gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:01

சுத்த நனவாதி பருவம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உருகுவோருள்ளத் தொளியே பெருமருள் சுரக்கும்
பெருமான் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் உம்பர்
கட்கரசே ஒருவ பிள்ளையார்ப் பெயர்கொண்டுள்ளாய்
வள்ளலாய் நலங்கள் வழங்குவாய் போற்றி! போற்றி!

#####

சுத்த நனவாதி பருவம்!

2187. சுத்த சாக்கிரதம் முதலிய ஐந்து நிலைகளில் தூல தத்துவங்களே நுண்மையாத் தோன்றும். அத்தகைய இருபத்தைந்து தத்துவங்கள் விந்துவின் சத்தியாகும். தன் உயிரானது விந்து என்ற ஓளிமண்டலத்தினின்று வெளீப்பட்டு நனவில் கனவு போல் தூல தத்துவங்களைக் காணும் முறை இத்தன்மையன.

2188. நனவு நிலையில் துரியாதீதம் அடைந்தவர் குழந்தையைப் போல் கிடப்பார். நனவில் துரிய நிலை அடைந்தவர் தவழும் குழந்தைப்போல் சிறிது அறிவுள்ளவர் ஆவர். நனவில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்த பருவம் பெற்றவர் ஆவார், நனவில் கனவு நிலையில் உள்ளவர் ஒடுதல் போன்றச் செயலைச் செய்பவர் ஆவார்.

2189. நனவில் துரியாதீதம் சென்றவரிடம் கிரியை சிறந்து விளங்குவதால் சிவ தத்துவம் உணரப்படுவதாக இருக்கின்றது. அத்தகையவரிடம் பிரிவின்றிச் செறிந்திருக்கும் சுகருபமான யோகம் சிவத்தின் பொருளாலே ஆகும் அவரிடம் சிறந்த கல்வியும் நல்ல திருமேனியும் நற்குணங்களும் காணப்பெறும். அவர்களுடைய அறிவில் அண்ட கோசத்தில் அசைவனவும் அசையாதனவும் விளங்கும்.

2190. ஆதியான பரமசிவம் சிவம்சத்தி, சதாசிவம், குற்றம் இல்லதா மகேசன் சுத்தவித்தையான தத்துவமும் வித்தை கலை காலம் நியதி மாயை என்னும் தத்துவமும் முறைமையும் முடிவும் உடையனவாய் அமைந்துள்ளான் என்பதை அறிக.

2192. ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் உமியையும் தவிட்டையும் முளையையும் நிகர்க்கும். ஆன்மா சிவத்தைபோல் வியாபகம் பெறலாம். உமி முதலியவற்றால் மூடப்பட்டு உள்ளே இருக்கும் அரிசியைப்போல நிகழும். எனவே உன்னைச் சூழவுள்ள பாசத்தை நீக்கித் திருவடியைப் போற்றுவாயாக.

2193. பசுக்கள் பல நிறங்களை உடையனவாயினும் அவற்றின் பால் ஒரே நிறம் உடையன. அந்தப் பசுக்கள் பல ஆயினும் மேய்ப்பவன் ஒருவனே ஆவான். அம் மேய்பவன் மேய்ப்பதை நிறுத்தினால் பசுக்கள் அவனைச் சுற்றியே சூழ்ந்து அகலாமல் நிற்கும்..

2194. உடம்பில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தி, அகங்காரம் என்ற அந்தக் கரணங்கள் அறியாமையைப் பொருந்திக் கெடும். அத்தகைய உயிரினது மயக்கம் மேலும் பெருகினால் அந்தவுயிர் நரகத்திலும் சென்று துயரம் அடையும்.

2195. துரியாதீதத்தை பொருத்திப் புருடன் கிடப்பது தன்னை அறியாத துரியாதீதம் ஆகும். கொப்பூழைப் புருடன் அடையும் போது பிரணவம் விளங்கும் அகரக் கலையைப் பொருந்தி நிற்பான். இதயத்தில் புருடன் சுழுத்தியை அடையும்போது காமிய வாசனையுடன் விளங்குவான். அவ்வாசனையே அனுபவங்களாக கனவு நனவு நிலைகளில் பொருந்தும்.

2196. சுத்த சாக்கிர நிலைகளில் கனவு இல்லை. சுத்தாவத்தை ஐந்தில் கனவில்லாச் சுழுத்தி பொருந்திய போது விந்து நாதம் உணரப்பெறும். அங்கு நன்றாக அனுபவிக்கப்படுகின்ற விந்து நாதங்களை மாயை ஆன்மாவுடன் சேர்க்கும். பின்பு நனவில் துரியமும் துரியாதீதமும் வந்து பொருந்தும்.

2197. முப்பத்தாறு தத்துவங்களில் உடல் சார்பான ஆன்ம தத்துவமும் புருடனும் ஆகிய இருபத்தைந்து தத்துவங்களும் நீங்கினால் சுத்த நனவு நிலை பொருந்தும். மேல் உள்ள வித்தியாதத்துவத்தில் உள்ள ஆறும் முன்புள்ள இருபத்தைந்தும் ஆக முப்பத்தொன்றும் நீங்கின் நனவில் கனவு உண்டாகும். இவற்றின்மேல் உள்ள வேறான சிவ தத்துவம் ஐந்தும் கழன்றபோது உறக்கம் உண்டாகும். இந்த நிலையில் எஞ்சியிருப்பது தூய மாயை ஒன்றேயாகும்.

2198. மாயையில் வந்த புருடன் நின்மலத் துரியத்தில் அந்தக் கூட்டத்தை நீத்துத் தானும் அங்கு இல்லையாகும். புருடனுக்கு அப்பால் உள்ள விந்து மண்டல ஒளியில் ஆன்மா விளங்கும். அப்படி விளங்க ஆன்மாவுக்கு இவ்வுடம்பால ஆகும் பயன் ஏதும் இலை.

2199. ஆன்மா சாக்கிரதத்தில் துரியாதீத நிலையிலே அறிவே வடிவானவனாம். அந்நிலையில் நனவில் அதீதம் புரிந்தால் சக்கிராதீத நிலையைக் கடந்து அறிவு மயமாய் உள ஆன்மா சிவச் சோதியில் கலந்து ஒளி மயமாய் விளங்குவான்.

2200. நனவில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கண்டத்தில் இருபத்தைந்து தத்துவங்களுடன் தொழிற்படும் நிலையைக் கனவு என்று மொழிவர். பொய்யான உடலை இடமாகக் கொண்ட புருடனோடு பிராணன் சித்தம் என்னும் மூன்றும் சுழுத்தியில் ஆகும். உடலை அறிந்து புருடனுடன் பிராணன் என்னும் இரண்டும் கொப்பூழில் பெருந்துதல் துரியம் ஆகும்.

2201. நனவில் புருடனுடன் பொருந்துவன ஐந்து தன்மத்திரைகள் மனம் புத்தி அகங்காரம் என்னும் எட்டு. கனவில் புருடனுடன் பொருந்துவன மனம் புத்தி அகங்காரம் என்னும் மூன்று. சுழுத்தியில் புருடனுடன் அகங்காரம் ஒன்று மட்டும் பொருந்திச் செயல்படும்.

2202. சாக்கிரத்தில் நனவு நிலையில் புலன் அறிவு சிறந்து விளங்கும். புலன்களுடன் தொடர்பு இல்லாமல் அவற்றின் வாதனைகளுடன் கூடியிருப்பது நனவில் கனவு நிலையாகும். அவ்வாதனைகளையும் மறந்து நிற்கும்போது நனவு உறக்கம் உண்டகும். எதையும் பற்றிய நாட்டம் இல்லாமை நனவில் பேர் உறக்கம். நனவில் அதீதத்துச் சிவானுபவம் ஒன்றே.

2203. கனவில் நனவு போல் காண்பது கனவில் நனவாகும். எல்லாவற்றையும் கண்டு அவற்றை மறப்பது கனவிலே கனவாகும். எல்லாவற்ரையும் கண்டும் காணாதிருப்பது கனவில் உறக்கம் ஆகும். கனவில் கண்டவற்றைக் கொண்டு காணாதவற்றை அனுமானத்தால் அறிவது கனவில் பேர் உறக்கம் ஆகும்.

2204. உறக்கத்தில் நனவு என்பது எதுவும் தோன்றாமல் உறங்குவது. உறக்கத்தில் கனவு என்பது ஆன்மா தன் இருப்பை மட்டும் தோன்ற விளங்குதல். உறக்கத்தில் உறக்கமாவது அறிவு அறிவால் அழிதல். உறக்கத்தில் பேர் உறக்கம் கூற இயலாத சூன்யம் ஆகும்.

2205. துரியத்தில் நனவு எனக் கூறப்படுவது நன்மையைத்தரும் சிவ உணர்வில் நிற்பது. துரியத்தில் கனவு என்பது தலைக்குமேல் சீவனை அண்டாகாயத்தில் அறிவது. துரியத்தில் சுழுத்தி என்பது தலைக்குமேல் உள்ள நிராதார வானத்தில் பொருந்துவதாகும். துரியத்தில் துரியம் என்பது எல்லாத் தத்துவங்களையும் கடந்தபோது தன்னைப் பரமாக உணர்வது.

2206. ஆன்ம அறிவு சிவ அறிவில் கூடி அறிவதை உணரும் நிலை அதிதீதத்தில் விழிப்பு நிலையாகும். அங்ஙனம் அறியும் அறிவு அறியும் இயல்பு மடங்கிச் சிந்தனை நீங்கியிருப்பது அதிதீதத்தில் கனவு ஆகும். ஆன்ம அறிவு சிவ அறிவில் அடங்கி அறிவதை விட்டு அதுவே தானாய் நிற்பது அதீதீதத்தில் சுழுத்தியாகும். தன் அறிவு வேறாக இன்றி இதைஅறிவாகவே ஆகும்போது அதிதீதத்தில் துரியம் ஆகும்.

2207. பரகாயம்போல் எங்கும் விளங்கும் நிலையை அடைந்தவன் ஐந்து மலங்களிலிருந்தும் விடுபட்டு ஞானமே தன் வடிவாய்ச் சிவத்தை விரும்பி அடைந்தவன். தான் எங்கும் நிற்கிற இயல்பையும் விட்டு மேலாய் விளங்கும் நுண்மை நிலையான பிரணவ உடலை எய்துவான்.

2208. முப்பத்தாறு தத்துவங்களுள் இருபத்தைந்து நீங்கிய போது சாக்கிரமும், ஆறு நீங்கிய போது கனவும், ஐந்து நீங்கியபோது சுழுத்தியும் முடிவை அடையும். இவையே நனவில் கனவு, கனவு உறாக்கம், ஆகும். பின்பு தூலமும் சூக்குமமும் சுத்தமயையாம். அத்துரிய நிலையில் தத்துவங்களுக்குத் தலைமை தாங்குபவனாய்தான் அவன் நிற்பான்.

2209. இந்த உண்மையை இவ்வளவு காலம் நான் அறியவில்லை. இதை உணர்ந்த பின்பு வேறு அறிவதற்கு எதுவும் இல்லை. அகண்ட வடிவான சிவமே முதல் என்றும் அஃது அறிவுக்கும் அறிவுருவாகும் என்றும் அறிந்தபின்பு இதுதான் நாம் அடையத் தக்கபேறு என்று அறிந்த இயல்பு உடையவன் ஆவேன்.

2210. சிவபெருமான் உயிருக்கு உயிராகியும் உருவமாகியும் அருவமாகியும் அயலாகியும் அயலிலிருந்து கூடும் பொருளாகவும் அறிவாகவும் எவ்விடத்தும் நிறைந்த பொருளாகவும் விரும்பும் சக்தியாகவும் நாதனாகவும் உலகம் உடம்பு கருவி என்பனவற்றை இயக்காமல் ஒழியின் அவை அனைத்தும் அஞ்ஞானத்தால் அறிவு பெறாது போகும்.

2211. இறைவன் தொன்று தொட்டே ஆன்மாக்களைப் பற்றிய மலமானது நீங்கும்படி ஆன்மாக்கள்மீது வைத்த அருளால் சத்தியுடன் பொருந்தி அவளுக்கு உயிராய் விளங்கி பாசத்தை விளைவிக்கும் ஐந்து மலக் கூட்டத்தையும் முப்பத்தாறு தத்துவ பேதங்களையும் படைத்தான். அவற்றை அனுபவிப்பதற்குரிய உள் கருவியும் புறக் கருவியும் உயிருடனே கூட்டி வைத்தனன்.

2212. சாக்கிரதீதத்தில் ஆணவமலமும் தன் உண்மை என்ற ஆன்மாவும் உள்ளன. சாக்கிராதீதத்துப் பொருந்திய ஒளியில் ஆன்மா சேர ஆஅக்கிரதீதத்தில் பொருந்திய ஆணவமலம் நீங்கப் பெற்றுத் திருவருளைப் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை இவர்கலிடம் தங்கி நிலைக்கும்..

2213. ஆன்மாவுடன் மலம் கலந்திருப்பதால் சிவதத்துவம் விளங்கும் மாமாயை மறைந்துள்ளாள். மலத்தின் கலப்பால் தெளிவான ஞானம் விளங்கவில்லை. மலக் கலப்பாலே சிவனும் மறைந்திருந்தான். ஆன்மாவிடம் பொருந்திய மலக்குற்றம் அகன்றால் சுத்த வித்தை விளங்கும். மதி மண்டலம் ஒளி பெற்று விளங்கும்.

2214. நன்மை தீமை என்பனவற்றைப் பிரித்து அறிய இயலாத சிந்தையில் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்று சிங்கங்கள் இருக்கின்றன. விடயங்களை மகிழ்ச்சியுடன் போய்ப் பற்றி வஞ்சகமாய் அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபடுத்தும் அந்தக் கரணங்கள் என்னும் நரிக்குட்டிகள் நானகு உள்ளன. வெளிப் பொருளை அனுபவிக்கும் முறையில் வகைப் படுத்தி அனுபவிக்க முயலும் பொறிகளான யனைக் கன்று ஐந்து உள்ளன். வெளியிலும் உள்ளேயும் செலுத்துகின்ற இரு தன்மைகள் மனத்துக்கு உண்டு.

2215. பத்து வாயுக்களும் புரியட்டகமும் பொருந்திய உடம்பு வெளியுலகில் விரும்பிச் செல்லச் சிதறுண்டு எழும் உள்ளத்தை நீங்கள் அப்படி கேடு அடைந்து உடம்பு அழியும் முன் இறைவனை அடையும் உண்மை நெறியைப் பற்ரி நின்றால் மேலே கண்ட பதினெட்டும் அதிர்ச்சியை அடைய ஒப்பில்லாத ஆன்மாவின் தலைவனான சிவபெருமான் வெளிப்படுவான்.

2216. நனவில் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் பத்தும் அவற்றின் செயல்களான பத்தும் நீங்கக் கனவில் புகுந்து அந்தக் கரணங்களுடன் முன் மூளையிலிருந்து சிந்திப்பதையும் வைத்து உள்ளம் என்னும் மனமண்டலத்தில் நிலைத்தால் நினைவு இராது. அப்போது ஆன்மா நின்மல-சுழுத்தியில்- உறக்கத்தில் பொருந்தும்.

2217. நின்மல உறக்கத்தில் பொருந்திய ஆன்மா குருவருளால் துரியாவத்தையில் பொருந்தி உலகில் நியமம் தாரணை முதலிய நிலைகளைப் பெற்றுத் துரியாதீதத்தில் துரியாதீதமான சமாதி நிலையில் கூடிச் சிலகாலம் தங்கிச் சென்று பரன் என்?ற பெயரைப் பெற்று மலநீக்கம் பெற்ற தூய ஆன்மாவாகும்.

2218. பரநிலையை அடைந்தவன் எல்லா அறிவும் பெற்று அனைத்து உலகும் ஒருசேர அனுபவித்து சதாசிவமான பெருமையுள்ள சத்தியின் திருமேனியான ஐந்தும் போய் அவற்றைக் கடந்த சிவனாய் பிரணவ உடலை அடைந்து சுயம்பிரகாச ஒளியாய் விளங்குவான்.

2219. உடலுள் உள்ள சந்திரன் ஞாயிறு, அக்கினி என்னும் மூன்று மண்டலங்களுள் மாயத்தைச் செய்கின்ற பெருமானைக் கண்டு உள்ளே எண்ணி நீங்கி மலர்ந்து விளங்கும் சகசிர்ரதளத்தைக் கடந்து மேலே போனபோது அண்டம் யாவும் தானாகவே உள்ளத்துள் விளங்கும்.

2220. ஞானெந்திரியம் எனும் பறவைகள் தங்களுக்கு ஒளிவரும் இடம் அறியாது திகைத்தன. திருவரு/ள் சத்தி இவர்தம் அறியாமையைப் நோக்கி உதவி செய்ய இயலாமல் மயங்கினள். எம் இறைவனான சிவன் இத்தகைய அறியாமையை உடையவரை மாற்றிட வகையறியாமல் உதவி செய்கின்றான். ஆயின் உண்மையை உணர்ந்தவர் தம் தலையில் அகலாமல் சிவத்தை துதித்துக் கொண்டு விளங்கினர்.

2221. சிவம் விளங்கும் நுண்மையை அறிந்து அறு ஆதாரங்களையும் மூன்று மண்டலங்களையும் செர்த்து ஒன்பது பிரிவுகளும் உடலுள் பொருந்துவதை அறிந்தேன். புவனங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனான பரம் பொருளை நாடி ஒன்பது மண்டலங்களையும் திருத்தி அமைத்தேன். சிவனை உள்ளத்தில் வருவிக்க அறிந்தேன். அவன் என் மனத்தையே பொருந்தி நிலையாய் நின்று விட்டான்.

2222. .உலகத்தில் உள்ள விளக்கை எண்ணெய் வார்த்துச் திரியிட்டு தூண்டுபவனின் செயலைப் போன்று மூலாதாரத்தில் உள்ள அக்கினி மண்டல ஒளி மூல சாதனையாய் ஆகும். அங்ஙனம் தூண்டப்பட்ட மூலாதாரத்தில் உள்ள அந்த ஒளி மற்றக் கதிரவன் சந்திரன் மண்டலங்கள் என்பனவற்றைக் கொண்டு பேரொளியாய் விளங்கும்.

2223. உள்நாட்டம் உடைய ஐம்பொறிகளை உடையவர்க்கு மண்டைக்கு மேலாக விளங்கும் மேல்முகமான சகசிரதளத்தில் வான் மண்டலத்தை ஆராயின் மேல் நோக்கிய அகத்தில் ஐம்பொறிகளும் கூடிய சத்தியில் அது கண்ணால் உள்ளத்தில் நாடிக் காண்கின்ர தனமை உடையது.

2224. எளிய க்ண்ணுக்குப் புலப்படாத பொருளையும் சிவன் அறிவான். சிவத்தைப் பொருத்தி அறியும் அறிவை அடையாதவன் தன் அறிவு நிரம்பியவன் ஆகமாட்டான். நிரம்பிய அறிவில்லாமல் ஐந்து அவத்தை படும் சீவனைத் தன்னோடு சேர்த்து அஃது அறியாமல் கண்காணித்து வரும் பேரறிவுடைய சிவனை அறிபவர் யார்.

2225. நின்மல சக்கிரத்தில் துரிய நிலையைப் பற்றிச் சொன்னோம். துரியாதீதம் உண்டாவது அரிதாகும். சாக்கிரம், கனவு, சுழுத்தி ஆகியவை கழியத்தக்கன. பின்பு துரியத்தில் காலபரமானது மிகப்பெரிய நிலையாகும். அரிய துரியாதீதம் மிகவும் கடந்த நிலையாகும்.

2226. அசுத்த மாயையில் அறிவுடைய ஆன்மா அதன் பகுதிகளில் நிலைகொண்டு பொருந்தும். சுத்த மயையில் ஆன்மா சிவ தத்துவத்தை அறிவதில் பொருந்தும். இவ்வுண்மையை அறியாத சகலர் கேவலாவத்தையைச் சேர்ந்து பல யோனிகளில் புகுந்து வருந்துவர். சுத்த மாயையுள் பொருந்தியுள்ளவர் நின்மலத் துரியத்தைக் கண்ட சீவனாவார்.


#####

Read 1722 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930659
All
26930659
Your IP: 44.192.75.131
2024-03-28 20:57

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg