Print this page
திங்கட்கிழமை, 18 May 2020 09:28

ஞான வேடம்! சிவவேடம்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

ஞான வேடம்!

1668. உண்மையான சிவஞானம் இல்லாதவர் உண்மையான சிவ ஞானியரைப்போல் கோலம் தாங்கினால் நாதத்தை அடைவர். உண்மையான சிவஞானம் உடையவர் சிவஞானியர்க்குரிய கோலத்தைக் கொள்ளாது இருப்பினும் நல்ல முத்தர் ஆவார். சிவஞானப்பேறு உண்டாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர் சிவபெருமானிடம் என்றும் நீங்காத பேரொளியை உடையவராய் இருப்பர்.

1669. இழிவான ஞானம் உடையவர் கோலத்தை தாங்கியும் அதனால் பயன் ஏதுமிலை. நல்ல ஞானம் உடையவர் இறையருளில் தோய்ந்து கோலம் ஏற்பதில் கருத்தின்றி இருப்பர். திரிபு உனர்வு கொண்டவர் சமய் காழ்ப்பு கொண்டவர் ஆகியோரிடம் பின் அனுபவ ஞானம் உடைய ஜானியர் வாதிட விரும்பமாட்டார்.

1670. ஆராயின் சிவஞானியர்க்கும் சிவயோகியர்க்கும் பயனில்லாத புறச்சாதனைகள் தேவையற்றவை. அவர்க்கு திருநீறு உருத்திராட்சம், சடைமுடி, ஐந்தெழுத்து எனும் நான்கு புறச் சாதனங்களும் வீணே. உவமை கூற இயலாத பொருளை உள்ளே பொருத்தி வாழ்வர்.

1671. செப்பிடு வித்தைக்காரர்கள் கழுமரத்தின் அடியில் இருக்கின்ற நாய்போல் சுற்றித் திரிவார்கள். கழுகு போல் ஏமாளிகளைப் பிடுங்கித் திரிவார்கள் சிவஞானியரோ ஐம்பொறிகளும் உடம்பு அனுபவத்திற்கு ஏற்றவையாக இருந்தும் இன்பங்களை விரும்பாமல் இறந்தவரைப் போல் திரிவர்.

1672. திருவருளால் முனைப்பின்றி அதன்வழி இயங்கும் சிவமெய்யுணர்வு உடையவர் உண்மை அடியார். அத்தகுதி அற்றவர் அடியவர் ஆகார். அவர் அடைந்த சிவக்கோலமும் சிறந்த சிவக்கோலம் ஆகாது. திருவடி ஞானம் பெற்றோரே உண்மை அடியார். அடியார் தன்மையில்லாதவர் ஒருபோதும் மெய்யடியார் ஆகார்.

1673. சிவ ஞானியர்க்கு அழகிய கோலமும் நல்லனவையாகும். தான் கொண்ட கோலத்தின் உட்கருத்தை உணர்ந்து அதன்படி இருந்தால் அதுவே சிவயோகம். அவ்வேடம் ஞானத்தை அளிக்கும் சாதனம் ஆகும். ஞான சாதனம் என்று உணராதவனுக்கு கோலம் மட்டும் பொருந்தும்.

1674. திருவடி உணர்வால் ஞான உ/ணர்வால் சிவன் நிலை அடைபவன் சிவஞானியாவான். நடமாடும் கோயிலினுள் ஒப்ப்பற்ற கோவில் ஆவான். வீணாய் உரையாடாது மோனம் உடையவன். வீடுபெற்ற முத்தன் ஆவான். திருவடிப்பேறு அடைந்த சித்தனும் ஆவான். உண்மைக்கோலம் அற்ற மற்ற தவத்தவர் இவனைப் பேசிட தகுதியற்றவர் ஆவர்.

1675. தன் அறிவு அற்ற தன்மையும் தான் சிவமே ஆகி விளங்குதலும் உலகில் உள எப்பொருளுக்கும் உரிய முக்காலத்தையும் அறிகின்றா ஆற்றலும் பக்குவம் வாய்ந்தவர்க்கு பார்வையினாலே அல்லது பரிசத்தினாலே ஞானத்தை வழங்குதலும் பிரண்வ சித்தியும் சிவபதவி அடைந்தவர்க்கு உரியவை ஆகும்.

#####

சிவவேடம்!

1676. சிவனது திருவருளால் அவனுக்கு அடிமையாகிய பொருளான தனது உடலுக்கு மேல் விளங்கும் பொன்ஒளி மயமான அண்ட கோசத்தை உணர்ந்து இருள் நீங்கித் தம்செயல் அற்றவரே தெளிவான அடிமைபூண்ட சிவவேடத்தார் ஆவர்.

1677. உடலில் கொண்ட புறக்கோலங்கள் ஒளிமயமான உயிருக்குப் பயன்படாது. உடலை விட்டு உயிர் பிரிந்தபோது உடலைச் சார்ந்த அறிவற்ற சாதனங்களும் பிரிந்து நீங்கி விடும். உடல் அசத்துப் பொருள். உயிர் சத்துப் பொருள் என அறியாதவர் கடலில் சிக்கிய மரக்கட்டையைபோல் துன்புறுவர்.

1678. ஆணவ மலத்தின் காரியமாவது மயக்கம். அதைவிட்டு அதன் விளைவான இருளையும் அகற்றி உண்மையுள்ள மனம் எண்ணுவதை விட்டு கயல் மீன்போன்ற கண்ணையுடைய பெண்டிரின் கையால் தழுவப் பெறுதலையும் நீக்கி மயக்கம் இல்லாதவருடன் இணங்கித் தமக்கு எனச்செயல் அற்று இருப்பவர் சிவவேடத்தவர் ஆவார்.

1679. மானிடரே பிராண வடிவமாய் உங்களிடம் ஓடுக்கொண்டிருக்கும் குதிரையை கடிவாளம் கைபிடித்து நிறுத்துங்கள்.. கோலம் மட்டும் கொண்டு என செய்வீர். வீண் கோலத்தை கைவிட்டு தலைவனான நந்தி தங்கியுள்ள குருமண்டலத்தில் மனத்தை வையுங்கள். நீங்கள் தேடும் இன்பப் பொருளான சிவத்தை அடையலாம்.

#####

Read 1702 times Last modified on திங்கட்கிழமை, 18 May 2020 09:59
Login to post comments