Print this page
செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:26

பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!


#^#^#^#^#

 

3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

கிரகங்களில் (வீடுகளில்) கிரகப்பிரவேசம், உபநயணம் (பூணூல் அணிவித்தல்) திருமணம், சீமந்தம், அன்னப்ராசனம் (குழந்தைகளுக்கு முதல் பிரசாதம் அளித்தல்) போன்ற கைக்காரியங்கள் நிகழும்போது மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தந்தை, தாய் வழியினருக்கு “நாந்தீச்ராத்தம்” எனும் சிரார்த்தத்தை (ஆண்டுதோறும் செய்வதைப் போன்றே) வஸ்திரம் அளித்து போஜனம் செய்வித்து, தட்சணை கொடுத்து அவர்களை வணங்கி அனுக்கிரகத்தைப் பெறவேண்டும். அப்போது நம் கிரகங்களில் நடைபெறும் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும் நம் முன்னோர்கள் மனமுவந்து எழுந்தருளி சுபகாரியங்களை நடத்திக் கொடுத்து பரமானுக்ரகம் செய்கின்றனர் என்கிறது வேதங்கள்.

ஜாதகர்மா- தொப்புள்கொடி அறுபட்ட பிறகு முதன் முதலாக வேத மந்திரங்களைச் சொல்லி பிறந்த ஆத்மாவின் உடல்- குழந்தைக்கு பொன் நகையால் தேன் பால் கலவையை தொட்டு நாக்கில் தடவ வேண்டும்.

பெயர் சூட்டல்- பிறந்த 10 வது நாள் / 12 வது நாள் / 18 வது நாள் / ஒருமாதம் / மூன்றாவது மாதம் குழந்தையின் நட்சத்திரத்தன்று பெயர் சூட்ட வேண்டும். பெயர் மங்களகரமாக உச்சரிக்க இனிமையானதாய் இருக்க வேண்டும் கஷ்டமானதாக கண்டிப்பாய் இருக்கக்கூடாது. பெண்களின் பெயர்களின் முடிவில் ‘ஆ’ / ‘இ’ ஒலி வரும்படி ரம்யமாக வைக்க வேண்டும். பெண்களுக்கு நட்சத்திரம், மரம், நதி, பர்வதம், பட்சி, பாம்பு போன்றவற்றின் பெயர்களை சூட்டாமலிருப்பது நல்லது.

அன்னப்ராசனம்- ஆறாம் மாதம் முதன் முதல் அரிசி சாதம் ஊட்ட வேண்டும்.

முடி இறக்குதல்- மூன்றாம் வருடம் முடியிறக்கி காதணி செய்ய வேண்டும். தற்போது அவசரம் கருதி 11 வது மாதத்திலேயே எல்லாம் செய்து விடுகின்றனர்.

உபநயனம்- உபநயனம் செய்ய விரும்புவர் ஆறு (பிரம்ம தேஜஸ்) / எட்டு (தனத்தைப் பெற) வயதில் செய்யலாம்.

#^#^#^#^#

Read 337 times
Login to post comments