குட்டிகளும், த்ரயாவஹி - ஒன்றரை வயதுக் காளைகளும், த்ரயாவீச - ஒன்றரை வயது கடாரிகளும், இரண்டு வயதுக் காளைகளும், இரண்டு வயதுக் கடாரிகளும், பஞ்சாவி -இரண்டரை வயது ஆண் காளைகளும், பஞ்சாவீ - இரண்டரை வயதுக் பெண் காளைகளும், த்ரிவட்ச - மூன்று வயது ஆண் காளைகளும், மூன்று வயது பெண் கன்றுகளும், துர்யவாட் - மூன்று வயதுக் காளைகளும், மூன்றுவயது பெண் கடாரிகளும், துயௌஹி - நாலு வயது ஆண் காளைகளும், நாலு வயதுப் பெண் கன்றுகளும், பஷ்டவாட் - ஐந்து வயது ஆண் காளைகளும், பஷ்டௌஹீ - ஐந்து வயதுப் பெண் கன்றுகளும்; ரிஷபா - பெருங்காளைகளும், வேஹா - கருச்சிதைவு ஏற்பட்ட வந்திப் பசுக்களும், அனட்வாண் - வண்டிக் காளைகளும், தேனு - புதியதாக கன்று போட்ட பசுக்களும் மேலும் கீழ்க்கண்ட பலதரப்பட்ட செயல்களுக்கு பயன்பெற எனக்கு கிடைக்கப் பெறட்டும். நீண்ட ஆயுளும், ப்ராணா - உயிர் மூச்சும், அபாணா – உயிர் மூச்சின்மையும், அர்ப்பணிப்பினால் கிடைக்கும் கண்ணும், காதும், மூளையின் திறனும், பேச்சுத்திறனும், வாக்கின் திறனும், உடம்பின் திறனும், இனி பின்பற்றப்போகும் வேள்வியின் பயனும், 'நான்' என்ற திமிரும், வேள்வியின் அர்ப்பணிப்பின் மூலம் எனக்கு தங்கு தடையின்றி கிடைக்கப்பெறட்டும்

ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

#####

Read 3762 times Last modified on சனிக்கிழமை, 27 July 2019 10:25
Login to post comments