ஓம்நமசிவய!
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
#####
குரு நிந்தை!
530. கயவர்கள் ஞானம் பெற்றவரை பேண மாட்டார்கள், உடனிருப்பவரை வருந்தும்படி செய்வர். கற்று அறிந்தவரிடம் பொருந்தியவரே ஞானம் அடைந்தவர். இவரன்றி வேறு யாரும் இப்பேற்றைப் பெறுதல் முடியாது.
531. ஓர் எழுத்து மொழியான ஓம் என்ற பிறணவத்தின் பொருளை மாணவன் உணருமாறு செய்த பெருமை கொண்ட நாதத்தை எழுப்பித் தந்த குருவை மனம் வருந்தும்படிச் செய்தவர் ஊர் சுற்றித் திரியும் நாய் பிறவியாய் பிறப்பர். பின் ஒரு யுகம் பூமியில் புழுவாய் கிடப்பர்.
532. இல்லறத்து ஞானிகளும் துறவறத்து ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி கேட்டைச் செய்தவரின் பொருளும் உயிரும் ஓர் ஆண்டில் மறையும். சத்தியம். இது சதாசிவத்தின் மீது ஆணை.
533. ஓர் எழுத்து மொழியான பிரணவத்தை உபதேசித்த பெருமானை குருவை உள்ளம் வருந்தும்படி தீமைகள் செய்தவர் இழிவான நாயாய் பிறந்து நூறு பிறவிகள் எடுப்பர். பின்பு தாழ்ந்த பிறவியினராய் பூவுலகில் மடிவர்.
534. அடியவர்கள் மனம் கலங்கினால் தேசமும் நாடும் மற்ற சிறப்புகளும் அழிந்துவிடும். இந்திரன், பெரு மன்னர்களின் ஆட்சி பீடம் ஆகியவை நாசமாகி விடும். இது சிவபெருமான் மீது ஆணை.
535. நல்ல நெறிகளைப் புகட்டிய குருவின் முன் பெருமை பேசினால் இதற்கு முன் செய்திருந்த தவம் கெடும். ஆசிரியர்களிடம் பெற்ற ஞான உபதெசம் நிலைக்காது. பழைமையாய் உபதேசிக்கப்பட்ட நெறி முறைகள் மறந்து ஆன்ம வளர்சிக்கான வழிகளும் போய் வறுமையில் வாடுவர்.
536. கையில் கிடைத்த மாணிக்கத்தை விட்டு காலில் அகப்பட்டக் கல்லை எடுத்துச் சுமப்பவனின் செய்கையைப் போல் கையில் உள்ள நெய், பால், தயிர், ஆகிய உணவு இருக்க நன்மை அளிக்காத கையளவு பிட்டு உண்பான் போலாகும்
ஞானியரோடு ஞானத்த்டை விட்டு கிரியை செய்பவன் நிலையாகும்.
#####