ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!
#####
பிரளயம்!
362. கருவரையைத் தாண்டி எழும் மணிப்பூரகத்தில் உள்ள நீர்மண்டலத்தில் பிரமனும் திருமாலும் வேறுபட்டு நிற்க மணிப்பூரகத்தில் உள்ள அறிவுமயமான ஒளிமேலே எழுந்து சிவசூரியனாக உச்சிமீது அருள் செய்வான்.
363. அலைகடல் பகுதியான மணிப்பூரகத்தினினை பிளந்து கொண்டு எழுந்து அண்டத்தின் எல்லையை அடைந்து தலவர்களுக்கெல்லாம் தலைவனாய் உல்கத்து உயிர்கள் காமத் தீயில் விழாது துன்பத்தால் அலைமோதும் உலக்த்தில் அழுந்தாமல் காத்து அருள்வான் சிவபெருமான்.
364. குளிர்ந்த தன்மையுடைய மணிப்பூரகக் கடலைக் கடந்த அறிமய்மான ஒளிச்சுடரை அமரத்தன்மை பெற்றவரும், தேவர்களும் எட்டு திக்கும் கடல்போல் பரவி நிற்கும் சிவன் என வணங்குவர். வானத்தையே கடல்போன்று செய்த அப்பெருமான் சிரசின் மேல் சென்று அகக் கண்ணுக்கு பரவெளியாய் காட்சியளிப்பதை அறியமாட்டார்.
365. தத்துவங்களை எல்லாம் படைக்க வல்லானை படைப்பு இல்லாதவன் என்று துதித்து தம்மிடம் பரவும் முறையில் அமைத்துக் கொள்பவர் உலக உயிர்களே! பொங்கும் நீரில் கடல் ஒலி போன்ற நாதம் ஓங்கி எங்கும் பரவி காமத்தீயை மிகாதபடி சிவன் அமைத்து அருளினான்.
366. பண்பை அழிக்கும் காமச் செயல் என்று வழிபாடு செய்து சுவாதிட்டானத்தில் உள்ள நடபை அளிக்கும் பிரமனை தேடிச் சேர்ந்து நான்முகனின் சேட்டையைக் கெடுத்து வீண்பழி ஏற்படாமல் பக்குவப்படுத்தி அருளினான்.
#####
சக்கரப்பேறு!
367. மயக்கத்தை அளிக்கும் உணர்வு தத்துவத்திற்குரிய திருமால் உலக அனுபவம் நீங்கி சூழுமுனை வழியாக மணிப்பூரக வட்டத்தில் உள்ள உணர்வு தளத்தை அடைந்து வெண்மையான ஒளியில் தேவதேவனாக விளங்கி பூமி முதலிய ஏழு உலக இன்பங்களையும் படைத்து அளிப்பவனாக உள்ளான்.
368. சக்கரத்தைப் பெற்ற திருமாலான நல் தாமோதரன் தான் பெற்ற சக்கரத்தை தாங்க முடியாமல் விருப்பமுடன் சிவனை வழிபாடு செய்து சிவனனின் ஆற்றலில் ஒரு பகுதியை பெற்றனன்.
369.பகுத்துக் கொடுப்பதாக சிவபெருமான் நல்ல சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தருளினான். தன் சக்தியையும் பகிர்ந்தளித்தான். இவ்வாறு பகுத்து சக்திக்கும் திருமாலுக்கும் தன் திருமேனியை அளித்தருளினான் பெருமான்.
370. தக்கனின் வேள்வியை வீரபத்திரர் அழித்தார். அவர் சிரசுமேல் ஆணை என்ற சக்கரத்தை திருமால் செலுத்தி உணர்வைத்தூண்ட காமவாயு வேகத்தால் அக்னி சக்தியால் பயன் கிட்டாமல் ஆனது.
#####