சக்திபீடம்-9-லு/லும்
ஓம்நமசிவய!
தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.
#*#*#*#*#
எண் சக்திபீடம்-9
அட்சரம் லு/லும்(ஒன்பதாவது சமஸ்கிருத உயிர்எழுத்து)
தோன்றிய இடம் ஆம்ராத கேசவரம்
அட்சரதேவிகள் லூகாரதேவி/ லுதும்பராதேவி
அங்கம் வலதுகன்னம்
பைரவர்/இறைவன் சக்ரபாணி
அங்கதேவி/இறைவி கண்டகீஸ்வரி
பீடங்கள் ஆம்ராத கேசவராய நம
51-ல் நம் உடலில் வலது கன்னம்
ஊர் தாமோதர்குண்ட்
அருகில் மஸ்டாங் மாவட்டம்
மாகாணம்/நாடு நேபாளம்
இது ஆம்ராத கேசவரம் எனும் மகாசக்தி பீடம். இங்கு தனாதிகர்களாக யஷ, யஷிகள் இருந்து வழிபடுவோருக்கு செல்வத்தை வழங்குவர். இங்கு செய்யும் ஜபங்கள் சித்தி அடையும். கன்னம் விழுந்தபோது ஏற்பட்ட பள்ளங்கள் பனிக்காலத்தில் மலை உருகி நீர் பெருக்கெடுத்து இவைகள் நிறைந்து ஏரிகளானது- தாமோதர்குண்ட் எனப்பட்டது. தேவிக்கு கண்டகி சண்டி, காளி கண்டகி, நாராயணி, கண்டகீஸ்வரி எனப் பலப் பெயர்கள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பச்சை நிறமேனி- எட்டு கரங்கள். புலி வாகனம்- மஞ்சள் வண்ண ஆடை. வலப்புற கரங்களில் திரிசூலம், பாசக்கயிறு, உடுக்கை, வரமுத்திரை, இடப்புற கரங்களில்- கத்தி, கபாலம், குறுந்தடி, அபயமுத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
லுதம்பரா லுகாராக்யா ஷ்யாமா வ்யாக்ர வரஸ்திதா
சதுர் முகாஷ்டா ஹஸ்தேயம் தத்தேஸ்த்ராணி கரை பரை
த்ரிசூலம் பாச டமரு வராந் வாம கரை ஸ்ததா
கட்கம் கபால முஸலா பயாந் பீதாம்பரா சூபா:
#####