gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

புதன்கிழமை, 27 February 2013 12:54

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

7.எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

பிறவிஎண்-7

மார்ச்15முதல் ஏப்ரல்14வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 7, 16, 25 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-7

எண்ணின் அதிபதி-

இரண்டு அதிபதிகள், சனீஸ்வரபகவான், கேதுபகவான்.

அதிர்ஷ்ட நாட்கள்-

7, 16, 25

அதிர்ஷ்ட கிழமைகள்-

ஞாயிறு, திங்கள்

ஒற்றுமையான எண்கள் –

ஏழு எண்ணுள்ளவர்களுக்கு 1, 2, எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,2,7 வரக்கூடிய 1,2,7,10,11,16,19,20,28,29 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

27 லிருந்து முன்னேற்றம். 45 லிருந்து 54 வரை வெற்றிகளும் வெகுமதிகளும் ஏற்படும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,4 பகை-இல்லை சமம்-3,6,8,9 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

தெய்வீகத்தன்மையும் நேர்மையையும் அடிப்படையாக கொண்டவர்கள். மதிப்பிற்குரிய பெருமக்களாக இருப்பார்கள். கவி, சங்கீதம் பாடுதல், பிரமிக்கத்தக்க எழுதும் திறமை உடையவர்கள். ரகசிய கலைகளில் நல்ல தேர்ச்சிபெறும் வாய்ப்பைப் பெறுவர். யோகிகளாகவும், சன்னியாசிகளாகவும் ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பொதுஜன விரோதியாகவும் மாறவாய்ப்புண்டு. நேர்மையான எல்லா தொழிலும் இவர்களுக்கு ஏற்றது. மற்றவர்களின் உதவியில்லா சொந்த முயற்சியே இவர்களுக்கு வெற்றி தருபவை. அதிக நண்பர்கள் இருக்கமாட்டார்கள். விரோதிகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அஞ்சாமை புகழ் சேர்க்கும். உரிமைக்காக போராடுவர். வாழ்நாளில் இவர்களின் சாதனைகள் உணரப்படாமல் இறந்தபின் போற்றிப் புகழப்படுவார்கள். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

மலச்சிக்கல், வாதநோய்கள் ஏற்படும். தோல்வியாதிகளும் ஏற்படலாம்.

உடை-

வெண்மை சிறந்தது. லேசான மஞ்சள், வெளிர்பச்சை வெளிர் நீலம் நன்மைகளைத் தரும்.

 

பெயர் எண் ஏழு- பலன்கள்

தன் முயற்சியால் செய்யும் தோழில் சிறப்பானது. சித்திரத்தொழில் செய்வோருக்கு ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் முடிவில் வெற்றியையும் சிறப்பையும் பெறுவர். பெரிய தனவந்தர் குடும்பத்தில் பிறந்திருக்கமாட்டார். ஆரம்பமுதல் தன் சுய முயற்சியில் முன்னேறுவார். நண்பர்கள் பெற்றோர்கள் உதவி கிடைக்காது. அப்படி ஆதரவு அளிப்பவர்கள் அவர்கள் செய்யும் உதவிக்கு பலமடங்கு எதிர்பார்ப்புகள் இருக்கும். வாணிபத்தில் ஈடுபட்டால் உள்நாடு வெளிநாடு அளவில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்வர். பிறரை வசப்படுத்துவதில் தனித்திறமை பெற்றவர்.  காரியங்கள் வெற்றியடைய தன் முழு பலத்தையும் உபயோகிப்பார்கள். தம்மிடையே உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொள்வர். ஒரு விசயம் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் தன் மனத்திற்கு பிடித்திருந்தால்தான் ஒப்புக்கொள்வார். சிந்தனை சிற்பிகள். தனிமையை விரும்புவார்கள். கவலையையும் துயரத்தையும் தவிர்க்கவும். மன நிம்மதி இருந்தால்தான் வேலையில் இவர்களால் கவனம் செலுத்தமுடியும்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 2, 11, 20, 29 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். மற்ற தேதி, மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் இரண்டு வரும் தினங்கள் நன்மை தரும். மேலும் 1,10,19,28 சாதகமான தேதிகள். இந்த தேதிகள் ஞாயிறு திங்கள் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஏழிற்கு உரிய திசை- தென்மேற்கு. கிழமை-ஞாயிறு, செவ்வாய்

அதிர்ஷ்ட நவரத்தினம்-

வைடூரியம்- கருஞ்சிவப்பு வைடூரியம் ஒளி ஊடுருவிச் செல்லக்கூடியது. பிரகாசமாகவும், கடினமாகவும், கணமாகவும் இருக்கும். அணிபவர் பரிசுத்தமாக இருக்க வேண்டும். கெட்ட காரியங்களைச் செய்யக்கூடாது. அதையும் மீறி செயல்பட்டால் கடும் நாசம் ஏற்படும். பரிசுத்தமானவர்களுக்கு எல்லா நன்மைகளையும் பெறுவர். ஆரோக்யம் பெறுவர். பணம் தட்டுப்பாடு இருக்காது. ஆயுள் நீடிக்கும். அடங்காத மனைவியும் அடங்கி நடப்பர். மகிழ்வு அடைவர்.

உடல் பாதிப்பு வயது-

தோல் சம்பந்தமான கட்டிகள், சொறி, சிரங்கு, அலர்ஜி ஆகியவை வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கீரை மற்றும் பழங்கள் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் இரண்டு வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 2,11,20,29,38,47,56,65,74,83,92,101 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புதன்கிழமை, 27 February 2013 12:53

எண் எட்டு (சனி)

8.எண் எட்டு (சனி)

பிறவிஎண்-8

ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 8, 17, 26 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-8

எண்ணின் அதிபதி-

சனீஸ்வரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

1, 10, 19, 28

அதிர்ஷ்ட கிழமைகள்-

சனிக்கிழமை

ஒற்றுமையான எண்கள் –

எட்டு எண்ணுள்ளவர்களுக்கு 1, 4, 9, எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

1,4,9 வரக்கூடிய 1,4,9,10,13,18,19,27,28,31 நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

30 வயதிலிருந்து 39 வரை வாழ்க்கை முன்னேற்றமடையும். வசதி வாய்ப்புகள் பெருகும். 50 – 59 பிறர்கண்டு பெருமைப் படத்தக்கதாக அமையும். பொருளாதார வசதிகள் மேம்படும். 25,26,33,35,41,49,50,53,55,77 வயது அதிர்ஷ்டமானது.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,5,6 பகை-4,7,9 சமம்-3 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

மன உறுதி, நேர்மை, தர்மத்திற்காகப் போராடும் ஆற்றல், துணிவு ஆகியவற்றைப் கொண்டவர்கள். தவறான பாதையில் செல்ல மாட்டார்கள். நடுநிலையிலிருந்து தவறாதவர்கள். நன்மையை சீர்தூக்கிப் பார்க்கும் சமத்துவமான அறிவுடையவர்கள். விதிப்படி வாழ்வின் ஏற்ற தாழ்வுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். பூர்வ ஜன்ம தற்கால புண்ய பாவங்களுக்கேற்ப பலன்களை அடைவர். எந்த ஒன்றையும் ஆராயமல் செய்யமாட்டார்கள். இவர்கள் செய்யும் காரியத்தால் நல்ல பலன்களே கிட்டும். மற்றவர் மகிழ்விற்காக எதைச் செய்தாலும் இவர்களுக்கும் அதில் ஆனந்தம் கிடைக்கும். 30 வயதிற்குமேல் யோகமடைவர். ஏழையானாலும் புகழும் செல்வாக்கும் மிக்கவராக இருப்பர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

வயிற்றுவலி ஏற்படும். தலைவலி, கிறுகிறுப்பு இரத்தத்தில் விஷச்சேர்க்கை போன்ற நோய்கள் வரும்.

உடை-

மஞ்சள் நிறம் சிறப்பானது. ஆழ்ந்த பச்சையும், நீலமும் நன்மை தரும்

 

பெயர் எண் எட்டு- பலன்கள்

தனிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடியவர். திடீர் யோகம் வரும். திடீர் துன்பமும் வரும். வெற்றிமேல் வெற்றி அல்லது தோல்விமேல் தோல்வி என இருக்கும். தேர்ந்த வியாபாரிகள். ஒன்றை நினைத்தால் அதில் வெற்றி கிட்டும்வரை ஓயமாட்டார்கள். பிடிவாத குணம் உடையவர்கள். உன்னத நிலையில் இருப்பார்கள் அல்லது அடித் தளத்திற்கு சென்று விடுவார்கள். தாழ்ந்த நிலை விரைவில் மாறிவிடும். துணிவு, சேம்பல், பரபரப்பு இல்லா உழைப்பாளிகள். யாருக்கும் அடங்கிப் போகார். சிறந்த நிர்வாகி. இவர்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கலாம். தன் அறிவு திறமையை உணரமாட்டார்கள். தாழ்வு மனப்பான்மையால் சங்கடப்படுவார்கள். அது தெளிந்து உணர்ந்தால் இவரை வெல்ல முடியாது. உடல் உழைப்பு இல்லாமல் நல்ல வருமானம் இவருக்கு கிடைக்கும். இந்த எண் நல்லதல்ல என்றாலும் இவர்கள் நல்ல காரியங்களைச் செய்வர். இவர்கள் மறைவிற்குப்பின் புகழப்படுவார்கள்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 1, 10, 19, 28 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். மற்ற தேதி, மாதம் வருடம் மூன்றையும் கூட்டினால் ஒன்று வரும் தினங்கள் நன்மை தரும். இந்த தேதிகள் சனிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் எட்டிற்கு உரிய திசை- மேற்கு. கிழமை- சனிக்கிழமை

அதிர்ஷ்ட நவரத்தினம்-

நீலம்- வாழ்க்கையை மேம்படையச் செய்யும் அல்லது அடியோடு நாசமாக்கிவிடும். சுத்தமானதாகவும் குற்றமில்லாததாகவும் இருக்க வேண்டும். பரிசோதித்து வாங்கவும். கெட்ட கண்பார்வையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். சபைகளில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தனலாபம் ஏற்படும். கண்டங்கள் நீங்கி தீர்க்காயுள் கிட்டும். சனித்தோஷம் நீங்கும். இது அணிந்துகொண்டு தாம்பத்திய உறவில் ஈடுபடக்கூடாது. நேர்மையான வழியில் சென்றால் உலகப் புகழ் அடையலாம்.

உடல் பாதிப்பு வயது-

தலைவலி, ரத்த சம்பந்தமான கோளாறுகள், மூட்டுப்பிடிப்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

மாமிசத்தை விலக்கி காய்கறிகள் கீரைகள் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு அதிகமாக தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்று வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆக இருக்கலாம்.

துரதிர்ஷ்டம்

பிறவிஎண் அல்லது பெயர் எண் 8 உள்ளவர்கள் அதிக துன்பங்கள் அடைவார்கள் என்பது பொது விதி. எண் 8 உள்ளவர்களின் மனைவி, வீடு, அலுவலக தொழிற்சாலை, தொலைபேசி, முக்கிய நிகழ்வுகள் எண் 4 ஆக இருத்தல் நன்றன்று. எனவே அதைப் பார்த்துக்கொள்ளவும்.

பொதுவாக 8ல் பிறந்தவர் தன் பெயரை 1 அல்லது 5 க்கு மாற்றவும். பெயர் எண் 10,19,37,46, 23,32,41 என்றிருத்தல் நன்மை அதன்பின் பிறந்ததேதி 8ஐ எதற்கும் பயன்படுத்தக்கூடாது. குடியிருக்கும் வீட்டுஎண் 1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 அல்லது 5,14,23,32,41,50,68,95,104 ஆக இருக்கவேண்டும்.

திருமணம் துரதிர்ஷ்டநாளில் நடந்தால் கணவன் மனைவி இருவரும் வாழ்நாளில் துன்ப படவேண்டியிருக்கும். குறிப்பாக 8 எண் உள்ளவர்கள் 4,8 வரும் 4,13,22,31,8,17,26 தேதிகளில் திருமணம் செய்தவர்கள் வாழ்வில் மகிச்சியே இருக்காது. இருபாலரில் ஒருவருக்கு மரண கண்டம் ஏற்படும்.

மேலும் எட்டாம் எண்ணில் மேல்தளத்தில் உள்ளோர், கீழ் தளத்தில் உள்ளோர் என இருவகையுண்டு. கீழ்தளத்தில் உள்ளோரின் வீட்டுஎண், அவரின் மணநாள், வேலைக்குச் சென்றதேதி, அவருக்கு குழந்தை பிறந்தநாள், மனைவியின் பிறந்தநாள் மற்ற முக்கிய நிகழ்ச்சிகளெல்லாம் எட்டு அல்லது நான்கு எண் தேதிகளிலேயே நடைபெறும். கீழ்தளத்திலுள்ள 8 எண்ணுடையவர்களது வாழ்க்கை அவர் விதிப்படியே செலுத்தப்படுவார்கள். மதியின் முயற்சி பலிக்காது. நாட்டின் சட்ட திட்டங்களால் பெறுதும் பாதிக்கப்படுவார்கள். வாழ்வு துக்ககரமானதாகவே இருக்கும்.

எட்டாம் எண்ணில் மேல்தளத்தில் உள்ளோர் வாழ்வின் நிகழ்வுகள் எல்லாம் 1,3,6 எண்களிலே நடக்கும். பிறந்த தேதி 26 என்றால் தனி எண் 8, அவர் வீட்டு எண் 3, மணமான தேதி 10, வேலையில் சேர்ந்த நாள்15- தனி எண் 6. 8ம் எண்ணுடையவர் என்றாலும் 4,8 ம் குறுக்கிடாமல் 1,3,6 எண்களில் நடக்கும் இவர் சனியின் மேல்தளத்தைச் சேர்ந்தவர்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புதன்கிழமை, 27 February 2013 12:51

எண் ஒன்பது (செவ்வாய்)

9.எண் ஒன்பது (செவ்வாய்)

பிறவிஎண்-9

ஏப்ரல் 15 முதல் மே 14 வரையிலும், நவம்பர் 15 முதல் டிசம்பர் 14 வரை எந்த தேதிக்குள்ளும், எந்த வருடம் எந்த மாதம் 9, 18, 27 ஆகிய தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

எண்ணின் அதிபதி-

அங்காரபகவான்

அதிர்ஷ்ட நாட்கள்-

9, 18, 27

அதிர்ஷ்ட கிழமைகள்-

செவ்வாய்க்கிழமை அதிர்ஷ்டமானது. வியாழன், வெள்ளி நன்மை

ஒற்றுமையான எண்கள் –

ஒன்பது எண்ணுள்ளவர்களுக்கு 3, 6 எண்ணுள்ளவர்கள் ஒற்றுமையும் ஈடுபாடும் கொண்டவர்கள்.

ஒற்றுமையான தேதிகள்

3,6,9 வரக்கூடிய 3,6,9,12,15,18,21,24,27, நாட்கள் சிறப்பானவை.

சிறப்பு பலன்-

9,18,27,36,45,54,63,72 அடுத்து 15,24,33,42,51,60,69 அடுத்து 12,21,30,39,48,57 அதிர்ஷ்டமான வயதுகள். 40 லிருந்து 49 க்குள் வாழ்வு மேன்மை அடையும்.

கூட்டு சேரஎண்-

நட்பு-1,3,4,7 பகை-2,5 சமம்-6,8 நட்பு எண்ணை பயன்படுத்தாத நிலையில் சம எண்களை பயன்படுத்தவும்

பொது பலன்-

துணிவும், வல்லமையும், உறுதியும் கொண்டவர்கள். நீதிக்காகப் போராடுபவர்கள். மன்னிக்கும் தன்மையுடையவர்கள். ராஜீய அதிபதியாகவும், பெரும் பணக்காரராகவும் விளங்க வாய்ப்புண்டு. தர்ம வழிகளில் மனத்தை செலுத்தக் கூடியவர்கள். ஆண்மை சுபாவமும் கண்டிப்பும் மிகுந்த இவர்கள் ஆரோக்கியம், சக்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாகத் திகழ்வார்கள். கட்டுப்பாடும் கண்ணியமும் இவர்களின் உடன் பிறப்பு. தன் வழியை விட்டுத் திரும்பினால் அழிவுசக்தியாக இருப்பர். பொது வாழ்வில் பிரகாசிப்பார்கள். எத்தொழில் செய்தாலும் வெற்றி காண்பார்கள். வாழ்வில் போராடிக்கொண்டே இருப்பார்கள். நிம்மதி இருக்காது. செய்தொழிலிலேயே கவனம் செலுத்தி அமைதி பெறுவர். எதற்கும் கலங்க மாட்டார்கள். தோல்வியை வெற்றியாக மாற்ற பாடுபடுபவர்கள். தோல்வியினால் மனச்சோர்வு அடையார். வாழ்நாளில் உடலில் வடு ஏற்படாமல் ஒருவர் இருந்தால் அது அதிசயமாகும். அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு இரத்தம் பார்ப்பர். தொழில் செய்பவர்கள் அந்த தொழிலின் பெயர்கள், பிறந்த தேதி எண்ணாக இருந்தால் நன்மை பயக்கும். பிறந்த எண் கலப்பெண்களிலும் வரும் அதில் நல்ல எண் பலன்களை பார்த்து தேர்வு செய்யவும்.

வியாதி-

இரத்தக்கட்டிகள், குடற்புண்கள், இரத்தம் விஷத்தன்மையடைதல், மூலம் ஆகியன வரவாய்ப்புண்டு. நெருப்புக்காயங்களும் விபத்துகளும் ஏற்படும்.

உடை-

சிகப்பு, கருஞ்சிகப்பு ஆடைகள் சிறந்தவை. நீல நிற ஆடையின் கரையிலாவது செந்நிறம் இருக்க வேண்டும்.

 

பெயர் எண் ஒன்பது- பலன்கள்

பலபேர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். சிறந்த சிந்தனையாளர்கள். விவாதத்தில் வெல்ல முடியாது. பரந்தமனப்பான்மையுடையவர். என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கை உடையவர்கள். இரக்கமனப்பான்மை கொண்டவர்கள். எளிதில் செயல்படமாட்டார். உதவி என்பது உடன் பிறந்த செயல். மற்றவர்கள் பேச்சினால் இவர்களை ஏமாற்றமுடியாது. பிடிவாதக்காரர்கள். மற்றவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற மனப்பான்மை கொண்டவர்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை மிகவும் விரும்புவர். தன் சொந்தங்களை நேசிக்கமாட்டார். சிறிது வெறுப்புடன் நடப்பார்கள். எந்த வியாபாரம் தொழில் சம்பந்தமான கணக்குகள் எல்லாவற்றிலும் புள்ளி விபரங்கள் தொழில் நுணுக்கங்களில் சிறந்து விளங்குவர். இவர்கள் மனதை அறியமுடியாது. மிகுந்த தந்திரசாலிகள். தம் காரியங்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை உடையவர்கள். மற்றவர்கள் உள்ளக்குறிப்பை நன்கு அறிபவர்களாயிருப்பார்கள். திடீர் பணக்காரராக இருப்பார்கள். எதிர்பாரா மாற்றங்கள் நடந்தபின் மனப்போக்கை மாற்றிக்கொண்டு நல்லவிதமான் வாழ்க்கை வாழ்ந்திடுவார்கள். வாழ்வின் பிற்பகுதி மனைவி மக்கள் உதவி கிட்டும். கலைத்துறையில் இருந்தால் குறுக்கு வழியில் வெற்றியடைய விரும்புவர். மற்றவர்களை நம்புவதற்கு அதிக நாட்களாகும்.

மிகஅதிர்ஷ்ட நாட்கள்-

மேலே உள்ள 9, 18, 27 தேதிகள் மிக அதிர்ஷ்டமானவைகளாகும். இந்த தேதிகள் வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வந்தால் மிக்க அதிர்ஷ்ட நாட்களாகும்.

அதிர்ஷ்ட கிழமை, திசைகள்-

அதிர்ஷ்ட தின நாளில் அதிர்ஷ்ட திசைகளில் சென்றாலும், காரியங்கள் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். வீடு, கடை வாசல்கள் இந்த திசைகளில் இருப்பதும் நன்று. பெயர் எண் ஒன்பதிற்கு உரிய திசை- தெற்கு. கிழமை- செவ்வாய், வியாழன், வெள்ளி,

அதிர்ஷ்ட நவரத்தினம்-

பவழம்- வெண்மை கலந்த சிவப்பு நிறமே நல்ல பவழம். ஒளி ஊடுருவாது. கணமாகவும் குண்டாக சற்று நீண்டிருக்கும். எளிதில் உடைக்க முடியாது. கடன் தொல்லைகள் நீங்கும். கோபக்காரரை சாந்தமானவராக மாற்றிவிடும். முகத்தில் ஒளியையும் கவர்ச்சியையும் உண்டு பண்ணும். ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். போலி கல்லினால் சீரழிவு ஏற்படுமாதலால் பரிசோதித்து வாங்கவும்.

உடல் பாதிப்பு வயது-

உஷ்ணஜுரங்கள், அம்மைநோய், குடல்புண், கான்சர் ஆகிய நோய்கள் வரலாம்.

உடலுக்குகந்த பொருள்கள்-

கொழுப்பு பதார்த்தங்களைத் தவிர்க்கவும். மதுபானம் அருந்தக்கூடாது. வெண்பூண்டும் வெங்காயமும் அடிக்கடி சேர்க்கவும். புளிச்சக்கீரை நன்மை பயக்கும். முருங்கைகீரை சேர்த்துக்கொள்ளலாம். பச்சைபருப்பு, சுரக்காய், மொச்சைக்காய், வெண்டைக்காய், சீதாப்பழம், மாதுளம்பழம், நாவற்பழம், தேன், பனங்கிழங்கு, பசுவின் நெய் ஆகியனவற்றை முடிந்தளவிற்கு அதிகமாக தினசரி சேர்க்கவும்.

குடியிருக்க வீட்டின் எண்-

கூட்டினால் ஒன்பது வரும் எல்லா வீட்டு எண்ணும் அதிர்ஷ்டமானவீடே. 9,18,27,36,45,54,63,72,81,90,108 ஆக இருக்கலாம்.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

புதன்கிழமை, 20 February 2013 00:00

எண் கணிதம்

ஓம்சிவாயநமக!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மணியாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

0=0=0=0=0=0

எண்கணிதம்

எல்லாவற்றிற்கும் வேதங்கள் அடிப்படை. ஆகமங்கள் அதனின் விரிவு. அதனால் பயனாவது 64 கலைகளாகும். இந்தக் கலைகளுக்கும் வாழ்வுக்கும் உள்ள தொடர்புகளை அளவிடமுடியாது. அதில் ஒன்று சோதிடக்கலை. அதில் ஒரு பகுதியாக எண்கணித சோதிடம் (Numerology) இருக்கின்றது. தனித்தன்மைவாய்ந்த எழுத்துக்களைப்போல் எண்களுக்கும் உயிர்சக்தி இருக்கின்றது. இந்த நாளில் பிறந்தவர்க்கு இன்ன எண் முக்கியமானது என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எண் எது எனத்தெரிந்து கொண்டால் அது பொருந்துகிறதா என நீங்களே சரி பார்க்கலாம்.

உலகின் மனிதசமுதாயத்தின் வளர்ச்சி, உணர்வு, அறிவு முதலிய செயல்களுக்கு காரணம் என இந்துக்கள் நம்பும் நவகோள்களும் அதன் எண்களும் குணச்சிறப்பையும் நன்மை தீமைகளை எடுத்துரைக்கும் ஓர் நிரந்தரக் காலக்கண்ணாடி எண்கணிதமாகும். மனித குலத்தின் எண்ணம் சொல் செயல் மூன்றிற்கும் காரணம் நவகோள்களும் அதன் எண்களும் ஆகும். இதை நம்புவர்களும், நம்பாதவர்களும் உண்டு. உண்மைகளை எவரும் முற்றிலும் தெரிந்தவரில்லை. ஏனெனில் அரிய பெரிய உண்மைகள் ஏராளமாக நிறைந்துள்ளன. அதில் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்ற முறையில் இந்தப் பகுதியில் அவரவர் தத்தம் எண்ணை அறிந்து அதன் பலன்களைத் தெரிந்து கொள்ள உதவும் என்ற அடிப்படையில் பிறவி எண், முக்கியமான ஆண்டுகள், கெட்ட எண்கள், அதிர்ஷ்ட எண்கள்,கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள், கலப்பு பெயர் எண்கள், தினப்பலன்கள் மற்றும் பிறவி எண், பெயர் எண்களுக்கு பலன்களைஏழுபரம்பரை ஜோதிடர் நண்பர். மா. முத்துசாமி அவர்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்வியலில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உந்துதலில் இயக்கப்பட்டு வருகின்றோம். நாம் எதனால் இயக்கப்பட்டு வருகின்றோம் என்பதை தெரிந்துகொள்ள எண்கணிதம் உதவிபுரியும். மனிதனின் நடத்தை, எண்ணம், எதிர்நோக்கம், உணர்வு, செயல் ஆகியவற்றிற்கு காரணமான கோள்களின் உறவை அது விளக்குகின்றது. இதன் சிறப்பு என்ன வென்றால் யார் துணையுமின்று நீங்களே தமக்குத்தாமே பலன்களைக் கண்டறியலாம். முன்னதாகப் பலன்களைக் கண்டறிவதால் தீமைகளை இயன்றவரை நீக்கவும், நன்மைகளை மேலும் நன்மையாக்கவும் செயல் பட்டு வெற்றி காணலாம்.

இந்த எண் கணிதத்திற்கு தேவையானவை நான்கு. அவை உங்கள் பெயர், பிறந்ததேதி, மாதம், வருடம், ஆகியவை மட்டுமே. இதற்கு ஆங்கிலத் தேதியும் ஆங்கில எழுத்துக்களுமே சரியா பொருந்தும். ஒன்று முதல் ஒன்பதுவரை உள்ள எண்களே மிக முக்கியமானது. மற்ற எண்கள் எல்லாம் அதன் கூட்டுத்தொகை இந்த ஒன்பதினுள் அடங்கும். பூஜ்ஜியத்திற்கு மதிப்பு இல்லை. நம் முன்னோர்கள் ஒன்பது எனும் எண்ணே கணிதத்தில் முடிவான எண்ணாக இருப்பதை அறிந்து நவக்கிரகங்கள், நவதான்யங்கள், நவபாஷாணங்கள் என ஒன்பதாக பிரித்துள்ளனர். ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்றாலும் 108 அல்லது 1008 என கூட்டுத்தொகை ஒன்பது வருமாறு உபயோகித்தனர்.

ஒருவரின் பிறந்த தேதி உதாரணமாக 27—05-1945 என எடுத்துக் கொண்டால் அதை 2+7+0+5+ 1+9+4+5=33. அதாவது அவருடைய அதிர்ஷ்ட எண் 3+3= 6. இது போன்றே ஒவ்வொருவரும் கணக்கிட்டு அவரவரது எண்ணைக் கண்டு உள்ளே அந்த எண்ணிற்குரிய பலன் கண்டறிந்து கொள்ளவும்.

வாழ்க்கையில் மாற்றங்கள்- பிறவி எண் (பிறவி தேதி) வேறுமுறை-

பிறந்த தேதியைக் கொண்டாடுவதால் சென்ற ஆண்டின் வெற்றி தோல்விகளின் நன்மை தீமைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தி இனிவரும் ஆண்டில் சுபிட்சம் வேண்டலாம். கொண்டாட்டத்தினால் ஆயுள் நீடிக்கும். புகழ் மேலோங்கும். இறைவனை அன்றைய தினம் வணங்குவது மேலான பலன்களைத்தரும். பிறந்த தினத்தை ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடுவதை விட ஒவ்வொரு மாதமும் பிறந்த தேதியன்று ஆலயம் சென்று வழிபடல் சிறப்பாகும் என்பது குருஸ்ரீ பகோராயின் கருத்தாகும்.

