சக்திபீடம்-26-ஞ/ஞம்
ஓம்நமசிவய!
அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-26
அட்சரம் ஞ/ஞம்(பத்தாவது சமஸ்கிருத மெய் எழுத்து)
தோன்றிய இடம் உத்கல்/ கலிங்க தேசத்தின்-பூரி
அட்சரதேவிகள் ஞாமரூபாதேவி/ ப்ரபோதினிதேவி
அங்கம் வயிறு,3வதுமடிப்பு
பைரவர்/இறைவன் ஜகன்நாதர்
அங்கதேவி/ இறைவி பைரவி/ விமலாதேவி
பீடங்கள் விரஜாயை நம
51-ல் நம் உடலில் இடது கைவிரல் நுனியில்
ஊர் பூரி
அருகில் குர்தாரோடு ர.நி.-56 கி.மீ
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா
இது விராஜா பீடம் எனப்படும் மகாசக்திபீடம். விஷ்ணு மந்திரங்கள் சித்தி அளிக்கும் தலம்,, அம்பிகையின் திருநாமம் பகவதிவிமலா. பூரி ஜகநாதர் ஆலயத்தின் இரண்டாவது பிரஹாரத்தில் கருவறைக்கு மேலே தனி சன்னதி. பத்மாஸனத்தில் சதுர் புஜங்களுடன் பத்மம், சாமரம், அபயம், வர முத்திரைகளுடன் சந்த ரூபினியாக காட்சி.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்ணிற மேனி- சதுர் புஜங்களில் திரிசூலம், அம்புஜம், சின் முத்திரை, அபய முத்திரையுடன் சிம்ம வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ஞாக்யா ப்ரபோதிநீ சுப்ரா ஸிம் ஹஸ்த சித் ஸ்வரூபிணீ
த்ரி சூலாம் புஜ சிந் முத்ரா பயாந் வித கரா சுபா:
#####