gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

மண்ணேஆதாரம்! மண்ணின் மைந்தர்கள்!                                                  

பூ உலகில் மண் இருப்பதால் இது மண்ணுலகம். மண்ணுலகில் எல்லா உயிர்களும் மண்ணால் ஆனவையே என்கின்றது வேதம். இதை உணர்த்த நம் முன்னோர்கள் உயிரின் ஆன்மா உடலைவிட்டு வெளியேறியதும் காற்றில் அப்படியே அழுகி மற்ற ஜீவராசிகளுக்கு உணவாகிவிடும் சூழலில் உடல்களை மண்ணில் புதைத்து மண்ணோடு சேர்த்தார்கள். அதனால் தான் “அரசனும், ஆண்டியும் மண்ணோடு மண்ணாவான் ஓர்நாள்” என்றார்கள்.
காலப்போக்கில் சில மாற்றங்களுக்குட்பட்டு சிதைமூட்டி எரித்தார்கள். எரித்து சாம்பலை நீரோட்டத்தில் கரைத்து அதையும் மண்ணோடு சேர்த்தார்கள். இது நம் உடல் மண்ணோடு சேர்ந்த கலவை என உணர்த்தவே! நாம் உட்கொள்ளும் உணவுகளும் இந்தமண்ணில் உற்பத்தியாகி நாம்வாழும் பொருட்டு வாழ்நாள் முழுவதும் நம் உடலின் பகுதியாகின்றது.
ஆனால் மண்ணின் நிறம் வேறு. மணம் வேறு. நம் உணவு, உடை, இயக்கம் எல்லாம் இந்த மண்ணை, பூமியைச் சார்ந்ததே! இது சார்ந்த புராணவரலாறு நிகழ்வு ஒன்று. “கிருஷ்ண அவதாரத்தில், அவர் குழந்தையாக இருந்தபோது மண்ணை அள்ளி உண்டதை பார்த்த தாய் யசோதை, கண்ணனை வாயைத் திறக்கச் சொல்லி, அங்கே அவள் கண்டது என்ன? வாயில் மண்ணா? இல்லை! மண்ணுலகம் முழுவதும் தெரியக்கண்டாள். உலக உயிர்கள் அனைத்தும், மரம், செடி, கொடி, மலைகள், நதிகள் எல்லாம் கண்டாள்.
மண்ணைக் காணகேட்டவளுக்கு மண்ணுலகத்தைக் காண்பித்து மண்ணே எல்லாவற்றிற்கும் ஆதாரம் எனத் தெரியவைத்து உள்ளார்.” பாலும், பழமும் விழுங்கிய வாய், ஆன்மா உயிர் நீங்கியபின் மண்ணையும் விழுங்கும்! மறக்கலாமா!
இந்த உடல் மண்ணின் தன்மைகொண்டது. ஓர்நாள் கண்டிப்பாக முழுவதுமாக மண்ணாகும்.  இடையே உயிர்வாழும் நாட்களில் உணர்ச்சிக்காக பேதங்கள் ஏற்பட்டு உடல் அடையும் துயரங்களும், துன்பங்களும் அதிகம் அதிகம். எல்லாம் மண் என்பதைப் புரிந்து கொண்டால் உடலின்- மண்ணின் உணர்ச்சிகளை விட்டுக் கொடுக்கப் பழகிக் கொண்டால் சரியாய்விடும்.
எது? யாருக்கு? எப்படி? என்றெல்லாம் நினையாமல் அவரவர் விருப்பங்களைப் பூர்த்தி செய்து சந்தோஷமாக வாழவிழையும் தருணத்தில், எல்லோரும் மண்ணுக்குச் சொந்தமானவர்கள், உடம்பினர்- “மண்ணின் மைந்தர்கள்” என்பதைப்புரிந்து விட்டுக் கொடுத்து அந்தந்த உயிர்கள்- ஆன்மா- உடல் சந்தோஷப்படுவதற்கு வழி கொடுத்து, அதனால் தானும் சந்தோஷமடைந்து அனைவரும் ஓர்நாள் நம் பயணம் முடித்து இவ்வுடலை மண்ணுக்குத் தரலாம் சந்தோஷ ஆனந்தத்துடன்! மண்ணோடு மண்ணாவதற்கு!
நாம் பிரபஞ்சத்திலிருந்து அனைத்தையும் பெற்று வாழ்கின்றோம். கார்பன், கழிவு எனத்திருப்பித் தருகின்றோம். கொடுக்கல் வாங்கலில் தடை ஏற்பட்டால் அது மரணநிலை. எந்த பூமி உங்களுக்கு உண்பதற்கு எல்லாம் வாரிவழங்கிக் கொண்டிருக்கின்றதோ அப்பூமி ஓர்நாள் நீங்கள் சாய்ந்தவுடன்- உடலிலிருந்து ஆன்மா பிரிந்தவுடன்- தனக்கு உணவாக்கிக் கொள்ளப்போகின்றது. நம் உடல் பிரபஞ்ச அக்னியில் சமர்ப்பணமாகிறது. இந்த இயற்கை நியதி மாற்றமுடியாத ஒன்று. மனித ஆன்மா மட்டுமே இதை உணரும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:08

3-6.நம்பிக்கை!

நம்பிக்கை!                                                                                                                  

உங்கள் மனம் உங்களுக்கு உதவும் என நம்பிக்கை கொள்ளுங்கள். மனம் வேறொருவரின் எண்ணங்களுக்கு செயல்படாது. சிந்திக்காது. எனவே உங்கள் எண்ணங்களின் செயல்பாட்டினை வடிக்க உங்கள் மனம் உதவும் என்று நம்புங்கள். இந்த விழிப்பு உணர்வுதான் உங்கள் திறமைதனை வெளிக்கொணரும் சக்திமிக்க ஆயுதம்.
சந்தோஷமாக இருப்பதாக நினைவு கொள்ளுங்கள். இதற்குத் தூண்டுதலாக உங்களின் நினைவிலிருந்து உங்களுக்கு சந்தோஷம் அளித்த நிகழ்வுகளின் ஒன்றை நினைத்து அதில் ஆழ்ந்து ஆனந்தப்படுங்கள்.
நீங்கள் ஓர் விஷயத்தை உங்கள் உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சொல்ல தயங்கக் கூடிய செய்தியை நன்றாக தீர்மானமாக முடிவு செய்து, இப்படி நடந்தால் நன்மைமயம், இப்படி செய்தால் நல்லது என நினைத்து அவ்வாறே நடக்க வேண்டும் என மனதில் நினைவு கொள்ளுங்கள்.
இதையே திரும்ப திரும்ப நீங்கள் நினைத்தால் அந்த உறுதியான எண்ண அலைகளின் அதிர்வுகள் இயற்கையில் உள்ள கடந்த, நிகழ், எதிர்கால அதிர்வுகளில் கலந்துவிடும்.
ஓர் நிலையில் இந்த அதிர்வுகள் அவரைச் சென்று அடைந்திருக்கும். அந்த ஓர் குறிப்பிட்ட செயலில் அவரின் முடிவு உங்கள் எண்ணங்களை சார்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள். சிலசமயங்களில் பலர், “நான்கூட நினைத்தேன் இப்படி செய்தால் நல்லது என்று! நீங்கள் கூறிவிட்டீர்கள்” என இயல்பான மனநிலையில் கூறுவதைக் காண்கின்றோம்.
இப்படி எண்ணங்களை சொல்லமுடியா நிலையிலும்கூட ஒருவருக்கொருவர் அதிர்வலைகள் மூலம் பரிமாறிக் கொள்கின்றோம். இதைத்தான் ஒரே எண்ண அதிர்வலையில் அடுத்த மனதை இயக்குவது கட்டுப்படுத்துவது என்ற செயல்பாடாகும். ஒருவரை ஒருவர் சந்திக்காமல்கூட ஒரே அதிர்வுகளின் தாக்கத்தில் இருவர் ஒரே சிந்தனையில் செயல்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
காற்றின் அதிர்வலைகளாக அனுப்பப்படும் பேச்சு, பாடல் ஒலி, ஒளிக்காட்சிகள் அதை எதிர்பார்க்கும் நபர்களை சென்று அடைதலை விஞ்ஞான வளர்ச்சியில் காண்கிறோம். இந்த அரிய செயலை நம் உடம்பின் புலன்களும் செய்கின்றது. மனம் செயல்பட்டு சிந்தனையில் பதிய வைத்த விஷயங்கள் அனைத்தும் கனவுகளாய் மலர்கின்றது. பல கனவுகள் நனவாய் மலர்கின்றது. இந்த இடத்திற்கு இதற்கு முன் வந்தது போல ஓர் நினைவு, இவரை எங்கேயோ பார்த்தது போன்ற நினைவு,
இது எல்லாம் காற்றின் அதிர்வுகளை நம் உடல், மனம் வாங்கி செயல் படும்போது ஏற்படுவது. இதில் கடந்த கால அதிர்வுகளை நம் உடல், மனம் ஒன்றி கிரகிக்கும் போது நமக்கு அந்த இடம் பழக்கப் பட்டது போலவும், அதற்கு முன் அந்த இடத்திற்கு வந்தது போலவும் உணருகிறோம்.
நம்மைச்சுற்றி எல்லா அதிர்வுகளும் நிறைந்திருக்கின்றன. நாம் நல்ல நினைவுடன், சந்தோஷமான நிலையில், ஆழ்ந்து தெளிந்த நிலையில் அதிர்வுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டால் நமக்கு பல விபரங்கள் தெளிவாகும். அதில் பல நம் வாழ்விற்கு மிகச் சிறந்த வழிகாட்டிடும். ஒருவர் இப்படிச்செய் எனச்சொல்லித்தர வேண்டியது இல்லை.
உங்களால் இது முடியும். உங்கள் மனத்தால் இதைச் செய்யமுடியும். சந்தோஷமடைந்து வாழ்வின் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்ற நம்பிக்கையை நம்முள் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஓர் செயலுக்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும். யோசனையின் முடிவில் தோன்றும் கருத்துக்களின்மேல் நம்பிக்கைகொண்டு செயல்படவேண்டும்.
ஒருவன் நல்லவன் என்றால் நம்பவேண்டும். தீயவன் என்றால் விலகிவிடவேண்டும். ஒருவனைவிட்டு விலகிவிட்டு அவன் கூறுவதை நம்பக்கூடாது. அதேபோன்று நம்பியவர்களை விட்டு விலகிச் செல்லக்கூடாது. ஒரு இனியகாலையில் இன்றைய பொழுது நன்றாயிருக்கும். நன்றாயிருக்க வேண்டும் என நம்பவேண்டும். செய்கின்ற செயல் நன்றாயிருக்கும் என்ற நம்பிக்கையை முதலில் அடையவேண்டும். முடியாது என்று நினைவு கொள்ளாமல், முடியும் என நினைப்பவனின் மனம் தான் நன்கு செயல் படும்.
உன்னால் செய்ய முடியும் என்பது தன்னம்பிக்கை! உன்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்பது கர்வம்! அதை வெளியில் சொல்வது திமிர்! ஒருவர் நம்பிக்கை கொள்ளலாம். கர்வமும், திமிரும் கொள்ளக்கூடாது! அது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனித்து பிரித்து வேதனையில் ஆழ்த்தும். துன்பத்தில் உழலுவீர்கள்!
எந்தப் பாறையிலும் இடையே புகுந்து படரும் தன்மையுடையது சல்லிவேர்கள். அதைப் போன்றதுதான் மனத்தின் நம்பிக்கை. அமைதியாக சிந்தித்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த செயலிலும் வெற்றி உறுதி.
நம்பிக்கை, மகத்தான செயல். ஒவ்வெருவருக்கும் தேவையான ஒன்று. அது மனத்தின் உறுதியை, வலிமையைக் காட்டும். செயலின் வெற்றி நம்பிக்கையின் அடிப்படையில்தான். நம்பிக்கைக்கு ஊக்கம், உற்சாகம் வேண்டும். இவை எல்லாம் எங்கிருந்து பெறப்படுகின்றது? நம் உடலிருந்துதான். உடல், மன ஆரோக்கியம் தான் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் அடிப்படை.
மகாபாரதத்தின் சூத்திரதாரியாக ஸ்ரீகிருஷ்ணர் விளங்குகின்றார். அந்த ஸ்ரீகிருஷ்ணர் நினைத்திருந்தால் தர்மன் சூதாட்டத்தில் தோற்றிருக்க முடியாது. இந்தக்கதை சூதாட்டத்தின் பாதிப்புக் கதையாகவும் இருந்திருக்காது. கர்மபலன்படி தர்மன் தான் சூதாடுவது கண்ணனுக்கு தெரியக்கூடாது என நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை. சூதாட்டத்தின் தாக்கம் ஏற்பட்டபோது அவரின் உதவியும் கிடைக்கவில்லை.
துரியோதனன் தனக்கு சூதாடவராது என்பதால் சகுனியை தனக்கு பதிலாக நியமித்த போதும், தருமன் கண்ணன்மேல் நம்பிக்கை வைக்கவில்லை. தன்மேல் தனக்குத் தெரியாத ஒன்றின்மேல் நம்பிக்கை கொண்டான். தவறு செய்தான். அவனோடு சேர்ந்த அனைவரும் தண்டனை அடைந்தனர்.
திரௌபதியை துச்சாதனன் துகிலுரிக்க முற்படும்போது அவள் தன் உடைகளைப் பற்றிக் கொண்டு கண்ணா! என்று அழைத்தாள். அப்போது அவள் தன் கரங்களை நம்பினாள்! நிலைமை மோசமானபோது தன் கரங்களை உயர்த்தி உள்ளார்ந்த நம்பிக்கையுடன் மனதின் அடித்தளத்திலிருந்து அழைக்க கண்ணன் வந்தான் உதவி கிடைத்தது.
எனவே எந்த செயலும் நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். ஆத்மார்த்தமான நம்பிக்கையே வெற்றி பெற உதவிடும்! உதவி கிடைக்கும். நம்பிக்கை விதையை மனதில் ஆழமாக ஊன்றி, எண்ணங்களை வார்த்தால் அதிசயங்களாக விளையும் அற்புதம்-நம்பிக்கை.
ராமர் இலங்கைக்குச் செல்ல வானர சேனையின் உதவியுடன் அணைகட்ட வேண்டியிருந்தது. ஆனால் அவரின் பக்தன் அனுமன் தன்னம்பிக்கையால் சமுத்திரத்தை தாண்டினான். நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது.
அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் துளையிட்ட ஓர்காசு கிடைக்க அதிர்ஷ்டம் மிகுந்தது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என் நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான்.
தினமும் பணிக்குப் போகும்போது அந்த நாணயம் தன் சட்டைபையில் மனைவி வைத்துவிட்டாளா, இருக்கின்றதா என தடவிப்பார்த்து உறுதி செய்து நம்பிக்கை மகிழ்வுடன் சென்றான். வாழ்வில் பலபடிகள் முன்னேறினான்.
ஒருநாள் தன் சட்டைப்பையில் உள்ள நாணயத்தை. தனக்கு வாழ்வில் முன்னேற உதவிய அதிர்ஷ்டத்தை எடுத்துப் பார்க்க விரும்பினான். அவன் மனைவி தடுத்தும் கேளாமல் எடுத்துப் பார்த்தான். அப்போது அந்த நாணயத்தில் துளையில்லை.
அதிர்ந்து போனான். அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்த சட்டையை எடுத்து உதறியபோது அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து ஓர் துளையில்லா நாணயத்தை சட்டைப் பையில் மற்றி மாற்றி வைத்துள்ளாள் என தெரியவந்தது.
துளையிட்ட நணயம்- அதிர்ஷ்டமானது அது தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம்தான் அவன் வெற்றிக்குக் காரணம். நாணயத்தில் ஏதுமில்லை! நம்பிக்கைதான் வேலை செய்திருக்கின்றது.
இந்த நிகழ்வு நம்பிக்கை என்பது நீங்கள் ஒன்று உங்கள் மேல் வைப்பது, மற்றொன்று மற்றவர்கள் மேல் வைப்பது. உங்கள்மேல் நம்பிக்கையிருந்தாலும், உங்கள் செயலில் உறுதியான நம்பிக்கை இருந்தாலும் சூழ்நிலை என்ற ஒன்று உங்களை சிக்கலில் சிக்கவைத்திட வாய்ப்புண்டு.
நீங்கள் எவ்வளவு திறமையும், உறுதியும், உற்சாகமும் உடைய நம்பிக்கையாளர் என்றாலும் உங்களைச் சுற்றியுள்ள சூழலைக் கணிக்கும் திறமை, நம்மிடமிருந்தோ அல்லது நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடமிருந்தோ பெற்றுக் கொண்டால்தான் நம் நம்பிக்கையில் முழுவதுமாக வென்றிட முடியும். நாம் கவனக் குறைவினால் விட்ட சின்ன விபரங்களால் தாக்கம் ஏற்படாமலிருக்க இந்த ஆலோசனை உதவி தேவை.
நமது நம்பிக்கைக்குப் பத்திரமானவர்கள் திறமைசாலிகளாக இருந்தாலும், அவர்கள் நாம் நம்பிக்கையுடன் செய்யும் செயலை ஊன்றிக் கவனித்து நமக்கு அன்புடன் கருத்துக்களைக்கூறி உதவி செய்யவேண்டும். அந்த அன்புக்கு நாமும் அவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அன்பு மட்டும் போதாது. நமது வேண்டுகோளும் வேண்டும். இன்னவிதமான உதவி, இன்ன நோக்கத்திற்கு வேனும் என்று தெளிவான வேண்டுகோளை வைக்க வேண்டும்.
காலம் கடந்த வேண்டுகோள், உதவி பலன் அளிக்காது. முன்பே சொல்லியிருக்கலாம் என்ற மன உலைச்சல் இருவருக்கும் தோன்றக்கூடாது. யார் தவறாக இருந்தாலும் காலம் கடந்த உதவி அன்பர்மேல் நாம் கொண்டிருந்த நம்பிக்கையை, அன்பை கெடுத்துவிடும்.
எனவே முறையான வேண்டுகோள், சரியான காலத்தில் கிடைத்தால் தான் நாம் கொண்டிருந்த நம்பிக்கை வெற்றி பெற நம்பிக்கையாளர் உதவிட முடியும். கர்மவினை செயல்பட ஆரம்பித்து நம்பிக்கையாளர் நம் மேல் அன்பு இல்லாதிருந்தாலும், குறைந்திருந்தாலும் அவரின் உதவி காலத்தே கிடைக்காமல் உங்கள் வெற்றி தடைபட வாய்ப்புகள் உண்டு.
ஏற்றத்தாழ்வு எதுவரினும், உண்மை, தர்மம், நியாயம் எது என அறிந்திருந்தாலும் நண்பனின் அன்புக்காக, நண்பன் தன்மீது கொண்ட நம்பிக்கைக்காக தன்னை, தன் உயிரை தியாகம் செய்தான் “கர்ணன்”. அது அவன் கர்மவினைப்படி நடந்தேறியது என்கிறது மகாபாரதம்.
கர்ணன் தன் நண்பனுக்கு உண்மை, தர்மத்தை எடுத்துக்கூறி அன்பின்வழியில் துரியோதனனை மாற்ற முயற்சிக்காமல், அவன் தன்மீது கொண்ட நட்பின் நம்பிக்கை காரணமாக செயல் பட்டது அவன் வினைப்பயன்.
எனவே நம்பிக்கையின் வெற்றி, நமக்குமட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சூழ்நிலையைப் பொறுத்தது. அதே சமயம் வெறும் நம்பிக்கைகள் மட்டும் வெற்றி தராது. பல விஷயங்களில் கர்மவினைப்படிதான் நடக்கும் என்பதற்குச் சான்றுகள் ஏராளம். வாழ்வில் எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்பட்டாலும் முடிவுகள் வேறுவிதமாக இருக்கும்போதுதான் இதன் உண்மை நமக்குப் புரியவருகின்றது.
மனதின் சத்தத்தை கேளாதீர்! அது நம்மை ஏமாற்றிவிடும்! ஆன்மாவின் குரலை கேளுங்கள்! அது நம்மை கைதூக்கி லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பிக்கை குலைக்கும் பேச்சுக்களை கேட்காதீர். அவைகளை மீண்டும் நினையாதீர். உறுதியில்லா நம்பிக்கையில் எதையும் சாதிக்க முடியாது. அசைக்கமுடியா நம்பிக்கைதான் வெற்றியின் ரகசியம். சந்தோஷத்தின் அடிப்படை.
நீங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நீங்கள் கூறுவது வேதவாக்காகிவிடும். முற்றிலும் அன்பின் வயப்பட்டு அன்பு உலகில் இருதோமானால் இந்த வினைகளின் செயல்பாடுகளின் பாதிப்பு நம்மை அவ்வளவாக பாதிக்காது. நமக்காக பல நல்ல அன்பு உள்ளங்கள் இருக்கின்றன. நம்மைச்சுற்றி அன்பு அலைகள் அதிகம் இருக்கும் போது கர்மவினை அலைகளின் தாக்கம் குறைந்து போகும்.
ஓர் படகு நிறைய பொருள்கள் ஏற்றி அக்கரை சொல்கின்றோம். அந்தப்படகு இத்தனை பாரங்களைச் சுமக்கின்றோமே என வருத்தப்படக்கூடாது. அது தன் கடமை என உணரவேண்டும். அதேசமயம் படகு ஓட்டையானால் அதில் சரக்கு ஏற்றமாட்டார்கள். ஓட்டை படகு என ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
இதைப்போல்தான் மனித உடம்பும், உயிரும் குடும்ப பொறுப்புகளைச் சுமக்க வேண்டும். அதைவிடுத்து பொருப்புகளையும் கடமைகளையும் கண்டு வருந்தி உங்களுக்குள்ளே ஓட்டை போட்டுக் கொண்டால் படகுபோல் ஒதுக்கித் தள்ளி வைக்கப்படுவீர்கள்.
உன்னால் முடியும் என்ற நம்பிக்கையில்தான் சமூகத்தில் பொறுப்புகள் உன்னிடம் சேர்கின்றன. அதை திறம்பட உன் செயல்களால் செய்து வெற்றிபெறுவதற்கு முயலவேண்டும். அதுதான் நம்பிக்கையுடன் கூடிய வாழ்வு. அந்த நம்பிக்கை முழுவதும் அன்புடன் கூடியிருந்தால் வெற்றிச் செயல்கள் அதிகமாகி வாழ்வு ஆனந்தமாக நிறையும். சந்தோஷம் நிலைக்கும். அந்த நம்பிக்கையை வியாபாரமாக்காதீர்கள்.
சரணாகதி: சரணடைதல் பெரும்பாலும், தன் இயலாமையை ஒப்புக்கொள்வது, வலிமையின்மையை தெரிவிப்பது ஆகியவையாகும். ஆனால் சரணாகதி என்பது அன்பின் உயர்ந்தநிலை..ஆன்மா சக்தியுடன் சேரும் உச்சநிலை அது.
நீங்கள் சரணடைந்துவிட்டால் உங்கள் செயல்கள், மனநினைவுகள் அர்ப்பணமாகிவிடும். மனதில் சுதந்திரமான எழுச்சி ஏற்படும். அன்பு, அழகு, கருணை, மகிழ்வு இயல்பாக உங்களுக்குள் ஏற்படும்.
ஒருவரிடம் சரணாகதி என்பது நம்மை நமது மனதை ஒழுங்குபடுத்தி ஓர்நிலைப் படுத்தலுக்கு பெயர். ஓர் நிலைப்பட்ட மனமே எதையும் சீர்தூக்கி பார்க்கமுடியும். சிந்தித்து செயலாற்றமுடியும். தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்படும் போதுதான் நம்மிடம் தன்னம்பிக்கை பிறக்கின்றது.
தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்களில் குறைகள் தோன்றினாலும் நம் கவனம் சிதறாமல் குறைகளைந்து வெற்றி காணமுடியும். எனவே சரணாகதி என்பது நமக்கு நாமே தன்னம்பிக்கையை நமக்குள்ளே ஏற்படுத்திக்கொள்ள என நினைக்க வேண்டும். மாறுபாடற்ற பூரணத்துவமான முழு நம்பிகையே சரணாகதி.
ஆனால் பொதுவாக எல்லோருக்கும் சரணாகதி என்பதைவிட தன்னம்பிக்கை பிடித்தமானதாக இருக்கின்றது. நம்மால் முடியாத ஒன்றை நம் நம்பிக்கைக்கு உற்ற ஒருவரிடம், இயலாமையை வெளிப்படுத்தி, அவரால் அந்த நிகழ்வில் நமக்கு உதவமுடியும் என்ற நம்பிக்கையில், செயலில் வெற்றிகானும் வழியே சரணாகதி.
எனவே சரணாகதியும் ஒருவகை நம்பிக்கையே! நம்மில் பலருக்கு நம்மால் முடியாது, இன்னொருவரின் உதவிதேவை, என்ற சரணாகதி நினைப்பை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் இருப்பதில்லை. சரணாகதிக்கு சுயமுயற்சி தேவை.
மகாபாரத்தில், அர்ஜுனன் வீரனாயிருந்தபோதும் போர்க்களத்தில் தன்னால் செயல்பட இயலவில்லை என்ற நிலையில் கிருஷ்ணனிடம் சரணடைந்து, அவரின் கீதா உபதேசத்திற்குப்பின் திறம்பட அவர் ஆலோசனைப்படி செயல்பட்டு வெற்றிகண்டான். துச்சாதனன் துகில் உரியும்போது தன்னால், தன்கைகளால் அதை தடுக்க முடியா நிலையில் கண்ணனிடம் சரணடைந்து தன் மானத்தைக் காத்துக் கொண்டாள் பாஞ்சாலி. இயலாநிலையில் சுயமுயற்சியுடன் கூடிய சரணாகதியே வெற்றிதரும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:07

