gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சிவம் (29)

Children categories

சிவ நாமங்கள்-தலங்கள்! (13)

சிவ நாமங்கள்-தலங்கள்!

View items...
வெள்ளிக்கிழமை, 12 April 2019 10:22

சிவ தாண்டவங்கள்!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வானவ பகர்முன்னவாம் பரமே போற்றி!

#*#*#*#*#

சிவ தாண்டவங்கள்!

சிவனின் தாண்டவத்தால்தான் இந்த உலகம் இயங்குகின்றது. அவரின் ஒவ்வொரு அசைவும் அண்டத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்யவே. பல தலங்களில் ஆடவல்லான் பல வகையான ஆடல்களை நிகழ்த்தியிருக்கின்றார். எம்பெருமான் இறைவன் 108 தாண்டவ பேதங்களை ஆடியுள்ளார் என பரத நாட்டியத்தை உலகுக்கு அளித்த பரத முனிவர் கூறியுள்ளார். அவையே கர்ணங்கள் என அழைக்கப்படுகின்றன.

தன் ஆடலின் மூலமாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து வகைச் செயல்களை செய்து அதாவது நடனம் ஆடி நம்மை ஆட்டுவிக்கின்றார். சிவனின் ஆடல்களில் சிறந்ததாகப் போற்றப்படுவது எட்டு வகையான தாண்டவங்களே!

இதில் முதல் ஏழு தாண்டவங்களும் ஸப்த ஸ்வரங்களை உலகிற்கு அளித்தன. ஆடத் தொடங்குமுன் ஆரோஹணமும் ஆடி முடிக்கையில் அவரோஹணமும் ஆக ஸ ரி க ம ப த நி என்ற ஏழு சுரங்களும் உலகிற்கு கிடைத்துள்ளது.

காளிகா தாண்டவம்!

அன்னை சிவகாமி காளியாக கோபம் கொண்டு இருக்கும்போது அந்த கோபத்தை தணித்து தானும் அவளும் வேறு வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த ஆடிய தாண்டவம் காளிகா தாண்டவம் எனப்படும். இந்த தாண்டவக் கோலத்தில் இறைவன் எட்டுக் கரங்களில் உடுக்கை, மணி, அக்ணி ஆகிய வற்றை வலது கரங்களிலும், இடது கையில் அபய ஹஸ்தம் கஜ ஹஸ்தமும் காட்டிய கோலத்தில் காட்சி. திருநெல்வேலி தாமிர சபையில் இந்த வகை நாட்டியத்தைக் காணலாம்.

இந்த கோலத்தில் இறைவனைத் தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி வாழ்வில் இன்பம் மலரும். கடன் தொல்லை, தாழ்வு மனப்பான்மை நீங்கும்.


சந்தியா தாண்டவம்!

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப்பட உலக நன்மையை முன்னிட்டு சிவபெருமான் அதனை அருந்தினார். விஷத்தின் வீர்யத்தால் அவர் மயங்கி பார்வதியின் மடியில் சாய்ந்த அந்த சில நிமிஷங்கள் பூமியின் இயக்கம் நின்றது. உலக உயிர்களுக்கு மூச்சுக் காற்று கூட கிடைப்பதில் சிரமம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமான் மயக்கம் தீர்ந்து எழுந்திருக்க மனமுறுகி வேண்டினர். சிறிது நேரத்தில் பெருமான் மயக்கம் தீர்ந்து கண்விழித்ததைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர். அந்த ஆனந்தத்தில் பெருமானை ஆனந்த நடனம் ஆட வேண்ட அப்போது ஆடிய நடனமே சந்தியா தாண்டவம். பிரதோஷ வேளை.


உமா தாண்டவம்:

அன்னையும் அப்பனும் சேர்ந்து ஆடிய நடனம் உமா தாண்டவம் ஆகும். இந்தக் கோலத்தில் அபஸ்மர புருஷனை மிதித்தபடி ஆடுகின்றார் எம்பெருமான். இந்த நடனத்தில் கஜஹஸ்தம் என்ற முத்திரையைக் காண்பிப்பதால் இது காத்தல் தொழிலைக் குறிக்கும் தாண்டவம் எனப்படுகின்றது.

இந்தக் கோலத்தை கண்டு தரிப்பவர்களுக்கு தம்பதியர் ஒற்றுமை சிறந்து விளங்கும்.


ஊர்த்துவ தாண்டவம்:

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கோபம் கொண்டு உமை பெருமானை விட்டு விலக அதனால் அவர் உக்கிரம் மேலும் அதிகமாகி காளியாகி நின்றார்.. அந்த உக்கிரத்தை தணித்து காளியை சிவகாமியாக மாற்ற நினைத்து காளியுடன் போட்டியை ஏற்படுத்தி நடனமாடத் துவங்கினார். நடனம் சமமான முறையில் நீண்டு கொண்டே சென்றது. அப்போது நடனத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த எம்பெருமான் தன் காதிலுள்ள தோட்டை கழற்றி கீழே விழச் செய்து நடனமாடியபடியே மீண்டும் அதை காலில் எடுத்து காதில் அணிந்து கொண்டார். இந்தக் கோலமே ஊர்த்துவ தாண்டவம் என்றும் பெருமானுக்கு ஊர்த்துவ தாண்டமூர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது.

கௌரி தாண்டவம்:

தாருகா வனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்க பிட்சாடன மூர்த்தியாய் வந்தார் எம்பெருமான். அவருடன் விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருவரும் ஆடிய நடனம் இது. எப்போதும் தன்னுடன் ஆடும் இறைவனின் மற்றொரு நடனத்தை காண கௌரிதேவி ஆசைப்பட அவருக்காக இறைவன் ஆடிய நடனம் கௌரி தாண்டவம் எனப்பட்டது. ஆனந்த தாண்டவத்தில் இல்லாத கோலமாக கையில் ஒரு பிரம்பு இருப்பதே கௌரி தாண்டவம் ஆகும்.


கஜ சம்ஹார தாண்டவம்:

தருகாவனத்து முனிவர்கள் தங்கள் அபிசார வேள்வியில் மதங்கொண்ட யானையை தோற்றுவித்து பெருமானை நோக்கி அனுப்பினர். அந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்து அணிந்துகொண்டார் எம்பெருமான். அப்போது ஆடிய தாண்டவமே கஜ சம்ஹார தாண்டவம் எனப்படும்.


ஆனந்த தாண்டவம்:

பதஞ்சலி, வியாபாக்ர முனிவர்களின் விருப்பத்திற்காக இறைவன் ஆடிய தாண்டவம் ஆனந்த தாண்டவம். ஆகும். ஐந்து தொழில்கள், ஐந்து பூதங்கள், ஐந்து பொழுதுகள் ஆகியவற்றைக் குறிக்கின்ற தாண்டவம் இது, இதை களி நடனம் என்றும் சொல்வர். சிதம்பரம் எனும் தில்லையில் நடராஜர் உருவத்தில் ஆடும் பெருமானை தில்லைக்கூத்தர், அம்பலக் கூத்தர் என்றழைப்பர்.

இதுவே மிகச் சிறந்த தாண்டவமாகக் கருதப்படும். இந்த நடனத்தை அடிப்படையாகக் கொண்டே பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தையும், பரத முனிவர் நடன கலையையும் தோற்றுவித்தனர்.

இந்த நடன தோற்றத்தில் இறைவனைத் தரிசிக்க வாழ்நாள் இன்பம் நிலைத்து நிற்கும்.


அஜபா தாண்டவம்:

அன்னை விடும் சுவாசக் காற்றிற்கேற்ப பெருமான் ஆடிய நடனம் இது. அஜபா தாண்டவம் எனப்படும். இறைவன் அசைந்து அசைந்து மெதுவாக பொறுமையாக ஆடிய நடனமாகும். அஜபா நடனம் பல ராகங்களின் பிறப்பிடம். இந்த நடனத்தால் இசை, ஆடல் போன்ற கலைகள் சிறந்தன.

இந்தத் திருக்கோலத்தில் இறைவனை தரிசித்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.—குருஸ்ரீ பகோரா.

#####

வியாழக்கிழமை, 11 April 2019 09:00

சிவ நிர்வாணாஷ்டகம்!

Written by

ஓம்நமசிவய!

நீடாழி உலகத்து மறை நாலொடைந்தென்று நிலை நிற்கவே
வாடாத தலவாய்மை முனிராசன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக் மாமேரு வெற்பாக வங்கூர் எழுந்தாணிதன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.
முருகார் மலர்த்தாம் முடியானை அடியார் முயற்சித்திறம்
திருகாமல் விளைவிக்கும் மதயானைவதனச் செழுங்குன்றினைப்
பருகூதன் முதலாய்ப் முப்பத்து முக்கோடி புத்தேளிரும்
ஒருகோடி பூதே வருங்கை தொழுங்கோவை உற உன்னுவாம்.
#*#*#*#*#

சிவ நிர்வாணாஷ்டகம்!

மனமும் நானல்ல!
புத்தியும் நானல்ல!
நான் என்ற அகங்காரமும்
நானல்ல! உடலின்
அங்கங்களும் நானல்ல!
ஆகாயமும் பூமியும் நானல்ல!
ஜோதியும் நானல்ல!
காற்றும் நானல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

உச்சுவாச நீச்சுவா மூச்சினால்
ஆனவன் அல்ல! நான்.
கப, பித்தம் முதலிய
ஏழு தாதுக்களால்
ஆனவனுமல்ல! பஞ்ச
கோசத்தால் ஆனவனும்
அல்ல! வாக்க நான் அல்ல! கை
கால்களும் நான் அல்ல!
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

துவேஷம் எனக்கில்லை!
ராகமும்-அன்பும் எனக்கு இல்லை
லோபமும் எனக்கில்லை!
மோகமும் எனக்கில்லை!
மதமும் எனக்கில்லை!
மாச்சர்யமும்-சினம் எனக்கில்லை!
தர்மத்துக்கு தொடிசு இல்லை
சம்பத்துக்கும் சம்பந்தமில்லை
ஆனந்தமயமான சிவனே
நான்! நானே சிவன்!

புண்ணிய பாவமும் எனக்கேது!
ஓதுவது தீர்த்தாடனம் எனக்கேது!
வேதம் வேள்வி எனக்கேது!
சுகம் ஏது!
துக்கம் ஏது!
ஹவிஸ் நானல்ல!
அனுபவிக்கிறவனும் நானல்ல!
அனுபவிக்கப்படுபவனும் நானல்ல!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

மிருத்யு(மரணம்) விடம் பயமில்லை!
ஜாதி வித்தியாசம் எனக்கில்லை!
தகப்பனும் இல்லை! தாயும் இல்லை!
பிறவியும் எனக்கில்லை!
பந்துவும் இல்லை!
சினேகிதனும் எனக்கில்லை!
ஆசானும் இல்லை!
சிஷ்யனும் எனக்கில்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

சஞ்சலம் இல்லாதவன்!
உருவங்களால் கட்டுப் படாதவன்!
இந்திரியங்கள் அனத்தையும் ஜயித்தவன்!
பற்றை அறவே துறந்தவன்!
எனக்கு முக்தியே!
பந்தமோ விஷயமோ இல்லை!
ஆனந்தமயமான
சிவனே நான்! நானே சிவன்!

சொல்லும் பொருளும் போல்
இணைபிரியாத ஜகத்தின் தாய்
தந்தையரான பார்வதி பரமேஸ்வரரை
நான் வணங்குகின்றேன்!
சொல்லும் அதன் பொருளும் நான்
நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.

ஆதிசங்கரர் சிவவழிபாட்டின் உன்னதநோக்கம் பற்றி எழுதிய பாடல் வரிகள்.- குருஸ்ரீ பகோரா

#####

செவ்வாய்க்கிழமை, 09 April 2019 20:05

சிவ சதாஷ்டகம்!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#*#*#*#*#

சிவ சதாஷ்டகம்!

பொற்றாமரைக் குளக்கரையில் உள்ள கோயிலில் வீற்றிருப்பவர், கருடனை வாகனமாகக் கொண்ட மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவர். கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவரும் இலையைக் கூட உண்ணாமல் தவம் புரிந்த உமாதேவியுடன் விளங்குபவர், சர்ப்ப ராஜனை ஆபரணமாகத் தரித்தவரும், என்றைக்கும் மங்களமானவரும் ஆகிய சிவபெருமானுக்கு எப்போதும் நமஸ்காரம்.

அலைகள் மோதும் கங்கையின் பிரவாகத்தையும் சந்திர கலையையும் சிரசில் அணிந்தவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று கண்களை உடையவரும் சிறந்த பாம்பைக் குண்டலமாக அணிந்தவரும் புண்ணியமிக்கவர்களைக் காப்பவரும் என்றைக்கும் மங்கலமானவருமாகிய சிவனுக்கு நமஸ்காரம்.

தாமரை போன்ற நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவால் நான்கு வேதங்களாலும் விளக்கப்படும் பெருமை மிக்கவரும் நான்கு கைகளை யுடைய திருமாலின் தங்கையான மீனாட்சி அன்னையை இடப்பாகத்தில் கொண்டு விளங்குவதால் அழகுடன் விளங்குபவரும், நான்கு விதமான புருஷார்த்தங்களை அளிக்கவல்ல தாண்டவக் கோலத்தில் விளங்குபவரும் என்றைக்கும் மங்கலமானவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சரத்கால சந்திரனைப் போன்ற வெண்மையான புன்சிரிப்பால் அழகுடையவையும் பவளம்போல் சிவந்த உதடுகளால் பிரகாசிப்பவையுமான ஐந்து முகங்களின் ஒளியைப் பூண்டவரும், பைரவ கோலத்தில் கையில் ஏந்திய கபாலத்தில் விஷ்ணுவின் உதிரத்தை பிக்ஷையாக ஏற்றவரும் என்றும் மங்கள மூர்த்தியான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சதாசிவனுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு பூஜை செய்யும்போது ஒரு தாமரை மலர் மறைந்து போனதால் தமது கண்ணையே எடுத்து அர்ச்சனை செய்த ஸ்ரீமத் நாராயணணுக்கு ஆயிரம் சூரிய பிரகாசம் வாய்ந்த சுதர்சன சக்கரத்தை ஆயுதமாகக் கொடுத்தருளியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

திரிபுர சம்ஹார காலத்தில் பூமியை ரதமாகவும், விஷ்ணுவை அம்பாகவும், மேருவை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், பிரம்மனை சாரதியாகவும் வேதங்களை குதிரையாகவும் கொண்ட சதாசிவனும் சம்புவுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சிவ நிந்தனை செய்து நடத்தப்பட்ட தட்சனின் யாகத்தில் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு வீரபத்ர கடவுளைத் தோற்றுவித்து அவரது கர்ஜனையை கேட்டு பயந்து ஓடிய, அவிர்பாகம் பெற வந்த தேவர்களுக்கு நற்கதி அளித்த ஸர்வலோக சாட்சியான சதாசிவனும் மங்களமூர்த்தியுமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மிருகண்டு முனிவரின் புதல்வரான மார்க்கண்டேயனை யமதர்ம ராஜனிடமிருந்து காத்து ஆயுள் அளித்தவரும், கன்னத்தின் ஒளியால் சந்திரனை வென்றவரும், நிரந்தர சுகமளிக்கும் மோட்சத்தை விரும்பும் சான்றோர்களால் தியானிக்கப் படுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

பிரம்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்களால் நமது பாத தாமரைகளில் இடைவிடாது அர்ச்சனை செய்யப்படுபவரும், தங்க மலையை வில்லாகக் கொண்டவரும், வெள்ளியம்பலத்தில் கூத்தாடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

மதுரையம்பதிக்கு அரசரும், மகேசுவரனும், ஆலகாலம் என்ற விஷத்தால் அலங்கரிக்கப்பட்ட கழுத்தை உடையவரும், மீனாட்சியின் பதியாக விளங்குபவரும் சுந்தரத் தாண்டவம் ஆடுபவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

இந்த சதாஷ்டகம் பதஞ்சலி முனிவரால் அருளப்பட்டது.- குருஸ்ரீ பகோரா

#####

ஞாயிற்றுக்கிழமை, 13 May 2018 19:54

சிவ லிங்கங்கள்!

Written by

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

&&&&&

சிவலிங்கங்கள்!

சிவ பக்தர்கள், அடியார்கள் அனைவரும் ‘ஓம் நமசிவய’ என நெக்குருகி பிரார்த்திக்கும்போது அந்த உயிர்கள் நினைவில் இருப்பது ஈசனின் லிங்க ரூபம்தான். பிரம்மனுக்கும் மகா விஷ்ணுவிற்கும் தங்களிடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது அவர்கள் நடுவே அக்னி பிளம்பாக சிவபெருமான் தோன்றினார். அதுதான் இறைவன் எடுத்த முதல் வடிவம். லிங்க வடிவம். அது முதல் லிங்கோத்பவம்- லிங்கம் தோன்றுதல் உண்டாயிற்று. அன்று முதல் சிவபெருமான் லிங்க உருவிலேயே வழி படப்பட்டு வருகின்றார். அந்த வழிபாட்டிற்குரிய லிங்கங்கள் பலவகையாக பகுக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாக இலிங்கங்கள் ஆறுவகை.

அண்டலிங்கம்- அண்டம்- உருண்டையாக இருப்பதால் உலகம் அண்டம் எனப்பட்டது. எழுத்து, பதம், மந்திரம், தத்துவம், புவனம், கலை ஆகிய ஆறும் உயிர்களின் இன்ப துன்ப நுகர்ச்சிக்கும் முக்திக்கும் வழியாக இருக்கும் இவைகள் அத்துவாக்கள் எனப்பட்டது. இந்த அத்துவாக்களை லிங்கத்தின் பகுதிகளாக கருதி வழிபடுவது அகண்டலிங்க வழிபாடு.

பிண்டலிங்கம்-அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது. எனவே மேலே கூறிய ஆறு அத்துவாக்களும் மனித உடலில் உள்ளபடியால் உடலின் உள்ள ஆறு ஆதாரங்களில் அவற்றை நினைந்து வழிபடும் அகவழிபாடு பிண்டலிங்க வழிபாடு ஆகும்.

சதாசிவலிங்கம்- இறைவனின் சத்யோஜாதம்-படைத்தல், வாமதேவம்-காத்தல், தத்புருஷம்-மறைத்தல், அகோரரூபம்-அழித்தல்(ஒடுக்கம்), ஈசானம்-அருளல் ஆகிய ஐந்து பஞ்சபிரம மந்திரங்கள் வடிவமாக கொண்டுள்ளது. இம்மந்திரங்கள் அருவமாய் ஓர் உடல் இரு திருவடி 5 திருமுகங்கள், 10 திருக்கரங்கள், 15 திருக்கண்கள், உடைய சதாசிவ திருமேனியில் பதிவு பெறுவதால் அந்நிலையில் வழிபாடு செய்வதால் சதாசிவலிங்கம் அருவுருவமானது.

ஆன்மலிங்கம்- அண்டம், பிண்டம், சதாசிவம் போன்று மும்மலங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு தூயதாய் நிற்கும் உயிர் சிவனாகும். இது ஆன்ம லிங்கம் என்றாகும். சிவயோகியர் வழிபடுதலுக்குரியது..

ஞானலிங்கம்- ஞானமே உருவான சக்தியும், சிவனும் ஒன்றித்து ஒருவரை மற்றவர் பிரியாது நின்று உயிர்களுக்குச் சிவஞானத்தை நல்கும் நிலையை உணர்த்துவது ஞானலிங்கம். சிவனின் பதமாகிய ’சி’ காரத்தை முன் நிற்குமாறு சொல்லி பின்னர் பார்வதியின் பதமாகிய ‘வ’ காரத்தைச் சொல்லி ‘சிவ’ எனும் மகாகாரணத்தின் உண்மையை உணர்ந்து அது உணர்த்தும் ஞான நிலையில் செபித்தால் ஞான லிங்கம் வேளிப்பட்டு பேரோளியாய் காட்சியளிக்கும். சிவ ஞானிகள் வழிபாட்டுக்குரியது.

சிவலிங்கம்- பரமசிவம் எனும் இந்த லிங்கம் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் என்ற ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. சிவலிங்கம் பேரானந்தத்தை அனுபவிக்குமாறு அருள்பாலிப்பது மட்டுமல்லாமல் ,இஃது அன்றும் இன்றும் என்றும் அருள் பாலிப்பது என்றும் இதுவே அயன் முதல் சிவன் வரையுள்ள ஒன்பது வடிவங்களுக்கும் முதலாவது என திருமூலர் கூறியுள்ளார். அதி தீவிர பக்குவம் அடைந்த சிவ ஞானிகளுக்கு காட்சியளித்து சிவானந்தத்தை தரும். சிவலிங்கம் இருவகைப்படும்.

1.சலலிங்கம்
(சலம்- புடை பெயர்வது) மண், கல், பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், சந்தனம், வன்னி முதலிய மரங்களாலும் செய்யப்படுபவை. அவைகள்-
1.ஆயஸ்காந்த லிங்கம்-காந்தத்தால் உருவான லிங்கம் சித்தர்கள் வழிபடுவது. அஷ்டமா சித்திகளை அளிக்க வல்லது.
2.மௌகித்த லிங்கம்-முத்துக்களை எரித்த சம்பலிலிருந்து உருவாக்கப்பட்டது. மங்களமும் செல்வமும் அருளும் தன்மை கொண்டது.
3.ஸ்வர்ண லிங்கம்-தங்கத்தால் உருவானது. முக்தி அளித்து பிறவா நிலைக்கு உயர்த்தும்.
4.ரஜத லிங்கம்- வெள்ளியால் செய்யப்பட்டது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
5.பித்தலா லிங்கம்-பித்தளையால் செய்யப்பட்டது. பழுத்த இலை மரத்திலிருந்து உதிர்வது போன்ற பயமில்லா மரணத்தை தரும்.
6.திராபு லிங்கம்-தகரத்தால் செய்யப்படுவது. எதிரிகள் இல்லாமல் செய்யும்.
7.ஆயச லிங்கம்- கந்தக அமிலத்தால் செய்யப்படும் எதிரிகளின் தொல்லையை அழிக்கும்.
8.சீசா லிங்கம்-வெள்ளீயத்தால் செய்யப்படுவது. எதிரிகள் நெருங்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.
9.அஷ்டதாது லிங்கம்-எட்டு வகையான தாதுக்களால் உருவானது. சித்தி அளிக்கக் கூடியது.
10.அஷ்டலோக லிங்கம்-எட்டு வகை உலோகங்களால் செய்யப்படுவது. தொழுநோய் குணமாகும்.
11.வைடூர்ய லிங்கம்- வைடூரியத்தால் உருவான லிங்கம். எதிரிகளின் எதிர்பாரா தாக்குதல்களின்று காப்பாற்றும்.
12.பாதரச லிங்கம்- பாதரசத்தால் ஆனது. அளவிட முடியாத செல்வத்தைக் கொடுக்கும்.
13.ஸ்படிக லிங்கம்- ஸ்படிகத்தால் ஆனது. எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும்.

2. அசலலிங்கம்
(அசலம்- புடை பெயராதது)-.அவைகள்
1.சுயம்பு லிங்கம்-தானாகவே இறைவன் விரும்பிய இடத்தில் தோன்றிய லிங்கம்
2.தெய்வீக லிங்கம்-தேவர்களால் பூஜிக்கப்பட்டு பூமிக்கு வந்த லிங்கம்.
3.அர்ஷ/ஆரிடலிங்கம்-ரிஷிகளும், முனிவர்களும் தங்கள் வழிபாட்டிற்கென உருவாக்கிய லிங்கம்,
4.காணலிங்கம்- கணபதி, முருகன் முதலான தேவகணங்களால் நிறுவப்பட்டு பூசை செய்யப்பட்டு வருபவை.
5.அசுரலிங்கம்- அசுரர்களால் நிறுவப்பட்டவை.
6.சுரலிங்கம்- தேவர்களால் நிறுவப்பட்டு வழிபட்டது.
7.பாண லிங்கம்- பாணாசுரன் நிறுவி வழிபட்டது. இது சுயம்பு லிங்கத்திற்கு இனையானவை.-காமிக ஆகமம்.
8.மனுஷ்ய லிங்கம்-சாதாரண மனிதர்களால் உருவாக்கப் பட்ட லிங்கம். இந்தவகை லிங்கங்கள் பீடத்தின் அளவு, பாணத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேலும் பலவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.
8.1.வர்த்தமான லிங்கம்- பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவில் இருந்து ருத்ரபாகம் அதைப் போல் இரு மடங்கு இருப்பதாகும். வழிபடுவோருக்கு முக்தி அளிக்கவல்லது.
8.2.ஆத்ய லிங்கம்—மூன்று பாகங்களும் சம்மான அளவில் இருக்கும். இந்த வகை லிங்கங்களில் 1.புண்டரீக லிங்கம்-வழிபட்டால் பெரும் புகழ் கிட்டும், 2.விசாலா லிங்கம்- வழிபட்டால் பெரும் பொருள் கிட்டும், 3.ஸ்ரீவத்சா லிங்கம்- வழிபட்டால் எல்லா வளங்களும் கிட்டும், 4.சத்ருமர்த்தனா லிங்கம்- வழிபட்டால் எல்லாவற்றிலும் வெற்றி தரும்.
8.3.முகலிங்கம்- முகங்களின் அடிப்படையில் ஏக லிங்கம்- ஒரு முகம், சதுர்முக லிங்கம்- நான்கு முகங்கள் (தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ), பஞ்சமுக லிங்கம்- ஈசனின் ஐந்து முகங்கள் தத் புருஷ, அகோர, சத்யேஜாத, வாமதேவ, ஈசானம் கொண்டது.
8.4.பஞ்ச பூத லிங்கம்- ப்ரித்வி-பூமி லிங்கம், வாயு லிங்கம் ஜல லிங்கம், ஆகாச லிங்கம், அக்னி லிங்கம்,
8.5.ஷணிக லிங்கம்- தற்கால வழிபாட்டில் பயன்படுத்துவது நீண்ட பயணம் செல்பவர்கள் தனகளுடன் லிங்கத்தை எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அன்றைய பூஜைக்காக உருவாக்கும் லிங்கங்களே ஷணிக லிங்கம். இந்தவகை லிங்கங்கள் மலர், சந்தனம், விபூதி, அன்னம் ஆகியவை கொண்டு உருவாக்கப்படும் போது அவைகள் உருவக்கப்படும் பொருட்களுக்கேற்றவாறு பெயர் பெறும். பூஜை முடிந்தபின் அவைகள் கரைக்கப்படும்.
1.கந்த லிங்கம்-சந்தனம், குங்குமம், கஸ்தூரி கலந்து உருவாக்கப்படும்.-வழிபடுவதால் சிவ சாயுஜ்ய மோட்சம்-பிறப்பில்ல நிலை சித்திக்கும்.
2.புஷ்ப லிங்கம்- பலநிறம் கொண்ட வாசனையுள்ள அழகிய மலர்களால் உருவாக்கப்படுவது. நில சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் சேரும்.
3.கோசாக்ரு லிங்கம்- பழுப்பு நிறத்தில் உள்ள பசுவின் சாணத்திலிருந்து உருவாக்கப்படும்- வணங்கினால் வளம் பெருகும்.
4.வாலுக லிங்கம்-சுத்தமான மணல் கொண்டு உருவாக்கப்படுவது. வணங்கினால் கல்வியும் ஞானமும் உண்டாகும்.
5.யவா கோதுமா சாலிஜ்ஜ லிங்கம்- சோளம், கோதுமை போன்ற மாவினால் உருவாக்கப் படுபவை- இது குழந்தை பேற்றைத் தரும்.
6.சீதாகண்ட லிங்கம்-இனிப்புவகைகளால் உருவாக்கப்படுவது- நல்ல உடல் ஆரோக்கியத்தை தரவல்லது.
7.திலாப்சிஷ்த லிங்கம்- எள்ளை அரைத்து செய்வது- எல்லா ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வது.
8.பாம்ச லிங்கம்-சாம்பல் கொண்டு செய்வது. எல்ல நற்குணத்தையும் அருளும்.
9.கூட / சீதா லிங்கம்-வெல்லத்தால் செய்யப்படுவது- இது மன நிம்மதியைத் தரும்.
10.வன்சங்குர லிங்கம்- மென்மையான மூங்கில் இலைகளால் ஆனது- வழிபடுவோருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுள்.
11.லவண லிங்கம்- உப்பு, மஞ்சள், திரிகடுகம் சேர்ந்து செய்வது- மற்றவர்களை வசீகரிக்கும் சக்தி அருளும்.
12.பிஷ்டா லிங்கம்- அரிசி மாவினால் செய்வது- நல்ல கல்வியைத் தரும்.
13.ததிதுக்த லிங்கம்-பால், தயிரிலிருந்து முழுவதும் நீரை நீக்கி செய்வது. மனமகிழ்ச்சியையும் வளங்களும் அருளும் தன்மை கொண்டது.
14.தான்ய லிங்கம்-நவதான்யங்களால் உருவாக்கப்படுவது- விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலைத் தரும்.
15.பழ லிங்கம்-பலவகையான பழங்களால் உருவாக்கப் படுவது. பழதோட்டம் வைத்திருப்போருக்கு நல்ல பலன்.
16.தாத்ரி லிங்கம்- நெல்லிக்காயைக் கொண்டு உருவாக்கப்படும்- கஷ்டப்படு பவர்களுக்கு அந்த வாழ்விலிருந்து விடுதலை.
17.நவநீத லிங்கம்-வெண்ணெய்யால் உருவானது. பணமும் புகலும் சேரும்.
18.கரிக லிங்கம்-விசேஷவகைப் புல்லால் உருவாக்கப்படும்- துர்மரணத்தை தடுக்கும்.
19.கற்பூர லிங்கம்- கற்பூரம் கொண்டு உருவக்கப் படுகின்றது- சிறந்த ஞானத்தை தந்து மாயையை அழிக்கும்.

புராணங்களில் இந்திரன் மணிமாய லிங்கத்தையும், சூரியன் தாம்ரமய லிங்கத்தையும், சந்திரன் முக்தி லிங்கத்தையும்(முத்துக்களால் ஆனது) ,குபேரன் ஹேம லிங்கம் எனும் தங்கத்தால் ஆன லிங்கத்தையும் அணிந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

அன்பான உயிர்களே நீங்களும் உங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப லிங்கங்கள் செய்து அணிந்து கொள்ளுங்கள். பிரதிஷ்டை செய்து வழிபட்டு வளமுடன் வழ்க என வாழ்த்தும் குருஸ்ரீ பகோரா.

&&&&&

செவ்வாய்க்கிழமை, 27 February 2018 20:50

சிவ பஞ்சாட்சர துதி

Written by

ஓம் நமசிவயா!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

சிவ பஞ்சாட்சர துதி!

நாகேந்த்ர ஹாரய விலோசனாய
பஸ்மாங் கராகய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை காராய நமசிவய!

ந்தாகினி ஸலீல சந்தன சர்ச்சிதாய
நந்பீஸ்வ ரபு மதநாத மஹேஸ்வராய
,அந்தார முக்ய பஹூ புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மே காரமஹிதாய நமசிவய!

சிவய கௌரி வதனாப்ஜ ப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலக கண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சி காராய நமசிவய!

சிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முலிந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க வைஸ்வா நரலோசனாய
தஸ்மை காராய நமசிவய!

க்ஷ ஸ்வ ரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்யா ஸனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காரய நமசிவய!

#####

புதன்கிழமை, 06 September 2017 10:48

சிவம்

Written by

ஓம் நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

யுகங்கள்-யுகதர்மங்கள்!

கிருதயுகம்- மக்கள் ஈசன் திருவடியை எப்பொழுதும் போற்றித் துதி செய்த வண்ணம் இருப்பர். தருமதேவதைக்கு நான்கு கால்கள். அனைவரின் வாழ்நாளும் ஒரே மாதிரியாக இருக்கும். பேதங்களின்றி மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர்.
திரேதாயுகம்- சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார். மழை நன்கு பொழிந்து மரம் செடி கொடிகள் நன்கு வளரும். காய் கனிகள் குறைவின்றி கிடைக்கும். பொன், பொருள், ஆடை, அணிகலன்கள் என்று ஆசைப்பட்டு மக்கள் கோபமுடன் சண்டையிடுவர். இளம் பெண்கள் இன்பமுடன் வாழ்வர்.
துவாபரயுகம்- மக்கள் கோபம், போட்டி, சண்டை, சச்சரவு என்றிருப்பர். தரும தேவதை இருகால்களை இழந்து இரண்டு கால்களில் நிற்கும். மக்கள் பாப புண்ணியங்கள் தெரியாமலும் தரும நெறியை அறிவதிலும் குழம்பித் தவிப்பர். வியாசர் தோன்றி வேதங்களை நான்காக பகுப்பார். புராணங்களை இயற்றுவார்.
கலியுகம்- மெய்ஞானம் விளங்கி மக்கள் தானம் புரிவர். தரும தேவதை ஒரு காலுடன் நிற்கும். அதர்மம் தலை தூக்கி இருக்கும். பொய், சூது, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியன தழைத்தோங்கும். வணிகர்கள், அந்தணர்கள், ஆளுநர்கள் பலவகை இன்னல்களுக்கு ஆளாகுவர். ஒழுக்கம் தவறி நடப்பர். வேதம் வேள்வியின்றி போகவாழ்வு வாழ முயற்சிப்பர். தர்மங்கள் நிலை குலையும். தீயவையும் அறியாமையும் மட்டுமே பெருகி இருக்கும்.
கலியுக பாவங்களுக்கு பரிகாரம் என்பது வேதங்களைப் படித்தல், தியானம், பிரார்த்தனை, யாகங்கள் செய்தல், தானங்கள் செய்தல் ஆகும்.
முடிந்த காலங்களில் நடந்தது என்ன! வெறுமனே செல்வமும் கல்வியும் அறநெறிகளையும் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு ஈடாக இன்றைய சிந்தனைகளை நாளைய செயல் திறன்களாக உருவெடுப்பதை உயர்த்துகிற தர்மமாக எதைச் செய்ய வேண்டும்! எதைச் செய்யக் கூடாது என்று சிந்தனை கொள்ளவேண்டும். இந்த நல்சிந்தனைகள் பழக்கமாக அமையவும் வாழ்வில் எதிர்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள உயிர்கள் தொடர்ந்து செய்துவரும் செயல்கள் உயிர்களுக்கு உதவுவதற்கும் இறை அடியேனுக்கு தெரிவித்த பாதையை உங்களுக்கு உணர்த்துவேன், யுகதர்மங்கள் எப்படி யிருந்தாலும் மக்கள் மெய்ஞானத்தில் நாட்டம் கொண்டு தங்களின் பிறவியை நன்னிலைப் படுத்த ஆன்மீக வழியில் பயனிக்க ஆன்மீக முறைகளை தெரிந்துகொள்ள உதவியாய் அமையட்டும் இந்தச் சிவம் பகுதி- குருஸ்ரீ பகோரா

சிவ வழிபாடு
சிவ 108-அஸ்டோதரா நாமங்கள்
சிவ 1008-நாமங்கள்
சிவ-நாமங்கள்-தலங்கள்
சிவ அஷ்டாஷ்ட திருஉருவங்கள்-64
சிவ சதாஷ்டகம்!
சிவ சமகம் / ருத்ர சமகம்!
சிவ தாண்டவங்கள்!
சிவ திருஉருவங்கள் 64 தவிர மற்ற.வை
சிவ திருஉருவங்கள் சிறப்பான 26
சிவ திருவிளையாடல்கள்!
சிவ நிர்வாணாஷ்டகம்!
சிவ பஞ்சாட்சார ஸ்தோத்திரம்.
சிவ பில்வாஷ்டகம்-வில்வாஷ்டகம்
சிவ லிங்கங்கள்
சிவ லிங்காஷ்டகம்
சிவ ஸித்தேஸ்வர அஷ்டகம்

#####

ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:50

சிவ ஸித்தேச்வர அஷ்டகம்

Written by

ஓம்நமசிவய!

எல்லாமும் ஆனாய் போற்றி எல்லோர்க்கும் தலைவா போற்றி
எண்குண வடிவே போற்றி எல்லையில்லா அருளே போற்றி
எழில்நுதற் கண்ணாய் போற்றி என்றுமே உள்ளாய் போற்றி
எம்பரா போற்றி போற்றி ஏவல்கள் களைவாய் போற்றி


ஸித்தேஸ்வர அஷ்டகம்!

மஹா தீர்த்த ராஜஸ்ய தீரே விபாந்தகம்
மஹாபூ திரூபம் மஹாத்மைக வேத்யம்
மஹா ஸித்திபூரா ப்ரதானை கதக்ஷம்
பஜாமைவ ஸித்தேச்வரம் சித்த: சம்பும்!

மஹா தீர்த்தக் கரையில் விளங்குபவரும், சிறந்த விபூதி (ஐஸ்வர்யம்) வடிவானவரும், மஹாத்மாக்களால் மட்டும் அறியப்படுபவரும், பெரிய பெரிய சித்திகளைக் கொடுப்பதில் சமர்த்தரும், எல்லோருக்கும் நன்மையைத் தருபவருமான ஸித்தேச்வரரை மனமே நீ எப்பொழுதும் நினைப்பாயாக!

மனோஜஸ் வதக்ஷ்யக்னி பஸ்மாவசேஷ:
மதாந்தச்ச தக்ஸோ கதச்சோச்ய பாவம்
மனோஜாச்ச தக்ஷக்னி தாந்தோ மதாந்தோ
பஜே நிர்மதத்வாய ஸித்தேச்வரம் த்வாம்!

உன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பல் ஆனான். மிகவும் மதம் பிடித்திருந்த தட்சப்பிரஜாபதி வருந்தத்தக்க நிலையை அடைந்தான். எரிந்துபோன மன்மதனாலே பாமர ஜனங்களும் தவித்து மதம் பிடித்தலைகிறார்கள். ஆகையால் எனக்கு மதம் சற்றும் இல்லாமல் இருப்பதற்காக ஸித்தேச்வரரை பூஜிக்கின்றேன்!

