சக்திபீடம்-2-ஆ/ஆம்
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-2
அட்சரம் ஆ/ஆம்(இரண்டாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் அவிமுக்தம் / ஆனந்தபவன் / மஹாச்மசானம் / வாராணாசி
அட்சரதேவிகள் ஆகர்ஷணீ / அதர்விணீதேவி
அங்கம் ஸ்தனம்
பைரவர்/இறைவன் காலபைரவர்/விஸ்வநாதர்-9/12
அங்கதேவி/இறைவி விசாலாட்சி
பீடங்கள் வாராணஸ்யை நம
51-ல் நம் உடலில் முகவட்டத்தில்
ஊர் வாரணாசி / காசி
அருகில்
மாகாணம்/நாடு உத்தரபிரதேசம்
இது வாரணாசி எனும் மகாசக்தி பீடம். இந்த தலத்தில் வீழ்ந்த ஸ்தனங்களிலிருந்து பால் குபுகுபுவெனப் பொங்கி நீராய் மாறி வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் வருணா நதியாகவும், தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாயும் அஸி நதியாகவும் ஆகி இவ்விரு நதிக்களுக்கு இடையே உள்ள இடமே வாரணாஸி ஆனது.
சக்ர புஷ்கரணி என்பது மணிகர்ணிகா கட்டம் ஆகும். மணிகர்ணகைக்கு ஒர் கோவில் மற்றும் குளம்- இதுவே வாராணாஸியின் மிகப் பெரிய மாயானம்.
விசாலாட்சி அம்மன் கோவிலில் சிவலிங்கம், முருகன், விநாயகர், நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உண்டு.
உபசக்தி பீடங்கள்:
வாராணாஸீ-க்கு தெற்கிலுள்ள அஸி நதிக்கரையில் தக்ஷிண ஸாரநாத் வடக்கில் உள்ள வருணா நதிக்கரையில் உத்ர ஸாரநாத் –இங்கு சாக்தர்கள் அப்பியாஸிக்கும் தக்ஷிண, உத்ர மார்க்கங்கள் ஸித்தியை அளிக்கும் திறன் உடையவை.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பச்சைநிற மேனி-தூய வெண்ணிற ஆடை- வலதுமேல் கரத்தில் கத்தி, கீழ்கரத்தில் வரமுத்திரை-இடதுமேல் கரத்தில் கேடயம், கீழ்கரத்தில் அபய முத்திரை உடன் காட்சி.
தியானஸ்லோகம்:
ஆகாராக்யா தர்விணீ து ச்யாம சுக்லாம்பரா சுகரீ
த்தே கட்கம் ச கேடம் ச க்ரமேணைவ வராபயௌ:
#####