சக்திபீடம்-17-க1/கம்
ஓம்நமசிவய!
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-17
அட்சரம் க1/கம்(முதலாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் பங்களாதேஷ்- சில்லாட்நகர் அருகில் பாஹிக்
அட்சரதேவிகள் காளராத்ரிதேவி/ புதவின்யாஸினிதேவி
அங்கம் உச்சந்தலை
பைரவர்/இறைவன் சிவபாரி
அங்கதேவி/இறைவி மகாலட்சுமி
பீடங்கள் ஸ்ரீபுராயை நம
51-ல் நம் உடலில் வலது தோள்
ஊர் சில்லாட்
அருகில் அஸ்ஸாம்-ஸில்சார்/மேகாலய-ஷில்லாங் நெடுஞ்சாலையில் பங்களாதேஷ்-டாக்கா விலிருந்து ரயில் பயணம்.
மாகாணம்/நாடு பங்களாதேஷ்
இது ஸ்ரீபுரா பீடம் எனும் மகாசக்தி பீடம். பாவிகள் இப்பீடத்தை அனுகுவது துர்பலம். இரவில் எல்லா சக்திகளும் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கும்.
உபபீடங்கள்-
இந்திர திசையில்-கர்ணாபரணம்-பீடசக்தி-ப்ராம்மீ
தென்கிழக்கு- அக்னிமூலை- அடுத்த கர்ணாபரணம்-பீடசக்தி-மாகேஸ்வரீ
தெற்கு யமன் திசையில்-பத்ரவல்லி (ஸ்திரிகளின் மார்பில்கஸ்தூரியால் எழுதப்பட்ட சித்திரம்)-பீடசக்தி-கௌமாரீ
தென்மேற்கு நிருதி மூலை-கண்டாபரணம்-அட்டிகை-பீடசக்தி வைஷ்ணவி
மேற்கு வருண திசையில்-நாஸாபரணமான புல்லாக்கு-பீடசக்தி-வராஹி
வடமேற்கு வாயுதிசை-தலைவகிடின் சுட்டிஆபரணம்-பீடசக்தி-சாமுண்டாதேவி
வடகிழக்கு ஈசான்ய மூலை-ஜடைபில்லை-பீடசக்தி-மகாலட்சுமி. சில்லாட் நகரை அடுத்துள்ள ஒரு தோட்டப் பகுதியில்-பாஹிக்–ல் ஸ்ரீபீடம் உள்ளது.
சிரம் வீழ்ந்ததாகக் கருதப்படும் சக்திபீடத்தை-ஸ்ரீபீடம் என்பர். இப்பீடமே மேற்சொன்ன ஏழு உபபீடங்களைக் கொண்டது. ஸ்ரீமகாலட்சுமி பீடம் என்பர்
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்ணிற மேனி- நான்கு கரங்கள்- வலதுகரங்களில் திரிசூலம், வரமுத்திரை, இடது கரங்களில்- அங்குசம், அபய முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
பூத விந்யாஸி நீ சுப்ரா கஜா ரூடா சதுர்புஜா
த்ரிசூலம் ச வரம் தக்ஷே வாமேங்குச மதா பயம்:
#####
சக்திபீடம்-17அ-க1
எண் சக்திபீடம்-17அ
அட்சரம் க1
அட்சரதேவிகள் காளராத்ரிதேவி
அங்கம் உச்சந்தலை
பைரவர்/இறைவன் பீமலோசனர்
அங்கதேவி/இறைவி கோட்டரீ
பீடங்கள்
51-ல் நம் உடலில்
ஊர் ஹிங்லாஜ், ஹிங்குலா
அருகில் ஹிங்கோஸ்நதிக்கரை
மாகாணம்/நாடு பலூசிஸ்தான்
ஹிங்கேஜ் குகை, ஹிங்கோஸ் நதி, ஹிங்லாஜ் பீடம். இந்துக்களின் அழகிய புண்ணியத் தலம். ஹிங்குலி- முன்வகிட்டு குங்குமப் பொட்டு / செந்தூரம் என சிந்தி மொழியில் பொருள்.- எனவே புனித இடம் ஹிங்லாஜ் எனப்பட்டது. கராச்சியிலிருந்து 140 கி.மீ. மலைக் குகையில் உயரம் குறைவான குகை வாயில் மூலம் ஊர்ந்து செல்ல வேண்டும். அங்கு வருட முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜூவாலையில் அன்னையின் திருவுருவத்தை பாக்யசாலிகளே பார்க்க முடியும்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
#####