சக்திபீடம்-19-க3/கம்
ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-19
அட்சரம் க3/கம்(மூன்றாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் ஜார்கண்ட் மாநிலம் -தேவ்கர் மாவட்டம் தேவ்ஹர்ஹ்
அட்சரதேவிகள் காயத்ரிதேவி/ தூம்ராதேவி
அங்கம் மார்பு
பைரவர்/இறைவன் வைத்யநாதர்
அங்கதேவி/இறைவி ஜெயதுர்க்கா
பீடங்கள் ஜாலந்தராயை நம
51-ல் நம் உடலில் வலது மணிக்கட்டு
ஊர் தேவ்ஹர்ஹ்/ராவணன்கண்ட்/வன்கண்ட்/ராம்மேஷ்வர்/கானன்/ வில்வகண்/ஹர்தபீட்/சிதாபூமி/வைத்யநாத் தேவ்கர்
அருகில் ஜஸீடீஹ் ர. நிலையத்திலிருந்து 6 கி.மீ.
மாகாணம்/நாடு ஜார்கண்ட்
இது கேதாரபீடம் அல்லது சட்டல பீடம் எனும் மகாசக்தி பீடம். தேவியை தரிசிப்பதால் எல்ல ஸித்திகளையும் அடையலாம். அக்னி பகவான் ஜூவாலையுடன் தவமிருந்து தேவமுகன் என்ற பெயரைப் பெற்றான். ஹர்த பீடம் என்றிருந்து பின்பு வைத்தியநாத் க்ஷேத்திரமானது. சிவன் அன்னையின் சிதைந்த உடலுக்கு திருமால் உதவியுடன் சிதை அடுக்கி தகனம் செய்த இடம் ஹர்த பீடம். கோவிலின் பிரஹாரத்தில் உள்ளது. இதை வைத்தியநாதம் சிதாபூரமௌ என சிவபுராணம் சொல்லும். அம்மன் சன்னதி சிவன் கோவிலுக்கு நேர் கிழக்கில் உள்ளது.
உபபீடம்:
அருகில் இருக்கும் பீடசக்தியை ஜூவாலமுகி என்பர். சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி திரவியங்கள் கொண்டு புரசரண ஹோமம் செய்தால் யாராகினும் மந்திர ஸித்தி அடைவர். கோரக்ஷகர் என்ற சித்தர் எட்டு சித்திகளை அடைந்த இடம்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
தாமிர நிறமேனி -நான்கு முகங்கள்-- எட்டு கரங்கள்- வலக்கரங்களில்- சூலம், அக்ஷமாலை, சூகம், வரமுத்திரை, இடது கரங்களில்- புஸ்தகம், கிண்டி, கபாலம், அபய முத்திரையுடன் காட்சி.
தியானஸ்லோகம்:
காக் யா தூம் ரா சதுர் வக் த்ரா ஸிம் ஹஸ் தாஷ்ட புஜா மதா
தூம் ராபா தக்ஷிணே தத்தே சூலம் பாசம் சுகம் வரம்
வாமே து புஸ்தகம் குண்டீம் கபாலம் பயம் க்ர மாத்:
#####