சக்திபீடம்-29-ட3/டம்
ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-29
அட்சரம் ட3/டம்(பதின்மூன்றாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் பிரம்மகிரி அடிவாரம்-கோலகிரி
அட்சரதேவிகள் டாமரிதேவி/ டஹாரிணி
அங்கம் ஜகனம்-இடுப்பு
பைரவர்/இறைவன் திரியம்பகேஸ்வர்
அங்கதேவி/ இறைவி கௌலாம்பிகை/ திரியம்பகாதேவி/ கோல்ஹாம்பிகை
பீடங்கள் கோலாபுராயை நம
51-ல் நம் உடலில் வலது கணுக்கால்
ஊர் திரியம்பகம்
அருகில் நாஸிக் அருகில்
மாகாணம்/நாடு மகாராஷ்டிரா
இது கோலகிரி பீடம் என்ற மகாசக்தி பீடம்.. இங்கு எல்லா வனதேவதைகளும் ஸித்தி பெற்று விளங்குகின்றன.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்ணிற மேனி- ஐந்து முகங்கள்- நான்கு கரங்களில் டங்கா, கதை, வர, அபய முத்திரைகளுடன் சேவல் வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
டகாரிணீ பஞ்ச வக்த்ரா ஸிதா டங்க கதா தாரா
சதுர் பாஹூ குக் குடஸ்தா வராபய காரா ச ஸா:
#####