Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:10

ஞானலிங்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

ஞானலிங்கம்!

1763. சிவன் உருவம் அருவம் அருவுருவம் என மூன்று வகையான திருமேனியைக் கொண்டவன். நிலைபெற்ற பல உயிர்க்குக் குருவாகும் தன்மையுடையவன். அவனே சதாசிவமாய்க் கற்பக மரம் போல் வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அளிப்பவன் ஆவான்.

1764 சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நானமுகன், திருமல், உருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். மெலே உள்ள நாதம் விந்து சத்தி சிவம் ஆகிய நால்வரும் அருவம் உடையவர்கள். நான்கில் நடுவே உள்ள சதாசிவம் அருவுருவமாய் உள்ளதால் இவ்வொன்பது வகையும் பரமசிவமே ஆகும்..

1765. தேவர் எல்லோர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடையவனும் உருவ மூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும் உருவுக்கும் அருவத்துக்கும் இடையே உள்ள அருவுருவமான சதாசிவத்தை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அங்குப் பிரளயமாகிய சதாசிவம் தோன்றுவார். அப்படி அவரது திருவடியை அடையவும் கூடும்.

1766. ஆண்டு, திங்கள், நாள் என்ப்னவற்றைச் செய்கின்ற சிவக்கதிரவனான சதாசிவத்துடன் சத்தியை வழிபடினும், இருவரையும் வெவ்வேறாக எண்ணிடாது ஒருவராய் எண்ணித் தியானித்தாலும் பயன் ஒன்றேதான். ஆதலால் வினை நீங்க இவ்வாறு வணங்கினேன்.

1767. ஆதி பரம் பொருளான சதாசிவமே அவரவர் மண்டலத்தில் விளங்குவர்.. அவர் சோதியாக அடியவர் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்டா காயத்தில் நீதி வடிவாய் விளங்கும் பெருமை கொண்ட இறைவனாகும். அவர் எவரது உடலை இடமாகக் கொள்ளினும் மலம் அற்றவர் இத்தகைய என் இறையின் ஒரு பாதியில் பராசத்தி திகழ்கிறாள்.

1768. சத்திக்கு மேலே விளங்கும் பராசத்தி அண்ட கோச வெளியில் விளங்கும் வகையில் தூய்மையான சிவபதம் இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி விளங்கும் வெளி உள்ளது அத்தன்மையுடையதாய் இறைவன் திருவடி விளங்கும். இவ்வெளிக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.

1769. ஞானலிங்கம் என்ற ஒளி மயமான சதாசிவனை அறிந்தால் உலகம் எல்லாம் அங்கு நுண்மையாய் விளா\ங்குவது தெரியும். வல்லமை இருக்குமாயின் அழியாமல் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாய் பற்றின் சத்தி வடிவில் அமைந்த சிவம் சிந்தையிலே விளங்கும்.

1770. எம் தந்தையான சதாசிவத்தையும் என் அம்மையாகிய பிரணவ சத்திகளின் கூட்டத்தையும் முதன்மையாய்க் கருதி முறையாய் உணர்தலே ஞானமாகும். அவை பொருந்தியிருந்த புருவ நடுவில் விளங்குகின்ற விசாலாட்சியை இறைவன் உயர்ந்த இடத்தில் வைத்து விருப்புடன் விளங்கினன்.

1771. சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கு ஏற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்பச் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் கூட்டத்தில் சேர்ந்து உயிர் பக்குவம் ஆனபோது சுத்த மாயையில் விளங்கும் ஒளி மண்டலத்தை உணர்த்தி அதைக் கடக்கும்படி செய்து சீவனின் சித்தத்திலே சிவம் தங்கிச் சீவனை சிவம் உறையும் கோயிலாக ஆக்கும்.

1772. இவ்வுலகம் சிவசத்தியின் விளையாட்டாகும். வடிவம் உடைய அறிவான சிவமாகும். அறிவான சிவன் வடிவான சத்தியும் ஆகும். சத்தி சிவம் இல்லாமல் உடலுடைய உயிர்கள் ஒன்றும் நிலையில்லை. சத்தியே தேவைபட்டபோது சமைத்து எக்காலத்தும் வடிவம் பெறும்.

#####

Read 1491 times
Login to post comments