gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மூன்றாம் தந்திரம்! (18)

திங்கட்கிழமை, 20 April 2020 16:15

பிரத்தியாகாரம்!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

பிரத்தியாகாரம்!

578. வெளியே செல்லும் இயல்புடைய மனத்தை உள்ளே பொருத்தும்படி செய்வதால் சிறிது சிரிதாய் இருள் நீங்கி ஒளி காணலாம். பழைய மறைபொருளான பரம்பொருளை உடலில் உள்ளே கண்டு மகிழ்ந்து இருக்கலாம்.

579. கொப்பூழுக்கு கீழ் 12 அங்குலத்தில் உள்ள குண்டலினியை மேலெழுப்பும் பிரசாதமாகிய மந்திரத்தை யாரும் அறியவில்லை. அதை அறிந்தபின் சிவன் நாதமயமாய் தலையில் விளங்குவான்.

580. மூலாதரத்திற்கு இரண்டுவிரல் மேலேயும் பார்வைவுடைய குறிக்கு இரண்டு விரல் கீழேயுமுள்ள இடத்தில் வட்டமாய் இருக்கும் குண்டலியினுள் எழும் சுடர் உடலில் கொப்பூழ் தாமரைக்கு கீழ் நான்கு விரல் அளவில் உள்ளது.

581. நாசிக்கு கீழ் பன்னிரண்டு அங்குல அளவில் உள்ள இதயத்தில் மனதை இழுத்து வைத்து செஞ்சுடரை நினைத்தால் அஷ்ட பெருஞ்சித்திகளும் அரச யோகமும் வந்துசேரும். இந்த தியானம் உடலுக்கு எப்போதும் தீமை செய்யாது.

582. மின்னல் பின்னி செல்வதுபோல் ஒளி தோன்றினால் குற்றமில்லா சிறப்பான ஆனந்தம் உண்டாகும். நேர்மையான கழுத்துப் பகுதியில் நிலவொளி தோன்றினால் பிரத்தியாகாரம் செய்பவர் உடலில் ஆனந்த பரவசம் உண்டாகும்.

583. மூலாதாரத்தை –குதத்தை மேல் எழும்படி அடைத்திருத்தலான ஆகுஞ்சன்ம் செய்யும் புருவ நடுவிலுள்ள நடுநாடித் துளையில் மனதை பதித்து வைத்து வேல் போன்ற கண்ணை வெளியில் விழித்திருப்பதே காலத்தை வெல்கின்ற வழியாகும்.

584. மலம் கழிக்கும் வாசலான குதத்திற்குமேலே இரண்டு விரல் அளவும், கருவுண்டாகும் வாயிலான கோசத்திற்கு இரண்டு விரல் அளவு கீழ் உள்ள இடத்தில் உருவாகும் குண்டலினியை நினைப்பவர்க்கு மகேசுவரன் பேரொளி வடிவாகக் கலந்து தோன்றுவான்.

585. சுழுமுனையில் மலக்காரியமான இருளால் ஏற்படும் அவத்தையும் புருவத்தின் நடுவில் விளங்கும் ஜோதியினின்று பிரிந்துள்ள நிலை மாறுதலை ஒழித்து உணர்வு மயமாய் விளங்கும் என்று எண்ணி உருகி மனதை ஒருமைப் படுத்தினால் அதுவே பெருமையுடைய பிரத்தியாகாரம்.

586. வெளியே போன வாயுவை மீளவும் புகமுடியாதபடி திறமையாக உள்ளொயில் பொருத்தி நிற்பின் உள்ளம் வலிமை அடையும். அப்போது இறைவனும் அவ்வொளியிலே புறப்பட்டு போகாதவனாய் நிலைபெற்று திகழ்வான்.

587. பிரத்தியாகாரத்தில் உலகம் முழுவதுமே இருந்த நிலையில் அறியப்படும். வெறுக்கத்தக்க அறியாமையான இருளை நீக்கி வேறுபாட்டைச் செய்யும் இறைவனை நாடுங்கள். சிவானை விரும்பும் சிந்தையில் உறுதியாக இருந்தால் சிவஞானம் பெற்ற தேவர் ஆகலாம்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:12

பிராணாயாமம்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

பிராணாயாமம்!

564. உடலுக்கும் ஐம்பொறிகளுக்கும் தலைவனான ஆன்மா உய்வு அடைந்து மேன்நிலையடைய பிராணன் என்ற குதிரை உள்ளது. அது உடலை விட்டகன்று அண்டத்தைப் பற்றி நின்றவருக்கு வயப்படும். மெய் உணர்வு இல்லாமல் கண்டத்தைப் பற்றி இருப்பவர்க்கு அப்பிராணன் வயப்படாது.

565. நல்லவனான ஆரியன் என்ற மனதில் ஒடுகின்ற அபானன் பிராணன் என்ற இரண்டு குதிரைகளையும் வெளியில்விட்டு உள்ளே நிறுத்துகின்ற திறமை வுடையவரில்லை. குருநாதரின் அருள் கிட்டினால் பிராண செயம் பெற்று பிராணன் அபானன் ஆகியவற்றைச் சேர்த்து பிடிக்கலாம்.

566. பறவைவிட வேகமாகச் செல்லும் பிராணன் வழி சிரசை நோக்கிச் செல்லும்போது கள் உண்ணாமலேயே அதைச் செய்பவனுக்கு மகிழ்வு உண்டாகும். உடலில் சேம்பல் நீங்கி சுறு சுறுப்பு ஏற்படும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனம் உடையவர்க்கு இது உரித்ததாகும்.

567. உலக நினைவுகளை எண்ணாதவனுக்கு பிராணனும் மனமும் அடங்கி ஒடுங்கும்போது பிறப்பும் இறப்பும் இல்லை. பிராணான் நிலைதடுமாறி பேச்சு அறிவித்தால் பிராணன் ஒடுங்காது பிறப்பு இறப்பில் உழல்வர்.

568. இடப்பக்கத்தில் காற்றை உள்ளுக்கிழுக்கும் பூரகம் 16 மாத்திரை அளவும். இழுத்த காற்றை 64 மாத்திரை அளவு உள்ளே நிறுத்துதல் கும்பகம் பின் அக்காற்றை 32 மாத்திரை அளவு மெல்ல வலப்பக்கம் வெளியே விடுதல் ரேசகம் என்றாகும். இம்முறைக்குமாறாக வலப்பக்கம் காற்றை இழுத்து கும்பித்து மெல்ல இடப்பக்கம் வெளியே விடுதல் வஞ்சனை.

569. காற்றை இழுத்து தன்வசப்படுத்தி அடக்கி பிராணாயப் பயிற்சி செய்பவன் உடல் பளிங்கைப்போல் மாசு இல்லாத தூய்மையுடையதாய் முதுமை அடைந்தாலும் இளமைத் தோற்றத்துடன் இருப்பர். இதனுடன் குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட மென்மை உடையவனாகி எங்கும் செல்லும் ஆற்றலைப் பெற்று மேன்மை அடைவான்.

570. எங்கே இருந்தாலும் இடப்பக்க நாசி இடகலை வழியாக பூர்கம் செய்தால் அப்படி பூரித்த உடலுக்கு அழிவு என்பது உண்டாகாது. அங்கு கும்பகம் செய்து அந்தப் பிராணான் செல்லும் அளவு மேற்செல்லச் சங்கநாதம் ஏற்பட்டு மேன்மை கிட்டும்.

571. இடகலையில் ஏற்றி பிங்கலையில் இறக்கி கும்பகம் செய்து காற்றை இழுத்துப் பிடிக்கும் முறையை அறிந்தவர் இல்லை. அங்ஙனம் அறிந்தவர் இயமனைக் கடக்கும் குறிக்கோள் உடையவராவர்.

572. காற்றை தொண்டை மூலாதாரம் விலா ஆகியவற்றில் நிரம்பும் வண்ணம் பூரகம் செய்து விருப்புடன் வயிற்றில் கும்பகம் செய்து இரேசகத்தினால் உறுப்புகளை சுருங்க வைத்து இருப்பின் பெருமானின திருவருளைப் பெறமுடியும்.

573. இடைகலை வழியாக 16 மாத்திரை பூரகம் செய்து பிங்கலையில் 32 மாத்திரை அளவு இரேசித்து செய்கின்ற வேள்வியில் 64 மாத்திரை அளவு கும்பகம் செய்ய உண்மை விளங்கும்.

574. கட்டப்பட இவ்வுடல் தளர்ச்சி இல்லாமல் இரேசகம் செய்து 10 நாடிகளும் விம்மும்படி காற்றை உள்ளே இழுத்து பூரித்து நிரப்பிய பிராணன் அபானன் ஒன்று சேரப்பெற்று நேராய் நிமிர்ந்திருந்தால் இயமனால் உண்டாகும் பயம் இருக்காது.

575. உயிர்பாய் திரியும் காற்றை முறையான கும்பகத்தால் உள்ளே தூய்மை செய்வதால் உடல் உறுப்புகளில் குருதி ஓட்டம் நன்கு பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர் கறுத்து தோன்றும். ஒளிக் கதிர்களால் சூழப்பெற்ற ஆத்மா உடலில் நிலையாய் இருக்கும்.

576 உடம்பை இடமாகக் கொண்ட பிராணசக்தி குழந்தையாய் இருக்கும்போது 12 விரல் அளவு நீளம் சென்றும் புகுந்தும் இருக்கும். வயது முதிர்ந்தபோது நான்கு விரல் அளவை விட்டு விட்டு எட்டு விரல் அளவு மட்டும் செயல்படுகின்றது. விடுபட்ட அந்த நான்கு விரல் அளவையும் செயல்படுமாரு செய்பவர் ஐந்தெழுத்து வடிவத்தை பெறுவார்.

577. பன்னிரண்டு விரல் அள்வு செயல்படும் பிராணான கதிரவனுக்கு பகல் இரவு என்றுண்டு. மூக்கிலிருந்து தொண்டைவழி கீழ் நோக்கிச் சுவாசப்பைக்கு காற்று செல்லுவதை ஆன்மா அறியாது. கீழ்முகமாகச் செல்லாமல் மேல்நோக்கிச் செல்லும் பிராணானை ஆன்மா அறிந்தால் பிராணன் என்ற கதிரவன் இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் ஒளிவீசும்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:11

ஆசனம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஆசனம்!

558. பத்மாசனம் முதலிய பல ஆசனங்களில் எட்டு மிக முக்கியமானவை. சொங்கு-சேர்வு இல்லாமல் இருக்கும் சுகாசனத்தில் பொருந்தி இருக்கத் தக்கவன் தலைவன்.

559. ஒருபக்கம் அணைந்த காலைத் தொடையின்மேல் ஏறும்படி செய்து மிகவும் இழுத்த நிலையில் வலப்பக்கத் தொடையில் இடக்காலையும் இடப்பக்கத் தொடையில் வலக்காலையும் வைத்து கைகளை மலர்ந்தி தொடையின்மீது வைப்பது பார் புகழும் பத்மாசனம் ஆகும்.

560. குற்றமில்லா வலக் காலை இடப்பக்கத் தொடையின்மீது இருக்குமாறு வைத்து முழங்காலின் மீது கைகளை நீட்டி தளரும் உடலை நேர் செம்மையாக இருக்கச் செய்து சிறப்படைவது பத்திராசனம் ஆகும்.

561. பத்மாசனம்போல் கால்கள் இராண்டையும் தொடையின் மேல் வைத்து கணைக்காலுக்கும் முழங்காலுக்கும் இடையில் கைகளை நுழைத்து தரையில் ஊன்றி உடலின் சுமை கைகளில் தாங்குவதற்கான சமநிலையில் தெரிந்து அசையாதபடி நிறுத்துதல் குக்குட ஆசனம் ஆகும்.

562. பாத நுணிகளைப் பூமியில் ஊன்றி காலை மடித்தமர்ந்து முழங்காலில் கைகளை நீட்டி வாயைப் பிளந்துகொண்டு கண்களை புருவ நடுவை பார்த்தவாறு இருப்பது சிம்மாசனம் ஆகும்.

563. பத்திரம், கோமுகம், பத்மாசனம், கேசரி, குக்குடம், வீரம், சுகாசனம் ஆகிய ஏழும் மேலானவை. பழமையான நூற்றி இருபதாறில் இந்த ஏழும் உள்ளன.
வலப் பக்கம் பின் பகுதியில் வலக்கால் பரப்பையும், இடக்கால் பரப்பையும் சேர்ப்பது கோமுகாசனம். வலப்பக்கத் தொடையின்மீது இடக்கால் பரப்பைச் சேர்த்து இருத்தல் வீராசனம்.

#####

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

மூன்றாம் தந்திரம்!

அட்டாங்க யோகம்!

549. சரியாய் கட்டுப்படுத்தப்பட்ட உயிர்மூச்சான பிராணன் ஒன்று இழுக்கப் பெற்று அது பன்னிரண்டு விரற்கடை அளவு கழுத்திற்கு மேலும் கீழும் இயங்குமாறு எண்ணி அட்டாங யோகத்தை எடுத்துக் கூறி நந்தியெம்பெருமான் தீமையை போக்கவும் நன்மையை மேற்கொள்ளவும் வழிவகை செய்துள்ளான்.

550 முன் சொன்ன வண்ணம் புலடக்கத்தில் நன்றாற்றல் நெறியில் நின்று தன்னை மறந்திருக்கும் சமாதி நிலையில் இருந்து உய்வு பெறவும் முன்னால் வழிகாடி பின்னால் நிற்கும் பராசக்தியின் துணையை அடைந்து நெஞ்சு, தலை, உச்சி, கண், கை ஆகிய கருவிகளான உறுப்புகளைச் சிவனது உடமை என்றெண்ணி இருக்கும் இம்முறையில் இந்த யோகத்தை கூறிச் செல்வான்.

551. அதுவழி இது வழி என்று தடுமாறாமல் இறைவனை அடைய அட்டாங்க யோக நெறியில் சென்று சமாதி நிலையை அடையுங்கள். அப்படிப் பொருந்திய உயிர்க்கு ஞான யோகம் அடைந்து சிவப்பேறு அடையலாம். அப்படி ஞானம் கைகூடாமல் போனாலும் பிறவிற்கு என வரும் நெறியில் ஓர் உடலில் பொருந்துவது என்பது இல்லாமல் போகும்.

552. இயமம், நியமம் அளவில்லா ஆசனம் நன்மையான பிராணயாமம், பிரத்தியாகாரம் வெற்றிதரும் தாரணை, தியானம், சமாதி ஆகியவை நல்வினைகள் பொருந்திய எட்டுவகை உறுப்புகளை உடைய யோக நெறியாகும்.

#####

இயமம்!!

553. தொடர்ச்சியாக எட்டு திக்குகளிலும் மழை பெதாலும் குளிர்விக்கும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள் என நந்தியெம்பெருமான் பவளம் போன்ற குளிர்ந்த சடையுடனே பொருந்திய சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர், ஆகிய முனிவர் நால்வர்க்கும் அருள் புரிந்தான்.

554. எந்த உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், திருடாதவன், நல்ல குணத்தை உடையவன், தீமை செய்யாத நல்லவன், பணிவுடையவன், நீதி வழுவாதவன், தன் பொருளைப் பகிர்ந்தளிப்பவன், குற்றம் செய்யாதவன், கள், காமம் இல்லாதவன் ஆகிய இந்த இயல்புகளை உடையவன் இயமத்தை மேற்கொள்ள தகுதியுடையவன்.

#####

நியமம்!

555. நியமத்தை மேற்கொள்பவன் நாதவடிவான பழமையானவனை, பேரொளியுடன் திகழ்பவனை, மூலாதரத்தில் அக்னிமய்மாய் இருப்பவனை, சிவனிடம் பிரிவின்றி இருக்கும் சக்தியுடன் உயிர் உடலுடன் இனைந்து நிற்கும் தன்மையை உணர்ந்து ஒழுகுதல் வேண்டும்.

556. தூயதன்மை, அருள், குறைந்த உணவு, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு காமம், களவு, கொலை ஆகியவற்றைத் தீமை என ஒதுக்கி இந்த பத்தையும் மேற்கொண்டே நியமத்தினை பின்பற்றல் வேண்டும்.

557. தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வநம்பிக்கை, கொடை, முப்பொருள் உண்மை கேட்டல், வேள்வி, சிவபூசை, பேரொளி தரிசனம் ஆகிய பத்தையும் நியமத்தினை மேற்கொள்பவன் உயர்நிலையில் கடைபிடிக்க வேண்டும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27034252
All
27034252
Your IP: 3.16.130.1
2024-04-18 15:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg