gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:28

சத்திநாயனார்

31. சத்திநாயனார்

கீழையூர் அருகிலுள்ள விரிஞ்சையூரில் வேளாளர் குலத்தில் சக்தியர் பிறந்தார். அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில் தண்டித்தால் அப்பாவம் மறுமையில் தொடராது. அப்படி தண்டிக்காதிருப்பின் செய்த பாவம் ஒன்றுக்கு ஆயிரமாக வளர்ந்து மறுமையிலே துன்புறுத்தும். எனவே அதை முளையிலேயே களைவது நன்று.

அடியார் நிந்தனை செய்பவரை இம்மையிலேயே கருணை கொண்டு தண்டித்து வந்தார் சக்தியர். அடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து உரைப்பாரேல் அவர் நாவை குறட்டினால் பிடித்து இழுத்து கத்தியால் அரிவர். அதனால் அவர் சக்தியர் எனப்பட்டார். தன் திருத்தொண்டினை பல ஆண்டுகள் செய்துவந்து இறவன் அடி சேர்ந்தார்.

விரிஞ்சையூர்- இரிஞ்சூர்- வேதபுரீஸ்வரர் திருக்கோவில்- சக்திநாயனார் சன்னதி.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:27

சாக்கியநாயனார்

32. சாக்கியநாயனார்

திருச்சங்கமங்கை என்ற ஊரில் வேளன் குலத்தில் பிறந்தார் சாக்கியர். கல்வி கேள்விகளில் சிறந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்புடையவராயிருந்தார். எங்கே இருந்து வந்தேன், எங்கே போகிறேன், பிறப்பு, இறப்பு ஆகியவைகள் உள்ளத்தை குடைந்தன. சாதலையும் பிறத்தலையும் தவிர்க்க நினைத்தார். காஞ்சிநகர் சென்றார். நன்கு கற்றறிந்து அறிஞர் ஆனார். ஈர்ப்பால் சாக்கியமதத்தைச் சார்ந்தார். பின்னர் சிவநெறியே உயர்ந்தது எனச் சிந்தைக் கொண்டார். புறத்தே சிவ வேடம் மேற்கொள்ளவில்லை. சிவலிங்க வழிபாடு சிறந்தது. தெளிந்தது சாக்கியர் உள்ளம்.

தினமும் சிவலிங்கத்தைக் கண்டபின்னரே உணவு உண்பார். ஒர்நாள் வழியில் ஓர் சிவலிங்கம் இருக்க கண்டர். வழிபட நினைத்தார். மலர்கள் இல்லை. அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து மலராக நினைத்து போட்டார், இறைவனும் கல்லை மலராக்கி ஏற்றுக்கொண்டார். அடுத்தநாள் அங்கு வந்தவர் முதல் நாள் நான் ஏன் அப்படி நடந்தேன். ஈசன் செயல். அதேபோல் இன்றும் செய்வேன் என மீண்டும் செங்கல்லால் பூஜித்தர். அன்பு நெறியால் தொண்டர்கள் செய்யும் செயல் இறைவனுக்கு உகந்த பூசையாகிறது.

ஒருநாள் வழிபடமறந்து உணவு உண்ண அமர்ந்தார். அப்பொது கல்லெறியாமல் சாப்பிடுகிறோமே எனக்கூறி எழுந்தார். கல்லை எடுத்துக் கொண்டு பேரன்புடன் ஓடிவரும் சாக்கியர்முன் சிவலிங்கம் இருக்க வில்லை. உமாதேவியருடன் சிவன் இருந்து அருள் புரிந்தார். சாக்கியர் சிவலோகம் அடைந்தார்.

காஞ்சி- சங்கமங்கை- கோவில் உள்ளே சிவலிங்கத்துடன் அருகில் சாக்கிய நாயனார் கல்லெறிவது போன்ற காட்சி.

                                   ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:25

சிறப்புலியநாயனார்

33. சிறப்புலியநாயனார்

திருஆக்கூர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சிறப்புலி பிறந்தார். தன்னிடம் உள்ள பொருள்கள் யாவும் சிவன் தந்தது என எண்ணி அடியவர்கள் கேளாமுன்னமே அடியவர்கட்கு கொடுத்து மகிழ்பவர். அடியவர்களிடமும் ஆண்டவனிடமும் அளவற்ற பக்தி கொண்டு பல திருத்தொண்டுகள் செய்து வந்தார்.

பக்தியின் முதற்படி தம்மிடம் இருப்பதை பிறர்க்கு கொடுப்பதே. சிறப்புலியார் தன்னை நாடிவந்தவர்களுக்கு எல்லாம் மாரிபோல் வாரி வழங்கும் தன்மையர். ஆதி மந்திரமாகிய ஐந்தெழுத்தோதி சிவவேள்வி செய்பவர். சிவ புண்ணியங்கள் பல செய்து இறைவன் இதயத்தில் நிறுத்தி அடியவர்பால் அன்பு கொண்டு அவர்கட்கு வேண்டியன வேண்டியாங்கு கொடுத்து அம்பலவாணர் திருவடி நிழலில் கலந்தார்.

ஆக்கூர்- தாந்தோன்றீஸ்வரர் நெடுங்கண்னி திருக்கோவில்—சிறப்புலி நாயனார் சிலை.   ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

                                               

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:23

சிறுத் தொண்டநாயனார்

34. சிறுத் தொண்டநாயனார்

திருச்செங்காட்டாங்குடி என்ற ஊரில் வைத்தியர் மரபிலே பரஞ்சோதியார் பிறந்தார். அவர் சிறந்த போர் வீரர். வடமொழி நூல்களையும் மருத்துவ நூல்களையும் கற்று விளங்கினார். யானை எற்றம், குதிரை ஏற்றம், வாட்போர் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். சிவனை நாளும் வணங்கி வந்தார். அவர் சோழநாட்டை ஆண்ட பல்லவ மன்னனிடம் போர்த்தளபதியாய் இருந்தார்.

இரண்டாம் புலிகேசியை வாதாபியில் வென்று அங்கிருந்து பொன்னும் மணியும், யானைகளையும் குதிரைகளையும் கொணர்ந்தார். நரசிங்கவர்மனின் அன்பிற்கு உகந்தவரானார். அவர் வீரர் மட்டுமல்லாமல் சிறந்த சிவபக்தராகவும் இருப்பதால் அவரை யாராலும் வெல்ல முடியாது என்று அனைவரும் கூறியதைக் கேட்ட மன்னன் அவருடைய பெருமை எனக்குத்  தெரியாமல் போய்விட்டதே. சிவனடியாரை போர்முனைக்கு அனுப்பினேனே என வருத்தமுற்று இனி நீங்கள் என்னிடம் பணி செய்யலாகாது. நிறைந்த நிலங்களையும் நிதிகளையும் பொன்னும் நவமணியும் கொடுத்து தங்கள் ஊர் சென்று விரும்பிய வண்ணம் தொண்டு செய்யுங்கள் என அனுப்பினார். பரஞ்சோதியார் திருச்செங்காட்டாங்குடி வந்தார்.

வாதாபியில் புகழ்பெற்ற பிள்ளையார் வழிபாட்டை தன் வெற்றிச்சின்னமாக விநாயகரைப் தமிழகத்திற்கு கொண்டுவந்து கணபதி ஈச்சுவரம் என்று தலம் நிறுவி விநாயகரை நிறுவினார். திருவெண்காட்டு நங்கை எனும் பெண்ணை மணம் புரிந்தார். இல்லறம் இனிது நடந்தது. அடியவர்களிடம் மிகவும் அடக்கமாய் வழிபடும் பண்பினர், அதனால் அவரை சிறுத்தொண்டர் என அழைத்தனர். அடியவர்களை அழைத்துவந்து அவருக்கு திருஅமுது அழித்து பின்னேதான் உண்ணும் பழக்கம் மேற்கொண்டார்.

அவர்க்கு சீராளன் என்றமகன் பிறந்தான். ஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர் வீட்டில் சிலநாள் தங்கியிருந்தார். சிறுதொண்டருடைய அன்பை நுகர்வதற்கு சிவன் பைரவர் கோலத்தில் வந்தார். அன்று அடியார் யாரும் இல்லத்திற்கு வராததால் சிருத்தொண்டர் அடியாரைத்தேடி வெளியில் சென்றார். அப்போது பைரவர் அவர் வீட்டிற்கு வந்தார். அவரது துணைவியார் என்ன சொல்லியும் கேளாமல் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் இருக்க மாட்டேன். நான் வடநாட்டிலிருந்து அவர்பெயர் கேட்டு வந்தேன். கணபதி ஈச்சுவரத்தில் உள்ள ஆத்திமரத்தின் கீழ் இருகின்றோம். அவர் வந்தால் கூறுவீர் என்றார்.

அடியவர் யாரும் காணமல் வீடு வந்த சிறுத்தொண்டர் விபரம் அறிந்து கணபதி ஈச்சுவரம் அடைந்து பைரவர் காலில் வீழ்ந்து வணங்கினார். வீட்டில் அமுது உண்ண அழைத்தார். பைரவர் எனக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை தான் பசு உண்ணுவது. அந்த நாள் இன்றுதான். நான் உண்ணும் பசு ஐந்து வயதிற்கு உட்பட்ட மனிதப்பசு என்றார். அதுவும் ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாய் இருக்க வேண்டும். தாய் பிடிக்க தந்தை அறிய வேண்டும். இருவரும் மனம் உவந்த கறியைத்தான் நாம் உன்பது என்றார். அடியார் அமுது உண்ண இசைந்தாரே என்ற மகிழ்வில் எதுவும் அரியது இல்லை என்றார்.

இல்லம் வந்தார். பைரவர் என்ன சொன்னார் எனக்கேட்டார் துனைவியார். அனைத்தும் சொல்லி சிறுதொண்டர் தம் மகனை அழைத்தார். அணிகலன் அணிவித்து முத்தம் இடப்போனாள் துனைவி. தடுத்தார் தொண்டர். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராள தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்றார். தாதியர் கறியைப் பலவேறாக சமைத்தனர். பைரவரிடம் சென்று அவர் விருப்பப்படியே பசு தாயாரக இருக்கின்றது என்றார்.

பைரவரை ஆசனத்தில் இருத்தி மலர் சார்த்தி பாதப்பூசை செய்தார். பின் அமுது உண்ண அழைத்தார். பைரவர் சிறுதொண்டரே நான் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் சுவையாக கறிசமைத்தீரா என்று கேட்டார். நங்கையார் தலக்கறி அமுதுக்காகாது என கழித்தோம் என்றார். பைரவர் அதுவும் நாம் உண்பேம் என்றார். சிறுத்தொண்டரும் மனைவியாரும் சிந்தை கலங்கி திகைத்து அயர்ந்தனர்.

தாதியர் அதையும் தாம் சமைத்தோம் என கொண்டு வந்தார். அப்போது தனியாக சாப்பிடமுடியாது யாரேனும் அடியார் இருந்தால் கூப்பிடுங்கள் என்றார். அடியார் கிடைக்காமல் வருத்தப்பட்டவருக்கு இன்று என்னதான் சோதனையோ. நானும் ஓர் அடியார் எனக்கூற, சரி அப்படியானல் இவருக்கும் ஓர் இலைபோடச் சொன்னார். வந்த பைரவர் இன்னும் ஏதாவது ஒன்றைச் சொல்லிவிடக்கூடாதே என்ற எண்ணத்தால் சிறுத்தொண்டர் விரைவாக சாப்பிட உட்கார்ந்தார். சிறுத்தொண்டரே ஆறு மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடும் எனக்கு முன் நீர் உன்பது முறையோ என்றார். நாம் தனியாக எப்படி உண்பது. முன்பு நான் பார்த்த உம் மைந்தனை அழையுங்கள் உடன் வைத்து உண்ணலாம் என்றார்.

சிறுதொண்டர் மிகவும் தளர்ந்தார். பிள்ளையைத்தான் கறி சமைத்தேன் என்றால் அடியவர் அமுது செய்வாரோ மாட்டாரோ புரியவில்லை. ஏதாவது பொய் சொல்லவும் மனமில்லை. எனவே அவன் இப்போது உதவான் என்றார். பைரவர் தாம் இங்கு உணவு உண்பது அவன் வந்தால்தான் போய்க்கூப்பிடும் என்றார். கணவன் மனைவி இருவரும் வாயிற்புறத்தே சென்று என் செய்வது என்று புரியாமல் மகனே சீராளா வருவாய் என்று அழைத்தனர். அடியவர் அமுது உண்ண அழைகின்றோம் வா என்றனர்.

எம்பெருமான் அருளாளே பள்ளியிலிருந்து ஓடிவருபவன்போல் வந்த சீராளதேவரை தூக்கி கணவரிடம் கொடுத்தார். மகனைக் கூட்டிக்கொண்டு வேகமாக உள்ளே வந்தவர் பைரவரைக் காணாமல் திகைத்தார். கலத்தில் இருந்த கறியமுதம் ஒன்றுமில்லை. அப்போது விடைமீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிகொடுத்தார்.

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:16

சுந்தரமூர்த்திநாயனார்

35. சுந்தரமூர்த்திநாயனார்

திருக்கையிலையில் சிவனுக்கு சூட்ட மாலையும் திருநீறும் எடுத்து தரும் தூய ஆன்மாவாக இருந்தவர் ஆலால சுந்தரர். ஈசன் மண்ணுலக மாந்தர் எல்லாம் அடியவர்கள், தொண்டர்கள் பெருமையை மக்கள் உணர, சுந்தரரை மண்ணுலகுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். எப்போதும் போல் நந்தவனத்திற்கு மலர் கொய்யச் சென்ற சுந்தரர், உமையின் சேடியர்களான கமலினி, அனிந்தை இருவரும் பூக்கொய்ய வந்து திருப்பும்போது சுந்தரர் காட்சியில் வந்தனர். மனத்தைப் போக்கிய சிவனே மாதர்மேல் மனம் வைத்தனை என்று கூறி அந்த பெண்களுடன் காதல் இன்பம் களித்துவர பணிந்தார். இறைவனைப் பிரிய மனமின்றி வேறு வழியில்லாததாலும் இறைவா, உன் ஆணைப்படி மண்ணுலகில் பிறக்கின்றேன், உலகம் மாய அறிவு கொண்டது. உலக மயக்கத்தில் நான் இருக்கும்போது எனைத் தடுத்து ஆட் கொள்ளவேண்டும் என வேண்டி சிவனின் அருள் பெற்றார்.

மழை இடைவிடாமல் பெய்துகொண்டிருக்க ஒரு பெரியவர் வீட்டில் படுத்திருந்தார். அப்போது ஒரு குரல் மழை அதிகமாக இருக்கின்றது உள்ளே வரலாமா என்றது. அந்தப் பெரியவர். ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம், உள்ளே வாருங்கள் என்றார், அந்தச் சமயம் இன்னொரு குரல் உள்ளே வரலாமா என்றது. அவ்விருவரும் ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம், மூவர் நிற்கலாம் வாருங்கள் என்றனர். என்னே அன்பு. மனித நேயம். அப்போது நான்காவதாக ஒருவர் தோன்றி மூவரையும் நெருக்கினாராம். மூவரில் ஒருவர் விளக்கேற்றிப் பார்க்க நாராயணன் சங்கு சக்ரதாரியாக அங்கு இருக்க கண்டனர். இவர்கள் வழிபாடு நடத்திய மண்டலம், நாடு நடுநாடு.

அந்த நடுநாட்டில் திருநாவலூரில் வாழ்ந்த ஆதிசைவக் குடும்பத்தின் சடையனார் – இசைஞானியார் ஆகிய இருவரின் மகப்பேறு வேண்டிய தவத்தினால் சிவன் அருளால் திரு அவதாரம் செய்தார் ஆலால சுந்தரர். சேடியர்களில் கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் பிறந்தார். அனிந்தை ஞாயிறு என்ற ஊரில் வேளாள குலத்தில் பிறந்தார்.

சடையானாரும் இசைஞானியாரும் தம் குழந்தைக்கு நம்பியாரூரர் எனப் பெயர் வைத்து அன்பைக் கொட்டி வளர்க்க நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை பேரழகு உடையவனாக வளர்ந்தது. ஒருநாள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழி சென்ற மன்னன் குழந்தையின் அழகில் மயங்கி தனக்கு அக்குழந்தையை மகனாகக் கொடுக்க வேண்டினார். அந்த வேண்டுகோள் சடையனாரின் மனத்தைக் கரைத்துவிட நம்பியாரூரர் சுவீகாரம் மூலம் மன்னர்மகன் ஆனார், பெறாமல் அன்பினால் மகமை கொண்டார் நரசிங்கமுனையர் என்ற அந்த மன்னன்.

அரண்மனையில் வளர்ந்தாலும் அந்தனர்குரிய முறைகளையும் பயின்றார் நம்பியாரூரர். அந்தக்கால முறைப்படி 16 வயதினில் அவருக்கு அந்தனர் வழியிலே பெண் பார்த்து குணநலன் மிக்க சடங்கவி என்ற அந்தணன் இல்ல மகளை பேசி மணம் முடிக்க முடிவாயிற்று. ஆயிரம் பேரைப் போய் விசாரித்துப் பேசி திருமணம் செய் என்ற பழமொழிக்கு ஏற்ப விசாரனை முடிந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

ஆரூரருக்கு மங்கல நீராட்டு நடைபெற்று குதிரை ஏறி வலம் வந்து மணமேடையில் அமர்ந்ததும் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்த்தனர். மணப் பெண் மேடைக்கு வரும் வேளையதில் ஒரு பெரியவர் நெற்றியிலே திருநீற்றுடன் கழுத்திலே உருத்திராசமாலையுடன் கைத்தடியூன்றி மேடையருகினில் வந்தார். அக்கூடத்தில் இருந்தவர்கள் அனைவரின் பர்வையையும் அவர் கவர்ந்தார். அவர்கள் இதுவரை இளமைதான் அழகு என எண்ணியவர்கள். இப்போது ஒரு முதியவர் தோற்றம் அதைவிட அழகாக இருக்க கண்டு வியந்தனர். முதுமையே பேரழகு என்றனர்.

அப்போது அந்தப் பெரியவர் மேடை அருகே நின்று நான் சொல்லுவதைக் கேளுங்கள் என்றார். மேளதாள ஓசை முதல் அனைத்தும் நின்றது. எல்லோரும் அவரையே பார்த்தனர். அவர், மணமகனைப் பார்த்து ஆரூரா, உனக்கும் எனக்கும் ஒரு வழக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்ளது. அதனை முடித்துவிட்டு திருமண வேள்வியைச் செய் என்றார். மேலும் ‘’திருநாவல்நகர் ஆரூரர் என் அடிமை” என்பதுதான் என் வழக்கு என்றார். உலகத்தில் இல்லாத செய்தியாக, குற்றமற்ற அந்தணர்கள் வேறு ஒரு அந்தணருக்கு அடிமை என்று சொல்லும் முதல் ஆள் நீ, இதனை நம்ப மாட்டேன் என ஆரூரர் தெரிவிக்க பெரியவர் அதற்கான அத்தாட்சி இதோ அடிமைச்சீட்டு என காண்பிக்க, அதைக் கைப்பற்ற ஆரூரர் பெரியவரை மணவறையைச் சுற்றி துரத்தி அதைப் பற்றி கிழித்துவிடுகிறார்.

ஒருவரிடம் உள்ள ஓலையை வாங்கி அதை மற்றவர்கள் படிக்குமுன் கிழிப்பது தர்மமா. என்றும் ஓலையைக் கிழித்ததனால் அடிமை என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்றார் பெரியவர். ஊர் பெரியோர்கள் பெரியவரின் சொந்த ஊரான வெண்ணெய் நல்லூருக்குச் சென்று அங்கு அவையில் பேசலாம் என முடிவெடுத்தனர்.

வெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தில் ஆரூரரின் உறவினரும் இரண்டு ஊர் பெரியவர்களும் வந்திருந்தனர். நாவலூர் ஆரூரன் என் அடிமை என்று நான் காட்டிய ஓலையை கிழித்து விட்டான். இதுதான் என் வழக்கு என்றார் பெரியவர். அந்த மன்ற நடுவர் அந்தணரே, அந்தணர் அடிமை என்பது இம்மாநிலத்திலேயே இல்லாத ஒன்று நீர் கூறுவது புதுமையாக இருக்கின்றது என்றார். ஆரூரன் என் மனத்திற்கு எட்டாத மாயையாக இருக்கின்றது இவர் கூற்று என்றார். நடுவர், பெரியவரே நீங்கள் சொல்வதற்கு எந்த சாட்சியும் இல்லை, ஆதாரமும் இல்லை, எப்படி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவது என்றனர்.

பெரியவர் இவன் கிழித்தது படி ஓலை. மூலம் மடியில் வைத்துள்ளேன். எனக்கு பதுகாப்பு தருவதாக இருந்தால் அதைக் காண்பிக்கின்றேன் என்றார். அவையோர் உறுதியளிக்க அவர் காட்டிய ஒலையைப் படித்து அப்போது அதில் சாட்சியிட்டிருந்தோர் அது தம் கையெழுத்து என ஒப்புதல் அளிக்க. ஆரூரர் அது தன் பாட்டனார் கையெழுத்து என ஒப்பு நோக்கிச் சொல்ல நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.

நம்பியாரூராரே நீர் தோற்றீர். அவர் இடும் பணியை ஏற்று அவர் சொல்வழி செயல்படுவது உன் கடன் என்று தீர்ப்பு வழங்கினர். அப்போது கூட்டத்திலிருந்த சிலர் பெரியவரே நீங்கள் இந்த ஊர் என்கிறீர்கள் உங்களை நாங்கள் பார்த்தது கிடையாது யாது உங்கள் வீடு என்றனர். அப்பெரியவர் என்னை யாரும் அறியவில்லையெனில் என்பின்னே வாருங்கள் என் வீட்டை காட்டுகிறேன் என முன்னே செல்ல அனைவரும் பின்னே சென்றனர்.

திருவெண்ணெய் நல்லூரில் உள்ளே திருக்கோவிலான திருவருட்துறை கோவிலை அடைந்தார் பெரியவர். உள்ளே சென்று மறைந்தார். ஆரூரர் உட்பட பின் தொடர்ந்து வந்தவர்கள் திகைத்தனர். வான்வழி ஓர் ஓசை எழுந்தது.

மற்று நீ வன்மை பேசி வந்தொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கும் அன்பிற்பெருகிய சிறப்பின் மிகக்

அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்

செந்தமிழ் பாடு என்றார் தூமறை பாடும் வாயார்.

வேதங்களை எந்த வாயால் பாடினாரோ அந்தத் திருவாயால் ஆரூராரைப் பார்த்து ‘எமக்கு விருப்பமான வழிபாடு அர்ச்சனைப் பாட்டேயாகும்’. எனவே நம் செந்தமிழால் பாடு. என்னிடம் வன்மை பேசி வந்த நீ வந்தொண்டன் என்னும் நாமம் பெற்றாய் என்றது அவ்வோசை. என்ன சொல்லிப் பாடுவேன் என்ற ஆரூராருக்கு பித்தன் என்று சொல்லிபாட அருள் பிறந்தது. முதல் பாடல்

பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா

எத்தா மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

வைத்தாய்ப் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்

அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.

என்னைக் கோவில் தோறும் சென்று பாடுக என்ற அருள் வாக்கிற்கேற்ப பல தலங்களையும் வழிபட்டு அதிகை வீரட்டானம் சேர்ந்தார்.

அது அப்பரடிகள் சூலைநோய் தீர்த்த தலம். அப்பரடிகள் உழவாரப்பணி செய்து பல காலம் இருந்த தலம். இதை தாம் மிதிக்கலாகாது என்று ஊர் எல்லையில் உள்ள சித்தவட மடத்தில் மற்ற அடியார்களுடன் தங்கினார்.  நள்ளிரவு 2 மணியளவில் நம்பியாரூரார் தலைமேல் ஒரு பெரியவர் கால் நீட்டி உதைத்தார். அய்யா பெரியவரே என் தலைமீது தாங்கள் கால் நீட்டுவது ஏன் என்றார். வயது முதிர்ந்துவிட்டது எந்த திசையில் கால்வைப்பது எனத் தெரியவில்லை எனது மூப்பினால் என்றார். ஆரூரர் வேறு இடத்தில் படுத்தார். சிறிது நேரத்தில் அதே பெரியவர் மீண்டும் காலால் எட்டி உதைத்தார். ஆரூரார் பெரியவரே என் முடிமீது கால் வைக்கின்றீரே என்றார். பெரியவர் பழைய பதிலான திசையறியா வகை செய்தது மூப்பு என்றார். இது அதிகாலை நாலரைமணி வரை நடைபெற்றது. ஆரூரர் சலிப்புற்று என்னை பலகாலும் மிதித்தனை நீர் யார் எனக் கேட்க என்னை அறிந்திலையோ என்று மறைந்தார் பெரியவர். அப்போதுதான் அது சிவன் என உணர்ந்தார். அடியார் திருக்கூட்டச் சாதியைச் சார்ந்த நான் அதன் தலைவனாகிய இறைவனை உணாரவில்லையே என மனம் நொந்து ‘தம்மானையறியாத சாதியர் உளரோ’ எனப்பாடினார்.

தில்லையில் கண், தாது, மூக்கு, செவி, வாய் ஆகிய ஐந்து பொறிகளும் கண்ணிலே நிலைத்து நிற்க வழிபட்டார் ஆரூரர். அந்தக் கராணங்களாகிய மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் சிந்தையிலே லயிக்க வழிபட்டார். தில்லையிலிருந்து புறப்பட்டு சீர்காழி சென்றார். ஞான சம்பந்தம்பிள்ளை திரு அவதாரம் செய்த ஊர்மண்ணை காலால் மிதிக்கக்கூடாது என எண்ணி ஊர் எல்லையில் தங்கியிருந்து சிவனை வழிபட்ட ஆரூரருக்கு வழியிலே கயிலைக் காட்சியைத் தந்தார் இறைவன். பின் திருவாரூரை நோக்கி சென்றார். அன்றிரவு அடியார்கள் கனவில் பெருமான் தோன்றி ஆரூரன் நாம் அழைக்க இங்கு வருகிறான். அவனுக்கு வரவேற்பு செய்யுங்கள் எனப் பணித்தார். ஊர் எல்லையில் அடியார்கள் பெரும் கூட்டமாக சென்று வரவேற்றனர். அங்கு சில நாட்கள் தங்கி காலையும் மாலையும் வழிபாடு செய்தார்.

ஆரூர் பெருமான் தோழமையாக தம்மை ஆரூரருக்குத் தந்தோம் என்று சொன்ன செய்தி அறிந்த அடியார்கள் நம்பியாரூரரை ‘தம்பிரான் தோழர்’ எனப் புகழ்ந்தனர். அம்பிகையின் சேடியான கமலினி திருவாரூரில் பதியிலார் குலத்தில் தோன்றியவருக்கு இப்போது பரவையார் எனப் பெயர். அவர் இறைவனுக்கு மலர்மாலையை கொண்டுவரும்போது ஆரூரரைப் பார்த்தார். ஆரூரர் அன்று இரவு பரவையரை நினைத்திருந்தார். அதேபோல் பரவையரும் ஆரூரரை நினைத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு அடியவர்கள் கனவில் தோன்றிய இறைவன் பரவையை நாம் ஆரூரனுக்குத் தந்தோம். அவர்களுடைய திருமணத்தை நடத்துங்கள் என்றார். திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இன்பத்தில் திளைத்தனர்.

எப்போதும்போல் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கச் சொல்லும் போது மண்டபத்தில் அடியார்கள் கூடி பாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தொண்டு செய்வது எப்போது என்று சிந்தித்துக் கொண்டு சுற்றி வரும் ஆரூரைக் கண்ட விறன்மிண்டர் அடியார் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவர் யார் என்றார். ஓலைகாட்டி அடிமையானவர் என்றனர். அடியவர் கூட்டத்தை மதியாமல் செல்லும் அவரை திருக்கூட்டத்திலிருந்து விலக்கி வைக்கின்றேன் என்றார். அருகிலிருந்தவர்கள் அவர் புற்றிடம் கொண்டவருக்கு மிகவும் வேண்டியவர் என்றனர். அப்படியானால் அவரையும் விலக்கி வைக்கின்றேன் என்றார்.

அதைக் கேட்ட சிவன் ஆரூரர் உள் நுழைவதற்கு முன்பே வெளிவந்து அடியவர்கள் புறக்கணித்தபின் என்னால் நிலை கொள்ள முடியவில்லை, அடியவர்களின் பெருமையை நான் சொல்கிறேன் நீ கேட்பாயாக ஆரூரா என்றார். அடியவர்களுடைய பெருமைக்கு நிகர் அவர்களேதான். அவர்கள் பெருமைக்கு முன் என் பெருமை சற்று குறைவுதான். அன்பினாலே என்னை அவர்கள் பெற்றவர்கள். உள்ளத்து ஒருமையால் உலகையே வெல்லக் கூடியவர்கள். குறையேது மில்லாதவர்கள். உலகில் துன்பம் வராதிருக்க வேள்வி செய்பவர்கள். திருநீற்றின் செல்வமே பற்று என்றும் சிவனின் அன்பே பேறு என்றும் நினைப்பவர்கள். வீடு பேற்றை கூட வேண்டாம் என்று பலன் கருதாது பக்தி செலுத்துகின்ற தொண்டர்கள். அவர்களை நீ சென்றடைவாய். குற்றமற்ற அந்த அடியவர்களை நீ சென்று பாடு எனப் பணித்து ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என முதல் அடியை எடுத்துக் கொடுத்தார். தில்லையில் கூத்தப் பெருமானை வழிபடுகின்ற அத்தனை பேரையும் சேர்த்தே ‘”தில்லைவாழ் அந்தணர்” என்றார்.ஆரூரர் குறிக்கோள் ‘யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்’ என்பதே.

அந்தணர் ஒரு சாதியில் தோன்றியவர் என்று யவரும் இல்லை. அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர்- அறத்தன்மை பூண்டு எவ்வுயிரும் ஈசன் கோயில் என்று எண்ணி வாழ்வோரே அந்தணர். சத்திய வாழ்வைக் கடைப்பிடிப்பதே அந்தணத் தண்மை.

நம்பி ஆரூரர் அரனையும் அரனடியாரையும் வழிபட்டு பரவையாரோடு இல்லறம் இனிது நடத்திவந்தார். ஆரூர் அருகில் உள்ள குண்டையூரின் குண்டையூர்கிழார் ஆரூரர் பால் கொண்ட அன்பினால் அவருக்கு வேண்டிய நெல்லை அளித்துவந்தார். வறட்சியால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆரூரருக்கு எப்படி நெல் அனுப்புவது என வேதனைப்பட்டார். உணவு உண்ணாது இருந்தார். அவர் கனவில் இறைவன் தோன்றி ஆரூரான் பொருட்டு நெல் கொடுத்தோம் என அருள் பாலித்தார். காலயில் எழுந்து பார்த்தபோது இருந்த நெல்மலையை எப்படி ஆரூருக்கு எடுத்துச் செல்வது என் குழம்பி ஆரூர் சென்று நடந்ததை ஆரூரரிடம் சென்னார். ஆரூரர் நெல் மலையைப் பார்த்து இது மனித முயற்சியால் கொண்டு செல்ல முடியாது என்று அருகில் உள்ள கோளிலி இறைவனிடம் ஆள் வேண்டி பாட இறைவனும் அன்று இரவு பரவையார் மாளிகை இருந்த வீதிக்கு தம் பூதகணங்களின் மூலம் எல்லா நெல்லையும் கொண்டு சேர்த்தார்.

நெல் மலையைக்கண்டு அதிசயத்து பரவையார் அடியவர்களிடம் உங்கள் மனை எல்லைக்கு உட்பட்ட நெல் குன்றெல்லாம் அவரவர் வீட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள் என அறிவிப்பை செய்தார். சில நாட்களிந்து ஆரூரர் திருநாட்டியத்தான் குடி என்ற ஊருக்குச் சென்றவரை கோட்புலி என்ற அடியவர் எதிர்கொண்டு அழைத்து கோவிலில் வழிபாடு நடத்தினார். கோட்புலியார் ஆரூரரை வணங்கிய சிங்கடி, வனப்பகை என்ற தம் இரு பெண்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டினார். நம்பிஆரூரர் கோட்புலியாரே அவர் இருவரையும் என் மக்களாக ஏற்றுக் கொண்டோம் என்றார். அங்கிருந்து திருவையாற்றுப் பெருமானை வணங்கி திருஆலம்பொழில் சென்று இரவு தங்கினார். இரண்டு தலங்களுக்கிடையில் உள்ள வயிரத்திருமேனிகொண்ட திருமழப்பாடி இறைவன் கனவில் என்னைப் பாட மறந்தனையே என்றார். திடுக்கிட்டு விழித்தவர் மெய்யுருகிப் பதிகம் பாடினார்.

வலிவலம் சென்று பதிகம் பாடுமுன் ‘நான் பாடுகிற பாடல் எதுவானாலும் நானாக சொன்னதில்லை, எனக்குமுன் வாழ்ந்த நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் சொல்லியதே’ எனச் சொல்லி பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாரூர் வந்து உத்திரத் திருவிழாவிற்கு பொருள் வேண்டி திருப்புகலூர் சென்று வழிபாடு செய்து கண் அயர்வில் அங்கிருந்த செங்கல்லை தலைக்கு அனையாக வைத்து படுத்தார், எழும்போது அச்செங்கல் தங்கமாக மாறியிருந்தது,

சிலநாட்கள் சென்றபின் திருச்சி நகர் வந்தார். திரு ஆனைக்கா சிவனை வழிபட்டார். சோழமன்னன் காவிரியில் குளிக்க மூழ்கியபோது அவனுடைய இரத்தின மலை நீரிலே காணாமற்போனது. கவலைப்படாமல் அது சிவனுக்குரியது என்றார். அப்போது சிவனை காவிரியில் இருந்து கொணர்ந்த நீரால் குளிப்பாட்ட மன்னன் சிவனுக்குரியது என்றமாலை சிவன் கழுத்தில் இருந்தது. அது பற்றி பதிகம் பாடினார். அங்கிருந்து விருத்தாச்சலம் சென்று கோவிலில் பெருமானை பாடி வழிபட்டார். உத்திரப் பெருவிழாவில் அடியார்க்கு அமுது படைக்க பொருள் தேவை என வேண்ட இறைவன் பதினாறாயிரம் பொற்காசுகளைத் தர அவற்றை என்னாலே எடுத்துக் கொண்டு போகமுடியாது நீங்களே அங்கே கொடுங்கள் என்றார் ஆரூரர். பெருமான் திருமுத்தாற்றிலே போட்டு திருவாரூர் குளத்திலே எடுத்துக் கொள் என்றார்.

பெருமான் கொடுத்ததில் மச்சம் பார்க்க கொஞ்சம் வைத்துக் கொண்டு மீதியை ஆற்றில் போட்டார். திருவாரூர் சென்றார். பரவையார் கேட்டார். பணம் காலையில் வரும் என்றார். காலை வந்தது. குளித்தார். வழிபாடு முடித்து குளக்கரைக்கு பரவையருடன் வந்தார். குளத்தில் மூழ்கி தேடினார். தேடிக்கொண்டே இருந்தார். மாலையாயிற்று, பரைவையார் இன்னும் என்ன குளத்தில் தேடுகின்றீர்கள் என்றதற்கு திருமுத்தாற்றில் போட்டேன் திருவாரூர் குளத்தில் எடுப்பேன் என்றார். பரவையார் ஆற்றில் போட்டு குளத்தில் எடுப்பது என்பதையா என்றார். அதை வைத்தே பதிகம் பாடினார், தான் மச்சம் பார்க்க எடுத்துவைத்தது தவறு என்றாலும் நீ இவ்வாறு செய்யக்கூடாது என்று பாட அருள் பெற்று காசு எடுத்து திருவிழாவில் அடியவர்க்கு அமுது படைத்து இன்புற்றார்.

பெருவிழா முடிந்ததும் தம் தல பயணத்தை அன்பர்களுடன் துவக்கி திருக்கருகாவூர் சென்றார். காலை முதல் உண்ணாமையால் மிகவும் களைபடைந்தனர். வழியில் ஒரு பெரியவர் என் பின்னால் வாருங்கள் என அழைத்து அவர்கொடுத்த கட்டமுதையும் நீரையும் சுவைத்து தங்கள் பசியையும் தாகத்தையும் போக்கினர். அனைவரும் கண்ணயர்ந்தனர். திடிரென்று வெயில் பட்டதும் விழித்தால் சோலையும் தெரியவில்லை பந்தலையும் காணோம் பெரியவரையும் காணோம். இத்தனை மாற்றம் நடந்தும் தெரியாமல் போனேனே என ஒரு பதிகம் பாடினார். பலதலங்களை வழிபட்டு திருக்கச்சூர் மலைக்கோவில் உள்ள மருந்தீசரை வணங்கி வெளியில் அமர்ந்திருந்தார். உணவு சமைப்பவர் வராததால் பசியுடன் இருந்தவர் முன்னால் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் பல இல்லங்களில் இரந்து வந்திருக்கின்றேன் என அமுது ஊட்டினார். அங்கிருந்து காஞ்சி சென்று வழிபட்டு திருவொற்றியூர் சென்றார்.

மாந்தாதா என்ற சிவபக்தர் இமயம் முதல் குமரிவரை பல அறநிறுவனங்களை நிறுவியதன் விளைவாக அவரின் வாழ்நாள்கூட அவரின் வாரிசுகள் இறந்தும் இவர் பன்னெடு நாள் வாழ்ந்தார். அது சலிப்பை ஏற்படுத்த அறிஞர்களை வரவழைத்து ஆலோசனை புரிய அவர்கள் மாந்தாதா செய்த அறங்களையெல்லாம் ரத்து செய்து பத்திரம் எழுதிக்கொடுத்தால் இறந்து விடுவீர்கள் என்றனர். பத்திரம் எழுதியாயிற்று. அன்று இரவு இறந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் படுக்கச் சென்றார். எதுவும் நடக்கவில்லை. பத்திரத்தை பெரியோர்கள் எடுத்து பார்த்தபோது அவர் செய்த அறங்கள் எல்லாம் திருவொற்றியூர் நீங்கலாக என எழுதியிருந்தது கண்டனர். எழுதும்போது திருவொற்றியூர் நீங்கலாக என எழுதவில்லை. அப்படியானால் திருவொற்றியூர் பெருமான் அதைச் சேர்த்துள்ளார். மாந்தாதா இறப்பை அப்போதைக்கு இறைவன் விரும்பவில்லை எனத் தெரிந்தது. இறவன் எழுத்து அறியும் பெருமான் ஆனார்.

அருகில் உள்ள ஞாயிறு என்ற தலத்தில் ஞாயிறுகிழார் என்பவரின் மகள் சங்கிலியார் பருவமடைந்தார். கயிலையில் உமாதேவியரின் சேடிகளில் ஒருவரான அனிந்ததான் இவர். பெற்றோர் அவருக்கு மணமுடிக்க விரும்பினர். அவரை மணம்பேச வந்தவர் இறந்ததால் அந்தச்செய்தி ஊரெங்கும் பரவியது. இறையருள் பெற்ற ஓர் அடியாரைத்தான் மணப்பேன் என்ற சங்கிலியார் விருப்பத்திற்கேற்ப கோவில் அருகே ஒர்வீடு அமைத்துக் கொடுத்தனர். அங்கிருந்து காலையும் மாலையும் வழிபட்டு இறைவனுக்கு மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு வந்த நம்பி ஆரூரர் சங்கிலியரைப்பார்க்க அவரும் ஆரூரரைப் பார்த்தார்.

பண்டைவினை தொடர அவரை மணம் செய்ய விரும்பிய ஆரூரர் இறைவனிடம் சென்று வேண்டினர். இறவன் உறுதியளித்தார். சங்கிலியர் கனவிலே வேதியராகச் என்று ஆரூரான் உன்னை மணக்க விரும்புகிறான். நீ உன் சம்மதத்தை கொடு என்றார். சங்கிலியார் அவர் திருவாரூரில் வசிப்பவர் என்றார். இறைவன் ஆரூரா உன்னை விட்டு பிரியேன் என்று ஓர் சத்தியம் செய்வாயானால் நீ அவளை மணந்து கொள்ளலாம் என்றார். ஆரூரர் தலயாத்திரை செய்யும்போது இந்த ஆணை இடையூறாக இருக்கும் என்பதால் பெருமானிடம் சங்கிலியாருக்கு நான் உறுதி செய்யும்போது கருவரையில் உன்திருமேனி இருக்காமல் கோவிலின் புறத்தே உள்ள மகிழமரத்தடியில் இருங்கள் என்றார். அங்கிருந்து புறப்பட்டு சங்கிலியார் கனவில் தோன்றி சங்கிலியாரே நீர் கேட்டவண்ணம் என்நண்பன் ஆரூரர் தரும் ஆணையை நீ என்முன் திருக்கோவிலில் பெறவேண்டாம். மகிழமரத்தடியில் பெற்றுக்கொள் எனக்கூறி மறைந்தார்.

காலையில் எழுந்து சங்கிலி நாச்சியார் இரவு நடந்ததை தன் தோழியரிடம் கூறி கோவில் பணிக்குத் தயாரானார். சுந்தரர் கோவிலுக்கு வந்தார். சிவனின் அருளால் தான் உறுதி செய்து தறுவதைக்கூற தோழியர்கள் ஆணையை மகிழமரத்தடியில் செய்யுங்கள் என்றனர். அப்போதுதான் ஆரூரரருக்கு இறைவன் செய்த சூழ்ச்சி புரிந்தது. வேறுவழியில்லாமல் மகிழமரத்தடியில் உறுதி செய்தார். அடியவர்கள் கனவில் தோன்றி சங்கிலியருக்கும் சுந்தரருக்கும் மணமுடிக்க கட்டளையிட்டிருந்ததால் மணம் சிறப்பாக நடைபெற்றது. இல்லறம் இனிது நடந்தது.

வேனிற்காலம் தொடங்கியது. ஆரூரரருக்கு திருவாரூரின் உத்திரப்பெருவிழா நினைவு வந்து அந்த நினைவாக பதிகம் பாடினார். அங்கிருந்து திருவாருரை நோக்கிப் புறப்பட்டார். திருவொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் சுந்தரரின் கண்பார்வைபோனது. கண்ணுக்கு மருந்து கொடு என திருவொற்றியூர் பெருமானிடம் பதிகம் பாடினார். அடியவர்களின் துணையோடு திருவாரூர் செல்லும் வழியில் திருமுல்லைவாயிலில் பதிகம் பாடி திருவெண்பாக்கம் சென்று பதிகம் பாடினார். அங்கு கருவரயிலிருந்து அவருக்கு ஓர் கைத்தடி வந்தது. அங்கிருந்து திருஆலங்காடு, திருவூரல் தலங்களை வழிபட்டு காஞ்சி ஏகாம்பரை வழிபட்டார். ஏகம்பத்து ஈசன் அவருக்கு இடதுகண் பார்வை கொடுத்தார். திருஆமத்தூர் தலத்தில் வழிபாடு செய்தார். அங்கிருந்து திருஅறத்துறை திருஆவடுதுறை திருத்துருத்தி தலங்களுக்குச் சென்று பதிகம்பாடி வழிபட்டார். அப்போது கோடைக்காலம். வெப்பமிகுதியால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. திருத்துருத்தி இறைவனிடம் பிணிநீக்க பதிகம் பாட குணமாகியது.

திருவாரூரை நோக்கி பயணப்பட்டார். நாரைகளை திருவாரூர் பெருமானுக்கு தூது அனுபினார். பூங்கோவிலில் சென்று பதிகம் பாடினார். மற்றொறு கண்ணைத்தர வேண்டினார். ஆரூர் பெருமான் வலக்கண்ணைத் தந்தார். பரவையார் ஆரூரரை பற்றிய செய்திகளெல்லாம் அறிந்து என்னிடத்தில் சங்கிலியா, இனி இவர் உறவே வேண்டாம் என முடிவு எடுத்தார். அடியார்கள் மூலம் இதை அறிந்த ஆரூரர் புற்றிடங்கொண்ட பெருமானிடம் முறையிடுகின்றார். இறைவன் பாதி இரவில் அந்தணர் வேடம் கொண்டு பரவையார் இல்லக்கதவைத் தட்ட, நடு இரவில் வந்த காரணம் கேட்டு அப்போதும் பரவையர் பிடிவாதமாக இருக்க, அந்தணர் ஆரூராரிடம் சென்று பரவையர் மறுப்பை தெரிவிக்க ஆருரர் இறப்பேன் என்றார். அந்தணர் வடிவிலிருந்த பெருமான் மீண்டும் ஒருமுறை செல்கின்றேன் எனக் கூறி தன் சொந்த வடிவில் பூதகணங்களுடன் பரவையர் இல்லம் சென்று நண்பன் நிலையைச் சொல்ல அவர் இசைவுதந்தார்.

ஆரூரர் மேல்கொண்ட நட்பால் அன்பால் இறைவன் இருமுறை தூது சென்றார். அதனால் அந்தவீதியே சிவமணம் கமழ்ந்தது.

திருப்பெருமங்கலம் என்ற ஊரில் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பி      ஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா. என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர் என் முன்னால் வந்தால் என்ன நடக்கும் என எனக்கே தெரியாது என சீற்றம் கொண்டார்.

இறைவன் ஆரூரர்மேல் அன்பு கொண்டவர். அவர்மேல் தனக்குள்ள நட்பை கலிக்காமருக்குப் புரியவைக்க முடியவில்லை. நண்பனா, தொண்டனா, இருவரும் வேண்டும், எனவே இறைவன் தன் நாடகத்தை நடத்த தொடங்கினார். கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக் கொடுத்தார். சொல்லவொன்னா துன்பத்துக்கு ஆளாகி துடிதுடித்தார். அப்போது பெருமான் தோன்றி உன்னை வருத்தும் சூலையை ஆரூரர் வந்து தீர்க்காவிடில் உம் சூலை தீராது என்றார். அதைக் கேட்ட கலிக்காமர் கொதித்தார். ஆரூரர் வந்து அந்த நோய் தீரும் என்றால் அந்த நோய் தீரவே வேண்டாம் என்றார். இறைவன் ஆரூரர்பால் சென்று கலிக்காமர் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாய் என்றார். இறைவன் ஆணையை ஏற்று தான் வருவதை சொல்லி அனுப்ப, ஆரூரர் என் சூலையை தீர்க்க வருவதற்குள் நான்மாய்வேன். வயிற்றைக் கத்தியால் கீறிக்கொள்வேன் எனக்கூறி குத்த உயிர் பிரிந்தது.

ஆரூரர் வந்தார். கலிக்காமரின் மனைவி உயர்ந்த அடியாரான அவரிடம் தம் உணர்சிகளைக் காட்டாமல் எதிர்கொண்டழைத்தார். தான் கலிக்கமருடைய நோயை தீர்க்க வந்துள்ளேன் என்றார், அவர் மனைவி அவருக்கு எந்த துன்பமுமில்லை. அவர் உறங்குகின்றார் எனக்கூற எப்படியாயினும் நான் அவரைப் பார்க்கவேண்டும் என வற்புறுத்த குடல் சரிந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த கலிக்காமரை காண்பித்தனர். தன்பால் கொண்ட கோபத்தினால் இந்த முடிவு என்றால் அவர் சென்ற இடத்துக்கே நானும் செல்வேன் என உடைவாளை எடுத்து குத்திக்கொள்ளப் போனார். இறைவன் அருளினாலே கலிக்காமர் விழிப்புற்று நம்பி ஆரூரர் கரத்தைப்பற்றி நண்பனாக இருந்து நான் கெட்டேன் என வருந்தினார். நோய் நீங்கி இருவரும் திருபுன்கூரில் வழிபட்டு சிலநாள் அங்கிருந்தனர். ஆரூரர் திருவாரூர் சென்றார். ஏயர்கோன் கலிக்காமர் இறைபணிதொடர்ந்து சிவனடி சேர்ந்தார்.

ஆரூரரை தில்லையில் காணத்திட்டமிட்டு பயணம் மேற்கொண்டார் சேரமான். கோவிலை அடைந்து புலனும் உளமும் ஒன்றுபெற வழிபட்டார். ‘பொன்வண்ணத்தந்தாதி’ என்ற நூலைப்பாடினார். வன்தொண்டர் திருவாரூர் சென்றார் என்பதை அறிந்து அங்கு சென்றார். வழியில் உள்ள தலங்களை வழிபட்டுச் சென்றார். சேரமான் வருவதை அறிந்த ஆரூரர் எதிர்கொண்டழைத்தார். ஆரூரரை வணங்கி வீழ்ந்தார் அடியில். வாரியெடுத்து தழுவினார் ஆரூரர். இருவரும் புற்றிடம் கொண்ட பெருமானை வணங்கி ஆரூரர் முன் ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்ற பாசுரம் பாடினார். சேரமானை அழைத்துக் கொண்டு பரவையர் இல்லம் வந்தார் ஆரூரர். நிறைகுடமும் பூமாலையும் கொண்டு வரவேற்றார் பரவையார். தன் குருநாதருடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்ண அஞ்சினார். ஆரூரர் கைப்பற்றி சென்றார்.

இருவரும் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானை வழிபட்டனர். சேரமானை பாண்டியன் வரவேற்றார். பாண்டியன் சோழன்மகளை மணந்திருக்க சோழனும் அங்கிருந்தான். மூவேந்தர் புடைசூழ ஆரூரர் திருப்பரங்குன்றம் சென்று வழிபட்டார். வழியில் பல தலங்களை வழிபட்டு திருவாரூர் வந்தனர். சிலநாட்கள் கழித்து ஆரூரர் செரநாடுவர வேண்டுகோள் விடுத்தான் சேரமான். இருவரும் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வழிபட்டு கண்டியூர் சென்றனர். காவிரியில் வெள்ளம். எதிர்கரையில் ஐயாறப்பர். பெருமானை வழிபட நினைத்த ஆரூரர் பதிகம் பாட ஆற்றுநீரை விலக்கி வழிகாட்ட ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து ஐயாறப்பரை வழிபட்டனர்.

இருவரையும் வரவேற்ற சேரமக்கள் திரண்டு தோரணம் அமைத்து விழா செய்தனர். ஆரூரர் அஞ்சைக்களம் சென்று ‘முடிப்பது கங்கை’ என்று பதிகம் பாடினார். திருவாரூர் நினைவு வரவே சேரமானிடம் விடை பெற்றார். சேரமான் கொடுத்த பொன் பொருளோடு திருமுருகன் பூண்டி வந்தனர். எதிர்பாரவிதமாய் கொள்ளையர்கள் எல்லாவற்றையும் களவு செய்தனர். ஆரூரர், பெருமான் திருவருள் எப்படி இதற்கு அனுமதி தந்தது என்று வருந்தினார். திருமுருகன் பூண்டி இறைவனிடம் கோபமாக பதிகம் பாடி முடித்ததும் பூண்டி பெருமான் கொள்ளை அடித்த பொருளை எல்லாம் அவரிடம் கொடுத்தான்.

நேற்றுவரை நீவேண்டியது எல்லாம் நான் கொடுத்தேன். இன்று புதிய நட்பால் என்னை மறந்தாயோ. எனவே அதைக் கொள்ளையடித்து நான் தருவதாகவே இதனை தருகின்றேன் என்றார் இறைவன். ஆரூரர் திருவாரூர் சென்று புற்றிடம் கொண்டாரை வழிபட்டு இருந்தார்.

சேரமான் நினைவு வர சேரநாடு புறப்பட ஏற்பாடுகள் செய்து ஆரூர் பெருமானிடம் விடைபெற்றார். சோழநாட்டின் பல தலங்களையும் வணங்கி கொங்கு நாட்டின் அவிநாசியை அடைந்தார். அன்பர்களோடு நடந்து செல்லும்போது இரு வேறு உணர்வுகளை கண்டார்

ஓருவீட்டில் வாழைமரம் கட்டி மங்கல ஓசையும், எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டது. இதன் காரணம் என்ன என்றார். அங்கிருந்தோர் இது அந்தணர்கள் வாழுமிடம். எதிர் எதிர் வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் நண்பர்கள், ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருவனை முதலை காலைக் கவ்வி உள்ளே இழுத்தது. கரையில் இருந்தவனின் மங்கல நிகழ்ச்சி நடைபெறுகிறது. தங்கள் மகனுமிருந்தால் நாமும் தம் மகனுக்கு இப்போது பூணூல் அணிவிக்கலாமே என ஆதங்கத்தில் அழுகிறார்கள்.

நம்பிஆரூரர் வந்து பாதையில் இருக்கின்றார் எனக் கேட்டவர்கள் தங்களின் அழுகையை நிறுத்தி அதன் சுவடே தெரியாமல் வந்து வணங்கினர். அவர்களைப் பார்த்து இன்ப மைந்தனை இழந்தவர் நீரோ என்று அதிசயித்தார். துன்பத்தின் சாயல் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடிகிறது என்றார். அவர்கள் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட எங்கள் செல்வன் வரப்போவதில்லை. தாங்கள் என்று வருவீர்கள் தங்களை எப்போது காண்போம் என ஏங்கிய எங்களுக்கு வரவே வராத பிள்ளையைவிட வராது போலிருந்து வந்த தெய்வமாகிய உங்கள் வருகை எங்களுக்கு இன்பம் தருவதாகும் என்றனர்.

இவர்களின் பக்தியைக் கண்ட ஆரூரர் அன்பு செலுத்துகின்ற நல்லோருக்குரிய துன்பத்தை நீக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டு ஏரிக்கரைச் சென்று பார்த்தால் அங்கு தண்ணீரும் இல்லை. முதலையும் இல்லை. அங்கேயிருந்து அவிநாசி பெருமானை மனமுருகிப் பாடினார். பாடல் முடிந்தவுடன் ஏரியில் நீர் வந்தது. நீரிலே முதலை வந்தது. முதலை வாயிலேயிருந்து பிள்ளையும் வந்தது. அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அடியார்கள் இறை நாமத்தை சொல்லினர். ஆரூரர் சிறுவனை அழைத்துக் கொண்டு அவிநாசியப்பர் கோவிலில் பூணூல் அணிவித்தார். அங்கிருந்து சேரநாடு சென்றார்.

சேரமான் எதிர் கொண்டழைத்து இல்லத்திற்குச் சென்று அமுதருந்தி நலம் விசாரித்து இருந்தனர். பல சிவத்தலங்களை வழிபட்டு இன்புற்றிருந்தனர். சுந்தரர் விரைந்து குளத்தில் குளித்து அஞ்சைக்களத்து பெருமானை வணங்க சென்றார். சேரமான் குளத்தில் நிதானமாக நீராடினார்.

இறைவன் முன் பதிகம் பாடப்பாட ஆரூரருக்கு வாழ்வில் வெறுப்பு தொன்றியது. இது கயிலை நாதனுக்கு எட்டியதும் அவர் நம்பி ஆரூரானை வெள்ளானையின் மேல் ஏற்றிக் கொண்டு இங்கு வாரும் என்றார். வெள்ளயானை பூதகணங்களுடன் சுந்தரர் முன் வந்து இறைவன் கட்டளையைத் தெரிவித்தார்கள். ஆரூரர் யானையின் மீதேறும்போது பரவையாரை நினைக்கவில்லை. சங்கிலியாரை நினைக்கவில்லை. நட்பின் உயரவால் சேரமானை நினைக்க அதே நினைவு சேரமான் சிந்தையிலும் சேர்ந்தது.

தோழர் செயலையறியாது குதிரைமீதேறி அதன் கதில் ஐந்தெழுத்தை ஓத அதுவானில் எறியது. வன்தொண்டர் செல்லும் யானையை வலம் வந்து அதன் முன்னே சென்றது, பின்னே சென்றார் ஆரூரர். அப்போது இறைவன் கருணையை எண்ணி பத்து பாடல்கள் பாடினார்.

அவரை வரவேற்க இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுள்ள தேவர்கள் எல்லாம் வந்தனராம். முனிவர்கள் பெருமான் உலா வரும் வெள்ளையானை ஐராவதத்தில் வருபவர் யார் எனக் கேட்க எம்பெருமான் ‘நந்தமர் ஊரன்’ நம் உறவினன் ஆரூரன் என்றார்.

இருவரும் கயிலைமால் மலையில் பெருமான் வீற்றிருக்கும் மணிவாயிலை அடைந்தனர். சேரமான் அழைப்பின்றி சென்றதால் தடுக்கப்பட்டார். உள்ளே சென்ற ஆரூரரை ஆரூரனே வந்தாயா என்றார், இறைவா அடியேன் செய்த பிழைதனை பொறுத்து என்னைத் தடுத்தாட்கொண்டு நின் திருவடிப் பேற்றை வழங்கினயே எனச்சொல்லி பலமுறை வீழ்ந்து வணங்கி என் நண்பன் சேரலர் திருமணிவாயிலின் புறத்தே உளன் எனச்சொல்ல இறைவனும் சரி அழையுங்கள் என்றார். உள்ளே வந்த சேரமான் இறைவனை வணங்கி நான் வாயிலில் இருந்தபோது பாடிய பாடலை தாங்கள் செவிசாய்க்க வேண்டி அங்கே அரங்கேற்றினர்.

சேரமானின் பாடல் சாத்தனாரகிய ஐயப்பன் திருப்பிடவூரில் வந்து வெளியிட்டார். ஆலால சுந்தரர் பாடிய நிறைவு பதிகம் கடல் அரசன் கொண்டுவந்து திருஅஞ்சைக்களத்தில் வெளியிட்டான். கமலினி, அனிந்திதை இருவரும் மீண்டும் பிராட்டியரின் சேடியர்களாயினர்.

மண்ணுலகில் தோன்றிய நாம் இறைவனை உண்மை அன்போடு வழிபட்டால் இறைவன் தன் பொன்னுலகை அளிப்பான். “ஓம் நம்சிவாய”

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:15

செருத்துணைநாயனார்

36. செருத்துணைநாயனார்

திருமருகலின் வேளான் குடியில் பிறந்தார் செருத்துணையர். சிவனிடத்தும் சிவ அடியாரிடத்தும் மெய்த்தொண்டு பூண்டு வழ்ந்தார். திருவாரூர் கோவிலின் முன்பு விளங்கும் பணிகளைச் செய்து வந்தார். ஆறு காலமும் பெருமானை வழிபட்டு தன்னால் முடிந்த தொண்டுகளைச் செய்துவந்தார்.

கழற்சிங்க மன்னன் திருவாரூர் கோவிலுக்கு அரசியுடன் சென்றிருந்தார். பூங்கோயிலில் புற்றிடங்கொண்டாரை கண்ணீர் மல்கி கைகூப்பி உள்ளம் உருக தரிசனம் செய்து வழிபட்டார். அவரின் மனைவி கோவிலை வலம் வந்து பெருமைகளை ரசித்துக் கொண்டிருந்தார். வழியில் இறைவனுக்கு மலர் மாலை தொடுக்கும் மண்டபத்தில் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்ததை கண்ட அங்கு மலர் தொடுத்துக் கொண்டிருந்த செருத்துனையர் அவரின் செயல் சிவ அபராதம் எனக்கருதி தன்னிடமுள்ள வாளினால் நுகர்ந்த மூக்கை அறுத்து விட்டார்.

உதிரம் பெருக சோர்ந்து தரையில் வீழ்ந்து அழுது கொண்டிருந்த துனைவியரைப் பார்த்து யார் இதனைச் செய்தது எனக் கேட்ட மன்னனிடம், அங்கிருந்த செருத்துனையர், அரசே, இவர் தம்பிரானுக்குடைய மலரை எடுத்து மோந்ததால் இக்கருமம் யானே புரிந்தேன் என்றார்.

இந்தக்குற்றத்திற்கு ஏற்றதண்டனையை செய்தீரில்லை என வாளை எடுத்து மலரை எடுத்த கையன்றோ முதல் குற்றவாளி எனக் கையை வெட்டினார். கை எடுத்திருக்காவிடில் நாசி நுகர்திருக்காது என்பது அவர் எண்ணம். அப்போது இறைவன் தியாகராசர் காட்சி கொடுத்து துணைவியரை முன்புபோல் அருள் செய்தார். தன் தொண்டினைத் தொடர்ந்து பல ஆண்டு புரிந்து இறையடி சேர்ந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:14

சோமாசிமாறநாயனார்

37. சோமாசிமாறநாயனார்

அம்பர் என்ற ஊரில் மறையவர் குலத்தில் சோமாசிமாறர் பிறந்தார். சோமயாகம் செய்பவரை சோமையாஜி எனக்கூரினர். நாளடைவில் அது சோமாசிமாறர் என்றாயிற்று. எந்தக் குலத்தில் பிறந்தாலும் ஈசனுக்கு அன்பர் என்றால் அவர் நம்மை ஆளும் குருநாதர் எனும் இயல்பினர். சிந்தை தெளிய சிவனின் ஐந்தெழுத்தை ஓதுவார். அடியவர்கள் யாராயினும் அவர்களைப் போற்றி வணங்கினார்.

அடியவர்கள் இறைவனாகவே போற்றத் தக்கவர்கள். அடியார்கள் உள்ளத்தில் எப்போதும் இறைவன் குடியிருக்கின்றான். அடியவர்களுக்குள் ஜாதி, இனம் பார்ப்பது கூடாது. சிவனை அவர்கள் உருவில் கண்டு வணங்க வேண்டும் என்ற கொள்கைதனை சோமாசிறார் கடைபிடித்து வந்தார். நம்பியாரூரர் பால் அன்பு கொண்டு திருவாரூர் அடிக்கடிச் சென்று அவர் திருவடியை வணங்கி வந்தார். அவருக்கு இனிய நண்பரானார். குரு அருளும் திரு அருளும் பெற்று இறைவன் திருவடி நிழலை எய்தினார்.

                           ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:12

தண்டியடிகள்நாயனார்

38. தண்டியடிகள்நாயனார்

திருவாருரில் பிறந்தவர் தண்டி. சிவனின் சிந்தனையைத்தவிர வேறு எதையும் நினையாதவர். அகம் நோக்குவதைத் தவிற புறம் நோக்கி அறியா இவ்வடியாருக்கு பிறவியிலேயே கண் தெரியாது, திருவாரூர் மேற்குப்பகுதியில் உள்ளது கமலாலயம் திருக்குளம். தண்டியார் இறைவனை வணங்கி ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டு கோவிலை வலம் வருவார். கமலாலயக் குளம் அடியவர்கள் குளிப்பதற்கும் பெருமானுக்கு தீர்த்த குளமாகவும் இருந்தது. சமணர்கள் அந்தக் குளத்தில் பாழிகளும் பள்ளிகளும் அமைத்தனர். குளத்தின் அளவு குறைந்தது.

