குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
Displaying items by tag: வெற்றிக்கு பொறுமை வேண்டும்!
வெற்றிக்கு பொறுமை வேண்டும்!
துன்பத்தில் உழன்று கொண்டிருந்தவன் கோவிலுக்குச் சென்றான். தன் குறைகளை புலம்பிக் கொண்டே வழிபட்டான். அப்போது சுற்றுச்சுவற்றில் ஓர் விக்ரகம் இருந்ததைப் பார்த்தான். அதன் அடியில் தமிழ் மொழியின் படிவம் இருக்க அதை சிரமப்பட்டு படித்தான். அதில் ‘இந்த விக்ரகத்திற்கு ஒரே தடவையில் 100 குடம் தண்ணீர் ஊற்றி வழிபட்டால் அவனுக்கு ராஜயோகம் கிட்டும்’ என்ற வாசகத்தை கண்டதும் தன் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைத்து விட்டது என நம்பி செயல்படலானான்.
பக்கத்திலிருந்த குளத்திலிருந்து நீர் கொண்டுவந்து அபிஷேகம் செய்ய ஆரம்பித்தான். கவனமாக எத்தனையாவது குடம் அபிஷேகம் என்பதைக் கணக்கிட்டுக்கொண்டான். 95 குடம் நீர் அபிஷேகம் ஆனது. அவனுக்கு ஓர் சந்தேகம். இவ்வளவு அபிஷேகம் ஆகியும் இன்னும் ராஜயோகத்திற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையே என்று கவலையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தொடர்ந்து அபிஷேகம் செய்தான். 98 ஆயிற்று, 99 ஆயிற்று. ஒன்றும் நடக்கவில்லை. வருத்தமடைந்தான். கோபம் கொண்டான். பொறுமை இழந்தான். 100 வது குட நீரை கொண்டுவந்து விக்ரகம் முன் போட்டு உடைத்தான்.
அப்போது அந்த விக்ரகம் பேசியது. ‘பக்தா..99 குடம் அபிஷேகம் செய்தது மகிழ்ச்சி. ஆனால் 100 வது குடம் வரை பொறுமையின்றி கடைசி குடத்தை பாதத்தில் போட்டு உடைத்து அபசாரம் செய்துவிட்டாய். இந்த அபசாரத்திற்கு பொறுமைக்கு அடையாளமாக 7கழுதைபிறவி எடுத்து பின் மீண்டும் மனித ஜென்மம் கிடைக்கும் போது 100 குடம்நீர் அபிஷேகம் செய்வாயானால் உனக்கு ராஜயோகம் என்று கூறி மறைந்தது. “கடைசி நிமிடம் வரை பொறுமையுடன் செயல்பட்டால்தான் காரிய சித்திகிடைக்கும்.”
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.