gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

திங்கட்கிழமை, 03 January 2022 10:00

பாராம்ரி! (தேனி சப்த நிலை)

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஆறாம் பயிற்சி-பாராம்ரி! (தேனி சப்த நிலை)

நற்பயன்கள்- இந்த பயிற்சி சொல்லி அளவிடமுடியா ஓர் பேரானந்தம், சுவர்க்க இன்பத்தை இதயத்தில் ஏற்படுத்தும். உடல் செல்களை குளிர்சி அடையச் செய்து செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். ஆள் காட்டி விரல் புருவத்தின் மேலும், மற்ற விரல்கள் கண்களின் மேலும், கட்டைவிரல் காது துவாரத்தின் மேலும் இருக்க வேண்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், காற்றை உள்ளே இழுக்கவும். ஆண் தேனீ ஏற்படுத்தும் ரீங்காரத்துடன் காற்றை உள்ளே இழுக்க வேண்டும். அப்போது வயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். ஒம் என்பதில் மனதில் ஒ என நினைந்து ம் என்ற ஒலியை மட்டும் வெளியே கேட்கும்படி உச்சரித்தால் வண்டின் ரீங்கார ஓசை கேட்கும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது வயிறும் மார்பும் சுருங்க வேண்டும். வெளியில் வரும் காற்றுடன் தொண்டையில் ஓர் பெண் தேனீ ஏற்படுத்தும் இனிமையான ஹம்மிங் ரீங்காரத்துடன் சப்தம் எழுப்பி அனுப்பவேண்டும்.

முதலில் தினமும் 3/5 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:58

சூரியனுலோமா!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால் வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.


#####

ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!

நற்பயன்கள்: உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித் (சூரிய நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வலது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற ஓங்காரச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம். உணவு சப்பிட்ட உடன் / தொடர்ந்து இருபது நிமிடங்களுக்குச் மேல் செய்யக்கூடாது. இதயக் கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:57

சந்திரனுலோமா!

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!

நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.இடது நாசித் (சந்திர நாடி) துவாரத்தினால் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் இடது நாசி வழியாக வெளியே அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும். அப்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். காற்றை உள்ளே இழுக்கும்போதும், காற்றை வெளியே அனுப்பும்போது ‘ஓம்’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது ஒரு ரித தன்மையுடையதாய் இருக்கவேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும்.பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:55

அணுலோம்-விலோம்!

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!

நற்பயன்கள்: நுரையீரல் சுத்தமாகும். வயிறு தசைகள் சீராகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு இடப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் இடப்புற நாசியை மூடிக்கொண்டு வலப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.

3.பின் இடது புறத்து நாசியை பெருவிரலினால் அடைத்துக் கொண்டு வலப்புற நாசியினால் முடிந்தவரைக் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே தங்கவிடாமல் இடைவெளியில்லாமல் வலப்புற நாசியை மூடிக்கொண்டு இடப்புறத்து நாசிவழியாக காற்றை உள்ளிருந்து வெளியே அனுப்பவும்.

4.உள்ளே காற்றை இழுப்பதற்கும் வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் ஒரே அளவாக இருக்கட்டும். இதை ஒரு நாடி சுத்தி எனக்கணக்கிட்டு குறைந்தது 9 முறை செய்ய ஆரம்பிக்கவும்.

5.சில நாட்களுக்குப்பின் காற்றை உள்ளே, வெளியேவிடும் பயிற்சியின் போது ‘ஓம்’ என்ற உச்சரிப்போடு செய்து பழகவும். இதை தினமும் காலை, நண்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு காலங்களில் செய்து பழகவும். பழக்கத்தில் 25 வரையும் அதற்கு மேலும் செய்யலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:54

கபால்பட்டி!

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை!
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்.
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

#####

இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!

நற்பயன்கள்- கபாலத்தை தூய்மை ஆக்கும். நுரையீரலுக்கு போதிய பிராண சக்தியை தரும். அதிக உடல் எடை கணிசமாக குறையும். எப்போதும் தூக்கம் / தூக்கமின்மை போன்ற தூக்க பிரச்சனைகள் சரியாகும். கிட்னி பிரச்சனைகள், அஜீரணம், தோல் வியாதிகள், இரத்த அழுத்த பிரச்சனைகள், பார்வை கோளாறுகள் நிவர்த்தியாகும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வயிற்றை உள்ளே இழுத்து காற்றை வெளியே தள்ள வேண்டும். மூச்சு வெளியே வரும் போது அடுத்து மூச்சு உள்ளே செல்லும். அந்த இயக்கம் தெரியாதவாறு மூச்சு வெளிவிடுதல் மட்டும் தெரியுமாறு தொடர்ந்து செய்யவும். தோள்பட்டை குலுங்ககூடாது. தலை இடுப்பு ஆடக்கூடாது.

முதலில் தினமும் 120 முறை 1 நிமிடத்தில் செய்ய பழகவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

திங்கட்கிழமை, 03 January 2022 09:52

பஸ்த்ரிகா!

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

#####

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!

நற்பயன்கள்- நுரையீரல்கள், இரத்த நாளங்கள், இருதயம், மூளை, தசைகள் சிறந்து இயங்க உதவுகின்றது. மனதை ஒரு முகப்படுத்தும் தன்மையை அதிகரிக்கும். தலைவலி இரத்த அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும். கைகள் ஞான / சின் முத்திரையில் இருக்கட்டும்.

2.இடது, வலது இருநாசித் துவாரங்களினாலும் மெதுவாக, தளர்வில்லாமல், சப்தம் எழுப்பாமல் காற்றை உள்ளே இழுக்கவும். காற்றை உள்ளே இழுக்கும்போது அடிவயிறும் மார்பும் விரிவடைய வேண்டும்.

3.உள்ளே தங்கவிடாமல் காற்றை மெதுவாக தொடர்ந்து சப்தமில்லாமல் வெளியே இடது, வலது இருநாசித் துவாரங்களிலும் அனுப்பவும். காற்றை வெளியே அனுப்பும்போது அடிவயிறும் மார்பும் சுருங்க வேண்டும்.

4.காற்றை உள்ளே இழுப்பதற்கும், வெளியே அனுப்புவதற்கும் எடுக்கும் நேரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இதில் கும்பகம் இல்லை.

முதலில் தினமும் 9 முறை செய்யவும். பின் எண்ணிக்கையை தேவைப்பட்ட அளவிற்கு அதிகரிக்கலாம்.

#####

சனிக்கிழமை, 01 January 2022 10:57

தியானம்!

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

#####

தியானம்!

ஜபம்! தியானம்! ‘ஓம்’ சிறந்தது!

மனதிற்கு அமைதியையும் ஓய்வையும் தர நமது மகான்களால் உறுவாக்கப்பட்ட பயிற்சி முறையே தியானம்.

தியானம் செய்ய இயலாமல் போகும் உயிர்கள் மனதை ஜபம் செய்வதில் ஈடுபடுத்தவும். ஜபம் செய்யும்போது விருப்பமான இறையின் நாமத்தை சொல்லவும். அப்படி நாபஜபம் செய்து கொண்டே இஷ்ட தெய்வத்தை தியானம் செய்யுங்கள். தொடர்ந்து நாம ஜபம் செய்து கொண்டிருந்தாலே அந்த உயிருக்கு இறைவனின் காட்சி கிடைக்கும். மேலும் நாமஜபம் மனதை ஒருமுகப்படுத்த வல்லது. அப்படி ஒரு முகப்படுத்தி நாமஜபம் செய்வதால் அந்த இறையின் கருணைக் கிட்டும். எனவே தியானம் கைவரவில்லை என்று மனம் தளராமல் காலத்தை வீணாக்காமல் மனதின் ஆழத்திலிருந்து நாபஜபம் செய்து கொண்டிருத்தலே உயிர்க்குச் சிறப்பு.

வாழ்க்கைச் சிக்கல்களைச் சந்திக்கும்போது அதைத் தீர்க்க சுலபமான வழி இறைநாமத்தை மௌனமாக ஜபித்தலே. ஒரு நாளைக்கு தொடர்ந்து மௌனமாக இருபத்தைந்தாயிரம் வரை நாமஜபம் செய்து வந்தால் மனதை கண்டிப்பாக ஓர் நிலையில் நிறுத்த முடியும். திருநாம ஜபங்களைச் செய்து கொண்டிருந்தால் மனதில் உள்ள உலகப் பற்றுகள் அறுந்து ஆன்மீக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

தொடர் நாம ஜபம் அந்த உயிரின் உடம்பிற்குள் குமிழிகள் போல் ஆண்மீக உணர்வுகள் கிளம்புவதை அந்த உயிர் உணரமுடியும். கடுமையான முயற்சியாக சோம்பேறித்தனத்தை கைவிட்டு குறிப்பிட்ட நேரங்களில் நாமஜபம் செய்து தியானத்தில் ஈடுபட பயிற்சிக்க வேண்டும். மனம் வேறு ஓரிடத்தில் இருக்க எத்தனை ஆயிரம் நாமஜபம் செய்தும் பயனில்லை. ஜபம் செய்யும்போது மனமும் அதில் லயிக்க வேண்டும்.

ஒரு விளக்கின் சுடற் எரியும்போது அதுவாக அசைவதில்லை. சூழ்ந்துள்ள காற்றுதான் சுடரை அசையச் செய்கின்றது. அதுபோல மனம் நீர், காற்று, ஆகாயம் என்பதற்கு உட்பட்டதாக இருந்தாலும் அதுவாக அசைவதில்லை. அலை பாய்வதுமில்லை. அந்த மனதில் தோன்றும் ஆசைகளால்தான் மனம் அலைக்கழிக்கப் படுகின்றது. உயிர்களிடத்து உள்ள ஆசைகளும் பாவனைகளுமே மனதை அலைக்கழித்து அமைதியற்றதாக்குகின்றது.

ஜபம் செய்யும்போது இறை நாமத்தை உயிர்கள் முயன்ற அளவிற்கு பக்தியுடன், நேர்மையுடன், ஆத்ம சமர்ப்பணத்துடன் செய்து வர வேண்டும். மனம் அலைந்து திரிந்தாலும்கூட ஜபம் செய்வதை விடாமல் தொடர்ந்து செய்யவும். மனம் என்ற முரட்டுக் குதிரையை அடக்க தொடர்ந்து ஜபம் செய்தலே உகந்தது. தொடர்ந்து ஜபம் செய்யும்போது ஆனந்தம் அல்லது சோர்வு ஏற்படக்கூடும்.

ஆனந்தம் ஏற்படும்போது அதில் மூழ்கிவிடக்கூடாது. அதிலிருந்து வெளியேறிச் சென்று தொடர்ந்து ஜபம் செய்யவேண்டும். ஆனந்தம் ஆன்மீக சாதனைக்கு இடையூறு விளவிப்பதாகும். சோர்வு என்பது மூளை களைத்து விடுவதாலும் சோம்பலினாலும் ஏற்படலாம். மூளை களைத்து விட்டால் ஜபத்தை நிறுத்தி விடவேண்டும்.. மூளை களைத்திருந்தால் போலிக் காட்சிகள் தோன்றும். அதில் மயங்கினால் பைத்திய நிலையாகிவிடும். சோம்பல் காரணமாக இருந்தால் அதிலிருந்து விடுபட்டு தொடர்ந்து ஜபத்தில் ஈடுபடவேண்டும்.

அஞ்ஞானம் நீங்க அந்த உயிர் பிரமத்தை அனுபூதியில்-பிரமாணங்களைக் கொண்ட அறிவினால் உணரவேண்டும். வேதாந்த தத்துவங்களை ஆன்மீகத்தை உணர உயிர்கள் ‘ஓம்’ என்ற பிரபஞ்ச மந்திரச் சொல்லை உச்சரிப்பது போதுமானது. மனதை ஜபம் செய்து ஒருமுகப்படுத்தியபின் தியானம் தொடரலாம்.

ஜபத்தின்போது 108 / 54 மணிகள் கொண்ட ருத்திராட்ச மாலையை பயன்படுத்தவும். மாலை இணையும் இடத்தில் ஒரு பெரிய மணி கோர்க்கப்பட்டிருக்கும். இதை மேரு என்பர். ஜபத்தின்போது மேருவில் தொடங்கி எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும்.

தியானத்தை தொடர்ந்து பழகுவதன்மூலம் மன இறுக்கம், படபடப்பு, மற்றும் கோபம் போன்றவை விலகி ஞாபகத்திறன், மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி கிட்டும்.

தியானம் செய்யும் இடத்தை ஒரு கோவில் போல் அந்த அறையை சுத்தமாகப் பேணி பாதுகாக்க வேண்டும். அறைக்குள் தியானம் பற்றி தெரியாத / எதிர் மறை எண்ணங்கள் கொண்ட நபர்களை அனுமதிக்கக்கூடாது. குளித்த பின்னர் அறைக்குள் நுழைந்து தியானம் செய்ய வேண்டும். அந்த அறையில் குலதெய்வம், பிடித்த இறைவனின் படம் மற்றும் சிவபெருமானின் படம் இருப்பது நல்லது. சாம்பிராணி தூபம் போடவும். பக்தி புத்தகங்களை வைத்து நேரம் கிடைக்கும்போது படிக்கவும். அந்த அறை அதீத சக்தி நிறைந்த இடமாக மாறி அமைதி தவழும் இடமாக இருக்கும். மனம் சலனமடையும்போது அந்த அறைக்குள் சென்று அமர்ந்தால் மனதிற்கு சாந்தி கிட்டும்.

#####

தியானம்-1

பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொண்டு நாசிகளின் வழி ஆழமாக ஆனால் நிதானமாக காற்றை இழுத்து வெளியேற்றுங்கள். அப்போது உங்கள் கவனமெல்லாம் மூச்சின்மீது இருக்கட்டும். ஆரம்பத்தில் மூச்சை வெளியே விடும்போது மூச்சை எண்ணுங்கள். சில நாட்கள கழிந்தபின் மூச்சைமட்டும் கவனியுங்கள். இப்போது வேறு எண்ணங்கள் தோன்றினாலும் அனுமதியுங்கள். இந்த பயிற்சி முடிந்தவுடன் கண்களை உடனே திறக்காது சிறிது நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருந்து பிறகு மெல்ல மெல்ல கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.

#####

தியானம்-2

பத்மாசனம் / வஜ்ர ஆசனத்தில் கண்களை மூடியபடி கைகளில் சின் முத்திரை வைத்து முதுகுதண்டு நிமிர்ந்து நேராக இருக்கும்படி அமர்ந்துகொள்ளுங்கள். சுற்றுப்புற சூழல் ஆமையாக ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உங்களைச் சுற்றி எதுவும் இல்லை என மனதில் நினைத்துக் கொள்ளவும். அந்த ஏகாந்த இடத்தில் நீங்கள் மட்டும்தான் இருக்கின்றீர்கள் என நினைவு கொள்ளுங்கள். உங்கள் நினைவை இதயத்திற்கு கொண்டு சென்று அது தாமரை வடிவாய் இருப்பதாக நினையுங்கள். உங்களுக்கு பிடித்தமான இறைவன் (சிவன்) அங்கு தியான நிலையில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பின் அவரை நேரில் பார்ப்பது போன்று நினைவு கொண்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். பின்னர் அவரது நாமத்தை (ஓம் நமசிவய நம / ஓம் நாராயாணாய நம) ஜபிக்கவும். இதற்கு சிவபெருமானே / நாராயணனே நான் உன்னை சரணடைகின்றேன் என்னைக் காப்பாயாக என அர்த்தம். தொடர்ந்து 108 முறை நாம ஜபம் செய்யுங்கள். ருத்ர மாலையை வைத்து 108 கணகிடலாம். ருத்ர மாலையை மேலிருந்து கீழ்நோக்கி உருட்ட வேண்டும். ருத்ர மாலையில் இருக்கும் மணி மேரு எனப்படும். அதில் ஆரம்பித்து மீண்டும் மேரு வந்தபோது (108) ஜபத்தை முடித்துக் கொள்ளலாம்.

தியானம் பழகும்போது பல்வேறு எண்ண அலைகள் தோன்றும். அவைகளை வெறுக்க வேண்டாம். அது நல்லது / கெட்டதாயிருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். தியானம் தொடர்ந்து பழகப் பழக வந்த எண்ணங்கள் எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து மனதை விட்டு அகன்று விடும்.

#####

தியானம்-3

கண்களை மூடி அமர்ந்து மூச்சை ஒரு தரம் நன்கு இழுத்து விடவும். மனதை உங்களின் இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உச்சரியுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் ஓம் என்று மனதிற்குள் உச்சரியுங்கள். சுமார் 10 / 15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

இதனால் மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும் தியானம் செய்ய விரும்பும் அன்பர்கள் குருஸ்ரீயின் naavaapalanigotrust.com இணைய தளத்தில் பிறயோகங்கள்- பிரிவில் தியானயோகம் பார்த்து பயன் பெறுக- அன்புடன் குருஸ்ரீபகோரா.

 #####

சனிக்கிழமை, 01 January 2022 10:44

பிரணாயாமம்!

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

#####

பிரணாயாமம்!

பிரணாயாமம் பழகும் முன்னர் இமயம், நியமம், ஆசனம் போன்றவற்றில் முடிந்தவரை சொல்லப்பட்ட நியமங்களை கடைபிடித்திருக்க வேண்டும். அதன் பின்னரே பிரணாயாமப் பயிற்சியை ஆரம்பிக்கவும். பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவர்களே பிரணாயாமம் செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள். அப்போதுதான் அவர்களது நுரையீரல் இந்த பயிற்சிகளை தாங்கும் நிலையை அடைகின்றது.

பிரணாயாமம் தொடர்ந்து காலை 0530-0630, மதியம் 1230-1330, மாலை 1730-1830 இரவு 2330-0030 என்ற அந்தி சந்தி நேரங்களில் சுமார் 80 பிரணாயமங்கள் வீதம் செய்தால் மொத்தம் 320 பிரணாயாமங்கள் ஒரு நாளைக்கு. குரு ஆசியுடன் இப்படி தொடர்ந்து செய்வதால் வாசியைக் கட்டுப்படுத்தி பல சாதனைகள் செய்யலாம் என்பது சித்தர்கள் கண்டறிந்த முறையாகும்.

பிரணயாமத்தை அதிகாலையில் செய்ய வெறும் வயிற்றுடன் இருப்பது முழு பயனைத் தரும். நா வரட்சி தந்தால் சிறிதளவு நீர் அருந்தலாம். உணவு உண்டபின் பயிற்சியை ஆரம்பிக்கக்கூடாது. உணவு உட்கொண்டால் சுமார் மூன்று மணி நேரம் கழித்து ஆரம்பிக்கலாம். பயிற்சியை குளிர் சாதன அறைக்குள் செய்யக் கூடாது. பயிற்சி முடிந்த ஒரு நாழிகை கழிந்த பின்னரே குளிக்க வேண்டும். அதிக அளவு சுடு நீரில் குளிக்க கூடாது. குளிர்ந்த நீர் சிறப்பு.

அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க முதலில் குருவிடம் தீட்சை பெற வேண்டும். அப்போதுதான் முழுமையான சித்தி கிட்டும். வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் மானசீகமாக கணபதி மற்றும் யோக தட்சிணாமூர்த்தியை மனதார குருவாக நினைந்து ஏற்று வழிபட்டு சிவன் கோவிலில் வழிபட்டு உண்டியலில் தட்சணை போட்டு பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும். குருவின் ஆசியில்லாத பிரணாயாமத்தின் பலன் குறைவாகவே இருக்கும்.பிராணன்- ஆகாசம்- பிராண சக்தி -பிரணாயாமம்

சித்து பிராணான்-இடகலை-பிங்கலை-நரம்பு ஓட்டங்கள் -ஞானேந்திரிய நரம்புகள் -கர்மேந்திரிய நரம்புகள் சுழுமுனை-“குண்டலினிக் கமலம்” -சுழுமுனை வழி செல்லும் இதை சித்து பிராணன் எனலாம்- -இயல்பாக உண்டாவதைவிட மூச்சை அடக்கும்போது பிராணன்-சித்து பிராணனைக் கட்டுப்படுத்துதல் (பயிற்சிகள்).

பிரணாயாமம் என்பது பூரகம், கும்பகம், ரேசகம் என்ற மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. பிரணாயாமம் பயிற்சியை ஆரம்பிக்குமுன், மூச்சை இழு 2, 3, 4 என மனதில் சொல்லிகொண்டு மூச்சை உள்ளே இழுங்கள். பின்னர் அடக்கு 2, 3, 4 என மனதில் சொல்லியவாறு மூச்சை அடக்கிப் பழகுங்கள். இந்த ஆரம்பநிலைப் பயிற்சியில் 1:4:2 என்ற விகிதம் பின் பற்றப்படவில்லை. ஆரம்ப நிலைப் பயிற்சி முடிந்தபின் 1:4:2 என்ற விகிதாச்சாரத்தை பயன்படுத்தி பயிற்சிகளை செய்யவும்.

ஒருநாளைக்கு ஒரு மனிதனுக்கு 21,600 சுவாசம் என்பர்.
ஒருமணிக்கு-21600/24 = 900 சுவாசம்.
ஒரு நிமிடத்திற்கு-900/60 = 15 சுவாசம்.

சராசரியான மனிதர் அனைவருக்கும் நான்கு விநாடிக்கு 1 சுவாசம். இப்படிச் செய்வதால் 120 ஆண்டுகள் வாழ்க்கை வழலாம். வாழ்நாளை அதிகப்படுத்த சுவாசித்தின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் அதற்காண பயிற்சியே பிரணாயாமம்.

#####

ஓம் கம் கணபதியே நம
ஓம் ____________ குலதெய்வமே நம
ஓம் குருதட்சிணாமூர்த்தியே, __________சித்தரே நம (உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்)
ஸ்ரீ தண்டஹி நம! ஓம் கிலீம் லிம் ஹிரீம்

ஓம் ஹ்ரீம் கணபதியே நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் இடது நாசியை மூடியவண்ணம் ஓம் ஹ்ரீம் கணபதியே நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சர ஹணபவ நம!
இடது கை மிருது-மான் முத்தரையுடனும் வலது கை மிருது முத்திரையில் ஆள்காட்டி விரலுடன் நடு விரலைச் சேர்த்துத்தவண்ணம் வலது நாசியை மூடியவண்ணம் ஓம் சர ஹணபவ நம! 18 முறை உரு கொடுக்கவும். பின்

ஓம் சிவய நம!
ஓம் வசிய நம!
ஓம் யவசி நம!
ஓம் யசிவ நம!
ஓம் வயசி நம!

ஒன்பது முறை உரு கொடுக்கவும்.

காலனில்லை! கல்லப்பா தேகமது!
ஓங்….ரீங்….அங்….உங்….
(பதினாறு உருகொடுத்தால் கணபதி பிரகாசிப்பார்.)
சுழுமுனையில் அவரைப் பார்த்து நுண்மையுடன் கீழ்வுள்ள
மந்திரம் ஜபித்தால் பிரமந்திரி சனமுமாம்.

ஓம் நமசி வய!

முழு மனதுடன் கீழேயுள்ள ஐந்தெழுத்து மந்திரம் ஓதி
திருநீறு நெற்றியில் தரிக்கவும்- இதயத்தில் நிலையில்லாத
தூல சடலம் நிலைக்கும் ஆதாரம் சித்தியாகும்.

ஓம் ந ம சி வ ய!
ஓம் நம சிவ ய!
ஓம் நமசி வ ய!
நமசிவயநம! வய நமசி! வய நமசி!
நமசிவய சிவய நம! சிவய நம!
சிவ நம! சிவ நம! நமசிவய!
நமசிவயநம!
ஓம் ஸர்வம் சிவமயம் ஜகத்!
ஓம் ந ம சி வ ய ஓம்

கலையறிந்து அந்தந்த நிலையில் இருந்து பக்தியுடன் ஆதார சூட்சம் சித்தி.
கண்ணடங்கி விண்ணென்றூணி நிலையறிந்து பிராணாயஞ் செய்தால்
காலனில்லை! கல்லப்பா தேகமது! வியாதி காணாதோடும்.

ஓம் கிலி அங்…
அங் கிலி நங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி வங்…
வங் கிலி யங்…
அங் கிலி மங்…
வங் கிலி சிங்…
அங் கிலி சிங்…
அங் கிலி மங்…
மங் கிலி ரீங்…
ரீங் கிலி ஓம்!

சோதியுடன் சுழுமுனையில் மணக்கண் சார்த்தி விபூதி தரித்துக் கொள்.

ஓம் கிலி ரீங்…
ரீங் கிலி மங்…
மங் கிலி சிங்…
மங் கிலிங்…
சிங் கிலி மங்…
வங் கிலி சிங்…
சிங் கிலி மங்…
மங் கிலி நங்…
நங் கிலி யங்…
மங் கிலி ஓம்!

மூலாதாரத்தில் கணபதியையும் பிரமந்திரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் உயர நகர்த்தி
சுவாதிஷ்டானத்தில் பிரம்மாவையும் சரஸ்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
மணிபுரகத்தில் மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
அநாகதத்தில் ருத்திரனையும் பார்வதியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
விசுத்தத்தில் மகேஸ்வரனையும் மகேஸ்வரியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஆக்ஞேயத்தில் சதாசிவனையும் மனோன்மணியையும் வழிபடு
மூலாதாரத்து கனலை காற்றுடன் மேலும் உயர நகர்த்தி
ஸஹஸ்ராரமில் உள்ள ஒன்றுசேர்ந்த ஐக்கியமாகிய
பரமசிவன்,பராசக்தியை வழிபடு.

பின் பிராணாயாமம் செய்க.

காலனில்லை.கல்தேகம்.
பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கவும்.

#####

பயிற்சி- உள் கும்பகம்

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித்துளையை வலதுகட்டை விரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்புங்கள். சில நொடிகள் காற்றை உள்ளே நிறுத்துங்கள். இரு நாசித் துவாரங்களையும் விரல்களால் மூடவும்.

3.அப்பொழுது மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள். அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். அந்த நினைவை அப்படியே அங்கு சிறிது நேரம் வைத்திருந்து பின் அந்த நிலை நிறுத்திய நரம்பு இயக்கத்தை மேலே வலது நாசித் துளைக்கு மெதுவாக இழுப்பதாக நினைக்கவும்.

4.சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை வெளியில் விடுங்கள்.

5.உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 1 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 4 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 2 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும். இடது வலது மாற்றிச் செய்யவும். பின் படிப்படியாக அதிகரித்து 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பழகவும்.

6.இறுதியாக உள்ளிழுக்கும் பூரகத்திற்கு 4 நொடிகள், மூச்சை உள்ளே அடக்கும் கும்பகத்திற்கு 16 நொடிகளும், வெளியே விடும் ரேசகத்திற்கு 8 நொடிகளும் என எடுத்துக் கொள்ளவும்.

இடது வலது மாற்றிச் செய்யவும். இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம்.

பின்னர் படிப்படியாக 1:4:2 என்ற விகிதத்தில் அதிகரிக்கவும். கீழே கொடுத்தவாறு அந்தி சந்தி நேரங்களில் பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்கும்போது வாசியை- மூச்சுக்காற்றை வங் என்று சொல்லி உள்ளே இழுத்து நேர எண்ணிக்கையை ஆரம்பித்து 16 நொடிகள் கழிந்த பின்னர் அங் என்று சொல்லி வாசியை கும்பகம் செய்ய ஆரம்பித்து ஓம் என்று சொல்லி 64 நொடிகள் உள்ளே பயனிக்கவும். பின்னர் சிங் என்று சொல்லிகொண்டு வாசியை வலது நாசிவழியாக வெளியே 32 நொடிகள் முக்கியம் மிக மிக மெதுவாக விட்டு பழகவும். இப்படி ஒரு வேளைக்கு 80 பிரணாயாமம் (மொத்தம் 320) ஆசனத்தில் இருந்து செய்து பழகவும். நான்கு அந்தி சந்திகளிலும் செய்யவும். நான்கு அந்தி சந்திகளில் செய்ய முடியாதவர்கள் மூன்று அந்தி சந்திகளிலும் 108 முறை வீதம் செய்து மொத்தம் 324 பிரணாயாமம் செய்யவும்.

#####

பயிற்சி- வெளிக் கும்பகம்.

நற்பயன்கள்- குண்டலினி சக்தியை எழுப்பும். இருதயம் பலவீனமானவர்கள் செய்யக்கூடாது.

1.பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளவும். தலை, கழுத்து, முதுகுத்தண்டு, புட்டம் ஆகியவை நேர் கோட்டில் இருக்கட்டும்.

2.வலது நாசித் துளையை வலது கட்டைவிரலால் மூடுங்கள். பின்பு இடது நாசித் துளை வழியாக நுரையீரலைக் காற்றால் நிரப்பும் பொழுது (பூரகம்) மனதை நரம்புகளின் இயக்கத்தின் மீது குவியுங்கள்.

3.முதலில் 1:4:2 என்ற விகிதத்தில் செய்து பின்னர் படிப்படியாக அதிகரித்து வரவும்.

4.அந்த நரம்புகளின் இயக்கம் தண்டுவடம் வழியாக கீழே உள்ள முக்கோண வடிவிலான குண்டலினி இருக்கும் மூலாதாரப் பகுதியைச் சென்று தாக்குவதாக நினைக்கவும். இதற்கு 4 நொடிகள்.

5.பிறகு சுண்டுவிரல், மோதிரவிரல்களால் இடது நாசித் துளையை அழுத்தி மூடி, கட்டைவிரலை வலது நாசியிலிருந்து நீக்கி பிங்கலையான வலது நாசித்துளை வழியாக காற்றை உடனே வெளியில் (ரேசகம்) 8 நொடிக்கு அனுப்புங்கள்.

6.பிறகு இடது நாசித் துளையைச் சுண்டு விரல், மோதிர விரல்களாலும், வலது நாசித்துளையை கட்டை விரலாலும் அடைத்துக்கொண்டு வெளியில் காற்றை 16 நொடிகள் நிறுத்தவும் (கும்பகம்). இடது வலது மாற்றிச் செய்யவும் இதை ஒருபிராணாயாமம் எனலாம்.

மேல் பயிற்சியில் கும்பம் உள்ளே நிகழ்ந்தது. அடுத்த பயிற்சியில் கும்பம் வெளியே நடைபெறுகிறது. காற்றை உள்ளே சுவாசப்பையில் நிறுத்திவைக்கும் பிராணாயாமத்தின் எண்ணிக்கையை அதிகமாகச் செய்யக்கூடாது.

தினசரி காலை, மாலை 4 பிராணாயாமம் செய்யலாம். நன்கு பழகிய பின்னர் அதிகரிக்கலாம். உள் கும்பகத்தில் இறுதியில் சொல்லப்பட்ட மந்திர உச்சரிப்புகள் இதற்கும் பொருந்தும்.

#####

சனிக்கிழமை, 25 December 2021 11:45

பயிற்சிகள்!

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

@$@$@$@$@$@

பிரணாயாமம் பயிற்சி செய்து பழகாதவர்கள் நலனுக்காக!

அமைதியில்லாமல் அவதிப்படும் உயிர்கள் கண்களை மூடியபடி நிதானமாக நாசிகளின் வழி மூச்சை மெல்ல மெல்ல ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு எவ்வளவு உள்ளே இழுக்க முடியுமோ அதுவரை இழுத்து பின் மூச்சை வெளியேற்றும் போது தளர்வாகுக, இரண்டு, மூன்று என்று மனதில் எண்ணிக் கொண்டு அல்லது மூச்சை உள்ளே இழுக்கும் போதும் வெளியே விடும்போதும் உயிர்களுக்கு பிடித்தமான கடவுளின் பெயரை மனதில் நினைத்து குறைந்தது ஐந்து நிமிடங்கள் / வேண்டும் வரை பயிற்சி செய்தால் அவ்வுயிர்களுக்கு அமைதி கிட்டும். முச்சுக் காற்று உள்ளே செல்லும்போதும் வெளியே செல்லும்போதும் கவனத்தை அதன் மீது செலுத்துங்கள். மனதில் சஞ்சலம், கோபம், படபடப்பு மற்றும் பயம் நீங்கி சுவாசத்தின் வேகம் குறையும்.

#####

எல்லா செயல்களுக்கும் முன் உயிர்கள் தங்கள் உடலைத் தயார் செய்து தளர்த்திக் கொள்ள வேண்டும். அது உடல் தசைகள் இறுக்கத்திலிருந்து விடுபட்டு செயல் செய்ய ஆயத்த நிலையாகும். அந்த ஆயத்த நிலைக்கு உடலைத் தயார் செய்யவது பயிற்சிகள். பிரணாயாமம் / தியானம் செய்வதற்கு முன் உடலை சீர்படுத்தும் பயிற்சிகளை செய்து உடலுக்கு தகுதி நிலை ஏற்படுத்திய பின்னரே பிரணாயாமம் / தியானம் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் உடலில் எந்த சிக்கல்களும் ஏற்படாமல் வெற்றிகரமாக பிரணாயாமம் / தியானம் செய்து முடிக்க முடியும்.

நாடிசுத்தம், பிரணாயாமம் பயிற்சிகளுக்கு முன் அனைவரும் யோக ஆசனங்களில் இதற்குப் பயன்படும் ஆசனங்களான பத்ம ஆசனம், வஜ்ர ஆசனம் ஆகியவற்றை பற்றி அறிந்து அவைகளை கற்றுக் கொள்ளவேண்டும் இந்த இரு ஆசனங்களே நாடிசுத்தம், பிரணாயாமம் ஆகியவற்றிற்கு மிகச்சிறந்த ஆசனங்களாகும்.

ஆசனம் என்றால் இருக்கை என்று அர்த்தம். இந்த பயிற்சி முறையில் ஸ்தூல உடலில் உள்ள ஆதார சக்கரங்களின் சூட்சும சக்திகள் தூண்டப்படும். ஆசனத்தில் முதுகெலும்பு பகுதிதான் அதிக, பயன்படுத்தப்படும். எனவே எல்லா பயிற்சிகளும் முதுகெலும்பைச் சுற்றியே அமைந்திருக்கும். நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றிற்கு அமரும்போது நிலையாக உடல் ஆடாமல் அசையாமல் அமர வேண்டும். முடிந்தளவு ஆசனங்களை ஒரு குருவிடம் முறைப்படி கற்பது நல்லது. நீண்ட நேரம் தன்னை மறந்து அமர்ந்திருக்கும் தியான நிலை உறுதியாக இருக்க வேண்டும். கால்களில் வலி ஏற்பட்டு நாடிசுத்தம், பிரணாயாமம், தியானம் ஆகியவற்றை கலைக்க வழிவகை செய்துவிடும். எந்த வித உபாதையினாலும் பயிற்சிகள் பாதியில் கலையாமல் இருக்க ஆசனங்களை நன்றாக பழகவேண்டும்.

பத்ம ஆசனம்!

ஓரணையப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆரவலித்ததன் மேலவைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. திருமூலர்.

பத்மம் என்றால் தாமரை. இந்த ஆசனம் தாமரைமலர் விரிந்து இருப்பதுபோல இருப்பதாகும். ஒரு சமதள விரிப்பின்மீது அமர்ந்து வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து இடதுகாலை வலது தொடையின்மீது வைக்க வேண்டும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டபடி இருக்க வேண்டும். முதுகுத் தண்டுவடம் கழுத்து ஆகியவை ஓர் நேர் கோட்டில் நிமிர்ந்த வண்ணம் இருக்க கைகள் இரண்டையும் இரண்டு பக்கமும் உள்ள முழங்காலின் மேல் சின்முத்திரை காட்டியபடி வைக்கவேண்டும். கண்கள் மூடிய நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆசனம் யோகம் தியானம் பழகுபவர்களுக்கு மிக மிக நல்ல பலன் தரும். தொடர்ந்து செய்து வந்தால் அடிவயிற்றுப் பகுதின் இரத்த ஓட்டம் சீராகும். இரப்பையில் ஜீரண சக்தியை தூண்டும். மூட்டு சம்பந்தமான கோளாறுகள் ஏற்படாது. மேலும் மனதிற்கு அமைதிதரும் ஆசனமிது. இதில் அமர்ந்து தியானம் செய்தால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.

முதன் முதலில் செய்யும் போது கால்களில் வலி ஏற்படலாம். அதனால் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து பழகியபின் பத்மாசனத்தை செய்ய ஆரம்பிக்கலாம். அர்த்த என்றால் பாதி எனப்பொருள். பத்மாசனத்தின் பாதிநிலையில் செய்யப்படுவதால் அர்த்தாசனம் என்றானது. வலதுகாலை இடது தொடையின்மீது வைத்து வலது குதிகால் அடிவயிற்றைத் தொட்டபடி அமரவேண்டும். கண்களை மூடியவண்ணம் இரண்டு கைகளையும் சின் முத்திரை காட்டியபடி இரண்டு முழங்கால்மீது வைத்து நிமிர்ந்து நேராக அமரவேண்டும். இதை நன்றாக பழகியபின் முழுமையாக பத்ம ஆசனத்தை செய்து பழகுக!

வஜ்ர ஆசனம்!

வஜ்ரம் என்றால் வைரம். இந்த ஆசனத்தில் அமரும்போது உடல் வஜ்ரம்போல் உறுதியான நிலையில் இருக்கும். மூச்சுப் பயிற்சிக்கு பொருத்தமான ஆசனம். இதை செய்யும்போது கால்களில் வலி ஏற்படக்கூடும். பழகிய பின்னர் எளிமையான நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆசனம்.

இரண்டு கால்களையும் நன்றாக நீட்டி அமருங்கள். வலது காலை மடித்து குதிகாலை சாய்த்து அதன்மீது அமர்ந்து கொண்டு இடது காலை அதேபோல் மடக்கி சாய்த்து வைத்து அதன் மீதும் சேர்ந்தவாறு புட்டம் இருக்கும்படியாக அமர்ந்து கொள்ளவும். இப்போது இரண்டு குதிகால்களும் ஆங்கில் எழுத்து V வடிவில் இருக்கும். முதுகுத் தண்டை வளைக்காமல் நேராக கழுத்துடன் நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்மீது வைத்துக் கொண்டு கண்களை மூடியபடி சீரான மூச்சை இயக்க வேண்டும். சிறிது நேரத்தில் வயிறானது சகஜ நிலையை அடையும். உணவு உண்டபின்னரும் இந்த ஆசனத்தில் அமர்ந்து யோகப் பயிற்சிகள் செய்யலாம்.

இந்த ஆசனம் முழங்கால் மூட்டு மற்றும் கால்களுக்கு ஓய்வைத் தந்து நன்றாக இயங்க உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். தொடைப்பகுதி சதைகள் வலுவடையும். மலசிக்கல் பிரச்சனை தீரும். மூல நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யக்கூடாது.

சவாசனம்! சவ ஆசனம்!

இந்த ஆசனம் ஒரு சிறந்த பயிற்சியாகும். இறந்த நிலையில் உடலை இருக்க வைக்கும் நிலையாகும். இதை யோக நித்ரா என்றழைப்பதுண்டு. யோகம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் முடிந்ததும் இந்தச் சவாசனத்தை செய்து பின் விழிப்படையச் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு அரைமணி அல்லது பயிற்சி முடிந்த பின்னர் சவம்போல் சவாசன நிலையில் படுத்திருக்க வேண்டும். தரை விரிப்பின்மீது மெல்ல மல்லாந்த நிலையில் படுத்துக் கொண்டு இரண்டு கைகளையும் உடலுக்குப் பக்கவாட்டில் சற்று விரித்து வைத்து உள்ளங்கைகள் வயிற்றின்மீது இருக்க உடலை நன்கு தளர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இரண்டு கால்களும் V ஆங்கில எழுத்து போல் விரிந்த நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த சவாசன நிலையை சிறுது நேரத்தில் முடித்துக் கொண்டு வலது பக்கமாக திரும்பி சில நிமிடங்கள் அமைதியாக படுத்திருந்து பின்னர் மெல்ல எழுந்து அமர்ந்து மூச்சை மூன்றுமுறை நன்றாக இழுத்து வெளியேற்றிவிட்டு பின்னர் கண்களை திறக்கவும்.

இந்த ஆசனம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வைத் தரும். மன அழுத்தம் போக்கும். தொடர் தலைவலியை போக்கும். குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

ஆசனங்கள் செய்ய ஓர் பலகையில் / மான் தோல் / புலித்தோல் மீது அமரவேண்டும். ஏனெனில் தரையில் நேரிடையாக அமர்ந்தால் பூமியின் ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் மூலாதாரத்தின் காந்த சக்தியுடன் மோதி எண்ண ஒட்டங்களையும் மனோ மற்றும் சித்த சலனம் ஆகியவற்றை சரியான முறையில் அடக்கி வைக்க முடியாமல் போகும்.

முத்திரைகள்!

பிரணாயாமம் / தியானப் பயிற்சிகளைச் செய்வதற்குமுன் சில முத்திரைகளை தெரிந்து அவைகளை முறையாகப் பயப்படுத்த வேண்டும்.

ஞான / சின் முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து கை மணிக்கட்டை முழங்காலின்மீது படியவைத்து உள்ளங்கைகளை வான் பார்த்திருக்கச் செய்து கட்டைவிரல் நுனியையும் ஆள்காட்டிவிரல் நுனியையும் சேர்த்தவண்ணம் பார்ப்பதற்கு இரண்டு விரல்களும் ஓர் வளையம்போல் இருக்கச் செய்யுங்கள். மீதமுள்ள மூன்று விரல்களையும் மடங்காமல் நீட்டி வையுங்கள். இது ஞானத்தை தரும் ஞான / சின் முத்திரை எனப்படும்.

பிரம்ம முத்திரை:

பத்மாசனத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து இரு முழங்கைகளையும் தொடைமீதி படியும் படிவைத்துக் கொண்டு இடது உள்ளங்கையின் பாதம் வான் நோக்கியிருக்கும் படியாகவும் அதன்மேல் வலது கையின் பாதம் வான் நோக்கியிருக்கும்படியாக வைத்துக் கொள்வதே பிரம்ம முத்திரை.

இந்த ஞான / சின் இரு முத்திரைகளும் வெகுவாக தியானப் பயிற்சிக்குப் பயன்படும். பிரணாயாமத்தின்போது ஒருகை சின் முத்திரையை பயன்படுத்த வேண்டும்.


ஓங்காரம்!

அ உ ம என்ற எழுத்துக்களை தனித்தனியே உச்சரித்தால் அதை உணரமுடியாது. மூன்று எழுத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்து முறையாக உச்சரித்தால் அது ஓம் எனும் பிரணவ மந்திரம் ஆகும். எல்லா ஓசை ஒலிகளுக்கும் ஓம் என்பதே பிரதானமானது. எல்லா மந்திரங்களுக்கும் முன் ஓம் சேர்த்து சொல்லப்பட்டால் அதன் ஆற்றலும் வலிமையும் அதிகரிக்கும். ஓம் என்ற தொடர் உச்சரிப்பால் உடலில் அதிர்வலைகள் தோன்றி மனதில் அமைதி உண்டாக்கும். முறைப்படி உச்சரித்தால் மரண பயம் நீங்கும். உடலிலும் உள்ளத்திலும் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

பத்மாசனம் / வஜ்ர ஆசனம் ஏதாவது ஒன்றில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்ளுங்கள். ஞான / சின் முத்திரையில் கைகள் இருக்கட்டும். இரண்டு முறை காற்றை ஆழமாக சுவாசித்து வெளியேற்றுங்கள். பின்பு சுவாசத்தை முடிந்தளவு உள்ளே இழுத்து வெளியேற்றும் சமயத்தில் ‘ஓ’ என்ற எழுத்தை அடிவயிற்றிலிருந்து ஒரு பங்கு அளவிற்கு உச்சரித்து பின்னர் ‘ம்’ என்ற எழுத்தை இரண்டு பங்கு அழுத்தம் என்ற அளவில் உச்சரியுங்கள். இப்போது உடலில் ஓர் இன்ப அதிர்வு தோன்றும். தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். காலையில் யோகம், பிரணாயாமம் மற்றும் தியானம் செய்வதற்கு முன்னாலும் இரவு சயனத்திற்கு செல்லும் முன்பு ’ஓம்’ பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

வழிபாடு!

ஓஜஸ் சக்தி உள்ள அந்த அளவிற்கு ஒருவன் ஆற்றல் உள்ளவன் ஆகின்றான்- ஆன்மீக ஞானம். பிரபஞ்ச சக்தியை, இறையை பணிந்து செயல்பட்டால் நலம் கிட்டும் என்ற நம்பிக்கையை நாம் கொண்டுள்ளோம். அதனால் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது வழிபாடு செய்தல் வேண்டும்..

எல்லா உயிர்களுக்கும் குலதெய்வம் என்ற முறைதனை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். எந்தச் செயலை செய்வதாயிருந்தாலும் உயிர்கள் அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி செயல்களைச் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியம் விநாயகர் துணையுடனும் குலதெய்வ ஆசியுடன் சிறப்பான வெற்றிகளைத் தரும். எனவே விநாயகரையும் குலதெய்வத்தையும் வழிபட்டு பயிற்சிகளைத் தொடருங்கள்.

பிரபஞ்சத்தின் அனைத்துமாக இருக்கும் இறையான அவர் எங்களைப் பாதுகாத்து காப்பாற்றட்டும். அவர் எங்களுக்குச் சக்திகளை ஊட்டி அருள் புரியட்டும். எங்களுக்குச் சக்தி தந்து எங்களின் செயல்களுக்கு வலிமை தரட்டும். இந்த பயிற்சிகள் எங்களுக்குள் ஒளியூட்டி நல்ல பலன் தரட்டும். ஒருவரை ஒருவர் புரிந்து அன்புடன் நேசித்து எங்கும் அமைதி நிலவட்டும். அமைதி பரவட்டும். வாழ்க இந்த பூமி.

பதஞ்சலி முனி யோக, பிரணாயாம நெறிமுறைகளுக்கு முன்னோடி என்பதால் அவரை வணங்குகின்றோம்.

மனதில், எண்ணங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி உடல் மற்றும் மனத்திற்கான இலக்கண நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்த முனிவர்களில் பெயர் சொல்லக்கூடிய நிலையில் முதலாக இருப்பவரும் சக்தி நிறைந்தவருமான “பதஞ்சலி முனி” அவர்களே உங்களை நான் இருகரம் கூப்பி மரியாதை கொண்டு வணங்குகின்றேன். உங்களுக்கு எனது பனிவான வணக்கங்கள்.

சூர்ய உதயத்திற்குமுன் செய்வது சிறந்தது என்பதால் அந்த நேரத்தில் சூரியனை வணங்குதல் சிறப்பு.

“ஓ சூரியனே!” பாத்திரத்தை மூடியிருக்கும் மூடியைப்போல் உன்னுடைய தங்கநிற மேனியின் ஒளிக்கற்றைகள் உண்மையின் கதவுகளை மூடியுள்ளது. எனக்காக, அதை திறந்து உண்மைதனை அறிய அதை நோக்கிச் செல்ல எனக்கு வழிவிடுவாயாக! உன்னை நான் வணங்குகின்றேன்.

மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதற்கு முன் சிறிது தொலைவிற்கு நடைப் பயிற்சி செய்து சுத்தமான காலைநேரக் காற்றை சுவாசித்தால் உயிர்களின் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற்று நாள் முழுதும் சுறுசுறுப்புடன் இயங்க ஏதுவாகும். வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் சில உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

வலது பக்கம் படுப்பது ஏன்!

பிரணாயாமம் / தியானம் / யோகப் பயிற்சிகள் செய்து முடிந்தபின்னர் சவாசனத்தில் படுத்து வலது பக்கம் திரும்பி சிறிது நேரம் படுத்திருந்து எழுந்திருக்க வேண்டும். வலது பக்க நுறையீரலானது மேற்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது பக்க நுரையீரலானது மேற்பகுதி மற்றும் கீழ்ப்பகுதி என் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடது பக்க நுரையீரலானது வலது பக்க நுரையீரலைவிட சற்று சிறியதாக அமைந்துள்ளது.

வலது பக்கம் சாய்ந்து படுத்தால் உடலில் அதிக அளவு பிராண வாயு கிடைக்கும். பயிற்சிகள் முடிந்ததும் வலது பக்கம் திரும்பி படுத்து எழுந்து உடகாரச் செய்வதால் அதிக அளவு பிராணவாயு கிடைக்கும் என்பதாலேயே அவ்வாறு செய்ய சொன்னார்கள் முன்னோர்கள்.

உணவு பழக்கங்கள்!

யோகம், பிராணாயாமம், தியானம் ஆகிய பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதற்குச் சிறந்த உணவு பாலாகும். பாலை நெருப்பில் வைத்துக் காய்ச்சி நீண்டநேரம் கொதிக்க விடக்கூடாது. கொதிநிலையை அடைந்ததும் இறக்கி வைக்கவும். அப்போதுதான் அதிலுள்ள வைட்டமின் போன்ற சத்துப் பொருட்கள் வீணாகாமல் இருக்கும்.

உணவே மருந்தாகும். இதை நினைவில் கொண்டு உணவை அளவிற்கு அதிகமாகவும் அடிக்கடி உண்ணாமலும், சத்தில்லாதவற்றை உண்ணாமலும், பசித்தபின்பே உணவை உட்கொள்ளுவதும் சிறந்த பழக்கம்.

வயிற்றின் கொள்ளளவில் பாதி பாகம் அளவுள்ளா உணவை சப்பிட்டு பின்னர் கால் பாக அளவிற்கு நீரைக் குடிக்க வேண்டும். மீதி கால்பாகம் வெற்றிடமாக இருக்க வேண்டும்.
#####


பயிற்சிகள்!

நாடி சுத்தம்!
பிரணாயாமம்!
தியானம்!

#####

சனிக்கிழமை, 25 December 2021 11:37

நாடிகள் சுத்தம்!

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

#####

நாடிகள் சுத்தம்!

நாடி சுத்தி மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை சிறந்த முறையில் இயங்க வழிவகை செய்கிறது. கோபத்தைக் குறைத்து மனதிற்கு அமைதியை உண்டாக்கும். படப்படப்பு குறைந்து இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். இதயக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.


முதலில் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்துதல்

சுழுமுனையில் பயனிக்கும் பிராணனைக் கட்டுப்படுத்துதல் நாடிகளைத் சரிசெய்து தூய்மைபடுத்த - பல வகையானப் பயிற்சிகளைப் செய்து பழகுவோம்.
1.பஸ்த்ரிகா * 2.கபால்பட்டி * 3.அணுலோம்-விலோம்-நாடிசுத்தி * 4.சந்திரனுலோமா * 5.சூரியனுலோமா * 6.பாராம்ரி(தேனி சப்தநிலை) * 7.உத்கீத் * 8.அக்னிசார்-(வயிற்றை மடக்குதல்) * 9.உஜ்ஜயி * 10.க்ஷீத்கரி-(நாக்குமடங்கிய நிலை) * 11.க்ஷீத்தலி-(நாக்குவளந்தநிலை) * 12.சதான்த-(பற்கள்வழி உறிஞ்சும் நிலை)

முதல் பயிற்சி-பஸ்த்ரிகா!
இரண்டாம் பயிற்சி-கபால்பட்டி!
மூன்றாம் பயிற்சி- அணுலோம்-விலோம்!
நான்காம் பயிற்சி –சந்திரனுலோமா!
ஐந்தாம் பயிற்சி-சூரியனுலோமா!
ஆறாம் பயிற்சி-பாராம்ரி!
ஏழாம் பயிற்சி-உத்கீத்!
எட்டாம் பயிற்சி-அக்னிசார்!
ஒன்பதாம் பயிற்சி-உஜ்ஜயி!
பத்தாம் பயிற்சி-க்ஷீத்கரி!
பதினோராம் பயிற்சி-க்ஷீத்தலி!
பன்னிரண்டாம் பயிற்சி-சதான்த!

இந்த பன்னிரண்டு பயிற்சிகளை மூன்று மாதத்திற்கு தொடர்ந்து தினமும் காலை செய்து வந்தால் நாடி சுத்தியாகிவிடும். அதன் பின்னரே பிரணாயாமம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931757
All
26931757
Your IP: 44.201.64.238
2024-03-29 00:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg