சக்திபீடம்-45-வ/வம்
ஓம்நமசிவய!
திணைபால் கடந்த தேவே புனையாய் இடர்க்கடல்
போக்குவோய் பேழை வயிற்றுப் பெம்மன்
ஏழைக்கிரங்கும் எம்மிறை அடியவர் உள்ளம்
அமர்ந்தாய் அடிமலர் எம்தலை அணிவாய் போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-45
அட்சரம் வ/வம்(இருபத்தொன்பாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஒரிஸ்ஸாவின் மகேந்திரகிரி
அட்சரதேவிகள் வரதாதேவி/ நாராயணிதேவி
அங்கம் மூளை
பைரவர்/இறைவன் பைரவர்
அங்கதேவி/ இறைவி கபாலிபுவனேஸ்வரி
பீடங்கள் கிரிவராயை நம
51-ல் நம் உடலில் இடது தோள்பட்டை
ஊர் மகேந்திரகிரி
அருகில் மந்தஸா ரயில் நிலையமருகில்
மாகாணம்/நாடு ஒரிஸ்ஸா
இது கிரிவர அல்லது மகேந்திர பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்கு சக்தி மந்திரங்கள் ஸித்தி அடையும். இங்குள்ள பழங்குடி மக்கள் அன்னையை ஸ்தம்பேஸ்வரி, கம்பேஸ்வரி என வழிபட்டுள்ளனர்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
செந்நிற ஆடை—நான்கு கரங்களில் இரண்டில் தாமரை மலரும், மற்றவற்றில் வர- அபய முத்திரைகளுடன் பதமாசனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்-1:
வாக்யா நாராயணீ தேவீ ஸ்படிகாபாருணாம் சுகா
ஸ்புட பத்மா ஸநா த்த்தே பத் மத் வய வராபயாந்:
தியானஸ்லோகம்- 2:
உத்ய தினத் யுதி மிந்து கிரீடாம் துங்க குசாம் நயன த்ரய யுக்தாம்
ஸ்மேர முகீம் வரதாங்குச பாசா பீதி கராம் ப்ரபஜே புவனே சீம்:
#####