3-5.உதவி!

உதவி!  


ஹிரோயிசம் என்பது ஓர் கவர்ச்சி. ஓர் எதிர்பார்ப்பு. துன்பப்படும் ஜீவன்களுக்கு ஆறுதல் அளித்து நல்வழிகாட்டுதல் ஒர் நல்ல பண்பு. கதைகளாயிருந்தாலும், நடைமுறை வாழ்க்கையிலும் சரி, எந்த ஆத்மா இதை செய்தாலும் பாராட்டப்படுவர். போற்றப்படுவர். வீர, தீர சாகசங்களாக புகழப்படும்.

சரித்திர சான்றுகளாக்கப்பட்ட நிகழ்வுகள் பல எடுத்துக் காட்டாக சொல்லப்படுவதுமுண்டு. அவைகளை முன்னுதாரனமாக ஏற்று வெற்றி பெற்றவரும் உண்டு. துவண்டு போனவர்களும் உண்டு.
நாம் ஓர் செயல் செய்கின்றோம். அது நாம் எதிர்பார்த்த விளைவு கொடுக்காமல் மாறான பயன் ஏற்படுத்தினால் அதன் தாக்கம் நம் மனதைப் பாதிக்கின்றது. அப்போது நாம் இவ்வாறு செய்து இது போன்று தவறு நடந்து விட்டதே என வருத்தப் படுவதோடு அல்லாமல் வேறுவிதமாக செய்திருந்தால் இந்த பாதிப்பு நமக்கு ஏற்பட்டிருக்காது என மனம் நினைக்கும்.  
அல்லது நமக்கு இந்த செயலில் ஹீரோ போன்று யாராவது உதவி செய்திருந்தால் ஆதரவு, பாதுகாப்பு அளித்திருந்தால் இவ்வாறு நேர்ந்திருக்காது என அங்கலாய்ப்பு கொள்ளும்.
அந்த உதவி நண்பர்கள், உறவினர் மூலமாகவோ  கிடைத்தால் மிகமகிழ்வு. எதிர்பாராமல் முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து கிடைத்தால், புளங்காதிதம் அடைந்து,  தெய்வம்போல் வந்து உதவி என அகமகிழ்கின்றான். முகம் தெரியாத ஆன்மாக்களுக்குச் செய்யும் உதவியானது இறைவனுக்கு செய்யும் அரும்பணி போன்றது.
பிறரின் உதவி என்றால் அதற்கு நம் உற்றார், உறவினர், சொந்தபந்தங்கள், நண்பர்கள் அனைவரிடமும் நாம் பழகும் தன்மையைப் பொருத்தே, அதுவும் நல்ல சகஜமான நேர்மையான தூய உறவுகளாக இருந்தால் மட்டுமே, நமக்கு வேண்டும்போது கிடைக்கும். நாம் உதவி கேட்கு முன்பேகூட கிடைக்கும். அதற்காக மற்ற ஆன்மாக்களோடு உறவாடு!  அவர்களுக்கு பயன் உள்ளவனாக உன்னை மாற்றிக்கொள்! இதுவே உன்னால் உனக்கு முடிந்த உதவி.
நம் கர்மவினைகள் பொறுத்து உதவிகளின் தன்மைகள் குறையலாம், அதிகமும் ஆகலாம். ஆனாலும் கர்மவினைகளின் பாதிப்பு இருந்தாலும், கிடைக்கும் சின்ன சின்ன உதவிகள்கூட மிகப்பெரிய பலத்தைக் கொடுத்து நமக்கு நல்செயல்வழி கிடைக்கும்.  
ஆகவே பின்னால் நினைத்து பயனில்லை. எல்லோரையும் சினேக பாவத்துடன் பாருங்கள், பேசுங்கள். உங்களால் முடிந்த ஆலோசனைகளை வழங்குங்கள். உதவிகளைச் செய்யுங்கள்.
நீங்கள் பலன் கருதாமல் செய்த உதவி, ஆலோசனைகள் நீங்கள் எதிர்பாரா சமயத்தில் எவர் மூலமாகவாவது உங்களுக்கு தேவைப்படும்போது தானாக உதவிக்கரமாக வந்துசேரும். மனிதநேய மனத்துடன் கடுஞ் சொற்களில்லாமல் கனிவுடன் பேசி, செயல் பட்டால், உங்கள் மதிப்பு உயர்ந்து, எல்லோருக்கும் நீங்கள் சிறந்த வழிகாட்டியாய் உதவுவீர்கள்.
உங்கள்மேல் உங்களுக்கும் தன்னம்பிக்கையும், மற்றவர்களுக்கு ஓர் நம்பிக்கையும் மலரும். மலரும் மலர்ச்சிகள் எல்லாம் சந்தோஷம் தருபவையாக அமையும். வாழ்வில் சதோஷம்தான் சந்தோஷிக்கத்தான்.
ஒரு பையன் படிக்கும் பள்ளியில் உலகை மாற்ற விரும்பும் திட்டம் ஒன்றினை தயாரித்து விளக்க அவர்தம் ஆசிரியர் கூறுகிறார். எல்லோரும் அவரவர் கற்பனைக்கேற்ப கூறுகின்றனர். ஒருவன், நாம் முகம் தெரியாத மூன்று பேருக்கு நம்மால் முடிந்த அளவு உதவ வேண்டும். அந்த மூவர் தனக்குத் தெரிந்த மூன்று பேருக்கு உதவும்படியாகச் சொல்லவேண்டும்.
அப்படி அவர்கள் இதையே தொடர்ந்து செய்ய ஆரம்பித்தால், இரண்டு வாரங்களில் 47லட்சத்து, 82ஆயிரத்து, 969 பேருக்கு உதவிகள் கிடைத்திருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர். என்பதாகும். இந்த திட்டத்தை மாணவர்கள் கேலி செய்ய, ஆசிரியர் பாராட்டுகின்றார்.
அந்த மாணவன் இதை செயல்படுத்த முயற்சிக்கின்றான். உதவும் கரங்களின் சங்கிலி உருவாகின்றது. அம்மாவிற்கு இந்த செயல்கள் பிடிக்காததால் வீட்டைவிட்டு வெளியேறி பல துன்பங்களுக்கு ஆளாகின்றான்.
ஆனால் இந்த சங்கிலி அமைப்பினால் பலனடைந்த பத்திரிக்கையாளன் ஒருவன் எளிமையான இந்த திட்டத்தை புகழ்ந்து எழுதத் தொடங்க, திட்டம் வெற்றிபெற ஆரம்பிக்கின்றது. ஓர் ஆள் தன்னால் முடிந்த உதவியை மூன்று பேருக்குச் செய்தால் போதும். உலகம் மாறிவிடும் என்பதே என்பதே இதன் கருத்து. இந்தமுறையில் உதவிகள் அனைவருக்கும் கிடைத்தால் அதன் செயலாக்கம் சிறப்பல்லவா!
நீங்களும் முடிந்தால் ஒரு 3பேருக்காவது ஏதாவது உபயோகரமான உதவியைச் செய்திடுங்கள். உங்களின் உதவிபெற்றவர்களையும், நண்பர்களையும், உங்கள் சொந்தங்களையும், அவர்களால் முடிந்தளவிற்கு உதவிதனைச் செய்யச் செயலாக்கம் கொள்வீர்.
உள்ளூர் பேருந்தில் பயனித்துக் கொண்டிருந்தேன். நடத்துனர் அனைவருக்கும் சீட்டு வழங்கிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன் தன் சட்டையின் மேல் பகுதியிலும், கீழ் ஆடையிலும் தேடினான். ஏதும் கிடைக்காத நிலையில் பதட்டமடைந்தான்.
அழுது விடும் நிலைக்கு வந்து விட்டான். அவனை தினமும் அதே ஊர்தியில் பார்த்து பழகிய நடத்துனர் அவனிடம் அவன் போகவேண்டிய இடத்திற்கானச் சீட்டைப் பத்திரமாக வைக்கச் சொல்லிக் கொடுத்தார்.
தினமும் மீதி பணம் பெற்று அதை தனக்கு வேண்டிய திண்பண்டம் வாங்கி பழக்கப்பட்ட அவனுக்கு, சட்டென்று அதே நினைவில் மீதியைக் கேட்டான் நடத்துனரிடம்.  
சீட்டு வாங்கப் பணமில்லாததால், இறக்கிவிடுவதற்குப் பதிலாக, தினமும் வருபவன் எனக் கருணைக் கொண்டதற்கு, பலன் இதுவா என்ற குழப்பத்தில் இருந்தான். இனி இது போன்ற உதவி செய்ய மனம் வருமா நடத்துனருக்கு! உதவி செய்தவர் மனம் வருந்தும்படி நம் சொல்லும் செயலும் இருக்கக்கூடாது-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:06

3-4.அடக்கம்!

அடக்கம்!                                                                                                                  

“அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்”-அடக்கம் ஒருவனை தேவர்கள் நிலைக்கு உயர்த்தும். அடக்கம் இல்லாதிருந்தால், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் சேர்த்துவிடும்-வள்ளுவம்.
அடக்கத்தில் நாவடக்கம், வாயடக்கம், புலன் அடக்கம் முக்கியமானவைகள். இந்த அடக்கங்கள் உடலுக்கும், உடலால் உள்ளத்திற்கும், உள்ளத்தால் ஆன்மாவிற்கும் நன்மைபயக்கும்.
சுவை உணர்ந்து வாயின் நா உட்கொள்ளும்போது, போதும் என்ற அடக்கம், உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் மூலம் ஆனந்தத்திற்கும் எல்லை வகுக்கும்.
மேலும் சொற் குற்றத்தில் அகப்படாத நாவடக்கம் வேண்டும். தீய சொற்களின் பொருளால் விளையும் தீமைகளினால் மற்ற நண்மைகள் நடைபெறாமல் போகும். சூழ்நிலை அறிந்து, பெருளுணர்ந்து பேசுவதால் நமக்கும் மற்றோருக்கும் பயக்கும் நன்மையிலும் ஆனந்தமுண்டு.
புலன்களை அடக்கும் போது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியமும் ஆனந்தமும் தோன்றும். ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்க முடிந்தால் அதன் பயனை எல்லாப் பிறவியிலும் ஒருவன் பெறமுடியும்.
ஆக அடக்கமானது எல்லாவகையிலும் நமது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு ஆரோக்கியத்தையும் அதனால் ஆனந்தத்தையும் தரவல்லது, அது மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. அதை கடைப்பிடிக்க நாம் நம் புலன்களை, உணர்வுகளைப் பழகிக் கொள்ளவேண்டும்.
கட்டுப்பாடுள்ள வாழ்க்கை சீரானதாக இருக்கும். கட்டுப்பாடு என்பது பிறரின் தலையீடு இன்றி நமக்கு நாமே விதித்துக் கொண்டதாக இருக்கவேண்டும். அதில் கானும் இன்பம் நிலையானது, துன்பமில்லாதது. சீரான சந்தோஷத்திற்கு ஓர் படி.
மனித ஆத்மாக்களே மற்ற ஆன்மாக்களிடம் குறைகள் கண்டுபிடிக்காதீர்கள். அடுத்தவரிடம் ஒரு குறை கண்டு பிடிப்பதற்கு முன்னால் உங்களிடம் அந்தக்குறை உள்ளதா என்பதை கண்டு அதை நீக்க முயலுங்கள். இது சிறந்த அடக்க உணர்ச்சியாகும். எத்தனை குறைகள் மற்றவர்மீது கண்டு என்ன பயன். நீங்கள் அந்தக்குறைகளை உணர்ந்து நீக்கி நிறைவுடன் குறையில்லா வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்.
குறையில்லா உயிர்கள் ஏதுமில்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்ப குறைகள் கொண்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தி அதில் வெற்றிபெற நினைப்பது தவறாகும், அதே குறை உங்களிடம் இருந்தால் அதே முடிவுதான் என நினைத்து பாருங்கள். மனமாற்றம் கொள்ளுங்கள். அடுத்தவர் குறைதனை வெளிப்படுத்தாத அடக்கம் வேண்டும்.
அடக்கம் கொண்ட பணிவுடன் வாழ்பவர்கள் அவர்கள் காலத்தில் உலகம் கவனிக்கத் தவறினாலும், சரித்திரம் அவர்கள் பெயரை சுமந்திருக்கும். பணிவு உள்ளவர்கள் தங்களைத் திருத்தி மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் செயலாக்கம் கொள்ளமுடியும். பணிவும் இன்சொல்லும், எளிமையும் மனித ஆன்மாவிற்கு மலர்ச்சியை தரும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:05

3-3.உலகுக்கு அழகு!

உலகுக்கு அழகு!  


இந்த உலகுக்கு எது அழகு! உலகில் எல்லாம் மலர்ந்து அதனதன் தன்மைகளை எந்த விருப்பும் வெறுப்பும் அற்று தன் கடமையாக செய்யும் செயலின் விதவிதமான வடிவங்களே! எதை நோக்கிலும் அழகு! எங்கும் எதிலும் அழகு! அழகோ அழகு! இந்த அழகை எல்லாம் ரசிக்க ரசிகத்தன்மை மட்டும் போதாது. அமைதியான மன நிலை வேண்டும். ஆர்வம் வேண்டும்! இயற்கையின் தன்மைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்! அப்போதுதான் அந்த சிலிர்ப்பான ரசனை நம்முள் தோன்றும். அதை நாம் உணர்வு பூர்வமாக உணர வேண்டும்! அந்த நிமிடங்களில் தான், இயற்கை நமக்கும் ஏனைய உயிர்களுக்கும் அதனிடத்தே கொண்டுள்ள பாடங்களை, நம்மால் கற்க முடியும்.

ஆன்மாக்களே! உங்களுக்கு ரசிக்கத் தெரியும். நீங்கள் அதற்காக பிறந்தவர்கள். எனவே இவ்வுலகின் ஒவ்வொன்றையும் ரசித்து மகிழுங்கள். சந்தோஷம் அடையுங்கள். ஒரு மலர் பூத்திருக்கின்றது. அதன் வண்ண அழகை, நறுமணத்தை ஒருவன் ரசிக்கின்றான். நுகர்ந்து அனுபவிக்கின்றான். பின் அதைப் பறித்து தன் வயமாக்கப் பார்க்கின்றான்.
ஒர் மலர் மலர்ந்து, இந்த உலகின் அழகை, அது எடுத்த பிறவியின் இடம் இவற்றை ஆவலாக கண்டு மகிழ்வு கொள்கின்றது. அதைச் சுற்றியுள்ள இடத்தை தன் வண்ணத்தால் மலரவைத்து ஆனந்தமயமான சூழலை உருவாக்குகின்றது. இது நமக்கு அதன் பாடம். நாமும் பிறவியில் மலர்ந்து நம்மை சுற்றியுள்ள அனைத்துக்கும் பெருமை சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் மலர்ந்த மலரை பறித்து அதன் தன்மைதனை இழந்து வாடி வதங்க வைக்கும் நம் செயல் நன்றன்று. மலர் தன் பிறவிப் பயன், கடமையாக தன் அழகாலும் நறுமணத்தாலும் தன் பிறப்பிடத்தையும் அல்லது தான் சேருமிடத்தையும் அழகும் நறுமணமும் கமழவைத்து, தானும் உலகின் அழகில் பங்கெடுத்து, வசந்தத்தில் வாழ்ந்து பலமணி நேரங்கள் தன் செயலை செய்கின்றது.
மலர்கள் கோர்த்து மாலைகள் ஆக்கி நற்காரியங்களுக்கு பயன் படுத்துதல் சிறப்பு. அவைகளின் பிறப்பின் பயனை நாம் உயர்த்துகின்றோம். அருள் புரியும் இறைக்கு சமர்ப்பிக்கின்றோம். இந்த செயல்கள் சிறப்பு என்ற நிலை கொள்கின்றது. ஆனால் அந்த மலரின் பிறவிக்கடமையை தடுத்து அது அழகும், மணமும் தரும் காலத்தைக் குறைத்து, நம் மலர் பறிக்கும் ஆசையால் இயற்கையின் சூழலுக்கு ஊறு விளைவிக்கின்றோம்.
நம் மனதிற்கு அழகு காட்டி ஆனந்தம் அளித்து மனம் பரப்பி வசந்த உணர்வுகளை மீட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்தும் அந்த இயற்கையின் அழிவுக்கு நாம் காரணமாக இருக்காமல், பார்த்தும், ரசித்தும், நுகர்ந்தும் அனுபவிக்கும் நினைவுகள் மட்டும் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் ‘மலர்களைப் பறிக்காதீர்கள்’ என்ற பலகை அறிவிப்பை பொது இடங்களில் காண்கின்றோம்.
நம் எல்லோருக்கும் ரசிக்கும் திறமையும், நுகரும் திறமையும் உண்டு. ஒருவரின் மலர் பறிக்கும் ஆசை, அந்த அழகை ரசிக்கும் பலரின் சந்தோஷங்களை வீனடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். பொதுவாக இயற்கையின் வனப்பை அழிக்காமல் அதன் அழகை ரசித்து உணர்ந்து சந்தோஷம் அடையும் நினைவுகளை எப்போதும் கொண்டால் அது மனித குலத்தின் சந்தோஷத்திற்கு வாய்ப்பாகும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:04

3-2.இனிமையான பாடம்!

இனிமையான பாடம்!  


மழையில் நனையும்போது சந்தோஷமடையும் நாம், மழை எவ்வளவு சந்தோஷங்களை உள்ளடக்கி பூமியை நனைக்கின்றது என்பதை பெற்றோரின் அரவனைப்பில் புரிந்து கொள்ளல் வேண்டும். மழை அடக்கி வைத்திருக்கும் ஆனந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு நீர்த்திவலைகள். அதில் ஒரு பகுதியை கண்டு நாம் அடையும் ஆனந்தமே அளவிட முடியாதது.

சந்தோஷங்களை உள்ளடக்கிய மழைத் துளிகளை பூமி எவ்வளவு ஆனந்தத்துடன் ஏற்றுக் கொள்கின்றது. அதன் வெளிப்பாடே மரம், செடி, கொடிகள், இன்னும் பல ஜீவராசிகள். ஆனால் அந்த சந்தோஷத்தை மரம், செடி, கொடிகள் பூத்து பூவாய் மலர்ந்திருந்து வெளிப்படுத்துகின்றபோது மனித ஆன்மாவும், மனமும் பூத்து குலுங்குகின்றது. அதன் அழகில், வண்ண நிறங்களில் சந்தோஷம் கண்டு மயங்கும் நாம் அந்த மரம், செடி, கொடிகள் எல்லாம் எவ்வளவு சந்தோஷத்துடன் பூக்களை மலரவைக்கின்றது என்பதைப் பற்றி சிந்திப்பது இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. எந்தவித பரபரப்பின்றி நம்மைச்சுற்றி நடக்கும் இயற்கையான அற்புத நிகழ்வுகளை கவனியுங்கள். புரிந்து ஆனந்தப்படுங்கள்.
இயற்கையில் பல பாடங்கள் நம் வாழ்விற்கு சொல்லப் பட்டுள்ளது. இயற்கையின் தீவிர உறுப்பினர்களாகிய தாவரங்களும், உயிரினங்களும் தானும் சந்தோஷமாயிருந்து மற்றவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தம் கடமையாற்றுகின்றன. இதைப்போன்றே நம் முன்னோர்கள் வழிவழியாக சந்தோஷங்களில் தோய்ந்திருந்திருப்பதால்தான் மனித குலம் வழி வழியாக தோன்றுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு பரஸ்பர ஆர்வமில்லை என்றால் அடுத்த தலைமுறை இருக்கவே இருக்காது. இது போதை தரும் இயற்கையின் தீராத விளையாட்டு.
ஆனால் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாயிருக்க வேண்டும் என்ற ஒர் உன்னத கருத்து மறக்க விடப்படுகின்றது. உண்மையான அன்பு இன்றி கணவனாக- மனைவியாக வெறும் உறவு முறைகளுக்காக மட்டும் வாழ்வது மிகவும் சித்தரவதையான துன்பம் இருவருக்கும். இணைந்து வாழ்வதில் சுகம் உண்டு. மதிப்பு, அன்பு, ஆசை காரணமாக சேர்ந்திருப்பது சரி. சமூக நிர்பந்தத்திற்காக சேர்ந்து வாழுவது கொடுமை. உறவுகள் புரிந்து கொள்வதற்கு மட்டுமில்லை. ஒன்றோடு ஒன்றாக இனைந்து அன்பு கொள்வதற்குத்தான்.
ஓர்நாளில் சில மணிகள் மட்டுமே, அவசியமாண நேரங்களில் மட்டும் நீங்கள் ஆணாகவும்/ பெண்ணாகவும் நினைத்தால் போதும். எப்போதும் அந்த எண்ணங்களோடு இருக்க வேண்டியதில்லை. மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் சமம், எல்லாம் உயிர்களே என்ற உணர்வுடன் செயல்படுங்கள். அன்பு நிறைந்த வாழ்க்கையை அடையாளம் காண்பீர்.
முன்னோர்கள் வழித்தோன்றலாக நாமும் தோன்றி அன்பு கொண்டு சந்தோஷத்தை நாடவேண்டும். நம் முன்னோர்கள், பெற்றோர்கள் அடைந்த ஆனந்தம் நாமும் அடையவேண்டும். மலர்கள் போல், மழையைப்போல் தானும் சந்தோஷம் அடைந்து தன்னுடன் சேர்பவர்களையும் சந்தோஷப் படுத்துதல்தான் நியதி. குழந்தையாக இருந்தபோது ஒவ்வொருவரும் தன்னை சுற்றியிருந்தவர்களைச் சந்தோஷப் படுத்தியது போல் எப்போதும் முயற்சிக்க வேண்டும்.
பசிப்பிணிமருந்து: தமிழ் மீது பற்றுகொண்ட ஆனந்தரங்கம் பிள்ளையைப் பார்க்க மதுரகவிராயர் சென்றபோது அவர் வயல் வெளியில் சிந்திக்கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். கவிராயரை சிறிது இருக்கச்செல்லி தன் செயலை தொடர்ந்து செய்தார்.
பொறுமையிழந்த கவி, தன் பரபரப்பை உணர்த்தவே, ஏன் பறக்கின்றீர்கள்? என்ற பிள்ளையின் வார்த்தைகள் கவியின் மனதை தைக்க அவர், 'கொக்கு பறக்கும்! புறா பறக்கும்! குயில் பறக்கும்! நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்! நான் ஏன் பறப்பேன் நராதிபனே! திக்கு விசயம் செலுத்தி, உயர் செங்கோல் நடத்தும் செய்துங்கன் பக்கல் இருக்க, ஒரு நாளும் பறவேன்! பறவேன்! பறவேன்! எனப் பாடினார்.
பாடலின் சுவையை ரசித்த பிள்ளை அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று அவர் முன் தலைவாழை இலை போட, பசியுடனிருந்த கவி சாப்பிட தயாரானார். ஆனால் வெள்ளித் தட்டில் பொற்காசுகளை கொண்டுவந்து இலையில் போட்டார் பிள்ளை. தங்கம் உயர்வுதான். ஆனால் அப்போது பசியை போக்குமா!
விழித்த புலவரிடம், வயல் வெளியில் உதிர்ந்த நெல்மணிகளை நான் பொறுக்கிய போது அற்பமாக பார்த்தீர்கள்! அது நெல் அல்ல! பசிப்பிணி மருந்து என்றார். கவிராயர், வள்ளலே! பசியின் கொடுமை தாங்காமல் அவசரப்படுத்திவிட்டேன் என்றார். ஆனந்தரங்கம் பிள்ளை கவிராயருடன் உணவருந்தி அந்த பொற்காசுகளை அவருக்கு தந்து சந்தோஷத்துடன் வழி அனுப்பினார்.
சோதனைகள், தடைகள் வரலாம். அவைகளைத் தாண்டி வெற்றி கண்டு சந்தோஷிக்க முயல வேண்டும். சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம்! எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று நினைவு கூடாது. சரியான முறையான செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை அடைய முயல வேண்டும்.
நமக்கு என்ன செய்கிறோம் என புரியாத மழலைப் பருவத்தில் நம் செயல்கள் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்கும். உறவும் சுற்றமும் ஆனந்தமடையும். அதே பருவம் கடந்து சிந்திக்கும் திறனும் செயல்படும் திறனும் அடைந்தபின் நாம் செய்யும் தவறுகளை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.
எனவே நம்மைச் சுற்றியுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாக, சந்தோஷப்படும் வடிவில் செயல் அமையவேண்டும். அந்த வழி செயல்பாடுகளை நாம் தெரிந்து, செயல்பட்டு, நாமும் சந்தோஷித்து, நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சந்தோஷிக்கும் வகையில் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.
மலர்கள் எங்கு மலர்ந்தாலும் இருக்கும், வளர்ந்த, பிறந்த சூழலினின்று வேறுபட்டு தன் பிறவிக்குண்டான மனத்தையும் அழகையும் அனைவருக்கும் தறுதல் போன்று, நாமும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும், நம்மை தோன்றுவித்த பெற்றோர்கள், முன்னோர்கள் வழி பெருமைகளை வெளிப்படுத்தி நாமும் சந்தோஷம் கண்டு, அனைவரிடமும் காணவேண்டும்.
வாழ்வில் என்னென்ன சோதனைகள், குழப்பங்கள் வந்தடைந்தாலும் மலர் போன்று தெளிந்து மணம் பரப்ப கற்றுக் கொள்ள வேண்டும். மனம் மணந்தால் முகம் மலரும். அந்த மலர்ந்த முகம், நமக்கு முன்னேற்றப் பாதையில் மிகவும் உதவியளித்து வாழ்வில் வெற்றிதந்து சந்தோஷமாக பயணம் செய்ய உதவும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:01

3-1.வேதம்!

வேதம்!


வேதம் என்பது கடைபிடிக்கமுடியாத ஒன்றும், செயல் படுத்த முடியாதது ஒன்று மில்லை. உயரத்தில் உள்ளது, எட்டிப்பிடிக்க முடியாதது, இருக்கும் இடம் தெரியவில்லை, கண்டுபிடிக்க முடியாதது என எதையும் நினைக்கக்கூடாது. எதையும் சாதிக்க முடியும், எட்டிப்பிடிக்க முடியும், கண்டு கொள்ள முடியும் என்ற உறுதி வேண்டும்.

ஒன்றை வேறொன்று என புரிந்துகொண்டபோது, அதை ஆரய்ந்துபின் உண்மையில் அது என்னவென்று தெரிந்துகொள்ள, நமது அறியாமையை அகற்றும் வெளிச்சமாகத் திகழ்வது வேதம். சாதாரண கயிறுகூட இருட்டில் பாம்பாகத் தெரிவது, விளக்கை ஏற்றியபின் உண்மைதனை அறிகிறோம். இந்த உண்மைகளை விளக்கி அச்சம், பயம் நீக்கும் பணியை வெளிச்சம்போல் வேதம் செய்கின்றது.
எந்த இதிகாசத்திலும், புராணத்திலும் நல்ல சிந்திக்கும் திறன் கொண்டவன், தன் திறமைகளை வளர்த்துக் கொண்டவன், பாசமும் நேசமும் கொண்டவன், மன உறுதியுடன் செயல் படுபவன் கொண்ட லட்சியங்கள் தோற்றதாக இல்லவே இல்லை.
அதற்கான மன உறுதி, முயற்சியை செயலாக்கும் திறன், கொஞ்சம் கர்மபலன் இருந்தால் வெற்றிக்காண வழி கிடைக்கும். அந்த பாதையில் செயலாக்கம் நடந்தால் சிறப்பாகும். நமது ஆன்மா சிறப்பானது, தூய்மையானது. ஞானத்துடன் சிந்தித்தால் எல்லாம் சிறப்பாகும். பிரபஞ்சத்தின் முந்தைய ஆற்றல்களெல்லாம் நம் முன்னோர்கள் உறுதியுடன் செயல் பட்டது.
நம்மைச்சுற்றி இருள் ஏதுமில்லை, நீங்கள் பிரகாசித்தால். நம்மில் யாரும் எதிலும் பலவீனமானவர்கள் இல்லை. எல்லா வகையிலும் திடகாத்திரமானவர்களே! தவறு என நீங்கள் நினைப்பதை, மற்றவர்கள் அவ்வறு சொல்லக்கூடும் எனத் தோன்றினாலும் செய்யாதீர்கள். திறன் உங்களிடம் இல்லை என்ற நினைவை கொள்ளாதீர். அந்த தீய கருத்தை உங்களுள் பரவாமல் முற்றிலும் அழித்து விடுங்கள்.
நல்லது செய்ய உண்மையில் விரும்பினால் தான் நமக்கு நிறைய சிந்தனைகள், செயல் வழிமுறைகள், காலம் எல்லாம் கிடைக்கும். பல லட்சியங்களை மனதில் கொள்ளலாம். நாம் செய்யும் தவறுகளை கண்டு ஒன்றும் சொல்லாமல், நமக்கேன் என என்னும் உறவினர்கள், நண்பர்களை நாம் பெற்றததுதான் நமது கர்ம பலன். முதலில் ஒன்றைச்சொல்லி அடுத்து அதை சூழ்நிலைக்கேற்ப சந்தர்ப்பவாதமாக மாற்றிச் சொல்லும் ஆன்மாக்கள் நம்மைச்சுற்றி அதிகம்.
நமது லட்சியத்திற்கு இவைகள் இலக்கணமானது இல்லை. எனவே நடைமுறை வாழ்க்கையில் நமது லட்சியத்தை இனைக்க வேண்டும். அந்த ஒன்றை எப்போதும் சிந்தித்தால் சிறப்பாகும். நமக்கு இருப்பது ஒரே உலகம், ஒரே வாழ்க்கை, ஒரே லட்சியம் வெற்றி கொள்வதுதான், சந்தோஷப்படுவதுதான், எல்லாமே சந்தோஷம் என்ற ஒன்றுக்குத்தான் நாம் செயல் படுகின்றோம். செயல் படவேண்டும்.
வேறுபாடுகள் தோன்றினாலும் உயர்ந்த நோக்கில் வேறுபாடுகள் களையப்பட்டு மறைந்தே தீரும் என்பது திண்ணம். உயர்ந்த லட்சிய நோக்கில் எல்லாமே வேறுபாடுகளற்றுத் தெரியும். வானிலிருந்து பார்த்தால் மலையும் மடுவும், மரமும் புல்லும், மாடியும் குடிலும் உயர வேறுபாடுகளின்றி தெரியும்.
அந்த வேறுபாடற்ற உயரத்திற்கு உங்கள் லட்சியங்கள் உயரவேண்டும். உயர்ந்த லட்சியங்கள்கொண்டு நோக்கின் எல்லாவற்றையும் வேறுபாடின்றி பார்க்கமுடியும். இதுவே வேதத்தின் கூற்று. முதலில் தாவரங்களும் பின் மனித இனமும் தோற்றிவிக்கப்பட்டது என்கின்றது வேதம். தாவரங்களின் தோற்றம் ஜீவராசிகளுக்கு உணவாவதே! அதாவது உணவை படைத்தபின் உண்பவனை தோற்றுவித்தவனின் அருள் அது. ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்குமுன் அதற்கு தாய்ப்பால் தயாராகிவிடும் என்பது வேதங்கள் கூறும் உண்மை.
மனதிற்கு மனம் எண்ண வேறுபாடுகளிருந்தாலும், உடலின் ஆன்மா, ஆன்மாவின் உடல் ஓர் அற்புதம். அதன் உழைப்பு சிறப்பு. அதன் செயல் பாடுகள் சிறப்பு. உழைப்பின் அருமை புரிந்தால்தான் வெற்றியின் சந்தோஷம், மழையின் அருமை வெய்யிலும், வெய்யிலின் அருமை மழையிலும் தெரிவதுபோல் தெரியும். புரியும். சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். நம் பெற்றோர்கள் ஒற்றுமையில், உழைப்பில் உறுவான இந்த உடலின் அருமை நமக்கு புரிய வேண்டும். அதன் உள்ளே உள்ள ஆன்மாவை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் அதன்வழி சென்று அதன் செயல்களை நன்முறைப் படுத்த முடியும்.
புராண, இதிகாச, இலக்கியங்களை, நீதி நூல்களை, இலக்கணங்களை படிப்பதால் வாழ்வில் உன்னத நிலைக்கு வரமுடியாது. இதைத்தான் வாசக ஞானத்தால் சுகம் வருமோ? என்றார் தாயுமானவர். எல்லாவற்றையும் படித்தலின் மூலம் நம்மை நாமே படிக்கவேண்டும். உன்னை அறிந்துகொள் என்பதே ‘உபநிடதங்களின் அடிப்படை உபதேசம்’.
தனிமை: என்ன என்ன சொல்லி ஊட்டமளித்து ஊக்கத்துடன் பெற்றோர்கள் வளர்த்த உடல், அந்த உடலின் ஆன்மா இது. அவர்களிடம் ஒன்றி வளர வேண்டும். வளர்ந்த பின்னும் ஒன்றிப் போகவேண்டும். அப்போதுதான் தனிமை என்ற எண்ணம் எந்நாளும் தோன்றாது, ஓர் நம்பிக்கையான தன்னம்பிக்கை கிடைக்கும். ஆதரவான அரவனைப்பு எல்லா நிலையிலும் எல்லா சுற்றத்திலிருந்தும் கிடைக்கும். ஒவ்வொரு ஆன்மாவும் தன் பயணத்தில் தன்மீது படிந்துள்ள எல்லா அடையாளங்களிலும்- தந்தை, தாய், கணவன், மனைவி, நடுத்தரவயது ஆண்/பெண், இளைஞன், இளைஞி ஆக எந்த அடையாளத்திலும் அந்த அரவனைப்பைப் பெறமுடியும்.
தெடரும் சந்தோஷம்: மனமும் உடலும் ஆக்க சக்தியைத்தான் வெளிப்படுத்தும். உங்கள் சிந்தனை அதன் வழி சென்றால் அந்த சக்தி வெற்றி சக்தியாக மாறவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு மனமும் உடலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மனது சந்தோஷப்பட்டால் உடலும் சந்தோஷிக்கும்.
அதற்கு நாம் நம் வாழ்வில் இதற்கு முன் நமக்கு சந்தோஷம் கிடைந்த சின்ன சின்ன நிகழ்வுகளை நினைவில் கொண்டு வந்தால், அதன் மூலம் ஓர் ஊமை சந்தோஷம் மனதிற்குள் தோன்றி அது உடல்வழி பரவி, உடலும் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிடும். அதே போன்று சந்தோஷங்களை ஏற்படுத்தும் விஷயங்களை திட்டமிடுங்கள், செயல் படுங்கள். பிறகு எங்கும் எப்போதும் சந்தோஷம், சந்தோஷம் என்ற ஆனந்தம் என்றும் நம்முடன் தொடரும். நாம் நாடுவது சந்தோஷம்தான்.
ஆனாலும் நாம் எதிர்பார துன்பங்கள் இடைஇடையே வரும். அப்போதுதான் சந்தோஷத்தின் அருமை தெரியவரும். தொடர் சந்தோஷங்களும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் துயரமாகிவிடும். எதிர்பார்த்து கிடைக்காமல் துயரங்களுக்கிடையே நாம் தேடியடைந்த சந்தோஷங்களே நிறைவான சந்தோஷத்தை தொடர்ந்து தரும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:59

2-9.ஆசை! பேராசைப் பூக்கள்!

ஆசை! பேராசைப் பூக்கள்!    
                                                                     

செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகத்தில் திளைத்தாலும், துன்பத்தில் உழன்றாலும், மனித ஆத்மா மண்ணுலகில் வாழத்தான் விரும்புகின்றது. இதற்கு ஆசைதான் காரணம். நெருப்பை புகை மறைக்கும், துசிப்படலம் படிந்து கண்ணாடி மறையும், வளரும் சிசு கருப்பையில் மறைந்திருக்கும். ஆசைப் படலம் அறிவை மறைக்கும்.
விதைகள், கொட்டைகளில் எண்ணெய் இருப்பதால்தான் அவைகளை அரைத்து பிழிகின்றோம். மனதில் அளவற்ற ஆசைகள் இருந்தால் அவைகளால் பிசையப்பட்டு, எண்ணெய் வருதுபோன்ற துன்பங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி, பயம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளே எண்ணற்ற ஆசைகளை, எண்ணத்தின் கருத்துகளாக மனதில் தோன்றுவிப்பதாக பதஞ்சலி முனிவர் சொல்கிறார்.
ஒரு கணவனும் மனைவியும் ஆசைகளைத் துறந்து துறவறம் மேற்கொண்டு யாத்திரை புறப்பட்டனர். முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் ஒரு வைரக்கல் கிடப்பதைப் பார்த்து மனைவி காணநேர்ந்தால் அவளுக்கு ஆசை வந்திடும் என்றென்னி அதை புதைக்க குழி தோண்டினான். அதை புதைக்கும் போது அங்கு வந்த மனைவி என்ன புதைக்கிறீர்கள் எனக் கேட்டு மன்னைத் தோண்டி வைரத்தைக் கண்டாள்.
தான் பார்த்தால் ஆசைகள் திருப்பி வந்து விடும் என்று கணவன் நினைத்தது புரிந்தது. உடனே சமாளித்துக் கொண்டு அன்பரே, வைரத்துக்கும் சாதாரண கல்லுக்கும் வித்தியாசம் தெரிவதாய் இருந்தால் ஏன் உலகத்தை துறந்து வந்தீர்கள் என்றார். தன்னைவிட தன் மனைவி ஆசைகளை துறந்துவிட்டாள் என்பது கண்டார்.
உங்களால் இயலாத ஆயிரக்கனக்கான விஷயங்களை எல்லாம் செய்ய முடிந்தால் பேரானந்தம். அந்த ஆசை எல்லோருக்கும் உண்டு. ஆனால் ஆசைகளை நிறைவேற்ற வழியின்றி போகும்போது துன்பம் என்ற வித்தியாசமான ஆனால் கட்டாயமான செயல் நடைபெறுகின்றது. அதற்கு நீங்கள்தான் காரணம். உங்களின் பேராசையான அளவை மிஞ்சும் ஆசைகளே காரணம் எனப்புரிந்து கொள்ளல் நலம் பயக்கும்.
புலனடக்கம் இல்லா ஆசை, பேராசையாகி எப்படியும் வெற்றியடைய வேண்டும் என்ற ஓர் நிலையில் பிறர் பொருளை நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அடைய முயற்சிப்பதாகும். இந்த கவர்தல் ஒருவகை திருட்டாகும். தார்மீக எண்ணம் உடையவர்களுக்கு அது தவறு என்பது தெரியும். அவ்வாறு தவறு என நினைத்து, பிறர் பொருளை களவாடாமல் இருத்தலை ‘அஸ்தேயா’ எனக் கூறுகின்றது மனுதர்ம சாஸ்திரம். நற்செயல்களின்று சட்டவிரோதமான வகையில் பொருள்களை அடைவதும் ஓர்வகைத் திருட்டே!
உங்கள் தேவைக்கு அதிகமாக நீங்கள் சேர்த்து வைத்தால், அந்தச் செயல் தார்மீகமாக பிறருக்கு  இவ்வுலகில் கிடைக்கக் கூடிய முன்னேற்றங்களுக்கு நீங்கள் தடையாக இருக்கின்றீர்கள் எனப்பொருள்படும். உலகின் மற்ற ஆன்மாக்களின் அளவிடமுடியாத சந்தர்ப்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாக அபகரித்துக் கொள்கின்றீர்கள் என்று அர்த்தம். எனவே புலன்கள் பேராசை கொள்ளாமல் இருக்க பழக்க வேண்டும், உங்களின் பேராசை ஆசைகளைத் தீர்க்காது. ஆனால் ஆசைகளை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.
ஆசைப்பட்டதை அடைய முயற்சிக்கின்றான். திட்டம் தீட்டுகிறான். செயல் வடிவாக்கி செயல்படுகின்றான். செயல்படும்போது தோன்றும் இடையூறுகளை கடக்க முயற்சிக்கும்போது தான் அடைய நினைத்து ஆசைப்பட்டது சரியா! என்று நினைக்கத் தோன்றும். அப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. மீண்டும் ஒருமுறை சிந்தித்து ஆசைப்பட்டது உண்மை. நியாமானதுதான். சரியானதுதான் என முடிவுகொண்டு மீண்டும் சலனமின்றி உறுதியுடன் செயல்படுங்கள். சரியானது இல்லை என உங்கள் மனம் நினைத்தால் அந்த செயலை விட்டு விடுங்கள்.
இடர்பாடு களையும்போது நீங்கள் சரியான வழியில் நேர்மையான முறையில் செயல்படுகின்றீர்களா? என உறுதி செய்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கு கேடு விளைவிக்காமல், துயரங்கள் ஏற்படாத முறையில் செயல்படுங்கள். நீங்கள் செய்யும் செயலுக்குள் ஓர் நியாயம் இருப்பதை உறுதிசெய்து செயல்படுங்கள். யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நேர்மையுடன் வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்வு தரமானது, நிரந்தரமானது.
ஆசையின் செயல்முடிவில் வெற்றியின் மகிழ்ச்சி சந்தோஷமாகும்போது அந்த அளவுடன் விட்டு விடுங்கள். மேலும் மேலும் ஆசைவளர்த்து, செயல்கள் செய்து, வெற்றியடைய நினைக்கும்போது, நல்வழிகளைத்தாண்டி நேர்மையற்ற முறையில், எப்படியாவது வெற்றியடைய வேண்டும் என்ற வெறியாக மாறக்கூடாது. அடைந்த வெற்றியின் மகிழ்வு நினைவுவெறி உங்களை மாற்றிவிடக்கூடாது. மனிதத்தன்மை இழந்துவிடுவீர்கள்.
மீண்டும் மீண்டும் ஆசைகொண்டு, நீங்கள் நினைத்த அளவுக்கதிகமான ஆசைகள் நிறைவேறுவது என்பது, “கடல் நீரைப்பருகி உங்கள் தாகத்தைப் போக்கிக்கொள்வது நினைப்பது போலாகும்.” கடல் நீர் பருகப்பருக தாகம் அதிகமாகுமே தவிர தாகம் குறையாது. அடங்கவும் அடங்காது. உங்கள் துன்பமும் துயரமும் அதிகமாகும்.
எல்லா உயிர்களுக்கும் ஆசை உண்டு. ஆசை இனிமையானது. அது தேங்காயின் உள்ளே உள்ள இளநீர் போன்று சுவையானது. உலகின் ஆசைகளின் அடையாளம் இளநீர். அந்த நீர் தேங்காயின் மேல் உள்ள ஓடு உடையாது என நம்பிக் கொண்டிருக்கின்றது. ஆனால் காலப்போக்கில் அந்த ஓடு உடைபடும். காலம் அதிகமானால் நீர் வற்றி தேங்காய் கொப்பரையாக மாறி முதிர்ந்த நிலையை அடைந்துவிடும். அன்புள்ள ஆன்மாக்களே! இளநீர் போன்ற ஆசைகளால் நம் உடல் கொப்பரைத் தேங்காயைப்போல் உறுதியாகும் நிலையானதாகும் என எண்ணி மேலும் மேலும் ஆசைகளை வளர்த்துக் கொள்கின்றோம்!
இந்த உடல் மாயையானது, என்றும் சாசுவதமானது அல்ல. கொப்பரை போலாகாது. உண்மையை உணர்ந்துகொள். அனுபவமும் ஞானமும் கைகோர்த்து எண்ணங்கள் முதிற்சியுற்று உலக ஆசைகள் குறைந்து அந்த ஆசைகளை விட்டுவிலகி வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இளநீர் வற்றிய முற்றிய தேங்காயை இறைவனுக்கு படைப்பதுபோல எண்ணங்களால் முதிர்வுற்று பக்குவமான உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
நேர்மையான வழியில், செயலினால் கிடைக்கும் ஆனந்தத்தை அடைந்து அதிகம் ஆசைப்படாமல் மகிழ்வுடன் வாழப் பழகுங்கள். “ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பன் மாலகன். கிருஷ்ணனிடம் அனைத்து வித்தைகளையும் கற்றவன். கண்ணனிடம் அனைத்தும் கற்றதனால் அகந்தையும், மமதையும் அடைந்து மதியிழந்து இருந்ததன் காரணமாக அவனுள் ஓர் பேராசை புகுந்து கண்ணனிடமிருந்த சக்ராயுதத்தை பிரயோகிக்க ஆசைப்பட்டான்.
கண்ணன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அந்தக் கலையைக் கற்றான். கற்றுத்தேர்ந்தவன் அதை விண்ணில் பிரயோகித்தான். அப்போது அவன் மனதில் தானும் கண்ணனைப்போல் சமபலம் உள்ளவன் என நினைத்தான். அந்த அபரிதமான எண்ணத்தினால் கைவிரலை கன்னத்தில் வைத்து மகிழ்ந்திருந்தான். அவன் பிரயோகித்த சக்ராயுதம் திரும்ப அவன் விரல்களுக்கு வரும்போது கழுத்து அறுபட்டு இறந்தான்,” என்று புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மாலகனின் அளவில்லாமல்போன ஆசையின், பேராசையின் அளவு. அதுவே அவனின் முடிவு. எனவே ஆசை கொள்ளுங்கள். ஆசையின் பலனை அளவான வெற்றியாக காணுங்கள். பேராசை கொள்ளாதீர்கள்! பேராசை இல்லா மனம் ராஜயோகத்துடன் எல்லா செல்வங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்வில் பயணிக்கும்.
தனக்கு என சொத்து, நிலம் வாங்க ஆசைப்பட்டான் ஒருவன். நாளுக்குநாள் ஆசை மிகுதியாயிற்று. போராசை கொண்டான். அவனால் ஆசைதான் கொள்ள முடிந்தது அன்றி எவ்வளவு முயற்சித்தும் கொஞ்சம் கூட நிலம் தனக்கு என சொந்தமாக்கி கொள்ள முடியவில்லை. அவ்வூரின் பெரிய தனவந்தரை சந்தித்து தன் விருப்பையும், இயலாமையும் கூறினான். அவர் இவ்வளவு நாளில் உனக்கென்று நிலம் பெறவில்லையா! சரி! இங்கிருந்து ஓடு. எவ்வளவு தூரம் ஓடுகிறாயோ அதுவரை உள்ள நிலத்தை நான் உனக்கு அளிக்கின்றேன் என்றார்.
மனிதனின் ஆசைத் துரத்த கால்கள் ஓடியது, ஓடினான், ஓடிக்கொண்டேயிருந்தான். உடல்நிலை காரணமாக அவனால் ஓடமுடியவில்லை. திருப்பிப் பார்த்தான். இவ்வளவுதான? என நினைத்து இன்னும் கொஞ்சம், கொஞ்சம் என ஓடினான். ஓர் நிலையில் அவனால் ஓடமுடியவில்லை. மயக்கமடைந்தான். திடீர் வேகம் என ஓடியதால் களைப்பு எல்லாம் ஒன்றுசேர்ந்து மூச்சு முட்டி மாரடைப்பால் இறந்தான். அந்த தனவந்தர் அவனுக்கு அவன் ஓடிய நிலத்தில் ஆறு அடி நிலம் ஒதுக்கினார். அது அவன் உடலுக்கு போதுமானதாயிருந்தது. ஆசை அளவுடன் இருந்திருந்தால் வளமுடன் இறுதிவரை சந்தோஷத்துடன் வாழலாம். இனி அவன் அதை புரிந்து என்ன பயன்?
கிருஷ்ணன் என்றதும் அவரின் லீலைகள் அனைவருக்கும் ஞாபகம் வரும். கிருஷ்ணலீலை, கோபிர்களிடம் கண்ணன் லீலை என்று சொன்னாலும் “மாயாதீதன்” என கிருஷ்ணனை சொல்கின்றோம். அவர் அவதாரம். அது ரசிக்கப்படுகின்றது. ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பரந்தாமன்கூட ஆசை மோகத்தில் தன்னையிழந்து பித்து கொண்டிருந்ததாக புராணங்கள் பகர்கின்றது. நாம் மனிதர்கள். நாமும் அதுபோல் மோகம், கவர்ச்சி என்ற மாயைக்கு உட்பட்டு பேராசையினால் ‘மாயாதீதன்’ ஆகி சோகத்தில் உழலாமல் சந்தோஷத்தின் வாயிலில் நுழைவோம்.
உலகத்தில் உள்ளவனவற்றிற்கு ஆசைப்படு! அதன்மீது அளவற்ற பற்று வைக்காதே! அது ஆபத்து! நீ ஆசைபட்டது உன்னை வந்தடையவில்லை என வருந்துகின்றதா! இல்லையே! ஆனால் நீ மட்டும் அதற்காக மனதை கஷ்டப்படுத்தி, உடலை வருத்தி எத்தனை துன்பம் அடைகின்றாய்! அந்த நிலை உன் முகத்தில் வேதனையுடன் தெரிய ஆரம்பிக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடியில் உன்னைப் பார்! அப்போது தெரியும் உன் நிலை! ஒரு கண்ணாடியைப்போல் இரு! நீ பார்க்கும் போது மட்டும் உன் உருவைக் காட்டும் அது உன்னுருவை எப்போதும் நினைப்பதில்லை! நீ மீண்டும் காட்டும் வரை! அது துன்பமில்லா நிலை! பற்றுதலில்லா நிலை! ஆசைபடு! பற்று கொண்டு பேராசை கொள்ளாதே!
அரசராயிருந்தபோது எதிரியை வென்று திரும்பிய விசுவாமித்திரர், குல குரு வசிஷ்டரை வணங்க ஆசிரம் சென்றார். அங்கு அவரது படைகளுக்கும் சேர்ந்து விருந்து படைக்கப்பட்டது. அந்தக்காட்டில் அப்படிஒரு விருந்தை எதிர்பார்க்காதவர் அதன் காரணத்தை கேட்டார். வசிஷ்டர் காமதேனுவின் சிறப்பு அது என்றார். அதை தனக்கு அளித்தால் அன்றாடம் அதைப் பயன்படுத்தலாம் எனக்கருதி குருவிடம் வேண்டுகோள் விடுத்தார். குரு காமதேனு விரும்பினால் அழைத்துப்போ என்றார்.
காமதேனு மறுக்கவே, குருவிற்கு மனமில்லை எனக்கருதி அவரிடம் போர் தொடுத்தார். போரில் தோற்ற விசுவாமித்திரர் அவரை தவபலத்தினால் வெல்ல வேண்டும் என முடிவெடுத்தார். விசுவாமித்திரர் வாழ்க்கை திசைமாறக் காரணமாயிருந்தது அவரின் பேராசையே! அரசு துறந்து தவம் இருந்து முனிவரானார். ஆசைகளை எல்லையுனுள் வைத்துக் கொள்ள வேண்டும். விளைவுகளை ஆராயாமல் செய்யும் செயலின் முடிவுகள் வாழ்வின் போக்கை மாற்றும். இன்னொன்று ஆசையை வளர்த்தால் பிறவிகள் வளரும். ஆசையை ஒழித்தால் முக்தி நெருங்கும்.
ஆசை பூர்த்தியாவதர்க்காக நம் செயல்கள் நம்மை ஆட்டிவைக்கின்றது. ஆனந்தம் வேண்டும் என்பதற்காக நம் செயல்கள் இருந்தாலும், அது ஒரு துக்கமில்லா சந்தோஷமாக இருத்தல் வேண்டும். அந்த சந்தோஷங்களும் தற்காலிகமாக மறைந்துவிடக்கூடியதாக இருக்கக் கூடாது.
மகாபாரத நிகழ்வில் யாயாதி மன்னன், சுக்ராச்சார்யாரின் மகள் தேவயாணையை மணந்தான். இல்வாழ்வில் தேவயாணையின் தோழியுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சாரியார் இளமையில் கிழட்டுத்தன்மை என சாபமிட்டார். கிழட்டுத்தன்மையை இளைஞர் ஒருவருக்கு அளித்து இளமை பெறலாம் என்ற விமோசனத்தின் பேரில் தன் மகன் பூருவிடமிருந்து இளமை பெற்றான்.
இன்பத்தின் வகைதேடி, எல்லைதேடி வகை வகையாக அனுபவித்தும் அவனின் ஆசை அடங்கவில்லை. விரும்பியதைத் தேடித் தேடி அனுபவித்தும்  ஆசை அடங்காமல் மேலும் மேலும் ஆசை அதிகமாக ஆவதை உணர்ந்தான் மன்னன் யாயாதி. அனுபவித்து ஆசையை தீர்ப்பது என்பது முடிவில்லாதது, அது நெய்யை ஊற்றி நெருப்பை அணைக்கும் செயல் என புரிந்து, தன் மகன் புருவை அழைத்து அவனிடம் பெற்ற இளமையை மீண்டும் அவனுக்கு அளித்ததாக சொல்லப்பட்டுள்ளது.
துன்பத்திற்கு தீர்வு ஆசையை அனுபவிப்பது இல்லை, அதை அடியோடு ஒழித்து மறந்துவிடுவதுதான் சிறப்பு. எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்வு அர்த்தமற்றதாகிவிடும். ஆசைகள் இயல்புதன்மையுடன் அடங்கவேண்டும். அடக்கலாகாது. அடக்குதலின் விளைவு பேராசையே!. வாழ்வில் உனக்கு தேவையானவற்றின் மீது ஆசை வை. பேராசை கொள்ளாதே!.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என ஆராய்ச்சி தெரிவிக்கின்றது. அதனால்தான் குரங்கின் செயல்கள் நம் மனத்தின் எண்ணங்களோடு ஒப்பிடப்படுகின்றன. ஒரு குரங்கு தான் அமர்ந்திருக்கும் மரத்தின் கீழே ஓர் பழம் இருக்க கண்டது. அருகில் வந்து பார்த்த போது ஓர் கண்ணாடி குடுவையில் அது தேடிய பழம் இருக்கவே அதை எடுக்க முயற்சி செய்து கையை உள்ளே விட்டு பழத்தை எடுத்தது.
ஆனால் பழத்துடன் கை வெளியே எடுக்க முடியவில்லை. கையில் கிடைத்த ஓருபழத்தையே அனுபவிக்கா இயலா, இந்நிலையில் அருகில் அது போன்றே இன்னொரு பழம் குடுவையில் இருக்க அதன் மேலும் ஆசைகொண்டு அதனுள் கையைவிட்டு பழத்தை பிடித்துவிட்டது. ஆனால் இரண்டு கைகளையும் பழத்துடன் வெளியே எடுக்க முடியவில்லை. பழத்தை விட்டு கையை எடுத்தால் கை வந்துவிடும். பழத்தை விட மனமில்லை. அது புரியவும் இல்லை. இதைத்தான் குரங்குப்பிடி என்பர்.
குரங்கை பிடிக்க வேடன் செய்த தந்திரத்தில் மாட்டிய குரங்கு, கைகளில் குடுவை இருந்ததால் ஓடவும், தாவவும் முடியாததால் வேடனிடம் பிடிபட்டது. சிறைபிடித்த வேடன் குரங்கின் தலையில் ஓர் தட்டு தட்டியவுடன் சிலிர்த்து கையை விட்டது. கையில் இருந்த பழம் நழுவியதால் கைகளை வெளியே எடுக்க முடிந்தது. ஆனால் சிறைபட்டுவிட்டதே! வேண்டாத ஆசைகளில் சிக்கல்களிருப்பது தெரிந்தே விலங்குபோல மாட்டிக் கொள்கிறது மனித ஆத்மாக்கள்.
இறை நம்பிக்கை இல்லாதவர்கள், தற்பெருமை, ஆணவம், கர்வம் கொண்டவர்கள், வாழ்வில் எந்த நோக்கமின்றி வாழ்பவர் ஆகியோரின் மனம், ஆசையின் தாக்கங்களுக்கு விரைவில் ஆட்பட்டு, அதை விடமுடியாததால், அதனால் சிறை பிடிக்கப்பட்டு, துன்பத்தினை அடைவர்.
ஒரு சேரிப் பகுதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும்போது இருவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டனர். அவர்களை எட்டிப்பார்த்த மற்றக் குழந்தைகளும் சாக்கடையில் வீழ்ந்தன, எல்லா குழந்தைகள் மேலும் சாக்கடையின் சகதிகள். சப்தம் கேட்டு வந்த பெண் ஒவ்வொரு குழந்தையாகக் அருகில் இருந்த குழாயின் நீரினால் கழிவி விட்டாள்.
அதற்குள் மற்ற குழந்தைகளின் தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் குழந்தைகளும் நீரில் கழுவியிருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு நன்றி சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண் எல்ல குழந்தைகளும் சகதியினால் அடையாளம் தெரியாமல் இருந்தனர். எது என் குழந்தை எனத் தெரிந்து கொள்ளவே நான் நீரில் கழுவி விட்டேன் என்றாள்.
தன் குழந்தை எது எனக் கண்டுபிடிக்க எல்லா குழந்தையின் முக அழுக்கையும் நீக்கினாள் தாய். அதுபோன்றே நாம் யார் எனத்தெரிந்து கொள்ள, நம் உண்மையான முகத்தின் அடையாளம் காண அதை மூடியுள்ள ஆணவம், கர்வம், பொறாமை, பேராசை போன்ற திரைகளை நீக்கவேண்டும்.
ஏழை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவர் தெய்வ வரம் பெற்று விட்டதாகவும், எல்லோர் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதாக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். இவன் நிலை அறிந்த நண்பர் அருகில் கிடந்த செங்கல் கட்டியை எடுத்து அதை நோக்கி தன் சுட்டு விரலை நீட்ட அது தங்கமாக மாறியது.
அந்த தங்க கட்டியை வைத்து உன் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள் என்றார். இப்போது திருப்தியா என்றவருக்கு, ஏழையின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் முகச்சுழிப்பைக் கண்டார். அவன் திருப்தியடையவில்லை என உணர்ந்தார்
வேறு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார். ஏழை, உங்களின் சுட்டு விரல் வேண்டும் என்று தன் பேராசையை வெளிப்படுத்தினான். கிடைத்த தங்கத்தைக் கொண்டு தன் வாழ்வை சீர்படுத்தத் தெரியாதவனுக்கு, அந்த தங்கமும் நல்ல பயனைத்தராது என்று மௌனமாக சென்றுவிட்டார் நண்பர். தினமும் பொன்முட்டையிடும் வாத்தின் வயிற்றில் நிறைய பொன்முட்டைகள் ஒரே நாளில் கிடைக்கும் என்ற பேராசையில் வாத்தின் வயிற்றை அறுத்தவன் நிலையிது.
ஆன்மாக்கள் அதனதன் தாயின் அருகில் இருக்கும்போது மனதில் தீய எண்ணங்களான ஆசை, கோபம் உண்டாவதில்லை. கரு சுமந்த தாய்மைக்கு இவ்வளவு சக்தி என்றால் அகில உலகை அரவணைக்கும் அம்பிகையின் சக்தி அளவிடமுடியாதது.
வாழ்வில் ஏற்படும் ஆசைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். மக்கள் பிரதி நிதிகள் என்று, சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் அனைவரும் தகுதியுடையவர்களாக இருந்தாலும், இல்லாவிடிலும் அவர்கள் சேர்ந்து முடிவு எடுக்கும் சட்டங்களை நாம் மதிக்கின்றோம். இந்த சட்டங்கள் நீதிமன்றங்களின் முடிவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் நாம் நீதிமன்றங்களை புறக்கணிப்பதில்லை. நீதி கேட்டு மன்றம் செல்கின்றோம்.
கட்டுப்பாடுகள் நம் சமுதாயத்திற்கு பயனளிக்க ஏற்படுத்தப் பட்டவை. அவைகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:58

2-8.தியானப் பூக்கள்!

தியானப் பூக்கள்!  


உடலில் உயிர் இருக்கும்வரை ஆன்மா செயல்படுகின்றது. ஆன்மாவிற்கு உதவியாக உயிர், உடல், உடலின் ஐம்புலன்கள் செயல்பட்டு ஆன்மாவின் பயணம் இனிதே நடக்கின்றது. புலன்களைக் கட்டுப்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும், அந்த கட்டுப் படுத்துதல் மனதில் சிறந்த எண்ணங்களை தோற்றுவித்து நாம் நன்கு செயல்பட உதவும்.

புலன்களின் ஒன்றின் சிறப்பு மற்றொன்றுக்கு இல்லை. பார்க்கும் திறன் கண்ணுக்குத் தவிர, பேசும் திறன் நாவிற்குத் தவிர, கேட்கும்திறன் காதிற்குத் தவிர, நுகரும் திறன் நாசிக்குத் தவிர வேறு புலன்களுக்கு கிடையாது. புலன்கள் என்ற வகையில் ஒன்றாகினும், ஒரே உயிர், உடலுக்கு உட்பட்டவையாக இருந்தாலும் அதனதன் செயல்பாடுகள் வேறு வேறு.
ஆனால் எல்லா புலன்களும், இல்லாத மனதின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் நலம். பார்க்கக்கூடாது என மனம் நினைத்ததைப் பார்த்தாலும், கேட்கக்கூடாது என நினைத்ததைக் கேட்டாலும், பேசக்கூடாது என நினைத்ததைப் பேசினாலும், நுகரக்கூடாதது என மனம் நினைத்ததை நுகர்ந்தாலும், உணரக்கூடாத உணர்வுகளை உணர்தலும்கூட உடலும், உயிரும், ஆன்மாவும் மாறுபட்ட வழியில் சென்று கர்மத்தின் பலாபலன்களைச் சந்திக்கும். எனவே புலன்களின் செயல்பாடுகள் சிறப்பாக, நாம் நம்மை செம்மை படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் மனம் வேண்டாம் என்று சொன்னால் எந்தவித சலனமின்றி அந்த செயலை அந்தந்த புலன்கள் செய்யாமல் இருக்க நாம் நம் புலன்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதற்குரிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதையும் மீறி எதிர்பாராமல் புலன்கள் சிறிதளவு இயங்கினாலும் அதை மனமும், புத்தியும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இன்று ஓர் நாள் மட்டும் என புலன்களின் போக்கிற்கு மனம் ஒத்துப் போகாமல் செயல்பட வேண்டும். அதற்காக தக்கமுறையில் மனதிற்குச் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். எந்த சலனத்தையும் எதிர் கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளல் வேண்டும். சலனங்களின் பாதிப்பு சிந்தையை கலங்காமல் இருக்கவும், செயல்படவும் பயிற்சிகள் கொள்ள வேண்டும்.
பயிற்சிகளில் தியானம் ஓர் சிறந்த முறையாகும். சிறந்த தியானத்தின் மூலமாக நாம் ‘பரிக்ரஹ சக்தி என்ற ‘ குண்டலினி ’ சக்தியை பெறமுடியும். ஆனந்தமாயமான சுதந்திரத்தை ஆன்மா அடையும். தியானம் மனதின் ரகசியங்களை உங்களுக்கு புரியவைத்து மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை புத்திக்கு அளிக்கும்.
புலன்கள் கட்டுப்பட, நமது மனம் கட்டுப்பாடுடையதாக இருக்கவேண்டும். நமது கவனம் அங்கும் இங்குமாக சிதறி, நம் மனோசக்திதனை வீனடித்துவிடாமல் இருக்க, ஓர் ஒழுங்கு நிலைக்கு மனதைக் கொண்டுவர வேண்டும். மனதை கட்டுபடுத்தும் ஆற்றலை ‘ஆத்மவினிக்ரஹம்’ என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்கு மனதை ஓருமுகப்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் மனதின் சக்திகள் புரியவரும். மன அழுத்தம் ஏற்படும் செயல்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும். நல்ல நினைவுகளுடன் செயல்களை திறம்பட காலவிரையமின்றி செய்து வெற்றி காண்பீர்! அதற்கு பிடித்த இறைவனின் நாமங்களை செல்லிச்சொல்லியோ, அல்லது தியானப்பயிற்சி மூலமாகவோ மனதை ஓர்முனைப்படுத்த முயற்சிக்கலாம்.
தியானம் என்பது கடவுளைத் தேடுவதற்காக அல்ல. உங்களை உங்களுக்குள் தேடும் ஓர் எளிய பயிற்சியாகும். வெளியே தேடி வேதனையடைதலை விடுத்து, உனக்குள் தேடி நிம்மதி அடைவீர். தியானம் பரிசுத்தமானது. மனதில் அழுக்குடன் தியானம் மேற்கொள்ள முடியாது. நன்னடத்தையை அஸ்திவாரமாக கொண்ட தியானமே, அன்பையும், அமைதியையும் தரும்.
நாம் ஒவ்வொருவரின் மூச்சும் ‘சுபசரமாக’ இருத்தல் வேண்டும். அவசரமாக இருக்கக்கூடாது. சரம்- என்றால் மூச்சு, இயக்கம் எனப்படும். ஒழுங்கு முறையற்றுத் தாறுமாறாக விரைந்தோடி திரியும் நமது மூச்சின் இயக்கத்தை ‘அவசரம்’ எனலாம். நம் பெரியவர்கள் அதனால்தான், என்னடா அவசரம், நின்று நிதானமாகச் செயல்படு எனக்கூறியுள்ளனர். அதேபோல ஒழுங்குமுறை தவறாமல் நிதானமாகப் பரப்பரப்பின்றி நிகழும் மூச்சினை ‘சுபசரம்’ எனலாம்.
மூச்சின் ஒழுங்கற்ற இயக்கத்தினால் புத்தியின் ஆற்றல் குறைகின்றது. புத்தியின் ஆற்றல் குறைந்தால் நமது செயலாற்றும் திறனும் குறைந்து விடும். மனதின் பரப்பரப்பு மூச்சின் இயக்கத்தை பெருமளவு பாதிக்கின்றது. மனம் கலங்குகின்றது. மனம் பரப்பரப்பின்றி இருக்கும்போது நிதானமான மூச்சின் ஒழுங்கான இயக்கம் நமது உடலுக்கு முறையான ஆக்ஸிசனை கொண்டு சென்று நமது மூளையின் ஆற்றலை அதிகரிக்கின்றது. நமது செயல்திறன் அதிகரிக்கின்றது. தியானம் மூலம் மூச்சை சீராக்கலாம்.
“சுவாச சஞ்சலமாதலால் என் மதிநிலை கெடாமல் அருள் தாராய்” என அருணகிரியார் கூறுகின்றார். ‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழியும் இதையே உணர்த்துகின்றது.
சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் உங்களுள்ளே புகச்செய்து, உங்களது செயல்களையெல்லாம் தேவர்கள் செயல் போன்று வெற்றியடைய இயங்க முற்படுங்கள்-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27079513
All
27079513
Your IP: 18.119.126.80
2024-04-25 20:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg