gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:32

பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!


#^#^#^#^# 

 

5.பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!


காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். விடியலில் துயிலெழுவது என்பது அவசியம் கடைபிடிக்க வேண்டிய செயலாகும். அதிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது மிகவும் சிறப்பு. அந்த வேளையில் சகல தேவர்களும் பூ உலகத்திற்கு வருகின்றனர் என்பதால் அந்த வேளை விழித்திருந்து வழிபாடு செய்வதால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிட்டும். எழுந்தவுடன் இந்நாள் நல்ல நாளாக கழிய கடவுளை தியானிக்கவேண்டும். அதேபோன்று இரவு சயனிக்குமுன் இந்நாள் நன்றாகக் கழிந்ததற்கு இறைவனை தியானிக்க வேண்டும்.

குளித்த பின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

சூரியனை துதித்து குருவை பூஜித்து முதலில் அம்மா, பின் சகோதரி, சித்தி ஆகியோர் உணவிட அருந்தவேண்டும். குருவை நினைத்து மானசீக அனுமதி பெற்று அருந்தினால் புத்தி பலம் பெறும். இந்த உணவு அருந்துதல் ஒருவகை பிச்சை. இதை வெறுக்கக்கூடாது. அன்னத்தை வெறுத்தால் உடலில் நலிவு ஏற்படும். நீராடியபின் தூய ஆடைகளை அணிந்து தினசரி செயல்களில் ஈடுபடல் பிறரின் கஷ்டங்களை அறிந்து உதவுதல் ஆகியவை அன்றாட கடமைகளாகும்.

பாடங்களை / வேதங்களைப் படிக்க கிழக்கு பக்கமாக அமர்ந்து, படிக்க ஆரம்பிக்கும் போதும், படித்த பின்னும் குருவை வணங்க வேண்டும். குரு மற்றும் பெரியோர்கள் பிரசங்கம் செய்யும் பொழுது குறுக்கிடக்கூடாது. சந்தேகங்களை பிரசங்கம் முடிந்தபின்னரே தனித்து கேட்க வேண்டும். சூழ்நிலை தெரியாமல் கேள்வி கேட்பதோ பதில் சொல்வதோ கூடாது. லௌகீக அத்யாத்மீக, வைதீக விஷயங்களை கொடுப்பவர் மரியாதைக்குரியவர். பொதுவாக மற்றவர்கள் பேச்சில் குறுக்கிட்டு குறுக்கே பேசக்கூடாது.

யாரிடமிருந்து நல்ல உபதேசம் ஒருவருக்கு கிடைக்கின்றதோ அவரே அவருக்கு குரு. அவரிடமிருந்து நல்லறிவைப் பெற்று வேத சாஸ்திரங்களை கற்க முடியும். அறிவைப் போதிப்பவர் தவிர, தந்தை கல்வி அறிவைத் தருவதாலும், அண்ணன் தந்தையின் பொறுப்பை ஏற்பதால் தந்தைக்கு சமமானவனாதலாலும், தாய்வழி மாமனும் குரு ஸ்தானத்திலிருந்து ஒழுக்கம் நற்சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்கத் தகுதியானவர்கள். தாத்தாக்களும், வீட்டிற்குப் பெரியவரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆசீர்வத்து ஆலோசனை சொல்பவர்கள். பெண்களில் தாயார், பாட்டி, அத்தை, அண்ணி, மாமியார், குருபத்தினி ஆகியோரும் குருவிற்குச் சமமானவர்கள்.

குருவின் முன்னாள் சரிசமமாக ஆசனத்தில் அமரக்கூடாது. அப்படி ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது குரு மற்றும் பெரியோர் வந்தால் எழுந்து மரியாதை செய்ய வேண்டும். குரு இல்லாதபோது அவர் பெயரை உச்சரிக்கக்கூடாது. குருவை கேலி பேசவோ அவர் குரலைப் போல் பேசிக் காட்டக் கூடாது.

வயதில் மூத்தவர்கள் ஆண்களாயிருந்தாலும் பெண்களாயிருந்தாலும் அவர்களிடம் மரியாதை கொண்டு வணக்கம் செலுத்த வேண்டும். தாய் மூத்த சகோதரி ஆகியோர்களையும் தினமும் வணங்க வேண்டும். சித்தப்பா, மாமா, மாமனார், குரு ஆகியோரை வணங்கும்போது அவரின் உறவு முறைச் சொல்லி வணங்குதல் வேண்டும். தாயின் சகோதரி, மாமி, அத்தை, குருவின் பத்தினி ஆகியோரும் வணக்கத்திற்குரியவர்களே. அண்ணனின் மனைவி எப்போதும் தாயைப் போன்று வணங்கப்பட வேண்டியவள்.

ஆன்றோர்களையும், சான்றோர்களையும், சன்னியாசிகளையும், ஆத்மபலம் பெற்ற ஞானிகள், யோகிகள் ஆகியோரை எங்கு கண்டாலும் வணங்க வேண்டும். அவர்களின் ஆசீர்வாதம் ஒரு பலம் பொருந்திய கவசமாக உயிர்களைக் காக்கும்.

உறவுவினர்கள் எல்லோரிடமும் பாரபட்சமில்லாத அன்பை கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பு அந்த ஆத்மாவிற்கு முன்னிலைப் பதவியை அளிக்க வல்லது.

செல்லும் வழியில் பெரியோர்கள், வயதானவர்கள், நோயாளிகள், தலைவர்கள், மணமக்கள், பெண்கள், பாரம் சுமப்பவர்கள், மரியாதக்குரியவர்கள் எதிர்பட்டால் அவர்கள் முன்னே செல்ல வழி விடுதல் வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஊனமுற்றவர்கள் சாலையில் இருந்தால் முடிந்த அளவிற்கு அவர்கள் சாலையை கடக்க உதவி செய்யவேண்டும்.

உயர்ந்த நிலை, யக்ஞம், வித்தை, உபநிஷதம் ஆகியவற்றின் மூலத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், ஆச்சாரியர்களைவிட தந்தை நூறுமடங்கு உயர்ந்தவர். பிதாவைக் காட்டிலும் தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். ஓரு ஆத்மா கர்ப்பத்திலிருந்து பிறக்கும்போது ஒரு பிறப்பும், யக்ஞத்தின் தீட்சையின் போது இன்னொரு பிறப்பும் எடுப்பதாக நம்பம்படுகின்றது.

வேத மந்திரங்களைக் கற்றபின் தினமும் தவறாமல் நீராடி தெய்வங்களுக்கான பூஜைகளைச் செய்யவேண்டும். பவித்திரமான மந்திரங்களை தவறாக உச்சரிக்கக்கூடாது. மற்றவர்களுக்குச் சொல்லும்போது கேட்போர் மனத்தை கவரும் வண்ணம் சொல்ல வேண்டும். இனிமையான குரலில் தெளிவாகப் புரியும்படி கூறி உள் அர்த்தங்களை அழகுடன் விளக்க வேண்டும். அப்படிப்பட்டவர் தங்கியிருக்குமிடம் புனிதமானதாகிவிடும். அவரின் சீடர்கள் அநியாயமாய் பொருள் சேர்க்க விழையக்கூடாது. அவர்கள் தார்மீகச் சிந்தனையுடன் சுத்தமானவர்களாகவும் பக்திமான்களாகவும் சாத்வீக குணமுள்ளவர்களாகவும், இருத்தல் வேண்டும். பிற உயிர்களை இம்சை செய்தல் கூடாது. பொய்பேசுதல், தூஷனை-புறம் சொல்லுதல், வம்பு பேசுதல், காம, குரோத லோபங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வேதம் படித்தவன் என்பதை, வேதங்களை ஓதுவதை விட அறவழியில் நடப்பதானாலும் அவன் மேற்கொள்ளும் நடத்தையினாலுமே அவனை உயர்வானவனாக கருத முடியும். என்ன செய்கின்றனர் என்பதைவிட எத்தகைய குணம் படைத்தவர்கள் என்பதுதான் ஒருவனின் அடையாளம்.

வஞ்சகர்களுடன் நட்பு, உறவு, நம்பிக்கை துரோகம் செய்பவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

இரவில் மரத்தின் நிழல், மாயானம் இவற்றை அனுகக்கூடாது.

குழைந்தைகள் இருக்கும் அறையில் தீபங்கள் எரிவது அவசியம்.

சுத்தமாய் கை,கால் கழுவாமல் சமையறைக்குச் செல்லக்கூடாது.

கோல் சொல்பவர் வீட்டில் லட்சுமி தங்கமாட்டாள்.

ஆன்மாக்கள் நதிக்கரையிலும், வீட்டில் இடம் இருக்கிறது என்பதற்காகத் தெற்கு பக்கமும், சுடுகாட்டிலும், துளசிச் செடிக்கு அருகிலும் நடக்கக்கூடாது.

#^#^#^#^# 

Read 353 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952102
All
26952102
Your IP: 44.212.94.2
2024-03-29 19:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg