சக்திபீடம்-46-ச/ஷம்
ஓம்நமசிவய!
பாரதம் எழுதிய பரூஉக்கர மாரதம் அச்சொடி
மதவலி மாங்கனி அரன்பால் வாங்கினோய்
ஈங்கினி எம்பால் எழுந்தருள் கரும்பாயிரங்கொள்
கள்வா அரும்பொருளே எம் ஐயா போற்றி!
#*#*#*#*#
எண் சக்திபீடம்-46
அட்சரம் ச/ஷம்(முப்பதாவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் ஷிப்ரா நதிக் கரையில்- வாமனகிரி
அட்சரதேவிகள் ஸ்ரீதேவி/ மங்களகௌரிதேவி
அங்கம் மேலுதடு
பைரவர்/இறைவன் லம்பகர்ணர்/மகாகாளேஸ்வர்-4/12
அங்கதேவி/ இறைவி அவந்திதேவி/ சங்கரி
பீடங்கள் மகேந்தராயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் வலது கை நுனிவிரல்வரை
ஊர் மகாகாளம், உஜ்ஜயினி
அருகில் அவந்திகா/உஜ்ஜெயினி
மாகாணம்/நாடு மத்யபிரதேசம்
இது வாமனகிரி/ பைரவகிரி பீடம் எனும் மகாசக்தி பீடம். ஷிப்ரா நதிக் கரையில் உள்ள சிறிய குன்று. இங்கு செய்யப்படும் ஜபங்கள் பூர்ண சித்தி பெறும்.
அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.
ஒளிரும் பொன் நிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருகரங்களில் தாமரை மலர்கள், மற்ற இரு கைகளில் வர- அபய முத்திரையுடன் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் அமர்ந்து காட்சி.
தியானஸ்லோகம்:
சாக்யா மங்கள கௌரீ து தப் தஜாம் பூநத ப்ரபா
ஸஹஸ்ர பத்ம பீடஸ்தா திவ்யாபரண பூஷிதா
சதுர் புஜா கரைர் தத்தே பத்ம த்வாய வராபயாந்:
#####