இயம் சாஸ்பி கங்கா நிபத்தா கபர்த்தே
மதாட்யா யதஸ்ஸா கணக்ஸீர கல்பம்
விஸ்ருஷ்டா ஜெகத் பாபநாசாய யேன
ஸ்வயம் சித்த ஸித்தேச்வரம் சிந்தயைனம்!

மதம் பிடித்த கங்கையானவள் உமது ஜடாமுடியில் நீர்த் துளிக்கு ஒப்பாக கட்டுப்பட்டு நிறுத்தப்பட்டாள். ஜெகத்தின் பாபங்களை போக்குவதற்காக எவரால் விடுவிக்கப்பட்டாளோ அப்பேர்பட்ட ஸித்தேச்வரரை ஹே மனமே நீ சிந்தை செய்!

ந தேஸ்ந்தோ சாதிர் ஹரி:ஸ்ஸோஸ்பி தாதா
வராஹோ பவன் னூர்த்வ ஹம்ஸீ பவம்ஸ்ச
ததா தேஹி ஸாக்ஷ்யம் பஜே பாந்தமேவ
மஹா லிங்க ரூபேண ஸித்தேச்வரம் த்வாம்!

விஸ்ணு வராஹமாய் உனது அடியைக் காணவும், பிரம்மாவானவர் அன்னமாகி உமது முடியைக் காண்பதற்கும் இயலாமல் சாட்சி தன்மையை அடைகிறார்கள். அப்பேர்பட்ட ஜோதியாய் விளங்கும் மஹாலிங்கரூபனை அந்த ஸித்தேச்வரரை சேவிக்கின்றேன்.

சிவோஸ்யம் ப்ரதேசோ மஹான் மத்யதேச:
சிவா ஜாஹ்னவீ நித்ய ஸித்த ப்ரவாஹா
சிவ ஸ்த்வம் சிவம் நித்ய ஸித்தம் ததான:
சிவோ நஸ்ஸதா தேவ! ஸித்தேச்வர ஸ்யா!

இந்த மத்ய பிரதேசம் மிகவும் மங்களமானது. இங்கு நித்தியம் கங்கை பிரவாஹமாக மங்கள ரூபமாக பிரவஹிக்கின்றாள். எப்பொழுதும் நம்மிடமுள்ளதான சிவத்தன்மையைக் கொடுப்பவராக எங்களுக்கு மங்களம் அளிப்பவராக ஸித்தேச்வரராக நீங்கள் விளங்க வேண்டும்.

பதாப்ஜே த்வதீயே ஸ்வ கீயாக்ஸி பத்மம்
புரா பூஷண த்வேன நாராயணோ த்தாத்
இதீதம் புராவ் ருத்தமத் த்யாத்ர ஸத்யம்
பதர்யோ ஹரிஸ்ஸாது ஸித்தேச்வரா அகாத்!

உன்னுடைய பாதபதமத்தில் முன்பொரு சமயம் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய தாமரைக் கண்ணை அர்ப்பணித்தார். என்ற பழைய செய்தி இங்கு உண்மையாகின்றது.(பதரியில் உள்ள ஹரியானவர் ஸித்தேச்வரருக்கு தமது நயனங்களுள் ஒன்றை புஷ்பமாக அளித்தார்)

கபர்தாத் த்வதீயாத் விஸ் ருஷ்டாபி கங்கா
புன:ஸேவிதும் த்வா மஹோ பத்த வாஞ்சா!
ஸ்காசே த்வ தீயேதி பாரப்ர வாஹா
நிஜாம் போஸ் பிஷேகாய ஸித்தேச்வராகாத்!

உம்முடைய ஜடையில் இருந்து விடுவிக்கப்பட்ட கங்கயானவள் மறுபடியும் உம்மை சேவிப்பதற்கு ஆசையுள்ளவளாக மிகுந்த பிரவாஹத்துடன் உமக்கு அபிஷேகம் செய்வதற்காக ஸித்தேச்வரரே உம்மிடம் வந்தாள்.

ந மத்தோஸ் ம்யஹம் சேன் நமத்தோஸி பின்ன:
நமத்தோஸி தஸ்த்வம் நமத் தோஷ தாதா!
ந மத்தேஸ்ஸி பின்ன ஸ்த்வ மித்யைக்ய தோஷம்
நமத்ப்ய: ப்ரதேஹீஹ சித்தேச்வர த்வம்!

நான் மதம் பிடிக்தவனாக இருப்பினும் நீர் என்னைத்தவிர வேறல்லவே! வணங்குபவர்களால் சந்தோஷப்படுத்தப்படும் நீர் உம்மை வணங்குபவர்க்கும் சந்தோஷத்தை அளிக்கிறீர். ‘என்னைத் தவிர நீ வேறில்லை ஒன்றுதான் என்ற மகிழ்ச்சியை/ சந்தோஷத்தை ஸித்தேச்வரரே நீர் வணங்குபவர்களுக்கு கொடுக்கிறீர்கள்.

இதி ப்ரயாக சித்தேச்வர
பக்திப் ருஜ் ஜனதா ஹ்ருதி
ச்லோ காஷ்டகம் மிதம்
நித்யம் வர்த்தய தாம் சுபம்!

இப்படியாக ப்ரயாக ஸித்தேச்வரரிடம் பக்தியுள்ள மக்களின் உள்ளங்களில் இந்த அஷ்டக ஸ்லோகம் நித்தியம் சந்தோஷத்தை வளர்க்கட்டும்! சுபம்!.

&&&&&

ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:49

சிவ லிங்காஷ்டகம்

Written by

ஓம்நமசிவய!

ஊக்கங்கள் நிறைப்பாய் போற்றி ஓம் ஊர்க்குளக் கரையாய் போற்றி
ஊங்கார நாதா போற்றி ஊழிகள் கடந்தாய் போற்றி
ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி ஊர்மதிச் சடையாய் போற்றி
எருக்கினை அணிவாய் போற்றி எங்கனும் இருப்பாய் போற்றி


சிவ லிங்காஷ்டகம்!

ப்ரம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்.
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவமுனி ப்ராவராச்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்தி ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ சுணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸ்முத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜீத லிங்கம்
ஸுரவண புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஓம் நமசிவய

#####

 

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றி !
பாகம் பெண்உரு ஆனாய் போற்றி !
காவாய் கனகத்திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி ! போற்றியே !

வான்முகில் வாழாது பெய்க ! மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க! குறைவிலாது உயிர்கள் வாழ்க !
நான்மறை அறங்கள் ஓங்க ! நற்றவம் வேள்வி மல்க !
மேன்மைகொள் சைவ நீதி ! விலங்குக உலகமெல்லாம் !

ஓம் நமசிவய

#####

ஓம்நமசிவய!

உளம் அருட் கனியே போற்றி உயர்ந்தவர் துணையே போற்றி
உளவளம் தருவாய் போற்றி உதிரச் செந்நிறத்தாய் போற்றி
உன்னிய முடிப்பாய் போற்றி ஊரெல்லாம் உறைவாய் போற்றி
ஊழ்த்தெழும் உணர்வே போற்றி ஊனங்கள் நிறைப்பாய் போற்றி


சிவ பில்வாஷ்டகம்/வில்வாஷ்டகம்!

திரிதலம் திரிகுணாகரம், திரிநேத்திரம் ச திரியாயுதம்
திரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

திரிசா கைப் வில்வ பத்ரைச் ச அர்ச்சித்ரைக் கோமளஸுபை
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்!

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய
காஞ்சனம் ஸைலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்!

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்!

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வரா
நித்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ராமலிங்க பிரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகனிச ஸந்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

அகண்ட வில்வ பத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்!

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ஸாளக்கிரமேஸூ விப்ராணாம் தடாகம் தச கூபயோ
யக்ஞகோடி ஸஹ’ஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்!

தந்திகோடி ஸஹ’ஸ்ரேஸூ அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

ஸ்ஹஸ்ர வேத பாடேஸூ ப்ரஹ்ம ஸ்தாபன முச்யதே
அனேக வ்ரத கோடினாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்!

அன்னதான ஸஹஸ்ரேஸூ ஸ்ஹ”ஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்ம பாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்!

வில்வ ஸ்தோத்ர மிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகம் அவாப்னோதி சிவனே சஹ மோததே!

ஓம் நமசிவய
#####

ஓம்நமசிவய!

ஐங்காரச் செல்வா போற்றி ஐம்பூத முதலே போற்றி
ஐமுக அய்யா போற்றி ஐயம் ஒழி கணேசா போற்றி
ஐந்நிலத் தேவே போற்றி ஐம்புலன் கடிவாய் போற்றி
ஐவனம் தருவாய் போற்றி ஐயைதன் மகனே போற்றி


சிறப்பான 26 திரு உருவங்கள்!

1.. லிங்கோத்பவர்-மோட்சப் பிரதாயினி,
வழிபாடு-மோட்சம் சித்திக்கும்

2.. திரிமூர்த்தி-வம்சவிருத்திப் பிரதாயினி,
வழிபாடு-சந்தானப்பேறு கிட்டும்

3.. கல்யாணசுந்தரர்-சர்வ மங்களாதேவி,
வழிபாடு-திருமணப்பேறு கிடைக்கும்

4.. சுகாசனர்-தர்ம சம்வர்த்தினி,
வழிபாடு-நியாயமானஆசைகள் நிறைவேறும்

5.. கங்காதரர்-சர்வபாவ ஹரணி,
வழிபாடு-பாவங்கள்விலகும்

6.. நடேசர்-சம்பத்யோக காரணி,
வழிபாடு-மகப்பேறு கிட்டும்

7.. சண்டேசஅனுக்ரகர்-மகாபாதக நாசினி,
வழிபாடு-பாதக மலம் நீங்கும்

8.. ரிஷபாரூடர்-தர்மசித்திப் பிரதாயினி,
வழிபாடு-நல்ல முயற்ச்சிகளில் வெற்றி

9.. நீலகண்டர்-விஷதோஷ நிவர்த்தினி,
வழிபாடு-விஷஜந்து ஆபத்து நீங்கும்

10..ஹரிஹரமூர்த்தி-தர்மார்த்த தாயினி,
வழிபாடு-வழக்குகளில் வெற்றி

11..ஏகபாதமூர்த்தி-மகாரோக விநாசினி,
வழிபாடு-பிணிகள் தீரும்

12..உமாசகாயர்-பார்யாசௌக்ய ப்ரதானி,
வழிபாடு-மனைவியினுடல் நலம் சீர்

13..அர்த்தநாரீஸ்வரர்-சௌபாக்ய ப்ரதானி,
வழிபாடு-தம்பதியினரிடம் ஒற்றுமை நிலைக்கும்

14..தட்சிணாமூர்த்தி-மேதாப்ரக்ஞ ப்ரதானி,
வழிபாடு-கலை,கல்வி ஞானம் வளரும்

15..சோமாதிநாயகர்-சர்வசித்தி காரணி,
வழிபாடு-சகலமும் சித்தி

16..சோமாஸ்கந்தர்-புத்ரசௌக்ய ப்ரதானி,
வழிபாடு-குழந்தைகள் ஆரோக்கியம்

17..சந்திரமௌலீச்சுவரர்-தனதான்ய ப்ரதானி,
வழிபாடு-தனமும் தான்யமும் சேரும்

18..வீரபத்ரர்-சத்ருவித்வேஷ நாசினி,
வழிபாடு-எதிரி பயம் நீங்கும்

19..காலசம்ஹாரர்-சர்வாரிஷ்ட நாசினி,
வழிபாடு-மரணபயம், அகாலமரணம் நேராது

20..காமாந்தகர்-ரோகவிக்ன நாசினி,
வழிபாடு-தடைகள் நீங்கி ஞானம் சித்திக்கும்

21..கஜசம்ஹாரர்-பாராபிசாரசமநீ,
வழிபாடு-பிறர் செய்ததீவினையின் பாதிப்பு நீங்கும்

22..திரிபுரசம்ஹாரர்-ஜன்மஜரா ம்ருத்யுவிநாசினி,
வழிபாடு-பிறவிப்பிணிதீரும், எமபயமில்லை

23..பிட்சாடனர்-யோஷித் ப்ருந்தவிமோஹினி,
வழிபாடு-மோகமாயை விலகும்

24..ஜலந்தரசம்ஹாரர்-துஷ்டவிநாசினி,
வழிபாடு-விரோதிகள் விலகுவர்

25..சரபமூர்த்தி-அரிப்ரணாசினிதானி,
வழிபாடு-மாயை,கன்மம் விலகும்

26..பைரவர்-ரஷாகரி,
வழிபாடு-இறையருள் ரட்சையாய் காக்கும்

######

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27059367
All
27059367
Your IP: 13.59.82.167
2024-04-23 14:24

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg