Print this page
சனிக்கிழமை, 20 June 2020 12:19

மகேசுவர பூசை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பா

#####

மகேசுவர பூசை!

1857. ஓவியம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோவில்களில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் படையல் செய்தால் நடமாடும் மாடக் கோயிலாக விளங்கும். சிவன் அடியவர்க்கு வந்து சேரா. ஆனால் நடமாடும் கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு யாதேனும் ஒன்றைத் தந்தால் அது மாடக் கோவிலில் உள்ள இறைவனுக்கு மன நிறைவை அளிக்கும்.

1858. தீமையில்லாத சிந்தைபொருந்திய தவத்தையுடைய செல்வர்கள் தாம் மகிழ்வுடன் உண்டது மூன்று உலகங்களும் உண்டதாகும் அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று உலகங்களும் ஏற்றுக் கொண்டதாம். இவ்வாறு எட்டுத் திக்குகளுக்கும் தலைவனான நந்தி எடுத்துரைத்தான்.

1859. ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறையும் யோகிக்குத் தந்த அரிய பொருள் மூன்று மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினருக்கும் அர்ப்பணித்ததாகும் அதைத் தெளிவீராக.

1860. ஆயிரம் நகரம் அந்தணர்க்கு தந்தால் உண்டாகும் பயன் யாது! ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் யாது பயன்! சொல்லப்பெறும் ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் உண்டாகும் பயனுக்கு நிகராகாது என்பது உண்மை.

1861. ஆற்றுப் படுத்தும் வேள்வியைச் செய்யும் அரிய நூல் வல்லவர் எனக் கூறப்படும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றைப் பூசும் தொண்டர் ஒருவர்க்கு உணவு அளிக்க வேண்டும் என எண்ணுவதில் உள்ள பயன் இல்லை. அங்ஙனம் பார்ப்பனர்க்கு அளிப்பது பேறு என்றால் அஃது ஒரு சிறிய அளவு பேறாகும்.

1862. வெண்நிற ஒளியில் விளங்குபவனே இறைவனே எம்பிரானே என்று திருநீற்றை அணிபவர்களாகிய அடியவர் இவ்வுலகில் தேவர் ஆவர். கங்கை ஆற்றைக் கொண்ட சிவந்த சடையையுடைய சிவம் இவரே என்று எண்ணி வழிபடுவர்க்கு வினை இல்லை.

1863. சிற்ந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப்படும் ஒளீக்கதிர்கள் விளங்கும் சடையை=யுடையவனை நான் மிகவும் நெகிழ்ந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியான சிவனது திருப்பெயரைத் திரும்பத் திருமப எண்ணிக் கொண்டிருப்பேன்.

1864. அழியும் தன்மை அற்ற சிவனின் அடியவர்க்கு அறியாமையான இருள் நீங்கும். அந்நிலை கெடாதபடி அறியாமை நீங்கிய பண்பு கொண்ட சிவத்தை நாடி வணங்கி மேல் ஏழ் உலகத்தில் துன்பம் நீங்கியதுடன் இனபமும் ஏற்படும்.

1865. இறைவனை அறிவதற்குரிய பண்பு சிறிதும் இல்லாதவர் ஆனாலும் உள்ளே மகிழ்வு உடையவராய் நின்று வழிபடும் உபசாரங்களுடன் பலகாலம் பொருந்தி நிற்பின் உள்ளத்தில் களிப்புடையவராய் நிலை பெற்று நின்று ஆராய்ந்து தெளிந்து பாசம் நீக்குவர் ஆவர்.

1866. திருத்தமான கோலத்தை உடைய மகேசுவரர் உண்ட உணவு உருத்திரன் திருமால் நான்முகன் என்னும் மூவரும் உண்ட பெருமை உடையதாகும். சித்தம் தெளிவு கொண்டவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம் மூலன் உரைத்த மொழி உண்மையாகும்.

1867. மகேசுவரர் தம் முயற்சியில் குன்றாமல் அருந்தவத்தைச் செய்து கொண்டே இருப்பர். உம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிராரத்துவ வினை நீங்க அவருக்கே அறத்தைச் செய்யுங்கள். அங்ஙனம் செய்தால் அது பிராரத்துவ வினையை நீக்கி மேல் ஏறும் ஆகாமிய வினையுடன் மிஞ்சி நிற்கும். சஞ்சித வினையையும் ஒருசேர அழித்து விடும். பின்பு ஞான மண்டலம் விளங்கும்.

#####

Read 1746 times
Login to post comments