இதை உணர்ந்த தண்டியார் குளத்தைத் தோண்டி அகலப்படுத்த எண்ணினார். செயலை செய்வதற்காக குளத்தை அகலமாக்கும் குழிவாயில் ஒரு தறியை நட்டார். குளக்கரையில் ஒன்றை நட்டார். இரண்டையும் கயிற்றால் இணைத்தார். குளத்தில் இறங்கி மண்ணைத் தோண்டி ஓரு கூடையில் எடுத்துக் கொண்டு கயிற்றின் துணையுடன் மேல்வந்து கரையில் கொட்டினார். உடல் பணி செய்யும்போது உள்ளம் ஐந்தெழுத்தை ஓதியது.

தண்டியாரின் இப்பணி குறித்து சமணர்கள் ஐயா மண்ணைக் கிண்டாதீர்கள் அதில் உள்ள சிற்றுயிர்கள் மாண்டு போகும் என்று தடுத்தனர். சிவனுக்குரிய திருப்பணி என்றார். நாங்கள் சொல்வது காதில் விழவில்லையா. கண்தான் தெரியவில்லை காதுமா கேட்கவில்லை என்றனர். எனக்கு கண் தெரிந்தால் என்ன செய்வீர்கள் எனக்கேட்ட தண்டியரைடம் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம் எனக் கூறி தண்டியரிடம் இருந்த மண்வெட்டியையும் கூடையையும் பிடுங்கி எறிந்தனர்.

தண்டியார் பெருமானிடம் முறையிடுகின்றார். தூர்வாரும் திருப்பணியை செய்யும் என்னை அவமானப்படுத்தினர். என மனம் நொந்தது. இந்த இடரை நீக்கி அருள் புரிய வேண்டும் என வேண்டி திருமடத்தில் தங்கினார். அன்று இரவு கனவில் இறைவன் தோன்றி தண்டியாரே உன் கண்கள் நாளை ஒளி பெறும். உன்னை இழிவாகப் பேசியவர்கள் ஒளி இழப்பர். அஞ்சாதே. எனக் கூறி மறைந்தார், சோழமன்னன் கனவில் தோன்றி நம் தொண்டன் நமக்கு குளம் வெட்ட சிலர் அப்பணிக்கு இடர் செய்து இழிவு படுத்தியுள்ளனர். அதை சரிசெய்க என்றார்,

மன்னன் தண்டியாரிடம் சென்று நடந்தவைகளை தெரிந்தார். அரசன் சமணர்களையும் அழைத்து கேட்க அவர்கள் முதல் நாள் கூறியபடி சம்மதம் தெரிவித்தனர். தண்டியார் இறைவன் முன் வணங்கி திருக்குளத்தில் மூழ்கி எழுகையில் அவருக்கு கண்பார்வை கிடைத்தது. சமணர்களுக்கு பார்வை மறைந்தது. மன்னன் சமணர்களைப் பார்த்து நீங்கள் ஒப்பியபடி திருவாரூரை விட்டு நீங்குங்கள் என்றான். தண்டியார் நாளும் சிவனடி வணங்கி ஐந்தெழுத்தை ஓதி வழிபட்டு இறைவன் அடி சேர்ந்தார்.

*****

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:11

திருக்குறிப்புத் தொண்டநாயனார்

39. திருக்குறிப்புத் தொண்டநாயனார்

காஞ்சிமாநகரில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத்தொண்டர். தொண்டர்களின் குறிப்பறிந்து பணி செய்வதால் அவரை திருக்குறிப்புத் தொணடர் என்றனர். சிவநெறி ஒழுகும் சான்றோர். சீலமிக்கவர். அடியவர்களின் ஆடைகளை பெற்றுத் துவைத்து தூய்மை செய்து கொடுப்பவர்.

உடலும் பற்களும் நடுங்கும் குளிர்காலம். வறுமையில் வாடும் அடியவர்போல் அழுக்காண ஆடையணிந்து சிவன் திருக்குறிப்புத்தொண்டர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் கண்டவர் அவர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தார். தாங்கள் இளைத்திருக்கின்றீர்கள். உடம்பை உருக்கி உள்ளொளி பெற்றுள்ளீர். தங்கள் முகம் வாடியுள்ளதே எனக்கூறி தங்கள் ஆடை அழுக்காக உள்ளது அதை கொடுங்கள் தூய்மைசெய்து தருகிறேன் என்றார்.

அன்பரே இவ்வாடை மிகவும் அழுக்கடைந்துவிட்டது. குளிரின் கொடுமையால் இதை விட முடிய வில்லை. சூரியன் மறையும் முன்பு தருவதானல் நான் தருகின்றேன் என்றார், அதற்கு சம்மதம் தந்து ஆடையைப் பெற்று குளத்து நீரில் தோய்த்து சுத்தப்படுத்த முயன்றார். அன்று சோதனையாக மழை பெய்யத்தொடங்கியது. மழை தொடர்ந்து பெது கொண்டிருந்தது.

திருக்குறிப்புத்தொண்டரால் ஆடையை சுத்தம் செய்து தர முடியவில்லை. மழை நின்றபாடில்லை. ஆடை கொடுத்தவர் உடம்பு குளிரால் நடுங்குமே. நான் அவருக்கு உதவி செய்கிறேன் என்று தொல்லையல்லவா கொடுத்துவிட்டேன் என்று மீளாத்துயரம் கொண்டு என் தொண்டு இன்றுடன் முடிவுறும்போல் இருக்கின்றது. இனிநான் வாழ்ந்து என்ன பயன், துணி துவைக்கும் எனக்கு என் தொண்டுக்குத் துணை நின்ற கல்லிலே என் தலை மோதி இறப்பேன் எனக் கூறி வேகமாக அக்கல்லிலே மோதினார்.

அங்கிருந்து எம்பெருமான் கரம் தடுத்து விடைமீது தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரே ‘நும் தொண்டினைக் கண்டு மகிழ்ந்தோம் நீர் சிவலோகம் வந்து இன்புறுவாய்’ என் அருள் புரிந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 40.திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 12:05

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

40. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

சீர்காழியில் சிவபாத விருதயர் தன் மனைவி பகவதியுடன் தினமும் தங்களுக்கு சைவநெறி தழைத்திடும் வண்ணம் ஒர் குழந்தை வேண்டுமென பிரார்த்தித்து பெருமான் அருள் புரிய ஆண்குழந்தையை பெற்றனர். குழந்தை வளர்ந்தது. சம்பந்தர் க்கு ஆண்டுகள் இரண்டு முடிந்தது. நாள் தோறும் சிவபாத இருதயர் தோணிபுரத்தே உள்ள நீர்நிலையில் நீராடி கழுமலநாதனை நித்தமும் வணங்கியபின் தன் இல்லத்தில் உள்ள மற்ற பணிகளைப் பார்ப்பார்.

வழக்கம்போல் அன்றும் நீராட சிவபாத இருதயர் கிழம்ப குழந்தை தானும் வருவேன் என அடம்பிடித்தது. மகனை உடன் அழைத்துச் சென்றார். மைந்தனைக் குளக்கரையில் இருக்கச்செய்து குளத்தில் இறங்கி நீரில் மூழ்கி குளிக்க ஆரம்பித்தார். தந்தையைக் காணவில்லை என குழந்தை குரல் கொடுக்க, அழுதகுரல் கேட்டு திருத்தோணிபுரத்துறையும் பெருமான் விண்ணிருந்து மண்ணிற்கு வந்த குழந்தைக்கு உண்ண அமுதுடன் சிவஞானம் கொடுக்கச் சொன்னார். பிராட்டியும் பொற் கிண்ணத்தில் இன்னமுதப்பால் பெய்து சிவஞானம் குழைத்து எடுத்து ஊட்டினார். குழந்தையின் அழுகை நின்றது.

குளித்து முடித்த தந்தை குளக்கரையில் தம் புதல்வன் எச்சில்பால் உண்டவாயும் கையிற் பொற்கிண்ணமுமாக இருப்பது கண்டு சினந்தார். அருகிருந்த சிறுகோல் எடுத்து யார் கொடுத்தது என அடிக்க கை ஓங்கினார். குழந்தை தலைக்குமேல் விரல் ஒன்றினால் பரம்பொருளைச் சுட்டிகாட்டி ‘சிறப்பதோடுடைய செவியன்’ எனத்தொடங்கி பதிகம் பாடினார்.

நான் கூறப்போகின்ற நெறி இருக்கின்றதே அது சிவனடியே சிந்திக்கும் ஒரு நெறி. அது திருநெறி. அதுவும் தமிழ்நெறி. தமிழர்தம் வாழ்வியல் நெறி. இந்த திருநெறிய தமிழ் வல்லர் தொல்வினைதீரும். என்றார். ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றார். நம் தமிழ் சமுதாயத்திற்கு சிவனடி பரவும் ஒருநெறியே என் திருநெறி என்றார்.

சிவதலங்களில் வழிபாடு நடத்த விரும்பினார். 3 வயது குழந்தையை தன் தோளில் தூக்கிக்கொண்டு திருகோலக்க என்ற தலத்திற்கு சென்றார் சிவபாத இருதயர். ஞானசம்பந்தன் இறைவனை ‘மடையில் வாளை பாய’ என்ற பாடலை பாட கைத்தாளமிட்டதால் கைசிவக்க இறைவன் பொற்றாளம் கொடுக்க அன்னை ஓசை கொடுத்த நாயகியாக உலகெலாம் வியக்க தாளம் பெற்று பாடல் பாடினார். அப்படியே நனிபள்ளி சென்று வழிபட்டு சீர்காழி வந்தார்

ஞானசம்பந்தன் புகழ்கேட்டு திருநீலகண்டயாழ்ப்பாணர் தன் துணைவி மதங்க சூளாமணியுடன் வர அவர்களை வரவேற்று இறைமுன் பதிகம் பாட பாணர் யாழ் இசைத்தார், தீண்டத்தக்காதவராய் இருந்த பாணரை ஞானசம்பந்தன் தம்முடன் யாழ் இசைக்க வைத்துக் கொண்டார். அவரை அழைத்துக்கொண்டு தில்லை சென்றார். வழியில் பாணர் ஊராகிய எருக்கத்தம்புலியூர் சென்றார், கொளுத்தும் வெய்யிலைப் பாரது மாறன்படி என்ற ஊரை அடைந்தார். பெருமான் அந்த ஊர் அடியார் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் என்பால் அனைகின்றான், அவனுக்கு முத்துச்சிவிகை மணிக்குடை சின்னம் அளியுங்கள் என்றார்.

பலதலங்களில் பதிகம் பாடி வழிபட்டு மீண்டும் சீர்காழி வந்தார். எழாம் ஆண்டில் ஞானசம்பந்தனுக்கு பூணூல் அணிவிக்க அந்தனர்கள் மந்திரம் சொல்ல ஞானசம்பந்தர் சொல்லவேண்டிய மந்திரம் ஐந்தெழுத்து என்றார். அப்பரடிகள் தன்னைக் காணவருகின்றார் என்பதை அறிந்த ஞானசம்பந்தர் எதிர்கொண்டழைத்தார். சிலகாலம் அங்கிருந்து அப்பரடிகள் சோழ நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

ஞானசம்பந்தர் திருத்தலப்பயணமாக திருப்பாச்சிலாசிரமம்- திருவாசி சென்றார். கோவிலில் மங்கை பருவம் எய்திய பெண் ஒருத்தி உணர்ச்சியற்ற நிலையில் இருப்பதைக் கண்டார். அவர் கொல்லிமழவன் என்ற குறுநில மன்னனின் மகள். அவள் பிணியை இறைவன் தீர்க்க கோவிலில் வைத்திருந்தார். ஞானசம்பந்தர் பதிகம் பாடி நோய் தீர்க்க வழவனும் அவளும் அடிவணங்கினர். திருக்கொடிமாடசெங்குன்றூர்- திருச்செங்கோடு சென்றார். அப்போது பனிக்காலமாகையால் அடியவர்கள் சிலர் அவதிபட்டனர். அங்குள்ள மடம் ஒன்றில் தங்கி அர்த்தநாரீஸ்வரர் மீது ‘வெந்த வெண்ணீறணிந்து’ என்ற பதிகம் பாடினார்.

பலதலங்களை வழியில் வழிபட்டு திருப்பட்டீச்சுரம் அடைந்தார். அங்கு பூதகணங்கள் ஞானசம்பந்தர் தலைமீது முத்து பந்தலை பிடித்தனர், பின்னர் அடியவர்களிடம் கொடுத்து மறைந்தனர். பட்டீசுவரை வணங்கி திருவாவடுதுறையை அடைந்து தங்கினார். அப்போது அங்குவந்த சிவபாத இருதயர் வேள்வி செய்ய பொருள் வேண்டும் என ஞானசம்பந்தரிடம் கேட்டார். திருவாவடுதுறையானைப் பதிகம் பாடி 1000 பொற்காசுகள் பெற்று தந்தையாரிடம் கொடுத்தார். தலங்களை வழிபட்டு தருமபுரம் வந்தார். அங்கு ஞானசம்பந்தர் பாணர் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ்கருவியில் அடங்காத பாசுரம் பாடினார்.

சாத்த மங்கை என்னும் தலத்திற்கு சென்றார். அந்த ஊரின் நீலநக்கர் ஞானசம்பந்தரை தன் குருவாக நினைத்திருந்தார். இவர் வருகிறார் என்ற செய்தி அவருக்கு பரவசமூட்டியது. ஞானசம்பந்தர் கோரிக்கையை ஏற்று பாணரை தம்முடைய வீட்டிலேயே தங்கவைத்தார். அங்கு சிலநாள் தங்கி திருநாகைக் காரோணமுடையாரை வணங்கி திருச்செங்காட்டாங்குடி நோக்கித் தன் பயணம் தொடர்ந்தார். பரஞ்சோதியார் என்ற சிறுதொண்டர் ஞானசம்பந்தர் வருகையை எதிர்பார்த்து வணங்கி வழிபாடு செய்தார். சிறுத் தொண்டரிடம் விடைபெற்று திருமருகல் ஆலயம் சென்றார்,

அது நள்ளிரவு நேரம். ஓர் அணங்கையின் அழுகுரல் கேட்டது. அதிகாலை எழந்து நீராடி அழுகுரல் வந்த திசையில் சென்றார். அங்கு ஒருவன் இறந்திருந்தான். அருகே ஒர் பெண் அழுது கொண்டிருந்தார். அவள் வைப்பூரிலுள்ள தாமன் செட்டியாரின் மகள். அவருக்கு மொத்தம் ஏழு பெண்கள். இறந்தவன் தாய் மாமன். மாமனிடம் பெரும் பொருள் பெற்று மூத்தவளை மணம் முடித்து தருகின்றேன் எனக்கூறி வேறு ஒருவருக்கு மணம் முடித்தார். இப்படியே அறுவருக்கு மணம் முடிந்து எனக்கும் அதேபோல் தந்தை செய்ய முடிவு செய்தது தவறு என்பதால் நான் மாமனுடன் வந்தேன். இரவில் நாகம் தீண்ட மாண்டான். இது என்ன நியாயம் என்று புலம்பினாள்.

இறந்தவரை உயிர்ப்பிப்பது என் வேலையல்ல. இருந்தாலும் இப்பெண்ணிற்காக நீதி கேட்டார் இறைவனிடம். பதிகம் பாடினார். இறந்தவன் உயிர்பெற்றான். அங்கு சில காலம் தங்கியிருந்து வழிபாடு செய்தார். திருப்புகழூர், வர்த்தமானிச்சுரம் சென்றார். வர்த்தமானச்சுரத்து பெருமானை வணங்கி முருகரையும் சேர்த்து பதிகம் பாடி அவருடைய மடத்தில் தங்கினார். ஞானசம்பந்தர் திருப்புகலூரில் இருக்கிறார் என அறிந்து அப்பரடிகள் வந்தார். இருவரும் சேர்ந்து பயணம் செய்ய விரும்பினர். அம்பர்மாகாளம் வணங்கி திருக்கடவூர் செல்ல குங்குலிய கலயர் வரவேற்று வழிபாடு செய்தார். பின் திருவீழிமிழலை சென்றனர்.

அங்கு சீர்காழியிலிருந்து வந்த அடியார்கள் ஞானசம்பந்தரை சீர்காழிக்கு அழைக்க அவர் அங்கு சென்று இறைவனை தரிசிக்க விரும்பினார். ஆனால் அன்று இரவு கனவில் பெருமான் நாளை காலை திருத்தோணிபுரத்து பெருமாட்டியோடு காட்சியை விண்விழி விமானத்தே காண்பாய் என அருளினார், அதிகாலை நீராடி அக்காட்சியை கண்டு ஆனந்தம் அடைந்தர். அந்த ஊரில் அப்போது பஞ்சம் ஏற்பட்டது.

பெருமான் இருவர் கனவில் தோன்றி. நாட்டில் நடக்கும் உலகியல் நிகழ்ச்சியால் அடைந்த தீய பசி உம்மையடையாதெனினும் உம்பால் நிலவும் அடியோர் வாட்டம் அடையாவண்ணம் நாளும் ஓர் பொற்காசு கிழக்கும் மேற்குமாக பலிபீடத்தில் தருவோம் என்றார், இருவரும் தம் கனவை பரிமாறி பொற்காசு பெற்று இருமடங்கள் அமைத்து அடியார்களுக்கு உணவு அளித்தனர். நாவுக்கரசர் மடத்தில் உணவு முடியும்போதுதான் சமபந்தர் மடத்தில் ஆரம்பிக்கும். ஏன் இந்த காலதாமதம் என்றார் ஞானசம்பந்தர்,

அது நல்ல காசு தாங்கள் கொடுக்கும் காசு மாற்று குறைந்தது. அதனால் பொருள் வாங்க சிறிது காலதாமதம் ஆகிறது என்றனர். ஞானசம்பந்தர் வீழிநாதன்முன் சென்று தமக்கும் மாசில்லா காசு கேட்டார். ஆரூரர் திருவீழிமிழலை வந்து அப்பருக்கும் ஞானசம்பந்தருக்கும் பொன் கொடுத்து என்னை ஏமாற்றமுடியாது. நீர் ஏன் பொன் கொடுத்தீர் என்று எனக்குத்தெரியும் என பாடினார்.

இருவரும் திருமறைக்காடு சென்றனர். வேதம் மறைக்காடாரை வணங்கி கதவை மூடியதால் அடியவர்கள் மாற்று வழியில் உள்ளெ சென்று வழிபாடு செய்வதைப் பார்த்த ஞானசம்பந்தர் அப்பரடிகளிடம் மறைக்கதவு திறக்க பாடச்சொல்ல அவரும் பத்து பாடல்கள் பாட கதவு தாள் திறந்தது. வழிபாடு முடிந்ததும் அப்பரடிகள் ஞானசம்பந்தரிடம் கதவை மூடவும் பின் திறக்கவும் பதிகம் பாடச்சொல்ல அவர் ஒருபாடல் பாடியவுடன் கதவு மூடியது. தான் பாடிய 10வது பாடலுக்கு திறந்த கதவு ஞானசம்பந்தர் பாடிய முதல் பாட்டிற்கே மூடியது மனதில் நினைத்து இறவன் திருக்குறிப்பை அறியாமல் தவறு செய்தோமோ என வருந்தினார். பெருமான் அடியார்வேடத்தில் தோன்றி நாம் வாய்மூரில் இருப்போம் நம்மைப்பின் தொடர்ந்து வாரும் என்றார். அப்பரடிகள் பின் தொடர அண்மையில் இருப்பது போல தோன்றி மறைந்தார்.

ஞானசம்பந்தர் எழுந்து அப்பரடிகள் வாய்மூர் சென்றிருப்பதை அறிந்து தாமும் சென்றார். அவரக் கண்டவுடம் அப்பரடிகள் மகிழ்ந்து, வாய்மூர் பெருமானே உன் சதிர் ஆட்டம் என்னிடம் செல்லும், மறைக்கதவம் திறக்கப்பாடிய என்னைவிட உறுதி பொருள் பாடி அடைப்பித்த ஞானசம்பந்தர் உம் எதிர் நிற்கிறார் உம்மை மறக்கும் வல்லமை உமக்கு உண்டா உன் அருட் காட்சியைக் காட்டு எனப் பாடினார். வாய்மூரில் சில நாள் தங்கி திருமறைக்காடு சென்றனர்.

பாண்டிய நாடு சமண நெறியில் சிறந்திருந்தது. மன்னன் கூன் பாண்டியன் சமணத்தைச் சார்ந்தான். அவரின் மனைவி மங்கையர்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவம் காத்தனர். அவனது துணைவியார் அமைச்சரின் உதவியுடன் ஞானசம்பந்தர் திருமறைக்காட்டிலிருப்பதை அறிந்து அவர் தங்கள் நாடு வரக் கேட்டனர். அப்பரை சோழநாட்டு திருத்தலங்கள் செல்லக்கூறி தாம் பண்டிநாடு என்றார்.

வழியில் அகத்தியான் பள்ளி, கோடிக்குழல் ஆகிய தலங்களை வணங்கிச் சென்றார். திருக்கொடுங்குன்றத்து இறைவனை வாணங்கி மூதூர் வந்தார். குலச்சிறையார் எதிர்கொண்டழைத்தார். ஆலவாய் கோபுரம் கண்ட ஞானசம்பந்தர் மங்கையர்கரசியாரையும், ஆலவாய் ஈசனையும் குலச்சிறையரையும் இனைத்து பதிகம் பாடினார். ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு மன்னன் சம்மதத்துடன் சமணர்கள் தீ மூட்டினர். அவர்கள் செய்தது மன்னவனைச் சாரும் என்றும் ‘தீபையவேசெல்க’ என்றார். காலையில் மன்னவனால் எழுந்திருக்க முடியவில்லை. நோயின் தாக்கத்தால் சைவ நெறியை நாடினான்.

ஞானசம்பந்தர் அடியவர்களுடன் ஆலவாய்சென்று பெருமானை வழிபட்டு மன்னனைக் காணச்சென்றார். சமணர்கள் வாது செய்யலாம் என்றனர். மன்னனோ என் பிணியை யார் நீக்குகின்றீகளோ அவர் பக்கம் நான் இருப்பேன் என்றான். சமணர்கள் நாங்கள் ஒரு பக்கம் நீக்குகின்றோம் மறுபக்கம் அவர் நீக்கட்டும். அவரால் குண்மடைந்தாலும் எங்களால் குணமடைந்ததாக கூறவேண்டும் எனக் கூறினர். மன்னன் அதற்கு இசையவில்லை. இடதுபுறம் மன்னனின் வெப்பு நோயையைத் தீர்க்க சமணர்கள் மந்திரம் ஓதியும் மயிற்பீலி கொண்டும் செய்த முயற்சி பலிக்கவில்லை. கூன் பாண்டியனுக்கு சூலை நோய் தாக்கியதை சமணர்களால் சரி செய்ய முடிவில்லை. அவர்களின் மந்திரநீர் சுட்டது.

வலப்புறம் ஞானசம்பந்தர் திருநீறு எடுத்து ‘மந்திரமாவது நீறு’ எனப்பதிகம் பாடி தன் திருக்கரத்தால் தடவினார். அவர் கைபட்டதும் உடல் நோய் வலப்பக்கம் தீர்ந்து சொர்க்கமாகவும் இடப்பக்கம் நரகமாகவும் இருக்க கண்ட மன்னன் இடது புறமும் தாங்களே குணமாக்க வேண்டும் என வேண்டினான். மன்னன் முற்றும் குணமடைந்தான். ஞானசம்பந்தர் இனி உங்கள் வாய்மையை பேசுமின் என்றார். வாய்வெல்ல வேண்டியதில்லை. இருதரப்பாரும் அவர்தன் சமய பெருமைகளை எழுதி அதைத்தீயிலே போட்டால் வேகாத ஏடு உண்மைசமயம் என்றனர்.

மன்னன் ஆணைப்படி தீ மூட்டப்பட்டது. ஞானசம்பந்தர் இதுவரை பாடிய பாசுரங்களை கொண்டுவரச்செய்து வணங்கி அந்த கட்டின் கயிற்றை அவிழ்த்து ஒர் ஏட்டை எடுத்தார். தளிரிள வளதொளி என பதிகம் பாடி ’போகமார்த்த பூண்முலையாள்’ என்றபாட்டினை தீயில்பொட்டு தீயில் வேகாது நிலைபெறுக என்றார். அது எரியாமல் பச்சையாக இருந்தது. அதனால் அது ‘பச்சைஏட்டு பதிகம்’ எனலாயிற்று. சமணர்கள் ஏடு தீயிலிட்டது கருகியது.

ஆனால் சமணர்கள் மூன்று முறை செய்து உண்மை காண்பதே முறை என்று ஆற்றில் ஏட்டினை விட்டு அது எதிர்த்து வந்தால் அதுவே உண்மையானது என்றனர். அப்போது குலச்சிறையார் இவ்வாதில் தோற்றால் தோற்றவர்களை மன்னன் கழுவில் ஏற்றவேண்டும் என்றதற்கு சமணர்கள் ஒப்புதல் அளித்தனர். தங்கள் மந்திரமான் ‘அஸ்திஆஸ்தி’ யை எழுதி ஆற்றில் போட்டனர் சமணர். அது கடலைநோக்கி ஓடியது. ஞானசம்பந்தர் ஓர் பதிகம் எழுதி வைகையில் போட்டார். அது எதிர்த்து வந்தது. கூன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ஆகினான். குலச்சிறையார் அந்த ஏட்டினை எடுத்துவந்தார். சமணர்களை கழுவில் ஏற்றிய மன்னன் தன் துணைவியருடன் சைவத்தில் இனைந்து திருத்தொண்டுகள் பல செய்தான்.

திருநீலகண்ட யாழ்பாணர் ஆலயத்தினுள் செல்லமுடியாமையால் கோவில் வாயிலில் பாடியவரை அடியவர்கள் மூலமாக தன் முன்னிருத்தி பொற்பலகையிட்டுப் பாடசெய்ததை ஞானசம்பந்தர் தம் ஆலவாய் பதிகத்தில் வியந்துள்ளார், சிலநாட்களித்து மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்பரங்குன்றம் திருவாப்பனூர், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக்குற்றாலம், திருநெல்வேலி தலங்களில் வழிபட்டு திருஇராமேசுவரம் வந்தார்.

திருஇராமேசுவரத்திலிருந்து தம் ஞானக்காட்சியால் திருக்கோணமலை, திருக்கேதீசுரம் ஆகிய இரு தலங்களையும் பதிகங்கள் பாடினார். குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடி தங்கியிருந்தார். அங்கிருந்து திருக்களர், திருப்பாதாளீச்சுரம் தலங்களை வழிபட்டு முள்ளியாற்றின் கரைவந்தடைந்தார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. ஓடக்காரர்கள் ஓடத்தை கரையில் கட்டி சென்று விட்டனர். மறுகரையிலிருக்கும் கொள்ளம்புதூருக்குச் செல்ல ஓடத்தில் அடியவர்களுடன் ஏறி தன் நாவன்மையால் ஓடத்தைச் செலுத்தினார். ஆறாவது பாடலில் ஓடம் கொள்ளம்புதூரை அடைய அங்கு வழிபட்டு திருக்கடவூர் பெருமானை வழிபட்டு திருப்பூந்துருத்தி நோக்கிச் சென்றார்.

ஞானசம்பந்தர் வருகிறார் என்றதும் அப்பரடிகள் அடியார்களுடன் சென்று அவரின் பல்லக்கை தூக்கி வந்தார். ஞானசம்பந்தர் அப்பரடிகள் எங்கு இருக்கின்றார் என்றபோது ‘உம்மடிகள் இப்போது தாங்கி வரும் பேறுபெற்றேன்’ என்றதைகேட்ட சம்பந்தர் கீழே குதித்தார். இருவரும் வணங்கினர். அப்பரடிகள் அமைத்த மடத்திலேயே தங்கி இருவரும் அருகிலுள்ள தலங்களைத் தரிசித்தனர். அப்பரடிகள் பாண்டியநாடு பயணம் மேற்கொள்ள ஞான சம்பந்தர் தொண்டைநாடு சென்றார். திருத்தில்லை, திருத்திணைநகர், திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திரு இரும்பை மாகாளம் முதலிய தலங்கள் சென்று வழிபட்டார். அதிகை வீரட்டானம் அப்பரடிகளுக்கு சூலைநோய் தந்து அதனை நீக்கியதலம். அங்கு வந்து வழிபட்டு திருவாமாத்தூர், திருவறையணிநல்லூர், திருக்கோவிலூர் வழியாக தலங்களை தரிசித்து அண்ணாமலை வந்தார்.

திருஅண்ணாமலையில் பதிகம் பாடி சிலநாட்கள் இருந்து பின் திருவோத்தூர் சென்றார். அங்கிருந்த சிவண்டியார் பனை மரம் வளர்த்து வேனிற்காலத்தில் அடியவர்களுக்கு பயன்படும் என நினைத்தார், ஆனால் அவைகள் எல்லாம் ஆண்பனையாக இருந்தது. சமணர்கள் அவ்வடியாரிடம் உன் சிவன் ஏன் ஆண்பனையை பெண்பனையாக மாற்றக்கூடாது எனக் கேலிசெய்ததை வருத்தத்துடன் அங்கு வந்த சம்பந்தரிடம் கூறினார். ‘பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’ என்ற பதிகம் பாடி பனைகளை பெண்பனையாக மாற்றினார்.

ஞான சம்பந்தர் காஞ்சிமாநகர் வந்தார், கச்சி நெறிக்கரைக்காடு, கச்சிமேற்றளி, திருமாற்பேறு, திருவல்லம், திருவாய்க்கோலம் முதலி பலதலங்களை வழிபட்டு திருவாலங்காடு சென்றார். புனித புனிதவதியார்’ காரைக்கால் அம்மையார்’ தலையினாலே நடந்த திருத்தலத்தை தாம் காலில் மிதிப்பது தவறு என்று ஊர் வெளியில் உள்ள மடத்தில் தங்கினார். கனவில் திருவாலங்காட்டு அப்பன் என்னை பாடமறந்தனையோ என்றார், நள்ளிரவில் பதிகம் பாடினார்.

அங்கிருந்து கண்ணப்பர் வழிபட்ட காளத்திநாதனை வழிபட்டார். அங்கிருந்து திருக்கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருபதம் ஆகிய தலங்களை நினைத்து பதிகங்கள் பாடினார். பின்னர் திருவேற்காடு வணங்கி திருவொற்றியூரில் தங்கினார். மயிலாப்பூர் சிவநேசர் சிவனடி மறவா சீலர். திருஞானசம்பந்தர்மேல் எல்லையில்லா அன்புகொண்டவர். அவரின் மகள் பூம்பாவை மங்கைபருவம் அடைந்தாள், சிவநேசர் நான் பெற்றெடுத்த பூம்பாவையும் நானும் நான் சேர்த்த பெரு நிதியும் ஞானசம்பந்தர்கே உடமை என உறுதியுடன் இருந்தார்.

ஒருநாள் பூகொய்யச் சென்ற பூம்பாவையை நாகம் தீண்ட இறந்தாள். சிவநேசர் வருத்தமுறாமல் இவள் அவரின் சொத்து. எனவே அவளை தகனம் செய்து எலும்பையும் சாம்பலையும் ஓர் குடத்திலிட்டு ஞானசம்பந்தரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அக்கலயத்திற்கு தினமும் பூசை செய்து வந்தார். ஞானசம்பந்தர் திருவொற்றியூரில் தங்கியுள்ளார் எனத்தெரிந்து அவரை எதிர் கொண்டழைத்தார் சிவநேசர். முத்துசிவிகைமுன் வணங்கும் அவரைப்பற்றி முன்பே அடியவர்கள் மூலம் தெரிந்த சம்பந்தர் சிவிகையிலிருந்தி கிழேஇறங்கி அவருடன் மயிலை வந்தார்,

மயிலை கபாலீஸ்வரரை வணங்கி சிவநேசரிடம், உம்மாற் பெறப்பட்ட உம்மகளது என்புள்ள குடத்தை உலகவர் அறிய கோவிலின் புறவாயிலில் கொணர்வீர் என்றார். சிவநேசரும் அவ்வாறேசெய்தார். ‘அடியார்களுக்கு அமுதுபடைத்தலும், அவர்தம் விழாக்களைக் காண்பதும், சத்தியமானால் பூம்பாவையே நீ உலகோர் வியக்க உயிர் பெற்று வருக’ என பூம்பாவையை நோக்கி அழைக்கும் வகையில் பதிகம் பாடினார்.

பத்தாவது பாடலில் பூம்பாவை குடத்தினின்று எழுந்தாள் ஞானசம்பந்தரை சிவநேசரும் பூம்பாவையும் வணங்கினர். நீர் பெற்ற மகளை நான் உயிர்பித்ததால் அவள் எனக்கும் மகளாவாள் என சம்பந்தர்கூற சிவநேசர் தன் மகளை வேறு ஒருவருக்கு மணமுடிக்க விருப்பமின்றி கன்னிமடத்தே இருக்கச்செய்தார்.

ஞான சம்பந்தருக்கு 16 வயது ஆனது. சிவபாத விருதையரும் சுற்றத்தாரும் கூடி சம்பந்தரை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். நல்லூரில் வாழ்ந்த நம்மாண்டார் என்பவரது மகளை மணம்பேசி நாள் குறித்தனர். சம்பந்தர் தோணிப்புர நாதனை வணங்கி திருமண நல்லூர் சென்றார்.

மணமேடையில் அமர்ந்தார், திருநீலநக்கர் திருமணம் நடத்திவைத்தார். முருகர், நீல்கண்டயாழ்பாணர் மற்றும் அடியார்கள் சுற்றத்தார் அனைவரும் மகிழ்ந்தனர்.

இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை என்னைச் சூழ்ந்ததே, இனி இவளுடன் சிவனடி சேர்வேன் என்று திரு நல்லூர்பெருமணம் சென்றார். அங்கு பதிகம் பாட “ஞானசம்பந்தனே நீயும் நின் மனைவியும் நினது திருமணம் காணவந்தோர் யாவரும் ஈனமாம் பிறவிதீர யாவரும் இச்சோதியுனுள் வந்து சேர்மின்“ என திருவாய் மலர்ந்தருளி கருவறையில் ஓர் சோதி தோன்றியது. அனைவரும் தம் மனைவியருடன் சோதியில் கலந்தபின் சம்பந்தர்

“காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாய மே.”

என்று தொடங்கும் நமச்சிவாய பதிகத்தைப்பாடி தன் மனைவியுடன் சோதியில் கலந்தார்.

                                  ******

அறுபத்துமூவர்

1.அதிபத்த நாயனார்/ 2.அப்பூதியடிகள் நாயனார்/ 3.அமர்நீதி நாயனார்/ 4.அரிவாட்டாய நாயனார்/ 5.ஆனாய நாயனார்/ 6.இசைஞானி நாயனார்/ 7.இடங்கழி நாயனார்/ 8.இயற்பகை நாயனார்9.இளையான்குடிமாற நாயனார்/ 10.உருத்திரபசுபதி நாயனார்/ 11.எறிபத்த நாயனார்/ 12.ஏயர்கோன்கலிக்காம நாயனார்/ 13.ஏனாதிநாத நாயனார்/ 14.ஐயடிகள் நாயனார்/ 15.கணநாத நாயனார்/ 16.கணம்புல்ல நாயனார்/ 17.கண்ணப்ப நாயனார்/ 18.கலிக்கம்ப நாயனார்/ 19.கலிய நாயனார்/ 20.கழற்றறிவார் நாயனார்/ 21.கழற்சிங்க நாயனார்/ 22.காரி நாயனார்/ 23.காரைக்காலம்மை நாயனார்/ 24.குங்குலிக்கலை நாயனார்/ 25.குலச்சிறை நாயனார்/ 26.கூற்றுவ நாயனார்/ 27.கோச்செங்கட்சோழ நாயனார்/ 28.கோட்புலி நாயனார்/ 29.சடைய நாயனார்/ 30.சண்டேசுவர நாயனார்/ 31.சத்திய நாயனார்/ 32.சாக்கிய நாயனார்/ 33.சிறப்புலி நாயனார்/ 34.சிறுத் தொண்ட நாயனார்/ 35.சுந்தரமூர்த்தி நாயனார்/ 36.செருத்துணை நாயனார்/ 37.சோமாசிமாற நாயனார்/ 38.தண்டியடிகள் நாயனார்/ 39.திருக்குறிப்புத் தொண்ட நாயனார்/ 41.திருநாவுக்கரசு நாயனார்/ 42.திருநாளைப்போவார் நாயனார்/ 43.திருநீலகண்ட நாயனார்/ 44.திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்/ 45.திருநீலநக்க நாயனார்/ 46.திருமூல நாயனார்/ 47.நமிநந்தியடிகள் நாயனார்/ 48.நரசிங்கமுனையரைய நாயனார்/ 49.நின்றசீர்நெடுமாற நாயனார்/ 50.நேச நாயனார்/ 51.புகழ்ச்சோழ நாயனார்/ 52.புகழ்த்துணை நாயனார்/ 53.பூசலார் நாயனார்/ 54.பெருமிழலைக்குறும்பநாயனார்/ 55.மங்கையர்க்கரசி நாயனார்56.மானக்கஞ்சாற நாயனார்/ 57.முருக நாயனார்/ 58.முனையடுவார் நாயனார்/ 59.மூர்க்க நாயனார்/ 60.மூர்த்தி நாயனார்/ 61.மெய்ப்பொருள் நாயனார்/ 62.வாயிலார் நாயனார்/ 63.விறன்மிண்ட நாயனார்

                                     ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26933225
All
26933225
Your IP: 34.230.35.103
2024-03-29 04:18

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg