ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#^#^#^#^#
6.உத்தமப் பெண்கள்!
நல்லதோற்றம், நல்ல வளர்ச்சி, உருண்டையான தொடைகள், சிறுத்த இடை, அலைபாயும் துறு துறு விழிகள் கொண்ட இன்முகம் ஆகியன மிகவும் லட்சணமாகும்.
கருமையான நீள்கேசம், எடுப்பான தனங்கள், நெருக்கமான கால்கள், சீரான நடை, அரச இலைபோன்ற இரகசிய இடம், நடுவில் சிறு பள்ளம் கொண்ட கணுக்கால்கள், கட்டை விரலளவு நுனி கொண்ட நாபிக்கமலத்தை உடைய பெண் மிகமிக அற்புத லட்சணங்களாகும்.
செந்தாமரைப் பொன்ற பாதங்களை உடைய பெண்கள் பாக்கியவதிகள்
பூமியை முழுவதும் தொடாத கடினமான பாதங்களை யுடையவர்கள் மத்திமமான யோகமுடையவர்கள்.
விரல்கள் நெருக்கமாக உள்ள பெண்கள் ராஜயோகத்தை அனுபவிப்பர்.
விரல் நகங்கள் சிவப்பாகவும் ஒளியுடனும் இருந்தால் எல்லா சுகங்களையும் அனுபவிப்பர்.
சிங்கங்கத்தினுடையது போன்ற முழங்கால் மூட்டுக்கள் இருந்தால் அதிர்ஷ்டக்காரர்கள்.
கைகளில் 4 நரம்புகள் தெரியும் பெண் கணவனின் அன்பை அதிகம் பெறுவாள்.
கைவிரல்களில் சக்கரம் மேன்மை அவர்களைத் தேடிவரும்.
சங்கு போன்ற கழுத்தை உடைய பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்தவீட்டிற்கும் பெருமையைத் தேடித் தருவார்கள்.
கழுத்தில் 4 அங்குல சுற்றளவிற்கு 3 மடிப்புகள் இருந்தால் ரத்ன ஆபரணங்கள் கழுத்தை அலங்கரிக்கும் வாய்ப்பு.
மடிப்பு இல்லாத, நீளமான, ஏற்ற இறக்கமான கழுத்துள்ள பெண்கள் பிரசவத்தின்போது கவனமாக இருக்க வேண்டும்.
வில் பொன்ற புருவத்தையுடையவர்கள் சௌபாக்யவதிகள்.
கூந்தல் மென்மையாக கருப்பாக இருப்பது உத்தமம்.
அன்னம், குயில், வீணை, வண்டு, மயில் போன்ற குரலுக்குச் சொந்தக்காரர்கள் சுகத்தை அடைந்து வீட்டில் வேலைக்காரர்களை வைத்திருப்பார்கள்.
அன்னம், பசு, காளை, மதயானை, சக்ரவாகம் போன்றவற்றின் நடையை ஒத்ததாக இருப்பின் அவர்கள் சார்ந்த குலத்திற்குப் பெருமை சேர்ப்பர்.
மலர் போன்ற கன்னங்களும், மூக்குக்கு நேராக வளைந்த புருவங்களை உடையவளும், கணவனை மனதார நேசிக்கும் மனைவிக்கு உரிய லட்சணங்கள்.
கண் புருவங்கள் வில்லைப் போன்று வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் எந்தக் குறையும் இன்றி சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.
மூக்கு ஒடிசலாகவும், அதிக நீளமாக அல்லது உயரத் தூக்கியோ இல்லாமல் இருப்பது அழகு.
மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள்.
எந்த வீட்டில் பெண்கள் கௌரமாக நடத்தப் படுகின்றார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கின்றார்களோ அங்கு திருமகள் வாசம் செய்வாள் என்கிறது வேதம்.
நேர்மையாக இருப்பதும் அடிக்கடி பெரியோர்களை தரிசித்து ஆசிபெறுவதும் கோவிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வதும் வளமான செல்வத்தை அருளும்.
சத்வகுணம் கொண்ட பெண்கள் நல்லொழுக்கம் கொண்டவராய் கணவனே கண்கண்ட தெய்வமாய் இருப்பர். இவர்கள் உத்தம ஸ்திரீகள். இவர்கள் புருஷர்களால் அனுபவிக்கத் தக்கவர்களாகவும் வீட்டுக் காரியங்களில் ஆவலுள்ளவர்களாகவும் இருப்பர். இவர்கள் போற்றிக் கொண்டாடத் தகுந்தவர்கள். இவர்கள் பிரம்மனால் படைக்கப்பட்ட மெய்யான பெண் ரூபங்கள் என்றும் சகல உலகங்ளுக்கும் பதிவிரதா ரூபங்கள் என்றும் சொல்லப்படும்.
உத்தம ஸ்திரீகள் அக்னியைப் போன்றவர்கள். அதனால் ஒவ்வொருவரும் தனது மனைவியைத் தவிர பிற பெண்களைத் தாயாகவும், சகோதரிகளாகவும் பாவிக்க வேண்டும். மனதில் ஏற்படும் சபலத்தினால் பிற பெண்களிடம் தவறான ஆசைகொள்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் கொடிய துன்பங்களை அனுபவிப்பார்கள்- மகரிஷி ச்யவணர்
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவர் உடல் என்றால் மனைவி உயிர் ஆகும். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. குடும்பத்தின் ஆத்ம சக்தி மனைவி. கணவனின் ஆரோக்கியமன வாழ்வு, நற்குணங்கள் கொண்டவர்களாக குழைந்தைகளை வளர்த்தல் பித்ருக்களுக்கு உரிய காலத்தில் சிரார்த்தம் செய்வதில் கணவருக்கு ஆதரவாக இருப்பது தர்ம பத்தினி என்ற உத்தமப் பெண்களே.
கருவுற்ற உத்தம பெண்கள் நல்ல விஷயங்களையே நினைத்து இறைவனின் திவ்ய சரித்திரங்களையும் பாடல்களையும் தர்ம உபதேசங்களையுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். தாய் கேட்கும் அனைத்தையும் கருவிலுள்ள சிசு கிரகித்துக் கொள்ளும். புவியில் பிறந்தபின் சிசுவின் சிந்தனைகள் தன் கர்ப்பவாசத்தின்போது கிரகித்துக் கொண்ட அடிப்படையில்தான் உருவாகும்.
திருமணம் ஆகும்வரை பெண்களுக்கு தாய் தந்தையிரே தெய்வம். திருமணத்திற்குப்பின் கணவணே தெய்வம். விதி வசத்தால் வறுமையிலிருந்தாலும் கணவரைவிட்டு அகலாமல் துணையாக இருக்கும் உத்தம பத்தினியரை தேவர்களும் வணங்குவர்.
தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபடுபவர்களாய் எதிலும் நம்பிக்கை அற்றவராய் கணவனுக்கு துரோகம் இழைப்பவர்களாக இருப்பார்கள். இனம் தெரியாத குலமும், முகமும், குலத்தை நசஞ்செய்யும் துர்க்குணமும், யாருக்கும் அடங்காமலும், வம்பு கலகங்களில் ஆவலும் விபச்சாரத்தனமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் அதர்ம ஸ்திரீகள் ஆவார்கள்.
ராஜச குணம் கொண்ட பெண்கள் தன்னலம் கொண்டு வாழ்க்கையின் இன்பங்களைத் துய்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாய் கூடிக் களிக்கும் போகத்தில் அதிக ஆசை உள்ளவராக இருப்பர். தங்கள் கூட்டுறவு இன்பத்தினாலேயே ஆடவரைத் தன் வசப்படுத்திக் கொள்வர். இவர்கள் மத்திம ஸ்திரீகள் எனப்படுவர்.
#^#^#^#^#