ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#####
மூன்றாம் தந்திரம்!
அட்டாங்க யோகம்!
549. சரியாய் கட்டுப்படுத்தப்பட்ட உயிர்மூச்சான பிராணன் ஒன்று இழுக்கப் பெற்று அது பன்னிரண்டு விரற்கடை அளவு கழுத்திற்கு மேலும் கீழும் இயங்குமாறு எண்ணி அட்டாங யோகத்தை எடுத்துக் கூறி நந்தியெம்பெருமான் தீமையை போக்கவும் நன்மையை மேற்கொள்ளவும் வழிவகை செய்துள்ளான்.
550 முன் சொன்ன வண்ணம் புலடக்கத்தில் நன்றாற்றல் நெறியில் நின்று தன்னை மறந்திருக்கும் சமாதி நிலையில் இருந்து உய்வு பெறவும் முன்னால் வழிகாடி பின்னால் நிற்கும் பராசக்தியின் துணையை அடைந்து நெஞ்சு, தலை, உச்சி, கண், கை ஆகிய கருவிகளான உறுப்புகளைச் சிவனது உடமை என்றெண்ணி இருக்கும் இம்முறையில் இந்த யோகத்தை கூறிச் செல்வான்.
551. அதுவழி இது வழி என்று தடுமாறாமல் இறைவனை அடைய அட்டாங்க யோக நெறியில் சென்று சமாதி நிலையை அடையுங்கள். அப்படிப் பொருந்திய உயிர்க்கு ஞான யோகம் அடைந்து சிவப்பேறு அடையலாம். அப்படி ஞானம் கைகூடாமல் போனாலும் பிறவிற்கு என வரும் நெறியில் ஓர் உடலில் பொருந்துவது என்பது இல்லாமல் போகும்.
552. இயமம், நியமம் அளவில்லா ஆசனம் நன்மையான பிராணயாமம், பிரத்தியாகாரம் வெற்றிதரும் தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினைகள் பொருந்திய எட்டுவகை உறுப்புகளை உடைய யோக நெறியாகும்.
#####
இயமம்!!
553. தொடர்ச்சியாக எட்டு திக்குகளிலும் மழை பெதாலும் குளிர்விக்கும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள் என நந்தியெம்பெருமான் பவளம் போன்ற குளிர்ந்த சடையுடனே பொருந்திய சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், ஆகிய முனிவர் நால்வர்க்கும் அருள் புரிந்தான்.
554. எந்த உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், திருடாதவன், நல்ல குணத்தை உடையவன், தீமை செய்யாத நல்லவன், பணிவுடையவன், நீதி வழுவாதவன், தன் பொருளைப் பகிர்ந்தளிப்பவன், குற்றம் செய்யாதவன், கள், காமம் இல்லாதவன் ஆகிய இந்த இயல்புகளை உடையவன் இயமத்தை மேற்கொள்ள தகுதியுடையவன்.
#####
நியமம்!
555. நியமத்தை மேற்கொள்பவன் நாதவடிவான பழமையானவனை, பேரொளியுடன் திகழ்பவனை, மூலாதரத்தில் அக்னிமய்மாய் இருப்பவனை, சிவனிடம் பிரிவின்றி இருக்கும் சக்தியுடன் உயிர் உடலுடன் இனைந்து நிற்கும் தன்மையை உணர்ந்து ஒழுகுதல் வேண்டும்.
556. தூயதன்மை, அருள், குறைந்த உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு காமம், களவு, கொலை ஆகியவற்றைத் தீமை என ஒதுக்கி இந்த பத்தையும் மேற்கொண்டே நியமத்தினை பின்பற்றல் வேண்டும்.
557. தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை, கொடை, முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்தையும் நியமத்தினை மேற்கொள்பவன் உயர்நிலையில் கடைபிடிக்க வேண்டும்.
#####