சக்திபீடம்-35-த4/தம்
ஓம்நமசிவய!
ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-35
அட்சரம் த4/தம்(பத்தொன்பாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மேகாலயா- க்ஷீரிதா/க்ஷீரகம்
அட்சரதேவிகள் தத்யாதேவி/ அமலாதேவி
அங்கம் இடதுகணுக் கால்பாகம்
பைரவர்/இறைவன் க்ரம்தீஸ்வரர்
அங்கதேவி/ இறைவி ஜெயந்தேஸ்வரி
பீடங்கள் க்ஷீரிகாயை நம
51-ல் நம் உடலில் இடது கால் விரலடியில்
ஊர் நார்டியாங்
அருகில் ஷில்லாங்-63 கி.மீ.ஜோவாய்-24 கி.மீ.
மாகாணம்/நாடு மேகாலயா
இது க்ஷீரிதா அல்லது க்ஷீரகம் என்று அழைக்கப்படும் மாகசக்தி பீடம். இங்கு வைதாலிக, சாபர மந்திரங்கள் ஸித்தியாகும். இதை ஜெயந்தி பீடம் என்றும் கூறுவர். ஜெயந்தேஸ்வரி வனதுர்க்கை ரூபத்தில் அண்டியவர்க்கு அருள் புரிபவள்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
பச்சை நிறமேனி- நான்கு கரங்கள். வலது கரத்தில்- கமல மலர், அபய முத்திரை, இடது கரத்தில் சாரிகா, வரத முத்திரையுடன் இடப வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
சியாமாலா சாமலா தாக்யா ஹயே கவக்த்ரா சதுர் புஜா
வ்ருஷ ஸ்தா சாரி காம ப்ஜம் கரைர் தத்தே வராபயௌ:
#####