gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:12

நவாவத்தை நவாபிமானி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

நவாவத்தை நவாபிமானி!

2537. சீவன் ஒன்பது நிலைகளில் உள்ளவனாகக் கூறப்பெறுவது உண்டு. சீவன் துவம்பத நிலையில் விசுவன், சைசதன், பிராஞ்ஞன், எனவும் நல்ல பதமாகிய தற்பத நிலையில் விராட்டன், இரணிய கருப்பன், அவ்யாகிர்தன் எனவும் பிற்பதமான அசிபத நிலையில் இதயன் பிரசாபத்தியன் சாந்தன் எனவும் அழைக்கப் பெறுவான்.

2538. சீவ பரத்துக்குரிய நனவு-சாக்கிரம் முதலிய நிலைகள் ஒன்பது வகைப்படுவதால் பிறவிக்குக் காரணமான் மலம் குணம் ஆகியவற்ரின் பற்றை அறுத்துப் பற்றுதற்கு அரிய தவத்தால் அடையும் மாறுதல் அற்ற அறிவு மயமான வானில் சீவ சிவ வேறுபாடு இல்லாமல் துரியம் பொருந்தினால் அதுவே சீவனின் நிலையாகும்.

2539. சீவன் சிவனையே நினைத்திருப்பதால் சீவனின் தனித்தன்மை கெட்டுப் பிறப்புக்குக் காரணமான ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் போய் ஒழிய ஒன்பதாய்க் குறிப்பிட்ட வகையின் இறுதியில் நல்ல சிவஞானம் தவத்தினால் அடையும் பயன் கொண்டதாய்த் தான் என்பது இல்லாமல் சிவமாய் விளங்கும்..

2540. ஒன்பது நிலையில் பொருந்தும் தத்துவம் தன் சொல்லில் அமையாத வேறு ஒன்பது உள்ளன. இப்படி முன்னே சொன்னதும் பின்னால்(2545-ல்) கூறப்போவதுமான பதினெட்டு நிலைகளையும் ஒழித்துவிட்டு உயிர்களைத் தானாகச் செய்யும் சிவன் தனித்து சிறந்து விளங்கும்.

2541. விருப்பப்படுவனவான் பதினான்கு வித்தைகளும் உயர்ந்தவர் பொருட்டு உணர்த்தியவன் சிவபெருமான் என்றும் அவனது உண்மை நிலையை விரும்பி இரவும் பகலும் மனத்தில் எம்பெருமான் என்று உணர்ந்து நிற்பேன். இதனால் அவன் வலிய வினைகளுடன் மூலத்தையும் அழித்திட்டான்.

2542. நெடுங்காலமாக நன்மை அடையத் தொகுத்துச் சொன்னவை பல. அவற்றிற்குரிய தெய்வமும் பலவகை. அவ்வாறு கூடுதலால் பெறும் பயனும் பல. கூறப்படும் பகலிலும் இரவிலும் எண்ணி வழிபடுங்கள். அங்ஙனம் அங்கங்கு நின்று அருள் செய்யும் அருளாளன் சிவன்.

2543. ஆதியான சிவபெருமான், பராபரை, சோதியுடைய பரம், உயிர், நல்ல தத்துவங்கள், சொல்லப்படும் கலை, சுத்தமாயை, அசுத்தமாயை, என்ற இரண்டு நிகர் இல்லாத வீடு பேறு என்று எண்ணப்படும் ஒன்பது பேதமாக ஆதிசத்தி எனவும் நிற்பாள்.

2544. உயிர்கள் ஆராய்ச்சி அறிவால் அடையமுடியாத உண்மைப் பொருளை அனுபவத்தில் அடையுமாறு செய்து வேறாக நரகமும் சொர்க்கமும் உலகத்தில் பிறப்பும் உயிர்க்ளுக்கு அருள் காரண்மாக அமைந்து வைத்தான். இவ்வுண்மையை அறியாதவர் வினையால் பிறவியை அடையும் உயிராகவே விளங்குவர்.

2545. ஒன்பது வகையான் நிலைகளில் சீவன் விரும்பி அந்த ஒன்பது நிலைகளிலும் பொருந்தி நிற்கும். இந்த ஒன்பதைக் கடந்த சீவதுரியம் பரதுரியம் சிவதுரியங்களில் சிவத்தைப் பொருந்தச் செம்பொருளான சிவமாதல் சித்தாந்தத்தால் அடையும் பயன் ஆகும்

#####

Read 1550 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931959
All
26931959
Your IP: 44.200.39.110
2024-03-29 00:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg