gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 17 December 2019 18:14

நாத இயல்பு, பதி வீரத்தால் வென்ற இடங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

உடம்பில் உள்ள நாத இயல்பு!

337. உலக உயிர்கள் சுழுமுனை வழியில் செல்லாது உலகமுகமாக கீழ் கிழ்நிலைப்பட்டு பிராண சக்தியை இழக்கின்றனர். மூலாதாரத்தின் நடுவில் உள்ள நாதமே விரைந்து சென்று சிரசில் சிவனின் அருகில் பொருந்தி இருப்பாயாக!

338. அக்னியின் வடிவான நாதத்தை சிரசில் முன் பக்கம் இருக்கச் செய்யும் சாதகன் அதைச் சிரசில் பின்பக்கம் பிடரியில் விளங்கச் செய்தால் அது பரவி தலையின் இடது பக்கம்மும் விளங்கும் அவர் தவமுனிவராய் தலையில் எங்கும் நிறையும் வனப்பு மிக்க ஒளியாவார்.

#####

பதி வீரத்தால் வென்ற எட்டு இடங்கள்!

339. மலை போன்ற கொடிய எண்ணங்கள் நிறைந்த அந்தகன் சூரன் இறையிடம் பெற்ற வரத்தால் உலக உயிர்களை துன்பு/றுத்த தேவர்கள் இறைவனிடம் முறையிட கூர்மையான தூய்மையான ஞானம் என்ற சூலம் கொண்டு சிவபெருமான் கொல்லும் தொழிலைச் செய்தனன். (இடம்-திருக்கோவிலூர்)

340. சுவாதிட்டானத்தில் விந்துவை நாசம் செய்து கொண்டிருந்த பிரமனை விந்து நீக்கம் செய்வதைத் தடுத்து அக்னி காரியத்தில் ஜீவன்களின் விந்து வெற்றி பெறச் செய்து உலகம் நிலைபெற நான்முகன் வேண்டும் என நினைத்து அவர் குறும்பை நீக்கி உலக இன்பத்திற்கு பொருந்துமாறு அருள் செய்தான். (இடம்-திருப்பறியலூர்)

341. எங்கும் பரவியிருக்கும் பெரிய உலகத்திற்கு ஆதாரமாய் இருந்தும் ஒடுங்குவதற்கு இடமான இறைவன் திருவடியை உணர்ந்த பக்குவம் உடையவர்கள் போகம் செய்யும்போது பிர்மனின் குறும்பை குறுக்கி மணிப்பூரகத்திலிருந்து கவர்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் திருமாலின் கவர்ச்சியை நீக்கி ஞானியர் இடைவிடாமல் சிந்திக்க அருளினார். இடம்-திருக்கண்டியூர்)

342. உயிரின் உடலுக்கு தலைவனும் நாத தத்துவத்திற்கு உரியவனும் ஆகிய சிவபெருமானிடம் நீரை முகமாக்கொண்ட் சலந்தரன் கீழ் நோக்குதலான போரைச் செய்ய உயிர்கள் சாதனையால் மேல் நோக்கி சென்று சகஸ்ரதளத்தில் பிராணனுடன் கலந்து விரிய ஜீவர்களுக்கு உதவியாய் சலந்தரனை அழித்து அருள் செய்தான். (இடம்-திருவிற்குடி)

343. கங்கை நீரைத் தலையில் அணிந்து சிவந்த சடையை உடைய சிவன் மூன்று கோட்டைகளை அழித்தார் என்று சொல்வர். மூன்று கோட்டைகள் என்பது ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அழித்தனவாகும். அவர் அவ்வாறு அழித்தலை யாரறிவார்.(இடம்-திருவதிகை)

344. மூன்று வகையானத் தீயிலிருந்து நாதத்தை வெளிப்படுத்தும் அக்னியின் செயலை கரிய யானை (கயமுகாசூரன்) போன்ற கரிய இருளை கிழித்து வெளிப்பட்ட பெருமானை யாரும் அறியவில்லை. குணம் கூடிய பலதேவர்களும் அந்த தீயின் கண் வெளிப்பட்டபோது மறைந்தனர்.(இடம்-திருவழுவூர்)

345. மூலாதாரத்திலிருந்து சுழுமுனை வழியாக மேல் எழும் மூர்த்தியை பிரமரந்திர மேல்துளையில் நோக்கி பொருந்தச் செய்தால் காலனைச் சினந்து மெல் எழும் நாதத்தை சகஸ்ரதளத்தில் பொருத்தி எக்காலமும் அழியாமல் இருக்கலாம். (இடம்-திருக்கடவூர்)

346. நன்றாக இருந்த மனதை சிவனுடன் சேர்த்து இலிங்கவழி செல்லாது தடுத்து தீமை செய்யாதபடி விந்து நீக்கம் என்ற காமனது செய்லைக் கெடுத்து வாழ்க்கைத் துணைவியுடன் பொருந்தி இருப்பது ஆகும். மனம் சகஸ்ரதளத்தில் பதிந்து பெண்னுடன் புணர்ச்சியில் ஈடுபட்டால் விந்து நீக்கம் இராது. காமனை எரித்த செயலாகும். (இடம்-திருக்கொறுக்கை)

#####

Read 1580 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 December 2019 19:38
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26945621
All
26945621
Your IP: 3.239.239.71
2024-03-29 14:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg