gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 16 July 2020 12:04

ஞான குரு தரிசனம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

ஞான குரு தரிசனம்!

2656. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்த பின்பு மேலான சிவப்பேறு கிட்டப்பெறும். இதன் பயனாய் ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் நிளைத்துச் சிவபோகத்தை அடையும்.

2657. சீவ துரியம் பரதுரியம் சிவ துரியம் என்னும் மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியான அரிய பரசிவம் யாவுமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்தில் இருக்கும் பெருமை மிக்க குருபதத்தின் இயல்பைப் பேச முடியாது.

2658. தாய் போன்ற அருளை யுடைய நந்தியை என் மீது பெற்றேன். வாய் போன்ற கோபுர வாயிலில் விளங்கும் நந்தியை வாழ்வதற்கு வாயைப் பெற்றேன். உலகத்துக்கே பீசமாய் விளங்குகின்ற சிவத்தை ஞான சாதனையால் காண்பதற்குப் போதுமான அறிவைப் பெற்றேன். என்வுணர்வுக்கும் அப்பாற்பட்ட நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன்.

2659. கருட மந்திர உபாசனை செய்பவன் தன் ஆத்ம ஆற்றலால் கருட மந்திரத்துக்குரிய கருடனை நினைத்தவுடனே நாகத்தால் கடியுண்டவன் மிக்க நஞ்சு தீர்ந்து மரணப்பயம் நீங்கி எழுவான். அதைப் போன்று ஞானப் பயிற்சியாளன் பேரொளிப் பிழம்பான ஞான குருவைத் தியனித்தவுடனே மும்மலங்களும் நீங்கிடப் பேரொளிப் பிழம்பாய் விளங்குவான்.

2660. சிவபெருமான் நிலையாய் உள்ள இருப்பிடம் எது என்பதை உலகத்தவர் எவரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவனிடந்தான் என்பதை ஞான விசாரனையால் அறிந்து கொண்டவர்க்கு அவனும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அவ்வாறு தம்மிடம் சிவகுருநாதனைப் பார்ப்பவர் சிவமாய் விளங்குவர்.

2661. முகத்தின் முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆன மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியால் ஆகும். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்தபோது நனவு முதலிய மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் பதிப்பித்த நந்தியான குருநாதன் பிரணவ உடலில் மாணவனை விளங்குமாறு அருள் செய்வான்.

2662. சந்திர மண்டலம் விளங்கும் இரண்டு புருவங்களுக்கும் இடையில் மணத்தை அறியும் நாசியின் மேல் பாகத்தில் இரண்டு இதழ்த் தாமரையில் உள்ள சத்தி பந்தம் ஒன்றும் இல்லாத பளிங்கு போன்ற உருவத்தை உடையவள். இவளே பந்தங்களை அறுக்கும் குருவடிவுடையவள். ஆதலால் இவளைப் பற்றித் தியானத்தை தொடங்குக.

2663. புருவ நடு தியனத்தினால் உடம்பில் உள்ள மூலாதரம் முதலான ஏழு இடங்களும் வளர்ச்சி பெற உள்ளத்தில் பரமகுரு எழுந்தருள்வான். அவன் வானமயனாய்த் தலையிடை விளங்கிப் பிருதுவியைச் செலுத்திபவனாகச் சுவாதிட்டானமான நிலத்தை அடைந்தான். பின்பு அவன் தலையைச் சூழவுள்ள அட்டதிக்குப் பாலர்கள் குறுப்பு நீங்கும்படி அருள் செய்தான். அங்ஙனம் அஞ்ஞானமான தத்துவங்களைக் கடந்து மேல் சென்றவனது ஊர் வடக்கு ஆகும்.

2664. சீவன் அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களையே தான் என்று எண்ணி இருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று கூறத்தக்கவையாம். ஆனால் இவை தானல்ல தான் வேறு என்று சோடசகலை மார்க்கத்தினால் தன் உண்மை நிலை உணரலாம். இஃது அன்றி இந்தவுண்மை உணர்வதற்குத் தசகாரியம் விளக்குகின்ற வேறு நெறியும் உள்ளது.

2665. சீவர்களின் பக்குவத்தைக் கண்டு கலந்த பின்பு பிரியாத எம் தலைவனான சிவபெருமானது தன்மையினை நினைப்பவருக்குச் சிவபேதம் கெடும். அவனது பேரொளியில் கலந்து உள்ளத்தில் உணர வல்லவர்க்கு இங்கு அவரைச் சுற்றியுள்ள அரிய வினைகள் கெட்டொழியும். இவ்வினைகளுக்கு ஈடான மாயையும் அழியும்.

2666. சிவஞானத்தை உணர்த்தும் சிவபெருமானை வாழ்க்கையில் உணரலாம். அதனால் பலமாய்ப் பற்றியுள்ள பாசத்தைத் தளிர்க்க விடாதபடி அறுத்துப் பாச வழியில் செல்லாது சிவத்தை இடைவிடாமல் சிந்தித்து நிலைபெறச் செய்தால் சிவநெறியில் போய்ப் பேணுதல் முடியும்.

2667. குருவானவர் காட்டிய வழியில் சிவனை நினைத்திருப்பாரானால் சிவபெருமானும் அவனை நினைத்தருள்வான். அப்படி அருள்புரியும் பொருட்டுப் புருவ நடுவில் விளங்கும் ஒளிப் பொருளைச் சாதியாலும் அறிவாலும் தினையைப் போன்ற சிறியவராய் இருந்தாலும் இடைவிடாது சிந்திக்கும் மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவார்.

2668. சிவபெருமானை வணங்குதற்குரிய சாதனை செய்யும் காலத்தில் அவ்வழிபாடு தடைபட்டால் அது தீய வினையினால் உண்டானது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியான சிவத்தை தளர்ச்சியில்லாமல் சிந்தித்திருப்பவர் அவனது அன்பைத்தேடிக் கொள்வர்.

2669. சிவபெருமானை இடைவிடாமல் நினைந்து மெய்யுணர்வு பொருந்தப் பெற்றவர் அப்பெருமானுடன் பிரியாதிருபார். அவர்கள் எம் தலைவனுடன் பொருந்தி உலகியலில் எடுபடாமல் இருப்பர். உலகியலைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆனார். அங்ஙனம் அவர்களுக்குப் புகழத் தக்க மெய் உணர்வைத் தந்து பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான்.

2670. பசைக் கல்லின்மீது சிகப்புக் கல்லைப் பொருந்தினல் மற்றோர் ஒளி வரும். அதுபோல் தக்க குருவால் உபதேசிக்கப்பட்ட சன்மார்க்கத்தில் மாணவனிடம் வேறோர் தகுதி வந்து சேரும். இப்படிச் சேர்வதில் உண்டாகும் ஒளி நெற்றியின் அடிப்பகுதியான புருவ நடிவில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும்.

2671. ஞான குருவிடம் சிவம் உண்ணும் வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் விளங்கும். மண் நீர் தீ வாயு வானமாகவும் வானமற்ற அறிவு உருவாகவும் உடல் இயல்பை விட்டு நிற்கும் ஞான குருவின் நிலை உள்ளது.

2672. உலகம் முழுவதும் தலைவன் என்று போற்றிப் புகழும் சிவபெருமானின் ஆணை வழிச் சிவசக்தியாய் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய வானத்தில் விளங்கித் தன்னை வணங்கும் அடியார்க்கு தகுதியான வான் வண்ணத்தையும் இவ்வுலகத்தில் அளித்து விளங்கினான்.

2673. விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஞானத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளால் நடைபெறுகின்றன். அங்ஙனமின்றித் தாம் வெறொன்றும் அறியவில்லை என்று அறிஞர் சொல்வர். இனி வான் மண்டலத்தில் வாழ்பவரான தேவரும் அசுரரும் இத்தன்மையைக் கண்டவர் அல்லர். ஆனால் எம்பெருமானின் அருளைப் பெற்றவரே அவனைக் கண்டவர் ஆவார்.

2674. பசுத்தண்மை உடைய ஆன்மாக்களை மற்றவர் வணங்கும்படியான தலைவர் ஆக்கி பின் மற்றவர் நாவால் துதித்து வணங்குமாறு குருநாதன் அருள் செய்தான். ஆதலால் நாம் இனிமேல் மற்றத்தெய்வத்தை வணங்கமாட்டோம். சிவம் ஒன்றாலேயே மற்றத் தெய்வங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. என்பதை தெளிந்தோம். இனி நாமே மக்களால் வணங்கும் கடவுள் ஆனோம்.

#####

Read 1625 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929029
All
26929029
Your IP: 34.228.168.200
2024-03-28 17:17

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg