குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஓம்நமசிவய!
மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!
#####
சத்தி நிபாதம்!
1514. சுவாதிட்டானத்திற்கு தொடர்புடைய மூலாதாரத்தில் இருந்த குண்டலினி சத்தி அஞ்ஞானத்தில் உள்ள ஆன்மாவுக்கு ஞானம் ஏற்பட அஞ்ஞானத்தை அகற்றிப் பசுவின் இயல்பையும் அறியும்படி செய்து ஆசை உண்டாக்கி உடன் இருந்தாள்.
1515. இனிமையை அளிக்கும் நிலையை நினைத்தால் சிவத்தை அறியும் இடமாய் அறிபவர்க்கு இன்பம் தருவதாய் அமையும். தேனைப்போன்ற பொருளான தெளிவை அனுபவிக்கின்றவர்க்குப் பசுக்கள் விரும்பிய புன்செய் நிலமாக மூலாதாரம் இருக்கும்.
1516. ஆணவமான இருளில் எடுத்த கணக்கிலடங்காத பிறவிகளை கடக்கும்படி செய்யும் திருவருள் எப்போதும் நீங்காதபடி திருஅருளம்மை அருள்வாள். மயக்கம் நீங்கப் பெறாத தேவர்கட்கு தலைவனான சிவத்துடன் பொருந்தி விந்து கெடாத இன்பத்தை அனுபவிக்கும் இடம் மூலாதாரம்.
1517. குண்டலினி இத்தகைய இருட்டறையில் இருந்த காரணத்தை ஆராய்ந்தால் இருளில் பொருளால் சூழப்பட்ட அறையில் விளக்கு புகுந்து எரிவது போன்ற ஆணவம் என்ற இருளில் குருமண்டலம் அருளால் சூழப்பெற்ற சிவசத்தி ஆவதற்கேயாகும்.
1518. குண்டலினி சத்தி மேலே போய் ஆன்மாவில் பரப்பி தன்னுள் அடக்கி ஆணவத்துடன் கூடிய மலத்தோடு மயங்கியிருந்த நிலையைப் போக்கிக் கன்மங்கள் யாவற்றையும் விலக்கி அறியாமையை அகற்றிச் சிவம் இருக்ககூடிய அருட்குணங்களைப் பதிந்து அருள் மயமான ஞான் சத்தி விளங்கும்படி செய்தாள்.
1519. பொண்ணுடன் பொருந்தி குண்டலியின் ஆற்றலில் இருந்த ஆடவர் அதை மாற்றி அமைக்கும் உபாயத்தை உணரவில்லை. அவ்வாறு மாற்றி அமைக்கின்ற வழியை அறிந்தால் அறிந்தவர் தொடர்ந்து உண்டாகும் பிறவித் துன்பம் இனி ஏற்படாது.
1520. மூலாதாரம் என்ற நிலமான சுவதிட்டானத்தில் இருக்கும் நான்முகனும் அதன் தொடர்பான மணிபூரகத்தில் இருக்கும் திருமாலும் உருத்திரரும், தொண்டையில் இருந்து மறைப்பைச் செய்யும் மகேசுவரனும் தக்கவாறு அறிந்தவர் இறைவனை அடைவர். இறைவன் ஆனவன் மையையும் தோற்கச் செய்யும் கரிய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட அக்கினி கலையில் இருப்பவன் என அறிந்து உறுதியாக காதல் செய்வீர்.
1521. இவ்வுலக் உயிர்கள் எத்தனை முறை அழிந்து தோன்றினாலும் சத்தியும் சிவமும் அழியாப் பெருமை கொண்டவர்கள். நாள்தோறும் விடியற்காலையில் சிவச்த்தியை வழிபடுவர்க்கு அவரது சுழுமுனையில் பொருந்தி உணர்த்துவாள்.
1522. உடலில் பொருந்தியுள்ள சூரியன், சந்திரனைத் தொடர்ந்துபோய் ஒளியைக் கண்டு கொண்டோம். பழமையாய் தொடர்ந்து வரும் பரசிவமாகிய பேரொளிப் பிழம்பிடம் போய் முடியும். வண்டுகள் ஒலிக்கும் இயல்புடைய சகசிரதளத்தில் ஒளியுடன் ஒளிரும் அண்ணலை நிலைபெறக் கண்டவர்க்கு அவர் உள்ளத்தில் இருளை மாற்றியருள்வான்.
1523. எல்லா உயிர்க்கும் தந்தை சிவன். அவன் வாழும் தோட்டமான சகசிரதளத்தில் உலகியல் பெண்பிள்ளை சாதனமாக இன்பம் அளிக்கும். பயிற்சியாளருக்கு ஏழுவகைத் தோற்றத்தில் எழுந்த பிறப்புகளையும் அவற்றில் செய்த நல்வினை தீவினைகளையும் அறிந்து கொள்ளும் நல்ல பார்வை உண்டாகும். உள்ளத்தில் சிவம் ஒளிராது போன இடையூறு அனைத்தும் நீக்கி தலைவனைக் கண்டு பொரூந்தி சிவக்கனியின் சுவையாக மாறுங்கள்.
1524. அறியாமையான காட்டில் வழும் குவிந்த கொங்கையை உடைய குண்டலினியம்மை சிறப்பாக தம்மிடம் விளக்கம் அடையுமாறு பூசை செய்து காண்பவர்க்கு பிறப்பை நீக்கிய பயன் தருவாள். அறியாமை காரணமாய் உள்ள மறதியை போக்கித் தன்னை எப்போதும் வணங்கும்படி செய்வாள்.
1525. எட்டுத் திசைக்கும் தலைவன் சிவத்தை ஆதாரத் தாமரை மலர்களை மாலையாகக் கொண்டு சித்ரணி நாடியில் இருக்கும் குண்டலினி சத்தியுடன் பொருந்தித் துதியுங்கள். தியானம் செய்பவர்க்கு மயக்கம் தரும் நீல ஒளியைத் தொடர்ந்து அருள்பெற முடியும்.
1526. சத்தியின் அருள் பெற்றவனை அடைந்த பிறர்க்கு ஞானம் ஏற்படும். அவனை வணங்கினால் அவனும் மலர்தூவி வழிபடுவான். மேலான தன்னை வணங்குபவனைக் கண்டு செருக்குக் கொள்ளாமல் சமத்துவ நிலையில் நிற்பாள். உலகம் எங்கும் சென்று வரும் ஆற்றலை அவன் பெறுவான்.
1527. நல்வினை தீவினை இரண்டும் சமமாக இருக்கும் காலத்தில் இனிய அருட்சத்தி குருமண்டலத்தில் இருப்பாள். உயிர் ஒளி பெறுவதற்கு இடையூறாக இருக்கும் குணங்களைப் போக்கி அருள்வாள் என்ற அறிவால் தன் முனைப்பில் செயல் அற்று இருப்பின் மூன்று மலங்களும் கெட்டுச் சிவமாய் திகழ்வான்.
1528. விந்து நாதம் என்பன இல்லாத இடம் நாதாந்தத்தில் ஒலியை உண்டாக்கும் சத்தியை வணங்கிச் தியானித்து மந்திரம் அற்ற நாதாந்தத்தில் அவளுடன் ஒன்றினால் பராபரையான அவளும் அன்போடு பொருந்துவாள்.
1529. மாலைக் காலத்தில் இருக்கும் தீபமான சந்திரனும் சூரியனுமாகிய் ஒளிப் பொருளுக்கு மிகவும் ஒளியை அளிக்கும் ஒப்பிலாத பரஞ்சுடரான அண்ணலும் உண்மை ஞானத்தை விளக்கிய தலைவனும் ஆன சிவன் என் மனதுள் புகுந்து ஊன் உடம்மை ஒளிரச் செய்து உயிருடன் பொருந்தினான்.
#####
ஓம்நமசிவய!
செம்பொன் மேனிச் செம்மால் உம்பர் போற்றும் உம்பல்
பண்ணியம் ஏந்துகைப் பண்ணவ எண்ணிய எண்ணியாங்
கிசைப்பாய் அப்பமும் அவலும் கப்புவாய்
முப்புரி நூல் மார்பு அப்பா போற்றி! போற்றி
#####
சாலோகம்!
1507. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறிகளால் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நால்வகை நெறிகளும் அமையும். சரியை நெறி பற்றி நிற்பர் இறைவன் வாழும் உலகத்தை அடைந்து அவனது அண்மையில் விளங்குவர். அத்தகைய உலகில் இறைவனின் அண்மையை அடைந்தவர் அவனது வடிவத்தை அடைவர். இறைவனைப் போன்ற ஒளிவடிவைப் பெற்று பரந்த உலகில் இல்லாமல் எங்கும் நிலைபெற்று இருக்கும் இறைவன் உருவாகும்.
1508. சமய்த்தைப் பற்றி நிற்பவர் செய்யக்கூடிய முதல் செயல் தன் ஊள்ளத்தில் வழிப்டும் கடவுளை வைத்தல். சமயத்தில் விசேடம் என்பது அந்த வழிபட்டில் கடவுளுக்குரிய மந்திரத்தை நினைத்தல். சமய்த்தில் உள்ள மூலமந்திரத்தின் தத்துவம் தெளிதல் மூன்றாவதான நிர்வாண தீட்சை ஆகும். சமயத்திற்குரிய அபிடேகம் என்பது வணங்கும் கடவுளை எண்னியபடி சமாதி ஆவது.
#####
சாமீபம்!
1509. சாலோக முத்தியில் பாசத்தனமை கெடாமல் நின்று பிறவியைத் தரும் சாமீபத்தில் பாசம் கட்டுப்படுத்தாது அருளாக இருக்கும். சாரூபத்தில் பாசமானது வேலும் மேன்மையைத் தரும். சாயுச்சியத்தில் பாசமானது முழுவதும் குன்றிப் பதியை அடையச் செய்யும்.
#####
சாரூபம்!
1510. சாரூபம் என்பது யோகத்தில் எட்டாம் உறுப்பான சமாதியால் அடைவது. தங்கிய ஞான நெறி பற்றி நிற்பவர்க்கு கைகூடும். இந்த நெறி உறுப்புடன் கூடிய உடல் சித்தி கைகூடப் பெறுவர். உடம்பு குற்றம் இல்லாத யோகத்தால் திருத்தி அமைக்கப்படும்.
1511. மேருமலையைச் சார்ந்த போது உலகில் இயங்கும் பொருள் இயங்காத பொருள் அனைத்தும் மேருமலைப் போல் பொன் நிறம் அடையும். நாத தத்துவத்தில் இருக்கும் குரு மண்டலத்தை அடைந்தபோதே கயிலையின் தலைவன் இறைவனின் வடிவத்தைப் பெறுவர்.
#####
சாயுச்சியம்!
1512. முதல் நிலை சைவம் என்பது சிவனுடன் பொருந்தி நிற்றல். இரண்டாம் நிலை சிவ தத்துவத்தை உணர்ந்து அதில் இருக்கும் சிவபெருமானுடன் சேர்தல். மூன்றாம் நிலை சமாதியில் பொருந்தாமல் சிவம் தம்மிடம் ஒளிர்வதை உணர்ந்து கொள்ளுதல். இந்நிலையில் சிவத்துடன் பொருந்தி உலகை விட்டு சமாதியில் நிலைபெற்று சிவானந்த பேறு அடைதல். இதுவே சாயுச்சியம் பெற்றவர் நிலை.
1513. விழிப்புடன் தன்னை மறந்திருத்தல் சாயுச்சியம் அடைதல் ஆகும். விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் உள்ளவரும் சாயுச்சியம் அடைந்தவரே. சிவத்துடன் இலயமாதல் எல்லையில்லாத ஆனந்தத்தில் நிலைத்திருப்பது சாயுச்சியம் ஆகும்.
#####
ஓம்நமசிவய!
எள்ளுருண்டை பொரி ஏற்போய் தள்ளுறு
தெவிட்டாத் தேனே மூவர் மொழியிடம்
மொழிந்தாய் தேவர்க்கு அரிய தேவா மாலுக்கு
அருளிய மதகரி பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி!
#####
தாசமார்க்கம்!
1502. செய்தற்கு எளியனவான கோவில் விளக்கு ஏற்றுதல், மலர் பறித்தல், அன்புடன் மொழுகுதல், திருவலகு இடுதல், இறைவனை வாழ்த்தல், பூசைக் காலங்க்ளில் மணியடித்தல் திருமஞ்சன் நீர் சேர்த்தல் முதலிய திருக்கோவில் பணிகளைச் செய்வது தொண்டு நெறியாகும்.
1503. ஆதி பரம் பொருள் அது என்றும் இது என்றும் ஐயம் கொண்டு துணிவு இல்லாது நீங்குவர் சிலர். இது பரம் பொருள். இதை வழிபடுதலே முறை என வண்ங்கியவர் எவ்விடத்தும் இல்லை. உமக்கு அமைந்துள்ள தர்ம நியதிப்படி பற்று இருக்கின்றாதோ அங்குப் போய் இறைவனை விரும்பி வழிபடுக. அதுவே இது என்ற் ஐயத்தை போக்கும் வழி.
1504. சந்திரனால் உண்டாகும் கீழான உணர்ச்சிகளை அடக்கி அறிவால் நிகழும் ஆராய்ச்சிக்குப்பின் திட ஞானம் அடைந்து எங்கும் நிறைந்த திருவடியை எப்போதும் எண்ணிக் கொண்டே இருப்பேன். தேவ தேவனான சிவபெருமானை நாள்தோறும் வணங்குவேன். இப்படி வழிபடுவதில் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவைப் பெற்றது.
1505. தேவர்கள் ஆயிரம் திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சித்து துதிப்பர். அவர்களை விடுத்து மனம் மகிழ்ந்து திருவடியை உள்ளத்தில் கொண்டு தொழுது கண் போன்றவன் என இறைவனை எண்ணி நிற்கும் அடியார்க்கு நாத வடிவினனான இறைவன் அவர்தம் பேரன்பிற்கு ஆட்பட்டு வெளிப்பட்டு அருள்வான்.
1506. இறைவன் புகழைப் படித்தாலும் பூசை செய்தாலும் மலர்களைக் கொய்து கொணர்ந்தாலும் கல் வீழ்ந்த பாசிக்குளம்போன்று தெளியாதது மனம். ஆகவே குற்றம் இல்லாத பேரொளியான நீலகண்டப் பெருமானை அன்பால் இடைவிடாது உள்ளத்தில் இருத்த நினைவு இல்லாதவர் ஆவர்.
#####
ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!
#####
சற்புத்திர மார்க்கம்!
1495. சற்புத்திர மர்க்கம் கிரியை வழி நின்று யோகத்தை அளிப்பது. சொன்ன இரு மார்க்கங்களூம் கடந்து யோக சக்தியுடன் பொருந்தியிருத்தல் சன்மார்க்கத்தால் பெறும் ஞான்ம் ஆகுன்.
1496. பூசை செய்தல், பாராயணம் செய்தல் இறைவன் புகழைக் கூறி வணங்குதல், குறிபிட்ட சில மந்திரங்களைச் சொல்லி சிந்தித்தல், குற்றம் இல்லாத தவ முழக்கங்களை மேற்கொள்ளல், உண்மை பேசுதல், காமக் குரோதம் கோபம், மோகம் மதம் மாற்சரியம் என்ற பகைகளை நீக்குதல், அன்புடன் ஹம்ச பாவனை செய்தல் என்ற எட்டும் குற்றம் இல்லாத சற்புத்திர மார்க்கத்தின் உறுப்புகள்.
1497. வண்டானது தேனைச் சேர்க்கப் பல மலர்களை நாடி அலையும்.. வெள்ளை அன்னமானது தாமரையை விட்டுக் கவர்ச்சியான நீல மலரை அடையாது. கிரியையாளர் மணம் மிக்க மலர்களைப் பறித்து சிவபெருமானை வழிபடுவதைப் பார்த்தும் மற்றையோர் சிறு பொழுது சிவனை வழிபடாது பிறவழிச் சென்று கெடுகின்றனரே.
1498. இறைவன் திருவடி நிழலே பிறவிப் பெருங்கடலுக்கு அரிய கரை. பெரிய கரையாவது அரன் ஆணையின் வண்ணம் அமைவதே. திருவடியான கரைக்குப் போகின்ற நிலையான உயிர்களுக்கு ஒரே அரசாய் ஏழ் உலகிலும் இருப்பவன் இறைவன் ஆவான்.
1499. உள்ளப் போக்கில் உய்ர்ந்தும் திருவடியை வழிபட்டும் இன்பத்தை அனுபவித்தும் தழுவி மகிழ்ச்சியைப் பெற்று சிவபெருமானின் திருவடிக்கே விண்ணப்பம் செய்தால் வர இருக்கும் பிறவிக்கு அஞ்சி எடுத்த பிறவியை பயனுடையதாக்கும். இழிந்த நிலைக்கு அஞ்சி அவனைத் தாங்குபவனாக நினைப்பவர்க்கு அவன் தாங்குபவானக அமைவான்.
1500. சிவனை நான நின்று தொழுவேன். அப்பெருமானை என்றும் கிடந்து தொழுவேன். நீங்களும் அழகிய பரஞ்சோதியான இறைவனைப் பொருந்திய மலர் கொண்டு தொழுது வழிபடுங்கள். தொழும்போது சிவபெருமான் தொழுபவரின் சிந்தனையில் வெளிப்பட்டு அருள்வான்.
1501. வீடுபேற்றை அளிக்கவல்ல சற்புத்திர மார்க்கத்திற்கு வாயிலான தொண்டு நெறி பற்றி வினையின் வழியே வடிவம் பெற்று வாழும் உலக உயிர்களே கேட்பீர். கருவில் செலுத்தும் வினைக் கூட்டங்கள் நீங்க இறைவனை வணங்கி நாள்தோறும் இன்பமாக நிலைபெற்று இருப்பீர்.
#####
ஓம்நமசிவய!
திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!
#####
சக மார்க்கம்!
1488. ஞான நெறி என்பது தோழமை நெறியால் அடையலாம். அரச மார்க்கமான் இது வீடு பேற்றையும் சித்தியையும் அளிக்கும். மற்ற பிற்பட்ட நெறிகள் நீங்காத பிறப்பையும் இ/றப்பையும் அளித்து ஞானத்தை எண்ணி எண்ணி உறுதி அடைய வழியாகும்.
1489. சிரசில் பன்னிரண்டு அங்குலத்தில் பெருந்தும் மார்க்கத்தை அறியாதவர் துவாத சாந்தத்தில் இருக்கும் குருமண்டலமான ஒளி மண்டலத்தையும் அங்கே இருக்கும் சிவத்தையும் அறியாதவர். அவரின் வீட்டில் திருமகள் தங்காமல் போவாள். தன் உருவத்தையும் உறவினரையும் விட்டு இறந்து போவர்.
1490. துவாத சாந்தத்தில் பொருந்தியவர் யோக சமாதியை அடைவர். இந்த நிலையில் உல்கம் எல்லாம் நுட்பமாய் அங்குள்ளது. அவ்வொளியில் சிவமும் சத்தியும் உள்ளனர். இதைவிரும்பி மேற்கொண்டவர்கள் சித்தர்கள்.
1491. யோகம் போகம் என்ற இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும். யோகத்தால் சிவசாரூபம் அடைவர். அதனால் பூவுலகில் அடையப்பெறும் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கும் அடைந்தவர் ஆவர். அழியாத யோகியர்க்கு யோகம் போகம் பொருந்தும்.
1492. ஆதார சோதனையால் நாடி தூய்மை அடைந்து மேதை முதலான பதினாறு கலைகளில் இருக்கும். வானமும் ஒளியும் புலப்படும். அறிவினது ஆலயம் என்ற ஆன்மாவின் ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் புத்தியும் தம் இயல்பான கீழ் இழுக்கும் இயல்பை விட்டு நிற்பதே சக மார்க்கம்.
1493. உயிரை கீழ் நோக்கி இழுக்கும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் பின்பு மனம் எனும் கூர்மையான வாளால் வருத்தி துன்புறுத்தும். அப்போது பதினெட்டுக் கணங்களும் கருதும் ஒருவனும் வணங்க தக்கவனும் ஆன சிவன் சிந்தையில் வந்து பொருந்துவான்.
1494. வளமான பழத்தை போன்ற கனிவை உடைய செம்மை உடையவர்க்கும் ந்ல்ல கனியைப் போன்று இன்பம் தரும் உண்மைப் பொருள் இறைவன் ஆகும். உள்ளம் நெகிழ்ந்து உள்ளே மகிழ்ந்து இருப்பவர்க்கு கனியினின்று சாற்றை நீக்கி எடுப்பது போல் இவரை தத்துவங்களினின்று நீக்கி இறைவன் தானும் உடன் இருப்பவன் ஆவான்.
#####
ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் இருவேறுருவ ஈசா !
உள்ளத்திருளை ஒழிப்பாய் கள்ளப் புலனைக்
கரைப்பாய் நம்பியாண்டார்க்கருள் நல்லாய்
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
#####
சன்மார்க்கம்!
1477. புகழ்ந்து சொல்லப்படும் சன்மார்க்கம் சிவத்தின் உண்மை வடிவங்களான நாத விந்துக்க்ளாக இருக்கின்றது.. சுடரைக் கண்டு சிவத்தை விட்டு சிவயோகத்தில் நிலையான சித்தம் உடையராய் காலனை வென்ற சிவனின் உள்ளக்குறிப்பை உணந்தவர் பற்றுகின்ற நெறி. சன்மார்க்கம்.
1478. சைவ சமய்த்திற்கு பெருமைதரும் நிகர் இல்லா தலைவன் சிவன். ஆன்மாக்கள் உய்வு பெறும் வண்ணம் அமைத்த ஓளி நெறியானது என்னவென்றால் தெய்வீகச் சிவநெறி சன்மார்க்கம். அதைச் சேர்ந்து உய்வு பெறுமாறு இந்த உலகில் உள்ளவர்க்கு அமைத்தான் சிவன்.
1479. சன்மார்க்கம் தரிசிக்கவும் தியானிக்கவும் தீண்டவும் புகழவும் திருவடி நிலையை சிரசின்மீது சூடவுமான குருபத்தி செய்யும். மெய்யன்பர்க்கு முத்தியை அடையத் துணையாகும்.
1480. சிவன் அகண்ட பரந்த பொருள். இதை அறியாதவர் தெளிவு இல்லாதவர். தெளிவு இல்லாதவராதலால் சீவனின் பரவிய ஆற்றலை அடைய மாட்டார். சீவன் பரவியுள்ளமை ஆகாதபோது சிவம் ஆகமாட்டார். அதலால் தெளிவு இல்லாதார் பிறவி முடிவு பெற மாட்டாது பெருகி நிற்கும்.
1481. ஆன்மாவான தான் சிவமேயாகித் தன்னிடம் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்களை அகற்றி மெளனம் என்ற பிரணவத்தை அடைந்து முத்தான்மா ஆவதும் கு/ற்றம் இல்லாது ஞான அனுபவத்தில் இன்பம் அடைவதும் தான் சிவமாய்த் தன்னிலை கெடல் சன்மார்க்கத்தால் ஆகும்.
1482. சன்மார்க்க நெறியினர் முகமே சிவம் உறையும் இருப்பிடம். சன்மார்க்கத்தாரின் இடமே கோவில். சன்மார்க்கத்தாரின் கூட்டத்தைக் காண்பது சிவ தரிசனம்.இதை எம் மார்க்கத்தில் உள்ளவரிடம் கூறுவேன்.
1483. சன்மார்க்க சாதனம் என்பது சிவத்தை அறியும் ஞானம், இம்மார்க்கம் தவிர மற்றச் சாதனம் அறிவில்லாதவர்க்குரியது. தீமை அளிக்கும் மார்க்கத்தைவிட துரியத்தில் பொருந்திக் குற்றம் நீங்கினவரின் சன்மார்க்கந்தான் அவனாகும் நன்னெறி.
1484. சன்மார்க்கத்தை அடைய வரும் பயிற்சியாளர் ஏனைய மூன்று மார்க்கங்களும் பெறுவது இயல்பாகும். சிவத்துடன் பொருந்தும் நல்ல மார்க்கமே அவர்க்கு வேண்டுவதாகும். இதுவே பிரணவ மார்க்கம் என வேதம் சொல்கின்றது.
1485. தனக்கு மாறான பாசத்தையும் பாசத்தால் கருமத்தையும் கன்மம் காரணமாக வரும் பிறப்பு இறப்புகளாகிய அவத்தைக்ளையும் அவத்தைகளுக்கு காரணமான பிரகிருதியையும் இவற்றோடு பொருந்தி இதை அறியும் ஞானத்தையும் இவற்றின் வேறுபாடுகளையும் ஆன்மாவான தன்னையும் கண்டவர் சன்மார்க்கத்தார் ஆவார்.
1486. ஆன்மாவைப் பாசத்தினின்று பிரித்தும் பதியுடன் கூட்டிக் கனியாத மனத்தை நன்றாக கனிய வைத்து கெடாத மெய்ப் பொருள் தோற்றத்துக்குள் சேர்ந்து அசையாத வண்ணம் சமாதியில் கூடியிருத்தலே சன்மார்க்கம்.
1487. சன்மார்க்கத்தில் உள்ளவ்ர் அடைய வகுக்கும் மார்க்கம் சன்மார்க்கமான மார்க்கமே அல்லது வேறு ஒன்றும் இல்லை. சன்மார்க்கத்தைப் பொருந்தாதவர் மார்க்கம் யோக சித்திகளைத் தரும் நெறியாகும்.
#####
ஓம்நமசிவய!
உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!
#####
ஞானம்!
1467. ஞானத்தைவிடச் சிறந்த அறநெறி இல்லை. ஞானத்தைக் கொடுக்காத சமய நெறியும் நல்லது ஆகாது. ஞானத்திற்குப் புறம்பானவை வீடு பேற்றை அளிக்காது. ஞானத்தில் மிக்கு விளங்குபவரே மக்களீல் மேலானவர்.
1468. நாதமும் நாதத்தின் வடிவான மனமும் மனம் தரும் புத்தியும் புத்தியை உணர்த்தும் அகங்காரமும் இம்மூன்றும் சிந்திக்கின்ற செயலும் அதனால் உண்டாகும் நாதமும் நாதம் கடந்த ஞானியர் அடைந்த நெறியே ஞானம்.
1469. சிவன் சித்தத்தில் அமைந்துள்ள சங்கற்ப உலகமும் புறத்தே அமைந்துள்ள உலகமும் அன்பால் எனக்கு அருளாக அமைந்தன என்பர் ஞானியர். இத்தகைய ஞானமும் அதனால் அமையும் சிவபாவனையும் சிவத்தை அறிய உதவும்.
1470. முரணபாடு இல்லாத ஜானத்தை தெளிந்து உணர்ந்தார்க்குச் சார்ந்திருக்கும் காவலான இடம் அழியாத பிரம்ம பொருள் ஆகும். அசைவன அசையாதன என இறைவனாய்க் காணப்படும் உலகம் மேலான ஞானம் இருக்கும் ஒழுக்கம் ஆகியன தரும்.
1471. அறிவு அடக்கம் அன்பு என்ற மூன்றும் என்றும் நீங்கா நகரில் கோவில் கொள்ளும் பெருமான் தான் உருக்கொண்ட நிலையையும் நல்ல குணங்களையும் எண்ணித் திருவடியை நீங்காத நெறியை உடைய ஞானியர்க்கு சிந்தனையில் நீர் அருவியினது சலசலப்பைப் போல் சிரசில் அமையும்.
1472. ஞானம் முதிர்ந்து எழுகின்ற நிலையில் சிந்தனையில் அருவியாகிய நாதம் தோன்றி முகத்தின் முன் எவ்விடத்தும் இளம்பிறை ஒளியைத் தரிசித்து உடலின் இழிதன்மையை உணர்வர் உடலைக் கடந்து ஒளிமிக்க சோதி இருக்கும்.
1473. ஞானியர்க்கு இயல்பில் பொருந்தியவை ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் கிரியை ஞானத்தில் சரியை என்ற நான்கும். அனுபவத்தில் முதிர்ந்து பிரணவ சித்தியான மௌன ஞானிக்கு இவை ஏதும் தேவையிலை. மகிழ்வை அடைந்து சந்திரமண்டலம் ஒளியில் இருக்கும் சத்தி ஞானத்தை தந்துவிடும். அவர்களைப் போலால்லாது ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்பவருக்கு சரியையும் கிரியையும் உரியனவாகும்.
1474. ஞானிக்கு ஞானம் முதலிய நான்கு நிலைகள். ஞானத்தில் ஜானம் என்பது நான் என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் இல்லாமையாகும். ஞானத்தில் யோகமாவது நாதாந்த்தில் பேரொளியைக் காண்பதாகும். ஞானத்தில் கிரியை என்பது நல்ல வீடு பேற்றை விரும்புதலாகும்.
1475. ஞானத்தில் ஞானம் முதலிய நான்கையும் பெற்றவன் நல்வினையினால் அடையும் நற்பயனையும் பாவத்தால் வரும் தீய பயனையும் கடந்து நிற்பான். பெருமையுடைய நேயத்தின் ஞான் வரம்பைக் கடந்தவன் மலக்குற்றங்கள் அற்றவனும் சிவமுத்தனும் சித்தனும் ஆவான்.
1476. ஞானத்தில் சமய தீட்சை என்பது மெய்ப் பொருளை விரும்பும் ஞானி மெய்ப் பொருளைப் போல் தானும் ஒளி உருவினன் என உணர்த்துவதாகும்.
#####
ஓம்நமசிவய!
மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!
#####
யோகம்!
1457. மூலாதாரம் தொடங்கி வீணாத்தண்டின் ஊடே பிரமரந்திரத்தைச் சேர்த்து உண்மைப் பொருளான சிவத்துடன் பொருந்தி தறியைப் போன்று உடலில் அசையாமல் இருக்கச் செய்து, உடலை சொறிந்தாலும் தாக்கினாலும் துணுக்கென்று உணராமல் இலட்சியப் பொருளான சிவத்தை அறிவர்க்கு அயலாய் பொருந்த முடியும்.
1458. பல காலம் யோகத்தைப் பயின்று ஞானம் பெற்றவர்க்கன்றி மற்றவர்க்குப் பலகாலமானாலும் உணரப்படாதவன். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும் நான்முகன் ஆகிய தேவர்க/ள் ஊழிக்காலம் முயன்றாலும் அவனை அடைய இயலாத ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளான்.
1459. மலரில் மணம் பொருந்தியிருப்பதுபோல் சீவனுக்கு சிவ மணம் விளையும். எழுதப்பெற்ற ஓவியம்போல் அசையாதிருந்து அறியும் வல்லமை உடையவர்க்கு பூனுகுப்பூவை சேர்ந்த நடுதறி மணத்தைப் பெறுவதுபோல் நறுமணம் உண்டாகும்.
1460. உயர்ந்தோம் எனக் கூறி யோகத்தால் உள்ளே கூறும் பொருளைக் காணமாட்டீர். சுவதிட்டானத்தில் பொருந்திய சிவத்தை சிந்தையில் பொருந்தி தெளிவுபெற்று இருளை நீங்கினால் பழமையாய் வரும் பிறவிக்கு மூலத்தை நீக்கும் மருந்து விதையாகும்.
1461. இலக்கண அறிவு இல்க்கிய அறிவு அறுபத்து நான்கு கலை அறிவு என்பனவற்றால் பழியைத்தரும் பாசத்தால் உண்டாகும் பிறவியை நீக்காது அழிவு செய்யும் சந்திரன் அக்கினி கதிரவன் ஆகியவற்றை வரிசைப்படுத்தி தலைக்குச் செல்வதால் ஒளி அமைவதை உணர்ந்தேன்.
1462. சந்திரன் சூரியன், அக்கினி ஆகியவற்றை சிரசில் சேர்க்கும் யோகத்தை உள் அன்புடன் செய்பவர் தவம் உடையவர். தத்துவமசி என்ற பெரும் வாக்கியத்தின் பொருள் இதுவே. உண்மையான தவம் இதுவே. இதுவே தேவர் ஆக்குவதும் ஆகும்.
1463. உடம்பில் அக்கினி மயமாய் இருந்து சூட்டை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உத்தமனாகிய சிவம். ஆண் பென் கூட்டுறவிலிருந்து அக்கினி மண்டலத்தில் விளக்கம் அடையும் அக்கினியை காப்பாற்றி மேல் எழும்படி செய்தால் மீண்டும் பிறவிக்கு வராத ஒலி உலகைத் தரும். நாண்ம் கொண்டு இதைச் செய்யாமலிருந்தால் நரகத்தில் செலுத்தி மீண்டும் பிறவி எடுக்க் வேண்டும்.
1464. நேர்மையுடைய செங்கோல் மன்னர்கள் உண்மையான வேத நெறி விளங்கிய முனிவர்கள் எத்தனை ஆயிரம்பேர் இந்த உண்மையை உணராமல் அழிந்தார்கள். யோகத்தை அறிந்த எண்ணற்ற சித்தர்களும் தேவர்களும் நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் பெருமையாய் பரமசிவத்தை தவிர வேறு உயிர்க்கு நன்மை செய்பவர் இல்லை என வணங்குவர்.
1465. யோகியர் யோகம் கிரியை சரியை என்ற மூன்று நெறிகளை கொண்டு மேன்மை அடைவர். பயன் தருவன கிரியையில் கிரியை, கிரியையில் சரியை என்பனவாகும். ஆசையை விட்ட சரியை ஒன்று அவ்வாறு இருக்கும் ஒளிமண்டல சிவாதித்தன் பத்தியில் அன்பு கொண்டேன்.
1466. யோக நெறியில் சமய தீட்சை என்பது பல யோக நெறிகளை பற்றி நினைத்தல். யோக நெறியில் சிறந்த தீட்சையானது அட்டாங்க யோக நெறி நிற்றல். யோகத்தில் நிர்வாண தீட்சையானது பராசத்தியின் தரிசனம் பெறுவது. யோக அபிடேகமாவது ஒளிமிக்க சித்திகளை அடைதல்.
#####
ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#####
சரியை!
1443. வீடுபேற்றை அடைவதர்உ முதல் அங்கமான சரியை நெறி இது என் வேத ஆகமங்களை ஆய்கின்ற காலாஞ்கி, கஞ்ச மலையமான், கந்துரு, ஆகியவர்களே கேளுங்கள். இந் நிலவுலகத்தில் சுத்த சைவர்க்கு உயிரைப் போன்ற நெறி சரியையாகும்.
1444. இறைவன் உயிர்க்கு உயிராக நிற்பதை அறிதல் சிறந்த ஞானமாகும். உயிருக்கு ஓலியை அளிக்கும் பொருளாக இறைவனைக் காண்பது மேலான யோக் பூசை. வெளியே பிராணப் பிரதிட்டையாக ஆவாகனம் செய்தல் வெளிப் பூசையாகும். வெளியே செய்யின் சிவபூசை ஞானத்தை நோக்கிய வாயில் ஆதலால் கடைப்பட்ட அன்பாகும்.
1445. நாடுகள் நகரங்கள் நல்ல கோவில்கள் என்பனவற்றைத் தேடி அங்கு சிவன் வீற்றிருக்கின்றான் எனப் பாடுங்கள். வணங்குங்கள். ஒருமைப்பட்ட நெஞ்சத்தை இறைவன் தன் கோயிலாகக் கொள்வான்.
1446. கோவில் வழிபாட்டைச் செய்யும் பக்தர் சரியை வழியில் நிற்பவர். கிரியை வழியில் நிற்பவர் திருநீறு முதலிய சிவசாதனங்களை அணிந்து சிவ வேடம் தாங்கி நிற்பவர். தூய இமயம் முதலிய அட்டாஅங்க யோக உறுப்புகளை உணர்ந்து அவ்வழியில் நிற்பவர் தூய யோகியர். சித்தர் சிவத்தை தன்னில் கண்டு தான் அதில் ஒன்றி நிற்பவர்.
1447. உண்மையான ஞானம் உடையவர் தாமே இறைவனாக ஆனவர். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி அடைந்தவர் யோகியர். கிரியை உடையவர் சிவபூசையை தவறாமல் செய்பவர். கிரியை நெறியில் நிற்பவர் பல பதிகளுக்குப் பயணம் செய்வார்.
1448. கிரியைக் கிளர்ச்சியைத் தரும். ஞானம் என்ற பூசை முறையை அறிவதற்கு அரிய சிவன் உருவத்தையும் அருவத்தையும் பொருந்தி வழிபடுபவரின் பக்குவத்திற்கு ஏற்ப தேர்ந்து கொள்ளும் பூசை உரிமையான நேசப்பொருளுக்கு உரிய உயர்ந்த பூசை.
1449. சரியை கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறும் ஞானம் நான்கும் விரிவாயுள்ள வேதாந்தச் சித்தாந்தத்தால் அடையப் பெறும் ஆறு முடிவைக் கொண்டவை. உன்மைப் பொருளான நந்தியம் பெருமான் குருமண்டலத்தில் பொன்நகர் அடைந்து மயக்க அறிவைக் கொண்ட ம்க்கள் வணங்கி அறிவைப் பெறும்படி வைத்தான்.
1450. சமய தீட்சையால் ஆன்மாவில் பதிந்துள்ள மலக் குற்றங்களை அகற்றி ஆணவ மலத்தினது சக்தியைக் குறைத்தல். சிறப்பான தீட்சையால் சிவத்தின் துணையைக் கொண்டு அமையப் பெற்ற மந்திரங்களால் ஆன்வம், கன்மம், மாயை என்ற மூன்றின் வன்மைகளைக் குறைத்தல். சமயத்தில் அமைந்திருக்கும் நிர்வாண தீட்சையான நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீத கலைகளில் மலக்குற்ரங்களைப் போக்கி ஆன்மாக்களின் மேல் உள்ள கலைகளுக்கு தகுதிப்படுத்தலாகும். திருமுழுக்காட்டு என்பது சத்தி நிலைபெறப் போதித்து நிலை பெறுதலே.
#####
கிரியை!
1451. ஒப்பற்ற சிவம் பத்து திசைகைளிலும் பரவியுள்ளது. எந்த திக்கில் இலை. எப்போது இல்லை. எங்கும் எப்போதும் உள்ளார். அத்தகைய மலம் அற்றவர்க்குப் பணிந்து திருவடியை அடைக்கலன் என உறுதியாய் பற்ற மென்மேலும் தாவி வரும் வினையாகிய கடல் ஆன்மாவைச் சாராது என்பதை அறிந்து கொள்க.
1452. காட்டில் நிறைந்து மணம் கமழும் சந்தனமும் வான் அளவ நிறையும் வண்ண மலர்களும் சாத்தி வணங்கினாலும் உடல் பற்றை விட்டுத் தியானிப்பவர் அன்றி தேன்போல் இன்பத்தை தரும் சகசிரதளத்தில் இருக்கும் திருவடியைச் சேரமுடியாது.
1453. பசுங்கன்றைப்போல ஒலிக்கின்ற கழலை உடைய திருவடியை வணங்குங்கள். ஞானத்தைத் தரும் சுழுமுனை நடுவே தோன்றும் தேவர் உலகக் கன்றான வானவர் வந்து உம்மை வழிபடுவர். பெருமையுடைய காளையூர்தியையுடைய பெருமான் திருவருளைத் தாங்கும் பாத்திரம் ஆவீர்.
1454. வணங்கி எட்டு திக்குகளில் உள்ள மண்டலங்களில் எல்லாம் அவன் பணியைச் செய்யும் சத்தியை ஒரு பாகத்தில் உடைய இறைவன் பெருமையை உணர்ந்து வழிபடுவதே மக்கள் பணி. வல்ல பெருமானை போற்றுவது அன்பினால் ஆகும்.
1455. பக்தன் தூய்மையான மந்திரத்தை எண்ணி அவ்வாறு நடந்து பழகி சுத்த மாயை என்ற அருள் ஆற்றலை குற்றம் இல்லத உண்மை யோகத்தில் அமைந்த நெறியில் பொருந்தி தன்னையும் பெருமானையும் உணரும் ஞானத்தினால் சித்தம் குருமண்டல பிரவேசத்தால் சிவமாய் அமையும்.
1456. சிவன்மேல் கொண்ட இடையறாத அன்பினால் உருகித் தினந்தோறும் நாத வழிபாடு செய்வேன். செம்பொன் போன்ற சகசிரதளத்தில் இருக்கும் விந்து நாதமான திருவடியை வணங்கி நின்று துதிப்பது எனக்கு அருள்வாய என்பதற்கே.இறைவன் தலையில் சோதியாய் நின்று அருள்வான்.
#####
ஓம்நமசிவய!
ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!
#####
கடுஞ்சுத்த சைவம்!
1438. வெளி வேடங்களில் விருப்பம் இல்லாது இறைவனைச் சேர்ந்து உலகியல் ஆடம்பரம் இல்லாமல் ஆசையையும் பற்றையும் நீத்து பிறவித் துன்பத்தை அளிக்கும் பாசமும் சில போதமும் பாழாகச் செய்யும் சிவஞானம் பெற்றவரே சுத்த சைவர்.
1439. உடல் எனச் சொல்லப்படுகின்ற அன்னமயக் கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய ஐந்தையும் மூலாதாரம் முதலிய ஆதாரங்கள் ஆறையும் ஐந்து பிரிவாய் இருக்கும் சுத்த மாயை முதலிய சிவ தத்துவத்தையும் இவற்றின் சார்பானவற்றயும் நீக்கி தன் உண்மை நிலையை அறிந்து அதில் நிற்றலே சித்தாந்த நெறி.
1440. இறைவனால் அருளப்பட்ட ஆகமங்களில் சொல்லப்பட்ட பரமுத்திகளில் சாராமல் முத்தர் கண்ட பிரணவப் பதத்தால் உணர்த்தப்படுவதே மேன்மை அடைந்த பரமுத்திக்கு மூலம். அதை உணர்ந்து ஆன்மா பிரணவப் பொருளான இறைவனை அறிந்து உலக பந்தங்களை விட்டு நீங்கினால் சுத்த சிவமாகும் பேறு பெறுவர். அவரே சுத்த சைவர்.
1441. அறிபவன் நான் என்றும் அறியப்படும் பொருள் சிவம் என்றும் ஆராய்ந்து சிவத்தைச் சேரவே சிவன் சீவன் என்ற இரண்டு நிலையில்லா நற்சிவம் தானே நான் என்ற உண்மையை உணர்ந்து அதனால் அறியப்படும் பொருள் எனவும் அறிபவன் எனவும் பிரிந்து அறிதற்கு இயலாத பெருநிலையை அடைந்தேன்,
1442. இன்னதென்று கூறுவதற்கு அரிய அந்த நெறியை அடையப் பெற்றவர் பொருத்துதற்கு அரிய கண் முதலிய ஐம்பொறிகளும் செயல் அற்று அடங்கிவிடும். மேல் இருக்கும் ஞானம் விளக்கொளி போன்று ஓளிரும் பின் சாயுச்சிய நிலையில் இறைவனுடன் ஒன்றியவனாகி ஏகனாகி நிற்றல்
பொருந்தும்.
#####
More...
ஓம்நமசிவய!
தொந்தி வயிற்றுத் தந்தி முந்திய பொருட்கும்
முந்தியோய் ஐந்துகையுடைய ஐய ஐந்தொழில்
ஆற்றும் அமர அருளாய் அருள்வாய் ஆண்டவ
தருவாய் மணமலர்த் தாராய் போற்றி! போற்றி!
#####
மார்க்க சைவம்!
1427. பொன்னால் செய்யப்பட்ட உருத்திராக்காமான சிவ சாதனம், திருநூற்றுப் பூச்சான சிவசாதனம், ஐந்தெழுத்து ஓதலான ஞான சிவ சாதனம்,, தீயவருடன் சேராமல் நல்லடியார்களுடன் செர்ந்திருத்தலான சாதனம், ஆகியவை சுத்த சைவர்குரிய சன்மார்க்க ஒழுக்கம்.
1428. குற்றம் நீங்கிய ஞான ஓலி வீசும் ஞானத்திற்கு மன்னன் ஆகி துன்பம் இல்லாத வேதாந்த சித்தாந்தங்கள் பொருந்தும் ஞானம் உடையவன். மேன்மையுடைய சுத்த சைவத்தில் பக்தி உடையவன் அழிவில்லாதவன்.
1429. காரணம், காமிகம், வீரம், சித்தம், வாதுளம், யாமளம், காலோத்தரம், சுப்பிர பேதம், மகுடம் இந்த ஒன்பது ஆகமங்களே விரிவைப் பெற்று இருபதெட்டு ஆகமங்களாக ஆகும். அவை சைவம், சௌத்திரம், ஆரிடம் என மூன்று வகையாகி வேதாந்த முடிவாகி சித்தாந்த உண்மை சுத்த சைவர்க்கு ஒன்றானது.
1430. கேவலத்தில் சாக்கிரம் செப்பனம் சுழுத்தி என்ற மூன்று சுத்தத்தில் சாக்கிர சொப்பனம் துரியம் துரியாதீதம் என்ற நானகு ஆகிய எழும் சத்தும் அசத்தும் ஆகியவனவாகி அவற்றைக் கடந்துமான பராபரை சீவர்களைச் செலுத்தும் பராபரை, சீவர்களுக்குள் பொருந்திய் உயிர்க்கு உயிரான பராபரை சிவத்திற்கு அருட் சத்தியாய் எங்கும் பரந்துள்ளாள்.
1431. சத்து அசத்து ஆகியன கடந்த ஞானியர் சத்தியே தாமாகி, அறிவு, அறியாமை நீங்கிய சிவமாய் பாலிக்கும் பாவனையில் இரண்டு அற்ற நிலையில் அதீத பாவனையில் முழுகியிருப்பவர்களிடம் அனைத்து சித்திகளும் விளங்கும்.
1432. ஆன்மாவான தன்னையும் பரமசிவத்தையும் சதாசிவனான மன்னனையும் பதிபசுபாசம் ஆன முப்பொருளையும் அநாதியாய் இருந்துவரும் பாசத்தன்மை யையும் குற்றமற்ற வீடு பேற்றையும் சுத்தசைவர் தடை நீங்கும் வழி என எண்ணுவர்.
1433. முழுமையான சிவத்தில் சித்தத்தை வைத்து ஆனம் போதம் அற்று மறை முடிவைப் பெரிது என ஆனந்தத்துடன் துவாத சாந்தத்தில் முறையாகப் பெறும் சிவபோகம் சுத்த சைவர்க்கு முதல் நிலையில் கிடைக்கப் பெறும்.
1434. தன்மையான ஞானத்தில் மதிப்பு இல்லாது சிறந்த யோகமும் பெரிது எனத் தெளிந்து கொள்ளாத சிந்தனையை தெளியச் செய்து அங்குச் சிவத்தை சிவோகம் பாவனையைச் செய்து முறையாய் நிற்றல் ஞானிக்குரிய சரியை ஆகும்.
1435. வேதாந்தத்தை உணர்ந்தவர் பிரம்ம வித்தையை அறிந்தவர், நாத தரிசனம் செய்தவர், நன்மைகளில் மகிழாமலும் தீமைகளில் சோர்வு அடையாமலும் நிற்கும் மேலான யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கைக்கு வேறான சித்தாந்த அனுபவம் உடையவர் இயற்கையை அறிந்து தக்க உபாயத்தால் சிவத்தைச் சேர்வர்.
1436. வானை இடமாகக் கொண்ட மேகங்கள் வானத்தைசென்று அடையா. கண்ணால் காணப்படும் பல் காட்சிப் பொருள்கள் கண்களைத் தாமாக வந்து பொருந்தா. அவற்றைப் போன்று எண்ணத்திற்கு அப்பால் உள்ள பொருளாக எண்ணப்படும் சிவபரம் பொருளை பசுவான சீவர்களைப் ப/ற்றியுள்ள் பாசங்கள் சென்று அடையாது.
1437. பிரமம் என்பது ஒன்றே எனும் வேதாந்த இலட்சியமும் இறைவன் வேறு சிவன் வேறு எனும் துவைதமும் இல்லாததாய் பொருள் இயல்பினால் வேறாய்க் கலப்பினால் ஒன்றாய்ச் சுத்தாந்த பாவனையில் நின்று சமய நிந்தனையை விட்டு அகன்று பராபரையான நேயப் பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்று சிவமாதலே சித்தாந்தத்தால் பெறப்படும் சித்தி.
#####
ஓம்நமசிவய!
கயமுக அசுரனைக் காய்ந்தாய் மயலறும் இன்ப
வாழ்வே ஆனையாய்ப் புழுவாய் ஆனாய் பானை
வயிற்றுப் பரமே கடம்பொழி யானைக் கன்றே
மடம் ஒழி அறிவின்வளவனே போற்றி! போற்றி!
#####
ஐந்தாம் தந்திரம்
சுத்த சைவம்!
1419. உலகத்தையும் அதில் அடங்கும் ஊரையும் ஒருசேர படைக்கின்ற பேரறிவாளனான இறைவனின் பெருமை அளவிடமுடியாதது மேருமலையையும் மூன்று உலகங்களையும் ஆள்கின்ற இறைவனிடமிருந்து தோன்றிய மண்ணுலகையும் நான்கு வகை சைவமும் ஆகிய இவற்றின் பெருமைக்கு நிகராகும்.
1420. அழிவு இல்லாதது அழிவுடையது என்ற இரண்டு தன்மைகளும் உடையவை எவை என்று அறிந்து அறிவும் அறியாமையும் ஆகியவை சேராமல் விட்டும் சுத்தமாயை அசுத்த மாயை என்ற இரண்டிலும் பொருந்தாமல் நின்று அழிவற்ற மேலான பொருளான இறைவனை பார்த்திருப்பது சுத்த சைவத்திற்கு அழகாகும்.
1421. கற்க வேண்டியதைக் கற்று பதினாறு கலகளை உடைய சந்திர கலைகளை அறிந்து சிவயோகத்தைப் பயின்று முன்னல் இருக்கும் அ உ ம காரங்கள் விந்து நாதங்களின் அறிவை முறைப்படி அறிந்து பிரணவ பதத்தை புலப்படுத்தும் சாந்தீயாதீத கலையைப் பொருந்தி உயிரின் மாயை சார்பான குற்றத்தை விட்டு மேலான் சிவத்தில் வாழ்பவர் சைவ சிந்தாந்தர் ஆவர்.
1422. வேதாந்தம் என்பது சுத்த சைவ சித்தாந்தம். இந்நெறி நிற்பவர் நாத வடிவான சிவத்தை தரிசித்த சலனம் இல்லாதவர். தத்துவ முடிவை ஞான மயமாகப் பயன் படுத்த நாத முடிவில் நிறைவடைந்து இருக்கும் சிவம் அறியும்படி வேண்டிய பொருளாகும்.
#####
அசுத்த சைவம்!
1423. இறைவனின் இரண்டு திருவடிகளையும் புகழ்பவரின் பெருமை உடைய உடம்பில் இரண்டாகப் பொருந்திய இரண்டு காதணிகளும், திருநீறும், தலை மாலையுமான இரண்டு அடையாளங்களும் இரண்டு கண்ட மாலைகளும் சரியை கிரியை வழி நிற்பவர் அணியப்படுவதாகும்.
1424. காதில் பொன்னால் செய்யப்பட்ட இரண்டு கடுக்கண்களை அணிந்து சிவ வேடத்தில் இடையில் ஓர் ஆடையும் அதன்மேல் ஓர் ஆடையும் அணீந்தவரய் அத்துவா சோதனை செய்து உபதேசத்தைக் குருவிடம் பெற்று சைவ ஆகமங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர் ஒருவகைச் சைவர்.
1425. பிரணவம், மண், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், அக்கினி, விண்மீன் என்பவை உடலில் இருப்பதை அறிந்தவர் அறிய வேண்டியவற்றை அறிந்தவர். இவர் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவர், விந்து, நாதம், சத்தி, சிவன் என ஒன்பதாய் இருக்கும் அரிய பொருளான சிவத்தை அறிவர். ஒன்பது பொருளாய் உடம்பில் உள்ள சிவத்தை தம்முள் அறிந்தவர் பகுப்பை உடைய உலகங்களை எல்லாம் அறிந்தவர்.
1426. ஞானியர் என்பவர் உலக்த்தில் தோன்றும் ஞான நூல்கலுடன் மோன நிலையையும் முழுமையாக எண்ணப்பட்ட எண் பெருஞ் சித்திகளையும் மற்ற உலகங்கலின் அறிவையும் உபநிடத அறிவையும் சிவத்தையும் தன்னையும் அறிந்து நிற்கும் ஆற்றல் உடையவர் ஆவார்.
#####
ஓம்நமசிவய!
பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!
#####
நவாக்கரி சக்கரம்!
1219. நவாக்கரி சக்கரம் புதுமையைத் தரும் ஓர் எழுத்தான அம்மையே ஒன்பது எழுத்துக்களைக் கொண்ட தேவி மந்திரமாக அதுவே எண்பத்தொரு வகையாக் நவக்கரி கிலீம் முதல் சௌம் வரை இருக்கும்.
1220. முதலில் சௌ, ஔ, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், கிரீம், கிலீம் என்ற இந்த ஒன்பதும் மந்திர உறுப்பாய்க் கொண்டு இவற்றுடன் கிலீம் மந்திரம் மூலமாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம என உச்சரிப்பாயக.
1221. நவாக்கரி என்பது நான் அறிந்த ஸ்ரீவித்தையாகும். இதனால் நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நாவில் வைத்து நினைத்தால் நவாக்கரி சத்தி நன்மைகள் அருள்வாள்.
1222. ஞானம் கல்வி முதலிய நன்மைகள் எல்லாம் உண்டாகும் கொடுமையைத் தரும் சஞ்சிதம்-பழவினைகள் அந்த உயிரை விட்டுப் போகும். இந்தப் பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் ஆகாமிய வினைகளை நீக்கி வரம் தரும். சந்திர மண்டலம் விளங்குவதை அனுபவத்தால் அறியலாம்.
1223. சக்கரத்தை வெள்ளி பொன் தகடுகளில் அமைக்க வேண்டும். மனதில் தியானித்தால் அமையவுள்ள வினைகளை வெல்லலாம்.. நீங்கள் வாழ்கின்ற பூமி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் தியான் நிலைக்கு ஏற்ப நிலைத்திருக்கும்.
1224. ஸ்ரீம் முதல் கிலீம் வரை தியானிக்கவும். அப்படி தியானிக்கும்போது முதலாக உள்ளது இறுதியாக அமையும். நெல்லும் அறுகம்புல்லும் கொண்டு தியானித்து வணங்குங்கள். உங்கள் வழிபாட்டை விரும்பி வெளிப்பட்டு அருள்வாள்.
1225. வெளிப்பட்டு அருள் செய்யும் சத்தி எத்தகைய நிறம் கொண்டவள் என்பதை உணர அழகிய காயம் பூவைப்போல் கரிய வண்ணம் ஆகும். அப்படி கருதி தொழுதால் எண்ணியவை யாவும் கைகூடும். அவள் விரும்பும்படி நடந்து கொள்வாயாக.
1226. இவ்வுலகில் எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் உனக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரவும் சூரியனின் கதிரைப் போல் புக்ழானது பரவும். பராச்த்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க.
1227. . பொன்னும் மணியும் வெள்ளியும் தானே வந்தடையும். பராசத்தியின் அருளூம் ஞானமும் வரும். தேவர் வாழ்வு கை கூடப்பெறும். அவற்றை அடையும் வகையைத் தெரிக.
1228. நவாக்கரியை தேவர்கள் ஆவதற்கு மக்கள் அறிவார்கள். அவளை அறிந்த தேவர்களூக்கு தேவர்களீன் தலைவன் சிவபெருமான் அருள் செய்வான். பாயும் தீ கங்கையை சூடி அதன் வேகத்தை மாற்றியருளிய சிவபெருமானை அடைய முயல்வாயாக.
1229. வணங்குதற்குரிய சக்கரத்தில் பொருந்திய் எழுத்துக்கள் உலகம் புகழ்கின்ற ஹிரீம் முதலான் ஸ்ரீம் இறுதியாக் உள்ளவையாகும்.. இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழுடன் கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்வீர்.
1230. தனக்கு நிகரில்லா தலைவி சத்தியை தரிசனம் செய்யுங்கள். அள்ளிக் குடிப்பதைப் போல்முகப் பொலிவு உண்டாகும். மென்மையான பரமசிவத்தை மஞ்சமாகத் தாங்கும் நிலையான சத்தியை போற்றி உள்ளத்தே கொள்ளுங்கள்.
1231. அடையும் பேறாக உள்ள பெருமையை எண்ணினால் நாட்டை ஆளும் மன்னரும் வசமாவர். பகைவர் வாழ்வதுமில்லை இறைவனை ஒரு பகுதியிலே கொண்டவளைத் துதியுங்கள்.
1232. எட்டுத் திசைகளுக்கும் தலைவி சத்தியை வழிபடுங்கள். தேவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை எண்ணி அதில் கொண்ட ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மற்றுங்கள். நாயகியின் திருவடி துணையை பற்றித் தெளிவு அடையுங்கள்.
1333. சத்தியின் திருவடிகளை இடைவிடாது நினைத்திருந்தவர் நா அசையாமல் உள்ளே செபிப்பர். தங்களது அகப் பார்வையை செலுத்தி இருக்க பெருமையுடைய திருவடியைக் காண்பவர் ஆவர்.
1334. ஐம் முதலெழுத்து வலர்ந்து தோன்றும் சக்கரம் ஐம் முதலான பீசங்களோடு ஹிரீம் இறுதியாகும். அகர வாக்கியப் பொருளான சிவனுக்குரிய சத்தியை மாயைக்குத் தலைவியாய் போற்றுக.
1335. வாகீசுவரியான சத்தியை வேதங்கள் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நாவால் பயில அதற்கு அருள் செய்ய வல்லவளை அண்ணாக்கின் உள்ளே முன் எழக் கண்டு கொள்வீர்.
1336. இந்த இயல்புடைய சக்கரத்தை நாவில் எழுதினால் இது கூத்தப் பெருமானின் வடிவமாகும் பொன் மன்றில் இருக்கும் சபா வித்தையும் உயிர்கள் கையதாகும். மெல்லியலான நவாக்கரி அருள் பொருந்துவதால் உலகத்தை வெல்லலாம்.
1337. மென்மையான இய்ல்புடைய உண்மைப் பொருளானவளைக் குருவின் உபதேசப்படி விடாது பற்றுங்கள். தியானியுங்கள். இன்ப துன்ப கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்திடும்.
1338. நன்மைகள் யாவும் சொல்லியபடி நடக்கும். சொல்லிய வண்ணம் சொல்லிய பயனும் தொடர்ந்து விடும். வாக்கீசுவரியே நாவில் பொருந்தி இருப்பதால் எல்லாக் கலையும் பொருந்தி நாவரசனாக இருப்பான். பரந்த உலகில் பகையும் இராது.
1339. பகைக் கெடுக்கும் கௌம் முதல் ஐம் இறுதியாய் உள்ள சக்கரத்தை நன்றாய் அறிந்தவரை பிறர் பழித்திட மாட்டார். பற்பல வடிவங்களாய் உள்ளவை யாவும் இவருக்கு வேறான்வை அல்ல. வேறுவகையின்மையாக எல்லாம் இவரை வணங்குபவனாம்.
1340 தத்துவ நாயகியை எல்லாரும் வணங்குவர். அந்நல்லவர் எல்லாம் அவளிடம் பொருந்தியிருப்பர். காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்களும் அகலும், எண்ணிய செயல் கைகூடப்பெறும்.
1341. தனக்குமேல் பிறர் இல்லாமல் தானே பேசி அடங்குவன் ஆவான். தான் ஒருவனே எண்ணிய வண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாவான். தானே பேருழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவத்தைக் காண்பவன் ஆவான். தானே வணங்கப்படக்கூடிய தலைவனும் ஆவான்.
1342. எல்லா உயிர்களும் ஆகியவள் சத்தியே எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகுடைய அன்னை அவள் திருவடியை வணங்கினால் வினைகள் நீங்கிப் புண்ணியன் ஆகலாம்.
1343. உலகம் எங்கும் பொருந்திப் புண்ணியன் ஆகி மதிக்கத் தக்கவராய் அனைவருடன் கலந்து விளங்குவான். அருள் நிறைந்தவனாக உலகம் முழுவதும் இனிமையாக அமர்ந்திருப்பான்.
1344. சக்கரத்தின் பீசம் கிரீம் முதல் சௌம் வரை அது தானாக உள்ள சக்கரம் என்று அறிபவர்க்கு அஞ்ஞானமயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உ”றவாகி அறிவு நிலையில் ஒளீயாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குவாள்.
1345. ஒளி செய்யும் பராசத்தி உள்ளத்தில் எழுந்தருளினாள் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளை விளக்கித் தெளிவு தரும் மழையுடனே செல்வத்தையும் உண்டாக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கு அருள் செய்வாள்.
1346. நவாக்கரி சக்கரத்தை பூசை செய்து அறிவாய். உலகத் துன்பம் யாவும் விலகும். பகையை தடுத்து நிறுத்தும். மன்னனும் வணங்கும்படி செய்யும், மனத்தை கலங்கச் செய்யும் துன்பங்கள் ஏற்படாது.
1347. சக்கர வழிபாட்டைச் செய்பவர்க்கு துன்பங்கள் உண்டாவதில்லை. உள் உடல் பொன் ஒளியுடன் விளங்கும். பிற உயிரைக் கொல்லாதவர் என்பதால் பிறவியை அடைய மாட்டார்கள். வாழ எண்ணமுடைய உயிர்களுக்கு இதைவிடச் சிறந்த வழியில்லை முடிவும் இல்லை.
1348. தியானம் செய்தவர் ஒளி பெற்றுத் திகழ்வர். சினத்துடன் எழும் ஆகாமய வினைகளைக் காணாதவர் ஆவார். பரந்து எழும் உள்ளொளி அவர் வாழும் பகுதியில் படரும். அப்பகுதியில் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளியைப் பெற்று ஞான மயமாய் இருக்கும்.
1349. ஹௌம் முதல் கிரீம் வரை உள்ள மகிழ்ச்சியைத் தரும் சக்கரத்தை கண்டறிவார்க்கு தெளிவான ஞானமும் மனமும் உண்டாகும். அவர் வணங்கி வழிபடுவது ஐந்தெழுத்துடன் கூடிய நவாக்கரியாகும்.
1350. சதாசிவ மூர்த்திக்கு அருள் சத்தியாய் விளங்குபவள். இவள் கீழ் நோக்கும் சத்தியாக உயிர்களைச் செலுத்துபவள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, இவற்றை அறியும் அறிவாய்த் துணை இருப்பாள். அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுடன் அடக்கிக் கொண்டவள்.
1351. எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட ஈசான மூர்த்தி வடிவில் என்னுள்ளே இடம் பெற்று இருப்பவள். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் வானிலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம்.
1352. சத்தி உயிருடன் கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியை காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடி இருப்பவரிடம் கண்பது சிவபேதமின்மையால் காணக்கூடும். உயிர்க்கு உயிராய் இருக்கும் அவள் வழியே உயிர்கள் செயல்படுவதைக் காணமுடியும். அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாய்.
1353. பயிற்சி செய்பவருக்கு ஏழு உலகங்களும் ஒன்றாக கலந்து நிற்கும். எல்லா உயிர்களிடமும் கலந்து பொருந்தி தானாக கண்பர். நிலத்தின் எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவார். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாய் விளங்குவர்.
1354. மெய்ப் பொருளான ஒளம் முதம் ஹௌம் வரை உள்ள சக்கரத்தில் சிவம் விளங்க வீற்றிருக்கின்ற அமுதேசுவரி நன்மையைத் தரும் பொருளாக உடல் நடுவில் இருப்பார்.
1355. மூலாதாரம் முதல் பிரம்ரந்திரம் வரை பேரொளியாக இருக்கும் அமுதேசுவரியுடன் மூல வயுவை மெலே கொண்டு வந்து பொருந்தச் செய்தால் நள்தோறும் புதுமைகளை பார்த்தபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. நாள் தோறும் புதுமைகளைக் கண்டபின் அவர் உடலுக்கு கேடு ஏதுமில்லை.
1356. மூலாதாரத்தினின்று மேல் நோக்கி எழும் ஒளியை அறிந்தபின் கேடு வந்து சேராது. பேரொளியைக் கண்டபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்ட பின்னர் உலக துக்க காடும் இல்லை.
1357. நாவ வந்தடைந்த உலகம் தோன்றாதபடி பாழ் செய்து அந்த உலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று. தானே எங்கும் நிறைந்திருப்பதால் வேறு இடம் இல்லை. உலவுவதற்கு வேறு வழி இல்லை. தான் என்ற பொருளே இல்லை. சலிப்பிற்குரிய இடம் ஏதுமில்லையாதலால் அசையாமல் அனுபவத்தில் நிலை பெறுக.
1358. பயிற்சி செய்பவர்க்கு ஏழு கடலும் முன் நிற்கும். உள்ளத்தில் நினைத்தவை யாவும் முன்னே நிற்கும். சத்தி தன்னிடம் நிலை பெறக் காண்பவர்க்கு தலையின்மீது ஒளிகள் அமைந்து இருக்கும்.
1359. விளங்குகின்ற ஒளியாய் திகழும் ஸௌம் முதல் ஒளம் வரை பீசங்களை உடைய நவாக்கரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் இருக்கும் மின்னல் கொடி போன்றவளை ஞானத்தை உடையவளாய் அறிந்து இருப்பாயாக.
1360. தெரிய வரும் உண்மைப் பொருளைச் சொன்னால் எங்கும் இருக்கும் சத்தியே அவள். இந்த உண்மையான ஞானப் பொருளை உணர்ந்தவரே சத்தியை உணர்ந்தவர் ஆவார்.
1361. அந்த சத்தி தானே வானம் போல் உருவு இல்லாமல் எங்கும் பரந்து காணப்படுப்வள். தானே அனைத்துப் பொருளுமாகி எல்லாவற்றையும் த்ன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானாகத் திகழ்பவள்.
1362. அண்டங்கள் யாவற்றிலும் அளத்தற்கு இயலாதவளாய் இருக்கின்றாள். பிண்டமான உடலில் ஞானம் இருக்கும் பெருவெளியைத் தன்க்குரிய இடமாக கொண்டவள். ஓமம் செய்கின்ற ஓம குண்டத்தில் பல நன்மைகளைப் பெற்றாலும் கண்டத்திற்கு மேல் இருக்கும் நிலையான கலப்பை அறியாதவாராய் சிலர் உள்ளனர்.
1363. சத்தி கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கலந்திருப்பதை அறியார்கள். உடலுடன் கூடிய உயிர் உடலை விட்டு ஒருநாள் பிரிந்துவிடும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடியதால் நாதத்தை அறியர்கள். இதற்கு அவர்கள் தலையெழுத்தே காரணம்.
1364. சுயம்புவாகத் தோன்றிய அந்தசக்கரத்தைப் பற்றிச் சொல்லின் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக பத்து வரைக. இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகக் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் அறைகள் எண்பத்தொன்?றாய் அமைக்க.
1365. சக்கரத்தில் கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன் நிறம் உடையது. கட்டங்களில் அமைந்துள்ள கோடுகள் சிவப்பு நிறமாக இருக்கும். சத்தியினது எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்
1366. பொருந்திய் மரப் பட்டையில் எழுதிய சத்தி பீசங்கள் எண்பத்தோர் அறைகளில் அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஓமம் செய்துபின் உயிர் ஆகுதி செய்ய வேண்டும்.
1367 .இயந்திரத்தில் அமைந்த சத்தி பொன்போன்றவள் பரபரப்பு இல்லாது சிக்கெனப் பிடித்துக் கொள்வாயாக. தியானிக்கத் தொடங்கிய நாளிலே இன்பம் உண்டாகும். வேள்வியின் தலைவனான நான்முகன் சேர்த்தபின் நேயப் பொருளை சிவத்துடன் நன்கு சேர்தலுமாகும்.
1368. அரைக்கப்பட்ட குங்குமச் சாந்து, குங்குமப்பூ, கத்தூரி மணம் எங்கும் பரவும் பல நறுமணங்களின் கூட்டு சவ்வாது புனுகு நெய் பச்சைக் கர்பூரம் பசுவின் கோரோசன்ம் பனிநீர் என்ற ஒன்பது பொருள்களையும் சேர்த்து சக்கரத்திற்குச் சார்த்துவயாக.
1369. சத்தியுடன் உள்ளத்தை வைக்கும் தவத்தை செய்தால் உள்ளே எழும் முதிராத இளங் கொங்கைகளை உடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக இருக்கும் இம்மந்திரத்தை ஆயிரக்கணக்கில் உருவகம் செய்க.
1370. உள்ளத்தே இருக்கும் ஒளிவடிவான் தாயும் தந்தையுமான நவாக்கரி தேவிக்கு கைகள் ஆறு. மழு, சூலம், தோட்டி, பாசம், வில், அம்பும், என்பவைகளுடன் கிலீம் பீசத்தை உடைய் தேவி வழிபடுபவர் முன்னாள் வெளிப்படுவாள்.
1371. அம்மையைச் சூழ யோகினி சத்திக/ள் அறுபத்து நால்வர் இருப்பர்.. வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூததமனி எனும் எட்டு பேரின் இருகைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு இருப்பர். யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியபடி சுற்”றிலும் இருப்பர்.
1372. பொன்னால் ஆன காதணி, முடி ஆடை முதலானவற்றுடன் காணப்படுவது திருவுருவம். இம்மூர்த்தம் அக்கினியை மேனியாய் கொ?ண்டது. பழமையாகவே தன் பேரொளியை இருப்பிடமாகக் கொண்டு இருப்பவள்.
1373. இதை அறிந்து மனதுள் ஒப்பில்லாத சத்தியை தரிசித்தால் நீக்கமில்லாமல் நிறைந்து அருள்வாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆன பிரணவம் தோன்றும். உடம்பைத் தாண்டி கீழ் நோக்கி சகசிரத்தளம் இருக்க அருள்வாள்.
1374. பேரொளிவடிவான சத்தி உண்மையை அளிக்கும் தத்துவ ஞானத்தை அடியவரின் குரு மண்டத்திலிருந்து விளங்கச் செய்வாள். அவரிடம் இறைமைக் குணங்கள் இருக்குமாறு இருந்து கருவின் வழி பிறக்கும் செயலைப் போக்கி பெரிய வீட்டு நெறியை அருள்வாள்.
1375. பேரொளி பெருஞ்சுடராய் மேலான ஒளியாகி இருக்கும் தலைவி சூரிய ஓளி போன்ற கன்னியாய் பொன் நிறத்துடன்பூமி தத்துவத்தில் ஒளீயாய் எங்கும் பரந்து நின்றாள்.
1376. சத்தி மேலே தூக்கிய கைகளீல் தாமரை மலரும் குமுத மலரும் கொண்டு இருப்பாள். அபய வரதமான இரண்டு கைகளும் கொய்யும் தளிர்போன்ற அழகுடனும் தனங்கள் முத்தும் பவள்மும் நிறையப் பெற்று நல்ல மணி பொதிந்த ஆடையுடன் இருப்பாள்.
1377. சத்தி மாணிக்கம் பதித்த முடி தலையிலும் சிவப்பு என்ற அணி பாதத்திலும் அணீந்து அருள் வழங்குபவளும் அவளே. புலன்களீன் வழி போகாது அடக்கியவர் மனத்தில் அருள்மயமாய் அவள் எழுந்தருளியிருப்பாள்.
1378. நவாக்கரி சக்கரத்தை சூழ்ந்து பரந்து உள்முகமாய் பரவியுள்ள அறுபது சத்திகளும் எட்டுக் கன்னியரும் சூழ்ந்து நிற்க இரண்டு கைகளிலும் பூக்களைத் தாங்கிச் சிறந்தவர்கள் வணங்கும் ஸ்ரீம் பீசத்திற்குகுரிய செல்லமாக இருப்பாள்.
1379. செல்வமான சத்தியை தியானித்து உள்ளம் வெலியே ஓடாமல் அடங்கி நிற்குமாயின் ஓராண்டில் ஆசைப் பளுவான சுமை நீங்கி திருவருளால் எண்ணியவை கைகூடும். சிவசூரியனிடம் பொருந்தும் செய்ல் நடக்கும்.
1380. பொருந்திய மூலாதாரத்தில் எழுந்த முழு மலராகிய நான்கு இதழ் தாமரையிலிருந்து மேலே பேரொளி பிழம்பான சகசிர தளத்தில் முன் கூறிய சத்தி பரவியுள்ள முழுமைப் பொருளாய் இருந்தபின் மூலம் முதல் துவாத சாந்தம் வரை ஒளிமண்டலம் ஆகிடும்.
1381. இந்த சோதி மண்டலத்துள் சத்தி விரும்பி எழுந்தருளியிருப்பாள். உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தோர் எழுத்தும் விந்து எழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் திறம் உடைய்வ்ள். ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தைந்து இயக்கிகள் சூழ நடுவே வீற்றிருப்பாள்.
1382. அம்மையை அருட்கண்ணால் பார்ப்பவர்க்கு முடியிலிருந்து அடிவரை பேரொளி பிழம்பாய் இருப்பாள். அவள் திருமேனி முத்துப் போன்ற வெண்மையாய் இருக்கும். அழகிய கைகள் நான்கில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியும் ஞான முத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு இருப்பாள்.
1383. நாதமான ஞான முத்திரையை உணர்ந்து பாசமாகிய வேரை அறுத்து அன்புடன் மனத்தில் சத்தியைத் துதித்தபடி இருந்தால் ஐந்து ஆண்டில் கேடு தருவன எல்லாம் அகன்று மண்ணுலகத்திற்கு மேல் அமர்ந்துள்ள சிவமாகலாம்.
1384. நெற்றிக் கண்ணையுடைய சத்தியின் அருளைப் பெறும் வழியாகி தடையில்லாத நாத தரிசனம் தனக்குள் அமையுமானால் வான் மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்க ஹிரிங்காரப் பீசத்திற்குரிய சத்தி மண்டலம் அமையும்.
1385. ஹிரீங்க மண்டலத்துள் எழும் பேரொளியைக் கண்டு மனத்தில் நினைத்தால் அது கீழிருந்து மேலே பிளந்து கொண்டு உள்ளே எழும். வீணாத் தண்டில் பொருந்திய யாவற்றையும் தாங்க முடியும்.
1386. கொப்பூழ் தாமரையினுள் ஓங்கி மேலே எழும் பிரணவத்திற்கு உண்ர்வாய் இருப்பவள். வருத்தமுற வரும் பிறவியை எண்ணி நீக்கிட அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேல் ஓங்கி எழுந்து இருக்கும்.
1387. நல்ல மணிகளை அணியாக உடைய வாகீசுவரியும் பொன் முடியும் பொன் ஆடையும் பூண்ட திருமகளும் ஆற்றலை அளித்தருளும் வெண்ணிற ஒளியில் இருக்கும் கலைமகளும் உயிர்களின் தலைவியான மனோன்மணி சகசிர தளத்தில் எழுந்தருளியுள்ளாள்.
1388. சத்தியை வழிபடும் முன்பாக இடைகலை பிங்கலையால் வெளியே போய் பொருளை அளந்த வகையில் சத்தியை வழிபட்டபின் வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்க வழியாதலை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இய்க்கிக் கொண்டிருக்கும் சத்தியை காண் வல்லவர் ஆவார்.
1389. காரணிகளான எழுத்து சத்திகள் ஐம்பத்திரண்டு காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவர். காரணி இருக்கும் பொன்னம்பலத்தில் வெளிப்பட்டும் மற்ற தத்துவங்களில் மறைந்தும் இருந்து தன் அறிளால் வழிபடுவோர்க்கு வெளிப்பட்டு அருள்வாள்.
1390. எல்லாவற்றிற்கும் காரணியாய் இருக்கும் இச்சத்தி சகசிர தளத்தில் நிலை பெற்றிருக்க கண்டு ஓராண்டு பயிற்சி செய்தால் உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். மேற்கொள்ளும் விரதம் குறையாமல் இரும்பின் பரமாகாயத்தில் இருக்கும் சிவகதிரவனைக் காண்லாம்.
1391. அன்பர்களீன் சித்தம் உலகப் பொருளுடன் இருந்தால் சத்தி இதயத் தாமரையிலிருப்பாள். உலகப் பொருளுடன் இல்லாது உலகக் காரணமான விந்து நாத சித்தம் ஆனபோது சிவனையும் உடம்பையும் பிறவியில் பொருந்தியிருக்கும் வாயுவின் கட்டினை நீக்கி உள்ளத்தில் இன்பம் பெருக்குவாள்.
1392. சத்தி தன் எட்டு கரங்களிலும் மலர்ந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு ,ஆகியவற்றைத் தாங்கி ஆரவாரத்துடன் கூத்தையும் விரும்பி நடித்தனள்.
1393. சத்தி பொன் முடியையும் முத்து மாலையையும் விரும்புவள். பவழ மாலையையும் செம்பட்டு உடையையும் உடுத்துபவள். அண்ணாந்து ஏந்திய அழகிய முலையில் கச்சினை அணிந்தவள். அரிய உயிர் இன்பம் அடைந்து உய்ய மலர்ந்த முகத்துடன் இருப்பவள்.அவள் மேனி பரிய நிறமானது.
1394. ப்ச்சை நிறம் கொண்ட இவள் சத்திகள் நாற்பத்தெட்டு. மழலை பேசும் தோழியர் எட்டு எப்போதும் உடன் இருப்பவர்கள் ஆவர். கச்சு அணிந்த கொங்கைகளுடன் இரண்டு பக்கமும் காவல் உடையவளாக மெலிந்த இடையை உடையவளாய் இனிது வீற்றியிருப்பாள்.
1395. மூலத்தில் தாங்கிய பேரொளி வடிவான சத்தியை சுழுமுனை வழி கலந்து கொள் என விருப்பம் ஆக மூலாதார வாயுவை மேலே செலுத்தி தீ காதலனைக் கூடப்போகும் காதலியைப் போல் வான் வெளிக்குச் செல்லுக.
1396. கொப்பூழுக்கும் இதய்த்திற்கும் இடையில் உள்ள சூரியன் க்ண்ணில் இருக்கும் சந்திரனுடன் சேர்வதால் நத சத்தி இருக்கும் ஞானச் சூரியன் ஆனது. அத்வே சந்திர மண்டலத்தின் விரிவாகும்.
1397. விழிக்கு மேல் இருக்கும் சத்திக்கு பத்து திசைகளும் பத்து முகங்கள் ஆகும். தாபத்தை உண்டாக்கும் சூரியன் தன் நிலையை விட்டு சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்கி வருவதால் ஆபத்தைச் செய்யும் பத்து நாடிக”ள் கீழும் மேலும் செல்வதை விட்டு அடங்கும். .வழிபடுவர்களின் பாசத்தை அறுக்க சூலத்தை பயன் படுத்தினாள்.
1398. சூலப்படை, தண்டு, வாள், பறை, ஒளி தரவல்ல ஞான வடிவான வேல், அம்பு, உடுக்கை, கிளி, வில்தாங்கி, காலம், பூ, பாசம். மழு, கத்தி ஆகியவற்றைக் கைகளில் தாங்கி அழகிய சங்கு அபயம் வரதங்களுடன் இருக்கும் கைகளை நினைத்து துதிப்பாயாக.
1399. வழி பட்டோர் எண்ணத்தில் விரும்பி அமரும் சத்திகள் நாற்பத்து நால்வருடன் உள்ளத்தில் அமர்கின்ற தோழியர் நாற்பத்து நால்வர். எண்ணம் உருப்பெரும் சகசிரதளத்தில் இருந்தவள் உலக எண்ணங்களைக் கடந்தபோது அவள் நின்றாள்.
1400 கடந்து நின்றவள் பொன் முடியுடன் மணி முத்து பவளம் சேர்ந்து செய்யப் பட்ட கச்சினை அணிந்து ப்ரந்த இடுப்பில் பட்டாடை உடுத்தி சிலம்பை அணிந்து வாலை வடிவில் வீற்றிருப்பாள்.
1401. சத்தி த்டையேதுமில்லா மேருவாகவும் அணீமா முதலிய சத்தியாகி பழைய சாத்திர அறிவை அகற்றி பேரொளியைப் பொருந்தி உணர்ந்தார்க்கு உண்மை அறிவு ஊண்டாகும்.
1402. கீழ் நோக்கிய சகசிரதளத்தில் காணப்படுபவளே சதாசிவ நாயகியான மனோன்மணி. அவள் சதாசிவரைப் போலவே முகம் ஐந்தும் கைக்ள் பத்தும் உடையவள்.
1403. நல்ல மணி சூலம், கபாலம், கிளி பல மணிகளையுடைய பாம்பு, மழு, கத்தி ஆகியவற்றுடன் இருப்பாள். மாணிக்கம் போன்ற தாமரை, உடுக்கையும் உண்டு. பொன்னாலும் மணியாலும் அவள் அலங்கரிக்கப் பட்டவள்.
1404. தன்னை வழிபடுகின்ற் சத்திகள் நாற்பதின்மர் சூழ நேசத்தையுடைய பராசத்தி நாற்பது கன்னியர்க்கு நேராக உடம்பில் உள்ள சகசிர தளத்தில் கலந்தவள். குற்றம் ஏதும் வராதபடி மகிழ்வுடன் இருந்தாள்.
1405. பிரண்வத்துள் இருக்கும் பேரொளியைச் சுமையான உடலில் இருந்து உடலில் கடந்து எழுந்திட அதையே தனக்கு ஆதாரம் என உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுபவர்க்கு ம்ண்ணின்று நீரைப் பருகி எழுகின்ற மேகம்போல் பராசத்தி தலையில் வெளிப்படுவாள்.
1406. சுவதிட்டான சக்கரத்தில் நிலை கொண்ட அ கார உ காரங்கள் சகசிர தளத்தில் சிவயநம என அகக் கண்ணுக்கு புலனாகும்படி விந்து நாதங்களாய் வெளிப்படும். காண அரியது அன்று. நாதம் எழுந்தது பயிற்சியாளருக்கு காட்சி தந்து திருவடியில் வைத்துக் கொள்வதற்கே ஆகும்.
1407. சந்திரக்கலையிடை விளங்கிய அமுதத்தை ஏந்திய கொங்கையையுடைய பராசத்தி அக்கினிக் கண்டத்தில் இடைகலை பிங்கலையால் சுவாதிட்டானத்தில் செய்ல்படும் சுக்கில சுரோணிதத்தைக் கொண்டு அமுதமயமாக மேலே இருந்தாள்.
1408. நீல மலரும் முத்தும் கலந்த குளிர்ச்சியுடைய ஒளியில் ஆனந்தமயமாக இருக்கும் அழிவில்லாத சத்தி அமுதம் போன்ற அழகான மேனியுடன் வெண்ணிற ஒளியாக வெளிப்படு அருள்வாள்.
1409. அழிவு இல்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அரிய முப்பத்தாறு தோழியாரும் சக்கரத்தை இல்லமாகக் கொண்டவர்கள் சக்கரத்தின் இதழ்களில் குடியிருந்து இவர்கள் காலவரையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றனர்.
1410. புத்தி தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. அதன் ஒளியான சோதி உள்ளத்தினின்று நீங்காது இருக்கும். ஓராண்டு சாதனை கூடிவரும்போது முன்பு கூறிய ஒள் காரம் விளங்கியது.
1411. வானில் நிலைபெற்ற அண்டங்களுள் வாழும் உயிர்கள் யாவும் மண் உலகில் வாழ்கின்ற உயிர்களைப் போல் பயிற்சியாளரை வணங்கும். திருமாலைப் போன்று பெறும் இன்பங்களைப் பற்றித் துனபம் தரும் நோய் நிறைந்ததை இங்கிருந்து சொல்ல முடியாது..
1412. மூலாதாரத்தில் கீழ் நோக்கும் முகமாய் இருந்த குண்டலினி சத்தி உ காரத்தை பொருத்தி இடை நாடியில் இருந்து எழும் ஒளியாய் சகசிரதளத்தில் நிலைபெற்று எண்ணங்களை எல்லாம் நிறைவு செய்யும் கற்பக மரம் போல் ஆனாள். அவளே எல்லா சித்திகளையும் அளிக்கும் இலக்குமி ஆவாள்.
1413. பொற் கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால் செருக்கைத் தரும் அகங்காரம் நீங்கி நிலையான பெருவெளியில் பரமகாயத்தில் பின்னிய கொடி போல இருக்கும் சத்தியைக் காணலாம்.
1414. பராசத்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். சிவமே தந்தையாகும். மாதரசியானவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் இருப்பாள்.
1415. சத்திகள் முப்பதிருவர் இருந்தனர். கன்னியான முப்பத்திருவரும் சூழப்பரவிய இதழ்களை உடைய சகசிர தளத்தில் கண்கின்ற பல் இடங்களையும் தனக்கு இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தாள்.
1416. நவக்கரி சக்கரத்தில் உள்ள சத்திகள் கூத்தப் பெருமானின் ஒளியைக் கண்டு ஊர்த்துவ சகசிரதளத்தில் இருப்பர். பெருமானும் சத்திக்ளும் உலகத்திற்கு கரணமாவார்கள். இவர்களை பழைமையான வேதம் அறிந்து கொள்ளத் தேடும். சிவசத்தி என் உடலிலும் மனத்திலும் பொருந்தி என்னை ஆட்கொண்டாள்.
1417. சிவ ச்த்திகள் தாமே வீடாய் அமைந்து ஆளப் பெற்றால் அவர்களுக்கு இல்லாதது ஏதுமில்லை. இந்த தனமையுடையவர் அயலாரிடம் சென்று இருப்பதில்லை. அவர்களுக்கு தேவர்களும் நிகராக மாட்டார். சிவசி=க்தி இவர்களின் ஆன்மாவை இடமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் இல்லாத இடமே இல்லை.
1418. தத்துவங்களுக்கு மன்னான ஆன்மா அறுபத்து நானகு தறிகளால் கட்டப்பட்டது. ஆன்மாவான பிரணவம் அறுபத்து நான்கு ஒளிக்கதிர்கலால் ஆனது. ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் இருக்கும். பிரண்வத்தின் விந்து நாதமான சீவனும் சிவனும் உள்ளனர்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.