சக்திபீடம்-41-ம/மம்
ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே நரிச்செயலார் பால்
நண்ணாய் செந்தாமரைத்தாள் தேவா நந்தா
மணியே நாயக இருள்சேர் இருவினை எறிவாய்
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி! போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-41
அட்சரம் ம/மம்(இருபத்தைந்தாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் மலயகிரி
அட்சரதேவிகள் மகாமாயாதேவி/ வித்யாஷ்யாமளாதேவி
அங்கம் குருதி
பைரவர்/இறைவன் பத்ராஸேனர்
அங்கதேவி/ இறைவி ஸோனாக்க்ஷி,சண்டிகா
பீடங்கள் ஜலேசாயை நம
51-ல் நம் உடலில் வயிறு
ஊர் அமர்கண்டக்
அருகில் சோன்பத்ராநதிக்கரை
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்
இது ஜலோசா பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு ஏலக்தாம்ரம் போன்ற பௌத்த மந்திரங்கள் சித்திக்கும்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
வெண்ணிறமேனி- குதிரைமுகம்- இரு கரங்களும் வர அபய முத்திரையுடன் வீணையுடன் தாமரைப் பீடத்தில் காட்சி
தியானஸ்லோகம்:
மோ வித்யா ஷ்யாமலா தேவீ ஹயாஸ்யா ஸ்படிக பிரபா
வீணா வாதந த்த்வஞா வராபய கரா சுபா:
#####