gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
திங்கட்கிழமை, 18 May 2020 09:36

பக்குவன்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

பக்குவன்!

1690. வழிபாடு செய்யும் இயல்புடைய மாணவர் வேத ஆகமமுறையை உணர்ந்து குற்றம் இல்லாத மேலான குருவை நாடி அறிவர். இத்தகையவர் முத்தியை விரும்பும் அறிவுடையவர். முத்தியை விரும்பாத உலக நிலையில் உள்ளவர் அழியும் வழியைத்தான் அறிவர்.

1691. இறைவா உன்னை விரும்பி என் பரபரப்பைக் கைவிட்டேன். உலக வாழ்வில் அலுத்துப் போனேன். இனி நான் எவருடனும் சேரமாட்டேன். எளியோனின் வினையைக் கெடுத்து என் கவலை நீங்கும்படி மாற்றி என்னை உடையாய் மகிழ்வுடன் என்னை ஆட்கொள்வாயாக.

1692. மாண்வன் பரபரப்புடன் இருக்கின்றபோதே மேலான ஞானத்தை அளிக்கின்ற ஒளியை ஆசாரியன் சகசிரதளத்தில் பொருந்தித் தியானைத்துச் சிதறும் மாணவனின் சிந்தையை நிலை பொறுத்தி தன்னுடன் பொருந்தும் மாணவனுக்கு உபதேசத்தை அளிக்கலாம்.

1693. நீ அடைந்தால் நல்ல குருவை அடைக. அவரிடம் உன் உடைமையாய் உள்ள பொருளையும் உடன் உடலையும் உயிரையும் காணிக்கையாகத் தருக. எவ்வளவு காலமும் இடையீடு இல்லாது அவர் காட்டிய வழியில் நின்று தெளிந்து உணரச் சிவபதம் தானே உண்டாகும்.

1694. சுவாதி நட்சத்திரம் விசாக நட்சத்திரம் ஆகிய இரண்டும் விருச்சிக கடகமும் ஆகிய இரு ஓசைகளும் உபதேசத்திற்குரியதாக்ச் சொல்லப்பட்ட நாட்கள் அக்காலத்தில் குருமுகமாய் உபதேசத்திற்குரியவனை என்ற முறைமையை உணர்வதன்றி இதற்குரிய காரணமும் முதலும் அறிய இயலாது.

1695. நல்ல குருவினது உபதேசத்தைப் பெற்ற பெரிய மணியை போன்ர தூய சிந்தனையில் ஒளியுடைய இறைவன் எழுந்தருளிய போதே விருப்பம் உடையவரின் வலிமை மிக்க வினையானது நீங்க இறைவனின் திருவடி எனும் நாத உணர்வு அருளைப் பெறலாம்.

1696. சத்துவ குணம் உடையவனாய்ச் சிவத்தை தியானித்து ஆத்திகர்களால் ஏற்கப்பட்ட ஏதேனும் ஒரு துவைத நெறியைப் பின்பற்றியவனாய் வினையால் தொடரப்பட்ட பிறவிக்கு அஞ்சி மேன்மையுடைய அறநெறியை ஏற்பவன் நல்ல பக்குவம் வாய்ந்த மாணவன்.

1697. உலகில் நிலை பெற்றவனாய் அழியாத பொருள் எவை நிலையற்றதாய் உள்ளது எது என சிந்தித்து உணர்ந்து சிவத்தையே சிந்தித்து சிவத்தின் சத்தி பதியப் பெற்று சிவத்தை உணர்ந்த நிலையான பொருளான சிவத்திடம் சிவஞானத்தைப் பெற்றுப் பணிந்து ஆனந்த வடிவமான சிவசத்தியினது விருப்பத்துக்கு ஏற்றபடி தன்னை பக்குவப்படுத்திக் கொள்பவனே நல்ல மாணவன்.

1698. குருநாதன் சிவபெருமான் இன்று அருள்வான் என குருவின் வடிவைத் சிரசின்மீது தியானிக்க வஞ்சமுடைய பிறவியைக் சினக்கும் அருட்சத்தியால் அருளை அடைந்த ஞானம் உடையவனே குற்றம் இல்லாத மாணவன் ஆவான்.

1699. மாணவன் சிறப்புடைய அனுபவ ஞானத்தில் விருப்பம் கொண்டு இதுவரை உணர்ந்து அறியாத காதல் குருபரனான சிவனிடம் ஏற்பட இதுவரை அமையப்பெறாத ஒழுக்கம் நோன்பு செறிவு அறிவு ஆகிய நான்கும் தன்னிடம் அமையப் பெற்றவன் திருவடி தீட்சைக்குப்பின் ஞானத்தின் அனுபவத்தை ஆராய்பவன் ஆவான்.

1700. மாணவனுக்கு உணர்த்துவது சத்தி நிபாதம் உடைய வாக்கே ஆகும். பசுக்களுக்கு உதவும் பராசத்தியை நினைத்து ஒன்றோடும் பற்றில்லாத பராபரமான சிவத்தின் எல்லைக்கு மாணவனைக் கொண்டு போய் கிழக்கு தெ’ற்கு வடக்கு மேற்கு என்ற இடங்களில் உள்ள ஐந்து முகங்களை விழிப்படையச் செய்யுங்கள்.

1701. குருவின் திருவடிகளை வணங்கி ஐந்து வகையான வணக்கங்களைச் செய்து ஆன்மாவின் குறையைச் சொல்லி அழியாத குணத்தை அளித்திடும்படி வேண்ட சிறைப்பட்ட உடலையே உண்மை என்று நம்பியிருக்கின்றவன் அகண்ட சிவம் ஆவான். என்பதை உணர்ந்து சில அறிவுடன் ஆன்ம அறிவும் ஒன்றாக்கும் வழியை அறிவிப்பவர்களே சன்மார்க்க உபதேச குரு ஆவார்.

1702. ஆசையை விடும் நெறியே வேதாந்த நெறி ஆதலால் உ;லக வாழ்க்கைக்கு ஏற்றபடி புலன் வழிச் செல்லும் பொறிகளை மாற்றி சித்தாந்த நெறியிலேபோய் விருப்பத்தை விடும் சிறந்த வேதாந்தியான குருவின் திருவடிகளில் வணங்கும் தலையை உடையவனே நன்கு பக்குவம் பெற்ற மாணவன்.

1703. சத்துவ குணம் உண்மை அருள் ஆராய்ச்சி அறிவு தாழ்வு குருவின் திருவடியை நீங்காமை உண்மையான் பரஞானத்தை சிந்தித்து தெளிந்து அறிதல் அற்புதம் உண்டாதல் ஆகிய தகுதியுடைவனே பக்குவம் உடையவன்.

####

Read 1969 times
More in this category: « அபக்குவன்!
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26880673
All
26880673
Your IP: 54.226.25.246
2024-03-19 15:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg