குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
சிவம் (29)
Children categories
ஓம்நமசிவய!
ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!
#*#*#*#*#
சிவ தாண்டவங்கள்!
சிவனின் தாண்டவத்தால்தான் இந்த உலகம் இயங்குகின்றது. அவரின் ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே. பல தலங்களில் ஆடவல்லான் பல வகையான ஆடல்களை நிகழ்த்தியிருக்கின்றார். எம்பெருமான் இறைவன் 108 தாண்டவ பேதங்களை ஆடியுள்ளார் என பரத நாட்டியத்தை உலகுக்கு அளித்த பரத முனிவர் கூறியுள்ளார். அவையே கர்ணங்கள் என அழைக்கப்படுகின்றன.
தன் ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வகைச் செயல்களை செய்து அதாவது நடனம் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றார். சிவனின் ஆடல்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது எட்டு வகையான தாண்டவங்களே!
இதில் முதல் ஏழு தாண்டவங்களும் ஸப்த ஸ்வரங்களை உலகிற்கு அளித்தன. ஆடத் தொடங்குமுன் ஆரோஹணமும் ஆடி முடிக்கையில் அவரோஹணமும் ஆக ஸ ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் உலகிற்கு கிடைத்துள்ளது.
காளிகா தாண்டவம்!
அன்னை சிவகாமி காளியாக கோபம் கொண்டு இருக்கும்போது அந்த கோபத்தை தணித்து தானும் அவளும் வேறு வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம் காளிகா தாண்டவம் எனப்படும். இந்த தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டுக் கரங்களில் உடுக்கை, மணி, அக்ணி ஆகிய வற்றை வலது கரங்களிலும், இடது கையில் அபய ஹஸ்தம் கஜ ஹஸ்தமும் காட்டிய கோலத்தில் காட்சி. திருநெல்வேலி தாமிர சபையில் இந்த வகை நாட்டியத்தைக் காணலாம்.
இந்த கோலத்தில் இறைவனைத் தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும். கடன் தொல்லை, தாழ்வு மனப்பான்மை நீங்கும்.
சந்தியா தாண்டவம்!
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட உலக நன்மையை முன்னிட்டு சிவபெருமான் அதனை அருந்தினார். விஷத்தின் வீர்யத்தால் அவர் மயங்கி பார்வதியின் மடியில் சாய்ந்த அந்த சில நிமிஷங்கள் பூமியின் இயக்கம் நின்றது. உலக உயிர்களுக்கு மூச்சுக் காற்று கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமான் மயக்கம் தீர்ந்து எழுந்திருக்க மனமுறுகி வேண்டினர். சிறிது நேரத்தில் பெருமான் மயக்கம் தீர்ந்து கண்விழித்ததைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அந்த ஆனந்தத்தில் பெருமானை ஆனந்த நடனம் ஆட வேண்ட அப்போது ஆடிய நடனமே சந்தியா தாண்டவம். பிரதோஷ வேளை.
உமா தாண்டவம்:
அன்னையும் அப்பனும் சேர்ந்து ஆடிய நடனம் உமா தாண்டவம் ஆகும். இந்தக் கோலத்தில் அபஸ்மர புருஷனை மிதித்தபடி ஆடுகின்றார் எம்பெருமான். இந்த நடனத்தில் கஜஹஸ்தம் என்ற முத்திரையைக் காண்பிப்பதால் இது காத்தல் தொழிலைக் குறிக்கும் தாண்டவம் எனப்படுகின்றது.
இந்தக் கோலத்தை கண்டு தரிப்பவர்களுக்கு தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும்.
ஊர்த்துவ தாண்டவம்:
தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கோபம் கொண்டு உமை பெருமானை விட்டு விலக அதனால் அவர் உக்கிரம் மேலும் அதிகமாகி காளியாகி நின்றார்.. அந்த உக்கிரத்தை தணித்து காளியை சிவகாமியாக மாற்ற நினைத்து காளியுடன் போட்டியை ஏற்படுத்தி நடனமாடத் துவங்கினார். நடனம் சமமான முறையில் நீண்டு கொண்டே சென்றது. அப்போது நடனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த எம்பெருமான் தன் காதிலுள்ள தோட்டை கழற்றி கீழே விழச் செய்து நடனமாடியபடியே மீண்டும் அதை காலில் எடுத்து காதில் அணிந்து கொண்டார். இந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெருமானுக்கு ஊர்த்துவ தாண்டமூர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது.
கௌரி தாண்டவம்:
தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் வந்தார் எம்பெருமான். அவருடன் விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருவரும் ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடன் ஆடும் இறைவனின் மற்றொரு நடனத்தை காண கௌரிதேவி ஆசைப்பட அவருக்காக இறைவன் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் எனப்பட்டது. ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக கையில் ஒரு பிரம்பு இருப்பதே கௌரி தாண்டவம் ஆகும்.
கஜ சம்ஹார தாண்டவம்:
தருகாவனத்து முனிவர்கள் தங்கள் அபிசார வேள்வியில் மதங்கொண்ட யானையை தோற்றுவித்து பெருமானை நோக்கி அனுப்பினர். அந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார் எம்பெருமான். அப்போது ஆடிய தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படும்.
ஆனந்த தாண்டவம்:
பதஞ்சலி, வியாபாக்ர முனிவர்களின் விருப்பத்திற்காக இறைவன் ஆடிய தாண்டவம் ஆனந்த தாண்டவம். ஆகும். ஐந்து தொழில்கள், ஐந்து பூதங்கள், ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கின்ற தாண்டவம் இது, இதை களி நடனம் என்றும் சொல்வர். சிதம்பரம் எனும் தில்லையில் நடராஜர் உருவத்தில் ஆடும் பெருமானை தில்லைக்கூத்தர், அம்பலக் கூத்தர் என்றழைப்பர்.
இதுவே மிகச் சிறந்த தாண்டவமாகக் கருதப்படும். இந்த நடனத்தை அடிப்படையாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத முனிவர் நடன கலையையும் தோற்றுவித்தனர்.
இந்த நடன தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்நாள் இன்பம் நிலைத்து நிற்கும்.
அஜபா தாண்டவம்:
அன்னை விடும் சுவாசக் காற்றிற்கேற்ப பெருமான் ஆடிய நடனம் இது. அஜபா தாண்டவம் எனப்படும். இறைவன் அசைந்து அசைந்து மெதுவாக பொறுமையாக ஆடிய நடனமாகும். அஜபா நடனம் பல ராகங்களின் பிறப்பிடம். இந்த நடனத்தால் இசை, ஆடல் போன்ற கலைகள் சிறந்தன.
இந்தத் திருக்கோலத்தில் இறைவனை தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.—குருஸ்ரீ பகோரா.
#####
ஓம்நமசிவய!
நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#*#*#*#*#
சிவ நிர்வாணாஷ்டகம்!
மனமும் நானல்ல!
புத்தியும் நானல்ல!
நான் என்ற அகங்காரமும்
நானல்ல! உடலின்
அங்கங்களும் நானல்ல!
ஆகாயமும் பூமியும் நானல்ல!
ஜோதியும் நானல்ல!
காற்றும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
உச்சுவாச நீச்சுவா மூச்சினால்
ஆனவன் அல்ல! நான்.
கப, பித்தம் முதலிய
ஏழு தாதுக்களால்
ஆனவனுமல்ல! பஞ்ச
கோசத்தால் ஆனவனும்
அல்ல! வாக்க நான் அல்ல! கை
கால்களும் நான் அல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
துவேஷம் எனக்கில்லை!
ராகமும்-அன்பும் எனக்கு இல்லை
லோபமும் எனக்கில்லை!
மோகமும் எனக்கில்லை!
மதமும் எனக்கில்லை!
மாச்சர்யமும்-சினம் எனக்கில்லை!
தர்மத்துக்கு தொடிசு இல்லை
சம்பத்துக்கும் சம்பந்தமில்லை
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!
புண்ணிய பாவமும் எனக்கேது!
ஓதுவது தீர்த்தாடனம் எனக்கேது!
வேதம் வேள்வி எனக்கேது!
சுகம் ஏது!
துக்கம் ஏது!
ஹவிஸ் நானல்ல!
அனுபவிக்கிறவனும் நானல்ல!
அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
மிருத்யு(மரணம்) விடம் பயமில்லை!
ஜாதி வித்தியாசம் எனக்கில்லை!
தகப்பனும் இல்லை! தாயும் இல்லை!
பிறவியும் எனக்கில்லை!
பந்துவும் இல்லை!
சினேகிதனும் எனக்கில்லை!
ஆசானும் இல்லை!
சிஷ்யனும் எனக்கில்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
சஞ்சலம் இல்லாதவன்!
உருவங்களால் கட்டுப் படாதவன்!
இந்திரியங்கள் அனத்தையும் ஜயித்தவன்!
பற்றை அறவே துறந்தவன்!
எனக்கு முக்தியே!
பந்தமோ விஷயமோ இல்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!
சொல்லும் பொருளும் போல்
இணைபிரியாத ஜகத்தின் தாய்
தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை
நான் வணங்குகின்றேன்!
சொல்லும் அதன் பொருளும் நான்
நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
ஆதிசங்கரர் சிவவழிபாட்டின் உன்னதநோக்கம் பற்றி எழுதிய பாடல் வரிகள்.- குருஸ்ரீ பகோரா
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
சிவ சதாஷ்டகம்!
பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.
அலைகள் மோதும் கங்கையின் பிரவாகத்தையும் சந்திர கலையையும் சிரசில் அணிந்தவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களை உடையவரும் சிறந்த பாம்பைக் குண்டலமாக அணிந்தவரும் புண்ணியமிக்கவர்களைக் காப்பவரும் என்றைக்கும் மங்கலமானவருமாகிய சிவனுக்கு நமஸ்காரம்.
தாமரை போன்ற நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவால் நான்கு வேதங்களாலும் விளக்கப்படும் பெருமை மிக்கவரும் நான்கு கைகளை யுடைய திருமாலின் தங்கையான மீனாட்சி அன்னையை இடப்பாகத்தில் கொண்டு விளங்குவதால் அழகுடன் விளங்குபவரும், நான்கு விதமான புருஷார்த்தங்களை அளிக்கவல்ல தாண்டவக் கோலத்தில் விளங்குபவரும் என்றைக்கும் மங்கலமானவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
சரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
சதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமத் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
திரிபுர சம்ஹார காலத்தில் பூமியை ரதமாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், பிரம்மனை சாரதியாகவும் வேதங்களை குதிரையாகவும் கொண்ட சதாசிவனும் சம்புவுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
சிவ நிந்தனை செய்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு வீரபத்ர கடவுளைத் தோற்றுவித்து அவரது கர்ஜனையை கேட்டு பயந்து ஓடிய, அவிர்பாகம் பெற வந்த தேவர்களுக்கு நற்கதி அளித்த ஸர்வலோக சாட்சியான சதாசிவனும் மங்களமூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயனை யமதர்ம ராஜனிடமிருந்து காத்து ஆயுள் அளித்தவரும், கன்னத்தின் ஒளியால் சந்திரனை வென்றவரும், நிரந்தர சுகமளிக்கும் மோட்சத்தை விரும்பும் சான்றோர்களால் தியானிக்கப் படுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களால் நமது பாத தாமரைகளில் இடைவிடாது அர்ச்சனை செய்யப்படுபவரும், தங்க மலையை வில்லாகக் கொண்டவரும், வெள்ளியம்பலத்தில் கூத்தாடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
மதுரையம்பதிக்கு அரசரும், மகேசுவரனும், ஆலகாலம் என்ற விஷத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், மீனாட்சியின் பதியாக விளங்குபவரும் சுந்தரத் தாண்டவம் ஆடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.
இந்த சதாஷ்டகம் பதஞ்சலி முனிவரால் அருளப்பட்டது.- குருஸ்ரீ பகோரா
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
&&&&&
சிவலிங்கங்கள்!
சிவ பக்தர்கள், அடியார்கள் அனைவரும் ‘ஓம் நமசிவய’ என நெக்குருகி பிரார்த்திக்கும்போது அந்த உயிர்கள் நினைவில் இருப்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பிரம்மனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் தங்களிடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது அவர்கள் நடுவே அக்னி பிளம்பாக சிவபெருமான் தோன்றினார். அதுதான் இறைவன் எடுத்த முதல் வடிவம். லிங்க வடிவம். அது முதல் லிங்கோத்பவம்- லிங்கம் தோன்றுதல் உண்டாயிற்று. அன்று முதல் சிவபெருமான் லிங்க உருவிலேயே வழி படப்பட்டு வருகின்றார். அந்த வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் பலவகையாக பகுக்கப் பட்டிருக்கின்றன.
பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.
அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.
பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.
சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.
ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..
ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.
சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.
1.சலலிங்கம்
(சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை. அவைகள்-
1.ஆயஸ்காந்த லிங்கம்-காந்தத்தால் உருவான லிங்கம் சித்தர்கள் வழிபடுவது. அஷ்டமா சித்திகளை அளிக்க வல்லது.
2.மௌகித்த லிங்கம்-முத்துக்களை எரித்த சம்பலிலிருந்து உருவாக்கப்பட்டது. மங்களமும் செல்வமும் அருளும் தன்மை கொண்டது.
3.ஸ்வர்ண லிங்கம்-தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
4.ரஜத லிங்கம்- வெள்ளியால் செய்யப்பட்டது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
5.பித்தலா லிங்கம்-பித்தளையால் செய்யப்பட்டது. பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லா மரணத்தை தரும்.
6.திராபு லிங்கம்-தகரத்தால் செய்யப்படுவது. எதிரிகள் இல்லாமல் செய்யும்.
7.ஆயச லிங்கம்- கந்தக அமிலத்தால் செய்யப்படும் எதிரிகளின் தொல்லையை அழிக்கும்.
8.சீசா லிங்கம்-வெள்ளீயத்தால் செய்யப்படுவது. எதிரிகள் நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
9.அஷ்டதாது லிங்கம்-எட்டு வகையான தாதுக்களால் உருவானது. சித்தி அளிக்கக் கூடியது.
10.அஷ்டலோக லிங்கம்-எட்டு வகை உலோகங்களால் செய்யப்படுவது. தொழுநோய் குணமாகும்.
11.வைடூர்ய லிங்கம்- வைடூரியத்தால் உருவான லிங்கம். எதிரிகளின் எதிர்பாரா தாக்குதல்களின்று காப்பாற்றும்.
12.பாதரச லிங்கம்- பாதரசத்தால் ஆனது. அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
13.ஸ்படிக லிங்கம்- ஸ்படிகத்தால் ஆனது. எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.
2. அசலலிங்கம்
(அசலம்- புடை பெயராதது)-.அவைகள்
1.சுயம்பு லிங்கம்-தானாகவே இறைவன் விரும்பிய இடத்தில் தோன்றிய லிங்கம்
2.தெய்வீக லிங்கம்-தேவர்களால் பூஜிக்கப்பட்டு பூமிக்கு வந்த லிங்கம்.
3.அர்ஷ/ஆரிடலிங்கம்-ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் வழிபாட்டிற்கென உருவாக்கிய லிங்கம்,
4.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை.
5.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை.
6.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது.
7.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம்.
8.மனுஷ்ய லிங்கம்-சாதாரண மனிதர்களால் உருவாக்கப் பட்ட லிங்கம். இந்தவகை லிங்கங்கள் பீடத்தின் அளவு, பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பலவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
8.1.வர்த்தமான லிங்கம்- பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவில் இருந்து ருத்ரபாகம் அதைப் போல் இரு மடங்கு இருப்பதாகும். வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
8.2.ஆத்ய லிங்கம்—மூன்று பாகங்களும் சம்மான அளவில் இருக்கும். இந்த வகை லிங்கங்களில் 1.புண்டரீக லிங்கம்-வழிபட்டால் பெரும் புகழ் கிட்டும், 2.விசாலா லிங்கம்- வழிபட்டால் பெரும் பொருள் கிட்டும், 3.ஸ்ரீவத்சா லிங்கம்- வழிபட்டால் எல்லா வளங்களும் கிட்டும், 4.சத்ருமர்த்தனா லிங்கம்- வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி தரும்.
8.3.முகலிங்கம்- முகங்களின் அடிப்படையில் ஏக லிங்கம்- ஒரு முகம், சதுர்முக லிங்கம்- நான்கு முகங்கள் (தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ), பஞ்சமுக லிங்கம்- ஈசனின் ஐந்து முகங்கள் தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ, ஈசானம் கொண்டது.
8.4.பஞ்ச பூத லிங்கம்- ப்ரித்வி-பூமி லிங்கம், வாயு லிங்கம் ஜல லிங்கம், ஆகாச லிங்கம், அக்னி லிங்கம்,
8.5.ஷணிக லிங்கம்- தற்கால வழிபாட்டில் பயன்படுத்துவது நீண்ட பயணம் செல்பவர்கள் தனகளுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கங்களே ஷணிக லிங்கம். இந்தவகை லிங்கங்கள் மலர், சந்தனம், விபூதி, அன்னம் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும் போது அவைகள் உருவக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறும். பூஜை முடிந்தபின் அவைகள் கரைக்கப்படும்.
1.கந்த லிங்கம்-சந்தனம், குங்குமம், கஸ்தூரி கலந்து உருவாக்கப்படும்.-வழிபடுவதால் சிவ சாயுஜ்ய மோட்சம்-பிறப்பில்ல நிலை சித்திக்கும்.
2.புஷ்ப லிங்கம்- பலநிறம் கொண்ட வாசனையுள்ள அழகிய மலர்களால் உருவாக்கப்படுவது. நில சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் சேரும்.
3.கோசாக்ரு லிங்கம்- பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும்- வணங்கினால் வளம் பெருகும்.
4.வாலுக லிங்கம்-சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படுவது. வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5.யவா கோதுமா சாலிஜ்ஜ லிங்கம்- சோளம், கோதுமை போன்ற மாவினால் உருவாக்கப் படுபவை- இது குழந்தை பேற்றைத் தரும்.
6.சீதாகண்ட லிங்கம்-இனிப்புவகைகளால் உருவாக்கப்படுவது- நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவல்லது.
7.திலாப்சிஷ்த லிங்கம்- எள்ளை அரைத்து செய்வது- எல்லா ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வது.
8.பாம்ச லிங்கம்-சாம்பல் கொண்டு செய்வது. எல்ல நற்குணத்தையும் அருளும்.
9.கூட / சீதா லிங்கம்-வெல்லத்தால் செய்யப்படுவது- இது மன நிம்மதியைத் தரும்.
10.வன்சங்குர லிங்கம்- மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது- வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுள்.
11.லவண லிங்கம்- உப்பு, மஞ்சள், திரிகடுகம் சேர்ந்து செய்வது- மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி அருளும்.
12.பிஷ்டா லிங்கம்- அரிசி மாவினால் செய்வது- நல்ல கல்வியைத் தரும்.
13.ததிதுக்த லிங்கம்-பால், தயிரிலிருந்து முழுவதும் நீரை நீக்கி செய்வது. மனமகிழ்ச்சியையும் வளங்களும் அருளும் தன்மை கொண்டது.
14.தான்ய லிங்கம்-நவதான்யங்களால் உருவாக்கப்படுவது- விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15.பழ லிங்கம்-பலவகையான பழங்களால் உருவாக்கப் படுவது. பழதோட்டம் வைத்திருப்போருக்கு நல்ல பலன்.
16.தாத்ரி லிங்கம்- நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும்- கஷ்டப்படு பவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலை.
17.நவநீத லிங்கம்-வெண்ணெய்யால் உருவானது. பணமும் புகலும் சேரும்.
18.கரிக லிங்கம்-விசேஷவகைப் புல்லால் உருவாக்கப்படும்- துர்மரணத்தை தடுக்கும்.
19.கற்பூர லிங்கம்- கற்பூரம் கொண்டு உருவக்கப் படுகின்றது- சிறந்த ஞானத்தை தந்து மாயையை அழிக்கும்.
புராணங்களில் இந்திரன் மணிமாய லிங்கத்தையும், சூரியன் தாம்ரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கத்தையும்(முத்துக்களால் ஆனது) ,குபேரன் ஹேம லிங்கம் எனும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அன்பான உயிர்களே நீங்களும் உங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப லிங்கங்கள் செய்து அணிந்து கொள்ளுங்கள். பிரதிஷ்டை செய்து வழிபட்டு வளமுடன் வழ்க என வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா.
&&&&&
ஓம் நமசிவயா!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
சிவ பஞ்சாட்சர துதி!
நாகேந்த்ர ஹாரய விலோசனாய
பஸ்மாங் கராகய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நமசிவய!
மந்தாகினி ஸலீல சந்தன சர்ச்சிதாய
நந்பீஸ்வ ரபு மதநாத மஹேஸ்வராய
,அந்தார முக்ய பஹூ புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மே ம காரமஹிதாய நமசிவய!
சிவய கௌரி வதனாப்ஜ ப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலக கண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சி காராய நமசிவய!
வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முலிந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க வைஸ்வா நரலோசனாய
தஸ்மை வ காராய நமசிவய!
யக்ஷ ஸ்வ ரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்யா ஸனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காரய நமசிவய!
#####
ஓம் நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
யுகங்கள்-யுகதர்மங்கள்!
கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்று ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர். தர்மங்கள் நிலை குலையும். தீயவையும் அறியாமையும் மட்டுமே பெருகி இருக்கும்.
கலியுக பாவங்களுக்கு பரிகாரம் என்பது வேதங்களைப் படித்தல், தியானம், பிரார்த்தனை, யாகங்கள் செய்தல், தானங்கள் செய்தல் ஆகும்.
முடிந்த காலங்களில் நடந்தது என்ன! வெறுமனே செல்வமும் கல்வியும் அறநெறிகளையும் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு ஈடாக இன்றைய சிந்தனைகளை நாளைய செயல் திறன்களாக உருவெடுப்பதை உயர்த்துகிற தர்மமாக எதைச் செய்ய வேண்டும்! எதைச் செய்யக் கூடாது என்று சிந்தனை கொள்ளவேண்டும். இந்த நல்சிந்தனைகள் பழக்கமாக அமையவும் வாழ்வில் எதிர்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள உயிர்கள் தொடர்ந்து செய்துவரும் செயல்கள் உயிர்களுக்கு உதவுவதற்கும் இறை அடியேனுக்கு தெரிவித்த பாதையை உங்களுக்கு உணர்த்துவேன், யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்தச் சிவம் பகுதி- குருஸ்ரீ பகோரா
சிவ வழிபாடு
சிவ 108-அஸ்டோதரா நாமங்கள்
சிவ 1008-நாமங்கள்
சிவ-நாமங்கள்-தலங்கள்
சிவ அஷ்டாஷ்ட திருஉருவங்கள்-64
சிவ சதாஷ்டகம்!
சிவ சமகம் / ருத்ர சமகம்!
சிவ தாண்டவங்கள்!
சிவ திருஉருவங்கள் 64 தவிர மற்ற.வை
சிவ திருஉருவங்கள் சிறப்பான 26
சிவ திருவிளையாடல்கள்!
சிவ நிர்வாணாஷ்டகம்!
சிவ பஞ்சாட்சார ஸ்தோத்திரம்.
சிவ பில்வாஷ்டகம்-வில்வாஷ்டகம்
சிவ லிங்கங்கள்
சிவ லிங்காஷ்டகம்
சிவ ஸித்தேஸ்வர அஷ்டகம்
#####
ஓம்நமசிவய!
எல்லாமும் ஆனாய் போற்றி எல்லோர்க்கும் தலைவா போற்றி
எண்குண வடிவே போற்றி எல்லையில்லா அருளே போற்றி
எழில்நுதற் கண்ணாய் போற்றி என்றுமே உள்ளாய் போற்றி
எம்பரா போற்றி போற்றி ஏவல்கள் களைவாய் போற்றி
ஸித்தேஸ்வர அஷ்டகம்!
மஹா தீர்த்த ராஜஸ்ய தீரே விபாந்தகம்
மஹாபூ திரூபம் மஹாத்மைக வேத்யம்
மஹா ஸித்திபூரா ப்ரதானை கதக்ஷம்
பஜாமைவ ஸித்தேச்வரம் சித்த: சம்பும்!
மஹா தீர்த்தக் கரையில் விளங்குபவரும், சிறந்த விபூதி (ஐஸ்வர்யம்) வடிவானவரும், மஹாத்மாக்களால் மட்டும் அறியப்படுபவரும், பெரிய பெரிய சித்திகளைக் கொடுப்பதில் சமர்த்தரும், எல்லோருக்கும் நன்மையைத் தருபவருமான ஸித்தேச்வரரை மனமே நீ எப்பொழுதும் நினைப்பாயாக!
மனோஜஸ் வதக்ஷ்யக்னி பஸ்மாவசேஷ:
மதாந்தச்ச தக்ஸோ கதச்சோச்ய பாவம்
மனோஜாச்ச தக்ஷக்னி தாந்தோ மதாந்தோ
பஜே நிர்மதத்வாய ஸித்தேச்வரம் த்வாம்!
உன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பல் ஆனான். மிகவும் மதம் பிடித்திருந்த தட்சப்பிரஜாபதி வருந்தத்தக்க நிலையை அடைந்தான். எரிந்துபோன மன்மதனாலே பாமர ஜனங்களும் தவித்து மதம் பிடித்தலைகிறார்கள். ஆகையால் எனக்கு மதம் சற்றும் இல்லாமல் இருப்பதற்காக ஸித்தேச்வரரை பூஜிக்கின்றேன்!
இயம் சாஸ்பி கங்கா நிபத்தா கபர்த்தே
மதாட்யா யதஸ்ஸா கணக்ஸீர கல்பம்
விஸ்ருஷ்டா ஜெகத் பாபநாசாய யேன
ஸ்வயம் சித்த ஸித்தேச்வரம் சிந்தயைனம்!
மதம் பிடித்த கங்கையானவள் உமது ஜடாமுடியில் நீர்த் துளிக்கு ஒப்பாக கட்டுப்பட்டு நிறுத்தப்பட்டாள். ஜெகத்தின் பாபங்களை போக்குவதற்காக எவரால் விடுவிக்கப்பட்டாளோ அப்பேர்பட்ட ஸித்தேச்வரரை ஹே மனமே நீ சிந்தை செய்!
ந தேஸ்ந்தோ சாதிர் ஹரி:ஸ்ஸோஸ்பி தாதா
வராஹோ பவன் னூர்த்வ ஹம்ஸீ பவம்ஸ்ச
ததா தேஹி ஸாக்ஷ்யம் பஜே பாந்தமேவ
மஹா லிங்க ரூபேண ஸித்தேச்வரம் த்வாம்!
விஸ்ணு வராஹமாய் உனது அடியைக் காணவும், பிரம்மாவானவர் அன்னமாகி உமது முடியைக் காண்பதற்கும் இயலாமல் சாட்சி தன்மையை அடைகிறார்கள். அப்பேர்பட்ட ஜோதியாய் விளங்கும் மஹாலிங்கரூபனை அந்த ஸித்தேச்வரரை சேவிக்கின்றேன்.
சிவோஸ்யம் ப்ரதேசோ மஹான் மத்யதேச:
சிவா ஜாஹ்னவீ நித்ய ஸித்த ப்ரவாஹா
சிவ ஸ்த்வம் சிவம் நித்ய ஸித்தம் ததான:
சிவோ நஸ்ஸதா தேவ! ஸித்தேச்வர ஸ்யா!
இந்த மத்ய பிரதேசம் மிகவும் மங்களமானது. இங்கு நித்தியம் கங்கை பிரவாஹமாக மங்கள ரூபமாக பிரவஹிக்கின்றாள். எப்பொழுதும் நம்மிடமுள்ளதான சிவத்தன்மையைக் கொடுப்பவராக எங்களுக்கு மங்களம் அளிப்பவராக ஸித்தேச்வரராக நீங்கள் விளங்க வேண்டும்.
பதாப்ஜே த்வதீயே ஸ்வ கீயாக்ஸி பத்மம்
புரா பூஷண த்வேன நாராயணோ த்தாத்
இதீதம் புராவ் ருத்தமத் த்யாத்ர ஸத்யம்
பதர்யோ ஹரிஸ்ஸாது ஸித்தேச்வரா அகாத்!
உன்னுடைய பாதபதமத்தில் முன்பொரு சமயம் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய தாமரைக் கண்ணை அர்ப்பணித்தார். என்ற பழைய செய்தி இங்கு உண்மையாகின்றது.(பதரியில் உள்ள ஹரியானவர் ஸித்தேச்வரருக்கு தமது நயனங்களுள் ஒன்றை புஷ்பமாக அளித்தார்)
கபர்தாத் த்வதீயாத் விஸ் ருஷ்டாபி கங்கா
புன:ஸேவிதும் த்வா மஹோ பத்த வாஞ்சா!
ஸ்காசே த்வ தீயேதி பாரப்ர வாஹா
நிஜாம் போஸ் பிஷேகாய ஸித்தேச்வராகாத்!
உம்முடைய ஜடையில் இருந்து விடுவிக்கப்பட்ட கங்கயானவள் மறுபடியும் உம்மை சேவிப்பதற்கு ஆசையுள்ளவளாக மிகுந்த பிரவாஹத்துடன் உமக்கு அபிஷேகம் செய்வதற்காக ஸித்தேச்வரரே உம்மிடம் வந்தாள்.
ந மத்தோஸ் ம்யஹம் சேன் நமத்தோஸி பின்ன:
நமத்தோஸி தஸ்த்வம் நமத் தோஷ தாதா!
ந மத்தேஸ்ஸி பின்ன ஸ்த்வ மித்யைக்ய தோஷம்
நமத்ப்ய: ப்ரதேஹீஹ சித்தேச்வர த்வம்!
நான் மதம் பிடிக்தவனாக இருப்பினும் நீர் என்னைத்தவிர வேறல்லவே! வணங்குபவர்களால் சந்தோஷப்படுத்தப்படும் நீர் உம்மை வணங்குபவர்க்கும் சந்தோஷத்தை அளிக்கிறீர். ‘என்னைத் தவிர நீ வேறில்லை ஒன்றுதான் என்ற மகிழ்ச்சியை/ சந்தோஷத்தை ஸித்தேச்வரரே நீர் வணங்குபவர்களுக்கு கொடுக்கிறீர்கள்.
இதி ப்ரயாக சித்தேச்வர
பக்திப் ருஜ் ஜனதா ஹ்ருதி
ச்லோ காஷ்டகம் மிதம்
நித்யம் வர்த்தய தாம் சுபம்!
இப்படியாக ப்ரயாக ஸித்தேச்வரரிடம் பக்தியுள்ள மக்களின் உள்ளங்களில் இந்த அஷ்டக ஸ்லோகம் நித்தியம் சந்தோஷத்தை வளர்க்கட்டும்! சுபம்!.
&&&&&
ஓம்நமசிவய!
ஊக்கங்கள் நிறைப்பாய் போற்றி ஓம் ஊர்க்குளக் கரையாய் போற்றி
ஊங்கார நாதா போற்றி ஊழிகள் கடந்தாய் போற்றி
ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி ஊர்மதிச் சடையாய் போற்றி
எருக்கினை அணிவாய் போற்றி எங்கனும் இருப்பாய் போற்றி
சிவ லிங்காஷ்டகம்!
ப்ரம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ராவராச்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
தேவ சுணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸ்முத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ஸுரகுரு ஸுரவர பூஜீத லிங்கம்
ஸுரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
ஓம் நமசிவய
#####
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி !
பாகம் பெண்உரு ஆனாய் போற்றி !
காவாய் கனகத்திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி ! போற்றியே !
வான்முகில் வாழாது பெய்க ! மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க ! நற்றவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி ! விலங்குக உலகமெல்லாம் !
ஓம் நமசிவய
#####
ஓம்நமசிவய!
உளம் அருட் கனியே போற்றி உயர்ந்தவர் துணையே போற்றி
உளவளம் தருவாய் போற்றி உதிரச் செந்நிறத்தாய் போற்றி
உன்னிய முடிப்பாய் போற்றி ஊரெல்லாம் உறைவாய் போற்றி
ஊழ்த்தெழும் உணர்வே போற்றி ஊனங்கள் நிறைப்பாய் போற்றி
சிவ பில்வாஷ்டகம்/வில்வாஷ்டகம்!
திரிதலம் திரிகுணாகரம், திரிநேத்திரம் ச திரியாயுதம்
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!
திரிசா கைப் வில்வ பத்ரைச் ச அர்ச்சித்ரைக் கோமளஸுபை
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்!
கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய
காஞ்சனம் ஸைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்!
காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்!
இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வரா
நித்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்!
ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகனிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!
அகண்ட வில்வ பத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்!
உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!
ஸாளக்கிரமேஸூ விப்ராணாம் தடாகம் தச கூபயோ
யக்ஞகோடி ஸஹ’ஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்!
தந்திகோடி ஸஹ’ஸ்ரேஸூ அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!
ஸ்ஹஸ்ர வேத பாடேஸூ ப்ரஹ்ம ஸ்தாபன முச்யதே
அனேக வ்ரத கோடினாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!
அன்னதான ஸஹஸ்ரேஸூ ஸ்ஹ”ஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்!
வில்வ ஸ்தோத்ர மிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகம் அவாப்னோதி சிவனே சஹ மோததே!
ஓம் நமசிவய
#####
சிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
ஐங்காரச் செல்வா போற்றி ஐம்பூத முதலே போற்றி
ஐமுக அய்யா போற்றி ஐயம் ஒழி கணேசா போற்றி
ஐந்நிலத் தேவே போற்றி ஐம்புலன் கடிவாய் போற்றி
ஐவனம் தருவாய் போற்றி ஐயைதன் மகனே போற்றி
சிறப்பான 26 திரு உருவங்கள்!
1.. லிங்கோத்பவர்-மோட்சப் பிரதாயினி,
வழிபாடு-மோட்சம் சித்திக்கும்
2.. திரிமூர்த்தி-வம்சவிருத்திப் பிரதாயினி,
வழிபாடு-சந்தானப்பேறு கிட்டும்
3.. கல்யாணசுந்தரர்-சர்வ மங்களாதேவி,
வழிபாடு-திருமணப்பேறு கிடைக்கும்
4.. சுகாசனர்-தர்ம சம்வர்த்தினி,
வழிபாடு-நியாயமானஆசைகள் நிறைவேறும்
5.. கங்காதரர்-சர்வபாவ ஹரணி,
வழிபாடு-பாவங்கள்விலகும்
6.. நடேசர்-சம்பத்யோக காரணி,
வழிபாடு-மகப்பேறு கிட்டும்
7.. சண்டேசஅனுக்ரகர்-மகாபாதக நாசினி,
வழிபாடு-பாதக மலம் நீங்கும்
8.. ரிஷபாரூடர்-தர்மசித்திப் பிரதாயினி,
வழிபாடு-நல்ல முயற்ச்சிகளில் வெற்றி
9.. நீலகண்டர்-விஷதோஷ நிவர்த்தினி,
வழிபாடு-விஷஜந்து ஆபத்து நீங்கும்
10..ஹரிஹரமூர்த்தி-தர்மார்த்த தாயினி,
வழிபாடு-வழக்குகளில் வெற்றி
11..ஏகபாதமூர்த்தி-மகாரோக விநாசினி,
வழிபாடு-பிணிகள் தீரும்
12..உமாசகாயர்-பார்யாசௌக்ய ப்ரதானி,
வழிபாடு-மனைவியினுடல் நலம் சீர்
13..அர்த்தநாரீஸ்வரர்-சௌபாக்ய ப்ரதானி,
வழிபாடு-தம்பதியினரிடம் ஒற்றுமை நிலைக்கும்
14..தட்சிணாமூர்த்தி-மேதாப்ரக்ஞ ப்ரதானி,
வழிபாடு-கலை,கல்வி ஞானம் வளரும்
15..சோமாதிநாயகர்-சர்வசித்தி காரணி,
வழிபாடு-சகலமும் சித்தி
16..சோமாஸ்கந்தர்-புத்ரசௌக்ய ப்ரதானி,
வழிபாடு-குழந்தைகள் ஆரோக்கியம்
17..சந்திரமௌலீச்சுவரர்-தனதான்ய ப்ரதானி,
வழிபாடு-தனமும் தான்யமும் சேரும்
18..வீரபத்ரர்-சத்ருவித்வேஷ நாசினி,
வழிபாடு-எதிரி பயம் நீங்கும்
19..காலசம்ஹாரர்-சர்வாரிஷ்ட நாசினி,
வழிபாடு-மரணபயம், அகாலமரணம் நேராது
20..காமாந்தகர்-ரோகவிக்ன நாசினி,
வழிபாடு-தடைகள் நீங்கி ஞானம் சித்திக்கும்
21..கஜசம்ஹாரர்-பாராபிசாரசமநீ,
வழிபாடு-பிறர் செய்ததீவினையின் பாதிப்பு நீங்கும்
22..திரிபுரசம்ஹாரர்-ஜன்மஜரா ம்ருத்யுவிநாசினி,
வழிபாடு-பிறவிப்பிணிதீரும், எமபயமில்லை
23..பிட்சாடனர்-யோஷித் ப்ருந்தவிமோஹினி,
வழிபாடு-மோகமாயை விலகும்
24..ஜலந்தரசம்ஹாரர்-துஷ்டவிநாசினி,
வழிபாடு-விரோதிகள் விலகுவர்
25..சரபமூர்த்தி-அரிப்ரணாசினிதானி,
வழிபாடு-மாயை,கன்மம் விலகும்
26..பைரவர்-ரஷாகரி,
வழிபாடு-இறையருள் ரட்சையாய் காக்கும்
######
More...
சிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
ஏந்தொழிற் கொம்பா போற்றி ஏக்கங்கள் தவிர்ப்பாய் போற்றி
ஏதங்கள் கடிவாய் போற்றி ஏர்முனைத் தேவே போற்றி
ஏகம்பர் மகனே போற்றி ஏதிலார் துணையே போற்றி
ஏரானை முகத்தாய் போற்றி ஏந்தலே போற்றி போற்றி
சிவ 64 திரு வடிவங்களைத்தவிர புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ வடிவங்கள் (10)
1.கஜாரி-ஆணை உரி போர்த்த அண்ணல்
2.கஜமுக அனுக்கிரக மூர்த்தி-விநாயகருக்கு அருளியது
3.இராவணனுக்கு அருளிய வடிவம்- இராவண அனுக்கிரக மூர்த்தி
4.ஹரிவிரிஞ்சதாரணர்
5.ஏகாதச ருத்திரர்
6.முயலகவத மூர்த்தி
7.சர்வ சம்ஹாரர்
8.யக்ஞேசுவரர்
9.உக்கிரர்
10.அந்தகாசூரனை அழித்த அம்மான்
சிவஅடியவர்களுக்கு உதவ சிவபெருமன் கொண்ட மானிட வடிவங்கள் (45).
1. தாயாய் எழுந்தருளிய தயாபரன்!
2. அதிதியாக!
புலவர் வடிவம்-நான்கு!
3. இசை வாதி வெற்றி புலவர்.
4. சங்கப் பலகை கொடுத்த புலவர்.
5. தருமிக்கு பாடல் அருளும் புலவர்
6. உருத்திரசருமன் பிறப்பு பற்றிக் கூறும் புலவர்.
வேடுவ வேடம் மூன்று!
7. யானையைச் சாய்த்த வேடுவன்.
8. வேடுவன், வேட்டுவச்சியாகத் தோன்றி மாபாதகம் தீர்த்தமை
9. வேடனாக சுந்தரப் பேரம்பு எய்தமை
சித்தர் வேடம் மூன்று!
10. எல்லாம் வல்ல சித்தர்
11. வைகையை வற்றச் செய்த சித்தர்.
12. பொன்னையாள் இல்லத்தில் இரசவாத செய்த சித்தர்.
குரு / ஆச்சார்ய வேடம் மூன்று!
13. 16வயது அந்தனர் வேடமேற்று வேதத்தின் பொருள் அருளியமை
14. கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமாசித்தி உபதேசித்தல்
15. வாதாவூராருக்கு உபதேசித்தமை.
வணிக வேடம் மூன்று!
16. வைசியர் வேடங்கொண்டு மாணிக்கம் விற்றமை:
17. வளையல் விற்கும் வணிகர்:
18. தனபதி செட்டியாராக மாமனாகி வழக்குரைத்தமை:
குதிரைச் சேவக வடிவம் இரண்டு!
19.சுந்தரசாமந்தனுக்கு அருளல்:
20. மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கி குதிரைச் சேவகனாக அருளல்:
மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!
21. வாள் ஆசிரியனாக:
22. தவசியாக தண்ணீர் பந்தல் வைத்தமை:
23. விறகு வெட்டியாக விறகு விற்றமை:
24. வலைஞராகி கடலில் மீன்வலையை வீசியமை:
25. கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்தமை:
26. மடுவில் சோழனை வீழ்த்திய வேல்வீரன்:
27. சைவமுதியவர் வடிவம் தாங்கி வந்து இளைஞானக உருமாறால்:
சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்- ஆறு!
28. தடுத்தாட்கொள்ளவந்த முதிய அந்தணர் வடிவம்:
29. திருவதிகையில் திருவடிசூட அந்தணர் வேடம்:
30. திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர்:
31. திருக்குருகாவூரில் பொதிச் சோறு அளித்த மறைவேதியர்:
32. திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர்:
33. பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவர்:
திருநாவுக்கரசருக்கு அருளிய வடிவங்கள்- இரண்டு!
34. திருப்பைஞ்ஞீலியில் பொதிசோறளித்த அந்தணர்:
35. பனிபடர்ந்த மலையில் அப்பருக்கு அருளிய முனிவர்:
நாயன்மார்களுக்கு அருளியது-எட்டு!
36. திரு நீலகண்ட நாயனார்க்கு அருளிய சிவயோகியர்:
37. இயற்பகை நாயனாரை சோதித்த தூர்த்தர்:
38. இளையான்குடி மாற நாயனாரை உய்வித்த அடியார்:
39. அமர்நீது நாயனாரை ஆட்கொண்ட பிரமச்சாரி:
40. மானக்கஞ்சாற நாயனாருக்காக மாவிரதியர் வடிவம்:
41. திருக்குறிப்புத் தொண்ட நாயனாருக்காக அருந்தவ வடிவம்:
42. சிறுத்தொண்ட நாயனாருக்காக பைரவர் வடிவம்:
43. விறன்மிண்டருக்கு அருளிய அடியார்:
காட்சி அருள்!-இரண்டு!
44. முன்பே ஒரு மார்க்கண்டேயன்! சுவேதன்!
45. அடியாருக்கு அபசாரம்
#####
ஓம்நமசிவய!
ஐயனே போற்றி போற்றி ஒப்பிலா ஒருவ போற்றி
ஒள்ளிய வடிவே போற்றி ஒற்றைவெண் கொம்பாய் போற்றி
ஒளிநுதற் கண்ணாய் போற்றி ஓட்பங்கள் தருவாய் போற்றி
ஒலியெலாம் ஆவாய் போற்றி ஒழுகுமும் மதத்தாய் போற்றி
சிவ அஷ்டாஷ்ட திருஉருவங்கள்!
ஒரு மரம் ஒரு வித்திலிருந்து முளைவிட்டு தோன்றுகின்றது. மரத்தை நாம் காண்பதற்கு முன்பாக அது வித்தாக ரூபாருபமாக வித்து வடிவத்தில் இருந்தது. அம்மரமே வித்தாக தோன்றுவதற்கு முன் எவ்வித ரூபமில்லாமல் இருக்கின்றது. ஒரு விதை இவ்வாறு அரூபமாயிருந்து ரூபாருபமாகிய ரூபத்தை பெறுகின்றது. இது போன்றே ஒரு குட்டியும் ஒரு பிள்ளையும் ஒரு பிண்டத்தில் தோன்றும். பிண்டமும் எவ்வித ரூபமற்ற ஒன்றிலிருந்து உண்டாகும். இவ்வாறு எல்லாவற்றையும் நோக்குங்கால் இப்பூவுலகில் அண்ட சராசரங்கள் எல்லாம் உருவங்கள் பெறுமாறு இயக்கும் இறைவனும் இவ்வகையிலே திருவுருவம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். அருவம், உருவம், அருவுருவம் என மூவகையாகக் காட்சி தரும் இறைவனே தன்னை உணர்த்த பல உருவத் திருமேனியாக தரிசிக்க சில வடிவங்கள் மேற்கொண்டுள்ளான்.
சிவ வடிவங்கள் நான்கு வகை:
சிவனின் வடிவங்கள்-64. இவை சௌமியம் போக, யோக, கோப வடிவங்கள் என் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சௌமியம்- புன்சிரிப்பு, இன்முகத்துடனும் இருக்கும் விக்ரகங்கள்
யோகம்- யோக நிலையில் உள்ள விக்ரகங்கள் (தட்சிணாமூர்த்தி)
போகம்- மனைவியுடன் ஒரே பீடத்தில் நின்றபடி அல்லது அமர்ந்தபடி இருக்கும் விக்ரகங்கள்
கோபம்-உக்ர வடிவிலான மூர்த்தங்கள்(வீரபத்திரர்)
பஞ்சமுக தரிசனம்
சிவ அடியவர் ஒவ்வொருவருக்கும் சிவனின் பஞ்சமூர்த்த தரிசனம் கிடைக்க வேண்டும். பஞ்சமூர்த்தம் என்பது சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகும். பிரம்மன் ஒவ்வொரு கற்ப யுகத்திலும் சிவனை நினைந்து தவமிருந்து ஒவ்வொரு முகமாக தரிசனம் கண்டு இன்புற்றார். அந்த ஒவ்வொரு முகத்திற்கும் ஐந்து வடிவங்கள் என மொத்தம் 25 வடிவங்கள் சிறப்பானதாக கருதப்படும்.
சத்யோஜாதம்-படைத்தல்
சுவேத லோகித கற்பத்தில் தவமிருந்த பிரம்மனுக்கு காலை இளம் சூரியனைப் போன்ற பேரெழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தந்து அருளினார். இந்த பொலிவே சத்யோஜாதம் எனப்படும். சத்யோஜாதம் - பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி
மேற்கு நோக்கிய சத்யோஜாதம் முகத்திலிருந்து காமிகம், யோகசம், சிந்தியம், காரணம் அசிதம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.
இந்த மேற்குமுக சத்யோஜாத தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை.
1.இலிங்கோத்பவர்,
2.சுகாசனர்-நல்லிருக்கை நாதர்,
3.ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர்,
4.அர்த்தநாரீஸ்வரர்-உமைபங்கன்,
5.உமாமகேசர்- உமேசர்,
காலை இளம் சூரியனைப் போன்ற பேரேழில் பொங்கும் பச்சிளம் பாலகனாய் காட்சி தரும் பிருதிவித் தத்துவம் - சத்யோஜாதம் – மேற்கு நோக்கிய முகத் தோற்றத்திற்குகந்த முகங்கள். இலிங்கோத்பவர், சுகாசனர்-நல்லிருக்கை நாதர், .ஹரிஹரர்-கேசவார்த்தமூர்த்தி-மாலொருபாகர், அர்த்தநாரீஸ்வரர்-உமைபங்கன், உமாமகேசர்- உமேசர், ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்து வந்தால் நல்ல பயன் கிட்டும்.
ஒம் கிருட்டிணன் ஒம் சிவாய நமா -- மலையை தூக்கும் பலம்
ஒம் சல சலீம் செல சல் சௌ சல சிவாய நங்-- காம இன்பம் கிடைக்க
ஓம் சிவாய பேதனமே -- அமிர்தம் உண்ணலாம்
ஓம் சிவாயநமா -- நிர்வாண நிலை அடைய
ஒம் ளங் ளங் இஷங் இஷங் சிவாய ஒம் -- உயிரின் உருவத்தை காண
ஓம் ஸ்ரீயும் உங் சிவாய நமா -- தியான பலன்கள்
வாமதேவம்-காத்தல்,
ரத கற்பத்தில் பிரம்மன் தவமிருந்து மானும் மழுவுடன் சிவபெருமான் காட்சி அருள். இந்த வாமதேவ திருத் தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்
வடக்கு நோக்கிய வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சமம், சுகத்திரம், அஞ்சுமான், சுப்ரபேதம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின
இந்த வடக்குமுக வாமதேவ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
6.கங்காளர்,
7.சக்ரதானர்,
8.கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி,
9.சண்டேசானுக்ரஹர்,
10.ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி,
வாம முகம் மானும் மழுவுடன் காட்சி தரும் வாமதேவ- நீர்த் தத்துவ தோற்றத்தை தரிசித்து வழிபடுவோர் பிறப்பு இறப்பு இன்றி இறைவனின் பாத கமலங்களை அடையும் பேரின்ப வாழ்வுதனை அடைவர். வடக்கு நோக்கிய தோற்றத்திற்குகந்த கங்காளர், சக்ரதானர், கஜாந்திகர்-கஜாந்திக மூர்த்தி, சண்டேசானுக்ரஹர், .ஏகபாதர்- ஏகபாத மூர்த்தி ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.
ஒம் அங்கீச ஊங் சிவாய நமா --சூட்சுமபயணம் செல்ல(மனோசக்தி)
ஒம் இரக்ஷி இரக்ஷி இரக்ஷி இரக்ஷி ஸ்ரீம்சிவாயநமா --சூரிய ரதம் தோன்ற
ஒம் உங் தேங் ஒங் சிவாய நமா --ஐந்து தருக்கள் வணங்க
ஒம் ஐயும் கிலியும் சிவாய நமா --தேவ விமானம் வர
ஒம் ஒங் சங் கங் மமையு நமா --தேவர்களை தரிசிக்க
ஒம் ஓம் டேபுர நமசிவாயம் --அமிர்தம் உண்ணலாம்
ஒம் கங் கங் ணங் ரிஷிர் சிலிங்கம் --காமம் கொள்ள
ஒம் கெய்ங் கெங்க் கெய்ங் அங் ஒங் சிவாய நமா --ஆகாயத்தில் பறக்கும் சக்தி
ஒம் கேங் சேங் சிவாய சேங் நமா --இந்திரலோகத்தைக் காண
ஒம் சவ்வும் அவ்வும் சிவாய சுந்தராய நமா --வாலைதேவி தோன்றி மரைய
ஒம் சவ்வும் சிவாய ஓம் உம்பட் --சிவன் தோன்ற சிவனுள் ஒடுங்க
ஒம் சியும் சியும் ணங் சிவாய நமா --ஆண்மைதன்மை அதிகரிக்க
ஒம் சிலியுங் மங் மங் பங்க சிவாய உம்பட் --இந்திரனை வரவழைக்க
ஓம் சீயுங் கோஷ்ய கோஷ்ய சங் சதாசிவாய நமா --4வேதத்தை அறியும் ஆற்றல்
ஒம் டேங் டேங் ஒங்கு சிவாய ஸ்வாஹா --பூமி புதையல்கள் தெரிய
ஒம் பிறங் பிறங் சிவாய ஓம் நம ஸ்வாஹா --இறந்தவரை எழுப்ப
ஒம் ரங் ரங் சிவ் நமா --பராசக்தி முன்னே வர
ஒம் லீயுங் சிங் சிங் வாய நமா --நட்சத்திரங்கள் தோன்றி மறைய
ஒம் வங் நமசிவாய நம ஓம் --புல்லாங்குழல் இசைக்கும் திறன்
ஒம் வங் வங் சிங் சிவாய நமா --உலகில் எவ்விடத்திலும் செல்லவழி
தத்புருஷம்-மறைத்தல்
பீதகற்பத்தில் பிரம்மன் ஈசனைப் பணிந்து தியானம் செய்து கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி- இதுவே தத்புருஷ தோற்றம் ஆகும். இந்த தோற்றத்தில் காயத்திரி தேவியை சிருஷ்டித்து நான்முகனுக்கு அளித்தார். இந்த தத்புருஷ தோற்றத்தையோ, காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும் என்றார். தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்
கிழக்கு நோக்கிய தத்புருஷ முகத்திலிருந்து ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.
இந்த கிழக்குமுக தத்புருஷ தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
11.பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர்,
12.காமாந்தகர்-காமதகனமூர்த்தி,
13.காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி,
14.சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி,
15.திரிபுராந்தகர்.
தத்புருஷ முகம் கொன்றைப்பூ அணிந்த திருச்சடையில் இளஞ்சந்திரனை தரித்தவராகக் காட்சி தரும் வாயுத் தத்துவம் தத்புருஷ தோற்றத்தையோ காயத்திரி தேவியையோ சிவமந்திரம் சொல்லி வழிபட்டால் பிறவிக் கடலை கடந்து சிவபதவி கைகூடும். கிழக்குமுக தோற்றத்திற்குகந்த முகங்கள் பிட்சாடனர்- பலிதிரி / பலிகொள் செல்வர், காமாந்தகர்-காமதகனமூர்த்தி, காலசம்ஹாரர்-காலனைக் காய்ந்த பொம்மான்-காலாரி, சலந்தராரி-சலந்திரவத மூர்த்தி, திரிபுராந்தகர் ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.
ஒம் அங் உங் வங் சிவாய நமா -- சகல நோய்கள் தீர
ஒம் அங்கீச சிவாய நமா -- உலகைச் சுற்றிவர,பயணம் செய்ய
ஓம் அங்கு சிவாய நமா -- நினைத்த குழந்தை கிடைக்க
ஒம் அம் அம் சிவாய நமா -- ஞான சித்திகள் கிட்ட
ஓம் அலங்கே நம சிவாய நமா -- ராஜ்யம் உண்டாக
ஒம் உம் நம சிவாய -- 18 வகை ஜூரங்கள் குணமாக
ஒம் ஊங் கிறீயும் நம சிவாய நமா -- மோட்சம் கிடைக்க
ஒம் ஒங் ஊங் சிவாய நமா உங் நமா-- 18 வகை குஷ்டங்கள் நீங்க
ஒம் ஒங் கிறியும் ஒங் நம சிவாய --- வியாபார லாபம், வெற்றி
ஒம் கிலியும் நம சிவாய -- அரசு வசியமாக,காரியங்கள் வெற்றி
ஒம் சவ்வும் நம சிவாய நமா -- ராஜாங்க வாழ்க்கை அமைய
ஓம் செல நக நமசிவாய -- 64 விஷங்கள் நீங்க
ஓம் நம சிவாய நமா -- பேய் பிசாசுகள் அலறி ஓட
ஒம் நம சிவாயம் -- இறப்பை வெல்ல
ஒம் நமசிவ -- உச்சாடனங்கள் செய்ய
ஓம் லங் கங் நமசிவாய -- மழை வரவழைக்க
ஒம் லங் கிறியும் நம சிவாய -- விவசாய தான்யங்கள் பெருக
ஒம் லீங் க்ஷீம் சிவாய நம -- பெண்கள் வசியம்
ஒம் லூங் ஒங் நம சிவாய -- தலையில் ஏற்படும் நோய்கள் தீர
ஒம் வநம சிவாய -- கைலாச மோட்சம் கிடைக்க
ஒம் ஸ்ரீயும் நம சிவாய -- திருடர்கள் தொல்லை தீர
ஒம் ஹம் ஹம் சிவாய நமா - ஆயுள் அதிகரிக்க
அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்)
நீலகற்பத்தில் கடும் தவமிருந்து பிரம்மன், தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் சிவபெருமான் காட்சி. இது அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா
தெற்கு நோக்கிய அகோர முகத்திலிருந்து விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம் எனும் ஐந்து ஆகமங்கள் தோன்றின.
இந்த தெற்குமுக அகோர தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
16.கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி,
17.வீரபத்திரர்,
18.தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர்,
19.நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி,
20.கிராதகர்-கிராத மூர்த்தி
அகோர முகம் தீச்சுடரும், வாளும் ஏந்திய திருக்கரத்துடன் கருமை நிற மேனியுடன் காட்சி தரும் தேஜஸ் தத்துவம் அகோர தோற்றம். பஞ்சமாபாதங்கள் புரிந்தோரும் தங்கள் தவறை உணர்ந்து சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை மீண்டும் மீண்டும் ஜபித்து வந்தால் அவர்களைப் பற்றிய தோஷம் விலகும். தெற்குமுக தோற்றத்திற்குகந்த .கஜசம்ஹாரர்-கஜயுக்தமூர்த்தி, .வீரபத்திரர், தட்சினாமூர்த்தி-ஆலமர்செல்வர், நீலகண்டர்-நீலகண்ட மூர்த்தி, கிராதகர்-கிராத மூர்த்தி ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.
ஒம் அங் ஒங் விங் சிவாய ஒம் --மழையை நிறுத்தலாம்
ஒம் அங்கீச அங்கீச ஒம் சிவாய நமா --வானத்தில் உள்ளவற்றைக் காண
ஒம் அங்கீச சிவாய நமா --முக்குணத்தை வெல்ல
ஒம் ஒங் சங் கிங் சிவாய நம --தேவ கன்னியரை வெல்ல
ஒம் ஒங் சர்வ நம சிவாய --செல்வம் பெருக
ஒம் ஒங் நம சிவாய நமா --ஜல ஸ்தம்பனம் உண்டாக
ஒம் ஒங் யங் சிவாய --சூரியனை வெல்ல
ஒம் கேங் கேங் ஒம் நம சிவாய --சகல ஜனங்களும் வசியம்
ஒம் சங் சங் சிவாய நமா --தண்ணீரை மேலே எழுப்பலாம்
ஒம் சரணாய சிவாய நமா --பாதாள கௌனம் போக
ஒம் சிறுங் சிறுங் ஒம் சிவ சிவ ஒம் --அதிக பூமி லாபம்
ஒம் சீங் சிவ சிவ உங் ஊங் சிவாய நமா --கடலில் ஆறு ஓட
ஒம் துங் மவாய நமசி --வித்வேதன காரிய சித்தி
ஒம் நம சிவாய நமா --அரசு வசியம்
ஒம் நம சிவாய நமா --ஏழு கடலை வற்றச் செய்ய
ஒம் நூம் பயம் யுஞ் சிவாய நமா --6சாஸ்திரம்,4வேதங்கள் அறிய
ஒம் பிறங் பிறங் ஷங் ரங் சிங் சிவாய --நமா தென்னை மரங்களை வளைக்க
ஒம் புலையும் புலையும் சிவாய நமா --இசக்கி வசமாக
ஒம் மங் மங் மங் --உணவு இல்லாமல் உயிர் வாழ
ஒம் யம் ஒம் சிவா --விஷங்களை தடுக்க
ஒம் வசலா வசலா சிவாய நம --மழையில் நனையாமல் செல்ல
ஒம் விஞ் சிங் ஒம் நம சிவாய நமா --தெய்வலோகம் செல்ல
ஒம் ஹீ ஸ்ரீ சிவாய நமா --ஆற்றில் வெள்ளம் வர
சங் சங் யவாசி நம --தண்ணீரில் நடக்க
ஈசானம்-அருளல்
விசுவரூப கற்பத்தில் பிரம்மன் தவமிருந்து கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இருபக்கமும் இரு மாதர்களுடன் சிவபெருமான் காட்சி தந்து அருள். இது ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா
உச்சி நோக்கிய ஈசான முகத்திலிருந்து புரோற்கீதம், லலிதம், சித்தம், சந்தானம், சருவோத்தம், பரமேஸ்வரம், கீரணம், வாதூலம் எனும் எட்டு ஆகமங்கள் தோன்றின
இந்த உச்சிமுக ஈசான தோற்றத்திற்குகந்த முகங்கள் ஐந்து. அவை
21.சோமாஸ்கந்தர்,
22.நடராஜர்,
23.இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன்,
24.கல்யாணசுந்தரர்-மணவழகர்,
25.சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன்.
கங்கையும் திங்களும் தாங்கிய திரிசடை, கோரப்பற்கள், நெற்றிக்கண்ணும் கொண்டு இரு பக்கமும் இரு மாதர்களுடன் காட்சி ஆகாசத் தத்துவம் ஈசான தோற்றம். சிந்தையில் இறைவனை வைத்து தவம் புரிந்து பிறவா வரம் அடையலாம். உச்சி நோக்கிய தோற்றத்திற்கு உகந்த முகங்கள் சோமாஸ்கந்தர், நடராஜர், .இடபாரூடர்-ரிஷபாரூடர்-விருஷபவாகனன், கல்யாணசுந்தரர்-மணவழகர், சந்திரசேகரர்-பிறை சூடிய பொம்மன் ஆகிய முகங்களை வழிபட்டு கீழ்கண்ட சிவ மந்திரங்கள் குரு தீட்சையுடன் லட்சத்திற்கு அதிகமாக உரு கொடுத்துவந்தால் நல்ல பயன் கிட்டும்.
ஒம் இங் சிங் சங் ஒம் -- சொர்க்க வாசிகள் பணிவர்
ஒம் சிங் சிங் சிவாய ஒம் -- முக்காலமும் அறிய
ஒம் சிவாய நமா -- மலையை தூளாக்கும் சக்தி
ஒம் மங் நங் சிவ சிவாய ஒம் -- மறையும் சக்தி
ஒம் மய நசிவ ஸ்வாஹா -- பறக்கும் சக்தியுள்ள குளிகை
ஒம் வங் சிங் யங் யங் ஸ்வாஹா அரசு வணங்கும்
ஒம் வங் யங் சிங் ஒங் சிவாய -- எதிரிகள் ஒழிய
சிம் வயந ஒம் -- 64 சித்துக்களும் கிடைக்க
யவ நம சிவ ஒம் -- மனோன்மணிதேவி அருள்
64 உருவங்களில் மேற்கண்ட 25 வடிவங்கள் தவிர மற்ற சிவ வடிவங்கள்.
26.சிவலிங்கம்
27.முகலிங்கம்
28.சதாசிவம்
29.மகாசதாசிவம்
30.இடபாந்திகர்
31.புஜங்கலளித மூர்த்தி
32.புஜங்கத்திராச மூர்த்தி,
33.சந்தியா தாண்டவ மூர்த்தி
34.சதா நிருத்த மூர்த்தி
35.சண்டதாண்டவ மூர்த்தி-காளிகாதாண்டவ மூர்த்தி
36.கங்காதரர், கங்காதரமூர்த்தி
37.கங்காவிசர்ச்சனர்
38.ஜ்வரபக்ன மூர்த்தி-சுரகண்டீசர்
39.சார்த்தூலஹர மூர்த்தி
40.பாசுபத மூர்த்தி
41.சரப மூர்த்தி- சிம்மக்ன மூர்த்தி / நரசிம்ம சம்ஹாரர்
42.யோகதட்சினாமூர்த்தி
43.வீணாதட்சிணாமூர்த்தி
44.இலகுளேசுவர மூர்த்தி
45.பைரவ மூர்த்தி
46.ஆபதோத்தாரண மூர்த்தி
47.வடுக மூர்த்தி
48.க்ஷேத்ரபாலக மூர்த்தி
49.அகோர அத்திர மூர்த்தி
50.தட்ச யக்ஞஹத மூர்த்தி
51.குருமூர்த்தி
52.அசுவாரூட மூர்த்தி- குதிரையேறுச் செல்வர்
53.ஏகபாத திரிமூர்த்தி
54.திரிபாத திரிமூர்த்தி
55.கௌரிவரப்பிரத மூர்த்தி
56.கௌரிலீலா சமன்விதமூர்த்தி
57.கருடாந்திக மூர்த்தி
58.பிரமசிரச்சேத மூர்த்தி / பிரமசிரக்கண்டீசர்
59.கூர்ம சம்ஹாரமூர்த்தி
60.மச்ச சம்ஹாரமூர்த்தி
61.வராக சம்ஹாரமூர்த்தி
62.பிரார்த்தனா மூர்த்தி
63.இரத்தபிக்ஷாப் பிரதான மூர்த்தி
64.சிஷ்யபாவ மூர்த்தி / முருகனிடம் பிரணவப் பொருள்கேட்ட வடிவம்
######
ஓம்நமசிவய!
ஓதாதே உணர்ந்தாய் போற்றி ஓய்விலாத் தேவே போற்றி
ஓங்கார முதல்வா போற்றி கணபதித் தேவா போற்றி
கதிதரும் இறையே போற்றி கங்காளன் மகனே போற்றி
கன்னியாள் சுதனே போற்றி கடுக்கையந் தாராய் போற்றி
சிவ நாமங்கள்-1008
அக்கினிபுரீஸ்வரர் திருப்புகலூர், திருவன்னியூர்
அக்னீசுவரர் திருக்கொள்ளிகாடு, கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு
அகத்தீசுவரர் அமராவதி, அனகாபுத்தூர், எட்டியதளி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, கிளியனூர், கூழையூர், தாராபுரம், திருப்பூண்டி, சூணாம்பேடு, புத்திரன்கோட்டை, பனங்குடி, பிரதாபராமபுரம், அருங்குளம், நாப்ளூர், நயினார்வயல், மணப்பாறை, மாகறல்#, வளசரவாக்கம்#, திருச்சுணை, ஐயப்பட்டி, ஏம்பல், நுங்கம்பாக்கம்,அகஸ்தீஸ்வரம், காங்கயம்பாளயம்#, சிவபாதசேகரநல்லூர், நாகர்கோவில், பஞ்சட்டி#, பொழிச்சலூர்
அகோரவீரபத்ரசாமி ஒத்தக்கால்மண்டபம்
அங்கநாதர் மடவளாகம்- திருபத்தூர்.
அங்குரேசுவரர் ஆதிகுடி
அசலதீபேசுவர் மோகனூர்
அட்சயபுரீஸ்வரர் விளங்குளம்
அட்டாளசெக்கநாதர் மேலப்பெருந்துறை, பரமக்குடி
அடியார்க்கு நல்லான் பரமக்குடி
அடைக்கலநாதர் மாகறல்#
அண்ணாமலையார் முடியனூர், பழனி#, மன்னார்குடி
அணைத்தெழுந்தநாயகர் திருவாவடுதுறை
அத்யாபகேசர் தேரழுந்தூர்#
அதிகைநாதர் திருவதிகை#
அந்திசம்ரஷணீஸ்வரர் திருக்கடைமுடி
அபராதரட்சகர் கொல்லாபுரம்
அபிமுகேஸ்வரர் கும்பகோணம்#
அபிராமேசுவரர் காஞ்சி,பாடகம்
அபிஷேகச் சொக்கன் பரமக்குடி
அம்பலக்கூத்தர் சிதம்பரம்#
அம்பலவாணர் சிதம்பரம்#, முடுக்கன்குளம்
அம்பைநாயகர் அம்பாசமுத்திரம்
அம்மணீசுவரன் கஞ்சம்பட்டி, திம்பாம்பட்டி, அவலப்பம்பட்டி, சங்கம்பாளயம், தேவாம்பதி, குறும்பபாளயம், தேவனாம்பாளயம்
அம்மையப்பர் அம்பாசமுத்திரம், படவேடு#, சேரன்மாதேவி
அமரநந்தீசுவரர் நாகப்பட்டிணம்/நாகை
அமரபணீஸ்வரர் பாரியூர்#
அமராபதீஸ்வரர் சிறுகளத்தூர்
அமரேசுவரர் பெரியகாஞ்சி#
அமிர்தகடேசுவரர் தச்சூர், திருக்கடம்பூர், திருக்கடையூர்#, லால்குடி#,
அமிர்தகலசநாதர் சாக்கோட்டை#
அமிர்தலிங்கேஸ்வரர் அருப்புக்கோட்டை#, திருக்கடையூர்#, வெள்ளோடு#, கோவில்பட்டி#
அமுதேஸ்வரர் கும்பகோணம்#
அயவந்தீஸ்வரர் திருசாத்தமங்கை
அரங்குளநாதர் . திருவரங்குளம்
அர்ச்சுனேசுவரர் ஒசூர்-ராம்நகர், மீமிசால்
அரசிலீஸ்வரர் ஒழிந்தியாபட்டு#
அர்த்ததியாசர் திருவாவடுதுறை
அர்த்தநாரீசுவரர் நங்கநல்லூர், எட்டுக்குடி, திருச்செங்கோடு, ரிஷிவந்தியம்
அரதானசலேஸ்வரர் ஐயர்மலை#
அரப்பளீஸ்வரர் கொள்ளிமலை
அரவநீள்சடையான் நாகர்கோவில்
அரியநாதசுவாமி அரியநாயகிபுரம்
அருட்காளீசுவரர் மலையக்கோவில்
அருணாசலேசுவரர் ஆரணி, செஞ்சி, கீழையூர், கூத்தகுடி, தண்டையார்பேட்டை
அருணேசுவரர் காரிமங்கலம்,திருமீயச்சூர்
அருள்சோமநாதேஸ்வரர் திருநீடூர்
அருள்வள்ளல்நாதசுவாமி கீழ்திருமணஞ்சேரி#
அறம்வளர்த்த ஈசுவரர் அணைக்கட்டு
அல்லாலேஸ்வரர் ஈங்கூர்
அவிநாசிநாதர் அவிநாசி#
அவிநாசியப்பர் அவலப்பம்பட்டி
அழகியநாதர் திருப்பனையூர், நாகப்பட்டிணம்
அழகேசுவரர் அத்திமுகம், லக்கமணநாயக்கன்பட்டி, பேரனக்காவூர்
அளகேசன் பவானி#
அனந்தபத்மநாபேஸ்வரர் காஞ்சி,லிங்கப்பர்தெரு#
அனந்தேசுவரர் ஆத்தூர்,கறம்பக்குடி,பதஞ்சலீஸ்வரம்
அன்ன விநோதன் ஆப்புடையார்கோவில்
அன்னபுரீசுவரர் அன்னவாசல்
அனுமீஸ்வரர் முகாசிஅனுமன்பள்ளி#
அனேகதங்காவதேஸ்வரர் காஞ்சி,அனேகதங்காவதம்#
அஸ்வத்தநாதர் ஆவூர்பசுபதீச்சுரம்
அஸ்வத்தேஸ்வரர் ஒழிந்தியாபட்டு#
அஷயநாதர் திருமாந்துறை.#
அஷயலிங்கேஸ்வரர் கீழ்வேளூர்
ஆட்சிகொண்டநாதர் அச்சரப்பாக்கம்#
ஆடலீஸ்வரர் முன்னூற்றுமங்கலம்,காயார்
ஆத்திவனநாதர் . திருச்செங்காட்டாங்குடி
ஆத்மநாதர் ஆவுடையார்கோயில்#, திருவிடைமருதூர்#
ஆதிகம்பட்டவிசுவநாதர் கும்பகோணம்#
ஆதிகாயாரோகணர் நாகப்பட்டிணம்/நாகை
ஆதிகும்பேஸ்வரர் கும்பகோணம்#
ஆதிகைலாதநாதர் வடக்கூர்#
ஆதிசிவசைலநாதர் சிவசைலம்
ஆதிசொக்கநாதர் மதுரை, உத்ரஆலவாய்#
ஆதித்தவர்ணேசுவரர் துப்பாகுடி, மேலச்செவல்
ஆதித்தேசுவரமுடையார் பெரியகளந்தை
ஆதித்தேசுவரர் பேராவூர்
ஆதிதீச்சரமுடையார் தேவூர்
ஆதிபுராணர் நாகைக்காரோணம்
ஆதிபுரீஸ்வரர் திருவெற்றியூர்#, சிந்தாதிரிப்பேட்டை
ஆதிரத்னேஸ்வரர் திருமாந்துறை#
ஆதிவைத்தியநாதர் சேரன்மாதேவி
ஆதீசுவரர் கீரனூர், பெரியகளந்தை
ஆபத்சகாயேசுவரர் ஆடுதுறை#, ருத்ரகங்கை, கந்தர்வகோட்டை, திருஅன்னியூர், புதுப்பட்டு, கொங்கராயநல்லூர், கொத்தவாசல், துக்காட்சி.
ஆப்பனூரீசுவரர் ஆப்புடையார்கோவில்
ஆப்புடையார் ஆப்புடையார்கோவில்
ஆம்ரவனேஸ்வரர் திருமாந்துறை#,கூகூர்
ஆம்லகவனேஸ்வரர் திருநெல்லிக்கா
ஆரண்யவிடங்கர் திருபைஞ்சிலி#
ஆர்த்தகபாலீஸ்வரர் பாமிணி
ஆருத்ரகபாலீஸ்வரர் ஈரோடு#
ஆலடீஈசுவரர் ஈஞ்சார்(சிவகாசி அருகில்)
ஆலந்துறையார் அன்பில்#, அரியலூர், திருப்பழுவூர், நல்லாத்துக்குடி
ஆலவாயண்ணல் திருஆலவாய்#
ஆலிங்கனசந்திரசேகர் சந்திரசேகரபுரம்
ஆவூருடையார் ஆவூர்பசுபதீச்சுரம்
ஆளுடையார் கோவை.கோட்டைமேடு
ஆனந்ததியாகர் திருவெற்றியூர்#
இடபுரேசர் ஆப்புடையார்கோவில்
இடைச்சுரநாதர் திருஇடைச்சுரம்#
இரத்தினகிரீஸ்வரர் பெசண்ட்நகர்
இராமணதீஸ்வரர் . இராமனதீச்சரம்
இராமநாதஈஸ்வரர் போரூர்#
இராமநாதசுவாமி இராமேஸ்வரம்#
இராமலிங்கேஸ்வரர் இராமேஸ்வரம்#
இருதயகமலநாதேஸ்வரர் வலிவலம்
இலங்கைநாதர் அரச்சலூர்
இலந்தையடிநாதர்(சு) பிரம்மதேசம்.அயனீஸ்வரம்
இன்மையில்நன்மைதருவார் மதுரை
ஈசானேஸ்வர் பூரி,கீழாம்பி, அம்பிகாபுரம், திருவேள்விக்குடி
ஈரோடையப்பர் ஈரோடு#
உச்சிநாதசுவாமி திருநெல்வாயில்
உசிரவனேஸ்வரர் திருவிளநகர்
உடும்பீசர் மாகறல்#
உடையநம்பீசுவரர் கடம்பூர்
உத்தமநாதர் கீரனூர்
உத்தமலிங்கேசுவரர் பெருமாநல்லூர்
உத்ரநாதர் திருப்பாதிரிப்புலியூர்#
உத்ரவைத்தியநாதர் காட்டூர்
உத்ராபதீஸ்வரர் திருச்செங்காட்டாங்குடி
உத்வாகநாதசுவாமி கீழ்திருமணஞ்சேரி#
உதவிநாயகர் திருமாணிக்குழி#
உமாசகிதர் காஞ்சி,புத்தேரித்தெரு#
உமாசந்திரசேகரர் சந்திரசேகரபுரம்
உமாபதீசர் , தக்கோலம்#
உமாமகேசுவரர் வடக்கநந்தல்,இளம்பிள்ளை, சித்திரைச்சாவடி, திருநல்லம்
உமையாட்சீஸ்வரர் அச்சரப்பாக்கம்#
உமையொருபாகர் சாயமலை
உருமநாதர் பெருங்களுர்
உலகநாதர் பொன்பேத்தி
உலகவிடங்கர் ஒலகடம்
எட்டீசர் எட்டயபுரம்,பையனூர்
எமதருமேஸ்வரர் காஞ்சிபிள்ளையார்பாளயம்#
எமனேஸ்வரர் எமனேஸ்வரம்#
எரிச்சாண்டாவர் அம்பாசமுத்திரம்
எழுத்தறியும் பெருமாள் திருவெற்றியூர்#
எறும்பீசுவரர் ஆலத்தூர்
ஏகலிங்கநாதர் ஏக்லிங்க்-ராஜஸ்தான்
ஏகாம்பரநாதர் திருக்கச்சிஏகம்பம்#
ஏகாம்பரேசர் மானந்தகுடி
ஏகாம்பரேசுவரர் திடாவூர், செங்கல்பட்டு, திருக்கச்சிஏகம்பம்#, திருக்கவித்தலம்#, பூங்காநகர்#, கும்பகோணம்#
ஏடகநாதேஸ்வரர் திருஏடகம்
ஏழுகடலைஅழைத்தஎம்பிரான் மதுரை
ஐந்தெழுத்துநாதர் கூகையூர்
ஐநூற்றீஸ்வரர் வீரபாண்டியபுரம்.
ஐமுக்தீஸ்வரர் பெரியபாளையம்
ஐயாறப்பன் மயிலாடுதுறை#
ஐராவதீஸ்வரர் கோட்டாறு, தாராசுரம்#
ஐராவதேசுவரர் அத்திமுகம், பெரியகாஞ்சி#, எதிர்கொள்பாடி, மருத்துவக்குடி, மதுரை, ஐராவதநல்லூர்
ஒட்டீசுவரர் ஒட்டியம்பாக்கம்
ஒராயீசுவரமுடையார் தர்மபுரி-தகடூர்#
ஒளஷதீஸ்வரர் திருவாண்மியூர்#
ஓணேஸ்வரர் காஞ்சிஓணகாந்தன்தளி#
ஓதவுருகீசர் திருக்கச்சிமேற்றளி#
ஓம்காரேஸ்வரர் மமலேஸ்வரம்-ம.பி.
ஓம்காளிசுவரர் குத்தாலம்#
கங்காசுந்தரேசுவரர் விரகனூர்
கங்காதரஈஸ்வரர் சின்னசேலம்
கங்காதரேஸ்வரர் புரசைவாக்கம்.#
கங்காதீசுவரர் கருவலூர்
கச்சபேஸ்வரர் திருக்கச்சி#
கச்சாலீஸ்வரர் வடசென்னை#
கடம்பவனநாதர் குளித்தலை#
கடம்பவனேஸ்வரர் எறும்பூர், குளித்தலை#, முத்தரசநல்லூர், பரமக்குடி
கடைமுடிநாதர் திருக்கடைமுடி
கண்ணாயிரநாதர் திருக்காறாயில்
கண்ணாயிரமுடையார் திருக்காறாயில்
கண்ணேஸ்வரர் செங்கழுநீரோடைதெரு#
கண்டேசுவரர் கரைப்பூண்டி
கணபதீச்சரமுடையார் திருச்செங்காட்டாங்குடி
கத்தீசுவரர். ருக்கிளியன்னவூர்#
கதலிவசந்தர் திருபைஞ்சிலி#
கதலிவனேஸ்வரர் தேவூர்
கபர்தீஸ்வரர் திருவலஞ்சுழி
கபாலமோச்சன் பூரி
கபாலீஸ்வரர் மயிலாப்பூர்#
கபிலேஸ்வரர் திருப்பதி
கபோதீஸ்வரர் செஜர்லா(ஆந்திரா)
கம்பகரேஸ்வர் திருபுவனம்#
கயிலாசநாதர் ஆரணி#, ஐயம்பேட்டை, காஞ்சி, கூகையூர், நடுவனூர், போளூர், புத்தேரித்தெரு#, கங்கவல்லி
கயிலாயநாதர் ஊத்துக்காடு, திருப்போரூர்#
கரச்சினேஸ்வரர் கைச்சினம்
கர்பப்புரீஸ்வரர் திருக்கருகாவூர்#
கர்ப்பூரேஸ்வரர் நாசிக்,பஞ்சவடி
கரியமாலீசுவரர் கரூர்#
கருக்குடிநாதர் மருதாந்தநல்லூர்
கருடாத்திரி குடவாயில்#
கரும்பேசுவரர் கோவில் வெண்ணி
கரைகண்டேசுவரர் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென்மகாதேவமங்கலம், எலத்தூர். பூண்டி, குருவிமலை
கரையேற்றும்பிரான் திருப்பாதிரிப்புலியூர்#
கல்லேஸ்வரர் அங்கூர்(கர்நாடகா), பாகலி(கர்நாடகா), ஹூவின்ஹடஹள்ளி(கர்நாடகா) ஹிரேஹடஹள்ளி(கர்நாடகா)
கல்யாணசுந்தரர் திருசுழியல்
கல்யாணசுந்தரேசுவரர் திருமழிசை#, கீழ்திருமணஞ்சேரி#, திருநல்லூர், திருவேள்விக்குடி
கல்யாணபசுபதீஸ்வரர் கரூர்#
கல்யாணவிகிர்தேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்#
கலாசநாதர் ஆலங்குடி
கலிதீர்த்தஈஸ்வர் மணப்பாறை
கவுதமேஸ்வரர் கும்பகோணம்
கற்கடகேஸ்வரர் திருந்துதேவன்குடி
கற்கி ஈஸ்வரன் கணுவாய்
கற்பூரநாதஈசுவரர் கல்குறிச்சி
கனககிரீஸ்வரர் தேவிகாபுரம்
கனகசபாபதி சிதம்பரம்#
கனகசோளீசுவரர் கனியாமூர்
கன்னிவனநாதர் திருப்பாதிரிப்புலியூர்#
காசிநாதர் அம்பாசமுத்திரம்
காசிவிஸ்வநாதர் அரவக்குறிச்சி, ஆண்டான்கோவில், ஆதனகோட்டை, ஆப்பக்கூடல், ஒசூர், கன்னியாகுமரி, சிவாடி, சூரியணார்கோயில்# ,சேரன்மாதேவி, காரைக்குடி, காங்கேயம், கிணத்துக்கடவு, கீழாம்பூர், கும்பகோணம்#, கோவை.பேட்டை, செட்டிபாளயம், சின்னசேலம், சூலகிரி, தளி, தாராபுரம், மகாதானபுரம், மயிலாடுதுறை, மறுதுறை, நாகமநாயக்கன்பட்டி, நெரூர்தெற்கு, பொன்னபுரம், மன்னார்குடி, ராஜபுரம், வடக்கைபாளயம், வடபழனி#, வேடசந்தூர், வாழப்பாடி, மேலகபிஸ்தலம், பறக்கை, வேலூர், கே.புதுப்பட்டி
காட்சிதந்த நாயனார் திருக்காறாயில்
காடைஈஸ்வரர் காடையூர்
காந்தேஸ்வரர் காஞ்சிஓணகாந்தன்தளி#
காமகோடீஸ்வரர் சாலைகிராமம்
காமதேசுவரர் ஒசூர்
காமதேனுபுரீஸ்வரர் திருநீலக்குடி#
காமநாதீஸ்வரர் ஆறகழூர்
காமேஸ்வரர் தேவிகாபுரம், காம்யவன-மதுரா
காயநிர்மாலீசுவரர் ஆத்தூர்
காயாரோகணீஸ்வரர் நாகைக்காரோணம், காஞ்சிபிள்ளையார்பாளயம்#
காரணீஸ்வரர் திருக்கள்ளில்# , சைதாப்பேட்டைமேற்கு#, மயிலாப்பூர்
கார்கோடேஸ்வரர் ரதிவரம்/காமரசவல்லி
கார்முக்தேஸ்வர் கார்முக்தேஸ்வர்-மதுரா
கார்த்திகைசுந்தரேசுவரர் கஞ்சநகரம்
காரியாம்புரீஸ்வரர் கூகையூர்
காரைபாண்டீசர் பறையத்தூர்
காலசம்ஹாரமூர்த்தி திருக்கடையூர்#
காலகாலகேஸ்வரர் கஜீந்திரகாட்(கர்நாடகா-கதக்மாவட்டம்)
காலகேஸ்வரர் காலகநாதா(கர்நாடகா)
காலீஸ்வரர் சீட்டணஞ்சேரி
காலேசுவரர் கோவில்பாளயம்
காளகண்டேசுவரர் அம்பர்மாகாளம், அடையபுலம்
காளத்திநாதர் காளத்தி,வாட்டார்
காளத்தீசுவரர் இலந்திரைகொண்டான், கங்குவார்பட்டி, காவல்கிணறு, கல்லம்பாளயம், மாரப்பபாளையம்#
காளஹஸ்தீசுவரர் திண்டுக்கல்#, திருக்கண்ணங்குடி, கதிராமங்களம், கும்பகோணம், கபிலர்மலை#
காளீஸ்வரசுவாமி வில்லியநல்லூர்
கிருத்திவாசர் வழுவூர்
கிருபாகூபாரேசுவரர் கோமல்#
கிருபாநாதேசுவரர் திருப்பனங்காடு#
கிருஷ்னேஷ்வர் வெருள்-ஜோ-12/12
கிளியன்னவூரான் திருக்கிளியன்னவூர்#
கீலகேசுவரர் ஆப்புடையார்கோவில்
குகநாதஈசுவரர் கன்னியாகுமரி
குசாலபுரீஸ்வரர் கோயம்பேடு#
குண்டலீசுவரர் அப்பிபாளையம்
குணம்தந்தநாதர் ஓரகாட்டுப்பேட்டை
குந்தீசுவரர் அனந்தபுரம்
கும்பேசுவரர் குப்பம்
குமரேசுவர் மோகனூர்
குருஈசுவர் குருசாமிபாளயம்#
குருசாமி குருசாமிபாளயம்#
குருலிங்கேசுவரர் காஞ்சிபிள்ளையார்பாளயம்#
குலசேகரநாதர் காரைக்குறிச்சி, பதை
குலசேகரமுடையார் கல்லிடைகுறிச்சி
குழகர் கும்பகோணம்# கோடிக்கரை
குறள்மணிஈஸ்வரமுடையார் அருப்புக்கோட்டை#
குறுங்காலீஸ்வரர் கோயம்பேடு#
குன்றவில்லி மிழலையூர்,மொழலையூர்
குன்றாபுரீஸ்வரர் குன்னத்தூர்
குஹேசுவரர் கூகூர்
கூத்தபிரன் சிதம்பரம்#
கூத்தன் கூத்தப்பாடி
கூவைலிங்கேஸ்வரர் பேளுக்குறிச்சி
கேடியப்பர் புல்வயல்
கேடிலியப்பர் கீழ்வேளூர்
கேதாரீஸ்வரர் தியாகராயநகர்#
கேவலசந்திரசேகரர் சந்திரசேகரபுரம்
கைகாட்டும்வள்ளல் வள்ளலார்கோயில்#
கைச்சினேஸ்வரர் கைச்சினம்
கைலாசநாதர் அகரக்கொந்துகை, அம்மன்குடி, ஏழூர், உசுப்பூர், உப்பிலியக்குடி, கரூர்#, கரைப்பூண்டி, கலயம்புத்தூர், கீழம்பாடி, கீழ்ப்புத்தேரி, கூனன்சேரி, சாத்தனூர், சிங்கிகுளம், சென்னிமலை, சாயல்குடி#, திம்மூர், திருப்போரூர், தேவகோட்டை, தென்பள்ளிப்பட்டு, பசுவந்தனை, பழனி.#, பழயாறைவடதளி, பவளமலை#, பெரும்பண்ணாயூர், பிரம்மதேசம், மணல்மேடு, மன்னார்குடி, போலகம், நத்தம், நாகப்பட்டிணம், நார்த்தாம்பூண்டி, வாளாடி, வீரசோழம், பண்டாரவடை, பரமேஸ்வரிமங்கலம், பிரம்மதேசம்.அயனீஸ்வரம்
கொடுமுடிநாதர் திருபாண்டிக்கொடுமுடி#
கொய்யமலைநாதர் குரங்கனில்முட்டம்#
கொற்றவாளீஸ்வரர் கோவிலூர்
கொம்பேஸ்வரர் கொம்மேஸ்வரம், ஆண்மையூர்திம்மேஸ்வரம்/ஆம்பூர், திம்மசமுத்திரம்
கோகர்ணேசுவரர் கோகர்ணம்#
கோகழிநாதர் திருவாவடுதுறை
கோகிலேசுவரர் திருக்கோழம்பம்
கோங்கிலவுவனநாதேஸ்வரர் கைச்சினம்
கோடிநாதர் திருக்கோடிக்கா
கோடீகாஈஸ்வரர் திருக்கோடிக்கா
கோடீசுவரர் கரூர்#, கொத்தங்குடி, நடுவச்சேரி,
கோணப்பிரான் திருப்புகலூர்
கோணேஸ்வரர் குடவாயில்#
கோதண்டராமஈசுவரர் கயத்தார்
கோதீசுவரர் சீதப்பால்
கோதைஈசுவரர் கோதைமங்கலம்
கோமளஈஸ்வரர் கோமளீஸ்வரன்பேட்டை
கோமுக்தீஸ்வரர் திருவாவடுதுறை
கோழம்பநாதர் திருக்கோழம்பம்
கோளிலிநாதர் திருக்கோளிலி
கோளிலிநாதேஸ்வரர் திருக்கோளிலி
கௌசிகேஸ்வரர் பெரியகாஞ்சி,#
கௌதேஸ்வரர் திருவேள்விக்குடி
சக்தீஸ்வரர் பெரியகாஞ்சி,#
சக்திபுரீஸ்வரர் கருங்குயில்நாதன்பேட்டை
சக்ரவர்த்தீஸ்வரர் திருப்பாச்சேத்தி
சக்கரேஸ்வர் கோவர்த்தனமலை-மதுரா
சகலபுவனேஸ்வரர் திருமீயச்சூர்இளங்கோயில்
சகஸ்ரரஸ்மீசுவரர் தீயத்தூர்
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர்
சங்கமுகநாதேஸ்வரர் பவானி#
சங்கமேஸ்வரர் கோவை.கோட்டைமேடு, பவானி#
சங்கரநாராயணர் ஒசூர், திருநாட்டாலம்
சங்கரலிங்கர் ஊர்க்காடு
சங்கருணாதேஸ்வரர் திருதலைச்சங்காடு
சங்கவனேஸ்வரர் திருதலைச்சங்காடு
சங்காரண்யேசுவரர் திருதலைச்சங்காடு
சங்கீசுவரர் கோவை.கோட்டைமேடு
சடைசாமி மிழலையூர்,மொழலையூர்
சடைமுடிநாதர் சிவசைலம்
சடையப்பமகாதேவர் திருவிடைக்கோடு
சண்பகாரண்யேஸ்வரர் திருநாகேச்சுவரம்#, வைகல்மாடக்கோயில்
சத்சங்பவன் ஹோஷங்காபத்-ம.பி
சத்யநாதேஸ்வரர் கச்சிநெறிக்காரைக்காடு#
சத்யவாகீஸ்வரர் அன்பில்#
சத்யவிரதேஸ்வரர் கச்சிநெறிக்காரைக்காடு#
சதுரங்கவல்லபநாதர் பூவனூர்
சதுர்முகசண்டீசுவரர் புதுக்குடி
சந்திரசூடேசுவரர் ஒசூர்-மலைக்கோவில்#
சந்திரசேகர் காமக்கூர், திருப்புகலூர்
சந்திரசேகரசுவாமி திருச்செந்துறை
சந்திரசேகரர் கிருஷ்ணகிரி, சந்திரசேகரபுரம், புளியம்பட்டி, வீராஞ்சிமங்கலம்
சந்திரசேகரேஸ்வரர் காஞ்சி-வெள்ளைகுளம்#, திருவக்கரை#
சந்திரமௌலீசுவரர் கிருஷ்ணகிரி, முசிறி, சாத்தனூர், திருவக்கரை#, திங்களூர், காஞ்சி-சங்கரமடம்#
சப்தபுரீஸ்வரர் திருக்கோலக்கா#
சப்தரீஷீஸ்வரர் லால்குடி#
சபாநாயகர் சிதம்பரம்#
சபாபதீசுவரர் பைங்காநாடு
சம்பங்கிபிச்சாண்டீஸ்வரர் ஆரணி
சமீவனேஸ்வரர் திருப்பாச்சிலாச்சிராமம்/மழநாடு/திருவாசி#
சரண்யபுரீஸ்வரர் திருப்புகலூர்
சரணாகதரட்சகர் தில்லையாடி
சர்ப்பபுரீஸ்வரர் பாதாளேச்சுரம்
சர்வமங்களாதர்மலிங்கேசுவரர் நங்கநல்லூர்
சர்வலிங்கமூர்த்தி வெள்ளோடு#
சர்வேசுவரர் முடிகொண்டான்
சலேந்தரேஸ்வரர். காஞ்சிஓணகாந்தன்தளி#
சற்குணநாதேஸ்வரர் கருவிழிக்கொட்டடை
சற்குணலிங்கேஸ்வரர் மருதாந்தநல்லூர்
சனத்குமரேசுவரர் எஸ்.புதூர்
சாண்டில்யேஸ்வரர் சாண்டில்யாகாட்-ம.பி
சாணாயிரமுழமாயிரம்உடையார் தர்மபுரி#
சாந்தநாதர் புதுக்கோட்டை
சாம்பசிவமூர்த்தி ஏயீச்சுரம்
சாமவேதீஸ்வரர் திருமங்கலம்#
சார்ந்தாரைகாத்தஈஸ்வரர் தில்லையாடி
சாரபரமேஸ்வர் திருச்சேறை#
சிக்கேசர் குடந்தைக்காரோணம்#
சிகாநாதர் இருகூர், குடிமியான்மலை
சித்தநாதர் திருநறையூர்#
சித்தநாதீஸ்வரர் பாப்பான்குளம்
சித்தநாதேஸ்வரர் திருநறையூர்#
சித்தலிங்கேசுவரர் குறிச்சி, தருமலிங்கமலை
சித்தீசுவரர் துடுப்பதி
சித்தேஸ்வரர் சாத்தனூர், தர்மபுரி-தகடூர்#
சிதம்பரேசுவரர் இலுப்பூர், பொய்யாமணி, கல்லிடைகுறிச்சி, கள்ளக்குறிச்சி#, திருவதிகை#, கூவத்தூர்
சிந்தாமணீசுவரர் நன்னியூர், புகலூர், திருப்புகலூர்
சிந்தாமணிநாதர்(சு). வாசுதேவநல்லூர்
சிம்மபுரீசுவரர் கருப்பத்தூர்
சிவக்குருநாதசுவாமி சிவபுரம்
சிவக்கொழுந்தீசர் திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர்#, திருசக்திமுற்றம்#
சிவகிரிமார்த்தாண்டேசுவரர் இரணியல்
சிவசைலநாதர் ஆழ்வார்குறிச்சி
சிவபுரநாதர் சிவபுரம்
சிவபுரீஸ்வரர் சிவபுரம்
சிவராஜேஸ்வரர் கொங்கன் கடற்கரை-கண்பத்ரிகோவில் அருகில்
சிவலேகநாயகர் திருவாவடுதுறை
சிவலோகநாதர் கானாடுகாத்தான். ,கீரனூர்
சிவாங்கரேஸ்வரர் திருத்தினைநகர்
சிவாயபுரீசுவரர் சிவாயம்
சிவானந்தேஸ்வரர் திருக்கள்ளில்# , பேனுபெருந்துறை
சிறகிலிநாதர் இறகுசேரி
சிறுகுடியீசர் சிறுகுடி/சிறுபிடி
சிஷ்டகுருநாதேஸ்வரர் திருத்துறையூர்#
சீதாலிங்கேஸ்வரர் பாகலி(கர்நாடகா)
சீராளேஸ்வரர் மாத்தூர்
சுக்கிரீஸ்வரர் காஞ்சி#-அரக்கோணம்சாலை, குரக்குத்தளி
சுகந்தபரிமளேசுவரர் திருமணஞ்சேரி
சுத்தரத்னேஸ்வரர் திருமாந்துறை#
சுந்தரபாண்டீசுவரர் அரியக்குடி, மேலக்கரிவலங்குளம்
சுந்தரமகாலிங்கசுவாமி(சு) ஆயக்குடி
சுந்தரேசன் மணக்குடி
சுந்தரேசுவரர் அரிமழம்., காரைக்குடி, சின்னசேலம், தேவகோட்டை, திருவேட்டக்குடி, நம்பிபுரம், பத்தமடை, பாரியூர்#, விளாத்திகுளம், இறச்சகுளம், குண்டையூர், குளித்தலை#, குளிப்பிறை, கோச்சடை, கோவூர்/திருமேனீச்சுரம்#, தாமரைக்குளம், தோகைமலை, துவரிமான், நத்தம்பட்டி, நல்லம்பல், பரமக்குடி#, பாசூர், பெரியகுளம், மன்னாடிமங்கலம், மருதூர், டிவீசுவரம், வி.சூரக்குடி, விடதகுளம்
சுனைகண்ட லிங்கேஸ்வர் எதிர்கோட்டை
சுயம்புநாதர் திருவிளையாட்டம், நரசிங்கன்பேட்டை#, முள்ளந்திரம், புதுக்குடி, பேராளம்
சுயம்புலிங்கேசுவரர் உவரி
சுரகரீஸ்வரர் பெரியகாஞ்சி,#
சுவர்ணபுரீஸ்வரர் சாலவாக்கம்
சுவர்ணலட்சுமீசர் செம்பணார்கோவில்
சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருசிற்றேமம்
சுழிகேசர் திருசுழியல்
சூத்ரநாதர் கும்பகோணம்
சூர்யகோடீஸ்வரர் கீழ்சூரியமூலை, திருயோகி
சூரியேசுவரர் குடவாயில்#
சூஷ்மபுரீஸ்வரர் சிறுகுடி
செங்கண்மாலீசுவரர் தையூர்
செக்கநாதர் திருவிடைமருதூர்#
செஞ்சடைநாதர் திருமாலுகந்தன்கோட்டை
செந்நெறியப்பர் திருச்சேறை#
செம்பொன்பள்ளியார் செம்பணார்கோவில்
செம்மலைநாதர் கீழையூர்
செர்ணகிரீசுவரர் அசிக்காடு
செல்லீஸ்வரர் அந்தியூர்
செவ்வந்தீசுவரர் காஞ்சி-பஞ்சுபேட்டை# , சீராப்பள்ளி
செவிடநாயனார் ஒசூர்-மலைக்கோவில்#
சென்னமல்லீஸ்வர பூங்காநகர்#
சேத்ரபீமாசங்கர் தஹினி-பூனா
சேனாபதீஸ்வரர் குமரக்கோட்டம்#
சேஷபுரீஸ்வரர் திருப்பாம்புரம்
சேஷாசலேசுவரர் நாரல்பள்ளி
சொக்கநாதர் அருப்புக்கோட்டை#, ஆத்தூர், கோரைக்கடவு, கொளிஞ்சிவாடி, திருஆலவாய்#, மன்னார்குடி, மேட்டூர், வி.சூரக்குடி, ஜெயமங்கலம்
சொக்கநாதேஸ்வரர் அம்மாபேட்டை
சொக்கலிங்கநாதர் திருஆலவாய்#
சொக்கலிங்கர் பழனி/திருவாவிணன்குடி#
சொக்கேசர் திருஆலவாய்#
சொக்கலிங்கேஸ்வரர் . பெரியநாயக்கன்பாளையம்
சொர்ணபுரீசுவரர் அரிசிக்கரைபுத்தூர்#, கூகையூர், தென்பொன்பரப்பி, செம்பணார்கோவில், பொய்கைநல்லுர், பொரவச்சேரி
சொர்ணமூர்த்தீஸ்வரர் கண்டதேவி
சோமசுந்தரக்கடவுள் திருஆலவாய்#
சோமசுந்தரேசுவரர் மதுரை, கருவாழக்கரை, புவனகிரி
சோமநாதஈசுவரர் போளூர், தர்மபுரி#
சோமநாதசுவாமி காரைக்கால்
சோமநாதர் குடந்தைக்காரோணம்# தேவநல்லூர், சோமங்களம்#, விஜயமங்கலம்
சோமேசர் குடந்தைக்காரோணம்#, பழயாறைவடதளி
சோமேசுவரர் அதியமான்கோட்டை, ஒசூர்-ராம்நகர், தண்டுகரமஹபள்ளி, புட்டிரெட்டிபட்டி, குத்தாலம்#, கிருஷ்ணகிரி, மணவாரனபள்ளி, பரூர், ராயக்கோட்டை, சேந்தமங்கலம்
சோழீசுவரர் அரளிக்கோட்டை, ஆயக்குடி, இளங்கடம்பனூர், ஈரோடு#, இளையான்குடி, கூகையூர், முத்தூர்#, மூலனூர்#, புத்தரிச்சல், வெள்ளக்கோவில்#, கோவை.கோட்டைமேடு, சோங்காலிபுரம், மண்ணூர், பெரியகோட்டை, பாலங்கரை, பெருந்துறை
சோளபுரீசுவரர் சோளிங்கர்
சோளீசுவரர் தோழூர், வெங்கம்பூர், பாக்கம், விக்ரமங்களம்
சோறுடைஈசுவரர் திருபைஞ்சிலி#
சோனேஸ்வரர் சோங்காலிபுரம்
சௌந்தரநாதர் திருநாரையூர்
சௌந்தரேசுவரர் எட்டுக்குடி, கொடுக்கூர், சைதாப்பேட்டை, திருப்பனையூர், வடநாரையூர், காமரசவல்லி
டாகேஸ்வரர் டாக்கா
ஞானகிரீசுவரர் ஞானமலை
ஞானபண்டிதசுவாமி ஞானமலை
ஞானபரமேஸ்வரர் நாலூர்மாயனம்
ஞானபுரீஸ்வரர் திருஇடைச்சுரம்#, மன்னம்பந்தல்
ஞானேஸ்வர்மௌலி,சித்தேஸ்வர்-ஆலன்ந்தி-பூனா
ஞானலிங்கம் நாகப்பட்டிணம்
ஞீலிவனநாதர் திருபைஞ்சிலி#
தடுத்தாண்டஈசன் அதகபாடி
தந்துபீசுவரர் சோங்காலிபுரம்
தர்ப்பாரண்யேசுவரர் திருநள்ளாறு#
தர்மலிங்கேசுவரர் தருமலிங்கமலை, காஞ்சிபிள்ளையார்பாளயம்#
தருமபுரீசுவரர் ஈசனூர், மன்னம்பந்தல்/தருமபுரம், பழயாறைவடதளி
தவக்கொழுந்தீசர் மேல்படப்பை
தவழக்குழைந்தஈஸ்வரநாதர் வானூர்
தவளேஸ்வரர் கட்டாக்-தவளேஷ்வர்
தழுவக்குழைந்தநாதர் திருக்கச்சிஏகம்பம்#
தழுவியமகாதேவர் நாகர்கோவில்/வடசேரி
தனுநாதர் திருசுழியல்
தஷபுரீஸ்வரர் திருப்பறியலூர்
தாண்டவனேஸ்வரர் மூக்கனூர்
தாந்தோன்றீசுவரர் பெரும்பேர்கண்டிகை, பேளூர், சோழன்பேட்டை, வள்ளிபுரம்
தாயுமாணவர் சித்தன்னவாசல், ராப்பூசல்,திருச்சி
தாரணேசுவரர் தாரைக்குடி
தார்மீகசுவாமி குணசீலம்#
தாருகனேஷ்வரர் திருப்பாராய்துறை#
தாலப்பியேசுவரர் குடவாயில்#
தாலபுரீஸ்வரர் திருப்பனங்காடு#
தாலவனேஸ்வரர் திருப்பனையூர்
தாளேஸ்வரர் திருக்கோலக்கா#
தான்தோன்றீசுவரர் அதிவீரபாண்டியபுரம், ஆக்கூர், பெரியேரி, புனவாசல், நம்பியூர்
தானமதீசுவரர் வேலஞ்சர்
தானுமாலயசுவாமி சுசீந்திரம்#
தானுலிங்கேஸ்வர் தெங்கம்புதூர்
திந்திரிணீஸ்வரர் திண்டிவணம்
தியாகேசர் திருவெற்றியூர்#
தியானலிங்கேசுவரர் ஈசாயோகாமையம்#, பாலடிஜடாமகுடர்#
திரிகடுகைமூன்றீசுவரர் பாப்பாகுடி
திரிசூலநாதர் திரிசூலம்
திரிபுராந்தகர் ராம்பாக்கம், சிறுகரும்பூர்
திரிபுவனசக்ரவர்தீசுவரர் ஊஞ்சனை
திரியம்கேஸ்வரர் திருயம்பகம்-ஜோ-10/12
திருக்கண்ணீசுவரர் சேத்தூர்
திருக்கண்ணேசுவரமுடையார் விஜயன்குடி
திருக்கண்மாலீஸ்வரர் கிருஷ்ணராயபுரம்#
திருக்கருத்தீசுவரர் பாப்பான்குளம்
திருக்காம்பீசுவரர் சூளை
திருக்காமேசுவரர் புலிவலம், வில்லியனூர், முல்லைப்பாடி
திருக்கோளம்பீஸ்வரர் முடிகொண்டநல்லூர்
திருகள்ளீஸ்வரர் திருக்கள்ளில்#
திருச்சிற்றம்பலமுடையார் சிதம்பரம்#
திருச்சுரமுடையான் திரிசூலம்
திருச்சோபுரநாதர் திருச்சோபுரம்
திருத்தாளமுடையார் திருக்கோலக்கா#
திருத்தூணாண்டார் வந்தவாசி-சீயமங்கலம்
திருந்தீஸ்வரர் திருத்தினைநகர்
திருநல்லம்உடையார் திருநல்லம்
திருநள்ளாற்றீஸ்வரர் திருநள்ளாறு#
திருநாகேசுவரர் தளபதிசமுத்திரம், வளர்புரம், ரங்கசமுத்திரம்
திருநீலகண்டேசுவரர் கயத்தார், காஞ்சிக்கோவில், கெருங்கம்பாக்கம், திருநீலக்குடி#, குள்ளபுரம்
திருநோக்கியஅழகியநாதர் திருப்பாச்சேத்தி
திருப்பயற்றுநாதர் திருபயத்தங்குடி
திருப்பாலைநாதர் திருப்பாலைக்குடி
திருப்போத்துடையபட்டாரகர் அம்பாசமுத்திரம்
திருமகிழவனமுடையநாயனார் பெருந்தலையூர்
திருமஞ்சனஅழகியதம்பிரான் விரகனூர்
திருமணங்கீஸ்வரர் மேலூர்#
திருமலையப்பர் சிங்காநல்லூர்
திருமறைநாதர் திருவாதாவூர்
திருமாகறலீஸ்வரர் மாகறல்#
திருமாலீசுவரர் இடவை/நஞ்சைஇடையாறு, திருமாதலபாக்கம்
திருமுக்தீஸ்வரர் மணப்பாறை
திருமூலநாதசுவாமி பூவாளூர்
திருமூலநாதர் அம்பாசமுத்திரம்மேற்கு,தென்கரை
திருமெய்ஞானபுரீஸ்வரர் . திருமக்கோட்டை
திருமெய்ஞானம் ஞானபுரீசுவரர்
திருமேற்றளிநாதர் திருக்கச்சிமேற்றளி#
திருமேற்றளீஸ்வரர் திருக்கச்சிமேற்றளி#
திருமேனிநாதர் உரலிப்பட்டி, திருசுழியல்
திருமேனியழகர் திருவேட்டக்குடி, வடகுடி
திருமேனீஸ்வரர் கோவூர்#
திருவலம்புரநாதர் திருவலம்புரம்
திருவழுதிஈசுவரர் ஏர்வாடி
திருவாகீஸ்வரர்
திருவாலத்துறைநாதர் ஏனங்குடி
திருவாலந்துறையார் நன்னிலம்
திருவாலீஸ்வரர் திருவானைக்கோவில், மேல்படப்பை
திருவிலங்கேஸ்வரர் பஞ்சட்டி#
திருவுடைநாதர் மணலி
திருவெண்ணீஸ்வரம்உடையார் நல்லாடை
திருவேகம்பர் திருக்கச்சிஏகம்பம்#
திருவேங்கிநாதர் முத்தரசநல்லூர்
திருவேள்விக்குடிஉடையார் திருவேள்விக்குடி
திருவேளாலீசுவரம் தர்மபுரி,தகடூர்#
திலகேசுவரர் தேவிபட்டிணம்-நவபாஷாணம்
தீம்பாலநாதர் பொன்மனை
தீபேஸ்வர் பர்மான்காட்-ம.பி
தீர்த்தகிரீஸ்வரன் தீர்த்தமலை
தீர்த்தபாலீஸ்வரர் மயிலாப்பூர்
துயர்தீர்த்தநாதர் ஒமாம்புலியூர்
துளசீஸ்வரர் குளத்தூர்
துறைகாட்டும்வள்ளல் திருவிளநகர்
தேசநாதீசுவரர் கூத்தப்பாடி
தேவகுருநாதர் . தேவூர்
தேவநாதர் பெருமிழலை
தேவப்பிரியர் செம்பணார்கோவில்
தேவபுரீஸ்வரர் தேவூர்
தேவாரண்யேசுவரர் நன்னிலம்
தேனீசுவரர் வெள்ளலூர்
தேனுபுரீஸ்வரர் திருபட்டீச்சரம்#
தைலாப்பியங்கேசர் திருநீலக்குடி#
தோன்றத்துணைநாதர் திருப்பாதிரிப்புலியூர்#
நக்கீரரேஸ்வரர் வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில்
நக்கேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா
நகுலேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா
நச்சாடைதவிர்த்தருளியநாதர் தேவதானம்
நஞ்சுண்டேஸ்வரர் அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம்
நட்டாத்தீசுவரர் கொமராபாளயம்
நட்டாற்றீஸ்வரர் காங்கயம்பாளயம்#
நட்டூரமர்ந்தார் பரஞ்சேர்வழி
நடராசர் சிதம்பரம்#,ரவிபுதூர்
நடராஜசுவாமி நடனசாலை#
நடனபுரீஸ்வரர் தாண்டவந்தோட்டம்
நடுதறிநாதர் கோயில்கண்ணாப்பூர்
நடுதறியப்பர் கோயில்கண்ணாப்பூர்
நடேசுவரர் புதுச்சேரி
நந்தீசுவரர் திருநந்திக்கரை, காளிதெற்கு-கல்கத்தா
நரசிம்மஈசுவரர் தாமல், தியாகமுகச்சேரி
நரம்புநாதர் கருங்குளம்
நரேஸ்வரர் திருநறையூர்#
நல்லாண்டவர் மணப்பாறை
நவநீதேஸ்வரர் மேலப்பாதி, சிக்கல்#
நாகநாதசுவாமி காரைக்குடி, மணப்பாறை
நாகநாதர் அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்# ,திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, முகுந்தன்குடி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம்,
நாகலிங்கேசுவரர் முட்டம்
நாகேச்சுவரசுவாமி குன்றத்தூர்#
நாகேசுவரர் அணைக்கடவு, அலங்கியம், குடந்தைக்கீழ்க்கோட்டம்# ,திருநாகேச்சுவரம்# காவேரிப்பட்டிணம், கீழம்பாடி, சிகரமகனபள்ளி, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம், காளிதெற்கு-கல்கத்தா
நாகேசுவரன் நாகூர்/புன்னாகவனம்
நாமபுரீஸ்வரர் ஆலங்குடி
நாமாஸ்திகேசன் பேராளம்
நாரதீஸ்வரர் காஞ்சி,புத்தேரித்தெரு#
நாராயனேஸ்வர் நாராயணபுரம்-புனா
நாரிகேளேஸ்வரர் கும்பகோணம்#
நரேஸ்வரர் காளிதெற்கு,கல்கத்தா
நாலுவேதப்பதீசுவரர் பெருங்கடம்பனூர்
நித்யவினோதஈசுவரர் எடுத்துக்காட்டிசாத்தனூர்
நிர்ஜரேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா
நிருதீசுவரர் சிங்கலாந்தபுரம்
நிலையிட்டநாதர் மாகறல்#
நீதீசுவரர் பெரியநெகமம்
நீலகண்டமகாதேவர் பத்மநாபபுரம்
நீலகண்டேசுவரர் இருகூர், மன்னார்குடி, வெங்கரை, திருபைஞ்சிலி# , தளவாய்பட்டிணம், திருநீலக்குடி#,பூரி
நீலாசலநாதர் இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை
நீவதான்யேசுவரர் வள்ளலார்கோயில்#
நூற்றெட்டீசுவரர் பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு#
நெய்வேலிநாதர் நெய்வட்டலி
நெல்லி நாதேஸ்வரர் திருநெல்லிக்கா
நெல்லி வனநாதர் திருநெல்லிக்கா
நெல்லையப்பர் பதுமனேரி
நேத்திரார்ப்பணேசுவரர் திருவீழிமழழை
நேத்ரபுரீசுவரர் கிருஷ்ணராயபுரம்# திருக்கண்ணார்கோவில்
பக்தபுரீசுவரர் பாண்டிச்சேரி, வேதபுரி, அகஸ்தீசுவரம், புதுச்சேரி
பக்தவத்சலர் வாழைப்பந்தல்
பக்தவத்சலேஸ்வரர் திருக்கழுக்குன்றம்
பசவேசுவரர் மேடுகம்பள்ளி, ஆவல்நத்தம்# , பேரிகை, ஜங்கலகடைராம்பட்டி
பசுபதி கரூர்#
பசுபதிநாதர் கரூர்#
பசுபதீஸ்வரர் ஆவூர்பசுபதீச்சுரம், திருத்துறையூர்#, திருநல்லாவூர், கொங்கூர், வரஞ்சரம்
பதரிநாதர் பிரம்மதேசம்.அயனீஸ்வரம்
பாபுல்நாத் பபுல்நாத்-மும்பை
பஞ்சலிங்கேசுவரர் வெள்ளலூர்
பஞ்சலிங்கேஸ்வரர் ஒசூர், வெள்ளியங்கிரி#
பஞ்சவடீஸ்வரர் ஆனந்ததாண்டவபுரம்
பஞ்சவர்ணேஸ்வரர் திருநல்லூர்
பஞ்சாட்சரநாதர் கூகையூர்
பட்சீஸ்வரர் மாமண்டூர்,வந்தவாசி-எறும்பூர்
பட்டீச்சுவரர் திருபட்டீச்சரம்#
பட்டீஸ்வரர் பேரூர்#
படம்பக்கநாதர் திருவெற்றியூர்#
படவலிங்கேஸ்வரர் ஹம்பி
படிக்காசளிநாதர் அரிசிக்கரைபுத்தூர்#
பதங்கீஸ்வரர் பாலூர்
பதஞ்சலிநாதர் திருக்கானாட்டுமுள்ளூர்
பத்ராஸ்வன் அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி
பத்திரிக்காபரமேஸ்வரர் திருஏடகம்
பத்மகிரீஈஸ்வரர் திண்டுக்கல்#
பரசுநாதர் முழையூர்
பரசுராமேஸ்வரம் பள்ளூர்
பரத்வாஜேஸ்வர் கோடம்பாக்கம்
பரமேசுவரர் அரசூர், சங்கராண்டாம்பாளையம், குனியமுத்தூர், பரமத்தி, பனங்குடி, பாலக்கோடு
பரமேசுவரன் பஞ்சமாதேவி
பர்வதகிரீசுவரர் குண்றாண்டார்கோவில்
பராய்துறைநாதர் திருப்பாராய்துறை#
பரிதீஸ்வரர் காஞ்சி-பஞ்சுபேட்டை#
பரிந்துகாத்தவர் மாகறல்#
பலபத்திரராமேஸ்வரர். காஞ்சி.திருமேற்றளிதெரு#
பலாசவனநாதர் நாலூர்#
பவநாசர் பவநாசம்
பவானிநாதர் முத்தலாபுரம்
பவானிவல்லபன் பேராளம்
பவிஷ்யேசுவரர் திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம்
பழம்பதிநாதர் அன்னவாசல் திருப்புனவாயில்#,
பழமறைநாயகர் பவநாசம்
பளிங்கீஸ்வரர் வெள்ளித்திருப்பூர்
பண்ணிசைச் சொக்கன் பரமக்குடி
பன்னாகவனநாதர் . திருப்புகலூர்
பனேஸ்வரசுவாமி பனேஸ்வர்-புனா
பாகண்டேஸ்வரர் பாகமண்டல்(தலைக்காவேரி)
பாகம்பிரியாதான் அவல்பூந்துறை#
பாகிருதீசுவரர் பழங்கோயில்
பாசுபதநாதர் திருவிக்குளம்
பாசுபதேஸ்வரர் திருவிக்குளம்
பாடலேசவரர் திருப்பாதிரிப்புலியூர்#
பாண்டவேசுவரர் திருஅன்னியூர்
பாண்டீசுவரர் . மதுராந்தகம்
பாண்டுவனேஸ்வரர் தேவபாண்டலம்
பாணபுரீஸ்வரர் கும்பகோணம்#
பாணேசுவரர் பாணாவரம், பேளூர்-கல்கத்தா
பாதாளஈசுவரர் வாகைக்குளம்,பூரி
பாம்பீசர் திருப்பாம்புரம்
பாம்புரநாதர் திருப்பாம்புரம்
பாம்புரீஸ்வரர் திருப்பாம்புரம்
பாம்புரேசர் திருப்பாம்புரம்
பார்க்கபுரீஸ்வரர் அச்சிறுபாக்கம்#
பார்க்கவேஸ்வரர் மாங்காடு#
பாரத்தழும்பர் மாகறல்#
பார்வதீசுவரர் இஞ்சிக்குடி, அம்பகரத்தூர்
பாரிஜாதவனாதீசர் திருப்பாச்சேத்தி
பால்வண்ணநாதர் திருவாண்மியூர்#
பால்வண்ணநாதேஸ்வரர் திருக்கழிப்பாலை
பால்வெண்ணீஸ்வரர் பட்டாலியூர்
பாலேசுவரஸ்வாமி. திருத்தழையூர்
பாலைவனநாதர் திருப்பாலத்துறை
பாலைவனேஸ்வரர் திருப்பாலத்துறை
பாஸ்கரபுரீஸ்வரர் திருச்செங்காட்டாங்குடி
பிச்சாலீஸ்வரர் ஆரணி
பிரகதீசுவரர் கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர்
பிரகாசநாதர் நன்னிலம்
பிரசன்னசூடநாதர் பாகலூர்
பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் எடப்பாடி
பிரணவபுரீஸ்வரர் ஒமாம்புலியூர்
பிரணவவியாக்ரபுரீஸ்வரர் ஒமாம்புலியூர்
பிரணவேஸ்வரர் பேனுபெருந்துறை
பிரமநாயகர் திருநீலக்குடி#
பிரமபுரீசர் திருவெண்டுறை
பிரம்மபுரீச்சுவரர் திரிசூலம்
பிரம்மபுரீசுவரர் அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி ,சிவபுரம், திருப்பாச்சிலாச்சிராமம்#, போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில்
பிரமரேஸ்வரர் திருவெண்டுறை
பிரமாண்டேஸ்வரர் திருஇடைச்சுரம்#
பிரளயகாலேசுவரர் உத்திரகோசமங்கை#
பிரளயநாதர் சோழவந்தான்
பிரளயவிடங்கர் திருசுழியல்,, கானூர்
பிருகுநாதர் குடவாயில்#
பீமேசர் ஒசூர்-ராம்நகர்
பீமேசுவரர் இலுப்பூர், ஓமந்தூர், பூமாந்தஹள்ளி, நிலகுண்டா(கர்நாடகா)
பீரமபுரீஸ்வரர் ஏனாநல்லூர்
புத்திரதியாகர் திருவாவடுதுறை
புத்ரகாமேஷ்டீசுவரர் ஆரணி
புரந்தீசுவரர் காக்காவேரி
புராதனேஸ்வரர் திருவியலூர்
புலீஸ்வரர் மேலச்செல்வனூர்
புலேஸ்வரஸ்வாமி புலேஸ்வர்-புனா
புவனேசுவரர் பொன்பேத்தி, திருசுழியல்
புற்றிடங்கொண்டார் திருவெற்றியூர்#, மாகறல்#
புற்றிடங்கொண்டீசுவரர் ஒத்தக்கால்மண்டபம்
புன்னாகபரமேஸ்வரர் பன்னத்தெரு
புன்னாகேசுவரர் புன்னாகவனம், மூவலூர்#
புன்னைவனநாதர் திருவேட்டக்குடி
புனுகீசுவரர் கூறைநாடு, மயிலாடுதுறை
புஷ்பகிரீஸ்வரர் பம்மல்
புஷ்பரதஈஸ்வரர் ஞாயிறு#
புஷ்பவனநாதர் அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர்
புஷ்பவனேஸ்வரர் அரிகேசவநல்லூர்
பூகைலேசுவரர் திருவாவடுதுறை
பூதலிங்கசாமி பூதபாண்டி
பூதேஸ்வரர் திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா
பூமீசுவரர் மரக்காணம், திருசுழியல், திருநல்லம்
பூமிநாதர் திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர்
பூமேசுவரர் ஆளப்பிறந்தான்
பூலோககைலாசநாதர் கழுக்காணிமுட்டம்
பூவனநாதர் கோவில்பட்டி#
பூவேந்தியநாதர் கோயில்மாரியூர்#
பெரியாண்டவர் திருநிலை(செங்கல்பட்டு)
பெரியஉடையார் மானூர்#
பெரியண்ணன் கொள்ளிமலைசிகரம்
பெரியாண்டேஸ்வரர் திருநல்லூர்
பெருங்கேடிலியப்பர் அவிநாசி#
பெருவயல்நாதர் பெருவயல்
பெருவிலாசொக்கநாதர் கீழ்ப்புத்தேரி
பெருவுடையார் கங்கைகொண்டசோழபுரம்
பென்னம்பலநாதர் சிலாத்தூர்
பைரவநாதர் மேலப்புத்தூர்
பைரவேசுவரர் வலங்காமுடி
பொன் வைத்தநாதர் திருசிற்றேமம்
பொன்பரப்பியஈசுவரமுடையார் கூகையூர்
பொன்மலைநாதர் தேவிகாபுரம்
பொன்லிங்கேஸ்வரர் பொன்நகர்
பொன்வசிநாதர் இலுப்பூர்
பொன்வளர்ச்சிநாதர் இலுப்பூர்
பொன்னீஸ்வரர் அகரம்
போதியம்பலவாணர் திருவாவடுதுறை
போற்றீசுவரர் போத்தனூர்
போஜேஸ்வர் போஜ்பூர்(ம.பி)
மகம்வாழ்வித்தவர் மாகறல்#
மகாகாளநாதர் கீழ்மாங்குடி
மகாகாளேஸ்வரர் உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,#
மகாதாண்டவேசுவரர் திருவாவடுதுறை
மகாதேவர் அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,, திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, பறக்கை, நெரிஞ்சிப்பேட்டை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர்
மகாதேவன் இறச்சகுளம்
மகாபலேஸ்வரர் நாகம்பள்ளி
மகாலட்சுமீசர் திருநின்றியூர்
மகாலிங்கேசுவரர் தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல்
மகாளேஸ்வரர் திருஇரும்பைமாகாளம்#
மஹாருத்ராக்ஷவர் பழையமஹாபலேஸ்வர்-புனா
மஹாகாளேஸ்வரர் டார்ஜிலிங்
மகிமாலீஸ்வரர் ஈரோடு#
மகிழவனநாதர் பெருந்தலையூர்
மகிழவனேசுவரர் கோகர்ணம்#
மகிழீசர் பெருந்தலையூர்
மகுடேஸ்வரர் திருபாண்டிக்கொடுமுடி#
மகேந்திரகிரிநாதர் திருகுறுங்குடி
மகேஷ்மூர்த்தி எலிபெண்டா-மும்பை
மங்கலங்காத்தவர் மாகறல்#
மங்கலநக்கர் திருவேள்விக்குடி
மங்களநாதர் சிறுகுடி
மங்களபுரீஸ்வரர் திருச்சோபுரம்
மங்களேசுவரர் உத்திரகோசமங்கை#
மச்சேஸ்வரர் காஞ்சி
மணக்கோலநாதர் திருசுழியல்
மண்ணீசுவரர் மணவாரனபள்ளி
மணத்துணைநாதர் வலிவலம்
மணவாளநம்பி திருவேள்விக்குடி
மண்வாளநாதர் நெடுங்களம்
மணவாளேஸ்வரர் திருவேள்விக்குடி
மணிகண்டேசுவரர் கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர், காஞ்சிதிருகச்சிநம்பிதெரு##
மத்யபுரீஸ்வரர் மணவாசி, பரஞ்சேர்வழி
மத்யார்ஜுனர் இலுப்பூர்
மத்யார்ஜுனேசுவரர் பெருங்கடம்பனூர், ராஜேந்திரம், பட்டவாய்த்தலை
மதயானேஸ்வரர் எதிர்கொள்பாடி
மதுவனேஸ்வரர் திருவெண்டுறை
மந்தரவனேஸ்வரர் திலைப்பதி
மந்திரநாதர் திருப்பாலைக்குடி
மந்திரபுரீஸ்வரர் . திருச்செங்காட்டாங்குடி
மந்தேஸ்வரர் மண்டபள்ளி(ஆந்திரா)
மயூரநாதர் மயிலாடுதுறை#, பெத்தவநல்லூர்
மரகதநாதர் திருஈங்கோய்மலை#
மரகதாசலேசுவரர் திருஈங்கோய்மலை#
மரகதீசுவரர் பச்சைமலை# , புன்னம்
மருங்கீசர் திருந்துதேவன்குடி
மருத்துவலிங்கம் பவானி#
மருதவனேஸ்வரர் திருவிடைமருதூர்#
மருதவாணர் திருவிடைமருதூர்#, ராஜேந்திரம்
மருந்தீசர் திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி
மல்லாண்டேசுவரர் நத்தம்
மல்லிகார்ஜுனசுவாமி பர்வதமலை
மல்லிகார்ஜுனர் கீரனூர், தர்மபுரி-தகடூர்#
மல்லிகார்ஜுனேசுவரர் வடியம்
மல்லிகேஸ்வரர் வடசென்னை#
மல்லீசுவரர் திருமழவாடி மயிலாப்பூர், ரங்கமலை
மல்லேசுவரர் நாரல்பள்ளி
மலைக்கொழுந்தீசுவரர் செங்கிரை, மலைக்கோயில்/பழனி# , திருபாண்டிக்கொடுமுடி#
மலைமருந்தீஸர் ஏரியூர்
மழவுடையார் மடிப்பாக்கம்
மன்மதபரமேஸ்வரர் வரதம்பட்டு
மன்மதீசுவரர் குத்தாலம்#
மன்னீசுவரர் அன்னூர்
மனோக்ஞநாதசுவாமி திருநீலக்குடி#
மனோன்மணீசுவரர் விஜயநாராயணம்
மாகாளநாதர் திருஇரும்பைமாகாளம்#
மாகாளமுடையார் திருஇரும்பைமாகாளம்#
மாகாளேஸ்வரர் அம்பர்மாகாளம்
மாசிலாமணிநாதர் திருவாவடுதுறை
மாசிலாமணீசுவரர் தரங்கம்பாடி, திருவாவடுதுறை
மாணிக்கஈசர் ஐயர்மலை#, தாதாபுரம்
மாணிக்கவண்ணர் திருமருகல்
மாணிக்கவரதர் திருமாணிக்குழி#
மாத்ருபூதேசுவரர் சித்தன்னவாசல்
மாதவிவனேஸ்வரர் திருக்கருகாவூர்#
மாதீசுவரர் நன்னகலமங்கலம்
மாதேசுவரர் குந்தகம்
மாந்தீசுவரர் மாம்பாடி, வள்ளிஇரைச்சல்
மாமுண்டி மணப்பாறை
மாயபாண்டீசுவரர் மேல்மங்கலம்
மார்க்கசகாயேசுவரர் புன்னாகவனம், மூவலூர்#
மார்கண்டேஸ்வர் பூரி
மாற்றறிவரதர் திருப்பாச்சிலாச்சிராமம்#
மான்பூண்டிசுவாமி மணப்பாறை
மானேந்தியப்பர் கல்லிடைகுறிச்சி
மிருகண்டீசுவரர் திருமாந்துறை#,திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில்
மிழழையீசுவரர் மொழையூர்
மிஷ்கலங்கமகாதேவர் பாவ்நகர்-கோலியாக் கடற்கரை
முக்கீஸ்வரர் உப்புவேலூர்
முக்தபுரீஸ்வரர் . திருபயத்தங்குடி
முக்தியாசர் திருவாவடுதுறை
முக்தீஸ்வர் திலைப்பதி, மதுரை,ஐராவதநல்லூர், மேலப்பாதி, பேரையூர், புவனேஷ்வர்-ஒரிஸா
முகம்மலர்ந்தநாதர் பிடாரியூர்
முடித்தழும்பர் ஐயர்மலை#
முத்தீச்சுவரர் மதுரை,ஐராவதநல்லூர், ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி
முத்துராமலிங்கசுவாமி இராமநாதபுரம்
முப்புராரீஸ்வரர் காஞ்சி,புத்தேரி#
முயற்சிநாதர் திருமீயச்சூர்
முருகநாதசுவாமி திருமுருகன்பூண்டி#
முருகநாதேஸ்வரர் திருமுருகன்பூண்டி#
முல்லைக்கானமுடையார் அச்சிறுபாக்கம்#
முல்லைவனநாதர் திருக்கருகாவூர்#
முனிமுக்தீஸ்வரர் சின்னதாராபுரம்
மூலதானத்துபரமேஸ்வரர் பெரம்பலூர்
மூலநாதசுவாமி பாகூர்
மூலிகைவனேஸ்வரர் திருந்துதேவன்குடி
மூவேந்தரீசுவரர் நசியனூர்
மெய்ப்பொருள்நாதசுவாமி கோவிலூர்,
மெய்ப்பொருள்நாதர் மொடக்கூர்
மேகநாதர் திருமீயச்சூர்
மொக்கணீசுவரர் கூளேகவுண்டன்புதூர்
யக்னேஸ்வரர் காளிதெற்கு-கல்கத்தா
யக்ஞோபவிதேசுவரர் கும்பகோணம்
யமேஸ்வர் பூரி
யாழ்முரிநாதர் தருமபுரம்
யோகேஸ்வரர் காளிவடக்குகல்கத்தா
யோகவனேஸ்வரர் திருப்பழுவூர்
யோகானந்தீஸ்வரர் திருவியலூர்
ரத்னகிரீஸ்வரர் திருமருகல், முத்தரசநல்லூர்
ரத்னகீரீசர் ஐயர்மலை#
ரதீசுவரர் திருஅன்னியூர்
ரவினேஷ்வர்சிவா தியோகர்(ராஞ்சி)
ரவீசுவரர் வாங்கல்
ரஜதகீரிஸ்வரர் திருத்தெங்கூர்
ராகவேசுவரர் தெரிசனம்கோப்பு
ராமநாதசுவாமி திருநறையூர்#
ராமநாதர் திருராமேஸ்வரம்
ராமநாதஸ்வாமி பெரியகாஞ்சி,#
ராமலிங்கசுவாமி ஜடாயுபுரம், பாபநாசம்#
ராமலிங்கர் செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம்
ராமலிங்கேஸ்வரர் அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை, கோவை,ராஜவீதி.#,
ராஜராஜேசுவரர் கருவாழக்கரை
ராஜேந்திரசோழீசுவரர் அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம்
ராஜேஸ்வர்மஹாதேவ் பரலி.கந்திபூர்.சரஸ்வதிநதி-ஒளரங்காபாத்
ரிண்முக்தேஸ்வர் குக்கர்ராம்ட்-ம.பி
ரிஷபுரீசுவரர் மேலச்சேவூர்
ரிஷிபுரீஸ்வரர் திருவிடைமருதூர்
ரிஷிபுரேசர் ஆப்புடையார்கோவில்
ருத்ரகோடீஸ்வரர் திருக்கழுக்குன்றம்
லட்சுமிவரதசுந்தரேஸ்வரர் திருப்பாச்சேத்தி
லவபுரீஸ்வரர் விளாங்காடுபாக்கம்
லஷ்மிபுரீஸ்வரர் திருநின்றியூர்
லிங்கராஜ் புவனேஷ்வர்-ஒரிஸா
லிங்கேஸ்வரர் மைலாரா(கர்நாடகா)
லிங்கநாதபரமேஸ்வரர் சூரிச்,சுவிட்சர்லாந்து
லிகுசாரண்யேஸ்வரர் திருஅன்னியூர்
லோக்நாத் புவனேஷ்வர்
லோகனாதர் பூரி
வடமூலேஸ்வரர் திருப்பழுவூர்
வடவாரண்யேசுவரர் திருவாலங்காடு.#
வடஜம்புநாதர் சுனைக்கோவில்#
வடுகநாதர் ஆண்டார்கோயில்#
வடுகீஸ்வரர் ஆண்டார்கோயில்#
வடுகூர்நாதர் ஆண்டார்கோயில்#
வந்தருளீசுவரர் அமராவதிபுதூர்
வம்சோத் தாரகஈசுவரர் பெருங்களுர்
வரகிரீசுவரர் மொடக்குறிச்சி
வரகுணபாண்டீசுவரர் ராதாபுரம்/ராஜராஜபுரம்
வர்த்தமானேஸ்வரர் . திருப்புகலூர். வர்த்தமானீச்சரம்
வரமூர்த்தீஸ்வரர் அரியதுறை
வராகமுக்தீசுவர் திருப்பன்றிக்கோடு
வருணீஸ்வரர் அரூர்
வழிகாட்டும்வள்ளல் புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்#
வளர்மதீசுவரர் நீர்ப்பழனி
வன்னீசுவரர் கடலாடி,வன்னியூர்
வன்னீஸ்வரர் அரூர்
வான்மீகநாதர் திருப்பாச்சேத்தி
வஜ்ரபாணீசுவர் ஒருவந்தூர்
வஸ்ததம்பபுரீஸ்வரர் கோயில்கண்ணாப்பூர்
வாக்குவள்ளல் பெருஞ்சேரி
வாகீசமகாதேவர் கொளப்பாக்கம்
வாகீசுவரமுடையார் மலையடிப்பட்டி
வாகீசுவரர் பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர்
வாகீஸ்வரசுவாமி பெருஞ்சேரி/தருகாவனம்
வாராகீஸ்வரர் தாமல்
வாஞ்சிலிங்கேஸ்வரர் ஸ்ரீவாஞ்சியம்
வாஞ்சிநாதேஸ்வரர் . ஸ்ரீவாஞ்சியம்
வாதபுரீஸ்வரர் திருவாதாவூர்
வாமனபுரீஸ்வரர் திருமாணிக்குழி#
வாய்மூர்நாதர் திருவாய்மூர்
வாழவந்தீசர் பருத்திபட்டு
வாலவனேஸ்வரர் இளங்ககாடு
வாலீசுவரர் சேவூர், ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, திருமாநிலையூர், மயிலாப்பூர்
வான் மீகாசலேசர் குடவாயில்#
வானதீஸ்வரர் வாணகரம்#
வான்மீகநாதர் ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்#
விக்ரமசோழீசுவரர் சுரைக்காயூர், பெருஞ்சேரி
விக்ரமபாண்டீசர் சோழபுரம், வீரவநல்லூர்
விகிர்தநாதேஸ்வரர் வெஞ்சமாக்கூடல்#
விசவநாதர் அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை
விசுவாமித்ரமகாலிங்கசுவாமி விஜயாபதி
விசுவேசர் கும்பகோணம்#
விடங்கீசர் குண்டடம்
விஜயவிடேங்கேசுவரர் இளங்காடு
வித்தகவாதீசுவரர் விளக்கேத்தி
வியாக்ரபுரீஸ்வரர் திருவேங்கைவாசல், புலியூர், ராவத்தநல்லூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம்
விரிஞ்சீசுவரர் எண்கண்#
விருத்தபுரீசுவரர் அன்னவாசல், திருப்புனவாயில்#,
விருந்திட்டஈஸ்வரர் திருக்கச்சூர்#
விருந்திட்டவரதர் திருக்கச்சூர்#
விருந்தீஸ்வரர் வடமதுரை
விருப்பாட்சிநாதர் நரிக்குடி
விருப்பாட்சீவரர் கீழமங்கலம்
விருபாஷர் பாகலி(கர்நாடகா)
விருபாஷீஸ்வரர் மயிலாப்பூர்
வில்லீஸ்வரர் இடிகரை
வில்வவனநாதர் மஞ்சக்குடி
வில்வவனேஸ்வரர் திருக்கடையூர்#
வில்வாரண்யேசுவரர் கடயம், திருநீலக்குடி#, திருவியலூர்,
விழியழகீசர் திருவீழிமழழை
விஸ்வநாதர் ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம்
விஷ்ணுலிங்கேஸ்வரர் பாகலி(கர்நாடகா)
விஷமங்களேஸ்வரர் பெரம்பலூர்
வீரகேசுவரர் பட்டணம்
வீரசம்புகேசுவரர் ஆத்துவம்பாடி
வீரசேகரசுவாமி சாக்கோட்டை
வீரட்டநாதர் திருவதிகை#
வீரட்டானேஸ்வரர் திருவிற்குடி
வீரட்டேசர் வழுவூர், திருப்பறியலூர், திருவதிகை#, கீழ்படப்பை
வீரபத்திரர் நாமகிரிப்பேட்டை
வீரபாண்டீஸ்வரர் மூக்கணாங்குறிச்சி
வீரமார்த்தாண்டேசுவரர் அம்பாசமுத்திரம்
வெண்காட்டீசர் மதுராந்தகம்
வெண்டுறைநாதர் . திருவெண்டுறை
வெண்ணெய்நாதர் சிக்கல்#
வெண்ணெய்ப்பிரான் சிக்கல்#
வெள்ளந்தாங்கீசுவரர் கண்டபாளயம்
வெள்ளிமலைநாதர் திருத்தெங்கூர்
வெள்ளியங்கிரிஆண்டவர் பூண்டி#
வெள்ளியங்கிரிநாதர் வெள்ளியங்கிரி#
வெள்ளீஸ்வரர் மயிலாப்பூர்,மாங்காடு#
வேங்கீஸ்வரர் வடபழனி#
வேங்கைநாதன் திருவேங்கைவாசல்
வேடரூபர் திருவேட்டக்குடி
வேதகிரீஸ்வரர் ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம்
வேதபுரீசுவரர் ஆரணி, பாண்டிச்சேரி, வேதபுரி, அகஸ்தீசுவரம், புதுச்சேரி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், விரிஞ்சையூர்
வேதேஸ்வரர் திருநறையூர்#
வேழுபுரீச்சுவரர் அம்பாசமுத்திரம்
வேள்வீஸ்வரர் வளசரவாக்கம்#
வேற்காட்டீசர் திருவேற்காடு#
வேணீஸ்வர் மகாதேவ் சோம்நாத்
வைகல்நாதர் வைகல்மாடக்கோயில்
வைத்தியநாதர் பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு
வைத்தீஸ்வரன் பூந்தமல்லி#
வில்வேஸ்வர் பூரி
ஜ்வாலேஷ்வர் ஜோஹிலாநதி-ம.பி
ஜகதீசவரர் மணல்மேல்குடி காளிதெற்கு-கல்கத்தா
ஜட்லீஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா
ஜட்னேஸ்வரர் காளிவடக்கு,கல்கத்தா
ஜடாயுபுரீஸ்வரீர் திருமலைராயன்பட்டினம்
ஜடாசங்கர் பஞ்ச்மடி.மஹாதேவ்மலை (ம.பி)
ஜடாதீஸ்வரர் தளியல் (திருவட்டாறு)
ஜடேசுவரர் பரமத்தி
ஜமதக்னீஸ்வரர் உடையவர்தீயனூர்
ஜம்புகேஸ்வரர் நார்த்தாமலை,செம்பாக்கம்
ஜம்புநாதேசுவரர் கழுகுமலை,கீழசேவூர்
ஜலகண்டேஸ்வரர் காவேரிபுரம்
ஜலநாதேஸ்வரர் திருமாற்பேறு#,
ஜலேஸ்வரர் காளிதெற்குகல்கத்தா
ஜனகபுரீஸ்வரர் தென்கரை
ஜெகதீஸ்வரர் பர்கூர்
ஜெகந்நாதர் திருவெற்றியூர்#
ஜெய்மல்ஹர் ஜெஜூரி-புனா
ஜெயங்கொண்டநாதஈசுவரர் பாச்சல்
ஜெயந்தீசுவரன் அழகியபாண்டியபுரம், தாழகுடி, வள்ளியூர்
ஜெயம்கொண்டசோழீஸ்வரர் மன்னார்குடி/வியாசர்புரம்
ஜெயம்கொண்டநாதர் மன்னார்குடி/வியாசர்புரம்
ஜெயம்கொண்டீஸ்வரர் நத்தக்காடையூர்
ஷம்புலிங்கேஸ்வரர் குந்கோல்(ஹூப்ளி)
ஸ்தம்பேஸ்வரர் வந்தவாசி-சீயமங்கலம்
ஸ்திரவாசபுரீஸ்வரர் அச்சிறுபாக்கம்#
ஸ்வேதாரண்யேசுவரர் மதுராந்தகம்
ஹரேஸ்வர்ஷிகா தெஹூ-பூனா
ஹேமவிருத்தீசுவரர் இலுப்பூர்
ஸ்ரீகாரனேஸ்வரர் புதுகுப்பம்
$$$$$
ஓம்நமசிவய!
ஒண்பதக் கழலாய் போற்றி ஒளிர்ஞானக் களிறே போற்றி போற்றி
ஓங்கார வடிவே போற்றி ஓதுவார் மனத்தாய் போற்றி
ஓங்குமோர் எழிலாய் போற்றி ஓங்குபேர் அருளாய் போற்றி
ஓமெனும் பொருளே போற்றி ஓடோடி வருவாய் போற்றி
108-அஸ்டோதரா நாமங்கள்!
ஓம் அநகாய நமக!
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமக!
ஓம் அநீச்வராய நமக!
ஓம் அநேகாத்மநே நமக!
ஓம் அபவர்க்கப்ரதாய நமக!
ஓம் அம்பிகா நாதாய நமக!
ஓம் அவ்யக்தாய நமக!
ஓம் அவ்யக்ராய நமக!
ஓம் அவ்யயாயே நமக!
ஓம் அனந்தாய நமக!
ஓம் அஜாய நமக!
ஓம் அஷ்டமூர்த்தயே நமக!
ஓம் அஹிர்புத்ன்யாய நமக!
ஓம் உக்ராய நமக!
ஓம் கங்காதராய நமக!
ஓம் கட்வாங்கிநே நமக!
ஓம் கடோராய நமக!
ஓம் கண்டபரசவே நமக!
ஓம் கணநாதாய நமக!
ஓம் கபர்தினே நமக!
ஓம் கபாலிநே நமக!
ஓம் க்ருத்தி வாஸஸே நமக!
ஓம் க்ருபாநிதயே நமக!
ஓம் கவசிநே நமக!
ஓம் காமாரயே நமக!
ஓம் காலகாலாய நமக!
ஓம் கிரிசாய நமக!
ஓம் கிரிதன்வநே நமக!
ஓம் கிரிப்ரியா நமக!
ஓம் கிரீசாய நமக!
ஓம் கைலாஸவாஸிநெ நமக!
ஓம் சங்கராய நமக!
ஓம் சசிசேகராய நமக!
ஓம் சதிகண்டாய நமக!
ஓம் சம்பவே நமக!
ஓம் சர்வாய நமக!
ஓம் சாத்வதாய நமக!
ஓம் சாருவி க்ரமாய நமக!
ஓம் சிபி விஷ்டாய நமக!
ஓம் சிவாப்ரியாய நமக!
ஓம் சிவாய நமக!
ஓம் சுத்த விக்ரஹாய நமக!
ஓம் சூலபாணயெ நமக!
ஓம் தக்ஷாத்வரஹராய நமக!
ஓம் த்ரயீமூர்த்தயே நமக!
ஓம் தாரகாய நமக!
ஓம் திகம்பராய நமக!
ஓம் திரிபுராந்தகாய நமக!
ஓம் திரிலோககேசாய நமக!
ஓம் துர்தர்ஷாய நமக!
ஓம் தேவாய நமக!
ஓம் நீலலோஹிதாய நமக!
ஓம் பக்தவத்ஸலாய நமக!
ஓம் பகதேத்ரபிதே நமக!
ஓம் பகவதே நமக!
ஓம் பசுபதேயே நமக!
ஓம் பஞ்சவக்த்ராய நமக!
ஓம் பர்க்காய நமக!
ஓம் பரசுஹஸ்தாய நமக!
ஓம் ப்ரமதாதியாய நமக!
ஓம் பரமாத்மநே நமக!
ஓம் பரமேச்வராய நமக!
ஓம் ப்ரஜாபதயே நமக!
ஓம் பவாய நமக!
ஓம் பஸ்மோத்தூவித விக்ரஹாய நமக!
ஓம் பஷதந்தபிதே நமக!
ஓம் பாசவிமோசகாய நமக!
ஓம் பினாகிநே நமக!
ஓம் பீமாய நமக!
ஓம் புராராதயே நமக!
ஓம் புஜங்க பூஷனாய நமக!
ஓம் பூதபூதயே நமக!
ஓம் ம்ருகபாணயே நமக!
ஓம் ம்ருடாய நமக!
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமக!
ஓம் மஹா ஸேந ஐநகாய நமக!
ஓம் மஹாதேவாய நமக!
ஓம் மஹேச்வராய நமக!
ஓம் யக்ஞ மாயாய நமக!
ஓம் ருத்ராய நமக!
ஓம் லலாடாக்ஷாய நமக!
ஓம் வ்யோமகேசாய நமக!
ஓம் வ்ருஷபாரூடாய நமக!
ஓம் வ்ருஷாங்காய நமக!
ஓம் வாமதேவாய நமக!
ஓம் விச்வேச்வராய நமக!
ஓம் விருபாக்ஷாய நமக!
ஓம் விஷ்னுவல்லாபாய நமக!
ஓம் வீரபத்ராய நமக!
ஓம் ஜகத் குரவே நமக!
ஓம் ஜகத்வ்யாபினே நமக!
ஓம் ஜடாதராய நமக!
ஓம் ஸதாசிவாய நமக!
ஓம் ஸ்தாணவே நமக!
ஓம் ஸர்வஜ்ஞாய நமக!
ஓம் ஸ்ரீகண்டாய நமக!
ஓம் ஸ்வரமயாய நமக!
ஓம் ஸஹஸ்ரபதே நமக!
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நமக!
ஓம் ஸாத்விகாய நமக!
ஸாமப்ரியாய நமக!
ஓம் ஸூக்ஷ்மதனவே நமக!
ஓம் ஸேரமஸூர்யாக்நி லோசனாய நமக!
ஓம் ஸோமாய நமக!
ஓம் ஹரயே நமக!
ஓம் ஹராயே நமக!
ஓம் ஹவிஷே நமக!
ஓம் ஹிரண்ய ரேதஸே நமக!
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.