gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

முயற்சிக்கு உரியபலன்!

ஒர் ஞானியிடம், தான் எத்தனை முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை என சொல்லி வருந்தினான் ஒருவன். அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்று அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லி வீட்டினுள் சில பெருட்களை இடம் மற்றி வைத்தார் அந்த ஞானி. பின் அவனை வீட்டினுள் வரச் சொல்லி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்கு இருட்டவே அவனிடம் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். வீட்டினுள் வழக்கமாக தான்வைத்த இடத்தில் பெருள்கள் இல்லாததால் தடவி தடவி கண்டு பிடித்து விளக்கை ஏற்றினான். அப்போது அந்த பெரியவர் நீ எப்போதும் வைக்குமிடத்தில் பெருள்கள் இல்லையெனினும் வீட்டில் கண்டிப்பாக இருக்கிறது என்ற உறுதியில் முயற்சி செய்து விளக்கை ஏற்றினாய். எதை நோக்கி போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டால், நீ எடுக்கும் சிறிய முயற்சி கூட, இருள் போன்ற தடைகளைமீறி பலன் கொடுக்கும். இதை புரிந்து செயல் படு. வெற்றி நிச்சயம் என்றார். முயற்சித்தவர் இகழ்ச்சி அடையார்!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தமிழ் வள்ளல்!

தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம்பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக் கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார். பொறுமையிழந்த கவி தன் பரபரப்பை உணர்த்த, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர் 'கொக்கு பறக்கும். புறா பறக்கும். குயில் பறக்கும். நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார். பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாலை இலை போட பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அது பசியை போக்குமா! விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்தி விட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து வழி அனுப்பினார். பசி வந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது ஓர் வழக்குமொழி!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

குறை காண்பது!

வடகலைப் பிரிவினர் ஆங்கில 'யு'வடிவத்தில் திருநாமம் இட்டிருப்பார்கள். தென்கலைப் பிரிவினர் அதன்கீழே ஒரு கோடு இழுத்து திருநாமம் இட்டிருப்பார்கள். வடகலைப் பெரியவர் ஒருவர் இரண்டு பிரிவுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உடம்பின் வலது பக்கம் வடகலை நாமத்தையும், இடது பக்கம் தென் கலை நமத்தையும் இட்டுக் கொண்டார்.       எதிரில் வந்த தென் கலைப்பிரிவினர் குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் 'உன் வடகலை நாமத்தை மட்டும் வலது பக்கம் ஜம்மென்று போட்டுக் கொண்டாய், எங்களுக்கு இடப்பக்கம்தானே கொடுத்திருக்கின்றாய்' என்றனர். அதிர்ச்சியடைந்த பெரியவர் 'நண்பர்களே! நான் உங்கள் தென்கலை நாமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வலது கையால் இட்டுக்கொண்டேன்! எங்கள் வடகலை நாமத்தை இடது கையால் இட்டுக் கொண்டேன்! புரிந்து கொள்ளுங்கள். எதற்கும் எப்படியும் குறை கண்டு துவேஷத்தை வளர்க்கும் மனப்பான்மை கொள்ளாதீர் என்றார். நீங்களும் அந்த குணம் அற்றவர்தானே!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உருவ வழிபாடு!

ஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிகையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையை கண்டித்து பேசினார் அரசர். பொருமையாக கேட்டார் பக்திமான். மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்றுகேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமிழுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி, உருவற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

தன்னம்பிக்கை!

மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. கடவுள் நம்பிக்கையுடன் தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

இருக்கும் இடத்தைவிட்டு...!

சீட்டுக் கம்பெனி நடத்தும் ஒருவன் ஒர் ஊருக்கு சென்று அங்கிருப்பவர்களிடம் அந்த மாதத்திற்குரிய சீட்டுத் தொகையை வசூலித்துவிட்டு திருப்பும் வழியில் இருட்டிவிட அங்கிருந்த சத்திரம் ஒன்றில் தங்கினான். அச்சத்திரத்தில் ஒர் திருடன் இவனிடம் பணம் இருப்பதை அறிந்து கொண்டு இவன் உறங்கியதும் அபகரிக்க திட்டமிட்டான், சீட்டு பணம் வசூலித்தவனுக்கு அந்த நபரைப் பார்த்து சந்தேகம் வர என்ன செய்வது. எப்படி பணத்தை பாதுகாப்பது என நினைத்தான்.     சிறிது நேரத்தில் அசதியில் அயர்ந்தான். காலையில் கண் விழித்தபோது திருடன் இவனையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன பார்க்கிறாய்? என கேட்க அதற்கு, 'நீ பணம் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நீ அசந்து தூங்கும்போது உன் சட்டைப்பையில், வேஷ்டியில், நீ கொண்டுவந்த பையில் எங்கும் காணவில்லை. பணம் கைக்கு கிடைக்க வில்லை. அதை நீ எப்படி எங்கு ஒளித்து வைத்தாய்' என்ற நினைவில் நான் அதிசயத்துக் கொண்டிருக்கின்றேன் என்றான்.   பணம் வசூலித்து வந்தவன் அது பத்திரமாக உன் தலையனைக்கு கீழ் இருக்கிறது என்றும் இரவு எனக்கு பாதுகாப்பாக இருந்ததிற்கு நன்றி எனக் கூறிப் பணத்தை எடுத்துச் சென்றான்.
நீ தேடுவது உன்னிடமே இருக்கின்றது, அறியாமல், புரியாமல் தேடிக்கொண்டிருக்கின்றாய் மனமே!

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

உண்மையான குரு!

ஒரு குருகுலப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவனின் பெருளை திருடி விட்டான். அவனை குரு முன் நிறுத்த அவர் அவனைத் தடவிக் கொடுத்து "திருட்டு தவறு" என அன்புடன் உரைக்கிறார். புரிந்ததா? எனக் கேட்டு இனி இவன் திருடமாட்டன்! என மற்ற மாணவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி விட்டார். மீண்டும் இதே தவறை அவன் செய்ய மற்ற மாணாக்கர்கள் மடத்தை விட்டு வெளியேற்ற விரும்பினார்கள். அவனுக்கு குரு மீண்டும் அறிவுரை கூற இந்த அனுகுமுறையை இம்முறை ஏற்கத்தயாராக இல்லாத மாணவர்கள் அவனை வெளியேற்றாவிடில் அனைவரும் வெளியேறி விடுவதாக கூறினார்கள். சரி போங்கள் என அமைதியாக குரு சொன்னார். ஏன் திருடக்கூடாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்து விட்டது. நீங்கள் எங்கு சென்றாலும் சரியாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் அவசியமில்லை. இவனுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. அதைப் புரியவைப்பதுதான் எனது கடமை. இவனுக்கு இதை நன்கு புரியவைக்க நான் அவசியம் தேவை. வெளியே அனுப்ப முடியாது என்ற குருவின் கருணை அன்பைக் கண்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர். திருட்டு மாணவனின் மனதை குருவின் கருணை மாற்றியது. குரு எல்லாம் போதிப்பவர் மட்டுமல்ல, கனிவும் கருணையும் காட்டத் தெரிந்தவர்தான் உண்மையாண குரு. 

வெள்ளிக்கிழமை, 05 October 2012 00:00

அவர் ஒரு சமுத்திரம்!

         பெரியவர் ஒருவர் மேடையில் பேச தயாராகிக்கொண்டிருந்தார். அங்குவந்த பணக்காரர் அவரிடம், ஐயா, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டு ஒரு முறை சொல்லுங்கள் என்றார். பேச்சாளரும் இவர் பெரிய சமுத்திரம், அள்ள அள்ளக் குறையாத கடல் மாதிரி. பெரிய செல்வந்தர், சமுத்திரம்னா சமுத்திரம்தான், ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை. என்ற பாராட்டை கேட்டு மகிழ்ந்த பணக்காரர் அங்கிருந்து சென்றபின் பேச்சாளரின் சீடர் தயக்கத்துடன் "இந்த ஆள் பெரிய கஞ்சன். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவியது இல்லை, அவரை உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படி பொய்யாக பாராட்டலாமா?” எனக் கேட்டார். அதற்கு பேச்சாளர், அதைத்தான் நானும் சொன்னேன். புரியலையா? சமுத்திரம் ரெம்பவும் பெரிசு, ஏகப்பட்ட தண்ணீர் வெச்சிருக்கு, ஒருவாய் தண்ணீர் ஒருவருக்கும் குடிக்க பயன் படாது. எவருடைய தாகத்தையும் தணிக்காது. இந்த நபர் சமுத்திரம் மாதிரி எவ்வளவு பணம், பெருள் வைத்திருந்தாலும் ஒருவருக்கும் பயன் பட உதவமாட்டார். புரிந்ததா என்றார்...  நீங்கள் எப்படி! எல்லோருக்கும் பயன்பட நினைப்பவரா! செயல்படுபவரா!

வியாழக்கிழமை, 04 October 2012 12:53

6-3.பூக்கள் பூத்தபூமி!

பூக்கள் பூத்தபூமி!                                                                                                                                                                                                                                                                 

உலக உருண்டை பல கோடி விண்மீன்களுக்கிடையே எப்படி சுற்றிச் சுழலுகிறது. பருவங்கள் மாறி, இரவு பகல் என்று மாறி, மழை வெய்யில் என்று மாறி நிகழ்வுகளை பூமியில் அவ்வப்போது நிகழ்த்துகின்றது யார்! விதையிலிருந்து மரம், செடி கொடிகள் என வருவதும், ஓர் விந்திலிருந்து இத்தனை உறுப்புகளுடன் பலவிதமான உருவங்கள் தோன்றுவதும் எப்படி!
பிறப்புக்கும், இறப்புக்கும், அழிவுக்கும், தோற்றுவித்தலுக்கும் காரணம் என்ன! இன்பதுன்பங்கள் ஏன்! இதெல்லாம் இயற்கையா! அதன் பின்னனி எது! இவற்றுக்கொல்லாம் எளிய தெளிவான விளக்கங்கள் யாரிடம் உள்ளது! இந்த பிரபஞ்சத்தின் இரகசியம் அது. அதை முற்றிலும் அறிய முற்பட்டு ஒன்றும் பலனில்லை. அரிதிலும் அரிதான ஒன்று அது.
மனித சக்திக்கு மீறிய எல்லையில்லா அந்த பிரபஞ்ச ஆற்றலை சிறிதளவாவது தேர்ந்து தெளிய ஆன்மாக்களுக்கு ஞானம் வேண்டும். அது ஆத்மீகஞானம்.
ஆன்மாக்கள் ஞானத்துடன் வாழும் இடம் ஆனந்த பூமியாக, இன்பம் நிறைந்த உலகமாக, மாறவேண்டும். இந்த உலகில் ஆனந்தம் பூக்களாகப் பூத்துக் குலுங்கி இன்பம் மணமாக வீசவேண்டும்.
அதற்கு எல்லா ஆன்மாக்களும் அந்தந்த உடலுடன் செய்யும் செயல், எண்ணங்கள் பிற உயிர்க்கு பாதிப்புகள் வராமல் செயல்படவேண்டும். இத்தகைய இயக்கத்தை இப்புவி கொண்டால் தான் ஆனந்தபூமியின் அடையாளமாகும்.
‘நீ உலகின் அழகை தரிசிக்கும்போது நலமுடன் திகழ்கிறாய்’ என்கிறது வேதம். முதலில் தனக்கு சுகம் அளிக்கவேண்டும், இரண்டாவது அடுத்தவர் சிரமம் குறைக்கவேண்டும், மூன்றாவது மற்றவர் மகிழ்ச்சியை மகிழ்ச்சியாக காணவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒவ்வெருவரும் உங்கள் கர்மத்தின் பலனை உணர்ந்து, உங்கள் கோபத்தால் ஆவது என்ன! செயலால் மாறுவது என்ன! என்பதை புரிந்து கொண்டு நல்லதை நினைத்து, நீங்கள் சந்தோஷமாக இருக்க, மற்றவர்கள் சந்தோஷத்தை கெடுக்காமல் மனித நேயத்துடன் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.
மற்ற மனங்களை புண்படுத்தாமல் இருங்கள். கடுஞ்சொற்களை அள்ளி வீசாமல் இருங்கள். வெறுப்புகலந்த பார்வையை, பேச்சை விட்டு கனிவுடன் நோக்கப் பழகுங்கள். அன்புடன் மனித நேயம் கொண்டு நோக்குங்கள். அனைவருக்கும் உங்களால் முடிந்த அளவிற்கு ஆதரவு கரம்நீட்டி பிறர் நலம் பேனுங்கள்.
கோபம், பொறாமை, பதற்றம், எரிச்சல், ஆத்திரம், சந்தேகம், பயம், இவைகளின் தாக்கங்கள் உங்களுள் ஏற்படும்போது நீங்கள் நரகத்தின் விளிம்பிற்குச் சென்றுவிடுவீர்கள். அன்பு, அடக்கம், ஆனந்தம், அமைதி, நிம்மதி, சந்தோஷம் இவற்றில் நீங்கள் அமிழ்ந்து இருக்கும்போது சொர்க்கத்தின் இன்பத்தினை உணரமுடியும்.
இந்த பூமியில் கிடைக்காத அற்புதம் ஏதும் சொர்க்கத்தில் இல்லவே இல்லை! இருப்பதாக எங்கும் கூறப்படவில்லை.
மனதில் செயல்களை நிரப்பிக் குழம்பாதீர்கள். அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளை அப்போதே சிந்தித்து தீர்த்துக் கொள்ளுங்கள். மனதில் நிகழ்வுகளின் உலைச்சலின்றி நிம்மதி இருந்தால் உங்களுக்கு சந்தோஷம்.
இதே நிலை அனைவருக்கும் ஏற்பட்டால் எங்கும் சந்தோஷம். ஆனந்த பூக்கள் பூக்கும் உலகமெங்கும். ஆனந்த நிலையடைந்து இன்பம் நிறைந்த உலகமாக மாறும் இப் பூ உலகம்.
அந்த ஊரின் ஓரிடத்தில் காலைப்பொழுதில் தூரத்திலுள்ள ஒரு நிலையான பொருளைப்பார்த்து நின்றால் கீழேவிழும் உன் நிழலுக்கு அடியில் ஒரு பொக்கிஷம் உள்ளது எனக் கேள்விப்பட்டவன் ஒருகாலைப்பொழுதில் அந்த இடத்தை அடைந்தான். குறிப்பிட்ட இடத்திலிருந்து தூரத்தில் தெரிந்த நிலையான மலையைப்பார்த்து நின்றான். அவன் நிழல் அவனுக்குப்பின்னால் நீண்டு விழுந்திருந்தது. நிழல் பகுதியை நன்கு அடையாளம் கொண்டு தோண்ட ஆரம்பித்தான்.
தோண்டத் தோண்ட சூரியன் மேலெழுவதால் நிழல் சுருங்கிக்கொண்டு வந்தது. நண்பகலில் அவன் காலடியில் நுழைந்தது. வேறு நிழலே இல்லை. தோண்டித் தோண்டி களைப்புதான் அடைந்தான். ஏமாற்றம் அழுகையை வரவழைத்தது. அவ்வழிவந்த பெரியவர் ஏன் அழுகின்றாய் எனக்கேட்டபோது அவரிடம் இது பற்றிக்கூறினான். அவர் நீ கேள்விப்பட்டது சரி. உன் நிழல் பொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைதான் காண்பித்துள்ளது.
நீதான் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நீதான் அந்தபொக்கிஷம். அது உன்னுள்ளேதான் இருக்கின்றது என்றார். ஆன்மாக்களே! நீங்கள் தேடும் எல்லாம் உங்களிடமே இருக்கின்றது. புரிந்து கொள்வதில் தான் சிரமம் உள்ளது.
அன்பார்ந்த ஆன்மாக்களே! நான் சொல்லும் நல்ல விஷயங்களைக் கேட்க ஒருவர் முழுமனதுடன் இருந்தால் கூடப்போதும். பெரிய கூட்டம் கூட்டி சொற்பொழிவு நடத்த வேண்டும், எல்லோரும் கேட்கவேண்டும் என்பதுமில்லை. கூட்டத்தில் ஒருவர் கவனித்து கேட்டாலும், புரிந்து கொண்டாலும், இந்த கருத்துக்களைச் சொல்லியதின் பயன் உண்டு. புராண நிகழ்வுகளைப்போல் பலநிகழ்வுகள் உலக வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் அந்தப் பகுதி அல்லது அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதாலும், புராண இதிகாச நிகழ்வுகள் எல்லோராலும் அறியப்பட்டவை என்பதாலும், அதிலிருந்து மேற்கோள்கள் சொல்லப்பட்டுள்ளன.
பாரதப்போரில் கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு கீதா உபதேசம் சொல்வதாக வருகின்றது. அது எவ்வளவு பெரிய உயர்ந்த தத்துவம் அது, அந்த விஷயத்தைக் கண்ணன் ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்துக் கொண்டு சொல்லவில்லை. அப்போதைக்கு அந்த உபதேசம் அர்ச்சுனனுக்கு தேவையாயிருந்தது. அது அர்ச்சுனனை அடைந்தது. அவர் மனம் வாங்கிய அந்த நிகழ்வு இன்று நம் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது. உண்மைகளைப் புரிந்து போற்றி பாராட்டி ஏற்றுக் கொள்கின்றோம்.
ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ல ஒரு பெரிய கூட்டமல்ல ஒருசிலர் இருந்தாலே போதுமானது. என்ற எண்ணத்தில் எழுதிய இப்புத்தகம் எத்தனை கைகளில் தவழ்ந்தது, எத்தனை உள்ளங்களில் உண்மைகளை உணர்த்தியது, எத்தனை உயிரின் ஆன்மாக்களுக்கு வாழ்வின் பயணத்தின் பாதையைப் பற்றி புரியவைத்தது, என்பது போதுமானது.
அவர்கள் மூலம் இந்த மனித குலத்தின் மற்றவர்க்கு பரவட்டும். கேட்டாலும் கேட்காவிட்டாலும் தெரிந்ததை ஆன்மாக்களுக்கு ஏன் சொல்லவில்லை என்ற எண்ணம் வரக்கூடாது. கடமையை நான் செய்ய வேண்டும். எனவே கேட்ட, படித்த அனைவரும் 'சந்தோஷப் பூக்களாய் மலரட்டும்’, ஆனந்தத்தை அனுபவிக்ககூடும் என்ற நம்பிக்கையில் ஆசிரியன் முடிவுரை கொள்கின்றான்.
“ஆனந்த பூக்கள் பூத்த பூமியாக மாற்ற வாருங்கள்”, நீங்களும் மாறுங்கள், மற்றவர்களையும் மாற்றுங்கள். வாருங்கள் புதிய ‘சந்தோஷ பூக்கள்’ பூத்த உலகிற்கு. அடையுங்கள் பிறவியின் பயனாகிய ‘’சந்தோஷத்தை”. வாழ்க சந்தோஷ வளமுடன்!-அன்புடன் குருஸ்ரீ பகோரா 

வியாழக்கிழமை, 04 October 2012 12:52

6-2.இறுதியானஉரை!

இறுதியானஉரை!                                                                                                  

உலகியல் வாழ்வில் வெயில் மழை இரண்டும் வேண்டும். மழையை உள்வாங்கி மண் மலர்கின்றது. மரம், செடி, கொடிகள் உயிர்ப்பிக்கின்றன. அதே மண் வெப்பத்தையும் உள்வாங்கி அந்த மரம், செடி, கொடிகள் உயிர் வாழ உதவுகின்றது.
கனியைத் தரவும், உயிர்களுக்கு உலகத்தை காணவும், ரசிக்கவும் காரணமான வெய்யிலில்தான் மனிதன் நடமாடுகின்றான், மழைக்கு ஒதுங்குகின்றான். எப்படியிருந்தபோதும் ஒன்றுடன் ஒன்று இனைந்து செயல்படும் இரண்டின் சேர்க்கையில்தான் உலகின் உயிர்களுக்கு எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
அழகாக இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விருப்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது- அவ்வளவுதான் எனக்கருதவேண்டும். வாழ்வில் பலவீனங்கள் இருக்கும். விருப்பு, வெறுப்புகளும் இருக்கும். எல்லாம் கலந்த கலவைதான் வாழ்வு.
உங்கள் வாழ்வு சிறக்க உங்களுக்கு வேண்டியதை இந்த உலகிலிருந்து நீங்கள்தான் உங்கள் தேவைக்கேற்ப எடுத்து கலந்து கலவையாக்கி உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் “உங்கள் எண்ணம், செயல்பாடுகள் அடங்கிய வாழ்க்கைப் பாதையின் வெற்றி இரகசியம்.”
இதைத்தான், “ஓர் கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும், நடுவயதினனுக்குள்ள மனத்திடமும், இளைஞனுடைய உற்சாகமும், குழந்தையின் இதயத்தன்மையும், தேவர்களே எனக்கு அருளுங்கள். என்றும் எப்போதும் நிலைத்திருக்கும்படிச் செய்யுங்கள்” என புரட்சிக்கவி பாரதியார் பிரார்த்தனை செய்துள்ளார்.
புயல் சின்னத்தால் மழை பெய்து சிறிது ஓய்ந்திருந்தகாலை- இப்பகுதியை நான் எழுதிக்கொண்டிருந்த வேளை- அப்போது ஜன்னல்வழி நான் கண்ட காட்சியின் களையிது: “எதிர்வீட்டில் ஜாதி முல்லை மழை, வெய்யில் ஆதிக்கத்தில் வளர்ந்து, மலர்ந்து, வீட்டின் வெளிப்புறச் சுவரைத்தாண்டி வெளியே நன்கு பரப்பி வளர்ந்து, பாதையில் செல்வோரை தன்மணத்தினால் கவர்ந்து கொண்டிருந்திருக்கின்றது. அவ்வழி சென்ற 60வயது மதிக்கத்தக்க வெண்மையாடை உடுத்திய ஓர் பெண் ஓர் நிமிடம் அவ்விடத்தில் நின்றாள். அப்பூக்களில் இரண்டைப் பறித்து முகர்ந்து ரசித்தாள். பின் சென்றாள். இந்த நிகழ்வைக்கண்ட நான் இயற்கையின் மகிழ்வு, வளர்ச்சி, வனப்பு, மணம் இவ்வுலக மக்களை எந்தளவுக்கு ஈர்க்கின்றது என வியந்தேன்.
அந்த ஒரு நிமிடங்கள் அந்த முதிர்ந்த பெண்ணின் எண்ணங்கள் எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருக்கும். அவரின் இனிமை நிறைந்த, பசுமையாண எண்ணங்கள் எத்தனை எத்தனை அவரின் நினைவுக்குள் மலர்ந்திருக்கும். மனம் மகிழ்வுற்றிருக்கும். அந்த இளமையின் எண்ணத்தோடு அவர் சில அடிகள் நடந்ததாகக்கூட நினைக்கின்றேன்.
எப்போதும் இனிமையான எண்ணங்கள் உங்களுக்கு இளமை உணர்வை ஏற்படுத்தும் என புரிந்து கொள்ளுங்கள். வண்ண வண்ண பூச்சிகள்! வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டால் எல்லோருக்கும் ஆசைபிறக்கும். அவைகள் பறக்கும் போது தெரியும் அழகில் மனம் லயிக்கும். அந்த அழகு ஒரு நிமிடம் உலக நினைவுகளை மறக்கச்செய்யும்.
வண்ணத்துப் பூச்சிகளை சுதந்திரமாக அதன் போக்கில் உலவவிட்டால்தான் அந்த நிகழ்வு.  அது அமர்ந்திருந்தாலும், பறந்தாலும் நாம் ரசிக்கலாம். அதை விடுத்து அவைகளை கையில் பிடித்து அழகு பார்க்க நினைத்தால் அதன் வண்ணங்கள் சிதைந்துவிடும். அதன்பிறகு அது கலையிழந்துவிடும்.
நாம் ரசிக்கின்றோம் என்ற ஆவலில் இதை செய்யக்கூடாது எனத் தெரிந்திருந்தும் நம் மனம் அழகில் மயங்கி அதை விரலில் பிடிக்க முயலும் செயலை செய்கின்றது. கட்டுப்பாடில்லா செயல். அழகை ரசிக்கலாம். அதற்கு தடைபோடக்கூடாது. அவைகள் சுதந்திரமாக உலவுவது என்பது உலகை அழகு மயமாக்கும் ஓர் இயற்கையான செயல். நம் எண்ணங்களால் அந்த நிகழ்விற்கு பங்கம் விளைவிக்கக்கூடாது.
இதுபோன்றே நம்மோடு உறவாடும் உறவுகளையும் அதனதன் போக்கில் உலவவிட்டு அதன் அழகைகண்டு ரசிக்க தெரிந்த மனமாக இருத்தல் வேண்டும். அதன் செயல்களைப் பாராட்ட வேண்டும். பிடிக்கவில்லை எனில் விட்டு விடுங்கள். துன்புறுத்தாதீர்கள். நம் செயலை இவ்வாறு வரையறுத்திக்கொண்டால் உறவுகளிடையே நம் நினைவுகள் உறுதியாகி இறுதியாக நல்லெண்ணபாலம் அமையும். அன்பு தோன்றும்.
முளைவிட்ட அன்பு வளரும், மலரும், பூக்கும், காய்க்கும். நிச்சயம் அதன் பலன் உங்களுக்கு கிடைக்கும். அப்படி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் உங்கள் வாரிசுகளுக்கு, சந்ததியினருக்கு அதன் பலன் போய்ச்சேரும். கர்மபலன்கள் நன்மையாக மாறட்டும். எதிர்மறை எண்ணங்களைவிட்டு, அந்த எண்ணங்களை ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசவேண்டாம் என்பது வேதம் சொல்லும் அறிவுரை.
நான் நன்றாக இருக்கின்றேன். என் நல்ல எண்ணங்களால் மனம், ஆன்மா, உயிரின் உடல் அனைத்தும் நன்றாக நலமுடன் இருக்கின்றது. என் செயல்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. என்னால் எங்கும் ஆனந்தத்தை பூரணமாக உணரமுடிகிறது என்ற எண்ணங்களுக்கு தினமும் நினைவூட்டல் நடந்தால் உனக்குள் ஓர் ஒப்பற்ற மாற்றம் உருவாகி நீ மேனிலையடைவாய் என்கிறது வேதம்.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இயற்கையும், உலகின் உயிர்களையும் சார்ந்தே நம் வாழ்வின் இயக்கம் உள்ளது. நம் உபயோகத்திறக்கு எல்லாம் கொடுத்த, கொடுக்கின்ற உயிரினங்களுக்கு, இயற்கைக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். முதன்மையாக அவைகளை அனுபவிக்க நல்ல ஆரோக்கிய உடலை கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.
வாழ்கையை வாழ்வை அனுபவி! அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் சரி! ஆன்மாவே நீ மனம்விட்டுச் சிரிக்கும்போது உன்னைப் பார்த்த உலகம் நீ சிரித்த காரணம் கண்டு ஆராய்ந்து பங்கு கொள்ளும்!
வாழ்க்கை ஆயிரம் காரணங்கள், நிகழ்வுகள் தரலாம், நீ அழுவதற்கு! நீ அழுதால் உலகம் அதில் பங்கு கொள்ளாது! நீ தனியாய்தான் அழவேண்டும்! ஆனால் நீ வாழப்பிறந்தவன்! வாழ்வை அனுபவிக்க பிறந்தவன்!
அழுவதற்கான காரணங்களை நீக்கிவிட்டு, இந்த உலகிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும், உன் சந்தோஷத்திற்கு! உன் புன்னகைக்கு! உன் வாழ்விற்கு!
எனவே நீ எப்போதும் சந்தோஷத்தையே நினை! சந்தோஷமாகப் பேசு! சந்தோஷமாகச் செயல்படு! சந்தோஷத்தை விதை! சந்தோஷத்தை வளர்! சந்தோஷத்தை அறுவடை செய்து பயன்பெறு! ஆனந்தம்கொள்!
அதுவே உன் நோக்கமாக இருக்கட்டும்! உன் பயணத்தில் வண்ணமயமான “சந்தோஷப்பூக்களை” கண்ட நிம்மதி உன்னுள் தோன்றட்டும்-குருஸ்ரீ பகோரா

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26933050
All
26933050
Your IP: 3.94.102.228
2024-03-29 03:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg