Print this page
செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:16

புண்ணிய பூமி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

#^#^#^#^#


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#^#^#^#^#


1.புண்ணிய பூமி!

தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றியுள்ளார்கள். அவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை. ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். அரிதான மனிடப் பிறவியில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடித்து வாழ்கையை வளமாக்கி ஆனந்த சந்தோசத்தை உயிர்கள் அனுபவிக்க வேண்டும் என ஆசி கூறும் அடியேன் -குருஸ்ரீபகோரா

உயிர்களின் உடம்பின் சகவாசம் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. உயிர்கள் தாங்கள் நீண்ட நாள் பழகிய நண்பர் / உறவினரின் பழக்க வழக்கங்கள் தங்களுக்கும் தொற்றியிருப்பதை அறியலாம். அது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இரு உடம்பிற்கு இடையில் பிராணம் பரிமாறப்படுகின்றது. அது மனிதராகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ இருக்கலாம். ஒவ்வொரு உயிர் பரிமானத்தைச் சுற்றி இருக்கும் ‘ஆரா’ என்ற ஒளிவட்டமே இதற்குக் காரணம். கண்ணுக்கு புலப்படாத இது ஒவ்வொருவருக்கும் தனக்கென்று ஓர் நிறத்தோடு இருக்கும். இந்த ஆராவின் நிறம் அந்த உடலின் உயிரின் குணத்தைக் குறிக்கும். ஒரு ஆரா மற்றொரு ஆராவுடன் தொடர்பு கொள்ளும்போது அது மாற்றம் பெறும். இந்த மாற்றம் அந்த உயிர்கள் பழகும் உடம்பினால் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை சொல்வதாகும். இதைக் காரணமாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் ஒருவருடன் பழகும்முன் அவரைப் பற்றி நன்கு அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவரைபற்றி அறிய அவரின் நண்பனை அறிந்தால் போதும் என்றும் கூறினர்.

#^#^#^#^#

 

Read 338 times Last modified on வியாழக்கிழமை, 16 March 2023 09:01
Login to post comments