ஓம்நமசிவய!
மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!
#*#*#*#*#
சங்காரம்!
421. சிவன் தீயைப் பெருகச் செய்து விரிந்த உலகத்தை அளித்தான். அக்னியால் கடலை வற்றிப் போகும்படி செய்தான். அக்னியால் அசுரரை அளித்தான். அந்த அக்னியே பெருமானின் கையில் விளங்கும் அம்புபோன்றதாகும்.
422. தினபிரளயம், நடுப்பிரளயம், பெரும்பிரளயம் ஆகிய மூன்றில் கற்பத்தின் முடிவில் வரும் பிரளயம் ஒன்றே. அன்று அழிந்த இந்த உலகத்தின் நிலையை ஞானக்கண்ணால் பார்க்கின்றேன். உலையில் போட்ட அரிசி மேலும் கீழும் சுறுவதைப்போல் உலகம் பிரளயத்தில் சுழலும். மலைபோன்ற பெரிய நிலம் எரிந்து அழியும்.
423. ஜீவன்களுக்கு பக்குவம் செய்யும் நிலம் பனிமிக்க மலை மகிழ்ச்சியை உண்டாக்கும். ஏழு கடல்களின் பெருக்கம் எல்லாம் கொதிக்கும்படி தீயை மூட்டி வெட்ட வெளியாய் ஆக்குபவரது மனதில் வியப்புக்குரியது ஒன்றும் இல்லை.
424. சிரசின் மெல் உள்ள ஒளி மண்டலத்திலிருந்து கீழே இறங்கிய சிவன் ஆதிசக்தி உடலைச் சுற்றியுள்ள அண்டகோசத்தில் பொருந்தி சக்தியோடு கூடி ஜீவன்களை பக்குவம் செய்து மூலாதாரத்தில் உள்ள குண்டலி ச்க்திமீது எழும் தீயை மீண்டும் தன்னுடன் ஒடுக்கி விளங்குவான்.
425. ஒன்றையும் அறிந்து கொள்ள முடியாத உறக்கம் தினச்சங்காரம். கருவி சுழன்ற நிலைமை அமைந்த சங்காரம் என்பதாம். செயலின்றி ஒன்றும் புரியாமல் இருப்பது சுத்த சங்காரம். சிவன் அருளில் பொருந்தச் செய்வது உண்மை சங்காரமாம்.
426 .ஸ்தூல சூக்கும இராண்டு உடல்களையும் சிவன் தொட்டுக் கொண்டிருப்பது நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம். இது மாயைப் பொருந்திய சங்காரம் ஆகும். சுத்த சங்காரம் மனம் அதீதத்தில் போய்ச் செயல் இன்றி இருத்தலாகும். சிவன் ஸ்தூல உடலின்று சூக்ம உடலைப் பற்றி ஸ்தூல உடலை தழுவுமாறு விடுதலே சங்காரம்.
427. நாள் ஒடுக்கம் என்பது பிறவித் துன்பத்தை போக்கிவிடும். அப்படி என்றால் மனம் கருவிகளின் ஒடுக்கத்தில் உடலும் உயிரும் பிரிந்திருக்கும் நிலை உண்டாகும். இது ஆன்மாவிற்கு கெடுதல் செய்யும் நிலையாகும். சிவத்தன்மை அளித்த ஒடுக்கமே உண்மையானது..
428. நாள் ஒடுக்கம் என்ற நித்த சங்காரம் நீண்ட உறக்கத்தில் இறுத்துவதாகும். அமைத்து வைத்த ஒடுக்கம் மனம் முதாலானவைகள் அடங்கி இருத்தலாகும். சுத்த ஒடுக்கம் கருவிகளின்று நீங்கி பரன் அருளால் கூடாமல் இருக்கும். கருவிகளின்று நீங்கி சிவன் அருளில் தோய்ந்து விளங்குவது நான்காம் ஒடுக்கமான சங்காரம்.
429. குணம் பழாகி சிவத்தை முதலாகத் தோன்றும் ஆன்மப் பயிர் தனு காரணம் முதலியவற்றுடன் சேர்ந்து பின் அடங்கினும் முந்தைய நிலையை அடையாது.. இது முடிவில்லா சங்காரம். ஜீவன்கள் திருமால், பிரம்மன் செயலுக்குட்பட்டு பிறப்பிலும் இறப்பிலும் உழல்வர். ஆனவ மலம் நிலைகெட்டு வறுத்த விதையைப்போல் பயிரானது அந்தச் சிவன் பரப்பில் இருக்கும்.
430. சேரும் வினைகளைச் சுட்டுவிடுவது போல் சிவனிடம் ஆர்வத்தை பெருக்கி உயிர்களே நில்லுங்கள். அவை அழியும்படி செய்யும் சிவன் இருக்குமிடம் சகஸ்ரதளமாகும். அதை உடலில் வைத்தான் அவன். கலந்து எங்கும் நினைந்திருக்க உடலில் ஒளிக்கற்றைகளை அமைத்துள்ள அவனது கருணையை உணருங்கள்.
#####