எந்த மாதம் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் அவர்கள் பிறந்த தேதி முக்கியமானது. அப்படி பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு பிறந்த மாதம் தெரிந்தால் கீழ்க்காணும் முறையில் பிறவி எண்ணை தெரிந்து அதன் பலாபலன்களை அறியலாம்.

ஜனவரி15முதல் பிப்ரவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-8

பிப்ரவரி15முதல் மார்ச்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-4

மார்ச்15முதல் ஏப்ரல்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-7

ஏப்ரல்15முதல் மே14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

மே15முதல் ஜூன்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

ஜூன்15முதல் ஜூலை14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

ஜூலை15முதல் ஆகஸ்ட்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-2

ஆகஸ்ட்15முதல் செப்டம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-1

செப்டம்பர்15முதல் அக்டோபர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-5

அக்டோபர்15முதல் நவம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-6

நவம்பர்15முதல் டிசம்பர்14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-9

டிசம்பர்15முதல் ஜனவரி14வரை எந்த தேதியில் பிறந்திருந்தாலும் பிறவி எண்-3

முன்பு பிறந்த தேதி எண், மாத எண், வருட எண், ஆகியவற்றைக் கூட்டி கலப்பு எண்ணை ஒன்றைப் படையாக்கி பலன் பார்த்தோம். இதில் பிறவி எண்ணைக் கொண்டு வாழ்வின் மற்ற பலன்களை அறிவோம். பொதுவாக வாழ்வில் மாற்றம் நன்மையாகவும் தீமையாகவும் இருப்பதுண்டு. முன்பே தெரிந்தால் மாற்றங்களை சந்திக்க நாம் தயாராக இருக்க முடியும்.

ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் - 1945+1+9+4+5 = 1964 வரும். அதனுடன் பிறந்த தேதி மாதம் இரண்டையும் கூட்டினால் – 1964+2+7+5 = 1978 வரும். அதனுடன் வருடத்தைக் கூட்ட- 1978+45 = 2013. பலன் என்ன வென்றால் 1945 ம்வருடம் பிறந்தவர்க்கு 1964ல் ஒரு மாற்றமும் 1978 ல் ஒரு மாற்றமும், 2013 ல் ஒரு மாற்றமும் ஏற்படவேண்டும். முதல் இரண்டு மாற்றங்கள் சிறியதாக இருந்தாலும் மூன்றாவது பெரிய மாற்றமாக இருக்கும்.

முக்கியமான ஆண்டுகள்.

ஒருவர் 27-05-1945 ந் தேதி பிறந்தவராகக் கொண்டு பிறந்த வருடத்தைக் கீழ்கண்டவாறு கூட்டினால் 1+9+4+5=19 வரும் .இதை பிறந்த வருடத்துடன் மீண்டும் மீண்டும் கூட்டினால் 1945+19=1964+19=1983+19=2002+19=2021. அதாவது 1964, 1983, 2002, 2021 ஆகிய ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும்.

நம்பிக்கையில் கெட்ட எண்கள் 3. 13, 8, 18

எண் மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.ஒரு வீட்டில் திருமணமாகாத 3 ஆண்கள் இருக்கக்கூடாது

2.விதைவைகள் 3 பேர் ஒரே வீட்டில் இருக்கலாகாது.

3.இரண்டு மனைவிகள் இறந்த ஒருவர் 3 வது திருமணம் செய்யக் கூடாது. மீறி திருமணம் செய்ய விரும்பினால் வாழைமர சடங்குகள் செய்து வெட்டி புதைத்து கருமம் செய்தபின் திருமணம் செய்யலாம்.

4.வெளியில் புறப்பட்டுச் செல்லும்போது 3 பேராகப் புறப்படக்கூடாது.

5.ஒரு தீக்குச்சியைவைத்து 3 முறை பற்ற வைக்கக் கூடாது.

எண் பதின்மூன்று ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.வெளியூர் பயணம் 13ம் தேதி புறப்படக்கூடாது.

2.எந்த ஒரு புது வேலையையும் 13ம் தேதியில் ஆரம்பிக்கக்கூடாது.

3.திருமண மண்டபத்தில் 13ம் இடத்தில் அமரவேண்டாம்.

எண் எட்டு, பதினெட்டு ஏன் ஆகாது? இந்து தர்மத்தின்படி

1.அஷ்டமிதிதி வளர்பிறை, தேய்பிறை 8ம் நாள் நல்ல காரியம் செய்யக் கூடாது.

2.ஒருவருடைய லக்னம் அல்லது ராசிக்கு 8ம் இடத்திற்கு சனி, செவ்வாய், குரு வந்தால் தீமை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்-

1,2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97 ஆகிய எண்களை அதே எண்ணாலும் ஒன்றாலும் மட்டுமே வகுக்க முடியும். இந்த எண்கள் மிக்க அதிர்ஷ்ட எண்களாகும். குலுக்குச் சிட்டில் இருந்தால் வெற்றியைத் தருபவை.

கலப்பு எண்களில் நல்ல கெட்ட எண் குணங்கள்

எண்10- அதிர்ஷ்ட சக்கரம், மரியாதை புகழ் தன்னம்பிக்கை ஆகியவற்றை குறிக்கும். பெரிய அளவில் விளம்பரமாகும்.

எண்11- அபாயகரமானது, மறைமுகமான அபாயம், நம்பிக்கைத் துரோகம் ஆகியன குறிக்கும். பெரிய சங்கடங்களைச் சமாளிக்க வேண்டும்.

எண்12- சஞ்சலம், மனம் கலக்கம், சதியால் ஏமாந்தவன் பலியிடப்படுதலைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்13- சாவைக் குறிக்கும். திட்டம் எண்ணான இது இடம் ஆகியவற்றின் மாறுதலைக் குறிக்கும். அதிகாரம் தவறான வழியில் செலுத்தப்பட்டால் தனக்கு அழிவு, எதிர்பாரா கெடுதல் நேரிடும்.

எண்14- இயற்கையின் சீற்றத்தினால் விபத்தும் நீர் நெருப்பு, காற்றால் ஆபத்தும் ஏற்படும். பணாம் சூதாட்டம், வியாபார மாறுதலுக்கு நல்ல எண். மற்றவர்களின் முட்டாள் தனத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்15- காரியம் கைகூட மந்திர வித்தைகளைக் கையாள்வர். நல்ல அதிர்ஷ்ட எண்களுடன் சேர்ந்தால் பலம் பொருந்திய நன்மை கிடைக்கும். 4, 8 உடன் சேர்ந்தால் எதற்கும் துணிந்து சுயநலமாக செயல்படுவர். கலைஞர்கள், இசைவாணர்களுடன் தொடர்பு இருக்கும். சிற்றின்ப ஆசை மிகுந்தவர்கள்

எண்16- கெடுதல், அபாயம் திட்டம் தோல்வியடைதல் குறிக்கும் எதிர்கால திட்டங்களில் இது வந்தால் தவிர்க்கவும்

எண்17- அன்பிற்கும் சமாதானத்திற்கும் அடையாளம். தடைகள், சோதனைகள் வென்று வாழ்க்கை நடத்துவர். அமரத்துவம் பெற்றபின்னும் பெயர் நிலைத்து நிற்கும். பிறந்த எண் 8 க்கு எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

எண்18- ஆத்ம சக்தியை பொருளாதார வாழ்க்கையை கெடுக்கும். சண்டை சச்சரவுகள் வரும். சமுதாயப்புரட்சிகள், கலகங்கள் ஏற்படுத்தும். எதிர்கால பொருத்தத்தில் வந்தால் கவனமுடன் இருக்கவும்.

எண்19- இது சூரியனைக் குறிக்கும். மகிழ்ச்சி, வெற்றி, புகழ் மதிப்பு ஆகியன குறிக்கும்.

எண்20- தீர்ப்பை குறிக்கும். புதிய கருத்துக்கள், திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றின் எழுச்சியை சொல்லும் எதிர்காலத்திற்கு இது நல்ல எண் அல்ல. பொதுவான வாழ்க்கையின் உயர்வுக்கு உகந்ததல்ல.

எண்21- புகழ் வெற்றி உயர்வு ஆகியவை போரட்டத்திற்கு பின் கிடைக்கும். நல்ல எண்ணாகும்.

எண்22- கனவு காணும் ஒருவன் அபாயம் வரும்போது விழித்துக் கொள்வான். தவறான யோசனைகளைக் கேட்பதினால் துயரம் வரும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்23- உயர்ந்தோர் அதிகாரத்தின் உதவியும் நட்பும் கிடைக்கும். வெற்றியும் செல்வமும் தரும். மாந்திரீக சக்தி கொண்ட எண்.

எண்24- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்25- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்26- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்27- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்28- எல்லா திறமைகளையும் பெற்றிருந்தாலும் சேமிப்பு இல்லை என்றால் பின்னாளில் வறுமையில் கஷ்டம் ஏற்படும். மற்றவர்களை நம்புவதாலும் எதிரிகளாலும் சட்டத்தினால் ஏற்படும் அபாயங்களைக் குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்29- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்30- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்31- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்32- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்33- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்34- வயதில் ஏற்படும் முயற்சிப் போராட்டங்களால் வெற்றி. எதிர்காலத்திற்கு நல்ல எண்.

எண்35- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்36- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்37- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்38- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்39- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்40- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்41- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்

எண்42- அதிர்ஷ்டமான எண். உயர்ந்தோர் உதவி, காதலினால் வருவாய், எதிர் பாலியியல் செல்வம் கிடைக்கும்.

எண்43- புரட்சி, வீழ்ச்சியை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல

எண்44- சவகாசங்களால் அபாயம் ஏற்படும். வியாபாரக்கூட்டு, சூது ஆகியவற்றால் அபாயம் தரும்.

எண்45- புகழ், பதவி, வெற்றி, செல்வம் ஏற்படும். சுய அறிவையும் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டால் வெற்றி. அதிர்ஷ்ட எண்.

எண்46- காதலினாலும் எதிர் பாலியராலும் பொருள் வரவும் வெற்றியும் வரும். கூட்டு வியாபாரத்திற்கு நன்மையானது. எதிர்கால நல்ல எண்.

எண்47- எதிர் பாலியர்களால் ஏற்படும் கஷ்டங்கள் நிறைந்தது. நண்பர்களாலும் துன்பங்கள் வரும்.எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

எண்48- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். எதிர்கால பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள்.

எண்49- எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நன்மை தீமை வரும். பொருளாதார வாழ்க்கைக்கு நல்ல எண் அல்ல. மனவளர்சிக்கு அன்று பொருள் வளர்ச்சிக்கு மதிப்புத் தரமாட்டார்கள். அதிக தனிமை உணர்ச்சியும் மற்றவர்களோடு உறவாடாத உள்ளமும் கொண்டவர்கள்.

எண்50- மாந்திரீக சக்தி கொண்ட எண். உறுதியான எண்ணம் கொண்டால் வெற்றி. இல்லையென்றால் மற்றவர்களின் பிடிவாதத்தால் முட்டாள் தனத்தினால் கெடுதல் தோன்றும். எதிர்கால நல்ல எண்.

எண்51- எந்த துறையிலும் திடீர் முன்னேற்றம் கிடைக்கும். இராணுவத்தில் நல்ல வெற்றியடைவர். எதிரி ஆபத்தால் கொலை செய்ய வாய்ப்புண்டு.

எண்52- புரட்சி, வீழ்ச்சி யை குறிக்கும். எதிர்காலத்திற்கு நல்ல எண் அல்ல.

கலப்பு பெயர் எண்கள்

ஒருவர் எப்பெயரால் எல்லோராலும் அழைக்கப் படுகின்றார்களோ அப்பெயரையே எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக பெயர் கோவிந்தராஜன் என்றிருந்தால் எப்படிக் கையெழுத்திடுகிறாரோ அப்படியே எடுக்க வேண்டும். கோவிந்தராசன் என எடுக்கக்கூடாது. தந்தை பெயர் பழனியப்பன் என்றிருந்தால் ப. எனச் சேர்த்திருந்தாலும் அதற்குரிய ஆங்கில எழுத்தைக் எடுக்க வேண்டும். மேலும் சுவாமி என்பதை SWAMY எனவும் SAMY எனவும் எழுதுவர். அதில் வரும் ஒரு எழுத்து பலனை மாற்றக் கூடியது. அதனால் எப்படி கையெழுத்து போடுகின்றார்களோ அப்படியே எடுத்துக் கொள்ளவும்.

ஆங்கில எழுத்துக்களுக்குச் சரியான மதிப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

A-1, B-2, C-3, D-4, E-5, F-8, G-3, H-5, I-1, J-1, K-2, L-3, M-4, N-5, O-7, P-8, Q-1, R-2, S-3, T-4, U-6, V-6, W-6, X-5, Y-1, Z-7 அல்லது

1--A,I,J,Q,Y; 2--B,K,R; 3-C,G,L,S; 4--D,M,T; 5--E,H,N,X; 6--U,V,W; 7--O,Z; 8--F,P என்று வைத்துக் கொண்டு உங்கள் பெயருக்கு உள்ள எழுத்துக்களுக்குச் சரியான எண்களை எழுதிக் கொள்ளவும். P.GOVINDARAJAN என்பதற்கு P-8, G-3, O-7, V-6, I-1, N-5, D-4, A-1, R-2, A-1, J-1, A-1, N-5 என்று எழுதி 8+3+7+6+1+5+4+1+2+1+1+1+5=45=9 கூட்டவும். 9 வரும். பிறந்த எண்ணும் பெயர் எண்ணும் ஒன்றாக வந்தால் நன்மை. பெயர் எண்ணை மாற்ற விரும்பினால் எந்த எண் என்று கணக்கிட்டு பெயரில் தேவைப்படும் இடத்தில் A வை சேர்த்துக்கொண்டு கணக்கிடவும். அல்லது முன்னால் ஊர், தந்தையின் தகப்பனார் முதல் எழுத்தைச் சேர்த்து கணக்கிடலாம். அதன்பின் அவ்வாறே பெயரைச் சொல்லி கையெழுத்திடவேண்டும். அதற்குரிய மாற்றங்களை அரசாங்கத்திற்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். எழுத்துக்களைச் சேர்த்து அதிர்ஷ்ட எண் வராதவர்கள் வேறு பெயருக்கு எழுத்துக்களைக் கணக்கிட்டு அந்தபெயரை மாற்ற தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெயர் எண் தான் ஒவ்வொருவருக்கும் அதிர்ஷ்ட எண். இது எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமானது. வீடு, கார், டெலிபோன், வியாபார அலுவலக எண் ஆகியன இந்த எண்ணில் அமைந்தால் நன்மை பயக்கும். கலப்பெண்ணின் பலனும் நல்லதாக அமையவேண்டும்.

தினப்பலன்கள்-

ஒரு காரியத்தை ஆரம்பிக்க அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக்கொண்டே அந்த நாளின் பலன் அறியலாம். அதற்கு அந்த நாளின் வருடம், மாதம், தேதி, கிழமை, மணி இவைகளைக் தனித்தனியே கூட்டி பின் மொத்தமாக கூட்டி வரும் எண்ணுடன் பெயர் எண்ணையும் கூட்டி ஒற்றைபடையாக இருந்தால் வெற்றியடையும். இரட்டைப்படையானால் தாமதம் அடையும். அதைக் கீழ்கண்டவாறு அறியவும்.

நீங்கள் ஒரு காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1945 மே மாதம் 27ம்தேதி வெள்ளிக்கிழமை காலை1030மணி என வைத்துக்கொண்டால் 1030மணியை 10ஐ தாண்டியதால் 11எனவும். வெள்ளிக்கிழமை வாரத்தின் 6வது நாள் பெயர்எண்- 9 என கொள்ளவும். அதாவது 1945 வருடத்துடன், 5 மாதம்+ 27 தேதி+ 6 வெள்ளி+ 11 மணி+ பெயர் எண் 9 கூட்டினால் 1945+5+27+6+11+9=2003=5. 5 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக.

உதாரணம்-காரியம் ஆரம்பிக்க நினைக்கும் நாளின் வருடத்தை 1971 மேமாதம் 15ம்தேதி புதன்கிழமை காலை1130மணி என வைத்துக்கொண்டால் 1130மணியை 11ஐ தாண்டியதால் 12எனவும். புதன்கிழமை வாரத்தின் 4வது நாள் பெயர்எண்- 1 என கொள்ளவும். அதாவது 1971 வருடத்துடன், 5 மாதம்+ 15 தேதி+ 4 புதன்+ 12 மணி+ 1 பெயர் எண் கூட்டினால் 1971+5+15+4+12+1=2008=1. 1 ஒற்றைப்பட எண் ஆதலால் அன்று எடுக்கும் காரியம் கைகூடும் என அறிக. மேலும் பிறவி எண்ணும் இதுவும் ஒத்து வந்திருப்பதால் காரியம் சிறப்பாக நிச்சயம் வெற்றிபெரும்.

இதில் சந்தேகங்களுக்கு இடமில்லை என்றாலும் ஏதேனும் சந்தேகம் தோன்றின் இனையதள மின்னஞ்சலின் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும். இந்த பகுதிதனை உபயோகித்து உங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் நடந்த நாளுக்கும் உங்கள் எண்ணுக்கும் உள்ள தொடர்பை புரிந்து உண்மையை உணரந்து எதிர்கால குழப்பங்களிலிருந்து தெளிவடைய அன்புடன் –குருஸ்ரீ பகோரா.

அன்பு கொண்டவர்களே! எண் 1 லிருந்து 9 வரைபலன்களை அறிய உங்களுடைய சரியான எண்ணைத்தெரிந்து கொண்டு கீழ்கண்ட எண்களைத் தேர்வு செய்து பலன்களைப் பார்பீர்களாக! 

எண் ஒன்று (சூரியன்)

எண் இரண்டு (சந்திரன்)

எண் மூன்று (குரு)

எண் நான்கு (இராகு, சுக்கிரன்)

எண் ஐந்து (புதன்)

எண் ஆறு (சுக்கிரன்)

எண் ஏழு (கேது, சனீஸ்வரன்)

எண் எட்டு (சனி)

எண் ஒன்பது (செவ்வாய்)

ஞாயிற்றுக்கிழமை, 24 February 2013 00:00

பிறயோகங்கள்

  •                                   ஓம் சிவாயநமக!
    நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
    தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
    காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
    ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
                                       ******
    பிறயோகங்கள்-
    யோகம் பயிலுதல் என்பது கலைப் பயிற்சி ஆகும். என்ன கலை, என்ன பயிற்சி. எதற்கான பயிற்சி என்றால் மனதைக் கட்டுப்படுத்த, ஒருமுகப்படுத்த, உடல் வளம்பெற, ஆரோக்கியமயிருக்க, துன்ப துயரங்களிலிருந்து விடுபட ஒருவன் தன்னை தயார் படுத்திக் கொள்ள முனைவதற்கான முறைகளாகும். திருமூலரின் திருமந்திரத்திற்கு முன்பே யோகம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அது பிரம்மாவிடம் இருந்து வந்ததாக சொல்ல முடிந்தாலும் உறுதியாக சொல்லப்படவில்லை. எப்படியிருப்பினும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து நம் பாரதத்தில் அது வேரூன்றி இருந்துள்ளது. யோகத்திற்கு பாரதமே ஆணிவேர் எனவும் சொல்லலாம். அவைகள் எந்த ஒரு சமயத்தையும் சார்ந்தவை அல்ல. பொதுவானவை. மனித உயிர்களின் மேம்பாட்டிற்காக சொல்லப்பட்டவை. எப்படி வந்திருந்தாலும் அதை மனித ஜீவாத்மாக்கள் தங்களின் வாழ்வியலுக்கு முடிந்தவரை பயன்படுத்தி பலன் அடைய வேண்டும் என்ற நினைவில் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளது. அனைத்து யோகங்களையும் இராஜயோகம் பயின்றபின் பயிலவும். வாழ்க மனிதகுல நேயம்.                                                                      

    அணு/கிரியா யோகம்
    சக்தி/ஞான யோகம்
    சித்தர் யோகம்
    சிவ யோகம்
    ஞானஅகவல் யோகம்
    ஞானசட்க யோகம்
    ஞானதீப யோகம்
    ஞானமாலை யோகம்
    தந்திர யோகம்
    தியான யோகம்
    திருமந்திர யோகம்
    மந்திர யோகம்

  •                                                               

செவ்வாய்க்கிழமை, 26 February 2013 00:00

பதஞ்சலி யோகம்

ஓம் சிவாய நமக!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
-**-**-**-

“பதஞ்சலி முனி” வணக்கம்                                                                                     மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதஞ்சலி யோக முறைகள்-

சூத்திரம் என்றால் இலக்கணம் முதலிய சாத்திரங்களை குறைந்த சொற்களில் சொல்வது என்பதாகும். அவ்வாறு நான்கு பிரிவுகளைக் கொண்ட 196 நூற்பா சூத்திரங்களை கொண்டது இந்த பதஞ்சலி யோகமாகும். பதஞ்சலி முனிவர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்தவர். இதில் எந்த மதமும் எந்தக் கடவுளும் கூறப்படாததால் எல்லோராலும் போற்றப்படுகிறது. இந்த யோக சூத்திரங்கள் மிகவும் பழமையானது.

பதஞ்சலி யோகத்தின் நான்கு பகுதிகளாவன-

1. சமாதி பாதம் -        51 சூத்திரம்
2. சாதன பாதம் -        55    “
3. விபூதி பாதம் -        56    “
4. கைவல்ய பாதம் -   34    “

    மொத்தம் =          196 சூத்திரங்கள்
                       ******

புதன்கிழமை, 20 February 2013 00:00

சமாதிபாதம்

 

1.சமாதி பாதம்
1-1 அத யோகாநு சாஸனம்

தொடர்ந்து சொல்லிவருவது ஆகையால் யோகத்திற்கு துணையாக இருக்கும்.யோகம் விளக்கப்படும்.

1-2 யோக ஸ்சித்த விருத்தி நிரோத

சித்தத்தின் விருத்திகளை ஒடுக்குவது யோகமாகும். மனமும் புத்தியும் தோன்றுவதற்கு ஓர் அடிப்படை சித்தம். மனம், புத்தி, சித்தம், உள்ளம், அகங்காரம் ஆகியன அந்தக்காரணமாகும். மனம், புத்திகளின் ஆணிவேர் சித்தமாகும். வினைப் பயன்களினால் எண்ணங்களை எண்ண வைப்பது சித்தம். சித்தம் ஒழுங்குபட்டால் மனம், புத்தி அடக்கம் காணும். வாழ்க்கையின் சூழ்நிலைகள் சித்தத்தில் அலைகளை ஏற்படுத்தி அதனால் மனமும் புத்தியும் வளரும். மனம் விருப்பத்தினால் நினைவுகளினால் குழப்பத்தை தந்து சுயநலமாக உணர்ச்சி பூர்வமாக இயங்கும். புத்தி அந்த இயக்கத்திலிருந்து தீர்மானித்து முடிவு செய்வது. ஒரு பொருளைப்பற்றி மனத்தில் எண்ணங்கள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பது விருத்தியாகும். பிரபஞ்சத்துடன் நாம் சார்ந்திருப்பதால் நம் மனம் விருத்திகளை அடையும். நாம் சக்தியடைந்தால் அந்த எண்ணங்கள் குறைந்து மறைந்துவிடும். அதுவே விருத்திகளை ஒடுக்குவது. விரியாமல் செய்வதாகும்.

1-3 ததா த்ரஷ்டு ஸ்வரூபே அவஸ்தானம்

சித்தத்தின் விருத்திகள் ஒடுக்கப்பட்டால் ஆன்மாவின் இயற்கை வடிவம் தெரியும். சித்த விருத்திகள் ஆரம்பத்தில் யாரிடமும் இல்லை. பின்னால் பார்த்த, கேட்ட, படித்த அறிவால் வந்தது. நீரின்மேல் உள்ள பாசத்தை நீக்கினால் அடியில் நீர் தெரிவதுபோல் பாதியில் வந்த விருத்திகளை நீக்கினால் ஸ்ரூப வடிவம் தெரியும். வேறொன்றுடன் கலவாமல் நாமாகவே இருக்கின்றோம்.

1-4 வ்ருத்தி ஸாருப்ய மித ரத்ர

இயற்கையாகவே தன் வடிவமே அதுதான் என்று எண்ண அலைகளில் சிக்கும்போது நினைக்கிறான். ஒருவன் என்னை நிந்திக்கின்றான். அதைக் கேட்டதும் என் உள்ளத்தில் சித்த விருத்தி ஒன்று உண்டாகிறது. அதனுடன் ஒன்றுபட்டு நான் துன்பம் அடைகிறேன்.

1-5 வ்ருத்தய பஞ்ச தய்ய க்லிஷ்டா அக்லிஷ்டா

இன்ப துன்பங்களின் மூலமான சித்த விருத்திகள் 5 வகைப்படும். முப்பிறவியின் பயன்களால் ஏற்படும் விருத்திகள் வாழ்க்கையின் போக்கில் எண்ண அலைகளாய் விரிந்து வளர்ச்சி அடைகின்றன். சில துன்பம் தருபவை. வேறுசில துன்பம் அற்றவை.

1-6 ப்ரமாண விபர்யய விகல்ப நித்ரா ஸ்ம்ருதய

சித்த விருத்திகளுக்கு காரணமானவை தொழில்படும் அறிவான உண்மை அறிவு, தவறான அறிவு-விபரீத அறிவு, கற்பனை அறிவு-சொல்லால் வரும் மயக்கம், தொழில்படா அறிவான உறக்கம்- தூக்கம், பதியவைக்கப்பட்டுள்ள அறிவு நினைவு-ஞாபகம் ஆகியவையாகும்.

1-7 ப்ரத்யக்ஷானு மானாகமா ப்ரமாணானி.

காட்சியறிவு, அனுமான அறிவு, ஆகமம் ஆகிய மூன்றும் அறிவு பெறும் வாயில்கள் உண்மை அறிவு-பிரமாணங்கள் எனப்படும். மெய்- தொடு உணர்வு, வாய்- சுவை அறிவு, கண்- பார்த்தல், மூக்கு- நுகர்தல், காது- கேட்டல் ஆகியவைகள் மூலம் ஒருவன் வெளிப்பொருள்களை அனுபவிப்பது காட்சியறிவு – ஐயறிவு –ப்ரத்தியட்சப் பிரமாணம் எனப்படும்.

ஒரு பொருளைப் பார்த்தவன் அதேபோன்ற பொருளைப்பற்றி கேட்கும்போது அதைப்பற்றி யூகித்தல் அனுமான அறிவு-கருத்துணர்வு.
புலவர்கள் ,ரிஷிகள், முன்னோர்கள், வேதங்கள் ஆகியவற்றால் நாம் அறிந்து கொள்வது ஆகம அறிவு- ஆப்தவாக்கியம் ஆகும்.

1-8 விபர்யயோ மித்யக் ஞானமதத்ரூப ப்ரதிஷ்டம் 

பொய்க் காட்சியாலும் அறியாமையாலும் வரும் தவறான அறிவே விபர்யம் ஆகும். மித்யா-மாயம். அறியாமையை உண்டுபண்ணும் பொய்க்காட்சிகளால் ஏற்படும் ஒன்றை வேறொன்று என்று தவறி எண்ணுவதாகும். நிலத்தில் வளைந்து சுருண்டு கிடக்கும் கயிற்றை வெளிச்சம் குறைவினால் அதைப் பாம்பு என நினைத்து கொள்வது போலாகும். அந்த நினைவினால் உடம்பில் பதற்றம் ஏற்பட்டு உடல், மனத்துன்பம் அடைவது விபர்யம் என்பதாகும். பளபளப்பான முத்துச் சிப்பியை வெள்ளியென்று தவறாக எண்ணுவதுபோல ஒன்றை மற்றொன்றாக பிழைபட எண்ணுவதால் எழும் விருத்திகள்-இது சித்த விருத்தியினால் வருவதாகும்.

1-9 சப்தக் ஜ்ஞானானுபாதீ வஸ்துசூன்யோ விகல்ப

ஒலி முதலிய ஒரு நிரந்தர நிலைப்பாட்டினால் ஒரு பொருளைப் பற்றி கற்பித்துக் கொள்ளும் அறிவானது விகல்பம் எனப்படும். மனத்தில் தோன்றுவது கல்பம். மொழியால் அதைக் கூறுவது ஸங்கல்பம். அதைக் கற்பனையாக மாற்றிக் கூறுதல் விகல்பம், இல்லாத ஒரு பொருளை இருப்பதுபோல் கற்பித்தலாகும். பாம்பு இல்லாமல் பாம்பு என்ற வார்த்தை ஒரு கூட்டத்தை கலைக்கும். சொல்லைக்கேட்டு அது இல்லாத இடத்தில் கற்பித்துக் கொள்வது.பொருள் இல்லாதிருக்கும்போது வெறும் சொல்லைபற்றி நிகழ்வது- சொல் மயக்கமாகும்(விகல்பம்). ஒரு சொல்லைக் கேட்டவுடன் அதன் கருத்தை ஆராயக் காத்திராமல் உடனே ஒரு முடிவுக்கு வருகிறோம். இது சித்தத்தின் வலிமையின்மைக்கு அறிகுறி. மனம் அடக்கம் குறைந்த நிலை. சில செய்திகள் காதில் விழுந்ததும் மனம் ஏன் கோபம் அல்லது வருத்தம் போன்ற நிலைகளை அடைகிறது. சொற்கள் காதில் விழுந்ததும் தொடர்ந்து விருத்திகள் வராது தடுத்து பழகுபவனே தன்னடக்கம் உடையவன்.

1-10 அபாவ ப்ரத்யயாலம்பனா விருத்தி நித்ரா.

உணர்ந்து கொள்வதற்கான ஆதாரம் ஒன்றுமில்லை என்ற விருத்தியானது உறக்கம் ஆகும். அபாவம்- இல்லாதது. பிரத்யயாலம்பனா- உணரும் ஆதாரம். எந்த பொருளையும் உணர வேண்டாத நிலையில் மனத்திற்கு வேலையில்லாததால் அது உறக்கம் கொள்ளும். திடீரென்று தூக்கத்தில் விழித்தெழும் ஒருவர் தான் எங்கே இருக்கிறேன் என்று கேட்பதுண்டு. சில நொடிகளில் உறங்குமுன் நடந்தது நினைவுக்கு வந்ததும், தான் நன்றாக உறங்கியதை உணர்வர். அதற்குமேல் எண்ண இடமில்லை என்ற நிலையில் அறிவு இருப்பதால் தெளிவடைய முடிகிறது. இந்த விருத்தி உறக்கத்திற்கு காரணமாகிறது. தூங்கும்போது ஒருவகை அலைகள் மனதில் உண்டாவதால் நாம் தூங்கினோம் என்றநினைவு ஏற்படுகிறது. குளத்து நீரில் கல் எறிவதால் உண்டாகும் எதிர்செயலை அலை என்கிறோம். ஆழ்ந்த உறக்கத்தில் அலைகள் ஒன்றும் தோன்றாவிடில் அது எதிர்மறையாகவோ உடன்பாடாகவோ உள்ள காட்சியாக இருக்காது. அவற்றை நாம் நினைவு கூரமாட்டோம்.

1-11 அனுபூத விஷயாக அஸம் ப்ரமோஷ ஸ்மிருதி.

விருத்திகள் மூலமாக முன்பு அனுபவித்த விஷயங்கள் நழுவாமல் சித்தத்தில் சம்ஸ்காரங்களாக வைத்திருத்தலும் அதை மீண்டும் உணர்வுக்கு கொண்டுவருதலும் நினைவாகும். நம் அனுபவத்தினால் ஒரு பொருள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்திருப்பது நினைவாகும். நிகழ்வுகளின் விவரங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல் தனித்தனியே வைக்குமிடம் ஞாபகப் பகுதி. ஐம் புலன்களில் ஏற்படும் விருத்திகள் எல்லாம் பதியப் படுவதில்லை. நம்மை மிகவும் பாதித்தவைகள், அழுத்தமான உணர்வுகள் பதியப்படும். சிலப்பதிவுகள் உடன் மறையும், சில பல ஆண்டுகளாக இருக்கும். வேண்டும்போது அவை வெளிக் கொணரப்படும். இந்தப் பதிவுகள் கனவுகளுக்கும் காரணமாகின்றன். நமது அனுபவப் பகுதியும் பதிவுப் பகுதியும் கலந்து செயல் புரிந்தால் நினைவிலிருந்து எண்ண அலைகள் தோன்றுகிறது. நாம் கேட்கும் ஒரு சொல் குளத்தில் எறிந்த கல்லைப்போல் அலையையும் அந்த அலை பல அலைகளையும் எழுப்பும் இது நினைவாகும். தூக்கத்திலும் ஒருவகை அலை சித்தத்தில் நினைவு அலயை உண்டாக்கும். இது கனவு. விழிப்பு நிலையிலுள்ள நினைவு எனப்படும் அலையின் மற்றோர் உருவமே கனவு.

1-12 அப்யாஸ வைராக்யாப்யாம் தன்னிரோத.

தொடர்ந்து பயிற்சிகள் செய்து வந்தாலும் எதிலும் பற்றற்ற தன்மை கொண்டிருந்தாலும் விரிந்து பரவும் விருத்திகளை ஒடுக்கலாம். சித்த விருத்திகளை ஒடுக்கவேண்டும் என்ற வைராக்ய எண்ணமே ஒரு சக்தி எண்ணமாகி அது விருத்தியாகி மற்ற விருத்திகளை அடக்க உதவும்.

1-13 தத்ர ஸ்திதௌ யத்னோப்யாஸ.

உறுதியிலிருந்து தளராமல் இடைவிடாது செய்வதுதான் சிறந்த பயிற்சியாகும். தினமும் ஒரு குறிப்பிட்ட காலையில் எழுந்து பழகியதால் உடல் அந்த குறித்த நேரத்தில் அலாரம் வைத்து எழுப்பியதுபோல் தயாராகி விடும். உள்ளத்தில் விழிப்பு ஏற்படும். இந்த விழிப்பே ஒரு விருத்திதான். இது மற்ற விருத்திகளை ஒடுங்கச் செய்யும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருநாள் விடுபட்டாலும் அந்த நாள் முழுவதும் பயிற்சி முறையின் எண்ண விருத்தியானது மற்ற விருத்திகளுக்கிடையில் மனதில் உணர்த்திக் கொண்டிருக்கும். காலம் தவறாமல் நாம் செய்யும் செயல்களை உடல் உறுப்புகள் ஏற்றுக்கொண்டு இயற்கைக் கடிகாரத்திற்கு கட்டுப்பட்டு சரியாக இயங்க வைக்கும். பயிற்சி என்பது மனத்தை அலை வடிவமாக போகவிடாமல் தடுத்து சித்தவடிவமாக நிலைபெறவைக்கும் முயற்சியே.

1-14 ஸது தீர்க்க கால நைரந்தர்ய ஸத்கார ஸேவிதோ த்ருடபூமி.

முறையாக நன்றாக பயின்று எவ்வளவு காலமானாலும் உறுதியாக வெற்றி பெறுவதே பயின்றதன் அடையாளமாகும். மேச்சல் நிலம் ஒன்றை புதிதாக விளச்சல் நிலமாக்க பல செயல் பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிப் பண்பட்டநிலம் சிறப்பனதாகும். அதன் பிறகு விளைச்சலுக்குத் தயார் படுத்தும் பணிகள் குறைவானதே. அதுபோன்றே சிறப்பான பயிற்சி ஒரு நிமிடத்தில் செய்வதைக் சுறுக்கி சில நொடிகளில் செய்ய முடியவைக்கிறது. இது ஒரு தவத் தன்மையாகும்.பழக்கத்தை திருத்தி அமைப்பது ஒரே நாளில் செய்கிற காரியமில்லை. நீண்ட தொடர் பயிற்சியால்தான் முடியும்.

1-15 த்ரஷ்டானு ச்ரவிகவிஷய வித்ருஷ்ணஸ்ய வசீகார ஸ்ம்ஞா வைராக்யம்.

வெளிப்புலன்களால் வரும் செய்திகளில் நாட்டம் கொள்ளாமல், அவைகளுக்கு அடிமையாகாமல், அதை விட்டு விருப்பத்துடன் விலகி இருக்கும் செய்கைதனை வைராக்யம் எனலாம். பார்த்த அல்லது கேட்ட விஷயங்களில் உள்ள ஆவலைத் தியாகம் செய்வதன் பயனாக கிடைக்கும் மனநிலையும், அந்த விஷயங்களை அடக்கும் மனநிலையும் பற்றின்மை எனலாம். ஒருவன் தான் வைராக்கியமாக இருப்பதாக தமக்குள் அகங்காரம் கொள்ளக்கூடாது. தான் கொண்டிருக்கும் வைராக்யத்தினால் தன்னை பிறர் புகழவேண்டும் என்றோ, தன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதற்கோ இடம் தருதல் கூடாது. அது தனக்கு ஒரு வசிகரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்களால் ஏற்படும் செய்திகளில் மூழ்காமல் வைராக்யமாக அவைகளை விட்டு விலகவும். இந்த மனவலிமையே துறவு ஆகும். முக்தி பெறுதலுக்கு இது சாதனம் ஆகும்.

1-16 தத்பரம் புருஷக் யாதேர் குணவைத்ருஷ்ண்யம்.

ஆத்மாவின் இயல்பை அறிந்து முக்குணங்களில் மூழ்காமல் பற்று அற்று இருப்பது வைராக்கியத்தில் சிறந்தது ஆகும். இறைவனுக்கு சரிசமமாகவோ அல்லது இறைவனின் ஒரு பகுதியாகவோ இருந்து தன் அறிவு குறைந்து இறைத்தன்மை குறைந்து மாயையின் வலையில் சிக்கி உடலில் உள்ளே இருப்பதாக உணர்வது மனித ஆத்மாவின் இயல்பை அறிவது ஆகும். 3 குணம் கொண்ட பிரபஞ்ச சக்திகளில் மூழ்காமல் அதன்மேல் பற்று அற்ற தன்மையுடன் இருப்பதே சிறந்தது.

1-17 விதர்க விசாரானந்தா ஸ்மிதானுகமாத் ஸம்ப்ரஞ்ஞாத.

ஸம்ப்ரஞ்ஞாத சமாதி என்பது ஒன்றை விளக்கி பின் அதை ஆராய்ந்து அந்த காரணத்தால் மகிழ்ந்து அதனால் வரும் தூய அகங்காரம் ஆகியன நான்கும் சேர்ந்தவை. ஆராய்ச்சி, விவேகம், இன்பம், நிர்குண அகங்காரம் ஆகிய இந்த நான்கையும் தொகுத்துக் கூறுவது- பிரஞ்ஞாத சமாதி ஆகும். தனித்து பகுத்து கூறுவது ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி. இதனால் இயற்கையை வெல்லும் திறன்கள் வந்து சேரும்.

சமாதி இரண்டு வகைப்படும். 1. ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி- உணர்வுடன் கூடியது. எல்லைகளிட்ட சித்த விருத்திகளோடு செய்யும் சமாதி யாகும். 2. அஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி- உணர்வோடு கூடாதது . புலன்களின் அனுபவமில்லாத நிலையில் புரியா அளவில் அவை நிற்க ஏற்படுவதாகும்.

1-18 விராம ப்ரத்யயாப்யாஸ பூர்வ ஸம்ஸ்கார சேஷோஸன்ய.

வைராக்கியத்தாலும் பயிற்சிகளாலும் ஒடுக்கப்பட்ட சித்த விருத்திகள் முழுவதும் வளர்சியடையா நிலையில் ஏற்படுவது அஸம்ப்ரஞ்ஞாத சமாதியாகும். முழு வளர்சியில்லை என்றாலே சித்த விருத்திகளின் செயல்பாடுகளில்லை என்பதால் ஆத்மாவின் இயல்பு வெளிப்படுமாதாலல் அதில் இணைந்து சமாதி அதிகரிப்பதே அஸம்ப்ரஞ்ஞாத சமாதியாகும். முழு வளர்சியடைந்த சித்த விருத்திகள் ஒடுக்கப்படும்போது அதன் வடிவங்கள் மீண்டும் வளர முடியாதவையாகின்றது. அது பூர்வஸம்ஸ்கார எனப்படும்.இடைவிடாத பயிற்சியால் சித்த விருத்திகள் அனைத்தையும் ஒதுக்கிவைக்கும் சமாதியை அடையும்போது சித்தத்தில் தோன்றா நிலையில் உள்ள சம்ஸ்காரங்கள் எஞ்சியிருக்கும்.

1-19 பவப்ரத்யயோ விதேஹ ப்ரக்ருதி லயனாம்.

சமாதி நிலையை அடைந்தவர்கூட விதேஹர்களாகவும் பிரகிருதியை சார்புடையவர்களாகவும் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க முடியும். சமாதியின் மூலமாக புலன்களுக்கு அடிமையான நிலையிலிருந்து மாறுபவர்களுக்கு உடலால் எவ்விதப் பயனுமில்லை. அவர்களை விதேஹர் எனலாம். இவர்கள் முற்பிறவியின் கருமம் காரணமாக அறியாமையுடன் கூடிய பிறவிக்கு வருவர். மூலப்பிரகிருதியுடன் தொடர்பு கொண்டு இயங்குவதால் எல்லாப் பொருள்களும் 3 குணங்களுடன் சம்பந்தப்பட்டே இயங்கும். முழு வளர்ச்சியடையா சித்த விருத்திகள் அதாவது அஸம்பிரஞ்ஞாத சமாதியடைந்த நிலை யானது மூலப்பிரகிருதியுடனான தொடர்பை விடுவித்துக் கொள்ளாமல் அதனுடன் இணைந்தது ஆகும். பிரகிருதியுடன் இரண்டறக்கலந்தவர் முற்பிறவியின் கருமம் காரணமாக அறியாமையுடன் கூடிய பிறவிக்கு வருவர். பிறவி எடுக்காமலிருக்க இராஜயோகத்தின் எல்லாப் பகுதிகளையும் பயிற்சியினால் அடைந்திடல் வேண்டும்.

1-20 ச்ரத்ததா வீர்ய ஸ்மிருதி ஸமாதி ப்ரக்ஞா பூர்வக இதரேஷாம்.

யோகத்தை முழு ஈடுபாடு, திறமை, எப்போதும் அதையே நினைவு கொள்ளுதல், சமாதி பற்றிய உணர்வு, அடக்கமுடமை ஆகியவற்றாலும் அடையலாம். சிரத்தை மிகுந்த ஈடுபாடு கொண்டு யோகத்தை மதிப்பவர்களும், உடல் சக்தியால் யோகம் செய்யும் வீரியமான ஆற்றல் உள்ளவர்களும், மற்ற நினைவுகளைத் தவிர்த்து இதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்களும், உள் உணர்வு மிக்கவர்களும், அடக்கம் உள்ளவர்களும் ஆகிய குணங்களைக் கொண்டவர்களுக்கு, கண்களில் தெரியும் தூல உடம்பை விட்டு மறைந்துள்ள உள் உறுப்புகள் கொண்ட நுண் உடம்பை தொடர்பு கொள்ளும் பயிற்சிகள் இயற்கையாய் வரும். உணர்வது அன்றி எக்காலத்தும் காணமுடியாதது பிராணசக்தி, காந்த சக்தி, நாடிகள் மற்றும் ஆதாரத் தாமரைகள். இவைகளை மனதில் நாடி உணர்ந்தவர்கள் சமாதி நிலையை அடையலாம். நம்பிக்கை, ஆற்றல், ஞாபகசக்தி, மனஒடுக்கம், விவேகம் ஆகியன மூலமாகவும் சமாதி அடையலாம். அவர்கள் தேவபதவி, புவனங்கள் ஆலும் பதவி நாடார். முக்தி அடைவர்.

1-21 தீவ்ர ஸம்வேகானாமா ஸன்ன.

உரிய வேகத்துடனும் தீவிரமான உறுதியான உணர்வுடனும் யோகம் செய்பவர் விரைவாக சமாதி நிலையடைவர். வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மிக அதிக வேகமும் குறைந்த வேகமும் இல்லாமலும் அளவான சீரான வேகத்தோடு யோகம் செய்பவர்கள் இயற்கையாகவே சமாதி நிலை அடைவர். தீவிரம் என்றால் சமாதி நிலை தானாக வரட்டும் என்ற அடக்கமும் அதற்கான முயற்சிகளில் குறைவு இல்லாமலும் இருப்பதும் ஆகும். வேகம் அரைகுறையாகவும், குறைந்த வேகம் மிகுந்த தாமதத்தையும் தரும். முதல் முயற்சியிலே சமாதி நிலைக்குப்போன சான்றோர்கள் உளர். சூன்யத் தியானங்களைப் பயில்வோர் விரைவில் சமாதியடைவர்.

1-22 ம்ருதுமத்யாதி மாத்ரத்வாந் ததோபி விசேஷ.

மெதுவாகவும், நடுத்தரமாகவும், தீவிரமாகவும் பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொருவரும் வேறுபட்ட சமாதியடைவர். எல்லாச் செயலுக்கும் இந்த மூன்று நிலைப்பாடுகளைக் கொண்டு அவைகள் வெற்றி பெருவதும் கணிக்கப்படுகின்றது.
1-23 ஈச்வரப்ரணி தானாத் வா.
இறைவனிடம் முழு அன்புகொண்டு வழிப்பாடு நடத்தினாலும் சமாதி நிலையை அடையலாம். ஒரு செயலின் வெற்றிக்கு குருவின் ஆசியும், இறைவன்மீது பக்தியும் காரணமாகும். குரு சொல்வதில் நம்பிக்கை தெளிவு, சக்தி நிறைந்த பரமத்தின்மேல் பக்தி வேகமான வெற்றியைத் தரும்.
1-24 க்லேச கர்ம விபாகாசயை பரராம்ருஷ்ட புருஷ விசேஷ ஈச்வர.
சஞ்சலங்கள், கர்மபலன்கள் ஆகியவற்றால் தொட முடியாதவனாய் இருப்பதால் உடலுடன் கூடிய புருஷ ஆத்மாவை விட கடவுளே சிறந்தவன். ஆத்மாவின் உடலும் உடலின் கருவிகளும் இன்ப துன்பங்களுக்கும் பிரபஞ்ஞத்திற்கும் கட்டுப்பட்டவை. இவைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். ஆற்றில் மூழ்கிய ஆத்மா வெளியில் கரையில் உள்ள இறைவனை நாட நினைப்பது சரியானதாகும்.
1-25 தத்ர நிரதிசயம் ஸர்வக் ஞத்வ பீஜம்.
காண்பதை எல்லாம் அதிசயிக்க தேவையில்லா இயல்புக்கும், அவை எல்லா வற்றையும் உணரும் அறிவுக்கும் இறைவனே காரணமாகின்றான். இறைவனின் படைப்பையும் இறைவனையும் கண்டு அதிசயப்படலாம். ஆனால் இறைவன் எதைக்கண்டும் அதிசயிக்கப்பட தேவையில்லாதவன். ஒரு மரத்திலிருந்து விழுந்த விதை அதேபோன்ற மரத்தை தருவதுபோல், நீக்கமற நிறைந்த எல்லா உணர்வுகளும் கொண்ட இறைவன் தன்னை வழிபடுவோருக்கு தன் குணங்களைத் தருபவன்.
1-26 ஸ பூர்வேஷாமபி குரு. காலேனானவச் சேதாத்.
எல்லா குருவுக்கும் குருவாக இருக்கும் கடவுள் காலங்களால் கட்டுப்படுத்த முடியாதவன். பிரபஞ்ஞத்தை தோற்றுவித்து அதற்கு குருவாக இறைவன் இருகின்றான். பின் தோன்றும் அனைத்து குருமார்களுக்கும் அவனே குரு. எனவே வழிகாட்டும் குருவாக அவன் நமக்குள் இருந்து செயல் படுகின்றான். அவனின் ஞானம் நம்முள் இருப்பதால் அவனை கடவுளாகவும் குருவாகவும் நினைத்தல் வேண்டும். காலத்தால் கட்டுப்படாததால் மிகப் பழைய குருவுக்கும் அவரே குரு.
1-27 தஸ்ய வாசக ப்ரணவ.
பிரணவம் இறைவனின் ஒலி வடிவம். எல்லா சலனங்களிலும், ஓசைகளிலும் ஓம் என்ற ஓசை இருக்கின்றது. அது பிரம்மத்தை குறிப்பதாகும். ஆகாசம் ஒலி வடிவமானது. எல்லாப் பொருள்களூம் ஆகாசத்திலிருந்து உருவாகியது. ஒலி என்றால் பிரணவம். யோகத்திற்குரியது.
1-28 தஜ் ஜபஸ்த தர்த்த பாவனம்.
பாவனைகளையும் ஜபமும் பிராணவத்தின் பொருளை உணர்ந்து செயல் வேண்டும். எல்லா மந்திரங்களும் பிரணவத்தில் அடங்கும் என நினைக்க வேண்டும். அதனால் பிரணவத்தில் இனைந்த ஒலிகளை உணர்ந்து அதன் பொருளை உணர்ந்து, அதனை ஜபம் செய்யும்போது உடலில் ஏற்படும் ஒளி, நிறம் ஆகியவற்றைக் கவனித்து ஜபம் செய்யவும். சலனங்கள் எல்லா அணுக்களிலும் உள்ளது. பிரணவ சலனத்தால் கட்டிடங்கள் பாலங்கள் மரங்கள் எல்லாம் ஓர் நிலையில் சரிந்துள்ளது. ஆக்கல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில்களை செய்யவல்லது பிரணவம்.
1-29 தத ப்ரத்யக் சேதனாதிகமோ அப்யந்தராயா பாவஸ்ச.
பிரணவ ஜபம் செய்வதால் மனம், உடல் ஆகியனவற்றல் ஏற்படும் தடைகள் நீங்கும். அறிவு சிறந்து விளங்கும். ஓம் ஜபம் செய்வதால் உள்மனம் சிறக்கின்றது. இந்த ஜபத்தினால் தூல சூக்கும உடல்களை மனம் தழுவும். இந்த இரண்டின் பரிவர்த்தனை யோகத்திற்கு பயன்படும். சுழுமுனை நாடி ஆரம்பிக்கும் இடத்தில் ஒங்கார ஒலியைச் சொல்லும்போது அவ்வொலி தலை உச்சிக்கு செல்கிறது. இது பிரணவத்திற்கு இயற்கையானதாகும். ஓம் எனும் பிராணவ ஜபத்தினாலும் அதன் கருத்தைச் சிந்தனை செய்வதாலும் முதலில் ஒள்நோக்கு மேலும் மேலும் வலிமையாகி மனதிலும் உடலிலும் ஏற்படும் தடைகள் மறைந்து போம்.

1-30 வ்யாதி ஸ்த்யான ஸம்சய ப்ரமாதாலஸ்யா விரதி ப்ராந்தி தர்சனாலப்த. பூ மிக த்வானவஸ்தி தத்வானி சித்தவிக்ஷேபாஸ்தே குந்தராய.

யோகம் செய்வதற்கு தடைகளாவன- ஆரோக்கியமில்லா நோய்களினால் அதைப் பற்றிய எண்ணக்கவலைகள், களைப்பினால் ஏற்படும் அயர்ச்சி, எதையும் சந்தேகப்படும் ஐயங்கள், உந்துதல் அற்ற உக்கமின்மை, பொருள்களின் மேல் விடமுடியா பற்று வைத்தல், சரியாகச் செயல்படா மயக்கமான அறிவு, ஒரு முனைப்பட மறுத்து அங்கும் இங்கும் அலையும் குவியா மனது, சாதனைகளை தொடர்ந்து செய்ய முடியாமல் பாதில் கைவிடுவது ஆகியவையாகும்.

1-31 துக தௌர்மனஸ்யாங்க மேஜயத்வ ச்வாஸா ப்ரச்வாஸா விக்ஷேப ஸஹபுவ.

முறையற்ற பயிற்சியினால் மனம் சரியாக ஒடுங்காத நிலையில் துக்கம், மனக்கிலேசம், உடலில் நடுக்கம், தடுமாற்றமான மூச்சு ஆகியன ஏற்படும். இந்த தடைகளுடன் யோகம் பயின்றால் அது முறையற்றதாகி விடும். தடைகளினால் உடலில் மின்காந்த சக்தி, பிராண சக்தி ஆகியன பரந்து இருப்பதால் உச்சியை நோக்கிய பயணம் இயலாது. சித்த சக்தி, காந்த சக்தி, மின்சக்தி, ஒங்கார நாத சக்தி ஆகியன சரியாக இருக்கும்போதுதான் யோகம் சித்திக்கும்.ஓங்காரத்தை ஜபித்து, ஆண்டவனிடன் சரன் புகுதல் மனதை வலுப்படுத்தி புதிய சக்தியை தரும்.

1-32 தத் ப்ரதி ஷேதார்த்த மேகாத் வாப்யாஸ.

யோகத்தடைகள் நீங்க ஒரு பொருளில் மனதை நிறுத்திப் பழக வேண்டும். உடல் உள்ளே இருக்கும் உறுப்புக்கள் அல்லது உடல் வெளியில் பிரபஞ்ஞசத்தில் உள்ள ஒரு பொருளில் மனதை பதிய வைத்தால், உடலுக்கு உள்ளும் வெளியும் பரவிய சக்திகள் ஒன்றாகத் திரட்டப்பட்டு ஒருமுகப்பட்டால் தடைகள் நீங்கிவிடும்.

1-33 மைத்ரீ கருணா முதிதோபேக்ஷாணாம் ஸூகது க புண்யாபுண்ய விஷயாணாம் பாவனாதஸ் சித்த ப்ரஸாதனம்.

உணர்வாகிய நட்பு சுகத்தோடும், இரக்கம் துக்கத்தோடும், மகிழ்ச்சி புண்ணியத்தோடும் வெம்பல் பாவத்துடனும் தொடர்புபடுமாறு இருந்தால் மனம் இனிமையடைகின்றது. நம் சூழலில் இருப்பவருக்கும் நம்மைச் சேர்ந்தவருக்கும் நமக்கும் சுகம் வரும்போது நட்பினால் இனையலாம். துன்பம் வந்தவரை நினைத்து வருத்தப்படலாம். புண்ணியங்கள் நிகழ்ந்தால் மகிழ்ச்சியும் பாப நிகழ்வு நடைபெறும்போது பகையுமின்றி நட்புமின்றி நடுநிலை வகிப்பது என்ற நிலைப்பாட்டை கொண்டால் சித்த விருத்திகள் விரிவடையாது.

1-34 ப்ரச் சர்தன விதாரணாப் யாம்வா ப்ராணஸ்ய.

