ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பல
வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்
தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#####
அட்டாஙக யோகப்பேறு!
632. சகஸ்ர தளத்தில் விருப்புடன் இருக்கும் சிவன் திருவடியை விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமையம்மையார் மகிழ நடனம் செய்யும் காளையூர்த்தியானவர் இவன் என்ன வேண்டி வந்தனன் என்று கருதி அவன் விரும்பியதை அருள் செய்வார்.
633. சிவன் திருவடியைப் பற்றி அதன் மீது அன்பு கொண்டு நின்று சிவத்தின் புகழை கற்றும் கேட்டிருந்தும் அதைப்பற்ரிச் சிந்தித்திருப்பவர்க்கு முனிவர்கள் எல்லோரும் எழுந்து நின்று எதிர்கொண்டழைத்து சிவபதம் சேர்வர்.
634. சிவத்தை நோக்கி தன்னை வருத்தி தவஞ்செய்து தேவர் உலகிற்கு தலைவானாக தேவர் உலகம் செல்லக்கூடிய தகுதி உடையவன் இவன் எனக்கூறும்படி முரசும் குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இந்த உலகத்திலேயே இன்பம் அடைவான்.
635. செம்பொன் போன்ற ஒளியுடைய சிவகதியை அடைந்த காலத்தில் தேவர் கூட்டம் பூரண கும்பத்துடன் வந்து எதிர் கொண்டழைத்து எங்களுடைய பொன் மண்டலத் தலைவன் இவனே என்று பாராட்டுவதால் இன்பச் சேர்க்கையில் கூடியிருக்கலாம்.
636. சிவகதியை அடையும்போது திக்குப்பாலகர்கள் யார் இவன் என வினவ சிவன் நாமே இவன் எனக்கூற அழகுடன் கூடிய தேவர்கள் எதிர்கொண்டழைக்க கருநிறம் வாய்ந்த கழுத்தை உடைய சிவபெருமானை நேரில் கணட பெருமை உடையவர் ஆவர்.
637. நல்வழியை நாடி எமன் வழியை மாற்றிடும் பிரணவ உபாசகரும் யோகியருமான இவருக்கு தேவர் உலகத்தில் உள்ள் எட்டுத் திசையில் எங்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்றே தெரிந்த வழியாக இருக்கும்.
638. அறி துயில் கொண்ட திருமாலும், ஏழு உலகங்களையும் படைத்த பிரம்மனும், வன்மையால் அழித்து அடையாது இருக்கும் உருத்திரனும், அமுதம் உண்டு மகிழ்ந்த தேவர்களும் சிவகதியை பெற்றவர்களே.
639. ஆன்மாவிற்கு ஆன்வ மலத்தின் மறைப்பால் துன்பங்கள் ஏழையும் கடந்து ஆரியன் சிவத்தின் உபாதி ஏழையும் பொருத்தி தொடர்ந்து வரும் சுத்த மாயை கெட்டுவிட தவத்தை மேற்க்கொண்டு தவத்தில் இயங்கும் பொருளை அடைதலே சமாதியின் பயன்.
#####