gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:13

உடலில் பஞ்ச பேதம்! உடல் விடல்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் பாங்கார் இன்பப்
பராபர கற்றவர் விழுங்கும் கனியே ! மற்றவர்
காணாமலையே சொல்லொடு பொருளின் தொடர்பே
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி! போற்றி!

#####

உடலில் பஞ்ச பேதம்!

2122. உடம்பில் அன்னமய கோசம் என ஒன்று உண்டு. பல வினைகள் எனும் பொருளையுடைய பிரணாமய கோசம் ஒன்றும் உண்டு. இதுவன்றி ம்னோமய கோசம் என்றும் ஒன்று உண்டு.. அறிவு விளங்கும் மனோமய கோசம் உடம்பை விட்டு நீங்கினால் மாயப்பை ஆன இரண்டு உடலும் மண்ணுடன் மண்ணாய் கலந்து விடும்.

2123. சிவன் அமைத்தது தூல சூக்கும என்ற இரு கூறால் ஆன உடம்பு. இதில் சுத்தமான நுண்ணிய உடலைப் பற்றிச் சொல்லும்போது சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் மற்றும் புத்தி மனம் அகங்காரம் ஆகிய எட்டும் ஆன புரியட்ட உடலாகும்.

2124. எட்டில் தன்மாத்திரை களிலிருந்து ஐந்து பொறிகள் அமையும். அவற்றுடன் பொருந்திய புத்தி முதலிய அந்தக் காரணம் மூன்றும் உட்கருவிகள் ஆகும். இவற்றுடன் சேர்ந்த பாசத்தை உணர்வுமயமாய் விளங்கியப் பரு உடலில் கூட்டியும் பிரித்தும் சிவனருள்வான்.

2125. உடல், உண்ட உணவின் சாரம், குருதி, ஊன், தோல், நரம்பு, பொருந்திய எழும்பு, கொழுப்புடன் மூளை பரந்துள்ள சுக்கிலம் என்பனவற்றால் ஆனது. பாழான துரியத்தின் உருவமான மயக்கம் தரும் இந்த உடலை ஒரு பொருள் என்று சொல்ல முடியாது.

2126. சிவபெருமானின் திருவ்டிப் பெருமையை எவர் அறிவார். உடலை இடமாய்க் கொண்டு அவர் திகழ்வதை யார் அறிவார். அறுபது பொதுத் தத்துவங்களுடன் எட்டுச் சிறப்பு தத்துவங்களுடன் விளங்கும் இருவகை உடல்களையும் எவர் அறிவார். அவர் மூலாதாரத்திலிருந்து காப்பதை யார் அறிய வல்லார்.

2127. எட்டுச் சாண் அளவுடைய உடலில் அமைந்த கண் கால் முதலிய உறுப்புகளை அவ்வுடலில் மறைக்கின்ற ஒழுங்கில் நிண வழியாய் அறுபத்தெட்டு வடிவான வான் கூற்றை ஒன்று சேர்க்கின்ற நட்பால் பருவுடலும் அதைத் தாங்கிய நுண்ணுடலும் அமையும்.

2128. பருவுடம்புக்கும் பருவுடம்பல்லாத பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமயமான நான்கு உடம்புக்கும் உயிராக விளங்குவது சீவன் ஆகும். அந்தச் சீவன் பரத்துடன் நீங்காத சிவத்தில் ஒடுங்கும். அந்தப் பிரமமான சிவம் உடல் உயிரில் கலந்து வியாபித்திருப்பதைப் போல் சீவன் ஐந்து கோசங்களிலும் அடங்கியிருந்து தொழிற்படுவதையும் இவற்றைவிட்டு நீங்கும் முறையையும் யார் அறிவார்.

2129. மூலாதாரம் முதற்கொண்டு ஆறூ ஆதாரம் கடந்த சக்சிரதளத்தில் நடு நாடி வழியாய்ப் போய்க் கூடினால் பத்து வாயுக்களும் புரியட்டக உடலும் நன்றாக அடைக்கப் பட்டுவிடும். இவ்வகையான பதினெட்டுக் கலைகளும் சேர்ந்தது தான் சீவன். பரிச உணர்வுடன் கூடிய பருவுடலைக் கருதி நடத்துகின்றது.

2130. உண்மையில் காணப்படுகின்ற உடம்பையும் பொய்போல் காணப்படாமல் பொருந்திய பிராண மய கோசத்தையும் மூலாதாரம் முதலாகச் சொல்லும் சுழுமுனை உச்சியில் விளங்கும் ஒளி உடலையும் மூலவாயு கடக்கின்றபோது இவ்வுடல் காணப்படாது அடங்கும்.

2131. போர்க்குதிரை ஒன்று மிக்க வேகத்துடன் பாய்ந்து மீளல்போல் நுண்ணுடல் அண்மையிலும் தொலைவிலும் போய் மீள்கின்ற ஆற்றல் உடையது. உடலில் உள்ள பல நூலாடைகளை ஒவ்வொன்றாக நீக்கி அணிவதால் அவரது உடம்புக்குக் கெடுதல் வராதது போன்று நுண்ணுடலுக்கு கேடு இல்லாது போய் மீளும் தன்மை கொண்டது

2132. நாகப்பாம்பு தோலை விரித்து விட்டுச் செல்வதைப்போல் முட்டையில் உள்ள குஞ்சு அதை விட்டு வெளிவருது போல் கனவில் கண்டவை நனவில் விளங்காது மறந்து விடுவதுபோல் உடலைவிட்டு உயிர் போகும். சிவனது ஆணையால் உடம்பை விட்டுப் பிரிந்து அதன் தகுதிக்கு ஏற்ப நல்வினை தீவினைகளைச் சொர்க்கம் நரகங்களைப் பொருந்தும்.

2133. எடுத்த உடலின் பயனை அனுபவித்து உடலை விடுபவர் நுண்னுடலில் பொருந்தி நரகம் சொர்க்கப் பயனைத் துய்ப்பர். பழமையான வினை தொடர நுண்ணுடலைப் பற்றிவந்து பிறவுடலில் உலவும் நிறம் பொருந்திய யோகி மீண்டும் தன் உடலில் வந்து புகுவதைப் போன்று உடலை எடுத்துப் பிறந்தும் இறந்தும் பிறவிச் சக்கரத்தில் வருத்தப்படுவர்.

2134. அவனே தான் ஆன அந்நெறியில் நின்று பரம்பொருளைத் தன்னிடம் கண்டவர் உடலுக்கு இயல்பாய் வரும் இயலபை மாற்றிப் பரமம் என்ற மேலான நிலையை அடைவார். இவ்வாறு செய்யாத மற்ற உயிர்கள் அவரவர் வினைகளுக்குரிய பத நிலைகளைப் பெற்றுச் சொர்க்கம் நரகம் அடைந்து மீண்டும் இவ்வுலகில் பிறந்தும் வருந்துவர்.

2135. யோகிச் சிவத்தையே எண்ணியிருப்பதால் உடம்பு சிவதனுவாகும். உடல் தர்மத்தை மறந்திருத்தலால் ஞானிக்குரிய உடல் சிவத்தினுடையது. உச்சித்தலையின் மீது சித்தித்திருக்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் உடலாகும். மோனம் பிரணவ யோகத்தை முடித்தவர் ஆணவம் கன்மம் மயை ஆகிய மூன்றுமான உடம்பு கெட்டுச் சிவ சாயுச்சியத்தை அடைவர்,

2136. தெளிந்த அறிவினையுடைய விஞ்ஞானகலர்க்கு-ஒரு மனம் உடையவர் ஒன்றே உடம்பாகும். அறிவினைப் பெறும் பிரளயாகலர்க்கு-இருமனம் உடையவர் மாயையே உடலாகும். அஞ்ஞானத்துடன் விளைந்த போக போக்கியமே உடல் ஆகும் உண்மையான ஞானிக்கு அகண்ட சிவமே உடலாய் அமையும்.

2137. உடல் மலத்தால் ஆனது என்று உணர்ந்து இதனை ஒதுக்காத அறிவற்றவர். இதுவே சிறந்த இடம் என்று எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த உடலே நன்மை அளிப்பது என்று எண்ணியிருப்பாராயின் இவ்வுலகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி வந்து கொண்டே இருக்கும்.

2138. நல்ல மொழியைப் பேசும் வாக்கு வன்மையும் நல்லதையே எண்ணித் தெளியும் மனம் முதலியவும் உடையவர்கள் உள்ளத்தில் மலம் அற்ற சிவன் மெல்ல விளங்கியருள்வான். அங்ஙனம் அல்லாதவற்றைக் கேட்கும் செவியும் பேசும் வாக்கு முதலியனவும் நினைக்கும் மனமும் மெல்லப் பெறுபவர் சிவம் பிரகாசியாது வாட்டம் அடையும் முகம் கொண்டவரே ஆவர்.

#####

உடல் விடல்!

2139. இன்பம் தரும் காமத்தை உண்டாக்கும் பேச்சும் வான் கூற்றில் செல்லும் பிராணனும் அங்கு உண்டாகும் ஓசையும் ஊன் பொருந்திய உடலில் பொருந்தும் மனமும் தலையின்மீது நிலைபெறச் செய்ய உடம்பின் பிரக்ஞையும் போயவிடும்.

2140. அழியும் இயல்பை உடைய ஓர் உடம்பிலே உள்ள செவி, கண் முதலியவை அழியும் இயல்பு உடையவை. கால வயப்பட்டுச் செய்யும் விரதம் அறம், வைகரி வாக்கு, இடைகலை பிங்கலை நாடி ஆகியவையும் முடிவை அடைகின்றன. ஆகவே இவை அழிகின்ற உடம்புக்குத் தக்க துணையாகா.

2141. அரசு இலை போன்று விளங்கும் பெண்களின் இடையில் போகும் காம உணர்வு தனங்கள் பொருந்திய மார்பில் மூழ்கி வருத்தும். அப்படியாயின் மலை போல் அசையாத சிவத்தை முன்னிட்டுச் சித்தித்திருகின்றதாயின் சிறந்த ஒளியுடலைத் தாங்கி நிற்கும்.

#####

Read 1806 times Last modified on செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:33
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932479
All
26932479
Your IP: 44.204.34.64
2024-03-29 02:19

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg