ஓம்நமசிவய!
விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
#####
வேள்வித் தீ ஓம்புதல்!
214. குற்றம் என்பதில்லா மேலான வானத்தில் வாழ்பவரும், நிலத்தில் வாழ்பவரும், எட்டு திசைகளில் வாழ்பவரும், அத்திக்குகளுக்கு உரிய திக்பாலகர்களும் வேதத்தை முதன்மையாக கொண்டு வேள்விகளைச் செய்தால் நன்மை பெறுவர்.
215. ஆவின் நெய்யை வார்த்து வேள்வியைச் செய்யும் அரிய மறையிலே வந்த அந்தணர்கள் சுவர்க்கத்தை விரும்பி இதைச் செய்து தானம் அளித்து உணவை உண்பர். தம் விதியை தாமே நிச்சயித்துக் கொள்ளும் உண்மை நெறியை அறிந்தவர்கள் தன் தலைமேல் அறிவைச் செலுத்தி வாழ்வர்.
216. இல்லறத்தில் இருக்கும் அந்தணர் வெளியில் செய்யும் அக்னியின் தத்துவத்தை அகத்தில் உணர்ந்து மனைவியுடன் சேர்ந்து செய்து உண்மைப் பொருளை உணர்ந்து சிவசக்தியாக நினைந்து யாமத்தில் இதை செய்வது சரியான துணையான மேன்மையுடைய ஓர் தூய நெறியாகும்.
217. ஆணும் பெண்ணும் அருளை எண்ணி சேர்ந்தால் குண்டலினி மேலோங்கி சிற்சக்தி இருள் விலகி ஒளியாய் நிற்கும். இந்த நிலை எய்தாமல் சுக்கிலம் சுரோணிதம் கலப்பினால் விளைந்த ஆணும் பெண்ணும் பறவைகளாக மாற்றம் பெற்று இரண்டும் மயக்கம் அடைந்திருக்கும்.
218. நெய்யினால் எரியும் தீச்சுடர் நெடுஞ்சுடராக எரிவதுபோல் புருவமத்தியில் விளங்கும் சுடரின் இயல்பை அறிந்தவரின் மலங்கள் நீங்கும் நாளாகி அந்நாளே நன்னாளாக விளங்கும். எப்போதும் நிலை பெற்று நிற்கும் செல்வம் அச்சுடரான எம்பெருமான் சிவனே!.
219. யோனியான குண்டத்துள் எரியும் அக்னியை தீப்பந்தத்தைப் போல் மேலே எழும்புமாறு செய்தால் வினைகளும் நோய்களும் முடிவினை அடையும். கீழே இருந்து மேலே நிலை பெற்றால் வினை முதலியவைகளும் அழியும், அதனை தாங்கியுள்ள வினைகளையும் தீக்கிரையாக்கி மேலும் அவை ஏற்படாமல் காக்கும்.
220. பெருஞ் செல்வம் கேட்டைத்தரும் என முன்னே அருளிய அரிய ஞானச் செல்வத்தைத் தந்த தலவன் எம்பெருமான் சிவனை நாடினால் மேலான சிவத் தீ சிரசில் இருப்பதை உணர்ந்து ஞானச் செல்வத்தை நாடி அக்னி வேள்வி செய்வார்.
221 ஒளியின் சுடராக இருப்பவன், அழிவில்லாத அந்த சிவபெருமான் என் உள்ளத்தில் ஒளிசுடராக எழுந்தருளி கண் ஒளியாய் விளங்குபவன். உலகு ஏழையும் கடந்த குளிர்ந்த சுடரானவன். அப்பெருமானே வேள்வித் தலைவனும் ஆவான்.
222. உடலில் எல்லா அக்னி செயலுக்கும் சிவனே காரணமாகி உதவுபவன். இறந்தபின் சூக்ம உடலில் பொருந்தியிருப்பவன். நெய்யைப் பெற்ற ஆடை உரம் பெறுவதைபோல வாசன வடிவ வினைகள் ஒன்றாகி கடலைப் போல் பெருகிவிடும். ஆன்மா சிவத்தை நினைப்பதால் ஒலிக்கும் நாதஒலியால் அவ்வினைகள் கெட்டுவிடும்.
223. சிரசிற்கு தீயைக் கொண்டு போகும் ஆற்றல் உடையவர் வைதீகத் தீயை பத்தினியுடன் வளர்த்தவர் மறுமையில் பிரம்ம லோகம் முதலியன சென்றும் இம்மையில் ஓங்கு புகழும் அடைவர்.
திருச்சிற்றம்பலம்
####