காற்றை உள்ளே இழுத்து வெளிவிடும் பயிற்சியால் பிராணனை மனத்தோடு இணைத்து சித்தத்தில் அமைதி ஏற்படும். பிராணனும் மனதும் நெருங்குவதால் மன அமைதி தரும். குண்டலினியை அசைத்து எழுப்ப பிராணாயமம் பயனாகிறாது. எல்லாப் பொருள்களின் கட்டமைப்பும் ஆகாசத்தால் தான் அமைக்கப்படுகின்றது. அதன் சக்தியாக இருப்பது பிராணன். உயிர்களில் மனம் என்ற சக்தி பிராணசக்தியுடன் சேர்ந்து செயல்படுகின்றது. மனம், ஆகாசம், பிராணன், மூன்றும் பிரபஞ்சம் முழுவதும் உள்ள பொருள்கள். இவை இச்சா, ஞான, கிரியா சக்திகளாகும்.. நாம் உட்கொள்ளும் மருந்தின் அனுக்கள் பிராணசக்தியுடன் ஐக்கியமாகி உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் விரைந்து பாதிக்கப்பட்ட பகுதியை உடன் சரி செய்கிறது. எனவே பிராண சக்தியுடன் நாம் ஐக்கியமானால் நம் மனம் அமைதியடைகிறது. பிராணாயாமத்தால் பிராணான் உண்டாவதை மனம் உணர்வதனால் அமைதியடைகிறது.

1-35 விஷயவதீ வா ப்ரவ்ருத்திருத்பன்னா மனஸ ஸ்திதி நிபந்தினீ.

பொருள்களை இந்திரியங்களின் துணையின்றி மனம் தெளிவாக உணர்கிறது. அதனால் யோகம் செய்ய மிகுந்த ஈடுபாடு கிடைக்கும். புலன்களும் பொறிகளும் அறிந்தால் மனம் பொருளை புரிந்து கொள்ளும். அப்படியின்றி தியானத்தால் அப்பொருள்களை உணர முடியும். இப்படித் தியானத்தின் பயன் தெரியவந்து மனம் அதில் அதிக ஈடுபாடு கொள்ளமுடியும். இதை தாரணை என்பர். கூர்ந்து சிந்தித்தால் மூக்கு மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு ஒருவாரகால தியானத்தில் மூக்கின் நுனியை பயிற்சி செய்தால் மூலப் பொருள் இல்லாமலே மலர்களின் நறுமணம் முகரலாம். நாவின் அடியில் தியானம் செய்தால் புதிய ஓசைகளைக் கேட்கலாம். நாவின் நுனி- நல்ல சுவைகளையும், நாவின் நடுப்பகுதி- ஒரு பொருள் மோதுவதையும், மேல் அண்ணம்- காணாதபொருளை காண்பதாகவும் தியானிப்பதால் தெரியும்.

1-36 விசோகாவா ஜ்யோ திஷ்மதீ.

எதுவும் கலக்காத அருளாகிய துக்கமற்ற ஒளியைத் தியானித்தால் மனம் உறுதியாகிறது. மூலாதாரம், அநாகதம், ஆக்ஞை, ஆகிய இடங்களில் உள்ள மூன்று கோணத்திலோ தலை உச்சி துவாரம் உள்ள இடத்திலோ எரியும் சுடரின் ஒளி இருப்பதாக கருதுக. காலை, மாலை இரு வேளைகளிலும் சூரியனின் செங்கதிர்கள் அங்கே ஒளி பரப்புவதாய் நினைத்து தியானம் செய்தால் மனம் உறுதியாகும்.

1-37 வீத ராக விஷயம் வா சித்தம்.

மனம் ஒரு நிலைப்பட ஆசைகள் பாசங்கள் இல்லா மனத்தையும் தியானிக்கவும். நம் மனம் அதிக ஈடுபாடுடைய குருமார், சித்தர்கள், ஞானிகள் ஆகியோரை நினைத்தும் தியானம் செய்து சாந்தியடையலாம். எதில் மனம் ஈடுபாடு காண்கிறதோ அதின் இயற்கையை மனம் பெறும்.

1-38 ஸ்வப்ன நித்ரா க்ஞானாலம்பனம் வா.

எந்த சம்பந்தமிலாமல் கனவில் வரும் ஞானத்தையும், உறக்கத்தில் வரும் சாந்தியையும் தியானம் செய்து மனம் அமைதி பெறலாம். இவ்வுலக மாந்தர் யாருமின்றி கனவில் வருவோரால் மகிழ்வு ஏற்படலாம். அமைதியான நல்ல உறக்கத்தில் ஏற்படும் சாந்தியையும் தியானிக்கலாம்.

1-39 யதாபிமதத் யானாத்வா.

ஒருவருக்கு ஏற்றதும் நன்மைக்குரியதுமான ஒரு பொருளை தியானம் செய்தாலும் மனம் உறுதி காணும். உலகில் சான்றோர்களால் ஒதுக்கப்பட்ட எந்த ஒரு பொருள் மேலும் தியானம் செய்தல் கூடாது. நலம் தரும் பொருள் எதுவானாலும் தியானம் செய்யலாம். புண்ணிய ஸ்தலங்களை வழிபடுவது, புண்ணிய நதிகளில் நீராடுவது, இயற்கை எழில் கொஞ்சும் அழகிய இடங்கள், பொருள்கள் ஆகியவைகளை நினைத்தும் தியானம் செய்யலாம்.

1-40 பரமாணு பரம மஹத் த்வாந்தோ அஸ்ய வசீகார.

ஒரு பொருளை தியானிக்கும்போது அப்பொருளில் உள்ள பரமானு முதல் பிரம்மாண்டம் வரை எல்லம் தியானத்தில் அடங்கும். பொருளின் உள் அணுவிலிருந்து அது தொடர்புள்ள பிரம்மாண்டம் வரை உணரலாம். தியான மையத்திற்கு ஏற்ப தியானம் செய்பவரின் மனம் விரிவடைகிறது. பிரம்மன் படைத்தது எல்லாம் பிரமாண்டம் எனப்படும். கோடிக்கணக்கான அண்டங்களைக் கொண்டது பிரபஞ்ஞம். முதலில் தூலப் பொருள், பிறகு சூக்குமப் பொருள், பிறகு அதி சூக்குமப் பொருள் எனப் படிப் படியாக தியானம் செய்யவும்.

1-41 க்ஷீண வ்ருத்தோரபி ஜாதஸ்யேவ மணேர்க்ரஹீத்ரு க்ரஹண க்ராஹ்யேஷு தத்ஸ்த ததஞ்ஜனதா ஸ்மாபத்தி.

சித்த விருத்திகள் நாசமடைந்து அறிபவன், அறிதல், அறியப்படும் பொருள் ஆகிய 3ம் ஸ்படிகத்தின் முன் இணையும் பொருள்போல் சமாதி நிலையடையும். கிரஹிதா- அனுபவிக்கும் ஆத்மா- தியானிப்பவன், கிரஹணா- அறியும் தொழிலைச் செய்யும் மனமும் ஐம்பொறிகளும்- தியானிக்கும் கருவிகள், கிரஹ்யா- அறியப்படும் பொருள்- தியானிக்கப்படும் வெளிப் பொருள் ஆகியவை ஸ்படிகத்தை ஒட்டியிருப்பதுபோல் ஒன்றாகத் தெரியும். இவைகளைத் தணித்து உணர்வது சதாரண நிலை. ஒன்றாய் உணர்வது சமாதி நிலை. தியானிக்கும் பொருளுடன் தியானிப்பவன் ஒன்றாகி விடுகிறான்.

1-42 தத்ர சப்தார்த்த ஜ்ஞான விகல்பை ஸங்கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி.

சொல்லும், பொருளும், உணரும் ஞானமும் தடையின்றி ஒன்றுபடும் நிலையே ஸவிதர்க்க சமாதி எனப்படும். பலா என்ற சொல் கேட்டதும் கண்ணின் புலன் படம் போலக் காட்ட-பொருள், புத்தி அது பலாப்பழம்- சொல், எனத் தீர்மானித்து, அதிலிருந்து சுவையான சுளை கிடக்கும் என உணர்வது ஞானமாகும். இவைகளை இப்படி அறிவது ஸவிதர்க்க சமாதி ஆகும்.

1-43 ஸ்ம்ருதி பரிசுத்தௌ ஸ்வரூபசூன்யே வார்த்த மாத்ர நிர்பாஸா நிர்விதர்கா.

ஞாபகம் தூய்மையாகும் போதும், தியானிக்கப்படும் வடிவம் சூன்யமாகி, அதன் பொருள் எஞ்சியிருப்பதை நிர்விதர்க்க சமாதி என்பர். ஓசையைக் கேட்காமல் அந்தப் பொருளின் வடிவம் நமக்குள் தெரியாது. ஞாபக சக்தி தூய்மையடைந்தால் பொருளை பெயர் சொல்லாமலே மனம் அறியும். மூன்றில் ஓசையும், வடிவமும் இல்லாமல் பொருள் மட்டும் மனதில் தெரிகின்றது. கேட்பது, தெளிதல் ஆகிய செயல்களின்றி நினைவாற்றலால் உணர்தல் பொருள் உணர்ச்சியை பெற முடிகிறது. இது நிர்விதர்க்க சமாதி ஆகும்.

1-44 ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்யாதா.

நுண்ணிய பொருள்களை அனுபவிப்பது ஸவிசார, நிர்விசார சமாதிகள் ஆகும். முழுவதும் நன்கு விசாரிக்கப்படுவது ஸவிசாரம், விசாரனை அற்றது நிர்விசாரம். ஸவிதர்க்க சமாதி, நிர்விதர்க்க சமாதி இரண்டும் தூலப் பொருள்களின்மேல் நிகழும் நிகழ்வு. நுண் பொருள்களில் நிகழ்வது ஸவிசாரம், நிர்விசாரம். தூலப் பொருளைப் பார்க்க முடிவதால் அங்கு தர்க்கம் உண்டு. நுண் பொருள் தர்க்கமில்லாதது. அதனால் இங்கு விசாரம்-விசாரிக்கப்படுவது உண்டு. தனக்குள் உள்ள ஆத்மாவை அறிய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் ஆத்மவிசாரம் ஆகும்.

1-45 சூக்ஷ்ம விஷயத்வம் சாலிங்க பர்யவ ஸானம்.

சூட்சுமப் பொருளகள் யாவும் வெளிப்படையாக தெரியாதவை. லிங்கம் குறி உள்ளது வெளிப்படுவது. அலிங்கம் வெளிப்படாதது. தன் மாத்திரைகள் மனம், புத்தி, சித்தம் அகங்காரம் ஆகியன தோன்றுமிடமான மூலப்பிரகிருதி யாவும் சூட்சுமப் பொருள்களைத்தரும் அவ்யக்தம் எனப்படும் வெளிப்படாதது ஆகும். அணுக்களை நாம் கருவிகளினால் காணமுடியும். சூக்குமத்தை காணமுடியாது. உணரத்தான் முடியும். ஆத்மாவும் சூக்குமம். ஆனால் தனித்து நிற்கும். ஒரு காலத்தில் எல்லா சூக்குமங்களும் அழியும் ஆனால் ஆத்மா அழியாது. காணமுடியா நிலையிலும் அதை நாம் உணரமுடியும்.

1-46 தா ஏவ ஸ்பீஜ ஸ்மாதி.

சூக்மப் பொருள்கள் மேல் கொண்ட சமாதிகளெல்லாம் முன் பிறவியின் வினைகள் என்ற விதைகளுடன் கூடியது ஆகும். அந்த விதைகள் முளைத்து பலத் தடைகளைத் தரலாம். எனவே இச்சமாதிகள் வீடு பேற்றிற்கு காராணமாகாது.

1-47 நிர்விசார வைசாரத்யைஅ த்யாத்மா ப்ரஸாத.

நிர்விசார சமாதி வலிமை பெறும்போது முக்குணங்களின் அழுத்தமோ, தாக்கமோ இல்லையாதலால் ஆத்மாவிற்கு அமைதி உண்டாகிறது. ஆத்ம அமைதி சித்த விருத்திகளை மேலும் விரிவடையாமல் தடுக்கும்.

1-48 ருதம்பரா த்த்ர ப்ரக்ஞா.

புலன்களின் மயக்கத்தில் இல்லாமல் தெளிவான அந்த காரணங்களாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவைகளினால் சத்யமானதும் பூரணமானதும் ஆன உண்மை ஞானம் முழுவதும் ஒளிரும்.

1-49 ச்ருதானுமான ப்ரக்ஞா ப்யாமந்ய விஷயா விசேஷார்த் தத்வாத.

சுருதிகளாலும் அனுமானத்தாலும் அறியும் செய்திகளைவிட அதற்கு அப்பால் உள்ள செய்திகளையும் அறிய முடியும். இது ருதம்பரா என்ற ஞானமாகும். பொறி புலன்களால் அறிவது, சுருதிகளாலும் அனுமானத்தினாலும் பெறப்படுபவை. ருதம்பரா பொறி புலன்களுடன் தொடர்பு படாமல் அறியும் அறிவாகும். ருதம்பரா ஞானத்தில் தோன்றியவை விஞ்ஞான கருவிகளாகும்.

1-50 தஜ்ஜ ஸம்ஸ்காரோஅன்ய ஸம்ஸ்காரப் ரதி பந்தீ.

ருதம்பரா என்ற உண்மை ஞான ஸம்ஸ்காரம் மற்ற சித்த விருத்தி ஸம்ஸ்காரங்களைத் தடுக்கும். தியானத்தில் முளைக்கும் தேவையற்ற எண்ணங்களை அடக்க முயலும்போது அவை வலிமை பெறும். அவைகள் ருதம்பரா நிலையில் வலிமை குறைந்து தடுக்கப்படும்.

1-51 தஸ்யாபி நிரோதே ஸ்ர்வநிரோதான் நிர்பீஜ ஸமாதி.

மற்றெல்லா ஸம்ஸ்காரங்களை நீக்கக்கூடிய இந்த ஸம்ஸ்காரத்தையும் அறவே நீக்கும்போது எண்ணங்களைக் கொண்ட முளைகள் இல்லாததால் விருத்திகள் தோன்றாத சமாதி ஆகிய நிர்பீஜ சமாதி தோன்றும்.. எண்ண விருத்தி ஆத்மாவை மறைக்கும்.

சமாதிகளில் எட்டு வகையான சமாதிகள். அவை 1. பிரஞ்ஞாத சமாதி, 2. ஸ்ம்ப்ரஞ்ஞாத சமாதி (பிரஞ்ஞாத சமாதியின் பிரிவுகள்), 3. ஸவிதர்க்க சமாதி 4. நிர்விதர்க்க சமாதி (விதர்க்க சமாதியின் பிரிவுகள்), 5. ஸவிசார சமாதி, 6. நிர்விசார சமாதிகள் (விசார சமாதியின் பிரிவுகள்), 7. ஆனந்த சமாதி, 8. அஸ்மிதா சமாதி அல்லது ஸாஸ்மிதா சமாதி எனப்படும்                          

 

                                                       ****** 

புதன்கிழமை, 20 February 2013 00:00

சாதனபாதம்

2.சாதன பாதம் 
2-1 தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியா யோக.

தவம், ஆன்மீகக் கல்வி, ஐயங்கள், அதன் பயன்களை இறைவனுக்கு அளித்தல் ஆகியவை கரும யோகம் ஆகும். தவம்- ஐந்து புலன்கள்வழியாக ஆசைகளினால் வெளிச்செல்லும் மனத்தை தடுப்பது. ஸ்வாத்யாய- ஆன்மா தன்னை அறிவதாக சாத்திரங்களில் உள்ளவற்றைப் படித்து அறிதல். இந்த தவம், ஸ்வாத்யாய இரண்டாலும் வைராக்யமும் ஞானமும் கிடைக்கும். யோகம் செய்ய இவைகள் உதவும். ஈஸ்வரப்பணி- தவம், ஸ்வாத்யாய மூலம் நாம் செய்யும் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பது ஆகும். உடலிலிருந்து விடுபட்டு, ஆத்மா உடம்புக்கு அந்நியம் என்பதை உணர்ந்தால் இறைவனிடம் சரணாகதியாக வசதியாகும். நம் உடலின் அடுக்குகள் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்தபடி இருக்கிறது. அவற்றை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபட முனையவேண்டும். உடல் உணர்வு அறுந்தபின் ஆத்மா வீடுபேறு பெறும். யான், எனது என்ற செருக்குகளை ஞானம் கொண்டு கைவிட வேண்டும். இது கரும யோகம்-கிரியா யோகம்.

2-2 ஸமாதி பாவனார்த்த கிலேசதனூ கரணார்த்தச்ச.

உடம்பினாலும், அதனுள்ள கருவிகளாலும் ஏற்படும் சித்த விருத்திகளை (கிலேசம்) குறைப்பது சமாதி பாவனைக்கு தேவையானது. கரும யோகம் உடல்(தனு), அதன் பொறிகள்(கரணம்) மூலமாக மனத்தை அடக்ககூடிய மார்க்கமாகும். கரும யோகம்- கிரியா யோகம் பயிலப் பயில சமாதி யோகம் கைகூடும்.

2-3 அவித்யாஅஸ்மிதா ராகத்வேஷாபி நிவேசா க்லேசா.

அறியாமை (அவித்யா), அகங்காரம் (அஸ்மிதா), விருப்பம் (ராகம்), வெறுப்பு (துவேஷம்), உயிர்பற்று (அபினிவேசா) ஆகிவை கிலேசங்கள். இவைகள் ஆன்மாவின் ஆனந்தத்தை மாற்றித் துன்பமயமக்குகின்றது.

2-4 அவித்யாக்ஷேத்ரமுத்தரேஷாம் ப்ரஸுப்த தனுவிச்சின்னோ தாராணாம்                அறியாமை காரணமாயிருப்பதால் பிரஸுப்தம், தனு, விச்சின்னம், உதாரம் ஆகிய நான்கு கிலேசம் எனப்படும் துன்பங்களும் வரும். உள் மனத்தில் பதிவாகி சித்த விருத்தியாக முளைவிட காத்திருப்பது பிரஸுப்தம் ஆகும். எண்ண முளைகள் இனி விருத்தியடைய முடியா நிலையாக அடக்கப்பட்டது ஸம்ஸ்காரங்கள் தனு ஆகும். எண்ண முளைகள் சூழ்நிலை வலிமையான நிலையில் முளைத்து, வழுவிழந்த நிலையில் மறைந்தும் நிலையற்றதாக மறிக்கொண்டிருக்கும் ஸம்ஸ்காரம் விச்சின்னம் ஆகும். ஸம்ஸாரங்கள் ஒன்றைஒன்று முந்திவர முயலும்போது பிற எண்ண முளைகளை பின்தள்ளி தானே வலிமையுடைதாக இருப்பது உதாரம் ஆகும். இந்த நான்கு அறியாமைகளும் ஈச்வர ப்ரணிதானா மூலம் அழியும்.

2-5 அநித்யாகசி துகானாத்மஸு நித்ய  சுசி ஸுகாத்மக்யாதிர வித்யா.                      அறியாமை எனப்படுவது யாதெனில் நிலையற்றதை நிலையானதாகவும், தூய்மையற்றதை தூய்மையானதாகவும், துன்பத்தை இன்பமாகவும், ஆத்மா அல்லாததை ஆத்மாகவும் ஏற்றுக் கொள்வதாகும். ஒன்றை மற்றொன்றாக எதிர்மறையாகவும் உணரும் போதை தருவது அறியாமை. அநித்யா- நிலையற்றது, நித்யம்- நிலையானது, அசுசி- தூய்மையில்லாதது, சுசி- தூய்மையானது, துக்கம்- துன்பம், சுகம்- இன்பம், அநாத்மா- ஆத்மா இல்லாதது,

2-6 த்ருக்தர்சனசக்த்யோரேகாத்மதைவாஸ்மிதா.                                               அகங்காரம் என்பது காண்பவனையும் காண்பதற்கு துணையாக இருக்கும் கருவியையும் ஒன்றாக கருதுவதாகும். வாஸ்மிதா- அகங்காரம். காண்பவன்- ஆத்மா, கருவி- இந்திரியங்கள். உடலின் உள்ளே உள்ள ஆத்மாவையும் வெளியே இருக்கும் கருவிகளையும் எப்படி ஒன்றாக நினைக்க முடியும் அது அறியாமை எனும் அகங்காரம். பிரபஞ்சம் முழுவதும் பரவிய ஒருபொருளான ஆத்மா அதை உணராதவர் உடம்பில் இருக்கும்போது அதன் ஞானம் மறைக்கப்படுகிறது.

2-7 ஸுகானுசயீ ராகா.

ராகம் என்பது இன்பங்கள் தருவதை தானே விருப்பத்துடன் வைத்திருக்கும் செயலாகும். மண், பெண், பொன் முதலிய ஆசைகளை அனுபவித்ததில் சித்தத்தில் பதிவு செய்யப்படுவதால் அதை நினைப்பதாலும் மீண்டும் தேடுவதாலும் ஆசை என்ற சித்த விருத்திகள் மேலும் மேலும் உண்டாகும்.

2-8 துகானுசயீ த்வேஷ.

வெறுப்பு என்ற துவேஷம் துக்கம் தருவதை அடிக்கடி மனத்தில் எண்ணுவதால் ஏற்படும். அதை இனிமேல் அனுபவிக்க தயாராக இல்லாததால் அப்படிப்பட்ட துக்கம் நமக்குள் வந்ததே என்ற வருத்த நிலை உண்டாகும். எண்ணியதால் வெறுப்பில்லை. மீண்டும் எண்ணுவதே வெறுப்பாகும்.

2-9 ஸ்வரஸவாஹீ விதுஷோஅபி ததாரூடோஅ பிநிவேச.

உயிர் வாழும் பற்று எல்லா அறிவாளிகளிடமும் பரந்துள்ளது. ஆத்மா அழியாதது. உடல் மட்டுமே அழியாதது. ஆத்மாவும் உடலும் வேறு வேறான பொருள்கள் என்ற எண்ணம் இல்லாப் பெரியவர்கள், குழைந்தைகள், விலங்குகள் எல்லாவற்றின் இயல்பானது மரணத்திற்கு அஞ்சுவதாகும். அதிலிருந்து தப்பி பிழைக்கவே நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அழிக்க முடியும்.

2-10 தே ப்ரதி ப்ரஸவஹேயா. ஸூக்ஷ்மா.

கிலேசங்களை அதனுடைய லயம்- காரணத்தில் இணைக்கும்போது அது அழிக்கப்படும். எப்போதும் சித்த விருத்திகள் அடக்க அடக்க முளைக்கும். மூலவிதையை அடக்கி நீக்கும்போது விருத்திகள் தோன்றாது. அதேபோல் சித்தத்தை அதனின் காரணமாகிய அகங்காரத்தில் இனைத்தால் சித்தமும் இருக்காது. விருத்திகளும் தோன்றாது. இது காரணத்தில் காரியத்தை இனைத்தலாகும். சித்தம்- காரியம், காரணம் –அகங்காரம்.

2-11 த்யானஹேயாஸ்த த்வ்ருத்தய.

விருத்திகளின் தூலத்தை தியானத்தின் மூலம் அழிக்கமுடியும். எதிலிருந்து எது தோன்றியதோ அதை அதில் அடக்குவதாகும். காரணத்தில் காரியத்தை இணைப்பதற்கு அகங்காரத்தில் சித்தம் அடங்குவதாக தியானம் செய்ய வேண்டும்.

2-12 க்லேசமூல கர்மாசயோ த்ருஷ்டஜன்ம வேதநீய.

இப்போதும் எப்போதும் எடுக்கும் பிறவிகளிலும் பயன் கொடுக்கும் கர்மங்கள் கிலேசங்களின் மூல விதையாகும். கிலேசங்கள் விதையாகி மனதில் இருந்து, மனிதன் இறந்த பிறகும் மடியாமல் சூக்குமமாக உலவி மறுபிறவியிலும் முன்பிறவியின் கர்மத்தோடு அம்மனமே வரும். நாம் செய்த வினைச் செயல் முடிந்தபின்னும் அதன் கர்மாவின் விதைகள் மீண்டும் முளைப்பதற்காக சூக்குமமாக நம்மிடமே இருக்கும். மனம், புத்தி, சித்தம் ஆகியன நம் உடலில் எந்த உறுப்பிலும் சேர்ந்திருக்கவில்லை. அவ்வப்போது உள்ளும் வெளியும் சென்று வரும் சூக்கும தன்மையுடையது.

2-13 ஸதி மூலே ததிவபாகோ ஜாத்யாயுர் போகா.

கர்ம விதை அழியாது முளைத்தால் அது பலப்பல பிறவிகளிலும் முளைத்து தரும் பயன்கள் காரணமாக இன்ப, துன்ப, ஆயுள் அனுபவங்களாக வளர்ந்து கொண்டே இருக்கும். மரம்- விதை –மரம் மீண்டும் விதை எனத்தொடரும்.

2-14 தே ஹ்லாதபரிதாபபலா புண்யாபுண்ய ஹேதுத்வாத்.

புண்ணியமான செய் வினைகளால் இன்பமும் பாபமாகினால் நம் அறிவு, திறமை, வாழ்க்கை எல்லாம் முன்பிறவியினால் துன்பமாகி பிறவிப் பயனாகிறது.புண்ணிய பாவங்களைக் காரணமாக பெற்றிருப்பதால் இன்ப துன்பங்களைத் தருகின்றன்.

2-15 பரிணாம தாப ஸ்ம்ஸ்கார து. கைர் குணவ்ருத்தி விரோதச்ச து.கமேவ ஸர்வ விவேகின.

பரிணாமம், துன்பம், தாபம், ஞாபகம், மாறும் குண விருத்தி, வாழ்க்கை எல்லாம் விவேகம் உடையவர்க்கு வேதனையைத் தரும். காலம் மாற, மாற இன்பமும் துன்பமும் அதற்கேற்றவாறு மாறுவது பரிணாமம் என்பதாகும். ஸம்ஸ்காரமானது சித்தத்தில் வினைகள் பதிவானால் அதுவே மறுபிறவிக்கும் துன்பமான காரணமாகும். இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அது முடிவுறும் என்ற நினைப்பே தாபம் என்பதாகும். மூன்று குணங்களாகிய சத்துவம்- நற்குணம், ரஜோ- ஆசைகாரணமான செயல், தாமஸம்- மோகம் காரணமான குழப்பம் ஆகியவைகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு செயல்பட விழைவதால் ஏற்படும் துன்பம் குணவிரோதம் ஆகும்.

2-16 ஹேயம் துக்கமனாகதம்.

சென்ற பிறவி துன்பங்கள் இனி வரா. நிகழ் துன்பங்கள் அனுபவத்தில் உள்ளது. எஞ்சியுள்ளது இனி எப்போதும் வரும் துக்கம் தவிர்க்கப்பட வேண்டியது. அதற்கான நெறியில் நடந்து தவிர்க்க வேண்டும்.

2-17 த்ருஷ்ட த்ருச்யயோ. ஸம்யோகோ ஹேயஹேது.

காண்பவன் – ஆத்மா, காணப்படுவது- பிரபஞ்சம். இரண்டிற்கும் நடுவே காண்பதற்கு துணையாக இருக்கும் தனு- இந்திரிய கரணங்களே துன்பத்தின் துக்கத்திற்கு காரணமாகும். ஒரு பொருளைக்காண ஆத்மாவுடன் 5 தன்மாத்திரைகள், 10 இந்திரியம், 4 அந்தக்காரணம் ஆகிய 19 தத்துவங்களும் தொடர்பு கொள்ள வேண்டும். அதனால் ஆத்மா மாயை வசமாகி சிற்றறிவு போன்ற சிறுமைகள் தோன்றுவதால் துன்பம் அடைகிறது.

2-18 ப்ரகாச கிரீயா ஸ்திதி சீலம் பூதேந்திரியாத்மகம் போகாபவர்கார்த்த த்ருச்யம்.
நுண் பூதங்களாகிய தன் மாத்திரைகளாலும் பரு வடிவப் பூதங்களாலும் உடலும் இந்திரியங்களும் ஆகி மூலப் பிரகிருதியில் வந்த உடலான பிரகிருதி பிரகாசமான செயல்படும் வடிவமாகவும் உணர்வுகளற்ற சடப் பொறுள்களாகவும் காணப்படுகின்றது. அவை மூன்று குணங்கள் ஓளி- சத்துவ குணம், செயல்- ரஜோ குணம், உறக்கம்- தாமச குணம் ஆகிய வற்றால் கட்டப்பட்டுள்ளனவாகையால் இன்ப துன்ப போகங்கள் தோன்றும். அதில் பற்று கொள்ளாமல் வீடுபேறு அடைய முயலுதல் வேண்டும்.

2-19 விசேஷாவிசேஷ லிங்காமாத்ரா லிங்கானி குண பர்வாணி.

சத்துவ, ராஜச, தாமஸ குணங்கள் விளக்கம் உடையதாவும் விளக்கப் படாததாகவும், வடிவம் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கின்றது. இயல்பு, தன்மை, நிறம் ஆகியனவும் குணமாகும். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது. கடவுளுடன் ஓரளவு தொடர்பு கொண்டுள்ள மூலப்பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்துள்ளது.
பிரபஞ்சம் முழுவதற்கும் பொதுவானவை சமஷ்டி - தொகுதி என்றும் அதே பொருள் எல்லா உயிர்களுக்கும் தனித்தனியே இருப்பது வியஷ்டி- விகுதி எனப்படும். பரமாத்மா- புருஷனிலிருந்து- மூலப்பிரகிருதி எனப்படும் மூலப்பகுதியிலிருந்து அவ்யக்தம் வெளிப்படாத ஆத்மா முக்குணம் கலப்பிலிருந்து வியக்தம் வெளிப்படுவதாகிய முக்குணப்பிரிப்பிலிருந்து அகங்காரத்திலிருந்து மஹத் எனும் புத்தியிலிருந்து சித்தம் எனும் மனத்திலிருந்து தன்மாத்திரைகளிலிருந்து இந்திரியங்களிலிருந்து பஞ்சபூதங்களிலிருந்து உடலிலிருந்து பிரபஞ்சம் என் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதை காட்டுகிறது. கடவுளுடன் தொடர்பு கொண்டுள்ள கடவுள் தன்மை உடைய பிரம்மம், புருஷன், ஆத்மா தனித்து சுத்தப் பகுதியாகி மூலப்பிரகிருதி முதல் அண்டம் பிண்டம் வரை விரிந்துள்ளது. இது மனத்தால் உணரலாம். சமஷ்டி- தொகுதி, வியஷ்டி- விகுதியாக உள்ளவை அகங்காரம் குணங்களோடு கலந்ததுபோல் எல்லாவற்றிற்கும் பொதுவாக உள்ள அகங்காரம் சமஷ்டி தொகுதியாகும். இதன் அணு அளவு உயிர்கள் ஒவ்வொன்றிலும் வியஷ்டி இருக்கும். பிரபஞ்சம் உண்டாகவும், காக்கப்படவும், அழிக்கப்படவும் பயன்படும் புத்தி சமஷ்டி மஹத்திலிருந்து உயிர்களுக்கு அணு அளவாகப் பிரித்தது வியஷ்டி மஹத் எனப்படும். பிரபஞ்சப் பொருளகளினமைப்பில் மாபெரும் அறிவு அடங்கியிருந்து அது தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் பிரபஞ்சத்தை அறிவினால் தான் படைத்திருக்கமுடியும்.
பிரபஞ்சம் முழுவதையும் தம் அறிவின் எல்லைக்குள் மனம், சித்தப் பகுதியில் அடக்க முடியுமாதலால் வடிவமற்ற அறிவு வடிவமுள்ள பிரபஞ்சத்தையும் உடல்களையும் உண்டாக்கிருப்பதாலும் அந்த பிரபஞ்சம் வடிவமற்ற புத்தியுனுள் அடங்கும். புத்தி படைப்பு தொழிலைச் செய்ததால் அதே புத்தியின் அணு அளவு நம்மிடையே இருப்பதால் விரிந்த பிரபஞ்சத்தை அதற்குள் அடக்க முடியும்.
ஜடப்பொருள்களால் நிறைந்த பிரபஞ்சத்தை நம் உள்மனத்தில் வைக்கமுடியும். சூக்கும நிலையிலிருந்து தூல நிலைக்கு வருவதை சூக்கும தியானத்தால் உணரலாம். புருஷன் அழிவற்றது, எதனாலும் தோற்றுவிக்கப் படாதது. தூய அமிர்தவடிமானதின் அணுத் தன்மையே நம் ஆத்மாவாகும். தான் கடவுளின் ஒருபகுதி, பிரபஞ்சம் முதல் உடல் வரை தனக்கு அன்னியமானது என உணர்ந்தால் சமாதி நிலை உண்டாகும். இதற்கு நுண்பூதங்கள் ஆகிய தன்மாத்திரைகள்-5, பருவடிவமான – பஞ்சபூதங்கள்-5, ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அந்தக் காரணங்கள்-4 ஆக மொத்தம் 24 தத்துவங்கள் உண்டு.

2-20 த்ரஷ்டா த்ருசி மாத்ர சுத்தேதோஅ பிப்ரத் யயானுபச்ய.

சுத்தமான ஆத்மா ஞானமடைந்து பொருள்களை காணும்போது புத்தியின் இயல்புகளில் கட்டுபட்டு அடங்கும். ஆத்மா காண்பவன் – இந்திரியங்கள் வாயிலாக காண்பது மனம். மனமும் புத்தியும் கருவிகளே. ஆத்மா போன்ற ஞானம் புத்திக்கு இல்லாததால் முன்பிறவித் தொடர்புகள் புத்தியை மயக்க அது ஆத்மாவின் மயக்கமாகிறது. முக்குணங்களுக்கு கட்டுப்படும் புத்தி அது கலக்காத ஆத்மாவை கலங்கச் செய்கிறது.

2-21 ததர்த்த ஏவ த்ருச்யஸ்ய ஆத்மா.

ஆத்மாவின் அனுபவத்திற்காகவே காணப்படும் எண்ணற்ற பொருள்களுடன் இந்த உலகம் உள்ளது. உலக இன்பங்களை வெளியில் தெரியுமாறு வைத்து, கடவுள் இன்பத்தை தெரியாததாக வைத்து ஜீவாத்மா ஆரய்ந்து பார்க்க அறிவும் உணர்வுடன் படைத்து பிறவியிலிருந்து விடுதலையடைய முயற்சிக்க வேணும் என்ற அனுபவத்திற்காக படைப்பு நிகழ்வுகள்.

2-22 க்ருதார்த்தம் ப்ரதி நஷ்டமப்ய னஷ்ட ம் ததந்ய ஸாதாரணத்வாத்.

கடவுள், ஆத்மா தவிர மற்றெல்லாமாகிய பிரகிருதி முக்தியடைந்தவர்களுக்கு மறைந்தும், முக்தியடையாதவர்களுக்கு தெரிந்தவாறும் இருக்கும். பிரகிருதியிலிருந்து வேறுபட்டதாக உணரும்போது அதன் தேவை ஆத்மாவிற்கு இல்லை. அதனால் பிரிந்து மறைகிறது. இதை உணராதவர்களுக்கு அது –பிரகிருதி மறைவதில்லை. அநாதி என்றால் தனித்துவம் பெற்றது. கடவுள், ஆத்மா, பிரபஞ்சம் மூன்றும் அநாதி ஆகும்.

2-23 ஸ்வஸ்வாமி சக்தயோ. ஸ்வரூபோபலப்தி ஹேது. ஸம்யோக.

ஸம்யோகம் –இணைப்பு. புருஷனுக்கும் பிரகிருதிக்கும் தனித்தனியே சக்திகள் இருப்பதால் அவைகளின் சக்திகளை அறிவதற்கு இறைவன் மற்றும் பிரகிருதி இரண்டும் கூடுவது தேவையாகும். சூரிய சக்தி ஒளி, காற்று, உணவு ஆகியன மூலம் நம் உடம்பினுள் இணைவதும் ஸம்யோகமாகும்.

2-24 தஸ்ய ஹேதுர் அவித்யா.

ஸம்யோகத்திற்கு காரணம் அவித்தை என்ற அறியாமையாகும். சிறியதுடன் பெரியதை ஒப்பிடாமல் பிரபஞ்ச சக்தியைவிட தெய்வ சக்தி பெரியது என்பதை சொல்லமுடியாது. அதற்காக இணைய வேண்டும் என்றும், ஆத்மா பிரபஞ்ச சக்தியோடு இணையும்போது அறிவில் குறைவு ஏற்படுவதால் நான் எனது உடம்பு என்று தவறாக நினைக்கிறது. அது அறியாமையாகும். சுகம், துக்கம், நன்மை, தீமை எனப் பகுத்து உணரும் அறியாமை ஏற்பட்டு இன்ப துன்பங்களில் சிக்க நேரிடும். ஒரே உணர்வில் இருக்கும்போது இதுபோலத் துயரமில்லை, தெய்வத்தை நோக்கி தியானத்தில் ஈடுபட்டதால் சுண்ணம்பு களவாய் சுடவில்லை, விஷம் தீண்டவில்லை, யானை இடறவில்லை, கடலும் அவரும் வேறல்ல என்பதால் கல்லால் கட்டியபின்னும் மூழ்கவில்லை. இவை ஆத்ம உணர்வும் இறை உணர்வும் ஒன்றென உணர்ந்த நிலைகளாகும். மற்றவை அறியாமை நிலைகளாகும்.

2-25 ததபாவாத் ஸ்ம்யோகாபாவோ ஹானம் தத்ருசே கைவல்யம்.

அறியாமை அகலும்போது பிரகிருதி- ஸ்ம்யோகத்தின் தொடர்பு அறுபட்டு ஆத்மா வேறு எதையும் தன்னுடைய பற்றாக கொள்ளாது தனித்திருக்கும் நிலை கைவல்யம். ஸம்யோகம் ஹானம்- ஹானி- அழிவு ஏற்பட்டு உடல் உணர்வு அற்றுப் போகும். பல பிறவிகளினால் தொடர்ந்த வினை வலிமையால் வந்த அறியாமையால் பிரகிருதியாகிய உடல் தொடர்பில் ஆத்மா சிறைப்படுவதை நம் மனத்தால் உணர்ந்து அறிவால் அகற்றி நிற்கும் வேலையில், பிரகிருதி உடல் நிலை நம்மை அடிமையாக விடாமல் தானே அடங்கிப்போதல் ஆகும். முதன் முதலில் தோன்றிய பிறவிக்கு முன்பிறவி அறியாமை இருக்காது. பல ஆத்மாக்களாக பரமாத்மா பிரிந்து அணு அளவில் இருக்கும்போது சக்தி குறைந்து அறிவும் குறைந்து அறியாமை வந்தது. பல அணுக்களாகப் பிரிந்த நாம் இணைந்தால் அது பரமாத்வின் இயற்கை நிலை என உணர்தல் ஞானமாகும்.

2-26 விவேக க்யாதிரவிப்லவா ஹானோபாய.

அறியாமை அகல இடைவிடாமல் அறிவை கையாளவேண்டும். அதற்கு நான் ஆத்மா, அந்தக் கரணங்கள் அல்ல, உடல் இல்லை, ஐம்பெரும் கோசங்கள் இல்லை, சூக்கும, காரண உடலும் இல்லை, பிரம்மமாக இருக்கிறேன் என மனத்தால் கூறவேண்டும். அப்போது எல்லாம் சூன்யமாகவும், நான் என்ற உணர்வுடனும், உருவமற்றதாகவும் உணர வேண்டும். நான்- தனி ஆத்மா உணர்வு, அஹம்- பிரபஞ்சமாக விரிந்த ஆன்ம உணர்வு என கருதவேண்டும். எனவே நான் எங்கும் இருக்கின்றேன், எல்லாமுமாய் இருக்கின்றேன் என்ற உணர்வுடன் தியானம் செய்ய வேண்டும். கண்களால் காட்சிகளைப் காணும்போது தானே அவைகளாக இருப்பதான அஹம் என்ற உணர்வும் கொள்ளல் வேண்டும். தான் பிரம்மம் என்றும், பிரபஞ்சம் அல்ல என்றும், பிரபஞ்சம் தனக்குள் அணு அளவாக அடங்கியுள்ளதாகவும், தானும், பிரம்மமும், பிரபஞ்சமும் இணைந்திருப்பதாகவும் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றாகத் தியானம் செய்வது அறியாமை அகல்வதற்குரிய வழிகளாகும்.

2-27 தஸ்ய ஸப்ததா ப்ராந்த பூமி. ப்ரக்ஞா.

விவேகத்தைக் கைவிடாமல் இடைவிடாது பயிற்சி கொள்வதால் ஆறு ஆதாரங்களும் ஸகஸ்ரரம் ஆகிய ஏழு வகயான ஞான பூமிகள் தனித் தனியாக யோக உணர்வு கொள்ளச் செய்யாமல், ஏழுத் தாமரைகளைத் விழிக்கச் செய்து ஞானம் பெறலாம். நிராதார யோகத்தால் ஆதார யோகத்தைச் செய்யலாம்.

2-28 யோகாங்கானுஷ்டானாத்அ சுத்திக்ஷயே ஞான தீப்திராவிவேகக்யாதே.

யோக அங்கம்- யோகத்தின் படிகள், அசுத்தம்- சித்தத்தின் மலம், ஞானம்- தெய்வீக அறிவு பெருவதற்குரிய அறிவு, ஆகிய அங்கங்களைப் பயிற்சி செய்தால் அசுத்தம் நீங்கி ஞானம் பெறுவற்குரிய அறிவு வளரும்.                                                                            2-29 யம நியமாஸன ப்ராணாயாம ப்ரத்யாஹார தாரணா த்யான ஸ்மாதய அஷ்டா வங்கானி.

இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்தியாஹாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் யோக உறுப்புக்கள். முதலிரண்டும் மேல் மனம், ஆசனம் –இருக்கை, உடல்- ப்ராணாயாமம், உடலில் மூச்சு- ப்ரத்தியாஹாரம், பொறிபுலன்- தாரணை, ஆழ்மனத்தை நாட்டல்- தியானம், மனம் ஒருநிலைப்படுத்துதல்- சமாதி எனக் கருதவேண்டும்.

2-30 அஹிம்ஸா- ஸத்யஸ்தேய ப்ரஹம்சர்யஅ பரிக்ஹா யமா.

கொல்லாமை-கொலைசெய்யாமை, வாய்மை-பொய்பேசாதிருத்தல், திருடாமை-களவுபுரியாமை, ப்ரஹம்ச்சரியம்-காமத்தை நீக்கல், இரவாமை- பிறரிடம் பொருள் கொள்ளாமையால் பொறாமை ஆகிய பாவம் செய்வதற்குரிய ஐந்தும் இமயமாகும். இவை நீங்கினால் சிறு பாவங்கள் செய்யக்கூட மனம் வராது. எந்த ஆத்மாவுக்கும் அடிமையாகா நிலையாகும்.
2-31 ஏதே ஜாதி தேச கால ஸமயானவச்சின்னா. ஸர்வபௌம மஹாவ்ரதம்.

இமயத்திற்கு ஆண், பெண், சிறியவர், பெரியவர், மொழி, ஒழுக்கம் எதுவும் தடையில்லை. சாதி, நாடு, காலம், சமயம் ஆகியவைகளால் விட்டுவிடாமல் எல்லார்க்கும் பொதுவானதாகையால் மஹா விரதம் எனப்படும்.

2-32 சௌச ஸந்தோஷ தப ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி நியமா.

மனம், உடல், சூழல் ஆகியவை கொண்ட தூய்மை, தான் மகிழ்சியாய் இருப்பதால் சூழ இருப்பவர்களுக்கும் உண்டாகும் மகிழ்சி, புறத் தூய்மையால் ஏற்படும் சூழல் தூய்மை, வேதசஸ்திரங்களை அறிந்து படித்தல், தடைகளைப் பொருட்படுத்தாமல் இறைவழிபடுதல் ஆகிய ஐந்தும் நியமங்கள் ஆகும்.

2.33 விதர்கபாதனே ப்ரதிபக்ஷபாவனம்.

நேர் மாறான எண்ணங்கள் யோகத்திற்கு தடையான எண்ணங்களைப் போக்கும். அன்பு, பொதுநலம் ஆகிய எண்ணங்களால் கோபம், சுயநல எண்ணங்கள் தோன்றாமல் பார்க்க வேண்டும். கோபம் கொண்ட காரணத்தை நம்மை நாமே விசாரனை செய்தால் அது கோபத்தின் கடுமைதனைக் குறைக்கும். மித உணவு, பச்சை காய்கறிகள், உண்ணாவிரதம் ஆகியன குணமறுதல்கள் குறைய உதவி செய்யும். எண்ணெய் குளியல், குளிர் நீராடல், பிரணவஜபம், பிரார்த்தனை, 108 முறை இறை பெயரை எழுதல், சொல்லுதல் ஆகியன யோகத்திற்கு உதவி புரியும்.

2.34 விதர்கா ஹிம்ஸாதய. க்ருதாகாரிதானுமோதிதா லோப க்ரோத மோஹ.   பூ ர்வகா ம்ருது மத்யாதி மாத்ரது. க்காஞானானந்தபலா இதி ப்ரதி பக்ஷ பாவனம்.

அளவற்ற அறியாமையால் பெரிய, சிறிய, நடுத்தர வகைகளாகப் பிரிக்கப்பட்டு அற்ப மனத்தாலும், பேராசையாலும், கோபத்தாலும் செய்யப்படும் கொலை, பொய் முதலிய செய்கைகளைச் செய்ய மனத்தால் நினைப்பதும், செய்யவைப்பதும், செய்வதும் தவறாகும். இவை மனத்தைச் சிறுகச் செய்யும். அதனால் அடுத்தடுத்து எதிர்மறையாக சிந்தித்து கொண்டே இருக்குமாதலால் மனத்தை அடக்கமுடியாது. எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் நல்ல மனம் கிடைக்காது.

2.35 அஹிம்ஸா ப்ரதிஷ்டாயாம் தத் ஸந்நிதௌ வைரத்யாக.

அஹிம்சையை மனதில் நன்கு நிலை நிறுத்தியவன் முன் பகைமை தோன்றாது. யோகியின் உணர்வை அடைந்தால் கொடிய விலங்குகள் அந்த உணர்வைப் புரிந்து விலகிப்போகும். பாம்பை கண்டவுடன் மனிதன் அதன் விஷத் தன்மையால் கடித்துவிடும் என்ற நினைப்பில் அதைக் கொல்லவே நினைக்கின்றான். இது போன்ற கொலை உணர்ச்சிகள் வெளிப்படாதவனிடம் எதுவும் பகைமை கொள்ளாது. அதாவது வைரத்தை தியாகம் செய்வது என்பதாகும். வைரம்- பகைமை.

2-36 ஸத்ய ப்ரதிஷ்டாயாம் க்ரியபலாச்ரய த்வம்.

தன்னை சத்யத்தில் நிலை நிறுத்தி வாழும் ஒருவன் ஏதும் செய்யாமலே தன் மனத்தால் நினைப்பதுவே எல்லோருக்கும் பலனாக அமையும். ஒருவரை வாழ்த்தினாலும், திட்டி சாபம் கொடுத்தாலும் அது பலிக்கின்றது என்பதைக் கேட்டுள்ளோம். வாயால் அப்படிச் செய்வதை விட்டு மனத்தால் நினைத்துச் செய்யக் கூடியவர்கள் சத்யவான்கள். சத்யம், அஹிம்சை ஆகிய குணங்கள் உலகில் பரவியுள்ள கடவுளுக்கு நிகரான பிராணன் என்ற சக்தியை மனத்தின் மூலம் இயக்கி எதுவும் செய்யும் ஆற்றல் பெற்றவை. சத்யத்தைக் கடைபிடித்தால் இது சாத்யம்.

2-37 அஸ்தேய ப்ரதிஷ்டாயாம் ஸம்வரத்னே பஸ்தானம்.

பிறர் பொருளைக் களவு செய்யாத குணத்தில் நிலைத்து இருந்தால் அந்த நற்செய்கைகளை உணர்ந்து பல ஆத்மாக்களும் போற்றுவதால் செல்வம் தானாக வந்து சேரும். இயற்கையில் உள்ள எதையும் வேண்டும் என்று ஆசைப் படாதவனிடம் அது தன் பொருள்களையும் சக்தியையும் ஒப்படைக்கும்.

2-38 ப்ரஹ்மசர்ய ப்ரதிஷ்டாயாம் வீர்யலாப.

பிரம்மச்சரியத்தில் ஒருவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் அவனுடைய மனம், உடல் பலமுற்று ஆற்றல் மிகுதியாகும். அடித்தளமாகிய பால் உணர்வுகளை விட்டால் பிறவியில் ஏற்பட்ட மாயையின் மயக்கங்களும், ஆணவமாகிய மலமும் இல்லாமல் போவதால் அவனின் ஆற்றல் அதிகமாகிறது.

2.39 அபரி க்ரஹஸ்தைர்யே ஜன்மகதந்தா ஸம்போத.

பிறரிடமிருந்து எதையும் பெறாத குணமே அபரிக்கிரஹம். பிறரிடம் எதை பெற்றாலும் அவருக்கு நாம் கடன் பட்டவராவதால் அவருடைய நற்குணமும் தீயகுணமும் நம்மைத் தொடரும். பிச்சை எடுத்தல் விருப்பமுடன் தருவது. அவர்கள் உயர்ந்த உணவை எதிர்பார்ப்பதில்லை. அதனால் அவர்கள் ஆணவம் அழியும்.

2-40 சௌசாத் ஸ்வாங்க ஜூகுப்ஸ பரைர்ஸம்ஸர்க.

தூய்மையில் திலைத்திருப்பவனுடைய மேனியில் அபிமானம் இருக்காது, மேலும் பிறர் மேனியை கலவாமையும் ஏற்படும். மனதளவில் தன்னை நினைப்பதும் நேசிப்பதும் மனத்தின் அழுக்காகும். நீரில் குளித்தலால் புறத்தூய்மையும், உண்மை போசுவதால் அகத் துய்மையையும் உண்டாகும். உலக முழுவதுமுள்ள பிரகிருதியில் பரமாத்மா உள்ளதால் தானும் பிறரும் அந்த ஆத்மா என நினைப்பதால் பிற உடலின்மேல் விருப்பம் ஏற்படாது. இது வாய்மையில் சிறந்தது. அந்நியமானதாக உணர்ந்தால் விருப்போ வெறுப்போ வரக்கூடும் ஆதலாலும் பிற உடலால் இன்பம் காண நினைவு வராது.

2-41 ஸ்த்வ சுத்தி ஸௌமன்ஸ்யைகாகர்யேந்த்ரிய ஜயாத் மதர்சன யோக்ய்த் வானிச.

சௌசம் என்ற தூய்மையை கடைப்பிடைப்பதால் சத்துவ குணம் மேலோங்கும். மனத் தூய்மையாலும், மனத் தெளிவினாலும், மனம் குவிதலாலும், இந்திரியங்களைச் செயலிழக்கச் செய்வதாலும் ஆத்மாவை உள்நோக்கும் தகுதி வந்தடையும். அப்போது முறையற்றுத் திரிதலையும், விரிவதையும் நிறுத்தி ஒரே பொருளினால் ஈர்க்கப்படும். ஆத்மா ஆனந்தமயமானது. இக்குணங்களாலும் ஆனந்தம் வரும். மேலும் மேன்மையடையும். மனம் ஆனந்தமடைந்தால் பிரபஞ்சம் முழுவதும் இன்பம் என்ற உணர்வு மேலோங்கும்.

2-42 ஸ்ந்தோஷாதனுத்ம ஸூகலாப.

மகிழ்ச்சியின் பயனாக ஆனந்தம் உண்டாகும். உலகப் பொருள்களின் இயல்பினால் உண்மையான மகிழ்ச்சி தோன்றும்.

2-43 காயேந்த்ரிய ஸித்திர சுத்தி க்ஷயாத் தபஸ.

தவம் செய்வதால் உடலும் பஞ்ச இந்திரியங்களான பொறி புலன்களும் தூய்மையாகி சித்திகள் உண்டாகும். பிராண சக்தி பல வடிவம் கொண்டு செயல்படுவதால் எல்லாச் சித்திகளும் உண்டாகும். எங்கோ நடக்கும் நிகழ்ச்சிகளை உணர்தல், ஒலிகளைக் கேட்டல் ஆகியன சித்திகளின் செயல்கள். பயிற்சிகள் ஆரம்பித்த சிலநாட்களில் நம் இந்திரியங்கள் தூய்மையடைந்து சரியாக செயல்படுவதை நாமே உணரலாம்.

2-44 ஸ்வாத்யாயாதிஷ்ட தேவதா ஸம்ப்ர யோகம்.

ஒரு மந்திரத்தில் எவ்வளவு ஒலிகள் உண்டோ அவ்வளவு இலட்சம் முறை உச்ச அளவாகவும், குறந்த அளவாக ஒரு லட்சம்முறை ஜபம் செய்தால் அம்மந்திரத்திற்குரிய தேவதையின் அருள் கிடைக்கும். ஸ்வாத்யாயம்- ஜபம் எனப்படும் உருச்சொல்லை தேவதையை மனதில் நிறுத்தி அதன் உடல் தம் உடல் என நினைத்து மந்திரத்தை உரு ஏற்ற வேணும்.

2-45 ஸமாதி ஸித்திரீச்வர ப்ரணி தானாத்.

நன்மை தீமை இரண்டையும் அதன் பலன்களையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதால் மனத்தில் எண்ணங்கள் எதுவும் உருவாகாமல் சமாதி நிலையை அடையும். சர்வ சங்கர்ப்ப தியாகம் என்றால் கடவுளைத் தவிர வேறு எதுவும் உலகில் இல்லை என்று உணரும் உணர்வே சமாதியைத் தரும். இது கடவுளிடம் சரணாகதியாகும்.

2-46 ஸ்தி ர ஸுக மாஸனம்.

ஸ்திரத் தன்மையை ஆசனப் பயிற்சிகளால் அடையமுடியும். ஆசனத்தால் நம் உடல் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வருவதால் மனம் நிலையாகி ஸ்திரத்தன்மை கிடைக்கிறது. வசப்படும் உடலின் எண்ணங்கள் குறைந்து மனதின் திரியும் பழக்கமும் குறைகிறது. ஒவ்வொரு பகுதிக்கும் புதிய வாயுக்கள் புகுந்து சுறுசுறுப்பாக்கி மனதில் தீவிர உணர்வு உண்டாகி உடல் ஓய்வு பெறுவதை உணரலாம்.

2-47 ப்ரயத்ன சைதில்யானந்த ஸமா பக்தி ப்யாம்.

ஆசனப் பயிற்சியால் மனம் திரிவதைத் தடுத்தும், ஒரு பொருளுலியே மனம் ஈடுபடும் பலன் கிடக்கும். உடலின் எண்ணம் குறைவதால் அதை சுற்றியுள்ளவை பற்றிய எண்ணங்களும் குறைந்து மனம் சிறிய தன்மையை விட்டு மேன்மையான பரந்த உணர்வை அடைகிறது. பரந்த உணர்வுகள் பரந்த பொருளான கடவுள் அங்கு வாசம் செய்ய வாய்ப்பு அளிக்கின்றது.

2-48 த்தோ த்வந்த வானபிகாத.

தீவிர ஆசனப் பயிற்சி மேற்கொண்டவருக்கு இரட்டைச் சிக்கல்கள் எனப்படும் விருப்பும் வெறுப்பும், நன்மை தீமை, இன்ப துன்பம், குளிர் வெப்பம் முதலியவைகளால் தடைகள் உண்டாகாது. ஆசனம் செய்வதால் இரட்டைச் சிக்கல்களின் நடுப்பகுதியில் நிலை கொள்வதால் அவைகளின் பாதிப்பு இல்லை.

2-49 தஸமின் ஸதி ச்வாஸ ப்ரச்வாஸயோர் கதி விச்சேத.ப்ராணாயமா.

ஆசனத்தால் உடலை நிலைப்படுத்திய பின் மூச்சை இழுத்து விடுவதும் ஆகிய செய்கையை முறைப்படுத்துதல் பிராணாயாமம் எனப்படும். கடவுளுக்கு அடுத்து உலகில் எங்கும் பரந்துள்ளது உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராணன் சக்தி மூலாதாரத்தின் முக்கோணத்தின் உச்சியில் இந்த சக்தி ஹம்ஸ மந்திரமாக வெளிப்படும். சுழுமுனை நாடியில் இயங்கி மூளை, நரம்பு மண்டலம் எங்கும் வியாபித்து செயல்களுக்கு காரணமாகிறது. மூச்சுப் பழக்கத்தினால் பிராணன் வீணாக செலவாகாமல் கட்டுப்படுகிறது.

2-50 பாஹ்யாப்யந்தர ஸ்தம்ப விருத்திர் தேசக ல ஸம்க் யாபி, பரித் ருஷ்டொ தீ ர்க ஸூக்ஷ்ம.

பாஹ்ய விருத்தி- மூச்சை உள்ளே வாங்கும் முறை, அப்யந்தர விருத்தி- வாங்கிய மூச்சை வெளியேற்றும் முறை, ஸ்தம்ப விருத்தி- நுறையீரலுக்குள்ளேயோ அல்லது வெளியேயோ மூச்சை நிறுத்திவைப்பது ஆகிய மூன்றும் பிராணாயாம வகைகளாகும், காலம், இடம், எண்ணிக்கையால் நீண்ட அல்லது குறுகிய பயிற்சியாக மேற்கொள்ளப்படும். உடலில் இயங்கும் பத்து வாயுக்களில் பழையன அழிந்து புதியதாகவும், பிராணாயாமத்தால் முறை செய்யப் பட்டு உடல் மனம் நலன்கள் மேன்மையடைகின்றது.பிராணன் மனத்தோடும், வாயுவோடும், குண்டலினி சக்தியோடும் தொடர்பு கொண்டுள்ளது. பிராணனும், குண்டலினியும் ஒன்றாக இனைந்தவை. மனம் ஒரு முகமாகும்போது வெளிவிடும் மூச்சு மெல்லியதாக இருக்கும்.

2-51 பாஹ்யாப்யந்தர விஷயாக்ஷேபி சதுர்த்த.

ஒருப் பொருள் மனத்திற்குள்ளேயோ வெளியிலோ எங்கிருந்தாலும் அதைச் சிந்தித்திக்கொண்டு பயிற்சி செய்வதும் பிராணாயாமம். மனம் ஒரு முகமாகும்போதும் ஒன்றைப்பற்றிச் சிந்திக்கும்போதும் வெளிவிடும் மூச்சு மெல்லியதாக இருக்கும்.

2-52 தத க்ஷீயதே ப்ரகா சாவரணம்.

சித்தம் எப்போதும் ஞானமாயிருப்பது. அதிலுள்ள மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மலங்கள் இருள் சம்பந்தமானவை. பிராணாயாமம் செய்வதால் உள்மனத்தில் உள்ள இருள் மலங்கள் நீங்கி, உள் ஒளித் தோன்றுவதால் சித்தியடைவதற்குரிய ஒளியை மூடி இருக்கும் இருள் நீங்கிப் போகும்.

2.53 தாரணாஸுச யோக்யதா மனஸ.

பிரணாயாமம் செய்து மலங்களின் இருள் நீங்கி ஒளி தோன்றினால் அடுத்ததாக தாரணை யோகப் பயிற்சி செய்ய மனம் தகுதியுடையதாகும். மனதை ஒரு முகப்படுத்தும் தாரணைக்கு பிராணாயாமம் துணை புரியும்.

2-54 ஸ்வஸ்வவிஷயா ஸம்ப்ரயோகே சித்தஸ்வ ரூபானுகார இவேந்த்ரியாணம் ப்ரத்யாஹார.

ஐம்புலன்களுக்கும் உரிய பொருள்களை நீக்கிவிட்டு அவை மனத்தோடு ஒன்றியிருப்பது பிரத்தியாஹாரம். இந்திரியங்களிலிருந்து மனத்தை பிரித்து எடுக்கும் பயிற்சி பிரத்தியாஹாரம், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உறுப்புகள் பொறிகளாகும். புலன்கள் என்பது இந்த பொறிகளிலிருந்து பொருளை உணரப் பயன் படும் அறிவு ஆகும். பொறிகளும் புலன்களும் தங்கள் செயலைச் செய்தாலும் மனம் அங்கு பதியாவிட்டால் அவைகள் உணர்த்துவதை நாம் உணருவதில்லை.
ஒருவரை கூர்ந்து தேடும்பொழுது வேறு ஒருவர் கண்ணெதிரில் நடந்தால்கூட கண்கள் மூலம் மனம் உணருவதில்லை. சாக்கடைத் தொழிலாளிக்கு பழகிய காரணத்தால் அவர் மூக்கு மூலம் உணருவதில்லை. இந்திரியங்கள் செய்வது எல்லாம் மனத்தில் இருந்தாலும் மனம் அவற்றை உற்றுப் பார்க்காவிடில் நாம் அதை உணருவதில்லை. இது இந்திரிய செயல்களிலிருந்து மனத்தைப் பிரித்து எடுப்பது பிரத்தியாஹாரம் ஆகும். புறத்தில் உள்ள எந்த பொருள்களிலும் இந்திரியங்கள் பதியாமல் மனம் வேறு ஒன்றை உணருவது.

2-55 தத. பரமா வச்யதேந் த்ரியாணாம்.

வெளியில் காணும் எந்தப் பொருளின் வடிவமும் அதனின் உணர்வும் இந்திரியங்களால் மேற்கொள்ளப்படாமல் தடுத்து ஒடுக்கி இந்திரியத்தை வசப்படுத்துவதால் தசநாடிகள், தசவாயுக்கள் அனைத்தும் வசப்படும்.

உடலை உடலால் ஆசனத்தினால் வசம் செய்கிறோம்.
உடலை மனத்தால் பிரத்தியாஹாரத்தினால் வசம் செய்கிறோம்.

வசம் செய்யாமலிருக்கும் போதுள்ள உணர்வுக்கும் வசம் செய்யப்பட்ட போதுள்ள உணர்வுக்கும் வேறுபாடுகள் நிறைய உண்டு.

உடலும் மனமும் இந்திரியமும் வசமாகும்போது ஆத்மா முதன் நிலையடைந்திருக்கும்.                                                                                   

                                             ******

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

புதன்கிழமை, 20 February 2013 00:00

விபூதி பாதம்

3.விபூதி பாதம்

3-1 தேச பந்தஸ் சித்தஸ்ய தாரணா.                                                                 

சித்தத்தை ஏதாவது ஒரு பொருளின்மேல் பதிய வைப்பது தாரணை. நூலின் நுனி விரிந்திருந்தால் ஊசியின் காதில் நுழையாது. அந்த நூலின் நுனியை திரித்து ஒரு முனையாக்கினால் ஊசியில் நுழையும். இது போன்றே மனம் விரியாமல் குவிந்து இருப்பது தாரணையாகும். உடலின் உள்ளேயோ வெளியேயோ உள்ள ஒரு பொருளின் மீது மனம் நிலைபெற்று அந்த நிலையிலே பொருந்தியிருப்பதாகும்

3-2 தத்ர ப்ரத்யயை கதானதா த்யானம்.                                                                        

பொருளில் ஆழ்ந்து இடைவெளியில்லாமல் தியானம் செய்வது தாரணை. ஒரு பொருளை நம் நினைவில் இருத்தினால் மனம் முழுவதும் அந்தப்பொருளே நிறைந்து மனதில் ஆட்சி செய்யும்போது பிற பொருளை மனம் நினைக்காமல் இருப்பது தாரணை. அது தொடர்ந்து நீடித்தால் அது தியானமாகும். வெளிப் பொருள்கள், உடலின் பொருள்கள், மந்திரங்கள், குரு, கடவுள் ஆகிய ஏதாவது ஒன்றில் மனத்தை குவித்திருப்பதே தாரணையின் மூலம் தியானமாகும்.உணர்வுகள் மற்ற உறுப்பிலிருந்து வராமல் குறிப்பிட்ட பொருளிலிருந்து வரும் உணர்வுகளை பெறுவதில் மனம் வெற்றி காண்பது தாரணை.

3-3 ததே வார்த்த மாத்ர நிர்பாஸம் ஸ்வரூப சூன்ய மிவ ஸமாதி.                             

தியானம் செய்யும் பொருளை நீக்கி அதன் விளக்கத்தை மனதில் விளங்கச் செய்வது சமாதியாகும். பொருளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் அதன் வடிவம் அசையும், பின் மெல்ல மறையும். தியானத்தின்போது பொருளின் உருவம் கலைந்து அதனின் அர்த்தம் மட்டும் மனதில் தங்குவது சமாதி. தியானிக்கின்ற பொருளின் வடிவம் புற மனதை விட்டு அகன்றால் அது ஆற்றல் பெற்றதாகும். ஒரு புத்தகத்தை தியானிக்கும்போது அதனுள் உள்ள கருத்தை உருவமின்றிக் காணும் நிலையை அடையும் தியானம் சமாதி.

3-4 த்ரய மேகத்ர ஸம்யம்.

தாரணை, தியானம், சமாதி ஆகிய மூன்று பயிற்சிகளும் ஒரே பொருளில் செய்வது ஸம்யமம். பொருள் தெரிகிறது, பொருளின் முழு வடிவம் தெரிகிறது, பொருள் மறைகிறது, பொருளின் பெயர் அல்லது அதனின் விளக்க அறிவு மிச்சமாகிறது. சமாதி முழுமையடைய நான்கு நிலைகளுமே வாயில்கள். எல்லாப் பொருளகளின்மீதும் ஸம்யமம் செய்யலாம். மனத்தை ஒரு குறித்த பொருளின் மீது செலுத்தி மனதை அங்கு நிறுத்தி நெடுநேரம் அங்கு வைத்து பொருளின் உருவத்தைத் தள்ளி கருத்தைமட்டும் சிந்திப்பதி ஸ்ம்யமம்.

3-5 தஜ்ஜயாத் ப்ரக்ஞாலோக.

ஸம்யமத்தில் வெற்றி பெற்றால் ஞானம் அடையலாம். அறிவொளி உண்டாகும். ஸம்யமம் செய்யும்போது அப்பொருள் பற்றிய ஞானம் மனதில் இடம் பிடிக்கின்றது. மனிதன் அறிய வேண்டிய பொருள்கள் தூலம், அதிதூலம், மகாதூலம், சூட்சமம், அதிசூட்சமம், மாகாசூட்சமம் ஆகியவை. முதலில் மிகச்சிறிய பொருளையும் பின் மிகப் பெரிய பொருளையும் பயிற்சியினால் உள்ளவாறு அறிந்து கொள்ளும் ஆற்றல் அடைந்தபின் சூக்கும- நுண் பொருள்களில் ஸம்யமம் செய்ய வேண்டும்.
மரத்தை தியானம் செய்வது, பின் பூ, இலை, காய்களைத் தியானம் செய்வது, பின் பூவின் நிறம், கனியின் சுவையைத் தியானம் செய்வது, பின் அம்மரத்தின் விதையைத் தியானம் செய்வது, பின் அந்த விதை முளைப்பதை தியானம் செய்வது என்ற முறையில் ஒரே பொருளைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.

3-6 தஸ்ய பூ மிஷு விநியோக.

முதலில் தாரணை, பின் தியானம், பின் சமாதி பின் இவை மூன்றும் கலந்த ஸம்யமம் என்று மெல்ல மெல்ல கீழிருந்து படிப்படியாக அனுபவம் கொண்டு உயர்ந்தால் சிறப்பு. அதிக வேகம் கொண்டு விரைந்து செல்லக்கூடாது என்பதே இதன் கருத்து.

3-7 தரய மந்த ரங்கம் பூர்வேப்ய.

அட்டாங்க யோகமாக கூறப்பட்ட எட்டில் முதல் ஐந்தும் உடலுடன் தொடர்புடைய வெளிப்படையானவை, இறுதியில் கூறிய மூன்றும் அந்தரங்கமான அகத்தினுடையது.இதில் வெற்றி பெற்றால் ஒருவனுக்கு எல்லா ஆற்றலும் அறிவும் பெறுவான். ஆனால் முக்தி அடையமுடியாது. கடைசி மூன்றும் மனதை சலனமற்றிருக்கச் செய்யும் நிர்விகல்பம் பெற உதவாது. வினை எனும் விதைகள் எஞ்சி யிருக்கும். அதனால் மறுபிறப்பு உண்டு. விதைகளை வறுத்து எடுக்க வேண்டும். பின் அவைகள் முளைக்கா. இந்த மூன்று சக்திகள் விதையை வறுக்காது.

3-8 ததபி பஹிரங்கம் நிர்பீஜஸ்ய.

நிர்பீஜ சமாதியுடன் ஒப்பிட்டால் இவை மூன்றும் வெளிப்படையானவை. வித்தில்லா சமாதியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புறத்தே உள்ளவை. பீஜம்- விதையில்லா சமாதியே பிறப்பு இறப்பை ஒழிக்கும். உண்மையான சமாதி இதுவல்ல. ஒருபடி கீழ் இருப்பதாகும். கடைசியில் கூறிய மூன்றும் பழகினால் மீண்டும் பிறப்பிற்கு வழி உண்டாக்குவதால் இவையும் வெளிப்படையானவை. அந்தரங்கம் என்ற இப்பயிற்சிகள் வெளிப்படையானவை.

3-9 வ்யுத்தான நிரோத ஸம்ஸ்கார யோரபிபவ ப்ராதுர்பாவௌ நிரோத க்ஷண சித்தான்வயோ நிரோத பரிணாம.

காரணமில்லாமல் சித்தத்தில் தோன்றி வரும் எண்ணங்களை அடகுவதற்காக ஓர் எண்ணத்தை நினைக்க வேண்டியுள்ளது. இது நிரோத பரிணாமம். சித்த விருத்திகள் அடங்கிய பிறகும் ஓர் எண்ணம் உண்டாகலாம். அதை அடக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் புதிய எண்ணத்தை அடக்க முடியும். இந்த சமாதி நிலையில் வேறுபட்ட சித்த விருத்திகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை. முழுவதும் அடங்கினால் சித்தத்தில் விருத்தியே இருக்காது. மனத்தை புலன் வழி செலுத்தினால் உண்டாகும் மனவிருத்தியை யோகி அடக்க முயன்றால் அதுவே ஒரு விருத்தியாகிவிடும். ஒரு வகைஅலையை அடக்க மற்றெருவகை அலை உண்டாகிறது. எல்லா அலைகளையும் அடக்கக்கூடிய சமாதி இது இல்லை. உண்மைச் சமாதிக்கு கீழ் என்றாலும் அதன் அருகில் உள்ளது. கலக்கமடைந்த மனத்தைவிட கீழான சமாதி உயர்ந்தது.

3-10 தஸ்ய ப்ரசாந்த வாஹிதா ஸம்ஸ்காராத்.                                                         பயிற்சி வெற்றியடைந்தால் நிரோதப் பரிணாமம் நிலை பெறும். தந்தை வந்தால் திட்டுவார் என்பதால் அவர் சொன்ன செயலை செய்கிறான். அடிக்கடி இது நடைபெறுவது பயிற்சியின் காரணம். நிரோதப் பயிற்சி நாள்தோறும் செய்து வந்தால் எண்ணங்கள் தோன்றாமல் எண்ணங்களை அடக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மிச்சமாகும். இந்த நிலை மனம் குவிந்த நிலையாகும். அது நிலைபேறான சமாதியை அடைகிறது.

3-11 ஸர்வார்த்ததை காக்ரதயோ க்ஷயோதயௌ சித்தஸ்ய ஸமாதி பரிணாம.

சமாதி பரிணாமம் என்பது சித்தத்தில் உள்ளே வரும் பல பொருள்களை வரவிடுவதும், அவற்றில் ஒரு பொருளின் மீது மட்டும் நிலையான கவனத்தோடு இருப்பதும் ஆகிய இந்த இரு செய்கைகளை ஆக்கவும் அழிக்கவும் மனத்தினால் மட்டுமே முடியும். வருவதும் போவதுமான செயல்கள் நன்கு பக்குவப்படாத மனத்தில் இருக்கும். பயிற்சியடைந்த மனதில் தேவையானவை மட்டும் இருக்கும். இதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து அதில் முழுக்கவனத்தையும் செலுத்துவது சமாதியாகும். சமாதி நிலையடைந்தவர் மனதில் அவர் அனுமதி இன்றி எந்த எண்ணமும் நுழைய முடியாது. மனம் வெவ்வேறு பொருளைப் பற்றி அதன் பின்னால் செல்வது கீழான நிலை. மனம் ஒன்றை மட்டும்பற்றி மற்றதை விட்டுவிடும் உயர்ந்தநிலையின் பயனே சமாதி.

3-12 சாந்தோதிதௌ துல்யப்ரத்யயௌ சித்தஸ்யை காக்ரதா பரிணாம.

ஏகாக்ரதா பரிணாமம் என்பது மனம் சாந்தத்தையும் நல்லவற்றையும் பெற்றிருக்கிறாதாயின் அது கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் சமமாகவே கருதும். ஒரு செயல் செய்தபின் இவ்வளவு நேரமாகி விட்டது என நினைத்து கால அளவை பார்க்கிறோம். இதனால் மனம் வேறுபாடு உணர்ந்து சமாதி நிலை உண்டாகும். யோகத்தில் இருக்கும்போது கடந்தகாலம் முழுவதும் நல்ல அனுபவமாக இருப்பதால் காலம் கழிந்தது என்ற எண்ணம் உண்டாகாமல் சமாதி நிலை உண்டாக பக்குவ நிலை ஏற்படும்.ஒரு புத்தகத்தில் ஆர்வம் செலுத்தி ஆழ்ந்து படிக்கும்போது நேரத்தைக் கவனியாமல், படித்து முடித்ததும் இவ்வளவு நேரம் கடந்து விட்டேதே என வியப்பு அடைவோம். மனத்தை குவித்து படிக்கும்போது கடந்த, நிகழ் காலம் ஒன்று படுகிறது. தியானகாலத்தில் எல்லாம் நிகழ்காலம். என்வே இறந்தகாலமும், நிகழ்காலமும் ஒன்று பட்டு இருந்தால் அப்போது மனமும் குவிந்துள்ளது என்பதாகும்.

3-13 ஏதேன பூதேந்த்ரியேஷு தர்ம லக்ஷணாவஸ்தா பரிணாமா வ்யாக்யாதா.

மனத்தில் வேறுபாடுகள் தோன்றியது போலவே பருவடிவிலும், நுண்வடிவிலும் உள்ள பூதங்களிலும் இந்திரியங்களிலும் வேறுபடுகள் தோன்றும். இடத்தாலும், வடிவத்தாலும், காலத்தாலும் எல்லாப் பொருள்களிலும் மாறுதல் உண்டு. வேறுபாடுகளையும் அதற்கான காரணங்களையும் அரிந்து கொண்டால் ஸம்யமம் எளிதில் செய்யலாம். தங்கக்கட்டியை கையில் அணியும் காப்பாகவும், பிறகு காதணியாகவும் மாற்றலாம்- இது உருவ வேறுபாடு. பொன் ஒருகாலத்தில் காப்பாகவும் மற்றொரு காலத்தில் காதணியாகவும் இருக்கிறது- இது காலத்தின் மாறுதல்- இறந்த, நிகழ், எதிர் காலத்தில் சித்தம் மாறி அமைவது காலமாறுபாடு. காப்பு அல்லது காதணி பளபளப்பாகவே பளபளப்பற்றோ, கனமாகவோ, மெல்லியதாகவோ இருப்பது -இது நிலையில் மாறுபாடு-ஒரே காலத்தில் -நிகழ்காலத்தில் தன்மை வேறுபடுவது- நிலைமை பற்றிய வேறுபாடு. இவற்றிற்கேற்ப தூல, சூட்மப் பொருளகளிலும் இந்திரியங்களிலும் ஏற்படும் மாறுதல்களை அடக்குவதில் வெற்றி பெறவேண்டும்.

3-14 சாந்தோதி தாவ்யப்தேச்ய தர்மானுபாதோ தர்மீ.

இதற்கு முன்பும் இப்போதும் இனிமேலும் ஒரு பொருளின்மேல் எந்த தர்ம இயல்பு வெளியாகி கொண்டிருந்தால் அது தர்மீ எனப்படும். ஒன்றின் இயல்பு தர்மம் ஆகும்.. தர்மத்தை ஏற்ற பொருள் தர்மீ ஆகும். சித்தத்திற்கு பழகிய காரணத்தால் இயல்புகள் உண்டு. காலத்தாலும் இடத்தாலும் அவை மாறிக்கொண்டே இருக்கும். எனவே சித்தமும் ஒரு தர்மீ ஆகும். கடந்த, நிகழ், எதிர் ஆகிய காலங்களில் நிகழும் மாறுதல்களால் பாதிக்கப் படுபவையெல்லாம் குணத்துடன் இருப்பவை. காலத்தாலும் சம்ஸ்காரங்களாலும் தாக்கப்பட்டு மாறுபாட்டை அடைந்து எப்பொழுதும் வெளிப்படத் தோன்றும் பொருளே காரணப் பொருளாகும்.

3-15 க்ரமான்யத்வம் பரிணாமான்யத்வே ஹேது.

சித்தத்தின் பலவிதமான பரிணாமங்களுக்குக் காரணம் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று மாறுதலாகி வருவது. ஒரு பிறவியிலிருந்து வேறு வேறு பிறவிகள் தோன்றுவது பரிணாமம் எனப்படும். ஒவ்வொரு பிறவியிலும் ஏற்படும் சித்தத்தின் மாற்றத்திற்கேற்ப அதன் புற உடல் அமையும்.

3-16 ப ரிணாமத்ரய ஸம்யமாததீ தானாகத ஜ்ஞானம்.

பரிணாமங்களின் மூன்று வகையை ஸம்யமம் செய்வதால் இறந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய ஞானம் வரும். ஒருமுகமாக ஒரு பொருள்மேல் மனத்தை செலுத்தினால் தாரணை. நீண்டநேரம் அப்படி இருந்தால் அது தியானம். அந்தப் பொருளின் வடிவத்தை நீக்கி அது பற்றி விபரம் மட்டும் மனத்தில் இருக்குமாறு செய்தல் சமாதி. தாரணை, தியானம், சமாதி மூன்றையும் சேர்ந்து செய்வது ஸம்யமம். பொருளை முன்பு பார்த்த தியான முறையில் அனுபவித்தால் அந்த வடிவமும் அந்த உணர்வும் மனதில் நிலைக்கும். பின் இதை ஒருமுறை நினைத்த உடன் நொடிப்பொழுதில் அந்த வடிவமும் உணர்வும் மனத்தில் தோன்றும். இது ஸம்யமம். இதுபோன்று ஆழமாக மனதில் பதிந்து பின் நினைத்தவுடன் மலர்ந்து – ஸம்யமம் செய்த பின் அந்த ஸம்யமத்தை தொடர்ந்து தியானம் செய்தால் இறந்தகாலமும், எதிர்காலமும் தெரியவரும்.

3-17 சப்தார்த்த ப்ரத்யயானாமிதரே தராத்யாஸாத் ஸங்கரஸ்தத் ப்ரவிபாக ஸம்யாமாத் ஸர்வபூத ரூதஜ்ஞானம்.

பெயர் சொல்லையும் அதனின் பொருளையும், அதனால் ஏற்படும் ஒலி அலைகளின் அறிவு ஆகியனவற்றைத் தனியாக ஸம்யமம் செய்தால் விலங்குகளின் ஒலியைப் புரிந்து கொள்கின்ற ஞானம் வரும்.சொல் என்பது வெளியே நிகழும் காரணம்-புறச்சலனம். ஒலி அசைவு காதின் நரம்புகள் மூலம் முளையின் ஒலி மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவது பொருள்-உணர்ச்சி ஓட்டம். மனத்தின் எதிரியக்கம் அறிவு-அந்தச் சொல்லை அறிதல். இதனுடன் காட்சி வந்து சேரும். இந்த மூன்றும் கலந்து  கிடப்பதால் புறத்தில் உள்ள பொருளை அறிகிறோம். நாம் அறியும் சொல் மூன்றின் கலப்பு. ஒலி இயக்கம், நரம்பியல் உணர்வு, மனதில் எதிர்ச்செயல் மூன்றும் சாதாரணமாகப் பிரிக்கமுடியாதன. யோகி தனது பயிற்சியின் வல்லமையால் பிரித்து அந்த ஒலிமீது ஸம்சயம் செய்தால் அந்த ஒலி மனிதன்/பிராணி எவரிடமிருந்து வந்தாலும் அதன் கருத்தை அறிவான்.

3-18 ஸம்ஸ்கார ஸாக்ஷாத் கரணாத் பூர்வஜாதி ஜ்ஞானம்.

மனத்தில் ஏற்படும் சம்ஸ்காரங்களை- பதிவுகளைத் தெளிவாகவும் சரியாகவும் புரிந்தால் முற்பிறவிகள் பற்றிய ஞானம் உண்டாகும். நாம் கேட்க, பார்க்க, முகர, சுவைக்க, உணரத் தொடங்கியதில் இருந்து அறிந்த பிரபஞ்ச செய்திகள் அனைத்தும் அணு வடிவமாக மனத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. அந்த சூட்சமானவைகள் அழிந்து போவதில்லை. நுண்ணிய வடிவில் சித்தத்தில் புதைந்து கிடக்கும் இந்த அலையை சித்தத்தின் மேற்பரப்பிற்கு கொணர்ந்தால் அது ஞாபகம் எனப்படும். அந்த எண்ணப் பதிவுகளைக் கூர்ந்து ஸம்யமம் செய்தால் சென்ற பிறவிகளின் பகுதிகள் நினைவில் தோன்றி ஞானம் உண்டாகும்.

3-19 ப்ரத்யயஸ்ய பரசித்த ஜ்ஞானம்.

ஒரு உடலில் உள்ள அடையாளங்களை ஸம்யமம் செய்தால் அந்த மனத்தைப் பற்றிய ஞானம் தோன்றும். ஒவ்வொரு உடலிலும் சில குறிப்பிட்ட அடையாளங்கள் இருக்கும். ஒவ்வொரு உடல் அடையாளத்தை வைத்தே அந்த உடல்களின் தன்மை பிரிக்கப்படும். எனவே அந்த அடையாளங்களின் மீது ஸம்யமம் செய்தால் அந்த மனத்தின் தன்மையைப் புரிய வைக்கும்.

3-20 ந சத த் ஸாலம்பனம் தஸ்யாவிஷயீ பூதத்வாத்.

மேலே சொன்ன ஸம்யமத்தால் அந்த உடம்பின் மனத்தில் உள்ள பொருள்களை பற்றிய ஸம்யமம் செய்யாததால் அது பற்றிய ஞானம் தோன்றாது. உடல் அடையாளம் பற்றி ஸம்யமம் செய்வது புறத்தில் செய்வதாகும். அவன் மனம் முழுவதும் பற்றிய ஞானத்திற்கு அவை பற்றிய ஸம்யமம் செய்தால் ஞானம் வரும். எனவே புறத்தில் உள்ளதை ஸம்யமம் செய்வது, அகத்தில் உள்ள மனத்தை ஸம்யமம் செய்வது என இரண்டு வகை உண்டு.

3-21 காயரூப ஸம்யமாத்தத் க்ராஹய சக்தி ஸ்தம்பே சக்ஷுஷ் ப்ரகாசா ஸம்யோகே அந்தர் தானம்.

தன் உடலை ஸம்யமம் செய்து, உடலின் வடிவத்தை மற்றவர் பார்க்கும் செயலை செய்ய முடியாதபடி ஸம்யமத்தால் தடைப்படுத்தி, தன்னைப் பார்க்கும் பிறர் கண்ணில் உள்ள பார்க்கும் செயலை ஸம்யமத்தால் நடக்காதபடி பிரித்து வைத்து, மற்றவர் தன் உடலை அறியாதபடி மறைத்து வைக்கலாம். அந்தர் தானம் – எதிரில் இருந்தாலும் தம் உடலை பிறர் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பதாகும். உருவத்தை முதலில் உடலிருந்து பிரிக்க வேண்டும். திடீரென்று மறையக்கூடும். உண்மையில் மறைவதில்லை. மற்றவர்களால் காணப்படமாட்டான். உடலும் உருவமும் ஒன்றுபடுவதால் காணும் ஆற்றலும், அவை பிரிக்கப்படுவதால் காணும் ஆற்றல் தடைப்படும்.

3-22 ஏதேன சப்தாத் யந்தர் தானமுக்தம்.

நாம் பேசும் பேச்சும் பிறர் காதில் கேட்காதபடி மறைத்து வைக்கலாம். பிறர் பேசுவது தனக்கு விளங்குமாறும் ஸம்யமம் செய்து அதுவே பிறர்க்கு விளங்காதபடி ஸம்யமம் செய்யலாம்.

3-23 ஸோபக்ரமம் நிருபக்ரமம் ச கர்ம தத்ஸம்ய மாதபராந்த ஜ்ஞானமரிஷ்டோப் யோவா.

விரைவில் பலன் தருபவை, பிந்திப் பலன் தருபவை என்ற இரண்டு வகை கருமங்களின் மீதும் ஸம்யமம் செய்தாலும், மரண அறிகுறிகளாகிய அரிஷ்டங்களின்மீது ஸம்யமம் செய்தாலும் சரியான மரண காலத்தை அறியலாம். பிராரப்த கர்மம் – முன் ஜென்ம வினைகளைத் தற்போது அனுபவிப்பது, சஞ்சித கர்மம் – முன்செய்த வினைகளின் மீதம் இனிவரும் பிறவியில் அனுபவிப்பது, ஆகாமிய கர்மம் – இப்பிறவியில் செய்யும் செயல்களுக்கான பலனை அனுபவிப்பது ஆகிய மூன்றுவித கர்மங்களை ஸம்யமம் செய்யும்போது அவனுடைய மரண காலத்தின் எல்லை தெரியும். இறக்கும்போது எதை நினைக்கின்றோமோ அதுவாக அடுத்த பிறவியில் ஆவோம் என்பதால் நல்ல நினைவுகளை கொள்க.

3-24 மைத்ர்யா திஷூ பலானி.

நட்பு, கருணை(இரக்கம்) முதலிய குணங்களின் மீது ஸம்யமம் செய்தால் அந்தக் குணங்கள் சிறப்பாக விளங்கும். உலகில் உள்ள எல்லோருக்கும் தனக்கும் பயன்படும் என்ற எல்லாக் குணங்களையும் ஸம்யமம் செய்யலாம்.

3-25 பலேஷு ஹஸ்தி பலாதீனி.

விலங்குகளின் வலிமையை ஸம்யமம் செய்வதால் அவ்வாற்றல் உண்டாகும்.பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளின் குணமும் இயல்பும் தனக்கு வரும்மாறு ஸம்யமம் செய்யலாம்.

3-26 ப்ரவ்ருத்யாலோக ந்யாஸாத் ஸூக்ஷ்ம வ்யவஹித விப்ரக்ருஷ்ட ஜ்ஞானம்.

அநாஹதம்- இருதயம் எனும் தாமரையின் நடுவில் உள்ள மேலான பெரும் ஜோதியின்மீது ஸம்யமம் செய்தால் சூக்குமமாய் இருப்பவைகள் மறைந்துள்ளவைகள் தொலைவில் உள்ளவை ஆகியவை பற்றிய ஞானம் ஏற்படும். இந்த ஜோதி தகரா லயம், தகரா ல ரஹஸ்யம், தகரா காசம் என்பர். தகரம்- அணுவிலும் மிகச் சிறியது. அந்த இடம் எதனால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கு நிகழ்வனவற்றையும் நுண்னிய பொருளையும் காணமுடியும்.

3-27 பு வன ஜ்ஞானம் சூர்யே ஸம்யமாத்.

சூரியனின் கதிர்கள் சென்று பரவாத இடமும் பொருளும் இல்லையாதலால் சூரியனை நினைத்து ஸம்யமம் செய்தால் உலகப் பொருள்கள் பற்றிய ஞானம் கிட்டும். பௌதிக சூரியன் – கண்களால் காணுவது, ஆத்மிக சூரியன் – சூரியனில் உள்ளதும் ஆதமாவில் உள்ளதும் ஒன்றே என உணர்வது, தைவிக சூரியன் – கண்ணால் காணும் சூரியனுக்கு சக்தியைத் தருவது தெய்வ சக்தி என உணர்வது என மூன்று அடுக்குகளாக சூரியனை ஸம்யமம் செய்தால் உலக ஞானம் அடையலாம்.

3-28 சந்த்ரே தாராவ்யூஹ ஜ்ஞானம்.

சூரியன் இருக்கும்போது தோன்றாத நட்சத்திரங்கள் சந்திரன் இருக்கும்போது தோன்றுவதால் சந்திரனை ஸம்யமம் செய்தால் நட்சத்திர கூட்டங்கள் பற்றிய ஞானம் வரும்.

3-29 த்ருவே தத்கதி ஜ்ஞானம்.

வடதுருவத்தில் உள்ள துருவ நட்சத்திரம் இயங்காமல் எப்போதும் வடக்கிலேயே காணப்படுவதால், மற்ற நட்சத்திரங்கள் கிழக்கு மேற்கு என மாறிமாறித் தோன்றுவதால் இயங்காத ஒன்றை ஸம்யமம் செய்தால் இயங்கும் மற்றதைப்பற்றி உணரமுடியும்.

3-30 நாபி சக்ரே காயவ்யூ ஜ்ஹஞானம்.

தொப்புள் என்கிற நாபியில் உள்ள பத்து இதழ் தாமரையாகிய மணிப்பூரகச் சக்கரத்தில்- நெருப்புத் தானம்- உடல் உண்டாக அடிப்படையான ஓளியை ஸம்யமம் செய்தால் உடல் அமைப்பு பற்றிய ஞானம் வரும்.

3-31 கண்டகூபே க்ஷூத்பிபாஸா நிவ்ருத்தி.

தொண்டைக்குழியில் ஸம்யமம் செய்தால் பசியும் தாகமும் நீங்கும்.

3-32 கூர்ம நாட்யாம்ஸ் தைர்யம்.

கூர்ம நாடியின் இடம், பெயர் ஆகியவற்றை ஸம்யமம் செய்தால் வெயில், குளிர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் தாக்குதலால் தளர்ச்சி அடையாமல் உடல் உறுதி பெறும்.

3-33 மூர்த்த ஜ்யோதிஷி ஸித்த தர்சனம்.

உடலில் உள்ள ஒளி தலை வழி வெளியே பரவியுள்ளதால் தலை உச்சியின் மேல் உள்ள ஜோதியின்மீது ஸம்யமம் செய்தால் சூக்குமமாக இயங்கக்கூடிய மரணம் இல்லாப் பெருவாழ்வுடையவர்களான சித்தர்கள் தரிசனம் கிடைக்கும். சித்தர்கள் மனிதனின் ஆவி நிலைக்குச் சிறிது மேலே உயர்ந்திருப்பவர்கள்.

3-34 ப்ராதி பாத்வா ஸர்வம்.

இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணை, தியானம் ஆகியவற்றால் உடம்பிலும் தலையின் உச்சியிலும் தோன்றும் ஒளிவட்டம்- பிரபை- பிராதிபை- பிராதிபம் என்ற ஞானத்தில் எல்லாம் அறியலாம். சம்சயம் ஏதுமின்றி பிரதிபையின் தூய வாழ்வினால் தானாக எழும் ஆற்றல் வலிமையால் இவைகளைப் பெறமுடியும். யோகி பிரதிபை நிலைக்கு முன்னேறினால் வரும் பேரொளி விளக்கத்தால் பொருள்களைப் பற்றிய அறிவு சம்யமமின்றியே வரும்.

3-35 ஹ்ருதயே சித்த ஸம்வித்.

உடல் முழுவதும் பரவியுள்ள மனம் ஒவ்வோர் நிலையில் ஒவ்வோர் இடத்தில் நிலை பெற்றிருக்கும். நினைவு கால நிலையில் இருதயத் தானத்தில் மனம் நிலைகொண்டபோது அதை ஸம்யமம் செய்தால் மனதைப்பற்றி அறியலாம்.

3-36 ஸத்வ புருஷயோரத்யந்தா ஸங்கீர்ணயோ. ப்ரத்யயாவிசேஷாத் போக. பரார்த்த த்வாதன்ய ஸ்வார்த்த ஸம்யமாத் ப்ருஷ ஜ்ஞானம்.

நமக்காக உள்ள புருஷ ஞானம்- ஆத்மாவையும், பிறருக்காக உள்ள ஸத்வ குணத்தையும் வேறுவேறாக பிரிக்காவிடில் இன்பம்- போகம் உண்டாகாது. ஆத்மாவின் குணங்களில் தலைமையானது ஸத்வ குணமாகிய புத்தியாகும். பிரகிருதியின் சத்துவம் ஒளியையும் மகிழ்ச்சியையும் பெற்றது. ஆன்மாவின் பொருட்டு அகங்காரத்திலிருந்து விலகிய சத்துவம் புருஷனுடைய அறிவினால் ஒளிவிடும்போது அது தன்னிலையில் இருக்கும். அந்நிலையில் எல்லா தொடர்புகளிலிருந்தும் விலகி இருக்கும். பிறரோடு பழகுவதற்குப் பயன்படும் ஸத்வ குணத்தை பிரித்து புருஷன்மீது ஸம்யமம் செய்தால் ஆத்ம ஞானம் ஏற்படும்.

3-37 தத ப்ராதிபச்வராவண வேதனாதர் சாஸ்வாத வார்தா ஜாயந்தே.

ஆத்மாவாகிய புருஷனை ஸம்யமம் செய்தால் பருவடிவில் உள்ள பஞ்ச பூதங்களுக்கு காரணமாயிருக்கும் ஆத்மாவோடு நெருங்கியிருக்கும் நுட்பமாக அருவ நிலையில் இருக்கும் தன்மாத்திரைகளான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய பற்றிய அறிவு உண்டாகும்.

3-38 தே ஸமாதாவு பஸர்கா வ்யூத்தானே ஸித்தய.

மாயையால் செய்யப்பட்ட பிரபஞ்ச உலக இயல்பில் பயன் தரும் சித்திகள் என்றழைக்கப்படும் மேலே கூறப்பட்ட ஸம்யமங்கள் எல்லாம் சமாதி நிலைக்குத் தடையாக இருக்கும். சித்திகளில் மனம் லயித்தால் ஆத்மா மேலும் உயர்ந்துபோக தடை ஏற்படுவதால் ஆன்ம ஞானமும் முக்தி என்ற முன்னேற்றம் அடைய முடியாது. புருஷனும் மனமும் சேர்வதால் உலக அனுபவ அறிவு வரும். பிரகிருதியும் ஆன்மாவும் வெவ்வேறு பொருள்கள் என சம்சயம் செய்தால் புருஷனைப்பற்றிய அறிவு வரும். விவேகம் அடைவான். அதிலிருந்தி ஞானஒளியாக பிரதிபையை பெறுவான். இந்த சித்திகள் ஆன்மஞானமும் முக்தியும் பெற தடையாகும். இதைப் புறக்கணிதால் உயர் நிலை அடைவான்.

3-39 பந்தகாரண சைதிலயத் ப்ரசார ஸம்வேதனாச்ச சித்தஸ்ய பர சரீராவேச.

சித்தத்தைக் கட்டுப்படுத்தும் காரணமாக இருப்பதை அவிழ்க்கப்படும்போது, செயல்பாட்டிற்கு காரணமாகிய நாடிகள் பற்றிய அறிவு உண்டாவதால் அந்த உடம்பில் உட்புகலாம். உடல் முதல் பிரபஞ்சம் வரை உள்ள எல்லாமே ஆத்மவிற்கு வேறாக உள்ளவை என உணர்வதால் மற்றொரு மனத்தை வசப்படுத்தி ஸம்யமம் மூலம் அடக்கி சித்தி பெற்று அந்த உடலில் உள்புகலாம். பரகாய சித்தி= பர-வேறு+காயம்-உடல். பிரபஞ்சம் முழுவதும் மனமும் ஆத்மாவும் பரந்து விரிந்த பொருள்கள். எங்கும் பரந்துள்ள மனத்தின் ஒரு பகுதி. தற்பொழுது இந்த உடலில் நரம்புகள் மூலம் செயல் புரியலாம். அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டால் மற்ற உடலில் உள்ள நரம்புகள் வழி செயல் புரிய முடியும்.

3-40 உதான ஜயாஜ் ஜலபங்க கண்டகா திஷ்வஸங்க உத்க்ராந்திஸ்ச.

நுரையீரலையும் உடலின் மேல்பகுதியையும் இயங்கவைக்கும் நாடியாகிய உதானனை வசப்படுத்தி வென்றால் உடல் மென்மைத் தன்மையாகி நீரிலோ, புதை சேற்றிலோ மூழ்காமலும், முள்ளின்மீது நடக்கவும், விரும்பும்போது மரணமடையும் சித்திகள் கிட்டும்.

3-41 ஸமான ஜயாத் ப்ரஜ்ஜவலனம்.

ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்ற பஞ்ச பிராணன்களையும் மனத்தால் உணர்ந்து தூய்மை செய்வதாகத் தியானம் செய்து பின் சமானன் வாயுவையும் அது செல்லும் நாடியையும் தியானித்து ஸம்யமம் செய்தால் அவரை ஒரு ஜோதி எப்போதும் சூழ்ந்தபடி இருக்கும். உடலின் உள்ளிருக்கும் ஒளி வெளியில் கொணர முடியும்.

3-42 ச்ரோத்ராகாசயோ ஸம்பந்த ஸம்யமாத் திவ்யம் ச்ரோத்ரம்.

செவிப் புலனையும் ஆகாசத்தையும் இனைத்து ஸம்யமம் செய்வதால் தெய்வீகமான ஒலிகளைக் கேட்கும் சக்தி கிடைக்கும். காதினால் கேட்கக் கூடிய ஒலியையும், கேட்கமுடியாத பெரியதான, நுண்ணிய ஒலிகளையும்கூட உணரலாம். ஆகாசம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளதால் எந்த இடத்தின் ஒலியையும் கேட்கலாம்.

3-43 காயகாசயோ ஸம்பந்த ஸம்யமால்லகுதூல ஸமாபத்தேஸ் சாகாச கமனம்.

உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஆகாசம் உள்ளதாலும் ஆகாசமாகிய ஓசையால் எல்லாப் பொருள்களும் உடல், காற்று, தீ, நீர், நிலம் தோன்றியதாலும், ஆகாசத்தால் ஆன இந்த உடலையும் ஆகாசத்தையும் ஸம்யமம் செய்யும்போது பஞ்சைப்போன்ற லகுவாணத் தன்மை உடலில் உண்டாகி வானில் சஞ்சரிக்கும் சித்தி கிடைக்கும்.
பஞ்ச பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் பிரியும்போது ஒவ்வொன்றிலும் பஞ்ச பூதங்கள் இருப்பதை பஞ்சீகரணம் என்பர். ஒவ்வொரு பூதமும் பாதியாக முதலில் பிரிந்து மறுபாதி நான்கு அரைக்கால் பகுதிகளாக மாறும்.
ஆகாயம் -1/2 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம்

காற்று -1/2 காற்று +1/8 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம்

நெருப்பு -1/2 நெருப்பு +1/8 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம்+1/8 காற்று

நீர் -1/2 நீர் +1/8 நிலம் +1/8 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு

நிலம் -1/2 நிலம் +1/8 ஆகாசம் +1/8 காற்று +1/8 நெருப்பு+1/8 நீர்

இவ்வாறு ஒவ்வொரு பூதத்தின் சுயப்பகுதி அரையும் மற்ற நான்கு பூதங்களின் மொத்தம் அரையுமாகி முழுப்பூதமாவது பஞ்சீகரணம் ஆகும்.

3-44 பஹிரகல்பிதா வ்ருத்திர் மஹாவிதேஹாதத ப்ரகாசாவரண க்ஷய.

தன் உடம்பில் இல்லாமல் வேறு ஒருவர் உடம்பில் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றையும் வியக்குமாறு பரப்பும்போது அந்த நிலை கற்பனையாக இல்லாமல் உண்மையாக இருந்தால் அந்த விருத்திக்குப் பெயர் மகாவிதேகம். தன் உடம்பை விட்டு விட்டதால் விதேகம் எனவும், பிற உடலில் பரவியதால் மகாவிதேகம் எனவும் கூறலாம். அந்த மகாவிதேகம் மீது ஸம்யமம் செய்தால் ஆத்மப் பிரகாசத்தை மறைக்கும் மறைப்பு நீங்கும். இருளும் அறியாமையும் மறைந்துவிடும். மூலப் பிரகிருதியிலிருந்துதான் உலகியல் தத்துவங்கள் மலர்ந்துள்ளது. அதில் உள்ளவையே மனம், புத்தி, அகங்காரம் மூன்றும். அவை பிரபஞ்சம் எங்கும் விரியக்கூடியவை. புத்தியற்ற உடம்பில் புத்தியையும், மனம் உறுதியற்ற ஓர் உடலில் மனத்தையும், எதற்கும் முன்வராத உடலில் அகங்காரத்தையும் பரவச்செய்யலாம். அது நலம் பயக்கும்.

3-45 ஸ்தூல ஸ்வரூப ஸூக்ஷ்மான் வயார்த்தவத்வ ஸம்யமாதபூதஜய.

ஐம்பூதங்களையும் வெற்றி கொள்ள பருவடிவான- தூலம், உண்மை வடிவான – சொரூபம், நுண்ணிய வடிவமான –சூக்குமம், அன்வயமான- விசேஷவயம், ஒரு பகுதி வடிவமான- அர்த்தவத்வம் ஆகிய ஐந்து நிலைகளை ஸம்யமம் செய்ய வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் ஆகிய ஐந்து பூதங்களில் ஒரு பகுதியை மனத்தில் கொண்டு அதன் முழு பரப்பையும், அதன் உண்மை கலப்பு வடிவத்தையும், அதன் சூக்கும வடிவமான தன் மாத்திரையையும், அதன் சிறப்பையும், அதன் ஒரு பகுதியையும் எனத் தனித்தனியே ஸம்யமம் செய்தால் பஞ்ச பூதங்களை வெற்றி கொள்ளலாம். களிமண் கட்டி மீது சம்சயம் செய்து அது எந்த நுண்பொருளால் ஆனது ஆனது எனக்கண்டு அதன் மீது  வல்லமை அடைகின்றனர். அதுபோன்றே எல்லா பூதங்களையும் வென்று அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தலாம்.

3-46 ததோ  அணிமா திப்ராதுர்பாவ காய ஸம்பத்த த்தர்மானபிகாதஸ்ச.

பஞ்ச பூதங்களை வெற்றி கொள்வதால் அணிமாதி அட்டமாசித்திகளும், உடல் வளமும், உடலின் குணங்களும் அவை அழியாமல் இருப்பதும் நடக்கும்.

அட்டமா சித்திகள் எனப்படுவது-

அணிமா -தன் உடலை அணு அளவு செய்து கொள்வது
மகிமா -தன் உடலை மிகப் பெரிய உடலாக்குதல்
கரிமா -கட்டுப்படாததும், கட்டுப்படுத்துவதை மீறிக் கொள்வதுமாதல்
லகிமா -பஞ்சுபோல் இலேசான உடல் ஆகுதல்
பிராப்தி -நினைத்ததை அடைதல்
பிராகாம்யம் -நிறைவுள்ளவனாகுதல்
ஈசத்துவம் -கடவுள் செய்யும் ஆட்சிச் செய்கைகளைச் செய்தல்
வசித்துவம் -அனைவரையும் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக்கொள்ளுதல்.

3-47 ரூப லாவண்ய பல வஜ்ரஸம்ஹனனத்வானி காயாஸம்பத்.

வாழ்விற்கு பல வழியில் பயன்படும் உடல் வெற்றி எனப்படும் காயசித்தி என்பது உருவம், நிறம், வலிமை, வஜ்ரம் ஆகியன கொண்ட உடல் வளமாகும்.காலமெனும் தடியை ஒடித்து எறிந்துவிட்டு பிரபஞ்சத்தில் தனது உடலோடு வாழ்வான்.

3-48 க்ரஹண ஸ்வரூபா ஸ்மிதான் வயரர்த்தவத்வ ஸம்யமாதி ந்த ரயஜய.

இந்திரியங்கள் ஒன்றிப் பொருந்தி இருத்தல், அதனால் வரும் அனுபவம், அந்த அனுபவத்தால் அகங்காரம், அதனால் முக்குணங்கள் எனப்படும் சத்துவ, ராஜஸ, தாமஸ குணங்கள் எழுந்து, அவைகளால் ஜீவாத்மாவிற்கு ஏற்படும் அனுபவம் ஆகியவற்றின் மீது ஸம்யமம் செய்தால் இந்திரியங்களை வெல்லலாம். புறப்பொருள்களைக் காணும்போது புலன்கள் மனத்தில் தமக்குரிய இடத்திலிருந்து புறப்பட்டு அதை நாடும். அந்தனால் அந்த அறிவு உண்டாகும். அகங்கார உணர்வும் அச்செயலில் உள்ளது, இவற்றின் மீது சம்சயம் செய்தால் புலன்களை வெல்வான்.  ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது மனதை ஒருமுகப்படுத்துங்கள். பின் புத்தக வடிவின் இருக்கும் அறிவின் மீதும், பிறகு புத்தகத்தை காண்கிற அகங்கார உணர்வின் மீதும் படிப்படியாக சம்சயம் செய்தால் அனைத்தையும் வெல்ல முடியும்.
3-49 ததோ மனோஜ வித்வம் விகரணபாவ ப்ரதான ஜயஸ்ச.

இந்திரியங்களை வெற்றி கொள்வதால் உடலுக்கு மனோவேகம் உண்டாகி உடலோடு தொடர்பு படாத இந்திரியங்களுக்குத் தனிச் சக்தியும் மூலப்பிரகிருதி ஆகிய முதல் தத்துவப் பிரிவின் வெற்றியும் கிடைக்கும். இந்திரியங்கள் பஞ்ச பூதங்களின் பகுதியேயாகும்.உடலுக்கு மனத்தின் வேகத்துதோடு இயங்கக்கூடிய ஆற்றலும் உடலின்று தனித்து நின்று புலன்கள் செயல்புரியக் கூடிய ஆற்றலும் இயற்கையை வெல்கின்ற ஆற்றலும் உண்டாகும்.

3-50 ஸத்வ புருஷான்யதாக்யாதி மாத்ரஸம்ய ஸர்வ பாவாதிஷ்டாத்ருத்வம் ஸர்வஞா த்ருத்வஞ்ச.

ஜீவாத்மா என்ற புருஷனுக்கும், மூலப்பிரகிருதி என்ற புத்திக்கும்(சத்துவம்) இடையேயுள்ள வேறுபாட்டை உணர்ந்து அதன்மீது ஸம்யமம் செய்வது பேராற்றலையும் பேரறிவையும் தரும். உடலுக்கும் வாழ்விற்கும் உரிய தத்துவங்கள் மூலப் பிரகிருதியில்தான் உண்டாகும். இயற்கையை வென்ற பிறகு புருஷனுக்கும் பிரகிருதிக்கும் உள்ல வேற்றுமை அறியப்படும். புருஷன் அழிவற்றவன். தூய்மையானவன். பூரணன். என காண்பதால் யோகி எல்லா அறிவையும் பெறுவான்.

3-51 தத் வைராக்யாதபி தோஷ பீஜக்ஷயே கைவல்யம்.

மேலே சொன்ன சித்திகளை அடைந்த பிறகு அவைகளை வைத்து வாழவேண்டும் என்ற நினைவே இல்லாமல் இருக்கும் வைராக்யம் கொண்டால் கேடுகள் அழிந்து, புருஷனுக்கு, எந்த ஆதாரமும் தன் ஆத்மாவிற்குத் தேவையில்லை என்ற முக்தி நிலையாகிய கைவல்யம் கிடைக்கும். சித்திகளை விட்டு விட்டால் தீமைக்கு காராணமாக இருக்கும் வித்துக்கள் அழிபடுவதால் கைவல்யம் கிட்டும். எல்லா ஆற்றல்களையும் எல்லா அறிவையும் பெற்றவன் எனும் எண்ணத்தை விட்டுவிடும்போது புலன்களால் பெறும் இன்பத்தையும் தேவர்களால் காட்டப்படும் இன்பங்களையும் ஒதுக்குபவனே குறிக்கோளை அடைகிறான். சித்திகளால் ஒருவன் தான் மிகுந்த சக்தியுடையவன் என நினைத்தானானால் அகங்காரம் அதிகமாகி மாயையின் விளைவால் முக்திக்குரிய தகுதியை இழக்கின்றான். ஜீவன் முக்தன் ஆவதாம்—தனக்கு உடலும் மிகை என்று கருதி ஆத்மாவுடன் எப்போதும் தொடர்பு கொண்ட நிலையாகும்.

3-52 ஸ்தான்யுபநிமந்த்ரணே ஸங்கஸ்மயா கரணம் பூனரநிஷ்ட ப்ரஸங்காத்.

முக்தியடையும் தகுதிகொண்டவர்களைத் தடை செய்வதன் மூலம் அவர்களின் உறுதியைச் சோதனை செய்வது தேவர்களின் வழக்கமாவதால் தேவதைகளை மயக்குவதற்கு ஆளாகி ஆசையும் கர்வமும் மிகுந்தால் அவனுக்கு மிகுந்த துன்பமாகும். தேவர்களுடைய ஆசை வார்த்தைகளால் மகிழ்வும் கர்வமும் அடைந்து அவர்களுக்கு வசப்பட்டால் மீண்டும் சம்சார பந்தமான தீமைவரும் என்ற அச்சம் இருக்க வேண்டும். யாரேனும் முக்தி பெறுவதை தேவர்கள் விரும்புவதில்லை. 

3-53 க்ஷண தத்கரமயோ ஸம்யாமாத்விவேகஜம் ஞானம்.

ஒருக் கணப் பொழுதையும் அதன் முன்னும் பின்னும் உள்ள காலத்தையும் ஸம்யமம் செய்தால் நன்மை தீமைகளை ஆய்ந்து நன்மையை நாடும் விவேகம் முதலில் உண்டாகிபின் அதுஞானமாக மலரும்.  சுவர்க்க இன்பத்தையும் தேவர்களையும் சித்திகளையும் ந்ல்லது எது கெட்டது எது என்ற விவேகத்தால் தள்ளிவிடமுடியும். அதைப் பெறுவதற்கு காலத்தை சம்சயம் செய்யவேண்டும்.                                             3-54 ஜாதி லக்ஷணதே சைரந்யதானவச் சேதாத் துல்யயோஸ்ததப்ரதி பத்தி.

ஜாதிவகைகள், லட்சணம், இடம் ஆகியவைகளைக் கொண்டு இதற்கு முன் பாகுபடுத்தி உணர முடியாதவைகளையும் மேலே சொன்ன ஸம்யமத்தால் உணரலாம். துயரத்திற்கு காரணம் நிலையான் பொருளையும் நிலையற்ற பொருளையும் விவேகத்தால் வேறுபடுத்தி அறிய முடியாத அறியாமையே. தீமையை நன்மையாகவும் கனவை ஊண்மையாகவும் கருதுகிறோம். ஆன்மா ஒன்றே உண்மையானது. உடல் பொய்யானது. விவேகம் உதித்தால் அந்த வலிமையால் உடல், சுவர்க்க லோகம், தேவர் இவற்றை ஒதுக்க முடிகிறது. உடலும் மனமும் சேர்க்கைப் பொருள் என்றாலும் அதை ஒன்றுபடுத்துகிறோம். விவேகம் பெறும்போது உலகுடனும் மனத்துடனும் சம்பந்தப்பட்ட பொருள்கள் அனைத்தும் கூட்டுப்பொருள்களே என அறிய முடியும்.

3-55 தாரகம் ஸர்வவிஷயம் ஸர்வதா விஷயமக்ரமம் சேதி விவேகஜம் ஞானம்.

எல்லாப் பொருள்களையும் அவைகளின் கூறுபாடுகளையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ளும் அறிவிலிருந்து உண்டாகும் ஞானமே பிறவி இல்லாமல் செய்வதாகும். அது கரையேற்றும் ஞானமாகும். பிறப்பும், இறப்பும் மாறி மாறி வரும் ஒரு தொடர் நிகழ்வாதலால் அதற்கு தீர்வு முக்தியே ஆகும். மூலப்பிரகிருதியிலிருந்து உடல் தத்துவங்களையும் பிரபஞ்சமாக விரியும் தத்துவங்களையும் ஸம்யமம் செய்தால் ஞானம் ஏற்படும்.

3-56 ஸத்வ புருஷ்யோ சுத்தி ஸாம்யே கைவல்யமிதி.

புருஷனும் புத்தியும் ஒரே நேரத்தில் சுத்தியாகும்படி செய்யப்படும் ஸம்யமமே கைவல்யத்தை தரும். பிரபஞ்சமுழுவதையும் அறிந்தபின் பிரபஞ்சதிலுள்ள எல்லாப்பொருளோடும் ஜீவாத்மா தொடர்பு கொள்வதில்லை. எவற்றோடும் கூட்டாக இருக்காது. அந்த உணர்வே கைவல்ய நிலையை உருவாக்கும்.  தேவர்கள் முதல் அணுவரை எப்பொருளையும் ஆன்மா சார்ந்தது அன்று. என்பதை அனுபவத்தால் அறியும்போது அது நிறைநிலையாகிய தனித்திருத்தல் என்ற கைவல்ய நிலையாகும். புருஷன் எவ்வளவு புனிதமானவனோ தூய்மையும் அழுக்கும் கலந்த சத்துவத்தை(புத்தி) அதைப் போன்று சுத்தமாகுகும்போது கைவல்யம் கிட்டும். குணம் அற்ற பரிசுத்தமான சாரத்தை சத்துவம்(புத்தி) பிரதிபலிக்கும். அதுவே புருஷன்.                                                                                     ******                                                                                                                                                                                                                                                                                                                             

புதன்கிழமை, 20 February 2013 00:00

கைவல்யபாதம்

4.கைவல்ய பாதம் 
4-1 ஜன் மௌஷதி மந்த்ர தப ஸமாதிஜா ஸித்தய.

ஜன்மம், ஔடதம், மந்திரம், தவம், சமாதி ஆகியவைகளால் சித்திகள் உண்டாகும்.

4-2 ஜாத்யந்தர பரிணாம ப்ரக்ருத்யா பூராத்.

மூலப் பிரகிருதியில் சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள் பின்னிக் கிடக்கின்றன். இவைகளின் விகிதக் கலப்பால் பல ஆயிரம் பொருள்களை உருவாக்கலாம். பிரகிருதியை நிறைவு செய்யும்போது ஒன்று மற்றொரு ஜாதியாக பரிணாமம் கொள்ளும். சத்துவம் 100 பகுதி என்றும், ராஜஸம் 100 பகுதி என்றும், தாமஸம் 100 பகுதி என்றும் வைத்துக்கொண்டால் 50:60:70 என ஒரு பொருளும் 60:70:80 என வேறு ஒரு பொருளும் இப்படி பலப்பல ஜாதிகள் உண்டாக்கலாம்.

4-3 நிமித்தம ப்ரயோஜகம் ப்ரக்ருதீனாம் வரணபேதஸ்து தத க்ஷேத்ரிகவத்.

பிரகிருதியின் பரிணாமத்திற்கு தடையாக உள்ளவைகளை நல்வினையும் தீவினைகளும் நீக்குகின்றன. கதவைத் திறக்க மட்டும் முயற்சி செய்தால் வெளிக்காற்று உள்ளே வருகிறது. பரந்து கிடக்கும் பரிபூரணநிலையே பரிணாமம் ஆகிறது. உயிர்களின் உள் புதைந்து கிடக்கும் பராசக்தியின் நிலைகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளும் முயற்சியே உயிர்களின் வாழ்க்கையாகும்.

4-4 நிர்மாணசித்தான்யஸ்மி தாமாத்ராத்.

தன்னுடைய அகங்காரத்தில் உள்ள வேறு பல சித்தங்களை ஒருவனால் உருவாக்க முடியும் அது நிர்மாண சித்தமாகும். முந்திய பிறவி வினைகளை ஆத்மா வேறு ஒரு பிறவி உடம்பின் மூலம் அனுபவிக்கின்றது. அப்பிறவியிலே எல்லா வினைகளையும் அனுபவித்து விடுதல் சிறப்பு. மீதி இருக்கும் வினைகள் அடுத்த பிறவியில் வேறு உடல் மூலம் அனுபவிப்பதற்குப் பதில் இப்பிறவியிலேயே வேறு உடல்கள் எடுத்து அனுபவிக்கலாம். நம் உடலும் ஆன்மாவும் பிரியாமல் பல உடல்களை எடுத்து வினைகளை நீக்கலாம். பல சித்தங்கள் பிறவியில் உண்டாகுமானால் பல உடல்களும் உண்டாவது உறுதி. நம் உடம்பில் ஜீவாத்மாவுடன் இருந்து கொண்டே நம் மனம் புத்தி அகங்காரங்களை விரிவு செய்து வேறு பொருள்களில் நுழைவது பல சித்தங்களையும் உடல்களையும் உருவாக்கும் முயற்சியாகும். வேறுப் பல பிறவிகளில் தீரும் வினைகள் இப்பிறவியிலே தீரும். மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் மூலப் பிரகிருதியிலிருந்து பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. அதன் சிறு பகுதிகள்தான் உடம்பு. அவை ஓர் உடல்விட்டு வேறு உடலினுள் நுழைந்தால் அது பழைய வினைகளோடுதான் இருக்கும்.  4-5 ப்ரவ்ருத்தி பேதே ப்ரயோஜகம் சித்தமேக மனேகேஷாம்.

நிர்மாண சித்தங்கள் வேறு வேறாக வினைகளால் நடக்கின்றன என்றாலும் அவனின் மூலமனமே எல்லாச் சித்தங்களையும் ஆட்சி செய்யும்.

4-6 தத்ர த்யான ஜமனாச்யம்.

ஒருவனால் உருவாக்கப்பட்ட வேறு வேறான சித்தங்களுள் தியானத்தால் உருவாகிய சித்தத்திற்கு மட்டும் பழைய வினை தொடர்பு இருக்காது. ஆசைகளின் விரிவினால் மனிதரின் சித்தம் பலவகைகளில் வேறுபடும். சமாதி நிலைக்குப் போனவரின் சித்தம் ஆசைகள் வற்றி தூய்மையானதாகும்.

4-7 கர்மசு க்லாக்ருஷ்ணம் யோகி னஸ்த்ரிவித மிதரேஷாம்.

யோகியின் அகக் கண்களுக்கு தன் கர்மங்கள் மற்றவர்களைப்போல் தீவினைகள் கருப்பாகவோ, நல்வினைகள் வெள்ளையாகவோ தெரியாது.

4-8 தத ஸ்தத விபாகானு குணானமேவாபி வ்யக்திர் வாஸனானாம்.

பாவம், புண்ணியம் இரண்டும் கலந்த மூன்று கர்மங்களில் எது அந்த நிலைக்கு உரியதோ அது முன்னால் வந்து சேரும். மற்றவை பின்னால் போகும். புலி பாயும், மனிதன் நடப்பான் என்பதில் ஒவ்வோர் உடம்பிலும் அதற்குரிய கருமங்கள் முன்வரும்.

4-9 ஜாதி தேச கால வ்யவஹிதானாம ப்யாநந்தர்யம் ஸ்ம்ருதி ஸம்ஸ்காரயோ ரேக ரூப வாத்.

ஞாபகமும் ஸம்ஸ்காரம் என்கிற பிறவி வாசனையும் அழியாதிருப்பதால் பிறவி, இடம், காலம் ஆகியவைகளால் பாகுபடுத்தப்பட்ட பின்னும் ஆசையிடையே மாறாத தொடர்பு வரும். ஒன்றைத் தெரிந்து கொள்வது பின் அதைச் செய்வது அனுபவம். அது பல பிறவிகளிலும் தொடரும். ஞாபக சக்தியால் நுண்ணிய அனுபவங்கள் தேவைப்படும்போது மீண்டும் நினைவிற்கு வரும். மனம், ஞாபகம், நினைவு ஆகியவை சக்தி வடிவங்களாதலால் பிரபஞ்சம் முழுவதும் பரவும். பிறவி தோறும் பின் தொடரும்.

4-10 தாஸாமனாதி த்வம் சாஆசிஷோ நித்யத் வாத்.

எல்லா உயிர்களுக்கும் இன்பம் பெறும் விருப்பம் உண்டாவது அநாதி ஆவதால் ஆசைகளும் அநாதியாகும். அநாதி என்பது தனித்தன்மையுடையது. தோன்றிய காலம் தெரிய முடியாதது. விருப்பம் தோன்றும் இச்சா சக்தி, விருப்பத்தை செயல் படுத்தும் கிரியா சக்தி, அதை அறிவாக அனுபவமாகத் தொகுக்கும் ஞானசக்தி ஆகிய மூன்றும் அநாதியானவை. பிரபஞ்சம் முழுவதும் இவற்றைப் பரப்புவதும், பிறவிதோறும் ஆன்மாக்களை இவை தொடருவதும் ஞானத்தின் பணி. எல்லா உயிர்களுக்கும் இச்சக்திகள் செயல்பட்டு அனுபவமாக நினைவில் இருக்கும்.

4-11 ஹேது பலாச்ரயாலம்பனை ஸம்க்ருஹீதத்வாதே ஷாமபாவே தத்பாவ.

காரணம், விளைவு, இருப்பிடம், இன்பம் தரும் பொருள் ஆகியன ஒன்றாக கூடும்போது இன்பம் உண்டாகும். ஒரு பொருள் தின்ற அனுபவம் காரணமாக ஆசை நிலைப்படுதுகிறது. அதனால் அதைத் தேடி கடைக்குச் செல்வோம். அது உற்பத்தியாகும் இடம் வந்ததும் அந்த நினைவு வரும். அதை கண்ணால் பார்த்தபோதும் ஆசை உண்டாகும். எனவே இந்த நான்கும் சேர்ந்தால் இன்பம்.

4-12 அதீதானாகதம் ஸ்வரூபதோஅஸ் த்யத்வ பேதாத் தர்மாணாம்.

பொருளின் இறந்தகால எதிர்கால நிலைகள் அவற்றின் இயல்புகளில் மறைந்து இருப்பதால் அந்த இயல்புகள் வேறுபட்டிருக்கும். நிகழ்காலம் தோற்றத்தில் இருந்தாலும் அதன் இறந்தகால எதிர்கால நிலைகள் அழியாமல் சூக்கும நிலையில் இருக்கும். தேவையானபோது அவை வெளிப்படுகின்றன. இது தர்மம் எனப்படும்.

4-13 தே வ்யக்த ஸூக்ஷ்மா குணாத்மான.

பொருள்களில் முக்குணங்களால் காணப்படும் இந்த இயல்புகள் தூல பருவடிவமாகத் தோன்றியும் சூக்குமமாகத் தோன்றாமலும் இருக்கும். பிரபஞ்சமே அக்குணங்களின் தோற்றமாகும். அதன் வகைகளைக் கொண்டு இறந்தகாலம், எதிர்காலம் எனச் சொல்லலாம்.

4-14 பரிணாமைகத்வாத் வஸ்து தத்வம்.

குணங்கள் துணை செய்வதால் பரிணாமத்தின் ஒற்றுமையே பொருள்களிலும் உள்ளது. ஒன்றின் வளர்ச்சியே மற்றதாக இருப்பதால் எல்லாப் பொருள்களிலும் காணலாம்.

4-15 வாஸ்து ஸாம்யே சித்த பேதாத்தயோர்விபக்த பந்தா.

பொருளைக் காண்பதிலும் அதைப் பற்றி ஆசை கொள்வதிலும் வேறுபாடுகள் உள்ளதால் மனமும் காணும் பொருளும் வேறு வேறு என்பது புரியும்.

4-16 ந சைகவித்த தந்த்ரம் வஸ்து தத ப்ரமாணகம் ததா கிம்ஸ்யாத்.

நம் மனத்தைச் சாரத வெளியில் உள்ள பொருள்களை மனம் உணர்த்தாத போது அப்பொருள் இருப்பதே நமக்குத் தெரியாமல் போகும். நம்மிடம் அசையாமல் இருக்கும் பொருள் ஆத்மாவே என்பதை உணர்ந்தால் ஆத்ம தத்துவங்கள் அசைவதைக் காணலாம். ஓடுவதை உணர ஒடாத ஒன்று கருவியாக செயல்படும். ஓடும் மேகத்தை காண்பதற்கு ஓடாத சூரிய சந்திரனும், ஒடும் ரயிலின் வேகம் புரிய அசையாத பாலம், மரம் முதலியனவே கருவிகளாகும்.

4-17 தது பராகா பேட்சித்வாத் சித்தஸ்யவஸ்து ஞாதா ஞாதம்.

மனதின் உணர்சிகளைப் பொறுத்து பொருள் அறியப்பட்டதாயும், அறியப்படாததாயும் இருக்கும். பொருளின் தொடர்பு கிடைத்தால்தான் மனம் ஒரு பொருளை அறிய முடியும். அதனால் அதுபற்றிய விஷயங்கள் தெரிந்தவை என்றும் தெரியாதவை என்றும் சொல்லலாம். உணர்வு கொள்வதற்கு முன்பே பொருள் இருப்பதால் மனம் அதை உருவாக்குவதில்லை. மனத்தால் உணராதபோதும் அந்தப் பொருள் இருக்கின்றது.

4-18 ஸதாஜ்ஞாதாச் சித்த வ்ருத்தயஸ்தத் ப்ரபோ புருஷஸ்யா பரிணாமித்வாத்.

மனதின் ஆத்மா மாறுபாடு இல்லாதாதாய் இருப்பதால் மன அலைகள் எப்போதும் அறியப்பட்டனவாய் உள்ளது. ஆத்மாவின் கருவியாகிய மனம் ஞானி அல்ல வருவதை உரைக்க. மனதின் புரிந்து கொள்ளும் தன்மை அலைகளுக்கு எற்ப வேறுபட்டு மாறிக்கொண்டே இருக்கும். ஆத்மா மாறாதிருப்பவன். புரிந்து கொள்ளும் திறனை அளவிட விதிமுறை வைத்திருப்பவன். அசையாப் பொருள்களைக் கொண்டு அசையும் பொருள்களின் வேகம் அறியப்படுவதுபோல் ஆத்மா வைத்திருக்கும் அளவீடு முறையும் இருக்கும்.

4-19 ந தத்ஸ்வாபோஸம் த்ருசயத்வாத்.

சைத்ன்யமாகிய சுயம்பிரகாசம் உள்ள ஆத்மாவின் துணையால் மனம் முதலிய ஜடப்பொருள்கள் விளங்குவதால் மனம் சுயம்பிரகாசம் இல்லாதது ஆகும்.

4-20 ஏக ஸ்மயே சோபயானவதோ ரணம்.

சுயம்பிரகாசம் என்பது தன்னையும் தன்னால் காட்டப்படும் பொருளையும் விளக்குவதாகும், அவ்வாறில்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு வேறுபட்ட பொருள்களை உணரும் தன்மை மனத்திற்கு இல்லாததால் அது சுயம் பிரகாசம் இல்லாதது ஆகும். சூரியனின் வடிவமும் தெரிந்து அதன் ஒளியில் உலகப் பொருள்களும் தெரிவதால் சூரியன் சுயம்பிரகாசமாகும். ஆத்மா தன்னையும் உணர்த்தி பிறபொருள்களையும் உணர்த்திடுவதை உணராமல், கண்ணாலும், மனத்தாலும் உணர்வதாய் தவறாக எண்ணுவது மாயை. வெளிப்பொருளை ஆத்ம உடன்பாட்டால் மனம் காட்டும். ஆனால் மனத்தை மனமே உணரமுடியாது.

4-21 சித்தாந்தர த்ருச்யே புத்திர் புத்தேரதி ப்ரஸங்க. ஸ்ம்ருதி ஸங்கரஸ்ச.

சித்தத்தை அறிய வேறு ஒன்று இருப்பதாக எண்ணினால், பின் அதை அறிய ஒன்று, அதன்பின் மற்றதை அறிய வேறொன்று என்று சித்தங்கள் தோன்றினால் குழப்பம்தான் மிகும். ஞாபகசக்தி குறையும். எனவே பல சித்தங்கள் நம்மில் இல்லை.

4-22 சித்தே ப்ரதிஸம் க்ரமாயாஸ் ததா காராபத்தௌ ஸ்வபுத்தி ஸம்வேதனம்.

ஆத்மா பரிணாமம் படாத சித்த வடிவமாகும். ஆத்மாவின் தன்மையை சித்தம் கிரகித்து ஞானமடைகிறது

4-23 த்ருஷ்ட்ரு த்ருச்யோ பரக்தம் சித்தம் ஸர்வார்த்தம்.

காண்போனாகிய புருஷனோடு காணப்படும் பொருள்களோடும் சித்தம் பொருந்துவதால் எல்லவற்றையும் அறியும் தன்மை சித்தத்திற்கு ஏற்படும். ஆத்மாவாகிய கண்ணில் போடும் சித்தம் எனும் கண்ணாடியால் பொருள்கள் காணப்படுகின்றன. ஆத்மாவின் சைதன்யம்- அறிவாகிய ஒளி பட்டதும் சித்தம் அறிவுடையதாகி எல்லப் பொருள்களையும் அறிந்து ஆத்மாவிற்கு சொல்லும். ஆனால் நாம் மனம் எனும் சித்தமே எல்லாம் அறிகிறது என்ற மாயையில் இருகின்றோம்.                                                         4-24 தத ஸங்க யோயவாஸனா பிஸ்சித்ரமபி பரார்த்தம் ஸம்ஹத்ய காரித்வாத்.

முன்பிறவி வினைகளால் மனம் பிரிந்து இருந்தாலும் ஆத்மாவின் அருகில் இருந்து இன்பத்திற்கு பணி செய்யும். பணியாளர்களுக்கு பலவித எண்ணங்களிருந்தாலும் கண்காணிப்பாளரிடம் பணிந்து நடப்பது போல் ஆத்மாவிற்குப் பணிந்து இந்திரியங்கள் நடக்கின்றன.

4-25 விசேஷ தர்சின ஆத்மபாவ பாவனா நிவ்ருத்தி.

ஆத்மா தன்னைத்தானே விளங்கச் செய்யும் சுயம்பிரகாசம் உடையதால் விவேகத்தைக் கொண்டு ஆத்மாவையும், ஆத்மா மூலம் இந்திரியங்களையும் அறிவதால் ஆராயும் அறிவுடையார்க்கு சித்தம் வேறு, ஆத்மா வேறு என்பது புரியும்.

4-26 ததா விவேக நித்ரம் கைவல்ய ப்ராக பாவம் சித்தம்.

விவேகம் உடையவனுக்கு பிரபஞ்சம் முழுவதும் அனுபவிப்பதற்காகவே ஆன்மாவுக்கு உடல் முதலிய தத்துவங்கள் உள்ளன என்ற உண்மை புரிந்ததும் இதுகாறும் கண்ட உலகம் மாயயை என்பதும் புரியும். விவேகத்தோடு சேர்ந்த சித்தமாகிய மனத்திற்கு கைவல்யம் வந்து சேரும். ஆத்மாவைத்தவிர மற்றயாவையும் பொய்யானவை நிலையற்றவை என்று தோன்றினால் கைவல்ய நிலை உண்டாகும்.

4-27 தச்சித் ரோஷு ப்ரத்யயாந்த்ராணி ஸம்ஸ்கா ரேப்ய.

கைவல்யத்திற்கு தடையாக வரும் எண்ணங்கள் இவ்வுலக இன்பங்களில் அழுத்தி அந்த அனுபவங்கள் சூக்கும வடிவில் நம்முடன் படிந்திருக்கும் ஸம்ஸ்காரத்திலிருந்து வந்தவையாகும். வண்டி ஓட்டுபவன் உறங்கினாலும் பழகிய மாடு அனுபவத்தில் பழைய வழியில் போய் சேரவேண்டிய இடம் நிற்கும், அது போன்றே சித்தங்கள் உலக இன்பங்களை சிறந்ததாகக் கருதி அங்கேயே செல்லுவது கைவல்யத்திற்குத் தடையாக அமையும்.

4-28 ஹானமேஷாம் க்லேச வதுக்தம்.

உலக இன்பங்களை அனுபவித்துப் பழகிய சித்தம் அங்கேயே நாட்டம் கொள்வதால் அறியாமையும், அகங்காரமும் மேலும் வளரும். ஸம்ஸ்காரங்களை அதன் காரணங்களில் வெளிப்படுத்தி தியானம் செய்தால் அறியாமையும் அகங்காரமும் அழியும்.

4-29 ப்ரஸங்க்யானேஅப்ய குஸீதஸ்ய ஸர்வதா விவேக க்யாதேர் தர்மேக ஸமாதி

தத்துவங்களைச் சரியாக உணரும்போது அவைகள் தனக்கு யோக மார்க்கத்தில் கிடைக்கும் சித்திகளை துறந்தால் மெய்ஞானம் உண்டாகி தெளிந்த விவேகம் காரணமாக அது தர்மமேக சமாதி யை தரும்.

4-30 ததக் லேச கர்மநிவ்ருத் தி.

தர்மயோக சமாதியால் துன்பமும் கர்மமும் நீங்கும். யோக முயற்சிக்கு தடையில்லை என்பதால் அச்சமும், அதனால் துன்பமும், முன்பிறவி வினையும் அவனைத் தொடராது.

4-31 ததா ஸர்வாவரண மலாபபேதஸ்ய ஞானஸ்யாஅனந்த்யாஜ் ஜ்ஞேயமல்பம்.

ஞானம் மெய்ஞானமாகும்போது ஆத்மாவை மூடியிருக்கும் மறைப்பாகிய ஆவரணம் நீங்குவதால், மலங்களாகிய அழுக்குகளும் நீங்கி மெய்ஞானமானது பிரபஞ்சம் முழுவதும் பரந்து விரிந்த அகண்ட பொருளாகக் காட்சி தரும். உலகப் பொருள்களின் அளவு அப்பொருள்களின் எல்லைவரை பரவி சிறிதாக தெரியும். ஞானவடிவம் ஆத்மாவின் முன்னே பிரபஞ்சம்கூட சிறிய பொருளே ஆகும்.

4-32 தத க்ருதார்த்தானாம் பரிணாமக்ரம ஸ்ப்திர் குணாணாம்.

அந்நிலையில் குணங்களால் உண்டாகும் விளைவுகள் முழுமையடைந்து விடுவதால் அவைகளிலிருந்து பரிணாமங்கள் தோன்றாது. அதாவது கைவல்ய நிலையை அடைந்தபின் பிறப்பும் இறப்பும் இல்லையாதலால் குணங்களின் பயன்களும் தேவையில்லை.

4-33 க்ஷணப்ரதியோகீ பரிணாமாபராந்த நிர் க்ராஹ்ய க்ரம.

க்ஷணம் ஒன்றை ஒன்று தொடர்ந்து வருவதால் அதை இறுதில் உணர முடியும். ஒரு எண்ணச் செயலை நாம் எண்ணிக்கொண்டிருந்தால் அதற்குள் இவ்வளவு காலம் கழிந்துவிட்டது என்பதை சில நேரம் வியக்கின்றோம் அல்லது வருந்துகிறோம். இறந்த கால நினைவு நழுவி விட்ட வியப்பால் நிகழ்காலத்தில் மனம் செல்லவில்லை. எதிர்காலம் என்ன என்பதும் தெரியாது. ஆனால் காலம் முதலிய தத்துவங்கள் சமாதி நிலைக்குப் போன யோகியின் மனத்தில் அழிந்துவிடும்.

4-34 புருஷாரத்த சூன்யானாம் குணானாம் ப்ரதிப்ரஸவ கைவல்யம் ஸ்வரூப ப்ரதி ஷ்டா வா சிதி சக்தேரிதி.

புருஷன் கர்மங்களுக்கு அப்பாலாகவும், குணத்தில் அடங்காதவனாகவும் ஆகும் உயர்ந்த நிலை கைவல்யம் ஆகும். அது அவனின் ஞானவடிவம்.

36 அல்லது 96 என்று கூறப்பட்ட தத்துவங்கள் உயிர் வாழ்வதற்கு துணையாக வந்தவைகளாகும். ஞானேந்திரியங்கள்- மெய், வாய், கண், மூக்கு, செவி , தர்மேந்திரியங்கள்- கால், கை, நாக்கு, நீர்வாய், மலவாய் மற்றும் பிராணன்கள் பத்தும் இந்தத் தத்துவக் கூட்டத்தில் சேர்ந்தவை. இவைகள் நம் வாழ்விற்குப் பயன் தரும் கருவிகள் ஆகும்.                                                                                                                                                           ******

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27080934
All
27080934
Your IP: 13.58.77.98
2024-04-26 01:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg