gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 16 July 2020 12:19

ஆகாயப்பேறு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

ஆகாயப்பேறு!

2804. வான் மண்டல்த்தில் ஓங்காரமாய் நின்ற ஈசானான ஒருவனும் அங்கு அக்கினி போல் ஒளிரும் ஒருவனும் அங்கு நீதி மயமான ஒருவனும் ஆகியவனைக் கொண்டு விளங்கும் மன மண்டலம் சூழ்ந்த உடம்பு வானம் ஆகும்.

2805. பெரு நில மயமான உடலாகவும் உடலைச் சூழ்ந்த அண்ட கோசமாகவும் அதற்கு அப்பால் உள்ள ஒளியாகவும் நிற்கும் இயல்பு கொண்டவன் சிவன். அவனே வடிவ நிலையில் பெரிய நிலமாய் இருந்து தாங்கும் அருளை உடையவன். அவனே அருள் நிலையில் விளங்கும் ஆதிப்பிரானான சிவம்.

2806. மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது உலகில் வான மண்டலத்தில் விளங்கும் ஒளியுடன் உடலில் உள்ள உட்கருவிகளின் அறிவால் பிதற்றும் வீணான பெருமையை விழுங்கி உடல் கடந்துள்ள பரமகாய வெளியில் திகழும் ஒளியுனுள்ளே மறைந்தது அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும். உடலும் ஒளியாகத் திகழும்.

2807. சிற்றின்பத்துக்குப் பயனாகும் மங்கையிரிடம் அனுபவிக்கும் இன்பத்தின் உள்ளே காமாக்கினி விளங்கிய நிலையில் ஆதியான பரஞ்சோதி இன்ப வடிவாய்த் திகழ்ந்தான். அப்பெருமானே சீவனிடம் சிவன் அன்பு கொண்டபோது நான்முகனும் திருமாலும் அறிய முடியாதபடி விளங்கி மேன்மையான நெறியாகச் சீவ ஒளியில் சேர்ந்து நின்றான்.

2808. தலையின் மேல் விளங்கும் சீவ ஒளிக்கு அறிவு தரும் அகண்ட ஒளியாகச் சிவ ஒளியும் பிரியாத இடத்தில் சந்திரன் சூரியன் அக்கினியான மூன்று ஒளிகளும் விளங்காமல் அடங்கி நிற்கும் அங்ஙனம் சிவனது திருவடியைப் பொருத்தி இருக்கும் பேறு கிட்டினால் சீவன் உடலோடு சேர்ந்து நீண்டகாலம் வாழலாம்.

2809. சிவபெருமான் தேவர் கூட்டத்துக்கு அறிவுப் பெருவெளியாயக் கொழுந்து போல் விளங்குபவன் பெருமலைப் பாமபை மேலாடையாய் அணிந்தவன். அவன் வான் மயமாய் விளங்கி நின்று பின் அறிவுப் பேரொளியாயும் விளங்குபவன்.

2810. உடலில் உயிர்ப்பாக விளங்குகின்ற பிராண நெறியும் உலகம் முழுவதும் அசைவுக்குக் காரணமான சோதி மயமான பிராண சத்தியும் கூடும் போதில் மூலாதாரத்தில் உள்ள சத்தி நாதத்தை எழுப்பி உடல் முழுவதும் பரவி ஒளியாக என் மனத்தில் பொருந்தி நுண்ணுடலைத் தனித்து வெளியாகுமாறு செய்தது.

2811. சிவ நினைவில் உயிர்கள் இருக்கும் போது சிவன் அவற்றைவிட்டு நீங்குவது இல்லை. அகலாமல் பொருந்தி அவற்றில் விளங்குவான். உயிர்கள் உலக நிலையில் உறைப்புண்டு நின்றால் அப்பெரும்பதியான சிவன் விலகி நிற்பான். ஆனால் அகலாமல் விளங்கும் மின்னுகின்ற ஒளியாய் உள்ள பரவெளியை அறிந்து வழிபட்டால் சிவானந்தத்தைப் பெறலாம்.

2812. வெளியே காணப் பெறும் ஐவகை வானவெளிகளும் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களையும் உல்கங்களையும் தாங்குகின்ற ஒளியாகும். சீவரின் முதல் நிலையான ஆன்மாவின் அறிவே அகமாகிய உள்ளத்துக்கு வானம் ஆகும். வளம் மிகுந்த சுடரும் பேரொளியும் கூடிய சிவம் என்ற பேரறிவு விளங்கும் வானமாகும். சிவ ஒளியில் பொருந்திச் செயல் அற்றிருக்கும் இடமே பூமியில் உள்ள உயிர்களுக்குத் தகுந்த வானப் பேறாகும்.

#####

Read 1467 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928816
All
26928816
Your IP: 44.192.75.131
2024-03-28 16:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg