gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:46

கூடாஒழுக்கம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

கூடாஒழுக்கம்!

2067. உலகத்தவர் தாம் செய்வனவற்றை மேற்பார்வை பார்ப்பவர் இல்லை என்று பல வகையான வஞ்சகச் செய்ல்களைச் செய்வர். எல்லோரையும் மேற்பார்வை செய்யும் இறைவனான க்ண்காணி இல்லாத இடம் ஏதுமில்லை. உலகத்தார் செய்வனவற்றை மேற்பார்வை செய்து எங்கும் நிறைந்து விளங்கும் இறைவனைக் கண்ணை இடமாகக் கொண்டு பார்த்தவர் தாம் செய்யும் வஞ்சகச் செயலிலிருந்து நீங்குவர்.

2068. கரிய கண்டத்தையுடைய சிவன் செழுமையான கடல் சூழ்ந்த உலகில் பொய்யானவற்றையே பேசித் திரியும் மக்கள் உண்மைப் பேசுவராயின் தேவரும் வழிபடும் தன்மையை அளிப்பான். இவ்வுலகத்தைப் படைத்த அவ்விறைவன் பொய்யையும் மெய்யையும் நன்கு அறிவான்.

2069. பக்தியை விலை கூறி விற்றுப் பகல் பொழுதைக் கழிக்கின்ற மதம் கொண்டவர்க்கு மறுபிறப்பு அமைந்துள்ளது அன்றோ.. பிறப்பை உண்டு பண்ணும் காமம் முதலிய விதையை நசுக்கிக் கழுத்துக்குக் கீழே உள்ள பகுதியான வினை புல்த்தைக் கெடுத்து தரிசாக்கும் இறைப்பித்த்துக் கொண்டவர்க்கு என்றும் பிறவியான பயன் விளையாது.

2070. பௌராணிகர் வடக்கே உள்ள மூர்த்தி தலம் தீர்த்தம் என்பவை பெருமை உடையவை என்பர். வடக்கே உள்ளது ஏதுமில்லை. என்றாலும் அறிவற்றவர் மற்றவர் அங்குப் போகும்படி தூண்டுவார். வடக்கே உள்ள பதிகள் எல்லாம் ஞானியின் உள்ளத்தில் அடங்கியுள்ளன.

2071. இறைவன் உயிரை உடலுடன் சேர்த்து வைப்பவன். உடம்பையே தான் வாழும் நாடாய்க் கொண்டவன். உடலுக்குள் இருந்து வெளிப்படும் குரு மண்டலத் தலைவன். இத்தகைய இறைவனை நாட்டில் எங்கும் தேடி அலைவார்கள். அவன் அவரவர் உடலுலும் பொருந்தி விளங்குகின்றான். இதனை அறியவில்லையே.

2072. இறைவன் மேற்பார்வை செய்பவனாக மூலாதாரத்திலிருந்து எழுகின்ற தீயில் உள்ளான். மேற்பார்வை செய்பவனாக அவரவர் உடலிலும் உள்ளத்திலும் உள்லான். அவ்வாறு விளங்கி அவரவர் உடலிலும் உள்ளத்திலும் கலந்து நெறிப்படுத்துவான். சிவத்தின் பால் பக்திகொண்அ உயிர்களுக்கு அவர்களைக் கண்காணித்து நடத்தும் காதலன் ஆபவனும் அவனே.

2073. காமத்திற்கு காரணமான கன்னியர் வலையில் விழுபவர் ஒரு வகையில் சிறைப்பட்டவர். மறைகளை ஓதுபவர் ஒருவகையில் சிறைபட்டவர். உடம்பை வருத்தித் தவம் செய்பவர் ஒருவகையில் சிறைப்பட்டவர். தத்துவ விசாரனையால் அனுபவம் இன்றித் தன்னையும் தலைவனையும் உணர முற்படுவோர் ஒருவகையில் சிறைபட்டவர். இவ்வகையினரான நாலவரும் இறைவன் இயல்பை அறியாதவர்கள் ஆவார்கள்.

2074. மறையும் காண இயலாத படலத்தால் மூடப்பட்ட கண்ணுக்கு இருளே அதன் ஒளி. சிவ ஒளி எங்கும் பரவியிருந்தாலும் அந்த ஒளியானது சாதாரண மக்களால் காணப்படாததாகவே உள்ளது. காணாதவர்கட்கு அகக் கண்ணாய் இருந்து காட்டும் பெருங் கண்னொளியாகும். கடவுளை ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் பார்த்தவர் தாம் செய்யும் களவு ஒழுக்கத்தினின்றும் உய்ந்து ஒழிந்தார்.

2075. பித்தம் கொண்டவன் மருத்துவன் கொடுத்த மருந்தால் பித்தம் நீங்கப் பெற்று தன் இயல்பான தன்மையைப் பெறுவான். படலத்தால் மறைக்கப்பட்ட கண் படலம் நீங்கப் பெற்றுக் காணும் தன்மையன் ஆவான். அவை போன்று சிவபெருமான் அருள் செய்ய உள்ளம் தெளிவு கொண்டேன். உயிரின் இயல்பான செயல்களை விட்டு நின்றேன்.

2076. சிவத்தின் உறுப்புகள் நிலம் நீர், தீ, காற்று, ஆகாயம், கதிரவ்ன், சந்திரன், ஆன்மா என்ற எட்டு ஆகும். இவை அவனுடைய சத்திகள் என்பதை எண்ணி அஞ்ஞானமான உறக்கத்திலினின்று விழித்திருத்தலைச் செய்யார். கள் முதலியவற்றின் மயமாய் ஆக எண்ணிய தீவினையாளர் இன்பமயமான இறைவனது நினைப்பை விட்டவர் ஆவார்.

2077. கலப்பால் ஒன்றாய் பொருளின் இயல்பால் சீவனும் சிவனும் என்று இரண்டாயும் நின்று உயிர்த் தன்மை கெட்டுச் சிவம் ஆனவர்க்கு ஒன்று இரண்டு என்னும் வேறுபாட்டு உணர்வு ஒரு போதும் வராது. அங்ஙனம் இன்றி ஒன்று இரண்டு என்னும் வேறுபட்ட அறிவு உடையவர் எல்லாருக்கும் அந்நியமாய் உள்ளது. ஒன்று என்றும் இரண்டு என்றும் வேறு பிரித்து எண்ணும் நிலையில் வேறாக விளங்கும்.

2078. மூச்சானது உடலில் நின்று விட்டால் உணர்வு எங்கு இருக்கும். அறிவு இல்லாமையாலே பரிச உணர்ச்சி நிறைந்த உடல் நீங்கிக் கீழே விழும். உயிரும் உடலும் ஆகிய இவற்றுடன் பொருந்தியிருக்கும் உணர்வாவன சிவப்பயிரும் அமைந்து கிடந்த உள்ளத்தின் தன்மையை உலகத்தார் அறியமாட்டார்.

2079. உயிர் எனப்படுவது உடலின் வேறாய் உணர்வாய் எங்கும் நிலைபெறும் இயல்பு உடையது. உயிர் எத்தன்மையுடையது என்று அறிந்தால் அதனால் ஆன உணர்வு அறியப்படும் உடலுக்குள் பரவியிருப்பது பிராணன் அன்று உணர்வே ஆகும். அந்த உணர்வில் மறைந்திருக்கும் சிவம் ஒன்று உள்ளது என்பதை யாரும் அறியமாட்டார்.

2080. இன்றைய உலகம் நிலைபெறுவதற்குரிய அச்சாணி போன்றவன் ஒளியுடைய மேலான அறிவு பொருந்தியவன். நிலம் முதலிய ஐந்து பூதங்களின் தன்மையாய் அவற்றுள் உள்ளும் புறமுமாய் காணப்படுவன். சில வாக்கு வடிவான் தேவர்களுக்குத் தலைவனை தலையில் வாக்கு வடிவமாக அறிவதே தன்னை அறியும் செயலாகும்

2081. இறைவன் உலகப் பொருள் யாவற்றுக்கும் ஒடுங்கும் இடமாக உள்ள ஒப்பில்லாத பேரொளி. உடல் உலகு எல்லாமாக நின்ற ஒளி பொருந்திய சுடர் இத்தகைய தலைவனின் எல்லையில்லாத அருளால் விளையும் பேறு உனக்கு உண்டாகும். அதனால் விருப்பையும் பின்பு முடிவில் சோர்வையும் அளிக்கும் சிற்றின்பத்தை நீ விட்டு விடுவாயாக.

2082. உனக்கு முதல்வனாய் உடம்பில் உயிர் நிலைபெறும்படி செய்த ஒளிமண்டலதில் விளங்கும் இறைவனின் கருத்தை அறிபவர் இலர். நல்ல முதல்வனாய் சிவம் மிக்குத் தோன்றத் தமக்கு எனப் பெயர் இல்லாது அப்பெருமானுடன் ஒன்றி நின்றால் தன்க்கு முதல்வனான சிவத்தினது பண்பு உண்டாகும்.

2083. ஐம்பொறிக்ளும் அந்தக்கரணங்களும் வந்தனவாகிய சூக்கும உடலும் உயிர் அன்று இவையெல்லாம் மகத் தத்துவத்தினின்று தோன்றியவை. புருடனும் கலை காலம் நியதி வித்தை அரகம் என்னும் ஐந்தின் கூட்டத்தால் பொருந்துவதாகும் . அனாதியாய் உள்ள ஆன்மாவானது முப்பத்தாறு தத்துவத்தின் முடிவில் நிலை பெற்றிருக்கும்.

#####

Read 1722 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27038881
All
27038881
Your IP: 18.218.61.16
2024-04-19 07:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg